Friday, December 31, 2010

மேஜிக் !

* பார்வையால் அல்லது ஆழ் மனத்தின் சக்தியால் ஒரு பொருளைத் தொடாமலேயே நகர்த்தும் சக்திக்கு சைக்கோகைனசிஸ் என்று பெயர் .அதைப் பயன்படுத்தி 19 -ம் நூற்றாண்டைக் கலக்கியவர் டேனியல் டங்க்ளஸ் ஹ்யூம் .
* நமக்குச் சுத்தமா இதுவரைக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு மொழியை மந்திரம் போட்டுவிட்டது மாதிரி திடீரென்று பேசினால் , அதுதான் ஜெனோக்லாஸி ( Xenoglossy ) . இதை அறிவியலுடனும் இன்னும் சிலர் கடவுளுடனும் சம்பந்தப்படுத்துவது உண்டு .
* ஜெனோக்லாஸி என்ற ஒன்றை இதுவரை உண்மை என்றோ , பொய் என்றோ உலகம் ஒப்புக்கொள்ளவில்லை . ஆனால் , வாழ்வில் முன் எப்போதும் , எந்த வடிவத்திலும் அறிந்திடாத ஒரு மொழியைத் திடீரென்று கடகடவெனப் பேசுவது துளியும் சாத்தியம் இல்லை என்பதே ஆய்வாளர்களின் இறுதி முடிவு !
* கண்ணுக்கு முன்னே நடக்காத அல்லது இன்னமும் நடக்க ஆரம்பிக்காத ஒரு நிகழ்வை மனக் கண்ணில் பார்ப்பது என்பது ஈ. எஸ். பி - கான ( ' எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸ்ப்ஷன் ' ) சிம்பிள் விளக்கம் . சம்பந்தப்பட்ட நபர் அந்த இடத்தில் இல்லாமலேயே இதைப் பார்ப்பதுதான் இன்னும் அதிசயம் . ' ஆறாவது அறிவை ' முழுமையாகப் பயன்படுத்தினால் ஈ.எஸ்.பி.
திறன் வெளிப்படும் ' என்பது நிறைய ஆராய்ச்சியாளர்களின் வாதம் . பொதுவாக , விலங்குகளுக்கு ' இன்ஸ்டிங்க்ட் ' எனப்படும் உள்ளுணர்வு அதிகமாக இருக்கும் . ஆபத்து வரப்போவதை அறிவது இதை வைத்துதான் . நவீன மருத்துவத்தில் நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து , காக்கா வலிப்பு வந்தவர்களுக்கு உதவியாக அனுப்புகிறார்கள் . அவை , அவர்களுக்கு வலிப்பு வரும் முன்பே அறிகுறிகளை உணர்ந்து நோயாளிகளுக்கு உணர்த்தும் . தேவையான மருந்துகள் மூலம் முங்கூட்டியே உஷார் ஆகலாம் .
--- மேஜிக் விகடன் , இணைப்பு . 2. 6 .10 .

Thursday, December 30, 2010

விளம்பரம் !

* ' நீங்கள் தொட விரும்பும் சருமம் ' ( The skin you love to touch ) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன் .
* உலகப் புகழ்பெற்ற நோவா கார் நிறுவனம் தயாரித்த புதிய மாடல் கார் ஸ்பானிஷ் நாட்டில் மட்டும் சரியாக விற்கவில்லை . என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது கிடைத்த
விடை.... அந்த மாடலின் பெயர் . நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் ' இது ஓடாது ' என்று அர்த்தமாம் !
* இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை... புவி வெப்பமயமாதல் . ' மரங்களை வெட்டாதீர்கள் . இயற்கையைப் பாதுகாப்போம் ' என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன . 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த
ஆரம்பித்திருக்கிறார்கள் !
* ' மைக்ரோசாஃப்ட் ' நிறுவனம் வின்டோஸ் Xp யை அறிமுகப்படுத்தியபோது , ஓர் ஆண் ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழற்ற முயற்சி செய்து , அதில் தோற்பதுபோல் விளம்பரம் செய்தது . " எங்களின் பாஸ்வேர்டு அவ்வளவு பாதுகாப்பானது ' என்பது கான்செப்ட் . மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தன் விளம்பரத்தை வாபஸ் வாங்கிக் கொண்டது .
* ஒரு பொருளின் அசைவு அல்லது விளைவின் மூலம் மற்றொரு பொருள் இயக்கப்படுவதற்கு டொமினோஸ் எஃபெக்ட் என்று பெயர் . சுருக்கமாகச் சொன்னால் ' அபூர்வ சகோதரர்கள் ' படத்தில் டெல்லி கணேஷை கமல் கோலிக் குண்டைப் பயன்படுத்திக் கொல்வாரே... அதுதான் டொமினோஸ் எஃபெக்ட் .
* ' 57 ஆயிரம் புகைப்படங்கள்.. இரண்டு மைல் நீளத்திற்கு இருக்கும் . பார்க்கக் கட்டணம் 3 அணா ' 1913 -ம் ஆண்டில் வெளியான இந்தியாவின் முதல் படமான ' ராஜா ஹரிச்சந்திரா '- வுக்கு தாதா சாகேப் பால்கே வெளியிட்ட விளம்பரம்தான் இது !
* கிரேக்க காலத்தில் விலை மாதுக்கள் தங்களை விளம்பரப்படுத்த அனுமதி இருந்தது . அம்புக் குறி பொறிக்கப்பட்ட காலணிகளில் சிவப்பு மை பதித்த விலை மாதர்கள் கிரேக்க வீதிகளில் வாடிக்கையாளர்களுக்குக்காகக் காத்திருப்பார்களாம் . அவர்கள் நகரும்போது செருப்புத் தடத்தின் சிவப்பு மையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் பின் தொடர்ந்ததாக வரலாறு !
* ' கோகோ கோலா , பெப்சி ' விளம்பர உலகின் தவிர்க்க இயலாத பாடங்கள் . 30 பைசா செலவில் ஒரு பானத்தைத் தயாரித்து ஏழு ரூபாய்க்கு விளம்பரம் செய்து 10 ரூபாய்க்கு விற்கும் விற்பனைத் தந்திரத்தை உலகுக்குக் கற்று தந்தது இந்த கோலாக்கள்தான் .
* தேர்தல் சமயத்தில் தலைமுடியை இரட்டை இலைபோல வெட்டிக்கொள்ளும் தொண்டர்கள் நம் ஊரில் உண்டு . உலகம் முழுக்க உடம்பில் விளம்பரம் செய்து கொள்வது ஒரு வியாபாரம் . இவர்களுக்கு Human Billboards enRu peyar .
* ஆல் அவுட் கொசு மருந்தை வாங்கி வைத்துவிட்டு அது எம்பி நாக்கை நீட்டிக் கொசுவைப் பிடிக்கும் என்று காத்திருந்தவர்கள் பலர் . 1990 வரையிலும் ஆணுறை உபயோகம்பற்றி மக்களுக்கு விளக்க இந்தியாவில் சமூக சேவகர்களே கிடைக்கவில்லை . பீஹார் பகுதிகளில் ' விளக்கியே ஆக வேண்டும் ' என்று அரசால் அனுப்பப்பட்டவர்கள் கட்டை விரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டு ' இப்படி அணிந்துகொண்டால் எய்ட்ஸ் வராது ' என்றார்கள் . விளைவு , மக்களும் ஆளுக்கு ஒன்றை வாங்கி கட்டை விரலில் மாட்டிக்கொண்டார்கள் !
--- விளம்பரம் விகடன் , இணைப்பு - 19 . 06. 2010.

Wednesday, December 29, 2010

பெண்பால் மிக ஆபத்து !

உலகெங்கும் இருக்கும் சகல ஜீவராசிகளின் பெண் பாலினத்தைக் கூர்ந்து கவனித்தால், வெட்டவெளிச்சமாகத் தெரிந்துபோகும் உண்மை.... the female of the species is deadlier than the male . அதாகப்பட்டது, எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது . காரணம், பெண்பாலுக்குத்தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவக் குணமும் பிழைக்கும் திறனும் இருக்கிறது . அவர்கள் இப்படி இருந்தாகவும் வேண்டும் . காரணம் , குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையைக் கற்றுத்தருவதும் பெண்ணின் வேலைதானே . இவள் சிறந்த வேட்டுவச்சியாக இருந்தால்தானே, அவள் குட்டிகளும் பிழைக்க முடியும் ? அதனாலேயே, இயற்கை பெண்களைப் பிறவி வேட்டைக்காரிகளாகப் படைக்கிறது . மனிதர்களிலும் அப்படித்தான் . ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் , பிற பெண்பாலினம் நேரடியாகத் தன் வல்லமையை வெளிப்படுத்தும் . தனக்கு வேண்டிய பவரைத் தானே போராடிப் பெற்றுக்கொள்ளும் .
ஆனால், மனிதப் பெண்கள் தங்கள் பவர் தேவைகளை இப்படி நேரடியாகவோ, பகிரங்கமாகவோ தீர்த்துக்கொள்வது இல்லை . எல்லாமே மறைமுகமாகத் தாய் வழி ஆதிக்கம்தான் . காரணம், பிற ஜீவராசித் தாய்கள் யாரையும் அண்டிப் பிழைக்காமல் சுயமாக வாழ்கின்றன . ஆனால், மனிதத் தாய்க்கு மட்டும் சமீபத்தில் சில காலம் வரை யாரையாவது அண்டிப் பிழைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது . காரணம், நம் சமூக அமைப்பில் எல்லா அதிகாரங்களும் ஆண்களிடமே இருந்தன . அதனால், யாராவது ஓர் ஆணைப் பிடித்து, அவன் மேல் ஓர் ஒட்டுண்ணியாக வாழ்ந்தால் ஒழிய, இவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லை என்கிற நிலைதான் பெண்களுக்கு .
ஆக இயற்கையின் விதிப்படி பெண் வேட்கையில் சிறந்தவளாக இருந்தாக வேண்டும் . ஆனால், மனித சமூக அமைப்பில் அவளுடைய வேட்டுவ குணம் வெளியே தெரிந்தால், ஆண்கள் ஆட்சேபிப்பார்கள் . இந்த முரண்பாட்டைச் சரிசெய்யவும் பெண்கள் பல வழிகளை வைத்திருந்தார்கள் .
--- டாக்டர் ஷாலினி . உயிர் மொழி ! தொடர் . ஆனந்தவிகடன் , 28. 07. 2010.

Tuesday, December 28, 2010

' சும்மா ' சாப்பிடு !

