Thursday, December 31, 2009

சாயிபாபா

சாயிபாபா பெயர் வந்த விதம் .
ஷீர்டியில் உள்ள கண்டோபா ஆலயம் மிகவும் புராதனமானது . ஷீர்டி மக்களுக்குக் குலதெய்வம் மாதிரி . அங்கே மஹல்சாபதி என்கிற பிராமண குருக்கள் அன்றாட வழிபாட்டு பூஜைகளை செய்து வந்தார் . அங்கு பாபாவுக்கு ( விசித்திர மனிதர் ) புதிதாக அறிமுகம் ஆன , பாட்டீல் மனைவியின் அகோதரர் பையனுக்கு திருமணம் . திருமண கோஷ்டியுடன் அந்த விசித்திர மனிதரும் வந்தார் . திருமண கோஷ்டியினர் ஷீர்டி வந்ததும் கண்டோபா கோயிலுக்கே முதலில் சென்றனர் . அங்கு இருந்த மரத்தடியில் இளைப்பாறுவதற்காக அவர்கள் ஒவ்வொருவராக வண்டியில் இருந்து இறங்கி வந்தனர் .
அந்த விசித்திர மனிதரும் ( பாபா ) கண்டோபா ஆலயத்திற்குள் கால் வைத்தார் . அவரை நேரில் பார்த்த மஹல்சாபதிக்குத் தாங்க முடியாத ஆச்சர்யம் . அந்த விசித்திர மனிதரை ' யா சாயீ '
( சாயி நீங்கள் வர வேண்டும் ) என்று உற்சாகமாக இரு கைகளையும் நீட்டியபடியே வரவேற்றார் . அந்த நிமிடத்தில் இருந்து அந்த விசித்திர மனிதர் சாயிபாபா என்று அழைக்கப்பட்டார் . திருமண கோஷ்டியினர் திருமணம் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பினர் . சாயிபாபா மட்டும் ஷீர்டியிலேயே தங்கத் தொடங்கினார் . அவரை ' சாயி ' என்று பெயர் கூறி வரவேற்ற மஹல்சாபதி சாயிபாபாவின் மிக முக்கியமான முதல் அடியவர் ஆனார் . சாயிபாபா இறுதி நாள்களில் முக்தி அடைந்தபோது மஹல்சாபதியின் மடியிலேயே தலை வைத்துப் படுத்து சமாதி நிலையில் இருந்தார் ..
.--- எஸ் . லெக்ஷ்மி நரசிம்மன் , இலக்கியப்பீடம் . ஆகஸ்ட் 2009 .

Wednesday, December 30, 2009

ஹைக்கூ .

* யார் யார் வேண்டுதலுக்கோ கோவில் முன்பு தீக்குளிக்கிறது , ' கற்பூரம் '.
* தவறான வழியில் குழந்தை பிறந்தது , சிசேரியன் .
* ஊர் சுற்றுவது நான் தண்டனை என் செருப்புக்கு , வீட்டுக்கு வெளியே
* விலை குறைத்தே விற்றிருக்கலாம் மிஞ்சிப் போய் வீணாய்ப் போனதும் தோன்றியது , பூ வியாபாரிக்கு .
* கருவறையே கல்லறையாகும் விந்தை , கருத்தடை மாத்திரை .
* மனதை அடக்கினால் தியானம் . மனம்போல் ஆடினால் மயானம் .
* உன்னுள் இருக்கும் என்னைப் பிரித்து , உரசி , சண்டை மூட்டி அதில்... பசி ஆறுகிறான் மனிதன் தீப்பெடியில் தீக்குச்சி !
* ' நேரம் ' சரியில்லை என்று அலுத்துக் கொண்டார் கடிகார வியாபாரி !
* பட்டியலில் இல்லா உலக அதிசயம் - விதைக்குள் உறங்கும் மரம் .
* சுவர் இருந்தும் சித்திரம் வரைய முடியவில்லை எய்ட்ஸ் நோயாளி .
* உன் கூந்தல் அருவி என்பதால்தான் ' கொட்டு ' கிறதோ தலைமுடி ?
* எவ்வளவு உழைத்தும் வியர்வை வரவில்லை மின்விசிறிக்கு .
* மருத்துவர் பிரசவம் பார்த்தார் மணிபர்ஸ் .
--- பாக்யா , ஜூலை 31 - ஆக்ஸ்டு 6 .-- ஆகஸ்டு 14 - 20 ; 2009 .-- செப்ட 18 - 24 ; 2009 .

Tuesday, December 29, 2009

முத்துக்குவியல் .

பஞ்சகன்னியர்..... அகலிகை , சீதை , தாரை , திரெளபதி , மண்டோதரி .
பஞ்சசீலம்.............கொல்லாமை , கல்லாமை , இரவாமை , காமமின்மை , பொய்யாமை .
பஞ்சபட்சி..............வல்லூறு , ஆந்தை , காகம் , கோழி , மயில் .
பஞ்சபுரானம் ........தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , பெரியபுராணம் , திருப்பல்லாண்டு .
பஞ்சரத்தினம் ......வைரம் , முத்து , நீலம் , மரகதம் , மாணிக்கம் .
பஞ்சவர்ணம்........வெண்மை , கருமை , பசுமை , செம்மை , பொன்மை .
பஞ்சாங்கம்...........கரணம் , திதி , நட்சத்திரம் , யோகம் , வாரம் .
பஞ்சநாதம் ..........சங்கு , சக்கரம் , கத்தி , வில் , கதை .
பஞ்சதேவர்..........விஷ்ணு , பிரம்மா , உருத்திரன் , மகேசுவரன் , சதாசிவன் .
பஞ்சசிகை........... தலை , உச்சி , கண் , புருவம் , முழங்கை .
பஞ்சபரமோட்டி...அருகர் , சித்தர் , ஆசிரியர் , குருக்கள் , உபாத்தியாயர் .
பஞ்சமேளம் ........சங்கு , தவில் , ஜாலர் , பம்பை , மத்தளம் .
பஞ்சபாண்டவர்...தருமன் , பீமன் , அர்ச்சுனன் , நகுலன் , சகாதேவன் .
பஞ்சமூலம்.........செவ்வியம் , சித்திமூலம் , பேரரத்தை , சுக்கு , கண்டுபாரங்கி .
--தொகுப்பு : எஸ் . ராஜேந்திரன் , அருட்செல்வர் சேக்கிழார் , ஆகஸ்ட் 2009 .

Monday, December 28, 2009

ஸ்டாம்பு .

சிலர் தபால் ஸ்டாம்புகளை நாக்கினால் நக்கி ஒட்டுகிறார்களே , இது ஆசாரக் குற்றம் . பழைய பூட்ஸ்கள் , செருப்புகளையெல்லாம் நெருப்பில் போட்டு , அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவிதப் பசையே ஸ்டாம்பின் பின்புறத்தில் தடவப்பட்டிருக்கிறது , நாக்கில் தடவி ஒட்டுபவர்கள் , இந்த விஷயத்தைக் கவனிப்பார்களாக !
--- காலப் பெட்டகம் . 1930 , ஆனந்தவிகடன் .

Sunday, December 27, 2009

சிரிப்பு !

* " பசங்களா , நீங்க எல்லாம் நல்லா படிச்சு , நாட்டுக்கு நல்ல பேரு வாங்கித் தரணும் ! "
" ஏன் , ' இந்தியா' ங்கிற பேர் நல்லா இல்லையா டீச்சர் ?"
* போலீஸ்காரர் : ஏம்பா ! நீ அந்த சிவப்பு விளக்கைக் கவனிக்கலையோ ?
சைக்கிள்காரர் : கவனிச்சேனுங்க... ஆனா உங்களைத்தான் கவனிக்கலே !
* " தம்பி... காதலிக்காக அடகு வச்ச மோதிரம் மூழ்கிப் போயிடுச்சேன்னு கவலையா இருக்கியாப்பா ? "
" அதில்லங்க... காதலி முழுகாம இருக்கான்னுதான் கவலையா இருக்கு ".
* ' வாழ்க்கை ஒரு டூ வீலர்...ஃரன்ட் வீல் கணவன் , பேக் வீல் மனைவி ... ஒரு வீல் பஞ்சரானாலும் வ்ண்டி ஓடாது ... ஸோ , எப்பவும் ஒரு 'ஸ்டெப்னி ' வச்சிக்கிறது நல்லது '
* ( ஒரு பெட்ரோல் பங்கில் எழுத்தப்பட்டிருந்த வாசகம் )
' அவாய்டு கேர்ல் ஃரெண்ட்ஸ் . சேவ் பெட்ரோல் !'

Saturday, December 26, 2009

ஈஷா பள்ளி .

ஈஷா பள்ளியில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் என்னிடம் கேட்டான் , " சத்குரு , வாழ்க்கை என்பது கனவா ? நிஜமா ?"
நான் சொன்னேன் , " இந்த வாழ்க்கை ஒரு கனவுதான் . ஆனால் , இந்தக் கனவு நிஜம் !"
ஜென் கதைகள் .
சாக்கிய முனி கேட்டார் , " ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு ? " முதல் சீடன் சொன்னான் , " 70 வருடங்கள் " இரண்டாவது சீடன் சொன்னான் , " 60 வருடங்கள் ". அடுத்தவன் சொன்னான் ,
" இல்லை. 50 வருடங்கள் ".
" நீங்கள் சொன்ன பதில்கள் எல்லாமே தவறு " என்றார் சாக்கிய முனி . " வாழ்க்கை என்பது ஒரு சுவாச அளவுதான் ".
---சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆனந்தவிகடன் , 19 - 8 - 2009.

Friday, December 25, 2009

தெரிந்து கொள்வோம் !

* கறுப்பு நிறங்கொண்ட பெண் சிலந்தி உடலுறவு கொள்ளும்போதே ஆணைச் சாப்பிட்டுவிட்டு விதவையாகவும் ஆகிவிடுவதால் , அதற்கு Black widow என்று பெயர் .
* ஆமைகள் சாதாரணமாகவே 100 வயதுக்கு மேல் வாழும் என்பதால் நீண்டகால செக்ஸ் வாழ்க்கை ! ஆமைகளுக்கு இரண்டு மூக்குகள் உண்டு . முகத்தில் ஒன்று , மற்றது , மலத்துவாரத்தில் இரண்டு பக்கங்களும் ஆமை மூச்சுவிடும் .
* கோழி போடுகிற ஒவ்வொரு பத்தாவது முட்டையும் , அதற்கு முன்பு போட்ட முட்டைகளை விட , சற்று பெரிதாக மாறுபட்டு வித்தியாசமாக இருக்குமாம் .
* ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள் , ஒரு நிமிடத்துக்கு 60 நொடிகள் என்று நிர்ணயித்தவர்கள் பாபிலோனியர்கள் .
* ஏதென்ஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு தோட்டம் அகடமஸ் என்ற பெயரில் இருந்தது . இங்குதான் பிளேட்டோ போன்ற தத்துவவாதிகள் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்தார்களாம் . நாளடைவில் இத்தோட்டத்தின் பெயராலேயே ' அகாடமி ' என்ற சொல் உருவானது .
* ஆறு கால் கொண்ட உயிரினங்ககளில் மிகவும் வேகமானது கரப்பான் பூச்சி . ஒரு வினாடியில் ஒரு மீட்டர் தூரத்தை அதனால் தாண்ட முடியுமாம் .
* சிங்கம் குட்டிகளாக இருக்கும் போது ஆணும் , பெண்ணும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் . மூன்று வயது ஆன பிறகுதான் ஆண் சிங்கத்திற்கு பிடரி மயிர் முளைக்க ஆரம்பிக்கும் .
* நாய் சந்தோஷத்தில் வாலை ஆட்டும் . கோபத்தில் காதை விரைத்துக் கொள்ளும் . பூனை நேர்மாறாக சந்தோஷத்தில் காதை விரைத்துக் கொள்ளும் , கோபத்தில் வாலை ஆட்டும் . அதனால்தான் தவறான புரிதலில் பூனையும் நாயும் மோதிக் கொள்கின்றன .

Thursday, December 24, 2009

ஞாபகமறதி .

நம் மூளை ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் , நம் சிந்தனைகளை முறைப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது . இதற்கு நம் மூளையில் உள்ள 100 பில்லியன் நரம்பணுக்கள்தான் உதவுகின்றன . இந்த நரம்பணுக்களின் செயல் குறைந்துகொண்டே போய் அவற்றின் திறமைகளெல்லாம் மழுங்கிக்கொண்டே போகும் . இதைத்தான் ' ஞாபகமறதி ' ( அல்ஸிமர் ) என்கிறார்கள் .
மூளையின் மெமரி சிப்ஸில் கோளாறு ஏற்பட்டால் ஞாபக மறதி வரும் .
--- இரா . மணிகண்டன் , குமுதம் . 19 - 08 - 2009.

Wednesday, December 23, 2009

விகடம் .

ஒருவன் கங்கை ஆற்றில் இறங்கி , ஜலத்தை தன் இரண்டு கைகளாலும் இறைத்துக்கொண்டிருந்தான் . அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த வைதீகர் ஒருவர் இதைக் கண்டு , " அப்பா ! தண்ணீரை ஏன் வீணாய் இறைக்கிறாய் ? " என்றார் .
ஒருவன் : " சென்னையிலுள்ள என் தென்னந்தோப்பு வாடிப் போவதாகக் கேள்விப்பட்டேன் . அதற்காக இக்கங்கை நீரை இறைக்கின்றேன் ."
வைதீகர் : " என்னப்பா ! அடி வண்டல் முட்டாளாக இருக்கிறாயே ! சென்னையிலுள்ள தென்னந்தோப்பிற்கு கங்கையிலிருந்து ஜலம் இறைத்தால் போகுமா ? இந்தச் சொற்ப அறிவுகூட உனக்கு இல்லாமற்போனது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன் ".
ஒருவன் : " ஓய் வைதீகரே ! கொஞ்சம் நிதானமாய் பேசுங்கள் . சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போக வேண்டாம் . சற்று நேரத்திற்கு முன் தாங்கள் நடத்திய காரியம் நினைவிருக்கிறதா ? தர்ப்பணம் செய்வதாகச் சொல்லி நீங்கள் இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளி இறைத்த கங்கை நீர் , மேக மண்டலம் , சந்திர மண்டலம் , சூரிய மண்டலம் , நஷத்திர மண்டலம் இவைகளையெல்லாம் தாண்டிப் பல கோடி மைலகளுக்குப்பாலுள்ள மோக்ஷலோகத்தில் வசிக்கும் பிதுர்களுகுப் போய் சேர்கின்றபோது சில நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள சென்னைக்கு ஏன் கங்கை நீர் சேரக்கூடாது ? "
-- காலப் பெட்டகம் . 1929 . ஆனந்தவிகடன் .

Tuesday, December 22, 2009

தமாஷ் !

ஒரு வெள்ளைக்காரனிடம் பரிசாரகன் வேலை பார்த்திருந்த மந்தோனியின் நாய் இறந்துபோனதற்கு அவன் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தான் .
நண்பன் : நாய் இறந்துபோனதைக் குறித்தா இவ்வளவு விசனப்படுகிறாய் ?
மந்தோனி : அது இறந்ததைப் பற்றி விசனிக்கவில்லை . இப்போது ஒரு வேலை அதிகமாயிற்றே என்பதற்காகத்தான் விசனப்படுகிறேன் .
நண்பன் : என்ன வேலை அதிகமாய்விட்டது ?
மந்தோனி : துரை சாப்பிட்ட பின் , பிளேட்களை அந்த நாய் சுத்தமாக நக்கி வைத்துவிடும் . இப்போது அவைகளையெல்லாம் கழுவித் துலக்கவேண்டிய வேலை ஒன்று எனக்கு அதிகமாயிற்றே !
--- காலப்பெட்டகம் , ஆனந்தவிகடன் 1929 .

Monday, December 21, 2009

ஆகஸ்ட் மாதம் ..

ஆகஸ்ட் 14 , 1911 ' வாழ்க வளமுடன் ' வேதாத்திரி மகரிஷி பிறப்பு .
ஆகஸ்ட் 15 , 1972 அஞ்சல் குறியீட்டு எண் முறை அமல் செய்யப்பட்டது .
ஆகஸ்ட் 15 , 1769 மாவீரன் நெப்போலியன் பிறப்பு .
ஆகஸ்ட் 15 , 1975 சென்னை தொலைக்காட்சி நிலையம் திறப்பு .
ஆகஸ்ட் 15 , 1872 சுதந்திரப்போராட்ட தியாகியும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீ அரவிந்தர் பிறப்பு .
ஆகஸ்ட் 16 , 1886 மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு .
ஆகஸ்ட் 16 , 1962 பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமானது .
ஆகஸ்ட் 18 , 1900 விஜயலட்சுமி பண்டிட் பிறப்பு .
ஆகஸ்ட் 19 , 1887 தியாகி தீரர் சத்தியமூர்த்தி பிறப்பு .
ஆகஸ்ட் 21 , 1610 டெலக்ஸ்கோப் கருவியை கலிலியோ உருவாக்கினார் .
ஆகஸ்ட் 21 , 1907 சுதந்திரப் போராட்ட வீரர் ஜீவானந்தம் பிறந்தார் .
ஆகஸ்ட் 22 , 1864 செஞ்சிலுவைச் சங்கம் தோற்றம் .
ஆகஸ்ட் 24 , 1972 நாமக்கல் கவிஞா . வெ. ராமலிங்கம் காலமானார் .
ஆகஸ்ட் 25 , 1819 நீராவி இஞ்சினைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட் மறைவு .
ஆகஸ்ட் 25 , 1867 அறிவியல் அறிஞர் மைக்கேல் பாரடே மறைவு ..
ஆகஸ்ட் 26 , 1883 திரு. வி. க . பிறப்பு .
ஆகஸ்ட் 27 , 1910 சமூக சேவகி அன்னை தெரசா பிறப்பு
29 , 1958 , இணையற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறப்பு .
30 , கி. மு 30 எகிப்து ராணி கிளியோபாட்ரா தற்கொலை செய்த தினம் .
30 , 1569 அக்பரின் மகன் ஜஹாங்கீர் பிறந்தார் .
30 , 1957 கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன் மறைவு .
31 , 1870 புதியகல்வி முறையை கண்ட மாண்டிசோரி பிறப்பு .

Sunday, December 20, 2009

தேசிய கொடி .

தேசிய கொடி உருவான வரலாறு .
கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது . அது சிவப்பு , பச்சை , மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து , பட்டைகளில் வெண்தாமரை மலர்கள் , வந்தேமாதரம் என்ற வார்த்தைகள் , கதிர்வீசும் ஆதவன் , பிறைசந்திரன் , நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது . பின்னர் , 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது .
8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக , வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு , அந்தக்கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும் , அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர் .
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3 ம் முறையாக மாற்றப்பட்டது . இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை ( 5 ) பச்சைநிற பட்டை (4 ) , அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும் , வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும் , நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன . இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை .
1921 ம் ஆன்டூ விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது , பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து , முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி , பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார் . இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது .
பின்னர் , அடர் காவி , அடர் பச்சை , மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் , மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது .
இதை 22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து , அதன்பின் , முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது .
-- தேவராஜன் , தினமலர் ஆகஸ்ட் 14 , 2009 .

Saturday, December 19, 2009

தண்ணீர் ஒன்று தான் !

வானில் இருந்து விழுந்தால் மழை ; ஓடினால் நதி ; உயரமான இடத்தில் இருந்து கீழே பாய்ந்தால் அருவி ; தேங்கி நின்றால் குளம் ; நிலப்பரப்பிற்குள் விரிந்து பரந்திருந்தால் ஏரி ; நிலப்பரப்புக்கு வெளியே விரிந்து பரந்திருந்தால் கடல் ... இப்படி பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் , தண்ணீர் ஒன்று தானே !
மழை , நதி , அருவி , குளம் , ஏரி , கடல் என எல்லாவற்றிலும் உள்ள தண்ணீரும் வெவ்வேறு வகையில் பயனளிக்கின்றன . மழை நல்லது , கடல் கெட்டது என்று தண்ணீரை ஒப்பீடு செய்வது சரியாகாது .
----தினமலர் . பக்திமலர் . ஆகஸ்ட் 13 , 2009

Friday, December 18, 2009

கிருஷ்ணன் .

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர் .
நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார் . அந்த 6 பேர் யார் தெரியுமா ?
ப்ராதஸ்நாநி அதிகாலையில் குளிப்பவன் .
அஸ்வத்தசேவி அரச மரத்தை வணங்குபவன் .
த்ருணாக்னி ஹோத்ரி மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன் .
நித்யான்னதாதா நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன் .
சதாபிஷேகி நூற்றாண்டு விழா செய்து கொண்டவன் .
ப்ரம்மஞானி இறைவனை உணர்ந்தவன் .
---- தினமலர் . பக்திமலர் . ஆகஸ்ட் 13 , 2009 .

Thursday, December 17, 2009

ஏகாதசி .