சைக்கிளை மிதி .... ' சும்மா ' சாப்பிடு !
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள கிரவுனி ஓட்டலுக்குள் நுழைகிறீர்கள் . ஓட்டல் ஊழியர் உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான் : " அந்த பவர் சைக்கிளில் கொஞ்ச நேரம் பெடல் பண்ணினீங்கன்னா ப்ரியா சாப்பிடலாம்... ஓகேயா ?"
சம்மதித்து பெடல் செய்தால், ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் உங்களுக்கு 33 டாலர் ( ஆயிரத்து ஐநூறு ரூபாய் சொச்சம் ) மதிப்பிலான கூப்பன் தரப்படும் . எத்தனை கூப்பன் ' சம்பாதிக்கிறீர்களோ ' அதன் மதிப்புக்கு சமமான இயற்கை விவசாய உணவு ஐட்டங்களை ' சும்மா ' சாப்பிடலாம் !
சொந்தமாக மின்உற்பத்தி செய்து செலவைக் குறைத்தல் , இயற்கை விவசாய உணவு பயன்பாட்டை அதிகரித்தல் , புவி வெப்பமடைதலைத் தடுத்தல் என மூன்று நல்ல அம்சங்கள் நிறைந்த ' த்ரீ இன் ஒன் ' திட்டம் இது .
இதற்காக, பெடல் செய்தால் மின்சாரம் உற்பத்தி செய்யும் ' பவர் சைக்கிள் ' களை வாங்கி அடுக்கியிருக்கிறார்கள் . உள்நாட்டினர், சுற்றுலா பயணிகள் என அனைவரிடமும் இதற்கு நல்ல வரவேற்பு . பெடல் செய்து ப்ரீ சாப்பாடு ருசிக்க கியூ நீள்கிறது .
இந்த ஓட்டலில் மீதமாகும் உணவையும் பயோபவர் யூனிட்டிற்கு அனுப்பி மின்சாரமாக்கிவிடுகிறார்கள் !
ம்... இந்த அசத்தல் ஐடியா நம்மூரு ஓட்டல்களில் எப்ப வருமோ ?
--- தினமலர் , ஜூலை 25 . 2010.

Monday, December 27, 2010

பறவை ஜோக் !

ஒருவர் இரண்டு பெண் கிளிகளை வளர்த்து வந்தார் . அவை இரண்டும் எப்போதும் குளுகிளுப்பான சினிமா பாடல்களையே பாடிக்கொண்டிருக்கும் அதனால் நொந்துபோன அவர் , ஒரு துறவியைப் போய்ப் பார்த்தார் . அவரிடம் இரண்டு ஆண் கிளிகள் இருந்தன . அவை எப்போதும் தியானத்தில் இருந்தபடியே கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் .
விஷயத்தைக் கேட்ட முனிவர் , ' கவலைப்படாதே என்னுடைய இரண்டு ஆண் கிளிகளையும் நீ சில நாட்களுக்கு அழைத்துச் செல் . அவற்றுடன் பழகினால் உன் கிளிகளும் சமர்த்தாக மாறிவிடும் ' என்று கொடுத்து அனுப்பினார் .
வழக்கம் போல் ஆண் கிளிகள் கண்களை மூடி தவத்தில் இருந்தபோது , " அழகிய அசுரா , அழகிய அசுரா அத்துமீற ஆசை இல்லையா ? " என்று அந்த இரண்டு பெண் கிளிகளும் செக்ஸியான குரலில் பாடி உசுப்பேற்றின .
அந்த சப்த்த்தில் திடுக்கென கண் விழித்த ஆண் கிளிகள் , " ங்கொய்யால , இத்தனை நாளாக கடவுள்கிட்ட எதுக்குப் பிராத்தனை பண்ணினோமோ அது பலிச்சிடுச்சுடா " என்று கத்தியபடியே பெண் கிளிகள் மீது பாய்ந்தன .
--- அரசு பதில்கள் . குமுதம் . 07. 07. 2010.

Sunday, December 26, 2010

இதயம் !

இதயம் ஓய்வெடுப்பதே இல்லையா ?
நமது இதயத்தின் மேல் பகுதியில் 2 ஏட்ரியா ( ஆரிக்கிள் ) , கீழ் பகுதியில் 2 வென்ட்ரிக்கிள் என 4 அறைகள் உள்ளன . சராசரியாக நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 75 முறை துடிக்கும் . ஒரு துடிப்புக்கு சராசரியாக 0.8 நொடிகள் ஆகும் .
இதயத் துடிப்பின்போது முதலில் இதயம் சுருங்கும் . அப்போது ஆரிக்கிளில் இருந்து வென்ட்ரிக்கிளுக்கும் , அவற்றில் இருந்து நுரையீரல் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ரத்தம் பாயும் . இது , ' ஸிஸ்டலி ' இயக்கம் .
பிறகு இதயம் விரியும் . அப்போது , பிறபகுதிகளில் இருந்து இதயத்திற்கு ரத்தம் பாயும் . இது , ' டயஸ்டலி ' இயக்கம் .
ஒரு ஸிஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் ; ஒரு டயஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் . டயஸ்டலி இயக்கத்தின்போது இதயம் விரிந்து சும்மா இருக்கும் அல்லவா , அதுதான் அதன் ஓய்வு நேரம் !.
--- தினமலர் , ஜூலை 9 , 2010.
இதயம் ஓய்வெடுப்பதே இல்லையா ?
நமது இதயத்தின் மேல் பகுதியில் 2 ஏட்ரியா ( ஆரிக்கிள் ) , கீழ் பகுதியில் 2 வென்ட்ரிக்கிள் என 4 அறைகள் உள்ளன . சராசரியாக நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 75 முறை துடிக்கும் . ஒரு துடிப்புக்கு சராசரியாக 0.8 நொடிகள் ஆகும் .
இதயத் துடிப்பின்போது முதலில் இதயம் சுருங்கும் . அப்போது ஆரிக்கிளில் இருந்து வென்ட்ரிக்கிளுக்கும் , அவற்றில் இருந்து நுரையீரல் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ரத்தம் பாயும் . இது , ' ஸிஸ்டலி ' இயக்கம் .
பிறகு இதயம் விரியும் . அப்போது , பிறபகுதிகளில் இருந்து இதயத்திற்கு ரத்தம் பாயும் . இது , ' டயஸ்டலி ' இயக்கம் .
ஒரு ஸிஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் ; ஒரு டயஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் . டயஸ்டலி இயக்கத்தின்போது இதயம் விரிந்து சும்மா இருக்கும் அல்லவா , அதுதான் அதன் ஓய்வு நேரம் !.
--- தினமலர் , ஜூலை 9 , 2010.

Saturday, December 25, 2010

இது தெரியுமா ?

* மரங்கள் பற்றிய படிப்பு : டெண்ட்ராலாஜி
* பாம்புகள் பற்றிய படிப்பு : ஓஃபியாலஜி .
* பறவைகள் பற்றிய படிப்பு : ஆர்னிதாலஜி .
* செல் , திசுக்கள் பற்றிய படிப்பு : ஹிஸ்டாலஜி .
* சின்னங்கள் பற்றிய படிப்பு : ஐகனாலஜி .
* சங்குகள் பற்றிய படிப்பு : காங்காலஜி .
* மலைகள் பற்றிய படிப்பு : ஓரோலஜி .
* பாசிகள் பற்றிய படிப்பு : ஃபைகாலஜி .
* தோல் பற்றிய படிப்பு : டெர்மடாலஜி .
* குகைகள் பற்றிய படிப்பு : ஸ்பெலியாலஜி .
* பூச்சிகள் பற்றீய படிப்பு : என்டோமாலஜி .
* பாறைகள் பற்றிய படிப்பு : லிதாலஜி .
* தசைகள் பற்றிய படிப்பு : மையாலஜி .
* திமிங்கிலங்கள் பற்றீய படிப்பு : செடாலஜி .
* பழங்கள் , விதைகள் பற்றிய படிப்பு : கார்பாலஜி .
* நோய்கள் பற்றிய படிப்பு : பேதாலஜி .
* எறும்புகள் பற்றிய படிப்பு : மைர்மெகாலஜி .

Friday, December 24, 2010

ஹோட்டல் நாகரிகம் .

ஹோட்டலில் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது .
இன்று ஹோட்டலில் சாப்பிடுவது பலருக்கும் தவிர்க்க முடியாததாகி விட்டது . ஆனால் , ஹோட்டலில் முறைப்படி எப்படி சாப்பிடுவது , ஸ்பூன் , ஃபோர்க்கை எப்படிப் பிடிப்பது , நாப்கினை எப்படி உபயோகிப்பது என்று கூட பலருக்குத் தெரிவதில்லை . இதோ அவர்களுக்கு உதவும் வகையில் இந்த டிப்ஸ்...
முதலில் அங்குள்ள நாப்கின் மடிப்புகளை நீக்கி , இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள் . சாப்பிடும் முன் நாப்கினை மடியில் விரிக்க வேண்டும் .
கத்தியை வலது கையிலும் , ஃபோர்க்கை இடது கையிலும் பிடிக்க வேண்டும் .
சூப் குடிக்கும்போது , ஸ்பூனின் கைப்பிடியைக் கடிகாரத்தின் 4 மணி திசையிலும் , ஸ்பூனின் தலைப்பகுதியை 11 மணி திசையிலும் இருக்கும்படி வைத்து எதிர்ப்புறமாக சூப்பை அள்ள வேண்டும் . அப்போதுதான் , சூப் நம்மேல் சிந்தாது .
கத்தியையும் ஃபோர்க்கையும் பிடித்து பிரெட்டையோ , மற்ற உணவுப் பொருட்களையோ ' கட் ' செய்ய வேண்டும் . ஃபோர்கால் உணவைக் குத்தி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் .
சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்றால் ஃபோர்க்கையும் கத்தியையும் இணையாக அடுத்தடுத்து சேர்த்து வையுங்கள் . இன்னும் சாப்பிட வேண்டும் என்று ஆர்டர் செய்வதாக இருந்தால் , ஃபோர்க்கையும் கத்தியையும் ஒன்றின் மேல் ஒன்றாக ( பெருக்கல் குறி போல ) வையுங்கள் .
பெரும்பாலான ஸ்டார் ஹோட்டல்களில் டிக்காஷன் , பால் , சர்க்கரை இவைகளைத் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கும் . முதலில் டிக்காஷனை கப்பில் ஊற்றி , பிறகு அதில் தேவையான் பால் ஊற்றி , பின்பு சர்க்கரையைப் போட்டு ஸ்பூனால் கலக்கவேண்டும் . சூப்போ , காஃபியோ சத்தம் போட்டு உறிஞ்சிக் குடிக்காதீர்கள் .
தும்மலோ இருமலோ வந்தால் , நாப்கின் கொண்டே உங்கள் முகத்தை நாசுக்காக மறைத்துக் கொள்ளுங்கள் .
உணவுப் பொருள் பல்லில் மாட்டிக் கொண்டால் , நாப்கினை வைத்து , வாயை மறைத்தபடி பல் குத்தும் குச்சியால் ( அங்கு பல் குத்தும் குச்சி இருக்கும் ) சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் .
--- தனலட்சுமி சுந்தர், குமுதம் சினேகிதி / டிசம்பர் 1 . 2006 .

ஹையோ மசக்கை .

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது , அவளுக்கு மட்டும்தான் மசக்கை ஏற்படும் என்று நினைக்கிறீஈர்களா ? அதுதான் இல்லை ... உண்மையிலேயே அந்தப் பெண்ணுடைய கணவனுக்கும் ' மார்னிங் சிக்னல் ' என்று சொல்லப்படுகிற ' மசக்கை ' ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம் !
முப்பத்தி நான்கு தம்பதிகளிடம் , நியூஃபவுன்லேண்ட் யூனிவர்சிடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு நடத்தினார்கள் .
இந்தத் தம்பதிகளின் ஹார்மோன் அளவுகளை , குழந்தை பிறப்பதற்கு முன்பும் , குழந்தை பிறந்த பின்பும் அளவெடுத்துப் பார்த்தபோது , ஆச்சர்யமான தகவல் கிடைத்தது...
அதாவது , மனைவியின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது , குழந்தையின் மீது ஒருவித பிடிமானத்தை வளர்க்கும் ' கார்டிசோல் ' என்ற ஹார்மோன் ஆண்களுக்கு இருமடங்கு அதிகரிப்பதாகத் தெரிய வந்தது . அதுமட்டுமல்ல... ' ஹும் ! ... நான் ஆம்பளை தெரியுமா ? ' என்று ஆண்களின் உடம்பில் தெனாவெட்டு காட்டும் டெஸ்டோஸ் டிரான் ஹார்மோன் . அப்படியே பொசுக்கென்று மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து போய் விடுகிறதாம் .
பிள்ளைத்தாய்ச்சி பெண்ணின் உடலில் ஏற்படும் நுட்பமான வாசனை ( ஃபெரமோன்ஸ் ) தான், பக்கத்தில் இருக்கும் கணவரின் உடம்பில் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் !
--- தகவலீஸ்வரி , குமுதம் சினேகிதி / டிசம்பர் 1 . 2006 .

Thursday, December 23, 2010

ஸ்லிம் ஆக ....

தூங்கினால் ஸ்லிம்மாகலாம்...
நீங்கள் ஸ்லிம் ஆகணுமா ?
கட்டாயமாக தினமும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்குங்கள் . இந்தளவு தூக்கம் இருந்தால்தான் நம் உடமபு கலோரிகளை எரிக்கும் சக்தி பெறுகிறது . அதனால் , நல்ல தூக்கம் என்பது உடலை இளைக்க வைக்க மட்டுமல்ல... டயபடீஸ்காரர்களூக்கு சர்க்கரை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும் உதவுகிறது .
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்...
நானும் எக்ஸர்சைஸ் செய்கிறேன் பேர்வழி என்று , தினமும் பத்து தடவை குனிந்து நிமிர்ந்தால் ஒரு உபயோகமும் கிடையாது . ஒரு நாளைக்கு குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்களாவது தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால்தான் , உடம்பிலுள்ள தேவையில்லாத கொழுப்பும் கரையும் .
டயபடீஸை வராமல் தடுக்கணுமா ?
டயபடீஸ் வரக்கூடிய குடும்ப பாரம்பரியம் உள்ள நபரா நீங்கள் ... உங்கள் டயபடீஸை பத்து வருடங்கள் தள்ளிப் போட உங்கள் உணவே உதவலாம் . குறிப்பாக விட்டமின் ' ஏ ' டயபடீஸை வரவிடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதாம் . விட்டமின் ' ஏ ' அதிகம் நிறைந்த பச்சைக் காய்கறிகளையும் , பழங்களையும் உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் .
கைகளை தொங்கவிட வேண்டாமே...
வாக்கிங் போகும்போது , கைகளை வெறுமனே சும்மா வைத்துக் கொண்டிருப்பதைவிட , முன்புறம் கட்டிக் கொண்டு நடந்து பாருங்கள் . இன்னும் கூடுதலாக 10% கலோரியை எரிக்க முடியும் ! அதாவது இன்னும் பத்து நிமிடம் அதிகமாக ' வாக் ' செய்ததற்குச் சமம் !
--- குமுதம் சினேகிதி / டிசம்பர் 1 . 2006 .

Wednesday, December 22, 2010

பத்ரிநாத் திருக்கோயில் .

இமயமலையில் இலந்தை மரக்காடுகள் நிறைந்த நாராயண பர்வதம் என்ற பகுதியில் , அலக்நந்தா நதிக்கரையில் அமைந்திருக்கிறது பத்ரிநாத் திருத்தலம் . ஹரித்வாரிலிருந்து 300 கி. மீ. தொலைவில் உள்ளது இந்த புனிதத் தலம் .
சம்ஸ்கிருதத்தில் பத்ரி என்றால் இலந்தை . இலந்தை மரங்கள் அடங்கிய காடுகள் சுற்றி இருந்ததால் இதற்கு பத்ரிவனம் என்று பெயர் . இலந்தை மரத்தின் கீழே ஆச்சாரியர் ரூபத்தில் பெருமாள் அமர்ந்தருளிய தலம் என்பதால் கோயிலுக்கு பத்ரிகா ஆஸ்ரமம் என்றும் பெயர் .
கோயில் அமைப்பு
இக்கோயிலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் . ஒன்று , பத்ரிநாதர் குடிகொண்டுள்ள மூலஸ்தானம் . இந்த கர்ப்பகிருகம் பொன் தகடுகளால் வேயப்பட்ட மேல் கூரையோடு சேர்ந்தது .
இரண்டாவது , தரிசன மண்டபம் . இங்கேதான் பூஜை மற்றும் இதர சடங்குகள் நடைபெருகின்றன .
மூன்றாவது , சபா மண்டபம் . இங்குதான் சுவாமி காலையில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் .
தலச் சிறப்பு .
கோயில் அமைந்துள்ள வெண்பனி படர்ந்த மலையின் அழகிய சூழல் , ஆன்மிக அமைதியை அளிக்கும் , தியானம் செய்ய உகந்த இடம் இது .
பத்ரிநாத் கோயில் பின்பக்கம் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து நீலகண்டம் என்ற மலைஉச்சி பகுதியைப் பார்ப்பது , கண்கொள்ளாக் காட்சி . நீலகண்ட உச்சியின் அருகிலேயே நரநாராயணர்கள் இருப்பதாக ஐதீகம் .
பத்ரிநாத் ஆலயத்திற்கு எதிரில் உள்ள தப்தகுண்டம் தீர்த்தம் , ஒரு வெந்நீர் ஊற்றாகும் .
பத்ரிநாதரின் விக்ரகம் கறுப்பு நிற சாளக்கிராமத்தில் பத்மாசனத்தில் வீற்றிருப்பது போல அமைந்துள்ளது . பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும் போது திரையிடுவதில்லை .
மூலவர் : பத்ரி நாராயணர் .
தாயார் : அரவிந்தவல்லி .
தீர்த்தம் : தப்த குண்டம் ( வெந்நீர் ஊற்று ).
விமானம் : தப்த காஞ்சந விமானம் .
தல விருக்ஷம் : பத்ரி ( இலந்தை ).
மங்களாசாசனம் : பெரியாழ்வார் -- 11 பாசுரங்கள் .
--- தினமலர் , ஜூலை 8 . 2010 .

Tuesday, December 21, 2010

சூப்பர் டிப்ஸ் .

* இட்லி மாவு புளித்து , புளிப்பு வாசனை முகத்தைச் சுளிக்க வைக்கிறதா ? அதைப் போக்க ஒரு சுலபமான வழி , மாவில் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கலக்கி வைத்தால் , சிறிது நேரத்தில் நீர் மேலே தேங்கி நிற்கும் . அதை வடித்துவிட்டு இட்லி வார்த்துப் பாருங்கள் . இட்லி புளிப்பில்லாமல் இருக்கும் .
* உங்கள் வீட்டு வாண்டு சூயிங்கம் மென்று விட்டு , அது தெரியாமல் தலைமுடியில் ஒட்டிக் கொண்டு விட்டதா ? கொஞ்சம் ஐஸ் கட்டியை எடுத்து , சூயிங்கம் பட்ட இடத்தில் நன்றாகத் தேய்த்து விட்டால் , சூயிங்கம் உருண்டு வந்துவிடும் .
* பழைய லெதர் பேக் என்றாலும் கூட , கிழியவில்லை எனில் , தூக்கிப் போட யாருக்கும் மனசே வராது . கவலையை விடுங்கள் . கொஞ்சம் தேன் மெழுகை பெகின் மீது நன்றாகத் தடவி , பின் துடையுங்கள் . பழைய பேக் புதுசு போல் பளிச்சிடும் .
* சுலபமாக திறந்து மூட முடியாமல் உங்கள் ஹேண்ட்பேகின் ' ஜிப்' புகள் சண்டித்தனம் செய்கிறதா ? சிறிதளவு வாசலின் அல்லது தலைவலி தைலத்தை ஜிப்பின் மேல் தடவிப் பாருங்கள் . ஜிப் சொன்னப் பேச்சைக் கேட்கும் .
* சுலபமாகத் துடைக்க முடியாத ஜன்னல் இடுக்குகளில் நிரம்பியிருக்கும் தூசுகளைத் துடைக்க , இதோ ஒரு சுலப டிப்ஸ்... வீட்டிலுள்ள பழைய காலுறையை உங்கள் கைகளில் மாட்டிக் கொண்டு , விரல்களால் துடைத்தால் , இடுக்குகளிலுள்ள அழுக்குகள் போயே போச் ! இதனால் மர வேலைப்பாடுகளில் உள்ள சிலாம்புகள் கையில் குத்தாமலும் இருக்கும் குடையின் சிறிய ஓட்டையில் மழை கசிந்து உங்கள் மேல் ஊற்றுகிறதா ? வீட்டைவிட்டுக் கிளம்பும் முன் அந்த இடத்தில் நிறமற்ற நெயில் பாலீஷைத் தடவினால் , அவசரத்துக்கு ஓட்டை அடைந்து விடும் . மறு ஏற்பாடு செய்யும்வரை இது உதவும் !
--- குமுதம் சினேகிதி . டிசம்பர் 1 . 2006

Monday, December 20, 2010

டென்ஷனைக் குறைக்க !

டென்ஷனைக் குறைக்க சில வழிமுறைகள் !
1 . எந்தவொரு வேலை செய்வதற்கு முன்பும் திட்டமிடுதல் அவசியம் .
2 . தினமும் அரைமணி நேரமாவது யோகாவும் , மூச்சுப் பயிற்சியும் செய்யுங்கள் .
3 . கவலைகளை மனதில் போட்டுப் புதைக்காமல் அவ்வப்போது வெளியேற்றி விடுங்கள் .
4 . வேலையை குறிப்பிட்ட நாளில் செய்து முடிக்க வேண்டி இருந்தால் , தள்ளிப்போடாமல் முடித்து விடுங்கள் .
5 .அலுவலகத்தில் டென்ஷனாக இருந்தால் , இரண்டு உள்ளங்கைகளாலும் கண்களை மூடி ஐந்து நிமிடம் அப்படியே இருங்கள் .
6 . டென்ஷனான நாட்களில் சிறிது நேரம் செலவழித்து ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள் .
7 . வீட்டுக்கு வரும்போது அழுது வடியும் சீரியலைப் பார்க்காமல் , நகைச்சுவைப் பகுதியைப் பார்த்து டென்ஷனைக் குறையுங்கள் .
--- சைக்காலஜிஸ்ட் , தேன்மொழி , குமுதம் சினேகிதி . டிசம்பர் 1 . 2006 .

Sunday, December 19, 2010

டிப்ஸ் ...

* பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !
* வாழைக்காய் தோல் சீவும்போதோ , அரியும்போதோ கைகள் கறுப்பாக ஆகிவிடும் . ஒரு ஸ்பூன் பொடி உப்பைக் கைகளில் நன்றாகத் தேய்த்துக் கொண்டு , தோல் சீவினாலோ ,அரிந்தாலோ கறுக்காது .
* ஹோட்டல்களில் சாதம் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டுமென்பதற்காக சுண்ணாம்பு நீரைக் கலந்து விடுகின்றனர் . அது வயிற்றைப் புண் ஆக்கிவிடும் . ஹோட்டலுக்குச் செல்லும்போது ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை , பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லுங்கள் . சாதத்தைப் பரிமாறியவுடன் , சிறிதளவு சாதத்தை இலையின் ஓரத்தில் வைத்து அதனுடன் மஞ்சள் தூளைக் கலந்து பிசையுங்கள் . சாதத்தில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருந்தால் சாதம் உடனடியாக சிவப்பு நிறமாக மாறிவிடும் . அதன் பிறகாவது அத்தகைய ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து விடலாமே !
* முடி அதிகமாக உதிர்ந்தால் பூண்டை இடித்து மண்டை ஓட்டில் தேயுங்கள் . அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வது குறையும் .
* சிலருக்கு மாதவிலக்கின் போது வயிற்றுவலி அதிகம் இருக்கும் . அப்போது முருங்கைக்கீரையை ஆய்ந்து கழுவி சிறிது நல்லெண்ணெய் விட்டு உப்புப் போட்டு வதக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* பெண்களின் கை , கால்களில் முடி வளராமல் இருக்க , குப்பைமேனி , வேப்பிலை , மஞ்சள் மூன்றையும் நைசாக அரைத்து , கை கால்களில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பின் குளித்தால் முடிகள் உதிர்ந்து விடும் . உடல் வழு வழுப்பாக மாறும் . மேனி பளபளப்புக்கு குப்பைமேனி சிறந்த மூலிகை .
* உணவு வகையைப் பார்சல் கட்டும்போது பச்சை வாழை இலையில் கட்டினால் இலை கிழிந்து விடும் . இலையை வெந்நீரில் நனைத்து எடுத்துக் கட்டினால் இலை கிழியாது .
* சமையல் வேலையெல்லாம் முடிந்து விட்டது . கேஸ் அடுப்பின் பிசுக்கையெல்லாம் எப்படி நீக்குவது என்று மலைப்பாக உள்ளதா ? ஒரு ஸ்பாஞ்சில் வினிக்கரைத் தோய்த்து ,அடுப்பைத் துடைத்தால் , எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் நீங்கி , புதிய அடுப்பு போல் பளபளக்கும் .
* தாய்ப்பால் கொடுக்கும் முன் சிறிதளவு வெந்நீர் அல்லது மிதமான சூட்டில் பால் குடித்து விட்டால் பால் அதிகமாகச் சுரக்கும் .
* கழுத்தில் சங்கிலி அணிவதால் ஏற்படும் கறுப்பு மறைய , 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் குழைத்து கருமை உள்ள இடத்தில் பூசவும் . முப்பது நிமிடம் கழித்து கழுவவும் . இதுபோல் தொடர்ந்து செய்து வர கருமை மறையும் .
* வெந்நீரில் குளிப்பதாக இருந்தால் காலிலிருந்து தொடங்கி உடல் முழுவதும் ஊற்றி பிறகு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும் . குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலைக்கு ஊற்றிய பின் பிறகு உடம்புப் பகுதிக்கு நீர் ஊற்றிக் குளிக்க வேண்டும் . இதனால் , மூளை களைப்படையாது . சுறுசுறுப்பாக இயங்கும் .
--- மங்கையர் மலர் . மார்ச் 2007 .

Saturday, December 18, 2010

' அபாய ஆசி ' !

முதலைகளிடம் குழந்தைகளுக்கு ' அபாய ஆசி ' ! பாகிஸ்தானில் நடைபெறும் விநோத சடங்கு .
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீதி எனப்படும் சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த அவர்கள், முதலையை புனிதமாக கருதுகின்றனர். அதனால், அதை சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவிழாவை நடத்திவருகின்றனர் .
இந்த விழாவின் போது, அங்குள்ள வழிபாட்டுத்தலத்தில் பிரார்த்தனை நடத்தும் மக்கள், பின்னர் அருகே உள்ள குளத்திற்கு செல்கின்றனர். அங்கு வளர்க்கப்படும் முதலைகளுக்கு ஆட்டிறைச்சியை உணவாக படைக்கின்றனர்.
அந்த இறைச்சியை முதலைகள் ஏற்றுக்கொண்டால், அவர்களுக்கு அதிஷ்டம் அடிக்கும் என்பதும், செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் நம்பிக்கை. குவாஜா ஹஸன் என்ற துறவியின் சீடர்களாக முதலைகளை கருதுவதால், அவைகள் தங்களை எதுவும் செய்யாது என, சீதி இன மக்கள் நம்புகின்றனர் .
முதலைக்கோயில் திருவிழாவின் போது, இறைச்சியால் செய்யப்பட்ட உணவுப்பண்டங்களையும், இனிப்பு வகைகளையும் சிறுமிகள் எடுத்துச் செல்கின்றனர். முதியவர்கள் வழிபாடுகளை நடத்தும் போது, பக்தர்கள் வெறும் காலில் நடனமாடுகின்றனர். குழந்தைகளை முதலைக்கு மேலே தூக்கிப்பிடித்து ஆசி வாங்குகின்றனர். மனிதர்களுக்கு எப்படி இறுதிச்சடங்கு நடத்துகிறார்களோ, அதேபோன்று அவற்றுக்கும் நடத்துகின்றனர். இறந்த முதலையை குளிப்பாட்டி, சடங்குகளை செய்த பிறகு பிரத்யேகமான மயானத்தில் அவற்றை புதைக்கின்றனர்.
---தினகரன் , 16. 06. 2010.

Friday, December 17, 2010

வைரமுத்து -- பாடல் வரிகள் !

' ராவணன் ' படத்தில் இடம்பெறும் ' கள்வரே கள்வரே ' பாடலில் ஓர் இலக்கணம் சொல்லியிருக்கிறேன் . ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகிறதே... வலிமிகு வலிமிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா ! என்று எழுதியிருக்கிறேன்.
மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், தமிழில் வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள், மிகா இடங்கள் என்பதை வலிமிகு இடம், வலிமிகா இடம் என்று சொல்வது தமிழ் இலக்கண மரபு. உதாரணமாக வினைத் தொகையில் வலி மிகாது. ' சுடுசோறு ' என்பதை ' சுடுச் சோறு ' என்றோ, ' ஊறுகாய் ' என்பதை ' ஊறுக்காய் ' என்றோ எழுதக் கூடாது. ' அலை கடல் ' என்பதை ' அலைக் கடல் ' என்று எழுதக் கூடாது. அதாவது வினைத் தொகையில் வலி மிகாது. சுட்டெழுத்தில் வலி மிகும். ' அந்தப் பக்கம்..' '.இந்தப் பக்கம்.' ' அந்தப் பெண் ' ' இந்தப் பெண் ' என சுட்டெழுத்தில் வலி மிகும். இதை நயமாக ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் ' தமிழுக்குத் தெரிகிறதே, நீங்கள் என்னை அணைக்கிற போது ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் உங்களுக்குத் தெரிகிறதா ' என காதல் கொண்டு மனைவி கேட்பதாக எழுதியிருக்கிறேன்.
' எந்திரன் ' படத்தில், பாட்டு முழுக்க விஞ்ஞான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ' வண்ணத்துப்பூச்சி கால்களால் ருசி அறியும் இந்த காதல் பூச்சி கண்களால் ருசி அறியும் ! ' என்பது போன்ற வரிகள் விழுந்திருக்கின்றன .
--- வைரமுத்து , குமுதம் . 07. 07. 2010.

Thursday, December 16, 2010

ரோபோ காதலி !

அசத்தும் அழகுடன் நவநாகரீக மங்கையாக விற்பனைக்கு வரும் ரோபோ காதலி !
இனிமேல் காதலியை தேடி அலைய வேண்டியதில்லை. நீங்கள் விரும்பும் உடல், தோற்றம், நிறம் மற்றூம் அழகுடன் ரோபோ காதலியை பெறலாம். இதற்காக புதிய பெண் ரோபோவை அமெரிக்க இன்ஜினியர் டக்ளஸ் ஹின்ஸ் உருவாக்கியிருக்கிறார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உலக எலக்டிரானிக்ஸ் கண்காட்சி நடந்தது. அதில் ' அடல்ட் என்டர்டெயின்மென்ட் ' பிரிவில், புதிய பெண் ரோபோ ' ராக்சி ' அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்களின் பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த செக்ஸ் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
5 அடி 7 அங்குலம் உயரம், 55 கிலோ எடை, அழகிய உருவ அமைப்புடன் ' ராக்சி ' பெண் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவுடன் உடல் முழுவதும் செயற்கை தோலால் மூடப்பட்டு புசுபுசுவென நிஜமான பெண் போன்றே இந்த ரோபோ தோற்றமளிக்கும். செயற்கை முறையில் எலும்புக் கூடு உருவாக்கப்பட்டு உடல் முழுவதும் சதை போன்ற மென்மையான பகுதி ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ நகர்ந்து செல்லும், ஆனால் காலை தூக்கி வைத்து நடக்காது. ரோபோவின் மார்பு பகுதியில் இயந்திர இதயம் பொருத்தப்பட்டு, உடல் குளூமையாக பராமரிக்கப்படும்.
இனம், தலைமுடி கலர், மார்பக அளவு வேறுபட்ட 5 விதமான மாடல்களில் ' ராக்சி ' ரோபோ விற்பனைக்கு வருகிறது. புதிய ' ராக்சி ' ரோபோ சமைக்காது, துணி துவைக்காது. ஆனால், மனைவி அல்லது காதலி செய்யும் எல்லா பணிகளையும் இது செய்யும்.
அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்த ரோபோ நல்ல தோழியாக இருக்கும். நீங்கள் கூறுவதை கவனமாக கேட்டு, பேசவும் செய்யும். நீங்கள் கையால் தொடுவதை உணரும் திறன் உண்டு. உங்கள் விருப்பு வெறுப்புகளை படு கச்சிதமாக அறிந்து கொள்ளும். இதில் புரோகிராம் செய்து நண்பர்களுடன் இதை பகிர்ந்துகொள்ளலாம்.
இந்த புதிய ' ராக்சி ' பெண் ரோபோ 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் டாலர் வரையிலான விலையில் கிடைக்கும். இவ்வாறு ஹின்ஸ் தெரிவித்தார்.
--- தினமலர், 11. 01. 2010.

Tuesday, December 14, 2010

ஆலிவ் எண்ணெய் .

மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.
புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது.
தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.
ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.
--- தினகரன் , 5 ஜூலை . 2010.