ஒவ்வொரு ஆண்டும் 24 ஏகாதசிகள் வரும் . சில ஆண்டுகளில் அதிகப்படியாக இன்னும் ஒரு ஏகாதசி வரும் . அந்த 25 வது ஏகாதசிக்கு கமலா என்று பெயர் .
சில மாதங்களில் பவுர்ணமி அல்லது அமாவாசை இரண்டு வருவதுண்டு . இப்படி அமையும் மாதங்களில் சுப காரியங்களை தவிர்த்து விடுவார்கள் . ஆனால் , ஏகாதசி ஒரு மாதத்தில் 2 தான் வரவேண்டும் . 3 வந்தால் அது விசேஷமாக கருதப்படும் . மூன்றாவதக அமையும் கமலா ஏகாதசி . 12 மாதங்களுக்கு மேல் அதிகமாக வரக்கூடிய மாதத்திற்கு புருஷோத்தம மாதம் என்று பெயர் . அது நாராயண சொரூபம் .
---- புலவர் . வே. மகாதேவன் . தினமலர் . வாரமலர் . ஆகஸ்ட் , 9 2009 .

Wednesday, December 16, 2009

சிந்தனைக்கு !

அமெரிக்கா செல்ல தீர்மானித்த விவேகானந்தர் , அன்னை சாரதாதேவியை வணங்கி ஆசி கேட்டார் .
" அறையில் இருக்கும் கத்தியை எடுத்து தா " என்றார் அன்னை .
" என்ன இது ?' என்று யோசித்தபடியே , விவேகானந்தரும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் .
கத்தியை வாங்கிய அன்னை , " உனக்கு ஆன்மிக போதனை செய்ய தகுதி இருக்கிறது . தாராளமாக அமெரிக்கா சென்று வா !" என்று ஆசிர்வதித்தார் .
' அம்மா கத்தி அளித்ததை வைத்து ஆன்மிகதகுதியை எப்படி அறிந்துகொண்டீர்கள் ?' என்று விவேகானந்தர் கேட்டதற்கு அன்னை அளித்த பதில் :
" கத்தியின் கூர்மையான பகுதியை உன் கையில் பிடித்துக்கொண்டு , கைப்பிடி பகுதியை என்னிடம் நீட்டினாய்... . இது அடுத்தவருக்கு காயமேற்படக்கூடாது என்று உனக்குள் நிறைந்திருக்கும் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகிறது !" என்றார் அன்னை .
* மனித ஜென்மம் எடுக்கும் எந்த உயிரும் பிறந்த முதல் மாதத்திலிருந்து பிண்டத்துக்கும் , அண்டத்துக்கும் ஆன தொடர்பை புதுப்பித்துக்கொள்கிறது . .
* ' தத் ' என்றால் ' அது ' என்று அர்த்தம் . ' த்வம் ' என்றால் ' நீ ' என்று அர்த்தம் ; தத்துவம் என்றால் , ' நீயே அது ' என்று அர்த்தம் .
--- தினமலர் , ஆகஸ்ட் 6 , 24 ,.27 . 2009 .

Tuesday, December 15, 2009

பிராணாயாமம் .

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு ; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு , நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம் . மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம் .... இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம் .
நமது நுரையீரலில் வலது , இடது என இரு பகுதிகள் . வலது நுரையீரலில் 3 பகுதிகள் , இடது நுரையீரலில் 2 பகுதிகள் . நுரையீரல் ஸ்பாஞ் போல காற்றுப் பைகளால் ஆனது . வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது , வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ' பிராணா ' சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , ' சந்திரகலை '. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , ' சூரியகலை '. இது வெப்பமானது .
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ' சந்திரகலை ' அதிகரிக்கும் . இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும் . விஷ்ணுவின் ' அனந்தசயன ' காட்சியில் பொதிந்துள்ள அறிவியல் உண்மை இதுதான் !.
--- பூஜ்யா , தினமலர் . பக்திமலர் . ஆகஸ்ட் 6 . 2009 .

Monday, December 14, 2009

இரவு என்பது இருக்காது !

ஒரு காலத்தில் நாம் எதெல்லாம் உண்மையாக நடக்க முடியாது என்று சந்தேகப்பட்டோமோ அதெல்லாம் இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் உண்மையாகி விட்டது . நாளுக்கு நாள் புதுசு புதுசா , தினுசு தினுசா கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன .
புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் . பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது . இதனால் பூமியின் ஒரு பகுதி எப்போதும் இருளாகவே இருக்கிறது . இதை மாற்ற வேண்டும் என்ற ஆராய்ச்சி தான் அது .
பூமியில் சூரியனின் ஒளி விழும் நாடுகள் பகலாகவும் , சூரியனின் ஒளி படாத நாடுகள் இருளாகவும் இருக்கின்றன . இது சாதாரண நிகழ்வு .
இரவை பகலாக்கும் முயற்சியில் பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரக்கூடிய செயற்கை கோளை அமைக்க உள்ளார்கள் . இந்த செயற்கை கோள்கள் சூரிய ஒளியை கவர்ந்து தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் . அதை உடனடியாக இருளாக இருக்கும் நாடுகள் மீது செலுத்தினால் அந்த நாடுகள் எல்லாம் பகல் போல் காட்சி தரும் . இது மட்டும் சாத்தியமாகி விட்டால் பூமியில் இரவு என்பதே இல்லாமல் போய்விடும் . எப்போதும் பகல் போல் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும் . இது இயற்கைக்கு முரணானது என்றொரு கருத்தும் நிலவுகிறது . ஆனாலும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது .
அடுத்து வரும் தலைமுறை இரவு என்று ஒரு அற்புதமான நிகழ்வை இழந்து இருப்பார்கள் . இரவு என்றால் என்னவென்று கேட்பார்கள் . இதெல்லாம் கொஞ்ச நாட்களில் நடக்கும் என்கிறார்கள் . எதிர்காலத்தை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானிகள் .
--- தினத்தந்தி , 14 - 04 - 2009 .

Sunday, December 13, 2009

பஞ்சாமிர்தம் .

இருவகை பஞ்சாமிர்தம் .
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பஞ்சாமிர்தம் இருவகைப்படும் :
1 . ரச பஞ்சாமிர்தம் . 2 . பல பஞ்சாமிர்தம் .
பால் , தயிர் , நெய் , தேன் , சர்க்கரை , இளநீர் ஆகியவை கலந்தது ரச பஞ்சாமிர்தம் . இந்த ரச பஞ்சாமிர்தத்துடன் வாழை , பலா , மாம்பழங்களைச் சேர்த்து செய்யப்படுவது , பல பஞ்சாமிர்தம்..
--- தினகரன் , 01 - 08 - 2009 .

Saturday, December 12, 2009

பஞ்ச பத்ர பாத்திரம் .

இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம் . அதன் இயற் பெயர் ' பஞ்ச பத்ர பாத்திரம் ' என்பதாகும் . அதாவது , ஐவகை பத்திரங்களை ( இலைகள் ) நீரில் இட்டு அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு , உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர் . துளசி , அருகு , வேம்பு , வில்வம் , வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் . இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் ' பஞ்ச பத்ர பாத்திரம் ' . இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது
---- தினகரன் , 01 - 08 - 2009 .

Friday, December 11, 2009

Whale Done !

அமெரிக்காவின் ஆர்லாண்டா நகரத்தில் , ' ஸீ வேர்ல்ட் ' என்ற உயிரியல் பூங்கா உள்ளது . அங்கே திமிங்கிலங்களைப் பழக்கப்படுத்தி பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை காண்பிக்கிறார்கள் .
நாய் போன்ற சிறுமிருகங்களை அடித்து மிரட்டி பழக்கி விடலாம் . ஆனால் , திமிங்கிலங்கள் பல மடங்கு பெரியவை . எத்தனை பயிற்சியாளர்கள் சேர்ந்து வந்தாலும் அரை நிமிடத்தில் துவம்சம் செய்துவிடக்கூடிய பலம் அவற்றுக்கு உண்டு . ஆக , திமிங்கிலங்களை அடிப்பது , மிரட்டுவதெல்லாம் உதவாது . வேறுவழியில்தான் அவற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் .
ஒரு திமிங்கிலம் தண்ணீருக்கு வெளியே குதிக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம் அத்தனை பெரிய மிருகம் தன்னுடைய உடம்பைத் தூக்கிக்கொண்டு தானாகக் குதிக்காது . நாம்தான் அதைப் பழக்கப்படுத்தவேண்டும் .
இதற்கான பயிற்சி தண்ணீருக்கு உள்ளே தொடங்குகிறது . திமிங்கிலம் நீந்துகிற குளத்தின் மத்தியில் ஒரு கயிற்றைக் கட்டுகிறார்கள் . திமிங்கிலம் அந்தக் கயிற்றுக்கு மேலேயும் நீந்தலாம் , கீழேயும் நீந்தலாம் .
இப்போது , ஒவ்வொருமுறை திமிங்கிலம் கயிற்றுக்கு மேலே நீந்தும்போதும் , அதற்கு ஒரு மீன் பரிசாகக் கொடுக்கப்படுகிறது . கயிற்றுக்குக் கீழே நீந்தினால் எந்தப் பரிசும் கிடையாது .
சீக்கிரத்திலேயே , திமிங்கிலத்துக்கு விஷயம் புரிந்துவிடுகிறது . பசி எடுக்கும்போதெல்லாம் கயிற்றுக்கு மேலே நீந்தி மீனைப் பரிசாகப் பெற்றுக் கொள்கிறது .
ஆனால் , அந்தத் திமிங்கிலத்துக்குத் தெரியாத விஷயம் , அதன் பயிற்சியாளர் ஒவ்வொரு நாளும் அந்தத் கயிறை அவிழ்த்துக் கொஞ்சம் உயரத்தில் கட்டுகிறார் . இதன்மூலம் மெல்லமாக அந்தத் திமிங்கிலம் மேலே மேலே சென்று நீந்தப் பழகுகிறது .
கொஞ்ச நாள் கழித்து கயிற்றைத் தண்ணீர்ப் பரப்புக்கு மேலே கட்டுகிறார்கள் . இப்போது , மீன் ஆசை கொண்ட திமிங்கிலம் தானாகக் கயிற்றின்மீது தாண்டிக் குதிக்கிறது . அதேபோல் முரண்டு பிடிக்கும் திமிங்கிலங்களை கட்டாயப்படுத்துவதில்லை . விட்டுப்பிடிக்கிறார்கள் . அதன் விருப்பத்துக்கேற்ப விளையாடவிட்டு , பிறகு தங்கள் பயிற்சியை செய்ய வைக்கிறார்கள் .
--- கென்ப் பிளான்சார்ட் . தமிழில் என் . சொக்கன் , குமுதம் 29 - 07 - 2009 .

Thursday, December 10, 2009

A ...பொண்ணு !

என் நண்பர் ஒருவரிடம் அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது , " A - B - C - D - E உள்ள பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன் " என்று சொன்னார் . புரியாமல் நான் விழிக்கையில் , " A - Age , B - Beauty , C - Colour , D - Dowry , E - Education " என்று விளக்கினார் .
--- மாறாந்தை பொன்னையா .
விகடன் 04 - 11 - 1979 இதழில் வந்த திருமணம் பற்றிய துணுக்கை என் தந்தையிடம் காட்டினேன் . " அவை மாத்திரம் இருந்தால் போதாது F , G , H , I , J , K , L , M , N , O , P எல்லாம் உள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டும் " என்றார் . எனக்கு விளங்கவில்லை . அவர் விளக்கினார் :
F - Family Background , G - General Status , H - Horoscope , I - Intelligence , J - Job , K - Knowledge , L - Love , M - Money , N - Neatness , O - Obedience , P - Personality .
-- எஸ் . ரவி , ஆனந்தவிகடன் 22 - 07 - 2009 .

Wednesday, December 9, 2009

சோர்வில்லாமல் ....

சோர்வில்லாமல் காலையில் எழணுமா ?
திபேத்திய புத்த பிட்சுக்கள் பின்பற்றும் ஒரு மகத்தான ரகசிய வழி . திபேத்தில் புத்தபிட்சுக்கள் நம்மைப்போல் காலையில் அரக்கப்பரக்க எழுந்திருப்பதில்லை . மாறாக , படுக்கையில் படுத்துக் கொண்டே சில உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள் . இதனால் உடலின் அசதியும் சோர்வும் போவதோடு , உடல் முழுக்க சக்தி ஒரே சீராகப் பரவுகிறதாம் . இது காலையில் புத்துணர்ச்சியையும் , சுறுசுறுப்பையும் கொடுக்கிறதாம் . இதில் நல்லதொரு விஷயம் என்னவென்றால் , இந்தப் பயிற்ச்சிகளை கண்களை மூடிக்கொண்டு , படுக்கையில் படுத்தவாறே செய்யலாம் .
ஸ்டெப் - 1 . முதலில் கண்களை மூடிக்கொண்டே , காதுகளை உங்கள் கைகளால் அழுத்திக் கொண்டு , உள்ளங்கைகளை மேலும் கீழுமாக 20 தடவைகள் அசைக்கவும் .
பயன்கள் : இது முகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு , ஈறுகளை வலுவடையவும் செய்யும் . நெற்றிப் பொட்டில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் .
ஸ்டெப் - 2 . வலது கையை முன் நெற்றியில் வைத்து அதன் மேல் இடது கையை வைக்கவும் . பிறகு இந்த் நிலையில் கைகளை மேலும் கீழுமாக 20 தடவை அசைக்கவும் .
பயன்கள் : இது காலைய்ல் தலைவலி வராமல் தடுப்பதோடு எழுந்தவுடன் , சில சமயம் இருக்கும் தலைச் சுற்றலையும் போக்கிவிடும் .
ஸ்டெப் - 3 . கண்களுக்கு வாருங்கள் . இரண்டு கட்டை விரல்களை நடக்கிக் கொண்டு இறகால் தடவுவதுபோல் மென்மையாக கணகள் இரண்டையும் , 15 முதல் 20 தடவைகள் மசாஜ் செய்யவும் .
பயன்கள் : இது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுவதோடு , கண் பார்வை தீர்க்கமாக இருக்கவும் உதவி செய்கிறது .
ஸ்டெப் - 4 . வயிற்றுப் பகுதிக்கு வாருங்கள் . உள்ளங்கைகளை வயிற்றின் மேல் வைத்துக் கொண்டு முழ்ங்கால்களை சற்று மடக்கிக் கொள்ளவும் . பிறகு மெல்ல வயிற்றுப் பகுதியை உள்லங்கைகளால் , 30 - 50 தடவைகள் வரை மசாஜ் செய்யவும் ( Clockwise ) .
பயன்கள் : வயிற்றுத் தசைகளை இது பலப்படுத்துவதோடு , கணையத்தையும் சுறுசுறுப்பாக்குகிறது . கல்லீரலுக்கும் நல்ல பயிற்சி இது . காலையில் சில சமயங்கள் ஏற்படும் வயிற்றுப் புரட்டலையும் போக்கும் . முக்கியமாக பெருங்குடலின் அசைவுகலை சீராக்குகிறது .
ஸ்டெப் - 5 . 20 தடவைகள் வயிற்றை வெளியே தள்ளி , உள்ளே இழுக்கவும் .
பயன்கள் : இதனால் சிறு நீரகங்கள் , கல்லீரல் , ஜீரண உறுப்புகள் பயனடைகின்றன . மேலும் வயிற்றுப் பகுதியில் அதிகமாக இருக்கும் கொழுப்புச் சத்து கரையவும் இந்தப் பயிற்சி உதவுகிறது .
ஸ்டெப் - 6 . படுத்த நிலையிலேயே முழ்ங்கால்களை கைகலால் கட்டிக்கொண்டு அவற்றை மார்புக்கு மேலே கொண்டு வரவும் .
பயன் : இது வயிறு , இதயம் போன்ற உறுப்புகளின் உள்ளே இருக்கும் தசைகளுக்கு நல்லதொரு மசாஜ் .
ஸ்டெப் - 7 . இப்போது மெல்லக் கண்களைத் திறந்து , எழுந்து உட்காரவும் . உட்கார்ந்தவாறே , குனிந்து பாதங்களையும் , உள்ளங்கால்களையும் இரு கைகளால் மசாஜ் சய்யவும் .
பயன் : முதுகுத் தண்டுக்கு நல்ல பயிற்சி இது .
--- இந்திரா வெங்கடராமன் , ஹைதராபாத் . குமுதம் சினேகிதி . ஆகஸ்ட் 1 - 15 , 2009 .

Tuesday, December 8, 2009

பாட்டிலும் தண்ணீரை கெடுக்கும் .

தண்ணீர் மட்டுமல்ல .... அதை எடுத்துச் செல்லும் பாட்டில்கூட அந்தத் தண்ணீரை தரமற்றதாக்கிவிடும் ஆபத்து இருக்கிறது . உதாரணமாக , அலுவலகத்துக்கு நாம் தண்ணீர் எடுத்துச் செல்லும் பாட்டில்கள் வாங்கும் போது பாட்டிலின் பாட்டம் பகுதியில் ஒரு முக்கோண்த்தில் நம்பர் போடப்பட்டிருக்கும் . அதில் 1 லிருந்து 4 வரை போடப்பட்டிருந்தால் அந்த பாட்டிலை வாங்கக்கூடாது . காரணம் , அந்த பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து வெளியேறும் கார்ஸினோஜின் என்ற கெமிக்கல் புற்றுனோயை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன . அந்த நம்பர் 4 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே வாங்குங்கள் .
--- தி. அணுபிரியா . குமுதம் சினேகிதி , ஆகஸ்ட் - 1-15 . 2009 .

Monday, December 7, 2009

வன்மை - மென்மை !

சாகும் தருவாயில் ஒரு குரு படுக்கையில் கிடந்தார் . அவரை சுற்றி அவரது சீடர்கள் நின்று கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர் . குருவின் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது . மெதுவாக கண் திறந்த குரு , ' என்ன ' என்பது போல் அவர்களைப் பார்த்தார் . சீடர்களின் கண்களில் கண்ணீர் . கடைசியாக அவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைத்த குரு , ' வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரிய வைக்கிறேன் , அருகில் வாருங்கள் ' என்று தன் சீடர்களை அழைத்தார் . நெருங்கி வந்த அவர்களிடம் தன் பொக்கை வாயைத்திறந்து காண்பித்தார் . ' அவ்வளவுதான் போங்கள் ' என்றார் . ஒரு சீடனைத் தவிர எல்லோரும் ' புரிந்தது ' என்று தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டனர் . அந்த சீடனுக்கோ ஒரே குழப்பம் . 'வாய்க்குள் அப்படி என்ன வாழ்க்கை தத்துவம் இருக்கப் போகிறது ' என்று குழம்பியபடியே இருந்தவன் , குருவிடமே கேட்டான் .
' என் வாய்க்குள் என்ன இருந்தது ?' - குரு கேட்டார் .
' நாக்கும் , உள் நாக்கும் இருந்தது ' - சிஷ்யன் .
' பல் இருந்ததா ?' - குரு .
' இல்லை ' - சிஷ்யன் .
' அதுதான் வாழ்க்கை . வன்மையானது அழியும் . மென்மையானது வாழும் ' - குரு .
--- தினமலர் கம்ப்யூட்டர் மலர் , 03 - 08 - 2009 .

Sunday, December 6, 2009

ஐ. எஸ். எஸ்.!-

விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ( ஐ. எஸ். எஸ். ) கடந்த 30 ம் தேதி மாலையில் ஏராளமானோர் பார்த்தனர் .
விண்ணில் இருந்தபடி விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா , ரஷ்யா , கனடா , ஜப்பான் , மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து 98 ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன . இதற்கான கட்டுமானப்பணிகள் வரும் 2010 வரை நடைபெறுகிறது . தற்போது பூமியில் இருந்து 336 முதல் 346 கி. மீ உயர சுற்று வட்டப்பாதையில் விண்ணில் இந்த நிலையம் மணிக்கு 27 ஆயிரத்து 724 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது .
தமிழகத்தில் 30 ம் தேதி மாலை 6 . 24 மணிக்கு வட மேற்கு அடிவானத்தில் தோன்றி தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 6 .35 மணிக்கு தென்கிழக்கு அடிவானத்தில் மறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் 4 நிமிடங்களுக்கு மேல் காணமுடியவில்லை . பிரகாசமான நட்சத்திரம் வேகமாக நகர்வதைப்போல தோற்றம் தந்தது . தொலைநோக்கி ஏதுமில்லாமல் வெறும் கண்ணாலேயே பார்க்கமுடிந்தது .
--- தினகரன் . 1 டிசம்பர் 2009 .
மேலும் , நேற்று 5 ம் தேதி காலை 5 . 53 மணிக்கு தென்மேற்கு அடிவானத்தில் தோன்றி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 5 . 59 மணிக்கு வடகிழக்கு அடிவானத்தில் மறைந்தது .

மூனறு புத்தகம் !

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்கள் மூன்று .
முதலாவது இறைவன் மனிதனுக்குச் சொன்னது . அது , கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த நூல் பகவத் கீதை .
இரண்டாவது , அறியவர் இறைவனுக்கு சொன்னது . மணிவாசகர் மகேசனுக்குப் பாடியது . அது திருவாசகம் .
மூன்றாவது , மனிதன் மனிதனுக்கு சொன்ன நூல் . வாழ்வாங்கு வாழ வள்ளுவர் வகுத்து தந்த திருக்குறள்தான் அது .
இந்த மூன்று நூல்களும் எல்லா இல்லங்களிலும் இருக்க வேண்டியவை . உயரும்போதெல்லாம் படிக்க வேண்டியவை .
--- கி. ஆ . பெ . விஸ்வநாதன் . .