Monday, December 13, 2010

' ப்யூல் சேவர் '

பெட்ரோலை சேமிக்க ' ப்யூல் சேவர் ' கருவி . விவசாயி கண்டுபிடிப்பு .
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்துள்ள முகாசிபிடாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு. விவசாயி. காரில் பெட்ரோலை மிச்சப்படுத்தும், ' ப்யூல் சேவர் ' என்ற மின்னணு கருவியை கண்டுபிடித்துள்ளார். கருவி காரில் பொருத்தப்பட்டால் மைலேஜில் 6 கி. மீ. அதிகம் கிடைக்கிறது.
நேரு கூறியதாவது : ' ப்யூல் சேவர் ' என்ற கருவி, பெட்ரோல் பயன்படுத்தும் கார்களில் எளிய முறையில் பொருத்திக்கொள்ள ஏதுவாக ' எம்பெடட் டெக்னாலஜி சிஸ்டம் ' அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 25 க்கும் மேற்பட்ட கார்களில் இக்கருவி பொருத்தப்பட்டு பரிசோதனை செய்ததில், உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு 15 % மேலாக பெட்ரோல் செலவு மீதமாவதாகவும், 20% மேலாக அதிக மைலேஜ் தருவதாகவும் சோதனை முடிவு அறிக்கைகளை வழங்கியுள்ளனர். புனேவில் செயல்பட்டுவரும் ஆட்டோமொட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா ( ஏஆர்ஏஐ ) நிறுவனத்தின் தரக்கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டு அதன் மூலம் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை மூலம் இதை வடிவமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இக்கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
--- தினகரன் , 5 ஜூலை . 2010.

Sunday, December 12, 2010

' சுகர் பிரீ ' மாம்பழம் .

வந்து விட்டது ' சுகர் பிரீ ' மாம்பழங்கள் !
உத்தரபிரதேச மாநிலம் மலிகாபாத்தில் உள்ள அந்த மாநில தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வண்ணம் புதிய மா வகையை கண்டறிந்துள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளாக நடத்திய ஆராய்ச்சியில் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் சத்து மிக்க அதே சமயம் குறைந்த சர்க்கரை கொண்ட மாம்பழ வகையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சாதாரண மாம்பழங்களில் உள்ள சர்க்கரையளவில் 25 % மட்டுமே இதில் கலந்துள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி இதனை உட்கொள்ள முடியும். சர்க்கரை மட்டுமின்றி கார்போஹைட்ரேட்டும் இந்த மாம்பழங்களில் குறைவாக உள்ளது. மாறாக மாம்பழத்தில் உள்ள மினரல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன.
--- தினமலர், 04. 07. 2010.

Saturday, December 11, 2010

சண்டிகேஸ்வரர் .

எப்பொழுதும் சிவ தியானத்திலேயே இருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவ பூஜைக்கும், தியானத்திற்கும் இடையூறு விளைவிப்பவர் யாராயினும் அவரைக் கோபத்துடன் தண்டிப்பவர்.
இதனாலேயே ' சிவ நிந்தகரிபு ' என்று ஒரு பெயர் உண்டு.
இவரது இயற்பெயர் ' விசாரசருமர் '. சிவ பூஜைக்கு இடையூறு செய்த தமது தந்தையின் கால்களை மிகுந்த கோபத்துடன் துண்டித்தார். இதனால் இவருக்கு' சண்டிகேஸ்வரர் ' எனப் பெயர் வரலாயிற்று. ( சண்ட = கோபம் ).
சிவபெருமானுக்கு பூஜித்த மலர்களையே ( சிவ நிர்மால்யம் ) இவர் ஏற்றுக் கொள்வார். சிவபெருமானுக்கு நிவேதனம் செய்த உணவையே தமக்கு ஏற்றுக் கொள்வார். இவையனைத்துமே இவரது பக்தியை பாராட்டி சிவபெருமான் அருளியவையாகும்.
--- தினமலர், ஏப்ரல் 8 . 2010.

Friday, December 10, 2010

அதிசய சிற்பம் !

ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களை ஐராவதீஸ்வரர் கோயிலில் காணலாம். இங்கு வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது. அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும். ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பது போல் இக்காட்சி அமைந்திருக்கும். தாராசுரம் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. இந்த சிற்பங்கள் சோழப் பேரரசனான இரண்டாம் ராஜராஜசோழனின் கலைப் பாணியின் வெளிப்பாடாகும்.
--- தினமலர் ,பிப்ரவரி 25 . 2010..

Thursday, December 9, 2010

ஆகமங்கள் .

இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்கள் :
1 . காமிகம் 2 . யோகஜம் 3 . சிந்தியம் 4 . காரணம் 5 . அஜிதம் 6 . தீப்தம் 7 . ஸூக்ஷ்மம் 8 . ஸஹஸ்ரம் 9 . அம்சுமான் 10 . ஸுபரபேதம் 11 . விஜயம் 12 . நிஸ்வாசம் 13 . ஸ்வாயம் புவம்14 . அனிலம் 15 . வீரம் 16 . ரௌரவம் 17 . மகுடம் 18 . விமலம் 19 . சந்த்ரஞானம் 20 . பிம்பம் 21 . ப்ரோத்கீதம் 22 . லலிதம் 23 . சித்தம் 24 . சந்தானம் 25 . சர்வம் 26 . பாரமேஸ்வரம் 27 . கிரணம் 28 . வாதுளம் .
--- தினமலர் ,பிப்ரவரி 25 . 2010.

Wednesday, December 8, 2010

அழகா... அலகா ?

காலங்காலமாக பெண்கள் காதில், மூக்கில், துளையிட்டு அணிகலன் அணிந்து வருகின்றனர். இது மரபு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்ததாகவே இன்றும் உள்ளது. இந்தப் பழக்கம் ஃபேஷன் என்ற போர்வையில் தொப்புள், புருவம் போன்ற இடங்களில் அணியும்விதமாக இன்று வளர்ந்து நிற்கிறது.ஆண்களும் காது குத்திக் கடுக்கன் போடுகிறார்கள். புருவத்தில் சின்னஞ் சிறு ஆணி போன்ற அணிகலன் அணிகிறார்கள். இப்படி உறுப்புகளில் அணிகலன் அணிவதற்கு Body piercing என்று பெயர்.பழங்காலத்தில் உலோகம், எலும்புத் துண்டு, சோழி, தந்தம், கண்ணாடி போன்றவற்றால் ஆன நகைகளை அணிந்தார்கள். முன்பு எகிப்திய மன்னர்கள் Symbol of Royality என்பதன் அடையாளமாகத் தொப்புளில் வளையம் அணிந்தனர். ரோம் நகர் ஆண்களிடம் மார்பக நுனியில் வளையம் அணியும் பழக்கம் இருந்தது. மாயன்ஸ் என்கிற இனத்தினரிடம் நாக்கில் துவாரம் இட்டு அதில் நகை அணியும் வழக்கம் இருந்தது. அப்படி அணிந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.விக்டோரியா மாகாராணி காலத்தில் இங்கிலாந்தில் வளையம் அணிந்த ஆணுடன் உறவு கொண்டால் பெண்ணுக்கு நிறைய இன்பம் கிடைக்கும் என்று நம்பிக்கை. எகிப்தில் பெண்கள் தங்கள் பிறப்பு உறுப்பில் வளையம் அணிந்தார்கள். நம் நாட்டில் உறுப்புகளில் அணிகலன் அணிவது பற்றி வாத்சாயனரும் குறிப்பிட்டுள்ளார். உடல் ஆரோக்கியம், பிரார்த்தனை போன்ற அடிப்படையில்தான் இவை அணியப்பட்டன.தேவையற்ற இடங்களில் அணிகலன் அணிவதால் செக்ஸ் செயல்பாடோ, சுகமோ ஒரு டீஸ்பூன் அளவுகூட அதிகரிக்காது என்பதே நிஜம். அவஸ்தைதான் மிஞ்சும். மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இதுபோன்று அணிவது எல்லோரையும் வசீகரிக்காது என்பதை மனதில்வையுங்கள்.--- டாக்டர் டி. நாராயண ரெட்டி. ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Tuesday, December 7, 2010

வழிபாட்டு பாடல் !

வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் அவசியம்தான் என்பதற்கு, திருமுருகன் வழிபாட்டு பாடல் ஒன்று அற்புதமான விளக்கமாக அமைந்துள்ளது...
' ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு அசுரரை வென்ற முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே ! '
இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்த்தால், திருமுருகனின் ஆறு முகங்களைப் போற்றித் துதிக்கும் பாடலாகத் தொன்றும்.
சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், இதற்குள் அருமையான வாழ்க்கை வழிகாட்டுதல் ஒளிர்வது புரியும் : மயிலேறி விளையாடுதல், குழந்தை நிலை; ஞானமொழி பேசுதல், ஞானியின் நிலை; அடியார்கள் வினைதீர்த்தல், அபயமளித்து ஆதரிக்கும் நிலை; ( அன்னை சக்தியிடம் ) வேல் வாங்கிய நிலை, தீமையை அழிக்க பெரியோர் துணைதேடிய நிலை; அசுரரை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டிய நிலை; திருமணம் செய்தல், குடும்ப வாழ்ககை நிலை.!
' குழந்தையாய் இரு, ஞானியாய் இரு, துன்பப்படுவோரை ஆதரித்து உதவுபவனாய் இரு, தீமையை அழிக்க பெரியோர் துணை தேடு, தர்மத்தை நிலைநாட்டு... இனிய வாழ்க்கை அமையும் ! ' என்பதே இந்த போற்றிப்பாடல் சொல்லாமல் சொல்லும் வாழ்க்கை வழிகாட்டுதல் !
--- பூஜ்யா . தினமலர் , 03. 07. 2010.

Monday, December 6, 2010

விளிம்பு நிலை !

விளிம்பு நிலை மனிதர்களாக இருங்கள் !
எந்த விஷயத்தில் ஆழ்ந்தாலும் அமிழ்ந்தாலும், அதன் அடி ஆழம் வரை துழாவிச் செல்லுங்கள். அமெரிக்க விமானப் படையில் பயிற்சி விமானிகளிடம் ஜெட் விமானங்களை ஒப்படைப்பார்கள். அதீத வேகம் காரணமாக விமானம் வெடித்துச் சிதறும் நிலைக்கு முந்தைய அபாய எச்சரிக்கை வரை அதை விரட்டுவார்கள். தலைகீழாக, மேலும் கீழுமாக, முன் பின்னான அந்த விமானங்களை வைத்து என்னவெல்லாம் வித்தை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள் பயிற்சி விமானிகள். உடைக்காமல், மோதிச் சிதறடிக்காமல் அந்த விமானத்தை என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்வார்கள். காரணம் ? ' இந்தப் பழக்கத்தை push the outside of the envelope என்பார்கள். அதாவது, எந்தச் செயலையும் அதன் முற்று முதல் வரை ஆராய்ந்து துழாவிப் பார்ப்பது. பயிற்சியில் ஒரு விமானத்தின் முழுத் திறனையும் பரிசோதித்து அறிந்துகொண்டால்தான், யுத்தச் சமயங்களில் அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்த முடியும் ! '
--- கி. கார்த்திகேயன் ,, ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Sunday, December 5, 2010

எரிபொருள் ஏற்று !