Saturday, December 5, 2009

அப்பா . அடேங்கப்பா !

அப்பா : நான் உனக்கு கல்யானம் செய்து வைக்கலாம்னு இருக்கேன் . பொண்ணு பார்க்க ஆரம்பிக்கவா ?
மகன் : எனக்கேத்த பொண்ண நானே தேர்ந்தெடுக்கலாம்னு இருகேம்பா .
அப்பா : ஓகே ! ஆனால் நான் சொல்ற பொண்ணு மாதிரி உன்னாலேசெலக்ட் பண்ணவே முடியாது .
மகன் : அப்படிப்பட்ட பொண்ணு யாருப்பா அது ?
அப்பா : பில்கேட்ஸோட பொண்ணை உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன்... உனக்கு சம்மதமா ?
மகன் ! : அப்படியா ! டபுள் ஓகே.ப்பா !
இடம் : பில்கேட்ஸ் மாளிகை .!
அப்பா : மிஸ்டர் பில்கேட்ஸ் , உங்க பொண்ணு வாழ்க்கை மேலும் பிரகாசமா இருக்க ஒரு நல்ல செய்தியோட வந்திருக்கேன் !
பில்கேட்ஸ் : ஓ... ரோம்ப சந்தோஷம் ... சொல்லுங்க .
அப்பா : நல்ல குணமுள்ள , ஒரு அருமையான மாப்பிள்ளையை , உங்க பொண்ணுக்காக பார்த்து வெச்சிருக்கேன் !
பில்கேட்ஸ் : அவளோட கல்யாணத்தை பத்தி நான் இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவில்லை .
அப்பா : உங்க பொண்ணுக்கு பார்த்து வைத்திருக்கிற மாப்பிள்ளை உலக வங்கியோட வைஸ்பிரசிடென்ட்டா இருந்தா ஓகேவா ? !
பில்கேட்ஸ் : உலக வங்கியோட வைஸ்பிரசிடென்ட்டா ! அப்ப , டபுள் ஓகே .
இடம் : உலக வங்கி பிரசிடென்ட் இல்லம் .
அப்பா : உலக வங்கிக்கு ஒரு நல்ல பையனை வைஸ் பிரஸிடென்ட்டா ரெக்கமென்ட் பண்ண வந்திருக்கேன் .
பிரசிடென் ட் : ஏற்கனவே எங்க வங்கியில தேவைக்கு அதிகமான விஸ்பிரசிடென் ட் இருக்காங்களே !
அப்பா : நான் சொல்ற பையனை நீங்க வைஸ் பிரசிடென் ட்டா சேத்துகிட்டா உலக வங்கியோட அந்த்ஸ்து இன்னும் ஒரு படி உயரும் .
பிரசிடென் ட் : ரியலி ! யாரந்த பையன் ?
அப்பா : உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் பில்கேட்ஸோட மாப்பைள்ளைதான் அந்தப்பையன் .
பிரசிடென் ட் : அப்படியா , வெரி குட் ! நீங்க ரெக்கமென் ட் செய்த பையனை வைஸ் பிரசிடென் ட்டாக்க எனக்கு முழு சம்மதம் ! !
தத்துவம் : வாயுள்ள அப்பாவோட புள்ள பொழைச்சுக்கும் !
--- தினமலர் , 02 - 08 - 2009 .

உடல் இயக்கம் !

நமது உடலை மூலாதாரம் , சுவாதிஸ்தானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆக்ஞா , சகஸ்ரஹாரம் ஆகிய ஏழு சக்கரங்கள் இயக்குகின்றன . சக்கர செயல்பாடு பாதிக்கப்பட்டால் அவற்றால் கட்டுப்படுத்தப்படும் உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய குறைபாடு வரும் .
இந்த சக்கரங்கள் சரியாக இயங்க , அவற்றுக்கு ' பிராணா ' ( உயிர்மூச்சு ) சக்தி முழுஅளவில் கிடைக்கவேண்டும் .
மூலாதாரம் சரிவர செயல்பட , அதற்கு ஒரு நாளில் 600 மூச்சு கிடைக்க வேண்டும் . இதுபோல் , சுவாதிஸ்தானம் , மணிபூரகம் மற்றும் அநாகதம் சரிவர செயல்பட ஒரு நாளுக்கு தலா 6 ஆயிரம் மூச்சுக்களும் , விசுத்தி , ஆக்ஞா மற்றும் சகஸ்ரஹாரம் சரிவர செயல்பட ஒரு நாளுக்கு தலா ஆயிரம் மூச்சுக்களும் தேவை . ஆக , உடல் இயக்கம் சரிவர நடக்க , ஒரு நாளுக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுக்கள் தேவை . அதாவது , ஒரு நிமிடத்துக்கு நாம் 15 முறை சுவாசிக்கவேண்டும் .
ஆனால் , மன படபடப்புகளால் இந்த சரியான அளவில் நாம் சுவாசிப்பதில்லை . ஒன்று , மிக அதிகமாக சுவாசிக்கிறோம் அல்லது மிகக் குறைவாக சுவாசிக்கிறோம் .
ஒரு நிமிடத்திற்கு 3 முறை மட்டுமே சுவாசிப்பதால் ஆமையின் ஆயுள் அதிகம் ( சராசரியாக 300 ஆண்டுகள் ) ; ஒரு நிமிடத்திற்கு 20 முறைக்கு மேல் சுவாசிப்பதால்தான் நாய் , குதிரை போன்ற விலங்குகளின் ஆயுள் மிகக் குறைவு . மூச்சு குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும் .இதற்கு , ' மூச்சை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தி விட்டால் ஆயுள் அதிகரிக்கும் ' என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் . மூச்சை வலுக்கட்டாயமாக அடக்குவது , பெரும் ஆபத்து .
சராசரி மனிதர்களின் உடலுக்கு ஒரு நாளுக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுகள் அவசியம் . இதற்காக ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் என்ற அளவுப்படி சுவாசத்தை நிதானமாக , ஆழமானதாக மாற்ற பயிற்சி செய்வதே பாதுகாப்பான , சரியான பிராணாயாம முறை .
--- தினமலர் , பக்திமலர் . ஜூலை 30 . 2009 .

Friday, December 4, 2009

ஒட்டகச் சிவிங்கி !

நாலுகால் பிராணிகளிலேயே ரொம்பவும் உயரமுள்ளப் பிராணி ஆங்கிலத்தில் ' ஜிராஃப் ' எனப்படும் ஒட்டகச் சிவிங்கியே ஆகும் . தாய் ஒட்டகச் சிவிங்கி , குட்டியை ஈனும்போது என்ன நடக்கிறது தெரியுமா ? தாயின் இதமான , பாதுகாப்பான வயிற்றிலிருந்து குட்டி வெளியே வந்ததும் வராததுமாக , ரொம்பவும் உயரத்திலிருந்து ' பொத் ' தென்று தரையில் விழுகிறது .
அந்த மோதலிலிருந்தும் அதிர்ச்சியிலிலிருந்தும் அது மீளுவதற்குள் இன்னொரு அதிர்ச்சி அதற்காக காத்திருக்கிறது ! கீழே விழுந்தபின் , அது எழுந்து நிற்கும் முயற்சியில் , இன்னும் முழங்கால்களைத் தரையில் உறுதியாகப் பதிக்கக் கூட இயலாத நிலையில் , தன் பலங்கொண்ட மட்டும் தன் கால்களால் தாய் அதை எட்டி உதைக்கிறது . புதிதாகப் பிறந்த குட்டியைத் தாய் இப்படித் திருப்பித் திருப்பிப் பலமுறை எட்டி உதைப்பது நமக்குப் பார்ப்பதற்கு ஒரு கொடுமை போலத்தான் தோன்றும் ! ஆனால் , தன் குட்டி பிழைத்திருக்க வேண்டும் . அது நெடு நாள் உயிருடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தாய் , தன் உள்ளூணர்வால் உந்தப்பட்டு அது இழைக்கும் கொடுமையிலும் அதன் தாய்ப்பாசம்தான் வெளியாகிறது . அதாவது குட்டி தன் நாலுகால்களையும் ஊன்றிச் சீக்கிரம் ஓட ஆரம்பிக்கவில்லையென்றால் கொடிய காட்டு மிருகங்கள் அதைக் குதறித் தின்றுவிடும் என்று தாய்க்கு நன்றாகத் தெரியும் .
--- பாக்யா , ஜூலை 31 - ஆக 6 ; 2009 .

Thursday, December 3, 2009

மரம் - 1 , இலைகள்விதம் 5 .

பஞ்ச பாண்டவர்கள் மீண்டும் தங்களுக்கு பதவி வேண்டி பூஜை செய்த தலம் என்பதால் ' ஐவர் பாடி ' என்றழைக்கப்பட்ட பெயர் மருவி இப்போது அய்யாவாடியாக அழைக்கப்படுகிறது . கும்பகோண்த்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர் . இங்குள்ள தர்ம சம்வர்த்தினி அம்பாள் சமேத அகத்தீஸ்வர சுவாமி கோயிலின் வடக்கு பிரகாரத்தில் மகா பிரத்யங்கராதேவி அதர்வன காளியாக அருள்பாலிக்கிறாள் . இழந்த பதவியையும் , சிறப்பையும் மீண்டும் பெற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் அனைத்தும் மீண்டும் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை. 18 சித்தர்களும் இங்கு வந்து பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது .
இக்கோயிலின் தலவிருட்சம் ஆலமரம் . இம்மரத்தில் உள்ள ஒவ்வொரு இலைக் கொத்திலும் 5 இலைகள் உள்ளன.
ஒவ்வொரு இலையும் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன . அதில் ஆல் , அரசு , புரசு , இச்சி , மா என்ற 5 வடிவங்களில் இலைகள் இருக்கின்றன . வேறு எந்த தலத்திலும் இதுபோன்று வெவ்வேறு வடிவ இலைகள் ஒரே மரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் , 27 - 07 - 2009 .

Wednesday, December 2, 2009

உஷ் ! பேசாதே !

வணக்கம் . 21 - 02 - 1965 இதழ் ஆனந்தவிகடனில் ' பட உலகில் ' பகுதியில் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பைப் படித்தேன் . அவர் அறிந்து கொள்ள முடியாமல் போன சுலோகத்தை நான் எழுதி அனுப்பியிருக்கிறேன் . இதை நான் எனது 85 வயதான தாத்தாவிடமிருந்து தெரிந்துகொண்டு அனுப்புவதால் , சரியாகவே இருக்குமென்று நினைக்கிறேன் .
அந்த சுலோகம் ...
ஆயுர்விருத்தம் , க்ருஹசித்ரம் , மந்த்ரமெளஷதமைதுனே
தானம் மர்னாபமாநெள ச நவ கோப்யானி காரவேத் .
இந்த சுலோகத்தின் கருத்தாவது :
தனது வயது , சொத்து , வீட்டில் நடந்த சண்டை , சிறந்த மந்திரம் , நல்ல மருந்து , கணவன் மனைவியின் பிரியம் , தானம் , தனக்கேற்பட்ட புகழ் , அவமானம் ஆகிய இந்த ஒன்பது விஷயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது என்பதாம் .
( ஸூபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற புத்தகத்திலிருந்து ).
--- வி. கே. கௌஸல்யா, சின்ன காஞ்சிபுரம் . ( 07 - 03 - 1965 ).
--- ஆனந்தவிகடன் , 22 - 07 - 2009 .

Monday, November 30, 2009

சுலோகம் !

ஒரு சமயம் நாடகத் தந்தை சம்பந்த முதலியார் அவர்கள் சிவகெங்கையில் ஒரு வயோதிகரைச் சந்தித்தார் . அவருக்கு சுமார் 90 வயது இருக்கும் என்று முதலியார் அவர்கள் தீர்மானித்து , சற்று தயக்கத்தோடு அவரிடம் , " உங்களுக்கு என்ன வயதாகிறது ?" என்று கேட்டார் .
உடனே அவர் " ஒருவன் தன் வயதை வெளியில் சொல்லக் கூடாது என்று சாஸ்திரத்தில் இருகிறது .." எனச் சொல்லி அப்படி இருக்கும் அந்த வடமொழி சுலோகத்தையும் சொன்னார் .
இச்சம்பவம் நடந்த பிறகு , சம்பந்தமுதலியார் அவர்கள் " அந்த வடமொழி சுலோகத்தை நான் அவரிடம் சரியாகக் கேட்டு மனப்பாடம் செய்து கொள்லாமல் பொய்விட்டேன் ... தற்போது தங்கள் வயதைச் சொல்லிக் கொள்ளத் தயங்கும் சினிமா நடிகைகளுக்கும் , நடிகர்களுக்கும் அந்த் சுலோகத்தைச் சொல்லிக் கொடுத்திருப்பேனே !" என் வருந்தினாராம் .
--- ஆனந்தவிகடன் ( 21 - 02 - 1965 ) .

Sunday, November 29, 2009

தலைமுறை ஏழு .

ஆணின் விந்தில் உள்ள பல நூறு அணுக்களில் ஒன்றும் , பெண்ணிடம் உருவாகும் கருமுட்டைகளில் ஒன்றும் இணைந்து கரு உருவாகிறது என்பது இயற்கை . அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல் . குழந்தையின் பண்புகள் இந்த ஜீன்களால் நிர்ணயிக்கப்படுகின்றன . ஜீன்களைப் பற்றி .ஆராய்ச்சி , அறிவியல் உலகில் இன்றும் தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது . இந்தச் செய்தியை முன்னோர்கள் சிந்தித்தனர் . ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை , தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
தந்தையிடமிருந்து 21 அம்சங்கள் ; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள் ; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் ; ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது தாதையிடமிருந்து 6 அம்சங்களும் ; ஐந்தாவது தாதையிடமிருந்து 3 அம்சங்களும் ; ஆறாவது தாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே , ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெறுகின்றன . எனவேதான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .
நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் - இவர்கள் மூவருக்கும் திவசத்தில் பிண்டம் தரவும் தில தர்ப்பணம் கொடுப்பதற்கும் இதுவே காரணம் .
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் , வாரமலர் . ஜூலை 19 , 2009 .

Saturday, November 28, 2009

முன்னோர் வழிபாடு .

வேதவேள்விகளைப் புரிவதை விடவும் , கோயில் , குளங்களுக்குச் சென்று சுவாமி கும்பிடுவதை விடவும் முன்னோர்களை வழிபடுவது முக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .
' மாதுர் தேவோ பவ ; பிதுர் தேவோ பவ ; ' -- என்பது சாஸ்திரத் தொடர் .
முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழ்நெறி . ஒருவன் தான் சம்பாதித்த பணத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கொண்டு செலவிட வேண்டும் என திருவள்ளுவர் கூறியிருக்கிறார் .
ஒரு பகுதி அரசனுக்குரிய வரி , தென்புலத்தார் , தெய்வம் , விருந்து , சுற்றம் , தன் சொந்தச் செலவுகள் என்று ஐந்து வகை . ஆக மொத்தம் ஆறு வகை .
இவற்றுள் தென்புலத்தார் என்பது தெற்கில் உள்ள பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர்களைக் குறிக்கும் . தெய்வ வழிபாட்டை விடத் தென்புலத்தார் வழிபாட்டுக்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்ததைத் " தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " என்ற இந்தக் குறள் காட்டுகிறது
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் , வாரமலர் . ஜூலை 19 , 2009 .

Friday, November 27, 2009

அப்படியா ?.

* ஐந்தே ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் நபரின் வேலைத்திறன் 25 சதவீதம் உயர்வதாக ராடல் என்ற நார்வே உளவியல் நிபுணர் கண்டுபிடித்துள்ளார் .
*' ஒன் மொமன் ட் ப்ளீஸ் ' என்ற ஆங்கில சொற்றொடரைக் கேள்விப் பட்டிருக்கிறோம் . மோமன்ட் என்பது ஒன்னரை நிமிட நேரத்தைக் குறிக்கும் சொல்லாகும் .
* செஸ்பி என்ற நட்சத்திரம் சூரியனைப் போல் 1200 மடங்கு பெரியதாம் . இதனுடைய விட்டம் 160 கோடி கிலோ மீட்டராம் .
* வெள்ளை நிறத்தைக் கண்டு பயப்படும் ஒரே விலங்கு புலி .

Thursday, November 26, 2009

ஜூலை மாதம் .

* ஜூலை 24 , 1969 நிலவுசென்று மீண்டும் பூமிக்கு திரும்பியது அப்பல்லோ - 2 விண்கலம் .
* ஜூலை 25 , 2002 ஜனாதிபதியாக அப்துல்கலாம் பதவி ஏற்றுக்கொண்ட தினம் .
* ஜூலை 25 , 1978 முதல் சோதனைக் குழாய் குழந்தை இங்கிலாந்தில் பிறந்தது .
* ஜூலை 25 , 2007 இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவி ஏற்பு .
* ஜூலை 26 , 1856 ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறப்பு .
* ஜூலை 26 , 1956 சூயஸ் கால்வாய் தேசியமயமானது .
* ஜூலை 27 , 1876 நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறப்பு .
*ஜூலை 27 , 1877 நவீன அணுக்கொள்கையின் தந்தை ஜான் டால்டன் மறைவு .
*ஜூலை 28 , 1979 மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் .
*ஜூலை 29 , 1883 சர்வாதிகாரி முசோலினி பிறப்பு .
* ஜூலை 29 , 1927 இந்தியாவின் 2 வது வானொலி நிலையம் கல்கத்தாவில் உருவானது .
* ஜூலை 30 , 1863 மோட்டார் கார் தயாரிப்பாளரான ஹென்றி போர்டு பிறப்பு .

Wednesday, November 25, 2009

தெரிந்து கொள்வோம் .

* வால்பாறையிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள ' சின்னக்கல்லாறு ' புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் . ' தமிழகத்தின் சிரபுஞ்சி ' என்றே அழைக்கப்படுகிறது . இதுதான் உலகில் அதிக மழை பெய்யும் இடங்களில் இரண்டாவதாகும் . அங்கிருந்து சோலையாறு பக்கம் . ஆசியாவின் மிக ஆழமான இரண்டாவது அணை இதுதான் .
* ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து ( அ ) ஒரு பெண் ஓர் ஆணைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவது போலவே , ஓர் ஆண் இன்னோர் ஆணைப் பார்த்து ( அ ) ஒரு பெண் இன்னோர் பெண்ணைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதும் இயல்பானதே .
* இருபால் சேர்க்கையாளர் ( Hetro Sexuals ) போலவேதான் ஓரினச் சேர்க்கையாளர்களையும் ( Homo Sexuals ) கருத வேண்டும் .
* ' உலகம் முழுதுமே இருபால் சேர்க்கையாளர்களால் தான் ஹெ.ஐ.வி. அதிகமாகப் பரவுகிறது . ஓரின சேர்க்கையாளர்களால் அல்ல ' என்கிறது ஓர் ஆய்வு
* குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வியை அவர்கள் அறிந்த விஷயங்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள் .
* நினைவாற்றலைப் பயன்படுத்திச் செய்யும் கலைகளில் மிக முக்கியமானது அவதானம் . கவனகம் என்றும் சொல்வார்கள் .
* ஒரு நபர் ஒரு நேரத்தில் 10 விஷயங்களைச் செய்து காட்டினால் அவர் தசாவதானி . சோடஷாவதானம் என்றால் 32 விஷயங்களைச் செய்து காட்டுவது . 100 விஷயங்களைச் செய்து காட்டினால் அதன் பெயர் தசாவதானம் .

Tuesday, November 24, 2009

தமாஷ் !

* போலீஸ்காரர் : ஏம்பா ! நீ அந்த சிவப்பு விளக்கைக் கவனிக்கலையோ ?
சைக்கிள்காரர் : கவனிச்சேனுங்க... ஆனா உங்களைத்தான் கவனிக்கலே !
* தாத்தா : " காலம் ரொம்பத்தான் மாறிப் போச்சு ! "
பேரன் : " ஏன் தாத்தா ? "
தாத்தா : " ராஜாவை மந்திரியாக்கிட்டாங்களாமே ! "
* ஒரு கல்லூரி மாணவரின் செல்ஃபோனை குடைந்தபோது கிடைத்த எஸ். எம். எஸ் .:
" இளநீர் , தண்ணீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது . பீர் , பிராந்தி , ரம் என்று சொல்லும்போதுதான் உதடுகள் ஒட்டும் ."
* இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் இரண்டு KINGS யாரெனத் தெரியுமா உங்களுக்கு ....?
1 . SMO - KING 2 . DRINK - KING . முடிஞ்சா இந்த மோசமான KINGS - கிட்டேர்ந்து உலகைக் காப்பாத்திக்கோங்க .
* " காலேஜுக்கு ஏன்டா லேட்டு ?"
" பைக் பஞ்க்சர் சார் !"
" சரி .... பஸ்ல வர்றது ...?"
" பஸ் வாங்க வசதி இல்லை சார் !"
* " டாக்டர் ! நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணணும் ..."
" அதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட சொல்லி பண்ணச் சொல்லுங்க !"
* " தவளை தண்ணியிலேயும் இருக்கும் , தரையிலேயும் இருக்கும் . ஆனா , நம்ம தலைவர் ..."
" தண்ணியிலே தரையில கிடப்பார் !"
* " நம்ம தலைவரு அஞ்சாவது படிக்கும்போதே கள்ளச்சாராயம் வித்தவர்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதை என்னால் நம்பவே முடியலை !"
" எதனால அப்படிச் சொல்றே ?"
" தலைவர் அஞ்சாவது வரைக்கும் படிச்சிருக்காரா ?"
* ' LOVE ' என்று சொன்னாலும் , ' காதல் ' என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது ... PICK UP , DROP , ESCAPE என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் .
* " வக்கீலுக்கும் , டாக்டருக்கும் என்ன வித்தியாசம் ?"
" தெரியவில்லையே "
" வக்கீல் சரியாக இல்லைன்னா கேஸ் முடியாது , டாக்டர் சரியில்லைன்னா கேஸ் முடிந்து விடும் !"