ஒவ்வொரு நாளுக்கும் எரிபொருள் ஏற்றுங்கள் !
1969 - ல் முதன்முதலில் நிலவில் தரை இறங்கிய நீல் ஆம்ஸட்ராங் உள்ளிட்ட அப்பல்லோ விண்கல வீரர்கள் அதன் பிறகான சில மாதங்களுக்குக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ' நிலவிலேயே கால் பதித்துவிட்டோம். இனி, பூமியில் சாதிக்க என்ன இருக்கிறது ! ' என்ற எண்ணம் அவர்களை எந்தச் செயலிலும் கவனம் செலுத்தவிடாமல் மனச் சிதைவுக்கு ஆளாக்கி இருக்கிறது. எதை இலக்காக நிர்ணயித்துக் கொள்வது என்பதில் ஏற்பட்ட குழப்பமே அது. தங்களது முந்தைய சாதனைப் பெருமிதத்தை மனதில் இருந்து நீக்கிக்கொள்ளாமல், அதிலேயே திளைத்துக் கிடப்பதன் விளைவு என்றும் சொல்லலாம். ' நீங்களும் சராசரியானவர்தான். பல நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் இல்லாவிட்டால் உங்களால் நிலவில் கால்வைத்திருக்க முடியாது. பல்லாண்டு கால இடைவிடாத முயற்சிகளை உங்கள் மூலமாக உலகம் தெரிந்துகொள்ள முடிந்தது ! ' என்றெல்லாம் அவர்களுக்குப் பலவிதமாக கவுன்சிலிங் கொடுத்து இயல்பு நிலைக்குத் திருப்பினார்கள்.
--- கி.கார்த்திகேயன் , ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Saturday, December 4, 2010

தெரிந்து கொள்ளுவோம் !

* ' மழையில் நடந்து செல்வதையே நான் விரும்புகிறேன். அப்போதுதான் என் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது.' என்பார் சார்லி சாப்ளின். புன்னகையின் மூலம் வலிகள் கடந்து செல்வதுதான் அவரது மாயவித்தை. துன்பங்களை கணக்கில் வைக்காமல் சிரிப்பைக் கண்களில் வைத்தவர் சாப்ளின். அதுதான் சாப்ளீனின் வெற்றி ரகசியம்.
* மூளை இல்லாமல் இருப்பதுகூடப் பிரச்னை இல்லை. இதயமே இல்லாமல் இருப்பது பெரும் குற்றம்.
* ' வாழும் இந்த நொடியில் முழு உயிர்ப்புடன் வாழ். நமது கடமை நல்லதை மட்டுமே செய்வதுதான் ' என்றார் புத்தர்.. சலனமற்று வாழத் தெரிந்தால், சோதனைகள் சீண்டாது.
* சமீபத்தில் ஒரு சலூனில் ரசித்த பொன்மொழி : -- இன்றைய ( அ ) லட்சியம் , நாளைய ( ஏ ) மாற்றம் !
* ' சொந்தப் பணத்தைச் செலவு செய்யும்போது சிக்கனமாக இரு. பொது பணத்தை செலவு செய்யும்போது கஞ்சனாக இரு ' என்பது பொது வாழ்க்கையின் இலக்கணங்களில் ஒன்று.
* ' எதிரியை மன்னித்துவிடு, ஆனால், அவர் பெயரை மறக்காதே ! ' என்று ஓர் அரேபிய பழமொழி உண்டு .
* மற்றவர்களிடம் கலகல்வெனெச் சிரித்துப் பேசும் குணம் கொண்டவர்களை ' எக்ஸ்ட்ரோவர்ட்ஸ் ' ( extroverts ) என்பார்கள். அவர்கள் ஆண், பெண், அறிந்தவர், தெரிந்தவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார்கள். இதற்கு நேர்மறையாக, கூச்சசுபாவம் நிரம்பியவர்களை நாம் ' இன்ட்ரோவர்ட்ஸ் ' ( introverts )
என்போம் .
* பொதுவாக, மனிதர்களை ஸ்கில்டு ( skilled ) , செமி - ஸ்கில்டு ( semi - skilled ) , அன் - ஸ்கில்டு ( un - skilled ) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் .
* வாழையையும் மூங்கிலையும் மரம்னு சொன்னாலும் அவை மரங்கள் இல்லை . வாழை , ஒரு பெரிய செடி ! மூங்கில் , ஒரு பெரிய புல் ! .
* விதவிதமான உணவுகள் கிடைத்தாலும் , விண்வெளி வீரர்கள் பாவம்தான் ... விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால் , அவர்களால் உணவின் வாசத்தை நுகரமுடியாது ; ருசியையும் முழு அளவில் உணரமுடியாது . பசியைத் தீர்க்க ஏதாவது விழுங்கியாக வேண்டுமே என்றுதான் சாப்பிட வேண்டியிருக்கும் !
* பாலின் நிறம் வெண்மையாக இருப்பதர்கு 3 காரணங்கள் உள்ளன . பாலில் உள்ள ' கேஸின் ' என்ற புரதமும் , பால் நுரையின் தன்மையும்தான் அதற்கு வெண்மை நிறத்தை அளிக்கிறது . மூன்றாவது காரணம் , கேஸின் மற்றும் பால் நுரையை உருவாக்கும் பொருட்கள் , வெண்மை நிறத்தை அதிகமாகப் பிரதிபலிப்பது .
* கேஸின் , கொழுப்புச்சத்து , நுரை அதிகமாகக் கொண்ட பால் ' பளிச் ' வெண்ணிறத்தில் இருக்கும் . இவை குறைவாகக் கொண்ட பால் , வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும் .
* ஒரு கட்டிடம் அது அமைந்திருக்கும் இடத்துக்குள்ளேயே இடிந்து விழுமாறு செய்வது ' இம்ப்ளோசன் ' எனப்படுகிறது . இதற்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Friday, December 3, 2010

உங்களிடம் 3 Q இருக்கிறதா ?

பிசினஸ் மேனேஜ்மென்டில் சொல்லப்படுகிற சமயோசிதம், மற்றவர்களை நம் ஆளூகைக்குள் கொண்டுவருவது, நிதானம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. இந்த மூன்று விஷயங்களைத்தான் Intelligent Quotient ( IQ ), Emotional Quotient ( EQ ), Spiritual Quotient ( SQ ) ஆகிய மூன்று 'Q ' என்கிறார்கள். தமிழில் அறிவு வளம், மன வளம், மற்றும் ஆன்ம வளம் என்று கூறலாம். நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட சில சதவிகிதங்களில் இவை இயற்கையாகவே அமைந்திருக்கும். இவற்றை மேம்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது வெற்றி. எப்படி மேம்படுத்துவது ?
--- -ந. வினோத்குமார். ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Thursday, December 2, 2010

' ஐ.க்யூ '

' ஐ.க்யூ ' வளர்க்கச் சில ஐடியாக்கள்...
* நிறைய வாசியுங்கள்.
* இளமையோடு இருக்க வேண்டும் என்றால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருங்கள். காரணம், வயதான நரி புதிய தந்திரங்களைக் கற்றுக்கொள்ளாது.
* நீங்கள் வலது கைப் பழக்கம் உடையவராக இருந்தால், இடது கையாலும்.... இடது கைப் பழக்கம் உடையவராக இருந்தால் வலது கையாலும் எழுதிப் பழகுங்கள். இதன் மூலம் மூளையின் வேகமும் கவனமும் அதிகரிக்கும். தர்க்க அறிவை வளர்த்துக்கொள்வதற்கு இது ஒரு சின்ன எக்சர்சைஸ் !
* குறுக்கெழுத்துப் புதிர்கள், சுடோகு புதிர்கள் ஆகியவற்றுக்கு விடை காண முயலுங்கள்.
* ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், இன்னொன்றுக்கு தாவிப் பழகாதீர்கள் !
---ந. வினோத்குமார். ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Wednesday, December 1, 2010

சிவப்பு மிளகாய் !

சிவப்பு மிளகாயின் சித்து விளையாட்டுகள்.
பெருத்த உடம்பை குறைக்க ஆயிரக்கணக்கில் செலவழித்து ஜிம்முக்குப் போக வேண்டாம், ஜாகிங் என்ற பெயரில் தாறுமாறாக தலை தெறிக்க ஓட வேண்டாம். நம் கைக்கு அருகிலேயே இருக்கிறது ஸ்லிம் உடலுக்கான மருந்து. உடல் எடையைக் குறைக்கும் சித்து விளையாட்டுகளை நடத்தும் அது.
உலகம் முழுவதுமே எடை சமாச்சாரம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் உடல் எடையே சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இதய கோளாறுகள் போன்ற பாதிப்புகளுக்கு மூலாதாரமாக இருந்து வருகிறது. இதனால் நாளொரு கிலோவும் பொழுதொரு இஞ்சுமாக பெருக்கும் உடலை குறைக்க அல்லாடி வரும் மக்களை பார்த்து பரிதாபப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இரவும் பகலுமாக ஆராய்ந்து இதை உரக்க சொல்லியிருக்கிறார்கள்.
சிவப்பு மிளகாயில் இருக்கும் கேப்சைசின் என்ற ஒரு சங்கதிதான் கெட்ட கொழுப்புகளுக்கு எதிராக போர் நடத்தி உடல் எடையை குறைக்கிறதாம். உடலில் உள்ள நன்மை பயக்கக்கூடிய புரோட்டீன்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் கேப்சைசின், அதன்மூலம் கொழுப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கிறதாம். மிளகாயில் இருக்கும் கேப்சைசின் கொழுப்பு திசுக்களை சுருங்க வைப்பதோடு ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவையும் குறைக்கிறதாம். மேலும் உணவு என்ற பெயரில் அதிக கலோரிகள் உள்ளே வருவதையும் தடுக்கிறதாம். ஆனால் கேப்சைசின் எப்படி இந்த மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது என்பது மட்டும் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு புரிபடாத மர்மமாக இருக்கிறது.
கேப்சைசின் இந்த ஆச்சரிய குணத்தை எலிகளை வைத்து பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். இதில் கேப்சைசின் கலந்த உணவுகளை உட்கொண்ட எலிகள் 8 சதவிகிதம் வரை எடை குறைந்திருக்கிறது. அதோடு அதன் உடலில் இருக்கும் கொழுப்புகளை உடைக்கும் புரோட்டீங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது.
--- தினமலர், ஜூன் 13. 2010.

Tuesday, November 30, 2010

அய்யன் வள்ளுவன் .

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமானது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே சிலை வடிக்க அடிக்கல் நாட்டினார். 1990ல் சிலை அமைப்பது துவங்கினாலும், 1997ல் தான் சிலை அமைக்கும் பணி புத்துயிர் பெற்றது. ஆய்வுகள், நீர் பரிசோதனை, கற்களை பெயர்த்தெடுக்கும் பணி, சிற்ப வேலைகள் என மூன்று ஆண்டுகள் நீடித்தது. வள்ளூவர் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் கணபதி ஸ்தபதி. 1330 குறள்களை 133 அதிகாரங்களில் உள்ளடக்கிய உலகப் பொது மறை நூலென்பதால் 133 அடி உயர சிலை வடிவமைப்பது என முடிவானது. அதன்படி சிலையைத் தாங்கி நிற்கும் பீடம் 38 அடி உயரத்திலும், வள்ளூவர் சிலை 95 அடி உயரத்திலும் வடிவமைக்கப்பட்டது.
சிலையின் உயரம் கூட ஏனோதானோ கணக்கில் வடிவமைக்கப்படவில்லை. அதிலும் குறியீடாக ஒரு சிறப்பு உள்ளடங்கியிருக்கிறது. குறளை அறம், பொருள், இன்பம் என மூன்று பால்களாக பிரித்திருக்கிறார் வள்ளுவர். இதில் முதலாவதாக அறத்துப்பால். இதில் 38 அதிகாரங்கள் உள்ளன. பொருள் மற்றும் இன்பத்துப் பாலில் 95 அதிகாரங்கள் உள்ளன. அறத்தை அடிப்படையாகக் கொண்டே பொருளூம் இன்பமும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பீடம் அறமாக 38 அடி உயரத்திலும், பொருள், இன்பமாக 95 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டது. மொத்தமாக 7 ஆயிரம் டன் எடை கொண்ட கற்களின் உதவியோடு செதுக்கப்பட்ட சிலை, தமிழர்களின் சின்னமாக 2000 ம் ஆண்டு குமரிக்கடலில் நிறுவப்பட்டது. இது வள்ளுவர் சிலையின் வரலாறு.
--- தினமலர், 20. 06. 2010.