Monday, November 23, 2009

போராளி - தீவிரவாதி .

போராளி - தீவிரவாதி வித்தியாசம் என்ன ?
போராளி -- போராட்டத்தில் தான் சாவதற்கு அஞ்சமாட்டான் . தீவிரவாதி -- மற்றவர்கள் சாவதைக்கண்டு அஞ்சமாட்டான் . .
--- அரசு பதில்கள் , குமுதம் 22 - 07 - 2009 . . .

Sunday, November 22, 2009

இன்ஷூரன்ஸ் .

வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் .
வாகனத்தை ஓட்டுபவருக்கும் , சாலையில் செல்பவருக்கும் விபத்தின்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்வதற்காகத்தான் இன்ஷூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இன்ஷூரன்ஸ் இல்லையென்றால் இழப்பீடும் பெறமுடியாது . இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை சாலையில் ஓட்டுவது சட்டப்படி குற்றம் .
இருசக்கர வாகனத்திற்கான இன்ஷூரன்ஸ் தொகையை நிர்ணயிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன . புதிய வண்டியென்றால் வாகன விலையில் ஐந்து சதவீதம் மட்டும் குறைத்து நிர்ணயிக்கப்படும் . உதாரணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் என்றால் ரூ. 47, 500 க்கு இன்ஷூர் செய்யலாம் . அதுவே 6 மாதம் முதல் ஒரு வருடம் ஆன வாகனத்திற்கு 15 % குறைத்துக்கொள்ள வேண்டும் . ஒன்று முதல் இரண்டு வருடம் ஆன வாகனங்களுக்கு அதன் மதிப்பில் இருபது சதவிகிதமும் , இரண்டு முதல் மூன்று வருடம் ஆன வாகனத்திற்கு முப்பது சதவிகிதமும் , மூன்று முதல் நான்கு வருடம் ஆன வாகனத்திற்கு நாற்பது சதவிகிதமும் , ஐந்து வருடம் ஆன வாகனத்திற்கு ஐம்பது சதவிகிதம் குறைத்துக்கொண்டு கட்டவேண்டும் . ஐந்து வருடத்திற்கு மேல் 12 வருடம் ஆன வாகனத்திற்கு வண்டியின் கண்டிஷனைப் பொருத்து நாம் விரும்பும் தொகைக்கு இன்ஷூரன்ஸ் செய்யலாம் .
--- இளையரவி, ( தகவல் தமயந்தி ) குமுதம் . 22 - 07 - 2009 .

Saturday, November 21, 2009

அப்படியா ?

* வானில் சப்தரிஷி மண்டலம் தென்படுவதாகக் கூறுவார்கள் . சப்தரிஷிகளின் பெயர்கள் : அத்திரி , வசிஷ்டர் , கௌதமர் , காஸிபர் , விஸ்வாமித்திரர் , பரத்வாஜர் , ஜமத்கனி . ,
* சட்டையைக் கண்டுபிடித்தவர்கள் எகிப்து நாட்டவர்கள் .
* நமது உடலில் அதிக அளவாக 115.7 பாரன்ஹீட் டிகிரி வெப்பத்தையும் , குறைந்த அளவாக 60.8 பாரன்ஹீட் டிகிரி வெப்பத்தையும் தாங்கக்கூடியது .
* ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் 100 சைபர்கள் கொண்ட எண்ணுக்கு கூகால் என்று பெயர் .
* நாம் சமைத்து உண்ணும் அரிசியில் மட்டும் 60,000 ரகங்கள் இருப்பதாக ஐ . நா , சபையின் விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது .
* மனைவி இறந்ததும் மறுமணம் செய்து கொள்வது மனிதர்கள் வழக்கம் . ஆனால் , தன்னோடு வாழ்ந்த பெண் நரி இறந்துவிட்டால் ஆண் நரி வேறு பெண் நரியைத் தேடிப் போகாதாம் .
* நாயின் மூக்கில் வாசனையை உணர்வதற்காக மொத்தம் 22 கோடி செல்கள் உள்ளனவாம் .
* உலகிலேயே பெருமளவு உற்பத்தி செய்யப்படும் தானியம் ' சோளம் ' ஒன்றுதான் .
* அடைகாக்கும் கோழி , முட்டை கூட்டுக்குள் மஞ்சள் கரு உடையாமல் இருக்க , ஒருநாளில் 50 முறையாவது முட்டைகளை திருப்புகிறதாம் .
* செம்மறியாட்டின் குடல் தசை நார்களிலிருந்து தயாரிக்கப்படும் வலுவான நூல் போன்ற நரம்புக்கு கேட் - கட் என்று பெயர் . அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்த நூலினால் தான் தையல் போடுவர் .
* ஒரு துளி ரத்தம் மனித உடலை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 2 வினாடிகள்.
* இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தியை அறிவித்த வானொலி அறிவிப்பாளர் பூர்ணம் விஸ்வநாதன்
* உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் கரையான் .
* வயலின் இசையை தினமும் தொடர்ந்து சில மணி நேரங்கள் கேட்டு வந்தால் , தலைமுடி நீளமாக வளர்கின்றது என்று ஜெர்மானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
* ஆபிரஹாம் லிங்கனுக்கு 2 2 வயதில் ஆன் என்ற பெண்ணிடம் காதல் வந்தது . ஆனுக்கு 22 வயதானபோது டைபாய்டு காய்ச்சலில் இறந்து போனாள் . ஆன் கல்லறையில, " உறவினால் அல்ல , பிரிவினால் மணந்த ஆன் இங்கே உறங்குகிறாள் " என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம் .
* யானையில் ஆண் யானைகள்தான் தந்தங்களோடு இருக்கும் . ஆனால் , அபூர்வமாக சில பெரிய ஆண் யானைகள் தந்தங்களின்றி இருக்கும் . அவை ' மக்னா ' என்று அழைக்கப்படுகின்றன .
* பூனை தன் தலையைச் சொறிந்து கொள்ள முன்னங்கால்களை உபயோகிக்க முடியாது . எப்போதுமே பின்னங்கால்கள்தான் .
* உருளைக்கிழங்கு செடியில் பூப்பூக்கும் . காய் காய்க்கும் . விதை கூட உருவாகும் . ஆனால் , இனப்பெருக்கம் விதைகளால் கிடையாது . கிழங்கின் மேல் காணப்படும் சிறு சிறு குழிகளை கிழங்கோடு வெட்டி புதைத்தால் தான் உருளைக்கிழங்கு செடி உருவாகுமாம் .
--- பாக்யா , ஜூலை 24 - 30 ; 2009 .-- செப்டம் 18 - 24 ; 2009 .

Friday, November 20, 2009

அறிந்து கொள்வோம் .

* உலகின் மிகப்பழமையான மரம் - பேரீச்சை .
* செயற்கைக்கோளினை முதலில் விண்ணுக்கு அனுப்பிய நாடு - ரஷ்யா .
* கின்னஸ் புத்தகம் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு - 1955.
* தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் - காளிதாஸ் .
* சீனாவின் பழைய பெயர் - கதாய் .
* தாய்லாந்தின் பழைய பெயர் - ஸயாம் .
* எகிப்தின் பழைய பெயர் - யுனைடைட் அரபு ரிபப்ளிக் .
* ஆசியாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் நீர்ச்சந்தி - பீரிங்னீர்ச்சந்தி .
* எரிமலையே இல்லாத நாடு - இந்தியா .
* அணுக்கதிர் வீச்சுக்கு சாகாத உயிரினம் - கரப்பான்பூச்சி .
* தலையில் இதயம் உள்ள உயிரினம் - இறால் .
* ரவீந்திரநாத்தாகூர் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட பெயர் - ஆகாஷ் வாணி ( வானொலி ) .
* மனிதனைப் போல கனவு காணும் உயிரினம் - நாய் .
* படைவீரர்களுக்கு முதன் முதலில் சீருடை அணியும் முறையைக் கொண்டுவந்தவர் - மாவீரன் நெப்போலியன் .
--- தினத்தந்தி , 13 - 07 - 2009 .

Thursday, November 19, 2009

பேறுகள் .

16 வகை பேறுகள் .
1 . புகழ் . 2 . கல்வி . 3 . வலி . 4 . வெற்றி . 5 . நன்மக்கள் . 6 . பொன் . 7 . நெல் . 8 . நல்லூழ் . 9 . நுகர்ச்சி . 10 . அறிவு . 11 . அழகு . 12 . பொறுமை . 13 . இளமை . 14 . துணிவு . 15 . நோயின்மை . 16 . வாழ்நாள் .
--- முத்துக்குமார் , நாகப்பட்டினம் . தினத்தந்தி . 13 - 07 - 2009 .

Wednesday, November 18, 2009

64 கலைகள் .

1. அக்கர இலக்கணம் . 2 . இலகிதம் . 3 . கணிதம் . 4 . வேதம் . 5 . புராணம் . 6 . வியாகரணம் . 7 . நீதி சாஸ்த்திரம் . 8 . ஜோதிட சாஸ்திரம் . 9 . தரும சாஸ்திரம் . 10 . யோக சாஸ்திரம் .
11 . மந்திர சாஸ்திரம் . 12 . சகுன சாஸ்திரம் . 13 . சிற்ப சாஸ்திரம் . 14 . வைத்திய சாஸ்திரம் . 15 . உருவ சாஸ்திரம் . 16 . இதிகாசம் . 17 . அலங்காரம் . 18 . காவியம் . 19 . மதுரபாடனம் . 20 . நாடகம் .
21 . நிருத்தம் . 22 . சுத்தபிரமம் . 23 . வீணை . 24 . வேணு . 25 . மிருதங்கம் . 26 . தாளம் . 27 . அத்திரபரிட்சை . 28 . கனக்படிட்சை . 29 . ரதப்பரிட்சை . 30 . கஜபரிட்சை . 31 . அசுவபரிட்சை . 32 . ரத்தின பரிட்சை .
33 . பூ பரிட்சை . 34 . சங்கிராம இலக்கணம் . 35 . மல்ல யுத்தம் . 36 . அக்ருஷணம் . 37 . உச்சாடனம் . 38 . வித்துவேஷணம் . 39 . மதன சாஸ்திரம் . 40 . மோகனம் . 41 . வசீகரணம் . 42 . ரசவாதம் .
43 . காந்தர்வ வாதம் . 44 . பைபீல வாதம் . 45 . கவுதுக வாதம் . 46 . தாது வாதம் . 47 . காருடம் . 48 . நட்டம் . 49 . முட்டி . 50 . ஆகாயப்பிரவேசம் . 51 . ஆகாய கமனம் . 52 . பரகாயப் பிரவேசம் . 53 . அதிர்ச்யம் .
54 . இந்திரஜாலம் . 55 . மகேந்திரஜாலம் . 56 . அக்னித் தம்பம் . 57 . வாயுத் தம்பம் . 58 . ஜல ஸ்தம்பம் 59 . சுக்கிலத்தம்பம் . 60 . கன்னத்தம்பம் . 61 . கட்கத் தம்பம் . 62 .அவத்தைப்பிரயோகம் .
63 . திட்டித் தம்பம் . 64 . வாக்குத்தம்பம் .
--- கார்த்திக்குமார் , தஞ்சாவூர் . தினத்தந்தி . 13 - 07 - 2009 .

Tuesday, November 17, 2009

தெரிந்து கொள்வோம் !

* சீன மொழியை 100 நாடுகளில் 30 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கற்றுக்கொண்டு வருகிறார்கள் . அந்த மொழியின் முக்கியத்துவத்தை இப்போது புரிந்து கொள்ளமுடியும் .
* இப்பூமி தோன்றி 4750 மில்லியன் ஆண்டுகள் கடந்துவிட்டதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது .
* உலகில் எஞ்சினியர்களை உருவாக்குவதில் , இந்தியா இப்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது .
* ஒரு மனித உடலில் சுமார் 30 , 35 பில்லியன் கொழுப்பு கூறுகள் உள்ளன . அவன் இளைத்தாலும் கூறுகள் சுருங்கிவிடுகின்றனவே தவிர எண்ணிக்கையுள் குறைவதில்லை .
* அமெரிக்காவில் 2008 ல் வாழ்ந்தவர்களில் அந்நிய நாட்டு மக்கள் கீழ்வருமாறு :
1 . மெக்சிகோ .........- 4.40 லட்சம் .
2 . இந்தியா ............... - 4.25 லட்சம் .
3 . ஜப்பான் ....... .........- 2.57 லட்சம் .
4 . தென்கொரியா - 2.166 லட்சம் .
5 . பிரிட்டன்..............- 2.162 லடசம்
6 . சைனா ..................- 1.63 லடசம் .
7 . பிறர் உட்பட ....- 3.6 மில்லியன் .
--- அருட்செல்வர் சேக்கிழார் .ஜூன் 2009 .

Monday, November 16, 2009

அப்படியா ...

* காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்த சாரைப் பாம்பின் விஷம் பயன்படுகிறதாம் .
* உலகிலேயே மிகக் குறைவான எழுத்துக்கள் உள்ள மொழி ஹவாய் மொழிதான் . அதில் மொத்தம் 12 எழுத்துக்கள்தான் உள்ளன .
*1947 - ல் நடந்த இங்கிலாந்து எலிசபெத்- ராஜகுமாரன் பிலிப்ஸ் திருமணத்திற்கு காந்திஜி அனுப்பிய பரிசு ஒரு கோவணம் .
* கிரிக்கெட் மட்டையை முதலில் வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ' ஜான்பால் ' என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளி .
* நண்டு தனது ஆயுளில் 20 முறை சட்டையுரித்துக் கொள்ளும் .
* சிலந்திப் பூச்சியின் வலைகள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் , எந்த இரு சிலந்தி வலைகளும் ஒன்று போல் இருப்பதில்லை .
--- பாக்யா , ஜூலை 10 - 16 ; 2009 .

Sunday, November 15, 2009

ஸ்டார் சென்சார் .

நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .
--- தினமலர் , 18 - 07 - 2009 .

Saturday, November 14, 2009

சாவே ! உனக்கொரு நாள் !

சாவே ! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ ?
சீரிய நெற்றி எங்கே ?
சிவந்தநல் இதழ்கள் எங்கே ?
கூரிய விழிகள் எங்கே ?
குறுநகை போன தெங்கே ?
நேரிய பார்வை எங்கே ?
நிமிர்ந்த நன்நடைதான் எங்கே ?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே .
அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரிய விட்டார்
தீய சொல் சொல்லா வாயை
தீயிலே கருகவிட்டார் .
பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்து விட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்க் கிளியைக் கலங்கவிட்டு
தாய்க் கிளியைக் கொன்றுவிட்டான் .
சாவே ! உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ
சஞ்சலமே ! நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ
தீயே ! உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாரோமோ
யாரிடத்துப் போயுரைப்போம் ?
யார் மொழியில் அமைதி கொள்வோம் ?
யார் துணையில் வாழ்ந்திருப்போம் ?
யார் நிழலில் குடியிருப்போம் ?
வேரொடு மரம் பறித்த
வேதனை எம்மையும் நீ
ஊரோடு கொண்டு சென்றால்
உயிர்வாதை எமக்கிலையே
நீரோடும் கண்களுக்கு
நிம்மதியை யார் தருவார்
நேரு இல்லா பாரதத்தை
நினைவில் யார் வைத்திருப்பார் ?
ஐயையோ காலமே
ஆண்டவனே எங்கள் துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே
கை கொடுத்த நாயகனை
கைப் புறத்தே மறைத்தாயே
கண் கொடுத்த காவலனைக்
கண் மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா
நேருவா மறைந்தார் , இல்லை !
நேர்மைக்குச் சாவே இல்லை !
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணமில்லை
இருக்கின்றார் நேரு
இங்கே தான் !
இங்கே தான் !
எம்முயிரில் -- இரத்தத்தில்
இதயத்தில் நரம்புகளில்
கண்ணில் -- செவியில்
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை
என்றும் அவர் பெயரை
எம்முடனே வைத்திருப்போம்
அம்மா... அம்மா... அம்மா...
--- கவிஞர் கண்ணதாசன் , ( ' தென்றல் திரை ' -- 30 - 05 - 1964 .)

Friday, November 13, 2009

தனி விமான சேவை !

செல்லப் பிராணிகள் பயணம் செய்வதற்காக தனி விமான சேவை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது .
வளர்ப்பு பிராணிகளை பலர் செல்லமாக வளர்த்து வருகின்றனர் . நாய் , பூனை , குருவி போன்றவற்றை சிலர் குழந்தைகளுக்கு நிகராக பாவித்து வளர்த்து வருகின்றனர் . இவற்றை , ஒரு இடத்துக்கு சரக்கு விமானங்களில் மட்டுமே அழைத்துச் செல்லமுடியும் என்பதால் தேவையான வசதிகள் கிடைக்காமல் அல்லல்படுகின்றன . அமெரிக்காவில் செல்லங்களின் விமான பயண பிரச்னைக்கு இப்போது இதற்கு விடிவு ஏற்பட்டுள்ளது .
செல்லப் பிராணிகள் பயணம் செய்வதற்காக தனி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் . பெட் ஏர்வேஸ் எனப்படும் இந்த விமான சேவை அமெரிக்காவில் நியூயார்க் , வாஷிங்டன் , சிகாகோ , டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய 5 நகரங்களுக்கு இடையே இப்போது இயக்கப்படும் . இந்த விமானத்தில் செல்லப் பிராணி ஒன்று பயணம் செய்ய கட்டணம் 149 டாலர் ( ரூ .12,450 ) மட்டுமே .
விமான பயணத்தில் பிராணிகள் பராமரிப்பு , தட்பவெப்ப கட்டுப்பாட்டு அறை வசதிகள் இலவசமாக வழங்கப்படும் . ஒவ்வொரு விமானத்திலும் விமானி , துணை விமானி , ஆகியோருடன் பிராணிகள் உதவியாளர்களும் இருப்பார்கள் . விமானத்தில் இருக்கும் பிராணிகள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படும் . நீண்ட தொலைவு விமானங்கள் ' பாத்ரூம் பிரேக் ' வசதிக்காக நிறுத்தப்படும் . அங்கு உணவு வழங்கப்படும் .
---- தினமலர் 18 - 07 - 2009 .

Thursday, November 12, 2009

கோயில் செய்திகள் .

பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் மூலவரை ரத்னவீதி உற்சவத்தில் நாராயணனாகவும் , ஸ்நானவேதி உற்சவத்தில் விநாயகராகவும் , ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவகுலேவரா உற்சவத்தில் சிவபெருமானாகவும் , சயனத்திருவிழாவில் சக்தி தேவியாகவும் , ரதோற்சவத்தில் சூரிய பகாவானாகவும் பாவித்து கொண்டாடுவார்கள் . ஒரே தெய்வத்தை இவ்வாறு பல பாவனைகளில் வழிபடுவது பூரி தலத்தில் மட்டும்தான் .
பொதுவாக சிவபெருமான் தன் வலக்கரத்தில் மழுவையும் , இடக்கரத்தில் மானையும் ஏந்தியிருப்பதுதான் வழக்கம் . ஆனால் , ' வலங்கைமான் ' திருத்தலத்தில் , வலக்கரத்தில் மானும் , இடக்கரத்தில் மழுவும் ஏந்திக் காட்சி தருகிறார் ஈசன் .
* ஆந்திர மாநிலத்தில் ராஜ முந்திரியில் உள்ள விஷ்ணு ஆலயத்தில் 5 அடி உயர கம்பீரமான விஷ்ணு சிலையின் பின்புறம் மோகினி வடிவம் செதுக்கப்பட்டுள்ளது . அதுவும் மோகினியின் பின்புறத்த் தோற்றத்தை வடித்துள்ளார் சிற்பி . கொண்டை , அதில் கூந்தல் அணிகலன்கள் , சிற்றிடை நளினம் இப்படியுள்ளது மோகினியின் ஒயிலான தோற்றம் .
கோகர்ணத்தில் உள்ள சிவாலயத்தில் சிவனின் சிலை உள்ளது . இச்சிலையின் பின்புறம் ஒரு பூதத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது . பூதராஜா சன்னதி எங்கின்றனர் இதனை .
--- விஜயலட்சுமி சுப்ரமணியம் ,-- துர்க்கா கண்ணன் , குமுதம் பக்தி ஸ்பெஷல் . நவம்பர் 1 - 15 , 2008 .

Wednesday, November 11, 2009

ஒரு ரசிகர் !

மறக்க முடியாத ஒரு ரசிகர் பற்றி ?
ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரின் ஒரே மகன் தீர்த்தாரப்பன் . அந்த தீர்த்தாரப்பன் இளம் வயதில் இயற்கை எய்தி விட்டான் .
தம் இனிய நண்பரின் மகன் இறந்து விட்டதை அறிந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஒரு இரங்கற்பா எழுதி , ரசிகமணி டி. கே. சி. க்கு அனுப்பினார் .
அதைப் படித்து அதன் இலக்கியச் சுவையில் ஈடுபட்ட ரசிகமணி , கவிமணிக்கு , " இவ்வளவு அழகான இரங்கற்பா பெறும் பொருட்டு இறந்து போக இனியொரு மகன் எனக்கு இல்லையே " ந்னு எழுதினாராம் .
--- K. பாக்யராஜ் , பாக்யா , ஜூலை 17 - 23 ; 2009 .

Tuesday, November 10, 2009

இராமாயணமா ? மகாபாரதமா ?

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நூல்களில் ஒன்று ' சப்தார்த்த சிந்தாமணி ' என்பதாகும் . கி. பி. 1684 -- 1712 வரை தஞ்சையை ஆட்சி புரிந்த ஷாஜி ( சகசி மன்னன் ) என்ற மராட்டிய மன்னரின் அவைப்புலவராய் விளங்கிய ' சிதம்பர கவி ' என்பவரால் எழுதப்பட்டது இந்நூல் . வடமொழியில் உள்ள இந்த நூலை முதல் சுவடியிலிருந்து படிக்கத் தொடங்கினால் இராமாயண காவியமாகவும் , இதனையே கடைசி சுவடியிலிருந்து உருது மொழி படிப்பது போன்று திருப்பிப் படித்தால் பாகவதமாகவும் அமைந்துள்ளது .
--- மலர்சூரியா, பாக்யா . ஜூலை 17 - 23 ; 2009 .

Monday, November 9, 2009

சூரியன் .

ஒவ்வொரு மாதத்தில் ஒரு பெயர் .
12 ஆதித்தியர்கள் சேர்ந்து உருவானவரே சூரியன் . அவன் ஒவ்வொரு ராசியில் ஒரு பெயர் பெறுவான் . மேஷ ராசியில் அம்சமான் , ரிஷபத்தில் தாதா , மிதுனத்தில் சவிதா , கடகத்தில் அரியமான் , சிம்மத்தில் விஸ்வான் , கன்னியில் பகன் , துலாத்தில் பர்ஜன் , விருச்சிகத்தில் துவஷ்டா , தனுஷில் மித்திரன் , மகரத்தில் விஷ்ணு , கும்பத்தில் வருணன் , மீனத்தில் பூஷா என்பது சூரியன் பெறும்
பெயர்கள் .
உலகம் முதன் முதல் தோன்றிய போது பல ஒலிகள் அங்கு தோன்றின . அவற்றில் முதலாவதாக தோன்றிய ஓசை ஓம் என்று சொல்லப்படக்கூடிய மூல மந்திரமாகும் . ஆதி மந்திரமான ஓங்கார ஓசையிலிருந்து ஒளிமயமான சூரியன் அவதாரம் செய்தான் என்கிறது மார்க்கண்டேய புராணம் .
பிரம்மதேவனால் தோற்றுவிக்கப்பட்ட சப்த ரிஷிகளில் ஒருவர் மரீசி மகரிஷி . அவர் மகன் காச்யபர் . காச்யப்பரின் மனைவி அதிதி . அவள் வயிற்றில் பிறந்தவர்கள் துவாதச ஆதித்யர்கள் . இந்த பன்னிரெண்டு பேரும் ஒருவராகி சூரியன் என்ற பெயரை பெற்றனர் .
---- தினமலர் . பக்திமலர் , ஜூலை 16 . 2009 .

Sunday, November 8, 2009

மூவர் தூக்கம் !

ரோகி , போகி , யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள் . ரோகி என்றால் நோயாளி . உடல்நிலை மோசமாக இருக்கும்போது , ஒருவனுக்குத் தூக்கம் வராது . போகி என்றால் இன்பத்தை நாடிப் போகிறவன் . அவன் நாடும் இன்பங்கள் பலவற்றுக்கு இரவுதான் உகந்தது . யோகி இரவில் தூங்காமல் இருப்பதற்குக் காரணம் , இரவும் இருளும் அவருடைய ஆன்மிகப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் .
காரணம் , இருளில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பாகுபாடு இன்றி ஐக்கியமாகிவிடுகின்றன . வெளிச்சம் வந்ததும் ஒவ்வொன்றும் தன் தனி அடையாளத்தோடு விறைத்து நிற்கிறது . இருள் என்பது உண்மைக்கு வெகு அருகில் இருக்கிறது . வெளிச்சம் என்பது பொய்க்கு அருகில் இருக்கிறது .
ஆன்மிகத்தில் இருள் என்பது உன்னதமாக கருதப்படுகிறது .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ( ஆயிரம் ஜன்னல் ) ஆனந்தவிகடன் , 27 - 05 - 2009 .

Saturday, November 7, 2009

மைக்கேல் ஜாக்சன் .

" Gone too soon " ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று . எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு சிறுவன் பதினோரு வயதிலேயே இறந்து போன போது ஜாக்ஸன் அவன் நினைவாக அந்தப் பாடலைப் பாடினார் . உள்ளத்தை உருக்கும் குரலில் அந்தப் பாடலின் இசையும் , பாடல் வரிகளும் , வீடியோவும் , எய்ட்ஸ் நோயைப் பற்றிய செய்திகளை அழுத்தமாக உலகத்துக்கு எடுத்துச் சொன்னது .
மைக்கேல் ஜாக்ஸ்னின் பெரும்பாலான பாடல்கள் இப்படிச் சமூக அக்கரையுடன் எழுதப்பட்டவையே . பலப் பாடல்களை அவரே எழுதினார் . நிறவெறி , யுத்த வெறிக்கான எதிர்ப்பு , உலக அமைதிக்கான கோரிக்கைகள் , கறுப்பின மக்களின் துயர்கள் , காடுகளை அழிப்பதை எதிர்ப்பது போன்றவை மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புக்கள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது .
உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் ( சுமார் 39 நிறுவனங்கள் ) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது .
உலக இசை சரித்திரத்தில் மைக்கேல் ஜாக்ஸனைப் பொல் மக்களிடையே பிரபலமானவர் வேறு யாரும் இல்லை . பீட்டில்ஸ் இசைக்குழு ( ' நாங்கள் ஏசுநாதரை விடப் புகழ் பெற்றவர்கள் ' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர்கள் ) , எல்விஸ் பிரஸ்லி போன்றவர்களும் கோடிக்கணக்கான வெறி கொண்ட ரசிகர்களைக் கொண்டிருந்தாலும் யாருமே தங்கள் வாழ்நாளில் ஜாக்ஸன் அலவுக்கு 750 மில்லியன் இசைத் தொகுதிகளை விற்றதில்லை .
' இசை என்பது கேட்பதற்கு மட்டும் இல்லை , பார்ப்பதற்கும்தான் ' என்கிற மோடவுன் வீடியோ கலாச்சாரத்தை உருவாக்கியவர் ஜாக்ஸன் .
கிறிஸ்டல் கையுறைகள் , தங்கம் மின்னும் உடைகள் , ' மூன்வாக் ' என்று சொல்லப்பட்ட பிரத்யேக அலை நடை கொண்ட நடனம் , வெளிறிய நிறம் , கருகிய தலைமுடி , வசீகரப் புன்னகை , கூலிங்கிளாஸ் , தொப்பி , சைக்கடலிக் வண்ணவிளக்குகள் புகைந்த பிரும்மாண்ட செட் இவைகளுடன் அவர் மேடைகளிலும் , வீடியோக்களிலும் காண்பித்த பொழுதுபோக்கு இசை , நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களைப் பைத்தியமாகவே ஆக்கின .
தன் 45 வருட இசைத் தொழிலில் 2500 கோடி ரூபாய் டாலர்கள் சம்பாதித்த பாப் இசையின் அரசன் ஐம்பது வயதில் அகால மரணமடைந்தது ஏன் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் தாங்க முடியாத கேள்வி .
ஜாக்ஸனின் சிறு வயதுப் பருவம் துயரத்துடன் கழிந்தது . இந்தியானா மாநிலத்தில் ஒரு புறநகர் தொழிற்பேட்டைப் பகுதியில் பிறந்தார் மைக்கேல் ஜோசப் ஜாக்ஸன் . தந்தை ஒரு மில் தொழிலாளி . அவரைப் போன்ற அராஜகத் தந்தையைப் பார்க்க முடியாது . தன்னுடைய ஐந்து ஆண் குழந்தைகளையும் அவர் பாடாய்ப் படுத்துவார் . ஒரு காலைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி மைக்கேலை அலற அலற அடிப்பார் .
ஓப்ரா வின்ஃப்ரே டெலிவிஷன் ஷோவில் அவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டார் . சின்ன வயதில் அப்பா கொடுமைப்படுத்தியதைப் பற்றிச் சொன்னபோது வாய்விட்டு அழுதார் . விட்டிலிகோ என்கிற தோல் நோய் இருப்பதை ஒப்புக்கொண்டார் . ஒரு விபத்தின்போது உடைந்த மூக்கு நுனி அடுத்தடுத்த ஆபரேஷன்களில் இன்னும் மோசமானதாக அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் . ஆனால் , சிறுவர்களை முறைகேடாகப் பயன்படுத்டியதே இல்லை என்றும் அழுத்தமாகச் சொன்னார் .
' ஐ வில் பீ தேர் ' என்பது அவருடைய மற்றொரு ஹிட் பாடல் . அது உண்மைதான் . ஜாக்ஸன் எப்போதும் இருப்பார் , தன்னுடைய அழியாத பாடல்களின் மூலம் .
* முழு உலகமே பாப் இசையின் முதல் பெரும் நட்சத்திரமாக மதித்துப் போற்றும் மைக்கேல் ஜாக்சன் வெறும் 60 பாடல்கள்தான் பாடியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா ?
அவரது முதல் இசைத் தொகுப்பு இரண்டு கோடிப் பிரதிகள் விற்றிருக்கின்றன . அவரது ' த்ரில்லர் ' தான் இன்று வரை உலகில் மிக அதிகமாக விற்ற இசைத் தொகுப்பு . தன் 50 வயதிலேயே , அவரே ஒரு பாடலில் சொல்லிக் கொள்வது போல , ' மாலை வானத்தில் எரிந்து செல்லும் தாரகை போல விரைவாக மின்னி மறைந்தார் !'.
---- கிருஷ்ணா டாவின்ஸி , குமுதம் . 08 - 07 - 2009 .
---- ஷாஜி , தமிழில் : ஜெயமோகன் . ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

Friday, November 6, 2009

பார்வை வெளிச்சம் .

சமீபதில் , அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென் மத்தியப் பகுதியில் , பல ஆயிரம் வருடப் பாரம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசிப் பெண் , மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்துபோனார் . இவர்தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண் . அவளது மரணத்தோடு உலகிலிருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்துபோனது . இனி , அந்த மொழி பேசும் இனக் குழு உலகில் இல்லை . பல்கலைக்கழகங்களின் முயற்சியால் அந்த மொழிச் சொற்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன . ஆனால் , அதைப் பேசத் தெரிந்த பூர்வகுடி மனிதர் எவரும் இனி உலகில் இல்லை !
--- எஸ் . ராமகிருஷ்ணன் . ( சிறிது வெளிச்சம் ) ஆனந்தவிகடன் , 27 - 05 - 2009 .

Thursday, November 5, 2009

தெரிந்து கொள்வோம் .

* இந்தியாவிலேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707 - ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது .
* கத்தரிக்கோலைக் கண்டுபிடித்தவர் , மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோனார்டோ டாவின்சிதான் .
* ஜன கண மன முதன் முதலில் பாடப்பட்ட நாள் 1911 - ம் ஆண்டு டிசம்பர் 27 ( கல்கத்தாவில் ) .
* ஜன கண மன தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு 1950 ஜனவரி 24 .
* எந்தப் பத்திரிகையும் வெளி வராத இந்திய பகுதிகள் அருணாசலப் பிரதேசம் , லட்சத்தீவு .
*சைலண்ட் கில்லர் எனப்படும் நோய் - ரத்த அழுத்த நோய் .
* நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு - கணையம் .
* பற்களை பாதிக்கும் நோய் - கேரிஸ் .
* புரோட்டீனின் முக்கிய பொருள் - அமினோஆசிட் .
* மிகச்சிறந்த ஞாபகசக்தி ' பாராமென்சியா ' என அழைக்கப்படுகிறது .
* மருத்துவ அறிவியலின் தந்தை - ஹிப்போகிரேடஸ் .
* மலேரியா என்பதன் பொருள் - சுத்தமற்ற காற்று .
--- தினத்தந்தி , 04 - 07 - 2009 .

Wednesday, November 4, 2009

புகை !

ஒளிக்கு நிழல் எப்படியோ , ஞானத்துக்கு அஞ்ஞானம் எப்படியோ , அப்படி அக்கினிக்குப் புகை என்று சொல்வார்கள் விஷயம் அறிந்தவர்கள் . எங்கே சந்தேகம் தொனிக்கிறதோ , அங்கு அறிவு சுடர்விடுகிறது என்று பொருள் . எங்கு நிழலாடுகிறதோ அங்கு ஒளியும் அருகில் இருக்கிறது என்பது அர்த்தம் . " யாண்டு யாண்டு புகை உண்டோ ஆண்டு ஆண்டு நெருப்பும் இருக்கிறது " என்பர் தர்க்க சாஸ்திரிகள் . ஆம் ! நெருப்பு இல்லாமல் புகை வராது . ஆதாரமான விஷயம் அணுவளவும் இல்லாமல் அவதூறோ வதந்தியோ வராது !
புகை மிகவும் நுட்பமானது ; எளிதில் எங்கும் நுழையக் கூடியது . ஆனால் , புகையும் நுழையாதபடி காவல் காக்கப்பட்ட கோட்டைக் கொத்தளங்களை இராவணன் பெற்றிருந்தான் என்று கம்பர் இலங்கையை வர்ணிக்கிறார் . ஆனால் , அப்படிப் புகையும் நுழையாத வாயிலில் பகையாகிய அனுமன் நுழைந்து இலங்கைக்கு நெருப்பிட்டு அந்நகரைப் புகைப் படலத்தின் கீழ் அழுத்தியதை இலங்கை எரியூட்டுப் படலத்தில் நாம் படித்திருக்கிறோம் .இராவணனுடைய பராக்கிரமம் இப்படிப் புகைந்து போனதற்குக் காரணம் என்ன? பிரகாசமாகத் தீட்டப்பட்ட ஓர் ஓவியம் போலிருந்த சீதையை இராமரிடமிருந்து அபகரித்து , அவள் மனத்தை நோகச் செய்து , அவளைப் ' புகையுண்ட ஓவியம் ' போலச் செய்ததால் அல்லவா ?
அறிவின்மைக்கு எடுத்துக்காட்டு ' புகை ' என்பார்கள் சிலர் . அறிவுக்கு எடுத்துக்காட்டு ஜ்வாலை . சாம்பிராணியைத் தூக்கி ஜ்வாலையில் போட்டதும் , அது மங்கி , புகை கிளம்புகிறதல்லவா ? அதை வைத்துக்கொண்டு , அறிவை அமுக்கி அறியாமையை எழுப்புபவர்களை ' மடசாம்பிராணி ' என்றும் அழைக்கிறார்கள் !
--- மகரம் , ஆனந்தவிகடன் . 06 - 05 - 1951 .

Tuesday, November 3, 2009

H2 O .

இயற்கையின் ஆச்சர்யம் ! 1784 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹென்றி கேவன்டிஷ் என்கிற பிரிட்டிஷ் கெமிஸ்ட் , ஒரு டெஸ்ட் டியூப்பில் ஹைட் ரஜன் ( H ) வாயுவையும் , இன்னொரு டியூபில் ஆக்ஸிஜனையும் ( O ) இருத்தி , ' டியூப் ' களின் வாய்ப் பகுதிகள் வழியாக இரு வாயுக்களையும் கலக்கிவிட்டுப் பிறகு பிரித்தபோது , ' டப் ' என்ற சத்தத்துடன் தண்ணீர்த் துளிகள் உருவாகின . வாயுக்களைக் காணோம் !
இரு வாயுக்கள் இணைந்தால் -- அதாவது இரு அணுக்கள் ஹைட்ரஜன் , ஒரு அணு ஆக்ஸிஜன் -- தண்ணீர் உருவாகும் என்பது அப்போது ஆச்சர்யமான கண்டுபிடிப்பு . ஒரு மாலிக்யூல் தண்ணீய்ரை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் , நடுவில் உருண்டையாக ஆக்ஸிஜன் அணுவும் , அதன் தலைப் பகுதியில் இரு காதுகள் போல ஹைட்ரஜன் அணுக்களும் -- பார்க்க அப்படியே மிக்கிமவுஸ் தலை மாதிரி காணப்படும் !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் , 17 - 06 - 2009 .

Monday, November 2, 2009

ஐன்ஸ்டீன் .

" ஐன்ஸ்டீன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ...."
" ' ரிலேட்டிவிட்டி தியரி ' என்று சொல்வேன் என்று நினைத்தீர்களா ? அதுதான் இல்லை . காந்தியின் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது . காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற ஸ்டேட்மென்ட் இது :
' இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ! ".
--- வி . மருதவாணன் , கும்பகோணம் . ஆனந்தவிகடன் , 17 - 06 - 2009 .

Sunday, November 1, 2009

' லபூப் - இ - சகீர் ! '

உலர்ந்த திராட்சை அதை ஹை - டெம்ப்ரச்சரில் வைத்து மேலும் உலரவைத்து பெளடராக்கி வைத்துக் கொள்கின்றனர் . அதேபோல் பரங்கி சக்கை எனும் மரசக்கைகளை துண்டுகளாக்கி இதையும் நுண்ணிய பெளடராக்கிக் கொள்கின்றனர் . இவைகளுடன் முந்திரி , பாதாம் , பிஸ்தா , வால்நட் , அக்ரூட் ஆகியவைகளையும் சேர்த்து தூளாக்கி அதில் பன்னீரை சேர்த்து குழைத்து அதனுடன் தேன் , நெய் ஆகியவற்றை சேர்த்து பக்குவமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்கி மீண்டும் அதை எந்திரம் மூலம் மிக்ஸிங செய்து பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துக் கொடுக்கின்றனர் . இதுதான் லபூப் - இ - சகீரின் ரகசிய ஃபார்முலா .
அரைகிலோ லபூப் - இ - சகீர் லேகியம் வெறும் 125 ரூபாய் தான் . அது சரி ' லபூப் - இ - சகீர் ' என்பது என்ன?
தமிழக அரசின் ' டாம் கால் ' நிறுவனம் தயாரித்த ஆண்மைக் குறைவுக்கான லேகியமே அது . சந்தைக்கு வந்த அரை மணிநேரத்தில் மொத்தமும் , அதாவது முதல் பேட்சில் தயாரித்து அனுப்பிய ஐனூறு கிலோ லேகியமும் விற்றுத் தீர்ந்து விட்டது என்கிறார் டாம்கால் நிறுவனத்தின் பொதுமேலாளர் பால்ராஜ் . அதுமட்டுமல்ல , தங்களின் தேவைக்காக முன்பதிவு செய்துகொள்ள உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு க்யூவில் நிற்கின்றனர் .
--- புஷ்கின்ராஜ்குமார் , குமுதம் . 01 - 07 - 2009 .

Saturday, October 31, 2009

மம்மி !

பெண் பெயரில் ஆண் . ' மம்மி ' யிலும் குழப்பம் .
நியூயார்க் , ஜூன் 29 - 2009 .
புரூக்ளின் நகர அருங்காட்சியகத்தில் பெண் பெயரில் பராமரிக்கப்பட்ட மம்மியை ஸ்கேன் செய்த போது , அது ஆண் என்று தரியவந்தது .
அமெரிக்காவின் புரூக்ளின் நகர அருங்காட்சியகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 4 எகிப்திய ' மம்மி ' க்கள் பராமரிக்கப்பட்டு வந்தது . இதில் ' லேடி ஓர் ' என்று பெயரிடப்பட்ட மம்மியின் மீது பெண் என்று எழுதப்பட்டு இருந்தது . கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்த ' மம்மி ' பெண் என்று கருதப்பட்டு வந்தது ..
இந்நிலையில் , நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் , அந்த மம்மிகளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினர் . அப்போது , ' லேடி ஓர் ' என்ற பெண் பெயரில் பராமரிக்கப்பட்டு வந்தது ஆண் மம்மி என்று தெரிய வந்தது .
எகிப்திய மன்னர்கள் இறந்த போது அவர்கள் உடலை பாடம் செய்து , ' மம்மி ' யாக்கிய முறை பற்றியும் , எகிப்தியர்கள் வாழ்க்கை முறை பற்றியும் ஆய்வு செய்வதற்காக ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , பெண் பெயரில் இருந்தது ஆண் மம்மி என்று தெரிய வந்தது .
இது குறித்து அமெரிக்காவின் நார்த் ஷேர் பல்கலைக்கழக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் மிச்செல் பின்டோ கூறுகையில் , ' மம்மியின் எலும்புக்கூடு மற்றும் அவற்றைப் பற்றிய கூடுதல் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட சோதனையில்தான் , பெண் பெயரில் இருந்தது ஆண் மம்மி என்று தெரியவந்தது ' என்றார் .
--- தினமலர் , 29 - 06 - 2009 .