Monday, November 29, 2010

நோயாளியா ?

ரத்த அழுத்த நோயாளியா ?
மாத்திரை போல செயல்படும். ரத்த அழுத்த நோயாளியா ? தினமும் சாக்லேட் சாப்பிடுங்க. ஆஸி. ஆய்வில் தகவல்.
ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி, பாதிப்பு குறையும் என்று ஆஸ்திரேலிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாக்லேட்டில் ப்ளேவனாய்ட் என்ற ஒரு ரசாயன பொருள் உள்ளது. அது ரத்தத்தில் செயல்படும் விதம் பற்றி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி நடத்தியது. அதில் வெளியான தகவல்கள் :
அடைபடும் ரத்த தமனிகளை திறக்க செய்வதில் ப்ளேவனாய்டு ரசாயன பொருள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. அடைபட்டிருக்கும் ரத்தம் இளகி சீராக ஓடுவதற்கு ரத்த தமனியை அது ஊக்குவிக்கிறது. இந்த ப்ளேவனாய்டு ரசாயனம், சாக்லேட்டில் அதிகமுள்ளது.
எனவே, தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிட்டு வருவதால், ரத்த ஓட்டம் சீராகி, அழுத்தம் குறைந்து விடும். உயர் ரத்த அழுத்தம் பாதித்தவர்களுக்கு சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரத்த அழுத்தம் குறைவது ஆய்வில் தெரிய வந்தது.
எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் ஒவ்வொரு முறை பாதிப்பின்போதும் மருந்து, மாத்திரைகளை நாடாமல், சாக்லேட் சாப்பிட்டாலே ஓரளவு நிவாரணம் பெறலாம். எனினும், உடனடி பலன் 5 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வு குழு பேராசிரியர் கார்வின் ரீட் கூறுகையில், " ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எப்போதும் மருந்து தேவைப்படாது. உணவுகளே மருந்தாக அமையும். அவற்றில் சாக்லேட்டும் ஒன்று " என்றார்.
--- தினகரன் , 29 ஜூன் , 2010.

எந்த பல்பு ' பெஸ்ட் ' ?

பூமி வெப்பமடைவதை முடிந்த வழிகளில் எல்லாம் தடுக்க வேண்டும், மின்சாரத்தை சிக்கனப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு சர்வதேச அளவில் வளர்ந்துவருகிறது. இந்த இரண்டு அம்சங்களையும் செயல்படுத்த உதவுபவை, ' சிஎப்எல் ' ( காம்பாக்ட் ஃப்ளோரஸென்ஸ் லேம்ப் ) மின்விளக்குகள்.
சாதாரண பல்புகளில் ( குண்டு பல்பு ) டங்க்ஸ்டன் இழையை மின்சாரம் மூலம் சூடாக்கி வெளிச்சம் பெறப்படுகிறது. இந்த இழையை சூடாக்க அதிக மின்சாரம் தேவை. இந்த பல்பு தரும் வெளிச்சம் குறைவு. வெளியிடும் வெப்பம் அதிகம். பல்பின் ஆயுட்காலம் குறைவு.
இந்தக் குறைபாடுகள் சிஎப்எல் பல்புகளில் இல்லை. இவற்றின் உட்புறத்தில் பாஸ்பர் என்ற ரசாயனம் பூசப்பட்டுள்ளது. பல்புக்குள் ஒரு வாயு நிரப்பப்பட்டுள்ளது. மின்சாரம் பாயும்போது வாயுவில் நடக்கும் ரசாயன செயல்பாடு, பாஸ்பரை ஒளிர வைத்து வெளிச்சம் வருகிறது. சிஎப்எல் பல்புகளை ஒளிரவைக்க அதிக மின்சாரம் தேவையில்லை; இவை வெளியிடும் வெப்பம் மிகமிகக் குறைவு... ஸோ, சிஎப்எல் பல்புகள்தான் பெஸ்ட் !
--- தினமலர், ஜூன் 25 . 2010.

Sunday, November 28, 2010

கடம் !

கடம் என்பது மண், நீரால் பிசையப்பட்டு, நெருப்பால் சுடப்பட்டு, கடமாகி, அதன் உள்ளே காற்று, வெற்றிடமான ஆகாயம் என்று பஞ்சபூதங்களூம் அடங்கியதாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் கடல் கடந்து, விண்ணில் பறந்து, சூரியன் உதிக்கும் நாடுகளிலெல்லாம், நம் மண்ணின் பெருமையை, காற்றைவிட கடிதாகக் கொண்டு சேர்க்கிறது.
--- விக்கு விநாயகராம், தினகரன் . 26. 06. 2010.

Saturday, November 27, 2010

பகைகள்.

6 வகை பகைகள்.
* பகைகள் : காமம், குரோதம், கோபம், மோசம், மதம், மாச்சர்யம்.
* தீட்சை : கட்சுதீட்சை, ஸ்பரிச தீட்சை, வாசகதீட்சை, மானசதீட்சை, சாத்திரதீட்சை, யோகதீட்சை.
* சாஸ்திரங்கள் : மந்திரம், வியாகரணம், நிருத்தம், நிகண்டு, சந்தோபிசிதம், சோதிடம்.
--- தினமலர், ஜூன் 24 . 2010.

Friday, November 26, 2010

தொலைத்தது போதும் !

மானிடனே !
உன்னுடைய
கணக்குப் போடும் திறமையை
கால்குலேட்டரிடம் தொலைத்தாய்...
நினைவாற்றலை
கம்யூட்டரிடம் தொலைத்தாய்...
உழைப்பாற்றலை
எந்திரங்களீடம் தொலைத்தாய்...
வெப்பம் தாங்கும் சக்தியை
குளிர்சாதனக் கருவியிடம் தொலைத்தாய்...
உன் ஆரோக்கியத்தை
ரசாயன உணவுகளிடம் அடகு வைத்தாய்...
எல்லா சக்திகளையும்
இயந்திரங்களிடம் இழந்துவிட்டு
சக்கையாய் நிற்கிறாய்...
இழந்ததெல்லாம் போதாதென்று
மணல்திருடி, காடுகளை அழித்து
நீராதாரங்களை ஆக்ரமித்து
விளைநிலங்களை
' விலை ' நிலங்களாக்கி
பூமியையும் பொசுக்குகிறாய்...
உன் உயிரயும் தொலைக்க
உனக்கென்ன அவ்வளவு ஆசை ?
-- வேலூர் காந்திமதி கிருஷ்ணன், தினமலர் . ஏப்ரல் . 3 2010.

Thursday, November 25, 2010

7 வகை குணங்கள் !

* தேவர், மனிதர், மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம், ஆகியவை ஏழு தோற்றங்கள் ஆகும்.
* அதலம், தலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் ஆகியவை ஏழு கீழ் உலகங்கள்.
* பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோலோகம், காலோகம், சத்யலோகம் ஆகியவை ஏழு மேலுலகங்கள்.
* வசிட்டர், விசுவாமித்திரர், அத்திரி, ஆங்கிரஸ், மரீசி, கவுதமர், மவுதகல்யர் ஆகியோர் சப்தரிஷிகள் என்று போற்ற்ப்படுகின்றனர்.
* அறியாமை, பொய், அயர்வு, மோகம், பைசாசம், சூன்யம், மாச்சர்யம், பயம் ஆகிய ஏழும் மாயையின் குணங்களாகும்.
--- தினமலர், ஜூன் 24 . 2010.

Wednesday, November 24, 2010

ஆதிவாசிகள் !

பிஹலி, சக்மா, டங்கி, தொடியா, துந்தாரி, கடிகாலி, கசாரியா, கோஷ்ரி, ஹல்பி, கோட்டா, ஹின்பி, லம்பானி, லாரியா, மாவிச்சி, மன்வாரி, சர்கோடி, தாகூகுரு, வர்லி, ஹாரோ, மரிங், மம்பா, சுலாங், தோடா, பூச்சோரி, சேமா, ஷெர்பா, கொண்டி, ஹதார், அசூரி, நிகோபாரிசி, வாஞ்சோ, நிமாரி.... இதெல்லாம் என்னவென்று பார்க்கிறீர்களா ?
இவை அனைத்துமே இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆதிவாசிகள் பேசும் மொழிகள். இதன் பெயர்களைக்கூட நாம் கேள்விப்பட்டது இல்லை. இந்த மொழிகளைப்போல இன்னும் 100 ஆதிவாசிகளின் மொழிகள் உள்ளன. அதில் பெரும்பான்மை இன்று அழித்தொழிக்கப்பட்டு விட்டது. காட்டில் இருந்து ஆதிவாசி துரத்தப்படும் போது முதலில் அழிக்கப்படுவது அவனது மொழியே. அதை காலனிய அதிகாரிகள் மிகக் கவனமாகச் செயல்பட்டு அழித்து ஒழித்தனர்.
--- எஸ். ராமகிருஷ்ணன் . ஆனந்தவிகடன், 23. 06. 2010.

Tuesday, November 23, 2010

இரு நதிகள் !

அந்த இரு நதிகள் !
அந்த நாட்டில் இரண்டு கடல்கள் இருக்கின்றன. வடக்கில் அமைந்திருக்கும் கடலில் ஜோர்டான் நதி கலக்கிறது. கடலாக இருந்தாலும் நல்ல தண்ணீரால் நிரம்பியிருக்கிறது அந்த கடல். தெளிந்த தண்ணீருக்குள் விளையாடிக்கொண்டு இருக்கும் மீன்கள், கடலைச் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் பசுமை, சுற்றிலும் மான், முயல்போன்ற மிருகங்களோடு, மனிதர்களும் சின்ன சின்ன குடில்கள் அமைத்து அங்கு தங்கி இருக்கிறார்கள். சூரியங்கூட அங்கு சுள்ளெனச் சுட்டெரிக்காமல் மென்மையாக மிளிர்கிறது. அந்தக் கடலில் கலக்கும் அதே ஜோர்டான் நதி இன்னொரு கிளை பிரிந்து தென்பகுதியில் இன்னொரு கடலில் கலக்கிறது.
இந்தக் கடலில் மீன்கள் இல்லை. முகர்ந்து பார்த்தாலே தண்ணீர் காந்துகிறது. ஒரு துளி பசுமை இல்லை. மிருகங்கள் இல்லை. ஒரு செல் உயிரிகூட அங்கு ஜீவிப்பதற்கான சூழல் இல்லை. மயானச் சூழல். முந்தையக் கடலில் கலக்கும் அதே நல்ல தண்ணீரைத்தான் இந்தக் கடலிலும் கலக்கிறது ஜோர்டான் நதி. ஆனாலும், ஏன் இந்த வித்தியாசம் ?
காரணம், முதல் கடல் தனக்குள் வந்து விழும் ஒவ்வொரு துளி நீருக்கு இணையாக மறு திசையில் நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது. உள்ளே விழுவதற்கு நிகராக நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அந்தக் கடலின் பெயர் கலீலி. அதே அந்த இரண்டாவது கடல் தனக்குள் விழும் நீரை அப்படியே சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஒரு துளிகூடத் தப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் மயான மிதவையாகக் காட்சி அளிக்கும் அந்தக் கடலின் பெயர் டெட் ஸீ... சாக்கடல் !
பாலஸ்தீனத்தில் இருக்கும் அந்த இரு வகைக் கடல் போல மனிதர்களிலும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். நீங்கள் அதில் எந்த வகை என்பதை உங்கள் டீன் ஏஜிலேயே முடிவு செய்துகொள்ளுங்கள் !
--- கி. கார்த்திகேயன் , ஆனந்தவிகடன், 23. 06. 2010.