Friday, October 30, 2009

அதிசய மனிதர் !

ஜி.டி. நாயுடு ( 23 - 03 - 1893 --- 04 - 01 - 1974 )
ஒன்றரை ஆண்டுக் காலமாக உள்ளே பூட்டிக் கிடந்த துப்பாக்கி ஒன்று வேலை செய்கிறதா என்று சோதிக்க விரும்பிய ஜி . டி . நாயுடு , ஒரு வாழை மரத்தின் அடிப்பாகத்தில் குறி பார்த்துச் சுட்டார் . குண்டு,வாழை மரத்தைத் துளைத்துக்கொண்டு மறு பக்கம் போய் விழுந்தது .
வாழை மரத்தில் விழுந்த துளை நாயுடுவின் சிந்தனையைத் தூண்டியது . உடனே ரொட்டிகளைக் கொண்டு வரச் சொல்லி , அந்தத் துளையில் அடைத்தார் . மேலும் சில வாழைகளைத் துளைத்து ஒன்றில் சாணம் , இன்னொன்றில் கோமியம் , மற்றொன்றில் மாமிசம் இவற்றைத் திணித்து அந்த வாழை மரங்களின் வளர்ச்சியில் ஏதேனும் மாறுதல் காண்கிறதா என்று கண்காணித்து வந்தார் . மரங்களும் , காய்களும் இரண்டு மடங்கு பெரிதாக வளர்ந்தன . எதேச்சையான ஆராய்ச்சி எதிர்பாராத பலனை அளிக்கவே , நாயுடு தமது ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து , ஆரஞ்சு , பப்பாளி , பருத்தி போன்ற செடிகளையும் சோதனைக்கு உள்ளாக்கினார் . அதன் விளைவு : ' உலகிலேயே மிகச் சிறந்த பப்பாளி விளைவிக்கும் செப்பிடு வித்தைக்காரர் நாயுடு என்ற புகழ் அவருக்குக் கிட்டியது . ஜி . டி . நாயுடுவைச் சந்திக்கச் செல்கிறவர்கள் , அவர் தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சாப்பிடாமல் தப்ப முடியாது .
பல ஆண்டுகளுக்கு முன் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட ' எலெக்ட்ரிக் ஸேஃப்டி ரேஸர் ' மேனாட்டு விஞ்ஞானிகள் பலரால் பாராட்டப்பட்டது .
தாவர இயல் , பொறி இயல் , மருத்துவம் , சோதிடம் இவ்வளவையும் அறிந்துள்ள நாயுடுவின் முழுப் பெயர் துரைசாமி . இவரை , ' இலக்கண துரைசாமி ' , ' மருத்துவ துரைசாமி ' , ' சோதிட துரைசாமி ' என்றும் அழைப்பதுண்டு . ஆயினும் சோதிடத்தில் இவருக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது .
ஜி . டி . நாயுடு ஆங்கிலம் அதிகம் படித்தவரில்லை . ஆனாலும் , பல முறை உலக நாடுகளைச் சுற்றியதன் மூலம் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் , உரையாடவும் அனுபவம் பெற்றுள்ள இவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியக்காதவர்களே இல்லை .
1893 - ல் கலங்கல் கிராமத்தில் உழவரின் மகனாகப் பிறந்த இவர் தம்முடைய சலியாத உழைப்பால் உயர்ந்து , தென்னகத்தின் பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார் .
--- ஆனந்தவிகடன் , 10 - 06 - 2009 .

Thursday, October 29, 2009

உறவு முக்கோணம் !

மனோதத்துவ அறிஞர்கள் , மனித உறவுகளில் எழும் சிக்கல்களைப் போக்கும் ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தார்கள் . அதுதான் உறவு முக்கோணம் .
ஒரு முக்கோண வலையைக் கற்பனை செய்யுங்கள் . இந்த வலையின் ஒவ்வொரு கோணத்தின் நுனியையும் ஒரு மரத்தில் கட்டி இருப்பதாக கற்பனை செய்யுங்கள் . இந்த முக்கோண வலையின் ஒவ்வொரு கோணத்துக்கும் ஒரு பெயர் இடுங்கள் . ஒன்றின் பெயர் அன்பு ; மற்றொன்றின் பெயர் உண்மை ; மூன்றாவதன் பெயர் கருத்துப் பரிமாற்றம் . இதையே ஆங்கிலத்தில் Affinity , Reality , Communication என்று கூறுகிறார்கள் .
இந்த மூன்றும் வலுவாக ஒன்றை ஒன்று பிணைத்து நிற்கும்போது , பிரச்னைகள் எல்லாம் சுமூகமாகத் தீர்க்கப்படுகின்றன . இந்த உறவு முக்கோணம் எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம் .
மகன் ஒரு பெண்ணை விரும்புகிறான் . அப்பா எதிர்க்கிறார் . " என்னடா இது ! அவர்கள் சாதி என்ன , நம்ம சாதி என்ன ? அது எப்படி அங்கு போய்ப் பெண் எடுக்க முடியும் ? உனக்குப் புத்தி இருக்கா ? "
என்கிறாள் அம்மா .
இதன் விளைவாக , அப்பாவும் அம்மாவும் பையனுடன் பேசுவது இல்லை . இந்த மூவருக்கும் இடையே இருந்த ஒரே ஒரு தொடர் - கருத்துப் பரிமாற்றம் , எண்ணப்பரிமாற்றம் - பேச்சு - விடுபட்டுப் போக ,
அவரவர்கள் வழியே சரி என்று எண்ணி , அதிலே ஊறிப்போகிறார்கள் .
அதுவே , உறவு முக்கோணத்தை உணர்ந்தவர்கள் என்ன செய்வார்கள் ?
என்ன இருந்தாலும் , " அவன் நம் மகன் , அவனது நன்மைதான் நமது நன்மை " என்று அன்பால் கட்டுப்படுவார்கள் . " கீழ் சாதியாவது , மேல் சாதியாவது ! அவன் யாருடனாவது சந்தோஷமாக இருந்தால் சரிதான் ! இதோ பாருங்க ! அறியாத பிள்ளை அது . அதோடு பேசுங்க . என்ன விஷயம் , யாரு பொண்ணு என்னனு தெரிஞ்சுக்குவோம் . நல்லது கெட்டது எடுத்துச் சொல்லுவோம் ! " என்கிறார் தாய் .
கருத்துப் பரிமாற்றம் சிக்கல்களை அவிழ்க்கிறது . அன்புடன் கூறப்படும் உண்மைக் கருத்துக்கள் , மகனின் எண்ணத்தை மாற்றவும் செய்யலாம் .
--- எம்.எஸ். உதயமூர்த்தி .

Wednesday, October 28, 2009

தண்டனை வேண்டும் .

கடுமையான தண்டனை வேண்டும் .
பரஸ்பரம் சம்மதத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது டில்லி ஐக்கோர்ட் . இவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவின் கீழ் தண்டிப்பது அடிப்படை உரினையை மீறியது ஆகும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது . இதில் அடிப்படை உரிமை என்ற பிரச்னைக்கே இடமில்லை .
விரும்பியபடி ஆடை அணிவது ஒருவருடைய அடிப்படை உரிமையாகும் . ஆனால் , ஆடையே அணியாமல் பொது இடங்களில் நடமாடுவது அடிப்படை உரிமை இல்லை . மிருகங்கள்கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபடாதபோது இதற்கு உரிமை கோருபவர்கள் மிருகங்களைவிட கேவலமானவர்கள் . இது நாகரிக மக்களின் சமுதாயப் பிரச்னை . இந்த அநாகரிக அனுமதிக்கு சுப்ரீம் கோர்ட் உடனே தடை விதிப்பதுடன் இதற்கான தண்டனையைக் கடுமையாக்க வேண்டும் .
--- கே. கே. வேதபுரி , காவேரிப்பாக்கம் . தினமலர் .17 - 07 - 2009

Tuesday, October 27, 2009

அப்படியா !

* வாத்து ' க்வாக் ' சத்தத்தை வெளியே விடுவது இல்லை . உள்வாங்கி எழுப்பும் ஒலி அது ! எதிரொலி ஏற்பட ஒலியின் அலைகள் வெளிப்பட வேண்டும் . அதனால் , வாத்துகள் எழுப்பும் ' க்வாக் ' சத்தம் எதிரொலிப்பது இல்லை .
*சில ஹீரோக்களின் தொப்புளுக்கும் , மார்புக்கும் இடையே , ' ஸ்பீட் பிரேக்கர்ஸ் ' மாதிரி இருக்கும் தசைகளின் பெயர்தான் ' சிக்ஸ் பேக் '. இடது மார்பில் மூன்று , வலது மார்பில் மூன்று .
* தன் உடம்பை விற்கும் ஆண்களுக்கு ' Gigolo ' என்று பெயர் . பொதுவாக , Call boys என்று அழைக்கப்படுகிறார்கள் . புரியும்படி சொன்னால் ' விலைமகன் '

Monday, October 26, 2009

மரணம் .

" மரணம் என்பது முற்றுப்புள்ளியா ?"
" எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் அது கால்புள்ளிதான் . ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னார் . ' பிறக்கும் முன்பு நான் இறந்திருந்த்தேன் . இறந்த பின்பு நான் வாழ்ந்திருப்பேன் !'"
--- மா. செ. சரவணகுமார் , சென்னை - 17 .
மனித உறவுகள் .
மனித உறவுகளைப் பற்றி எழுதும் அறிஞர்கள் முக்கியமான மூன்று குறைபாடுகள் உறவுக்குக் குறுக்கே நிற்பதாகக் குறிப்பிடுகிறார்கள் .
பிறர் சொல்வதை நாம் கவனமாகக் கேட்பதில்லை ; பிறர் சொல்வதன் முழு அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்வதில்லை ; தவறு ஏற்படும்போது நாம் அதை உடனே ஏற்றுக் கொள்வதில்லை .
--- எம்.எஸ். உதயமூர்த்தி .ஆனந்தவிகடன் , 15 - 07 - 2009.

Sunday, October 25, 2009

ஐ. ஏ. எஸ். தேர்வு .

2002 ஐ. ஏ. எஸ் . தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று . ' நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள் . ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும் . ஆனால் , சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்டோ ஆணி அடிக்க முடியாதது . நீங்கள் என்ன செய்வீர்கள் ?'
கேள்விக்கான பதில் ....' ஸ்டிக்கர் மூலம் ஒட்டலாம் ; அந்த இடத்தில் மட்டும் சுவரைப் பெயர்த்து எடுத்து மரத்தால் ஆன சட்டத்தைப் பொருத்தலாம் ' என்றெல்லாம் பதிலுக்குச் சுவரில் முட்டிக்கொண்டீர்களா ? அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் ? நீங்கள் கலெக்டர் . சுவரில் படம் மாட்டுவது உங்கள் வேலை இல்லை . அலுவலக உதவியாளரிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள் . தனக்கான தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய பல தோல்விகளுக்குக் காரணம் .
---ரீ. சிவகுமார் , ( நேற்று...இன்று...நாளை ! ) ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

Saturday, October 24, 2009

வித்தியாசம் !

மருத்துவர் ஒருவர் கடற்கரைக்குக் காற்று வாங்க வந்திருந்தார் . கடற்கரையில் அலைகள் அடித்து மீளும் இடத்தில் சில நட்சத்திர மீன்கள் கரை ஒதுங்கி உயிருக்குத் தத்தளித்துக்கொண்டு இருந்தன . அங்கே ஒரு சிறுவன் அலையோரத்தில் அப்படி ஒதுங்கிய மீன்களைப் பொறுக்கி , மீண்டும் தண்ணீரில் எறிந்துகொண்டு இருந்தான் .
" தம்பி , எதற்காக உன் நேரத்தை வீணடிக்கிறாய் ? நீ 10 மீன்களைத் தண்ணீரில் எடுத்து விடுவதற்குள் இன்னும் 100 மீன்கள் கரை ஒதுங்குகின்றன . உன் செயல் பெரிய வித்தியாசம் எதயும் செய்துவிட முடியாது என்று புரியவில்லையா ?" என்று டாக்டர் கேட்டார் .
" பெரிய வித்தியாசமா இல்லையா என்று தண்ணீருக்குத் திரும்பிய மீன்களிடம் கேட்டுப் பாருங்கள்.... புரியும் " என்றான் சிறுவன் .
டாக்டருக்குப் பொட்டென்று மண்டையில் அடித்தது போல் விளங்கியது .
-- சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஆனந்தவிகடன் , 01 - 07 - 2009 .

Friday, October 23, 2009

கவிதை .

" கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும் ?"
" வார்த்தை சிக்கனமாக , அர்த்தத்தில் வளமாக இருக்க வேண்டும் . உதாரணத்துக்கு காசி ஆனந்தனின் நறுக்கு ஒன்று .
குப்பைத்தொட்டி !
அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது குப்பைத்தொட்டி .
குப்பை பொறுக்கி
வாழ்பவனுக்கு
இது அலுவலகம் ! "
--- த. சீ. பாலு, சென்னை - 73. ஆனந்தவிகடன் , 01 - 07 - 2009 .

Thursday, October 22, 2009

பார்வை வெளிச்சம் .

சென்ற ஆண்டு ஒரு நாளிதழில் நாகர்கோவிலைச் சேர்ந்த 14 வயதான மாஷா நஸிம் என்ற மாணவியின் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வந்தது . உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய நல்ல திட்டம் என்று தோன்றியது . இன்று வரை அந்தத் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை .
ரயிலில் உள்ள கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் தண்டவாளம் எங்கும் விழுவதால் நோய்க் கிருமிகள் அதிகம் பரவுகின்றன . இதை மாற்றுவதற்கான புதிய கழிப்பறை ஒன்றினை மாஷா வடிவமைத்திருக்கிறார் . இவரது அப்பா காஜா நஜ்முதீன் ஓர் அரசு ஊழியர் .
மாஷா உருவாக்கிய கழிப்பறை மிக எளிதானது . கழிப்பறையில் சேரும் கழிவுகள் ஒரு தொட்டியில் சேகரிக்கப்படும் . அவை ஒவ்வொரு ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும் ஒரு பொத்தானை அழுத்தினால் மொத்தமாக நடமாடும் கழிவு சேகரத் தொட்டி ஒன்றின் வழியே வெளியே எடுத்துச் செல்லப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டுவிடும் .
இந்தத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரவேறு , உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ரு பரிந்துரை செய்திருக்கிறார் . ரயில்வே உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்வதாகச் சொல்லி இருந்தார்கள் . ஆனால் , இன்று வரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை .
உலகெங்கும் சுகாதாரமான கழிப்ப்றைகள் உருவாக்குவதற்காக முழு நேரமாக இயங்கி வருகிறது . World Toilet Organization . இந்த நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக World Toilet College ஒன்றினை சிங்கப்பூரில் ஆரம்பித்து இருக்கிறது . இந்த நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் கருத்தரங்கில் மாஷாவின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு விருது பெற்று இருக்கிறது . மாஷாவின் ஈடுபாடு மிகுந்த பாராட்டுக்கு உரியது .
--- எஸ் . ராமகிருஷ்ணன் ( சிறிது வெளிச்சம் ! ) , ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

Wednesday, October 21, 2009

தள்ளுபடி செய்திடலாமே !

இந்தியா சுதந்திரம் பெறும்போது நடந்த பாகப்பிரிவினையின்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் 300 கோடி ரூபாய் தரவேண்டும் என ஒப்பந்தம் நிறைவேறியதாக சமீபத்தில் வெளியான செய்தியை பத்திரிகைகளின் வாயிலாக அறிய நேர்ந்தது .
இந்த ஒப்பந்தப்படி பாகிஸ்தான் 62 ஆண்டுகள் கடந்தும் பணம் செலுத்தவில்லை . அதனால் ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் இந்த தொகை பற்றி பார்லி., யில் அறிவிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிய முடிகிறது .
பாகப்பிரிவினையின்போது இந்தியா கொடுக்க வேண்டிய பங்குத்தொகையை உடனே செலுத்தி தன் உயரிய பண்பாட்டை நிரூபித்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்
ஆனால் , பாகிஸ்தான் தன் கடமையை செய்யவில்லையே என்ற ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை .. அது அவர்கள் பண்பாடு .
ஆக , வராக்கடன்கள் என பல ஆயிரக்கணக்கான கடன் பாக்கிகளை ரத்து செய்து வரும் இந்திய அரசு இனி என்றைக்குமே வராது என தெரிந்துபோன பாகிஸ்தான் பங்குப் பணத்தையும் ரத்து செய்வதில் என்ன இடையூறு இருக்க முடியும் .
--- குப்பிலியான்பாலா , கும்பகோணம் . தினமலர் , 12 - 07 - 2009 .

Tuesday, October 20, 2009

ஒருமைப்பாடு .

ஒரு மகானைச் சந்திக்க இளைஞர்கள் சிலர் சென்றார்கள் . " உங்களை மகான் என்கிறார்களே .... அப்படி எங்களை விட உங்களிடம் என்ன சிறப்புத் தன்மை இருக்கிரது ?" என்று கேட்டார்கள் .
" நான் சாப்பிடுகிறேன் , படிக்கிறேன் , தூங்குகிறேன் , உடற்பயிற்சி செய்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன் " என்றார் மகான் .
" இவை எல்லாவற்றையும் நாங்களும்தான் செய்கிறோம் . பிறகு எப்படி நீங்கள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறீர்கள்? " என்று இளைஞர்கள் மீண்டும் கேட்டார்கள் .
அப்போதுதான் மகான் சொன்னார் , " இரண்டு செயல்களும் ஒரே மாதிரியாகத் தெரியலாம் . ஆனால் , வித்தியாசம் இருக்கிரது . நான் சாப்பிடும்போது சாப்பிட மட்டுமே செய்கிறேன் . தூங்கும்போது தூங்க மட்டுமே செய்கிறேன் . படிக்கும்போது படிக்க மட்டுமே செய்கிறேன் , பிராத்தனை செய்யும்போது வேறு சிந்தனைக்கு இடமின்றி பிராத்தனை மட்டுமே செய்கிறேன் . செய்கிற செயலில் மட்டும் மனத்தை ஒருமுகப்படுத்துகிறேன் . நீங்கள் எப்படி ? " என்று கேட்டார் மகான் .
தங்கள் மனம் அடிக்கடி அலைபாய்வதை அப்போதுதான் இளைஞர்கள் உணர்ந்தார்கள் . வெற்றிக்கு வேண்டியது ஒருமைப்பாடு .
ஒரு நேரத்தில் ஒரு பணி . ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டுமே செய்வது மனஒருமைப்பாட்டிற்கு மிகவும் அடிப்படையானதாகும் . அதில் ஒன்றிச் செய்வது மிகவும் முக்கியம் . ' நாம் ஒரு நாளைக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணங்களை எண்ணுகிறோம் ' என்று அறிஞர்கள்
கூறுகின்றனர் . மனம் அமைதியாக இருந்தால் எண்ணங்கள் குறையும் . எண்ணங்கள் ஒருமுகப்படுத்திச் செயலாற்றினால் மிகப் பெரும் ஆற்றல் கிடைக்கும் .
மன ஒருமைப்பாடு ' மனத்தை நிலைப்படுத்த தனித்தனியாக எதையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . உன் ஆற்றலை செயலில் மனத்தை முழுவதும் குவிக்க முயன்றால் போதும் . குளிப்பது , உண்பது , படிப்பது , பயில்வது , உலவுவது , உரையாடுவது , படக்காட்சியைப் பார்ப்பது ஆகிய எந்தச் செயலாயிருந்தாலும் முழு முனைப்போடு அதில் மனத்தை ஈடுபடுத்து . நீ வெற்றி பெறுவாய் ' என்கிறார் ஜேம்ஸ் ஆலன் .
' மனத்தை அடக்க நினைத்தால் அலையும் . மனத்தை அறிய நினைத்தால் அடங்கும் ' என்றார் வேதாத்ரி மகரிஷி . மேலாகக் கேட்பதற்கு மிகவும் எளிதாகத் தோன்றலாம் . ஆனால் , செயல்படுத்திப் பாருங்கள் . அப்போதுதான் அதன் சிரமம் தெரியும் .
எப்போது நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ .... அப்போது நீங்கள் அதுவாகவே இருங்கள் . -- இதுதான் மன ஒருமைப்பாட்டின் தாரக மந்திரம் .
--- இளசை சுந்தரம் , இலக்கியப்பீடம் . ஜூன் 2009 . இதழ் உதவி : க. கண்ணன் , செல்லூர் .

Monday, October 19, 2009

சத்தியச் சுரங்கம் .

நாமதேவர் , கபீர் போன்ற மகான்கள் மனிதர்களைப் போல ஜனிக்கவில்லை . மாறாக , ஆற்றில் கண்டெடுக்கப்பட்டார்கள் . ஷீர்டி சாயிபாபாவும் அப்படித்தான் திடீரெனக் காணப்பட்டார் .
தாயின் வயிற்றில் கர்ப்பம் தரித்துப் பிறக்காமல் உலகில் தாமாகவே தோன்றும் மகான்களின் தோற்றத்தை ' அயோனி ஜன்மம் ' என்பார்கள் .
---எஸ். லெஷ்மி நரசிம்மன் , இலக்கியப்பீடம் . ஜூன் 2009 .

Sunday, October 18, 2009

குழந்தை !

குழந்தைக்கு
தாயின் இடுப்பே இருக்கை
தோள்களே தொட்டில்
கால்களே கழிவறை !
--- வி . மருதவாணன் , ஆனந்தவிகடன் , 24 - 06 - 2998 .
சிறு புதுக்கவிதை !
" பெரிய்ய்ய இதிகாசக் கதையைச் சிறு புதுக்கவிதையில் சொல்லிவிட முடியுமா?"
" ஒன்றல்ல இரண்டு கவிதைகளை எடுத்துக்காட்டலாம் .
' நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
வெளுப்பவனின் நாக்கு
அழுக்காக்கிவிட்டது ! "
--- அப்துல்ரகுமான் .
' அப்பனுக்கு
ஆயிரம் மனைவிகள்
எந்தப் பிரச்னையும் இல்லை ;
மகனுக்கு
ஒரே ஒரு மனைவி
ஆயிரம் பிரச்னைகள் ! "
--- கபிலன் .
--- மதிபாரதி , சென்னை - 91 . ஆனந்தவிகடன் 24 - 06 - 2009 .

காசியில் தீபாவளி .

காசியில் விஸ்வநாதரும் , விசாலாட்சியும் பிரசித்தம் . அதுபோலவே அன்னபூரணி ஆலயமும் விசேஷமான ஒன்று . நடுவிலே பார்வதிதேவி அன்னபூரணியாக எழுந்தருளியிருக்கிறாள் . இரண்டு பக்கங்களில் ஒருபுறம் லட்சுமி , இன்னொரு புறம் பூதேவி இருக்கிறார்கள் . அன்னபூரணின் இடது கையில் அமுத கலசம் அலங்கரிக்கிறது வலது கையில் கரண்டி ஏந்தியிருக்கிறாள் .
அன்னபூரணி திருக்கோலத்தை முழுமையாக பார்த்துவிட முடியாது . உடம்பு முழுவதும் வெள்ளிக்கவசமிட்டு மறைத்திருப்பார்கள் . சந்நிதிக்கு எதிர்புறம் இரண்டு ஓட்டைகள் . ஒன்றுக்கு பிட்சத்துவாரம் என்று பெயர் . இன்னொன்று தர்மத்துவாரம் எனப்படும் . இந்த துவாரங்களின் வழியாகத்தான் அன்னபூரணியைத் தரிசிக்க முடியம் . தீபாவளியை ஒட்டி அன்னபூரணியை முழுமையாகத் தரிசிக்கலாம் . தங்கத்தாலான அன்னபூரணிக்கு நரகசதுர்த்தியின் முதல் நாள் அதாவது தனதிரயோதசி அன்று மாலை ரத்னக்கிரீடம் சூட்டி வகை வகையான அணிகலன்களால் அலங்காரம் செய்வார்கள் .
பொன்னும் , மணியும் ஜொலிக்கும் நிலையில் அம்பாள் அலங்கரிக்கப்படுவாள் . அன்று மாலை திரை திறந்து பூஜை செய்து திரும்பவும் திரை போட்டுவிடுவார்கள் . மறு நாள் சதுர்த்தசி . அமாவாசை, பாட்டிமை ஆகிய மூன்று நாட்களும் தங்க அன்னபூரணியை முழுமையாகத் தரிசிக்கலாம் .
தீபாவளி அன்று காசியில் சுவாமி புறப்பாடு உண்டு . தேரில் சுவாமி திருவீதிக்கு வருவார் . அன்று எல்லாருக்கும் லட்டு பிரசாதம் கொடுப்பார்கள் . சுவாமி கோயிலுக்குத் திரும்பும் போது தேரில் ஒரு லட்டும் இருக்காது . தெருவெல்லாம் இனிமை கமழும் நாள் அது .
--- தனமலர் . பக்திமலர் . 15 - 10 - 2009 .

Saturday, October 17, 2009

மகாவீரர் .

ஸ்ரீவர்த்தமான மகாவீரரால் சமணமதம் தோற்றுவிக்கப்பட்டது என்பார்கள் .
அவர் ஒருநாள் இரவு தன்னைச் சுற்றி தீபங்களை ஏற்றிவைத்து சீடர்களை இறைவனை தியானிக்குமாறு சொன்னார் . தானும் தியானத்தில் ஆழ்ந்தார் .
மறுநாள் காலை சீடர்கள் பார்க்கும்போது அவர் இயற்கை எய்தியிருந்தார் . அந்தநாளே தீபாவளி .
--- தினமலர் . பக்திமலர் . 15 - 10 - 2009 .

Friday, October 16, 2009

நெப்போலியத் தூக்கம் .

பகல் தூக்கத்தை நெப்போலியன் தூக்கமென்று சொல்வார்கள் . காரணம் , இவர் பகலில் தவறாமல் சிறிது நேரமாவது தூங்குவார் . சிறு துயில் அவருக்கு விருப்பமானது . அதனால்தான் பகலில் போடும் தூக்கத்தை " நேப் " என்கிறார்கள் . இது நெப்போலியன் பெயரின் சுருக்கும் முதல் மூன்று எழுத்துக்களே . பகலில் சிறிது நேரம் ( முப்பது நிமிடம் ) தூங்குவது அடுத்துச் செய்யப்போகும் தொழிலைத் திறம்படச் செய்ய உதவும் என்பது ஆய்வாளர்களின் முடிவு .

Thursday, October 15, 2009

சூப்பர் .

* நைஜீரியவில் அந்த நாட்டு தேசியகீததத்தைப் பாடத் தெரியாவிட்டால் பிரம்மச்சாரியாக இருந்துவிட வேண்டியதுதான் . திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ளும் முன்பு மாப்பிள்ளையும் பெண்ணும் தேசியகீதத்தை கட்டாயம் பாடியே ஆகவேண்டுமாம் .
* ' A BROWN FOX JUMPED OVER THE LAZY DOGS QUICKLY ' இந்த ஆங்கில வாக்கியத்தில் ' A ' முதல் ' z ' வரை எல்லா எழுத்துக்களும் உள்ளன .
*தூங்கா நகரம் என்னும் சிறப்பு மதுரைக்கு உள்ளது . 24 மணி நேரமும் பல உணவகங்களும் , கடைகளும் திறந்தேயிருக்கும் . ஒரு கல்யாணத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அந்த இரவு நேரத்தில் வாங்க முடியும் .
* அமெரிக்காவில் ஜனாதிபதி உட்ரோ வில்சன் படம் அச்சிடப்பட்ட ஒரு லட்சம் டாலர் கரன்சி உள்ளது . உள்நாட்டு பாதுகாப்புத் துறையும் , மற்றும் நாட்டின் கருவூலத் துறையும் மட்டுமே இந்தப் பெரிய கரன்சியை பயன்படுத்த அனுமதி உள்ளது . பொதுமக்களுக்கு அனுமதியில்லை .
* ஒருவருக்கு பயம் ஏற்படும்போது அவர் முகத்தில் தோலுக்கு அடியில் செல்லும் இரத்தக் குழாய்களில் ரத்தம் செல்வது தடை படுவதால் முகம் வெளுத்து விடுகிறது .
* முதன் முதலில் தபால்களை குதிரைகளில் எடுத்துச் சென்று பட்டுவாடா செய்தனர் . அப்படிச் செல்பவர்கள் , வழியில் ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொண்டு சென்றார்கள் . அந்த இடங்களில் கம்பங்கள் ( போஸ்ட் ) நடப்பட்டு இருக்கும் . அதனாலேயே , தபாலுக்கு ' போஸ்ட் ' என்ற ஆங்கிலப்பெயர் ஏற்பட்டதாம் .
* நம் உடலில் ஓய்வில்லாமல் வேலை செய்யும் உறுப்பு இதயம் என்று நாம் நினைக்கிறோம் . ஆனால் , இதயம் சுருங்கும் போது மட்டும்தான் வேலை செய்கிறதாம் . விரியும் போது ஓய்வெடுக்கிறதாம் . அதன்படி பார்த்தால் , ஒருநாளில் 15 மணி நேரம் ஓய்வெடுக்கிறதாம் . 9 மணி நேரம் தான் வேலை செய்கிறதாம் .
* ஜவஹர்லால் நேரு அவர்கள் ' மாடர்ன் ரிவ்யூ ' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சாணக்கியா என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதியுள்ளார் .
* 1624 - ல் பிறந்த ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்ததற்கு முன்பே , 1114 - ல் பிறந்த இந்திய விஞ்ஞானி பாஸ்கராச்சாரியார் ' சித்தாந்த சிரோமணி' நூலில் புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்து குறிப்பிட்டிருக்கிறார் .
* ஆக்டோபஸ் அதன் வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் கருத்தரிக்கும் .
* ஜலதோஷம் பிடித்தவர் தும்மினால் 80,000 வைரஸ்கள் வெளிப்படுகின்றனவாம் .
* மயில் எத்தனை குஞ்சு பொரித்தாலும் , அதன் முதல் குஞ்சுக்கு மட்டுமே தலையில் கொண்டை வளருமாம் .
* ஒரு கிராம் தங்கத்தை 2 மைல் நீளமுள்ள கம்பியாக நீட்ட முடியுமாம் .
--- பாக்யா இதழ்

மகாவீரர் .

ஸ்ரீவர்த்தமான மகாவீரரால் சமணமதம் தோற்றுவிக்கப்பட்டது என்பார்கள் .
அவர் ஒருநாள் இரவு தன்னைச் சுற்றி தீபங்களை ஏற்றிவைத்து சீடர்களை இறைவனை தியானிக்குமாறு சொன்னார் . தானும் தியானத்தில் ஆழ்ந்தார் .
மறுநாள் காலை சீடர்கள் பார்க்கும்போது அவர் இயற்கை எய்தியிருந்தார் . அந்தநாளே தீபாவளி .
--- தினமலர் . பக்திமலர் . 15 - 10 - 2009 .

Wednesday, October 14, 2009

பருவம் அடையும் முன் !

'பருவம் அடையும் முன் ஒரு பெண் கருத்தரிப்பாள் ' எப்படி ?.
பருவம் அடைந்த பின்னர்தான் பெண் கருதரிப்பாள் என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் . ஆனால் , உண்மை அதுவன்று ! பெண் பருவம் அடைவதற்கு முன்பே கருதரிக்க முடியும் ! வியப்பாக இருக்கிறதா ? என்றாலும் உண்மை அதுதான் .
பெண் பருவம் அடைகிறாள் என்றால் , அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவள் கருத்தரிக்க ( கருவுற ) தயாராகி விட்டாள் என்பதுதான் உண்மை . ஆம் . ஒரு பெண் பருவமடைந்ததாகச் சொல்கிறோமே அதற்குப் பதினைந்து நாள்களூக்கு முன் அப்பெண் ஆணோடு உடலுறவு கொண்டால் அவள் கருதரிப்பாள் .
கருவுறத் தயாராகி விட்ட பெண்ணுக்கு மாதம் ஒரு சினை அணு கருவாகி , கருவுறத் தயாராக இருக்கும் . அந்தச் சினை அணுவுடன் ஆணின் விந்தணு சேர்ந்தால் கரு உண்டாகும் . அவ்வாறு சேரவில்லையென்றால் , அந்தச் சினையணு சுமார் 15 நாள்கள் கழித்து சிதைந்து மாதவிலக்காக வெளிவரும் .
அப்படியென்றால் , ஒவ்வொரு மாதவிலக்கிற்கும் 15 நாள்களுக்கு முன் அவள் கருத்தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்று பொருள் .
அவ்வாறு நோக்கின் , ஒரு பெண் பருவமடைந்ததாக நாம் கூறும் முதல் மாத விலக்கிற்கு 15 நாள்களுக்கு முன்னமே அவள் கருத்தரிக்கத் தயாராய் உள்ளாள் என்பதே உண்மை .
மாதவிலக்கு என்பது , ஒரு பெண்ணின் சினையணுவுடன் சேர ஆண் விந்தணு கிடைக்காமையால் , அது 15 நாள் கழித்து சிதைந்து இரத்தப்பெருக்காக வெளிவருவதைக் குறிக்கும் . பருவமடைவது என்பது முதல் மாதவிலக்கு அவ்வளவே .
முதல் மாதவிலக்கு என்பது அவள் கருவுறவில்லை என்பதன் அடையாளமே தவிர , அதன்பின் தான் அவள் கருவுறுவாள் என்பதன் அடையாளம் அல்ல .
பருவமடைவதற்கு 15 நாள்களுக்கு முன்பே அவள் கருதரிக்க தாயார் . எனவே , ஒரு பெண் பருவம் அடையும் முன்பே கருதரிப்பாள் என்பதே உண்மை !
பருவமடைவதற்கு சரியாக 15 நாள்களுக்கு முன் ஒரு பெண் உடலுறவு கொண்டால் , அவள் கருதரிப்பாள் .
--- மஞ்சை வசந்தன் . பாக்யா , ஜூன் 12 - 18 ; 2009 .

Tuesday, October 13, 2009

குரங்கின் நடை .

சார்லஸ் டார்வின் முதல் நூல் " இயற்கை பிரிநிலைத் தத்துவம் " ( THEORY OF NATURAL SELECTION ) 1842 - ல் வெளிவந்தது . அறிவியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்த புத்தகம் அது . அதில் குரங்குகளின் சுபாவத்தை ஆய்வுக்குள்ளாக்கி இருந்தார் . குரங்கு நடக்கும்போது பின்னங்கால்களில் ஒன்றான வலது காலை எடுத்து வைத்தால் , அதே நேரத்தில் முன்னங்கால்களில் இடது கால் அடி எடுத்து என்றும் , முன்னங்கால்களில் வலது கால் அடியெடுக்கும் போது பின்னங்கால்களில் இடதுகால் அடியெடுத்து வைக்கிறது .என்றும் , இவ்விதமே இடது வலதாக நான்கு கால்களும் செயல்படுகின்றன . இதே போல்தான் மனிதனும் நடக்கிறான் . " மனிதன் தனது வலது காலை அடியெடுத்து வைக்கும்போது அவனது இடது கை முன்னே செல்கிறது . வலது கை முன்னே வீசிச் செல்லும்போது இடது கால் அடியெடுக்கிறது . ஏறக்குறைய நடக்கும் முறையில் குரங்கும் மனிதனுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதைக் காண்கிறோம் " என அந்த நூலில் டார்வின் அடிக்கோடு போட்டுக் காட்டியுள்ளாராம் !
--- அ. ப. சங்கர் , அம்பாபுரம் . பாக்யா , ஜூன் 19 - 25 ; 2009 .

Monday, October 12, 2009

அம்மாடியோ...

* காட் என்பது அட்லாண்டிக் சமுத்திரத்தில் காணப்படும் ஒருவகை மீன் . இது ஒரு தடவைக்கு 60 லட்சம் முட்டைகள் வரை இடக்கூடியது . ஆனால் , முட்டை பொறித்து மீன் குஞ்சாகி வெளிவருவது அதிலே நான்கு அல்லது ஐந்துதான் . அத்தனை குஞ்சுகளும் உயிர் வாழ்ந்தால் அட்லாண்டிக் மகா சமுத்திரமே மீன் மயமாகிக் கடல் நீர் நிலத்தில் புகுந்து விடுமாம் .
* ஆமைகள் ஒரு இடத்தில் முட்டையிட்டால் மீண்டும் அடுத்த ஆண்டு அதே இடத்தில் சென்று முட்டையிடுமாம் .
* உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் கட்டி முடிக்கப்பட்ட 120 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு மிகப்பெரிய விழாக்களை அங்கே கொண்டாடினார்கள் . உலகிலேயே ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவில் உல்லாசப் பயணிகள் வந்து ஈஃபிள் டவரை காண்கிறார்கள் .
* மனித உடலில் மிகவும் சுறுசுறுப்பான பகுதி இதயமோ , மூளையோ அல்ல . கண்களிலுள்ள தசைப்பகுதிகள்தான் .
* அமெரிக்காவிலுள்ள உடா பல்கலைக் கழக மருத்துவ அறிஞா ஜேம்ஸ் நார்த் , பூண்டு உணவு உண்டு வந்தால் வைரஸ் பாக்டீரியாக்கள் அழிவதுடன் , உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது என்பதை தன் ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளார் .
* ஒரு கப்பலின் மேல் மஞ்சள் வண்ணக் கொடி பறந்தால் அதில் இருக்கும் பயணிகளுக்கு தொற்று நோய் இருக்கிறது என்று பொருள் .
* நீர் யானை ஒரு ரத்தம் சிந்தும் உயிரினம் . பன்றியினத்தைச் சேர்ந்ததான இதன் உடலில் , எண்ணெய் போன்ற சிவப்பு நிற திரவம் கசியும் . அதனால் , இதன் வியர்வையை ' இரத்த வியர்வை ' என்றே கூறுவர் .
* குட்வின் என்பவர் சுவாமி விவேகானந்தரிடம் சுக்கெழுத்தாலராகப் பணியாற்றினார் . விவேகானந்தரின் சொற்பொழிவுகள் அனைததையும் சுருக்கெழுத்தில் பதிவு செய்து , நமக்கு தந்த பெருமை ஜே. கே. குவினையேச் சாரும் .
* விருந்தில் பிரியாணி கூடவே கத்தரிக்காய் கூட்டும் வைக்கிறாங்களே ஏன் தெரியுமா? சாப்பிடுகிற பிரியாணிக் கறியில் உள்ள ' கொலஸ்ட்ரால் ' சாப்பிடுறவர் உடல்ல சேர்ந்துக்காம இருக்கிறதுக்காகத்தான் கத்தரிக்காய் கூட்டாம் .
* அதிக இரைச்சலைக் கேட்பதால் காது மந்தமாகிப் படிப்படியாகச் செவிடாகும் . அதிக ஓசையை ஈர்க்கும் ஆற்றல் நெட்டி லிங்க மரத்திற்கு உண்டு . வீடுகளில் நெட்டிலிங்க மரத்தை வளர்த்தால் காதுகளைக் காக்க முடியும் .
* 21 ல்ட்சம் பேர் இந்தியாவில் லட்சாதிபதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர் .
* இறப்பு நேர்ந்த 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்யலாம் . ஒருவரின் இரு கண்கள் இருவருக்குப் பார்வை கொடுக்கும் . கண் தானம் பெற்றவரின் கண்ணைக் கூட அவர் இறப்புக்குப் பிறகு , மற்றவருக்குத் தானமாகத் தரலாம் .
* பெண்ணின் ஆடையை ஆண் உடுத்திக்கொள்வதற்கு ( அ ) ஆணின் ஆடையைப் பெண் உடுத்திக்கொள்வதற்கு Cross Dressing என்று பெயர்

Sunday, October 11, 2009

உயரத்துக்கேற்ற உடல் எடை !

இந்தியர்களின் சராசரி உயரம் 150 செ.மீ. என்பது பாரம்பரியத்தின் வழியில் அமைவது . உடல் எடையைப் பொறுத்தமட்டில் , பெரும்பாலும் அதுவும் வழித் தோன்றலாக அமைவதுதான் .
20 - 25 வயதில் , ஒரு ஆண் அல்லது பெண் எந்த்ளவு உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம்தான் . இந்த வயதில் ஒரு பெண் அல்லது ஆண் 150 செ. மீ. உயரம் இருந்தால் , சராசரியாக அவர் 50 கிலோ உடல் எடையுடன் இருக்க வேண்டும் . அத்துடன் , இந்த உடல் எடையுடன் 1 - 2 கிலோ அதிகமாகக் கூட இருக்கலாம் .
அதாவது , மொத்த உயரத்தில் 100 செ. மீ. உயரத்தைக் கழித்த பின்னர் உள்ள 50 செ. மீ. அளவைத்தான் உங்கள் உடல் எடையாக ( 50 கிலோவாக ) கணக்கிட வேண்டும் . 160 செ. மீ. உயரம் இருந்தால் 60 கிலோ எடையாக மாற்றிக் கொள்ளவும் . இந்த அளவீடு சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டதோடு , ஆரோக்கியமான மனிதரின் உடல் எடையும் இதுதான் .
--- தினமலர் , ஜூன் , 13 . 2009 .

அம்பானி !

ஒரு கட்டத்தில் , இந்தியாவின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாரிசுகளான முகேஷ் அம்பானியும் , அனில் அம்பானியும் . இந்த இருவரில் , முகேஷ் அம்பானி தம் ஊழியர்களிடையே ஒருநாள் மனம் விட்டுப் பேசும்போது , தம் வெற்றியின் இரகசியத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் .
" பகவான் கிருஷ்ணனைப் போல மாறுபட்டும் வித்தியாசமாகவும் ( Innovative ) சிந்தியுங்கள் ."
" அர்ஜுனனைப் போல் எதுஒன்றையும் , திட்டமிட்டுத் திறம்படச் செயல்படுத்துங்கள் . ( Execution )".
" யுதிஷ்டிரனைப் போல உரிமை உணர்வு கொள்ளுங்கள் . தொழிலில் வெற்றி பெற மட்டுமல்ல , தனிப்பட்ட வாழ்வில் வெற்றி பெறவும் , இதே விதிதான் ; வெற்றிக்கு வேறு எதுவும் தேவையில்லை . அதாவது நம் நிறுவனம் என்று நினைத்து செயல்படுங்கள் " என்றாராம் .
--- லேனா தமிழ்வாணன் , குமுதம் . 17 - 06 - 2009 .

Saturday, October 10, 2009

வானவில் !

வானவில்லைப் பார்த்தால் ' பரவசமாக இருக்கிறது '.என்று குறிப்பிடுவோம் .
' பர ' என்றால் ' தெய்வீகம் ' ; ' வசம் ' என்றால் ' மூழ்குதல் ' ; ' பரவசம் ' என்றால் ' தெய்வீக உணர்வில் மூழ்குதல் ' என்று அர்த்தம் .
வானவில் நம்மை பரவசப்படுத்துகிறது ; நெருக்கமானவர்களை சிந்தித்தாலோ , நேரடியாக சந்தித்தாலோ பரவசப்படுகிறோம் .
அப்படியானால் ...
வானவில் நமக்கு நெருக்கமானதா ?
ஆம் ! வானவில்லுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்க்கலாம் ...
வானவில்லில் ஊதா , அடர்நீலம் , நீலம் , பச்சை , மஞ்சள் , இளம்சிவப்பு ( ஆரஞ்ச் ) , சிவப்பு என ஏழு நிறங்கள் . நாம் ' வசிக்கும் ' உடலுக்குள்ளும் இதே ஏழு நிறங்கள் இதே வரிசைப்படி அமைந்துள்ளன .
சகஸ்ராஹாரம் , ஆக்ஞா , விசுத்தி , அநாகதம் , மணிபூரகம் , சுவாதிஸ்தானம் , மூலாதாரம் ஆகிய ஏழு சக்திமையங்கள் ( சக்கரங்கள் ) நமது உடலை இயக்குகின்றன .
உச்சந்தலையில் இருக்கும் சகஸ்ராஹார சக்கரத்தின் நிறம் ஊதா , புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞாவின் நிறம் அடர்நீலம் , தொண்டைப் பகுதியில் இருக்கும் விசுத்தியின் நிறம் நீலம் , இதயப் பகுதியில் இருக்கும் அநாகதத்தின் நிறம் பச்சை , மேல்வயிறு பகுதியில் இருக்கும் தொப்புள் பகுதியான மணிபூரகத்தின் நிறம் மஞ்சள் , தொப்புளின் கீழாக இரு விரற்கடை தூரத்தில் இருக்கும் நீர்வாய்ப் பகுதியான சுவாதிஸ்தானத்தின் நிறம் இளஞ்சிவப்பு , முதுகுத்தண்டின் கீழ்முனையில் இருக்கும் மூலாதாரத்தின் நிறம் சிவப்பு .
சூரியனின் வெண்ணிற ஒளியில் ஊதா முதல் சிவப்பு வரையிலான ஏழு நிறங்கள் உள்ளன என்பதைத்தான் ,' சூரியக்கடவுள் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார் ' என்று ஆன்மிகம் குறிப்பிடுகிறது !
முதுகுதண்டின் கீழ் 'ஓம் ' என்று நினைத்து , அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே ' ந ' என்று நினைத்து , தொப்புள்கொடி புள்ளியில் ' ம என்று நினைத்தும்,
இருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் ' சி ' என்று நினைத்தும் , தொண்டைக்குழி மத்தியில் ' வா ' என்று நினைத்தும் , இரு புருவமத்தியில் ' ய ' என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் .
அதிசய சிற்பம் !
ராமாயணத்தில் வரும் வாலி சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களைக் காண வேண்டுமா ? அப்படியெனில் நாம் செல்லவேண்டிய தலம் தாராசுரம் அ / மி ஐராவதீஸ்வரர் திருக்கோவிலாகும் .
இங்கு வாலியும் , சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது . அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும் . ராமாயணத்தில் வரும் வாலி , சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பதுப் போல் இக்காட்சி அமைந்திருக்கும் . தாராசுரம் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது என்பது தெரியும் .
--- தினமலர் , பக்திமலர் , ஜூன் 11 , 2009 .

Friday, October 9, 2009

அஷ்டபந்தன மருந்து !

கும்பாபிஷேகத்துக்கு முன்னால் சுவாமிக்கு மருந்து சாத்துவார்கள் . சிலைகள் பீடத்துடன் கெட்டியாக பற்றிக் கொள்வதற்கு மருந்து சாத்துவது வழக்கம் . புளிப்பான பொருள்களை மண்டலாபிஷேகம் முடியும் வரை அபிஷேகத்தில் பயன்படுத்த மாட்டார்கள் .
கும்பாபிஷேக மருந்தை மூன்று பொருள்களாலும் , எட்டு பொருள்களாலும் தயாரிப்பார்கள் . மூன்று பொருள்களால் தயாரிப்பது திரிபந்தனம் என்றும் , எட்டுப் பொருள்களால் தயாரிப்பது அஷ்ட பந்தனம் என்றும் சொல்லப்படும் . பொன்னையே உருக்கி வார்ப்பதும் உண்டு . அதற்கு சுவர்ணபந்தனம் என்று பெயர் .
அஷ்ட பந்தனத்தில் எட்டு வகையான பொருள்களை சேர்ப்பார்கள் . சேர்ப்பதற்கு கணக்கு உண்டு .
கொம்பரக்கு பங்கு 1 .
கருங்குங்கிலியம் பங்கு 3 .
சுக்கான் பங்கு - முக்கால் .
காவிக்கல் - பங்கு 3 .
வெண்மெழுகு பங்கு 3 .
வெண்ணெய் பங்கு 3 .
செம்பஞ்சு பங்கு 3 .
சாதிலிங்கம் பங்கு - கால் .
ஆகியவற்றை ஒன்று சேர்த்து உலக்கையால் தொடர்ந்து இடிப்பார்கள் . இடி படப்பட வெண்ணை உருகும் . நல்ல மெழுகு பதத்தை அடையும் . மெழுகு பதத்தில் சூட்டுடன் இருக்கும் மருந்தினை எடுத்து சாத்துவார்கள் .
இந்த நாட்களில் முன்பு போல தொடர்ந்து பலரும் கூடிநின்று மாறி மாறி உலக்கையால் இடித்து மருந்தை தயாரித்து சாத்துவது குறைந்துபோய் விட்டது . சட்டியிலிட்டு சூடாக்கி மெழுகு பதத்தில் சாத்துகிறார்கள் .
--- தினமலர் , பக்திமலர் . ஜூன் 11 . 2009 .

Thursday, October 8, 2009

ஆட்டிஸம் .5 மரங்கள் !

ஆட்டிஸன் நோயைப் பற்றி முதன்முதலாக ஆராய்ந்த ' ஹான்ஸ் ஆஸ்டர்கர் ' என்ற மருத்துவ விஞ்ஞானியின் நினைவாக ஆட்டிஸம் நோய் ' ஆஸ்டர்கர் சிண்ட்ரோம் ' என்று அழைக்கப்படுகிறது . .
5 மரங்கள் !
பாற்கடலில் ஐந்து கற்பக மரங்கள் தோன்றின . அவை பஞ்ச தருக்கள் . கற்பக மரம் , பாரிஜாதம் , ஹரிசந்தனம் , சந்தனம் , மந்தாரம் என்பவை அவை .
பூலோகத்து கற்பக மரம் பனை மரம் . சிவபெருமான் திருப்பனந்தாளில் பனை மரத்தின் கீழ் இருக்கிறார் .
பூலோக பாரிஜாதம் , பவள மல்லிகை . இதன் கீழ் இருப்பவர் பாரிஜாதவனேஸ்வரர் . பூவுலகில் சந்தனமரம் உண்டு . ஹரிசந்தனம் பெருஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது . மந்தார மரம் சிதலைப்பதியில் உள்ளது .

Wednesday, October 7, 2009

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் !

லண்டன் மாநகர காவல்துறையின் தலமையகம் தான் ஸ்காட்லாந்து யார்டு என்று அழைக்கப்படுகிறது . 20 மாடி கட்டடமான அதன் வாசலில் உள்ள பிரபலமான சுழல் பெயர்ப் பலகையை , அடிக்கடி திரைப்படங்களிலும் , செய்திகளிலும் நாம் பார்க்கலாம் .
1829 -ம் ஆண்டிலிருந்து ஸ்காட்லாந்து யார்டு செயல்பட்டு வருகிறது . அதனுடைய புகழ்பெற்ற டெலிபோன் எண்ணான 1212 இன்று வரை மக்களிடையே பிரபலம்
பல லண்டன் மாநகர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தலில் ஸ்காட்லாந்து யார்டு புகழ் வேகமாகப் பரவ ஆரம்பித்தது .
ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் அங்கே பணி புரிகின்றனர் . துப்பறியும் கலையில் பல நவீன முறைகளை அறிமுகப்படுத்தி , தீர்க்க முடியாத பல கேஸ்களைத் தீர்த்து வைத்தது ஸ்காட்லாந்து யார்டு .
உலகெங்கிலும் , பல நாடுகளிலிருந்தும் புலனாய்வுக்காக வரும்படி ஸ்காட்லாந்து யார்டுக்கு ஏராளமான அழைப்புக்கள் வந்திருக்கின்றன . சமீபத்தில் கூட பெனசிர் புட்டோவின் கொலையில் இருந்த மர்மங்களை விடுவிப்பதற்காக யார்டை வரவழைத்தது பாகிஸ்தான் அரசு . இதெல்லாம் ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் சிறப்பு அம்சங்கள் . இப்போது பழைய பெருங்காய டப்பாவாக ஆகிவிட்டது . அமெரிக்க போலீஸ் தான் இப்போது நம்பர் ஒன் .
--- தினமலர் , ஜூன் 12 . 2009 .

Tuesday, October 6, 2009

தமிழ் அறிஞர் !

பெரியார் ஈ. வெ.ரா. வின் விடுதலை பத்திரிகையில் ' விடுதலை ' என்றும் , தலைவர் என்றும் வெளிவந்ததைப் பார்த்திருக்கிறோம் . இப்படி எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் , பாகல்பட்டு வே . மாணிக்க நாயகர் என்ற ஒரு தமிழ் அறிஞர் . நான்காவது தமிழ்ச் சங்க உறுப்பினராக இருந்த இவர்தான் , ஆங்கில F உச்சரிப்பைத் தமிழில் எழுதும்போது 'ஃ ' ( காஃபி ) எழுத்தைப் பயன்படுத்தவும் காரணமாக இருந்தவர் .
இவர் பொறியியல் நிபுணராக இருந்தவர் . சிறந்த நூலறிவும் படைத்தவர் . ஜோதிடத்தில் பிறர் வியக்கும் வல்லமை பெற்றிருந்தார் .

Monday, October 5, 2009

குடிக்காதீங்க...

தண்ணீர் குடிக்கலாம் . ஆனால் , பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தாதீர்கள் என்று அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக உடல்நல
ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள் . ஏனெனில் பாட்டிலில் உள்ள பைபீனால் ஏ என்ற வேதிப்பொருளானது , அதில் அடைக்கப்பட்ட தண்ணீரில் கலக்கிறதாம் . இதனால், மனிதர்களிடத்தில் மரபு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துகிறதாம் . இந்த அறிவிப்பை சில சோதனைகளுக்குப் பிற்கே ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட்டுத்தியுள்ளார்கள் .
ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் ஆன பாட்டிலில் , குளிர்ந்த நீரையும் , சூடான நீரையும் வைத்திருந்து 77 பேரை பருகச் செய்து பரிசோதித்துப் பார்த்ததில் பைபீனால் ஏவின் அளவில் எந்த மாற்றமும் இல்லை . ஆனால் , இதேபோல் நீரை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து , அதே 77 பேரிடம் சோதித்தபோது , அவர்களின் ரத்தத்தில் ' பபீனால் ஏ 'வின் அளவு அதிகரிச்சிருக்காம் .
இந்த பபீனால் ஏ , மனிதர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்துமாம் . நம்ம ஊர்ல தாய்மார்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பாலை கொஞ்சம் சூடாக பாட்டிலில் அடைத்து கொடுப்பது வழக்கம் . இப்படி சூடாக கொடுத்தால் , பபீனால் ஏவின் அளவு அபாயகரமான அளவிற்கு குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து விடுகிறதாம் . இப்படிப்பட்ட அபாயகரமான பாட்டில்களை கடந்த ஆண்டே கனடா தடைசெய்துவிட்டதாம் . தற்போது சிகாகோவும் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதித்துள்ளது . நம்ம நாடு எப்போங்க ?
இலையில் மாசு !
லண்டனில் உள்ள லாங்கஸ்டர் பல்கலைக்கழகம் புதுசா ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிச்சிருக்காங்க . அதாவது காற்றினால் ஏற்படும் சுகாதாரக்கேடு . அதோட , காற்றில் கலந்துள்ள மிக மிக நுண்ணிய வேதிப்பொருள்களையெல்லாம் மிகத் தெளிவாக கண்டுபிடிச்சுச் சொல்லுதாம் மர இலைகள் , கார் புகையில் ஹைட்ரோ
கார்பன் , விஷவாயுக்கள் எந்த அளவு கலந்திருக்கிறது என்று மர இலையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்று அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பார்பரா மாஹர் கூறியுள்ளார் . இந்த மிதமிஞ்சிய தூசிக் காற்றினால் ஏற்படும் சுகாதாரக்கேடால் , மனிதர்களுக்கு மூளையிலிருந்து ஈரல் வரை அனைத்தும் கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள் . முதலில் சாலையோரத்தில் இருந்த 30 மரங்களில் உள்ள சில இலைகளை ஆய்வுசெய்தபோது , அந்த இலையில்படிந்திருந்த மாசுக்கள் அனைத்துமே மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் .
--- தினமலர் வாரமலர் . ஜூன் 7 . 2009 .

Sunday, October 4, 2009

தி ' மம்மீ ' ஸ்.

எகிப்து தலைநகர் கெய்ரோவின் தென்பகுதியில் சக்கோரா என்னும் இடத்தில் 2, 600 ஆண்டுகளுகள் பழமையான பிரமீட்டை கண்டுபிடித்துள்ளார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள் .
இந்த சமாதியில் 30 மம்மிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்லார்கள் . இந்த மம்மிகள் தரையிலிருந்து 36 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்று எகிப்தின் தலைசிறந்த அகழ்வாராச்சியாளர் சாஹி ஹவாஸ் கூறியுள்ளார் . இந்த மம்மிகளைப் பார்க்கும்போது , இவை எகிப்தின் 26 வது வம்சம் ஆண்ட காலம் தொடர்பாக இருக்கலாம் . அதுமட்டுமல்லாது ஒரு கல்லினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட மம்மிகள் இருக்கின்றன . இந்த மம்மிகள் அனைத்தும் முழுவதுமாக உருக்குலைந்துள்ளன என்றும் , ஒரே சவப்பெட்டியில் ஒன்றுக்கும்மேற்பட்ட உடல் கூறுகள் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Saturday, October 3, 2009

சமாதி ! லவ்வுக்கும் டிஎன் ஏ .

சமாதி !
சமாதியில் 2 வகைகள் உண்டு . இறந்து போன அந்த உடலை சமாதியில் வைப்பது ஒருவகை . இதுதான் பெரும்பாலும் நடக்கும் . இன்னொரு வகை அபூர்வமானது .ஞானிகள் உயிரோடிருக்கும்போதே தாமே சென்று ஜீவ சமாதியில் அமர்வதாகும் . 8 வகையான யோகங்களில் , இது இறுதி நிலை . சமாதி நிலை என்பார்கள் .
லவ்வுக்கும் டிஎன் ஏ .
அவளை முதல் முறையாக பார்த்ததுமே எனக்கு காதல் வந்திருச்சுன்னு நிறைய பேர் சொல்றதை நாம் கேட்டிருப்போம் . அது எப்படி பார்த்த உடனேயே லவ்ஸ் வந்துச்சு.... அப்படீன்னு நாமளும் யோசிச்சிட்டு இருப்போம் . அதையும் ஆராய்ச்சியாளங்க... நைட்டு பூரா யோசிச்சு கண்டுபிடிச்சுட்டாங்க .
அதாவது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியைச்சேர்ந்த டிஎன் ஏ ஆராய்ச்சியாளர் தாமரா பிரவுன் சொல்றது இதுதாங்க... நாம ஒரு பொண்ணை கண்கொண்டு பார்த்ததும் அவ மேல நமக்கு ஒரு இது வந்துச்சுன்னா நம்ம உடம்புல உள்ள ஒருவகையான அமிலம் சுரக்குமாம் . இதுதான் காதல் பாக்டீரியாவாம் . இது வந்தவங்க கண்டிப்பா காதல் பண்றாங்கன்னு அர்த்தம் . அதுமட்டுமல்லாம இந்த அமிலம் டிஎன் ஏ பரிசோதனையில் பளிச்சுன்னு தெரிஞ்சுடும் என்கிறார் ஆராய்ச்சியாளர்

Friday, October 2, 2009

கிளியோபாட்ரா !

கிளியோபாட்ராவின் காலக்கட்டம் கி.மு. 69 முதல் கி.மு. 30 வரை . தந்தை 12 -ம் தாலமியுடன் இணைந்து எகிப்தை ஆட்சி செய்தவர் . உடன் பிறந்த சகோதரர்களை மணந்துகொள்ளும் வழக்கம் அப்போது நடைமுறையில் இருந்தது . கிளியோபாட்ரா தன் சகோதரர்களான 13 -ம் தாலமி , 14 -ம் தாலமி இருவரையும் மணந்துகொண்டார் . தந்தைக்குப் பிறகு இவர்கள் இருவருடனும் கிளியோபாட்ரா அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டார் . நாளடைவில் , அதிகாரம் முழுமையாக கிளியோபாட்ராவிடம் சென்று குவிந்தது . எகிப்தின் தனி அரசியாக மாறினார் .
கிளியோபாட்ராவுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் . ஒரு பிள்ளை ஜூலியஸ் சீஸருடையது . தாலமி சீஸர் என்பது இவன் பெயர் . மார்க் ஆன்டனி மூலம் கிளியோபாட்ராவுக்கு இரட்டையர்கள் பிறந்தனர் . இரண்டாம் கிளியோபாட்ரா செலீன் , அலெக்ஸாண்டர் ஹெலியோஸ் , பிறகு , மேலும் ஒரு மகன் . தாலமி பிலடெல்பஸ் . தன் சகோதரர்கள் மூலமாகக் கிளியோபாட் ராவுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை .
கூர்மையான அறிவும் , செயல் திறனும் , ராணுவ பலமும்கொண்டு இருந்தவர் என்று சரித்திரம் கிளியோபாட்ராவை நினைவுகூர்கிறது . கிளியோபாட்ரா உலக அழகியா ? அப்படி ஒன்றும் இல்லை என்கிறார் பண்டைய சரித்திர ஆசிரியரான ப்ளூடார்க் . கண்டெடுத்திருக்கும் நாண்யங்களைக்கொண்டும் இது நிரூபணமாகிறது .
கிளியோபாட்ரா குறித்த பல வதந்திகள் சீஸரின் மகன் அகஸ்டஸால் கிளப்பிவிடப்பட்டவை என்று ஐலர் கருதுகிறார்கள் .
நவீன முறையில் செய்யப்படும் டி.என். ஏ. பரிசோதனை கிளியோபாட்ராவை மீண்டும் உலகத்துக்கு அறிமுகம் செய்துவைக்கும் .
--- மருதன் , ஆனந்தவிகடன் .03 - 06 - 2009 .

Wednesday, September 30, 2009

vஒரு மனிதர் !

மதிக்கும் ஒரு மனிதர் !
அணுசக்தி விஞ்ஞான மேதை டாக்டர் பாபா அமரத்துவம் அடைந்த அன்று கூட ' ட்ராம்பே அணுசக்தி நிலையம் ' விடுமுறை விடப்படாம செயல்பட்டுக் கொண்டிருந்தது .
அதுக்கு காரணம் அவரேதான் . யாருடைய மரணமும் ட்ராம்பே அணுசக்தி நிலையதின் பணிகளைத் தடைசெய்து விடக்கூடாதுன்னு டாக்டர் பாபா தன் மரணத்துக்குச் சில நாள் முன்பே தெரிவிச்சிருந்தாராம் . அவரோட கோரிக்கையை ஏற்றே இன்றளவும் அவரது நினைவு நாள்ல கூட அணுசக்தி நிலையத்துக்கு விடுமுறை கிடையாதாம் .
இதை அறிவிப்பாகவே அணுசக்தி நிலையத்தில் எழுதி வச்சிருக்காங்க . உழைப்போட உன்னதத்தை மதிக்க அந்த மாமனிதரை எப்பவும் எல்லொரும் மதிக்கணும் .
--- ஒருத்தர் டாக்டர்கிட்ட வந்து , " டாக்டர்.... தினம் வேலைக்காக பஸ்ல போகும்போதெல்லாம் ஒரே தூக்கமா வருது டாக்டர் . என்னால கண்ட்ரோலே பண்ண முடியல"ன்னாரு .
உடனே டாக்டர் , " தூக்கம் வந்தா கொஞ்ச நேரம் அப்படியே சாஞ்சி படுத்து தூங்குங்க . உடம்புக்கு ரெஸ்ட்தானே " ன்னு சொல்ல,
அதுக்கு வந்தவர் , " நான் தூங்க ஆரம்பிச்சா , அப்ப பஸ்ஸை யாரு டாக்டர் ஓட்டறது ?" ன்னாராம் .
---பாக்யராஜ் , பாக்யா . மே 29 -- ஜூன் 4 ; 2009 .