Monday, November 22, 2010

சூப்பர் காண்டம் .

' கெடுக்க முயன்றால் கடித்து விடும் '
இனி, கற்பை பாதுகாக்க சூப்பர் காண்டம் வந்தாச்சு.
தென் ஆப்பிரிக்க பெண் டாக்டர் சானட் எலர்ஸ், உலகிலேயே முதல் முறையாக, பெண்களை பாலியல் வல்லுறவில் இருந்து தடுக்கக்கூடிய காண்டம் தயாரித்து சாதனை படைத்துள்ளார். அவர், ' ரேப் - ஆக்ஸ் ' என்று அதற்கு பெயரிட்டுள்ளார். அணியும் பெண்களுக்கு வேண்டுமானால் அது சாதாரணமான லேடக்ஸ் ரப்பராக இருக்கலாம். அணிந்திருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்ய ஆண் முயன்றால், அது வெறும் ரப்பரல்ல... ரம்பம் என்பதை காட்டி விடும். ஆம். கூரான பற்களை கொண்ட காண்டம். ஆணுறுப்பை கடித்து விடும்.
வல்லுறவு கொள்ள முயற்சிக்கும் ஆண்...அடுத்த நொடியே அய்யோ... அம்மா.. என்று அலறியடித்து ஓட வேண்டியத்துதான். அதுவும், ஒருமுறை கடித்ததும் ஆணுறுப்பை காண்டத்தின் பற்கள் விடவே விடாது. குற்றத்தில் இறங்கிய ஆண் எவ்வளவு முயன்றாலும் அதை பிரித்தெடுக்க முடியாது. முயன்றால் காண்டம் மேலும் இறுக்கி வலியை அதிகரிக்கும். தப்பிக்க டாக்டரின் உதவியை நாடியே ஆக வேண்டியிருக்கும்.
இந்த நிலைமையில் ஒருவர் சிகிச்சைக்கு வந்தாலே, அவர் ஒரு பெண்ணிடம் பலாத்காரத்தில் இறங்கியதை டாக்டர் கண்டுபிடித்து போலீசுக்கு புகார் செய்யலாம். உடனடி கைது தான். இதனால், பலாத்கார குற்றங்கள் பெருமளவில் குறைந்து விடும். இதை சோதித்து பார்ப்பதற்காக உலக கோப்பை கால்பந்து நடக்கும் தென் ஆப்பிரிக்காவில் 30,000 காண்டம்களை டாக்டர் சானட் விநியோகிக்க உள்ளார். ' ரேப் - ஆக்ஸ் ' ரூ. 100க்கு கிடைக்கும்.
இதுபற்றி சானட் எலர்ஸ் கூறுகையில், " 40 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ ஆராய்ச்சி மாணவியாக இருந்தேன். அப்போது, பலாத்காரத்தில் சிக்கிய ஒரு இளம்பெண் என்னிடம் வந்தார். விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர், ' பெண்ணுறுப்பில் பற்கள் இருந்திருந்தால் இந்த கதி ஏற்பட்டிருக்காது ' என்று குறிப்பிட்டார். அவஸ்தையால் வந்த அந்த வார்த்தைகள் தான் இந்த காண்டம் உருவாக காரணம் " என்றார்.
--- தினகரன், 22 ஜூன் 2010.

Sunday, November 21, 2010

மனிதமூளை !

* ஆண் மூளைக்கும் பெண் மூளைக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன.
* ஆண் மூளைதான் பெரியது.
* ஒரே நேரத்தில் பல செயல்களில் கவனம் செலுத்த வல்லவர்கள் பெண்கள். ஆண்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே செயலில்தான் கவனம் செலுத்துவார்கள்.
* உடல், மன வளர்ச்சிகள் ஆண், பெண்ணுக்கு வெவ்வேறூ பருவங்களில் நிகழும்.
-- அ. ஐஸ்வர்யா, ஆனந்தவிகடன் , 16.. 06. 2010.

Saturday, November 20, 2010

கப்பல் !

டைட்டானிக் கப்பல் !
டைட்டானிக் என்கிற 11 மாடி உலக சொகுசுக் கப்பல் ஏப்ரல் 14, 1912 - ல் ஐஸ் பாறை மீது மோதி மூழ்கியது. 1,500 - க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள். இன்று டைட்டானிக், அட்லான்டிக் கடலின் அடியில், 13,00 அடி ஆழத்தில் கிடக்கிறது. சுமார் நான்கு கி. மீ. ஆழம் இது. என்ன ஆழம் தெரியுமா ? ஈஃபில் டவர் உயரம் 984 அடி. அதாவது மூழ்கி இருக்கும் டைட்டானிக் அருகே 13 ஈஃபில் டவர்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் கடல் மட்டம் வரும். இன்று டைட்டானிக் உலக மகா ஆழமான மாபெரும் கல்லறை !
--- ஹாய் மதன் ,ஆனந்தவிகடன் , 23. 06. 2010.

Friday, November 19, 2010

நடராஜர்.

* தரிசிக்க முக்தி தரும் தலம், சிதம்பரம். நடராஜப் பெருமான் இங்கு தாழ்சடையுடன் விளங்குகிறார்.
* மூலவரே உற்சவராய் வலம் வரும் கோயில் அநேகமாக இது மட்டுமே.
* பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத்தலமாக விளங்குகிறது.
* சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்ற சிறப்புடையது.
* ஆன்மிக உலகில் ' கோயில் ' என்னும் பொதுச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறதென்றால், அது சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்தான்.
* சேக்கிழார் பெருமான் இயற்றிய சிவனடியார்களின் சரிதங்கள் அடங்கிய ' பெரிய புராணம் ' நூல் இங்குதான் அரங்கேற்றப் பட்டது.
* அருவ ( ரகசியம் ) உருவ ( நடராஜர் ) அருவுருவ ( மூலநாதர் லிங்க வடிவம் ) என மூவகை வழிபாடுகளைக் கொண்ட திருத்தலம்.
* தில்லை -- ஊர்ப்பெயர் , பொன்னம்பலம் -- கோயில் பெயர்.
* இத்தலத்தின் நான்கு கோபுர வாயில்கலிலும் சைவ சமயகுரவர்கள் நான்கு பேரும் நுழைந்து தரிசனம் செய்திருக்கிறார்கள்.
* மும்மூர்த்திகளையும் இங்கே ஒரு சேர வணங்கலாம்.
* இங்குள்ள பொற்சபை, சிலப்பதிகாரம் விளக்கும் நாட்டிய மேடை அமைப்பைக் கொண்டது.
* மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இறைவனே எழுதி, படி எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
* அனைத்து தெய்வங்களின் சக்தியும் தினந்தோறும் நடராஜப்பெருமானிடம் ஒடுங்கி, பின்பு அந்த தெய்வங்களிடமே செல்லும் தன்மை மிக்கது இத்தலம்.
--- தினகரன் , 19. 06. 2010.

ரயில் எண்கள் மாற்றம் !

டிசம்பர் 20 முதல் ரயில் எண்கள் 5 இலக்கமாக மாற்றம் .
ரயில்களுக்கு இப்போது 4 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன . இதன்மூலம் 9 ஆயிரத்து 999 ரயில்களுக்கு மட்டுமே எண்கள் வழங்க முடியும் . ஆனால், நாடு முழுவதும் பயணிகள் வசதிக்காக தினமும் சராசரியாக 11 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன . எனவே, ரயில்களின் எண்களை 5 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது .
இதன்படி, எக்ஸ்பிரஸ் ரயில்களின் இப்போதைய எண் முன்பு ' 1 ' சேர்க்கப்படுகிறது . சிறப்பு ரயில்களுக்கு ' 0 ', வழக்கமான பாசஞ்சர் ரயில்களுக்கு ' 5 ', மெயின்லைன் ரயில்களுக்கு ' 6 ', டீசல் இஞ்சின் ரயில்களுக்கு ' 7 ' எண்கள் சேர்க்கப்படும் . ' 3 ' என்ற எண்ணுடன் கோல்கத்தா புறநகர் ரயில்களுக்கும், ' 9 ' என்ற எண்ணுடன் மும்பை புறநகர் ரயில்களுக்கும், ' 9 ' என்ற எண்ணுடன் சென்னை உட்பட மற்ற நகரங்களின் புறநகர் ரயில்களுக்கும் எண்கள் தொடங்கும் . இந்த மாற்றம் டிசம்பர் 20 ம்தேதி அமுலுக்கு வரும் .
--- தினமலர் . 19 . 11 . 10 .

Thursday, November 18, 2010

கணக்கு விளையாட்டு !

என் பெயர் ராணி... என் வயது 9...
எனக்கும் என் தம்பி ராஜாவுக்கும் 2 வயது வித்தியாசம்...
என் வயதையும் என் தம்பி வயதையும் கூட்டி 2 ஆல் பெருக்கினால் வரும் விடைதான் எங்கள் அம்மா கீதாவின் வயது...
அம்மாவுக்கும் அப்பா மோகனுக்கும் 3 வயது வித்தியாசம்..
அப்பா வயதையும் பாட்டி மீனாட்சியின் வயதையும் கூட்டினால் 100 வரும்...
அம்மா வயதையும் தாத்தா சுந்தரத்தின் வயதையும் கூட்டினால் 100 வரும்...
என் தம்பி, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியோரின் வயதைக் கண்டுபிடிச்சு சொல்லுங்கள், பார்க்கலாம் !
விடை :
ராஜா வயது 7; அம்மா கீதாவின் வயது 32; அப்பா மோகனின் வயது 35; பாட்டி மீனாட்சியின் வயது 65; தாத்தா சுந்தரத்தின் வயது 68.
--- தினமலர். ஜூன் 18 , 2010.

Wednesday, November 17, 2010

விளையாட்டு !

அர்த்தமுள்ள விளையாட்டு !
ஆங்கில எழுத்தான ' பி ' என்னும் எழுத்தில் ஆரம்பிக்கும் 10 வார்த்தைகளைச் சொல்லுங்கள் என்றான் பள்ளி மாணவன் ஒருவன். என்னால் சொல்லமுடியவில்லை. பிறகு, அவன் ' பி ' எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளை கடகடவென சொல்ல ஆரம்பித்தான்.
அவன் சொன்னான் :
" Betty Beaker bought a bit of butter. That bit of butter was bitter. To make that bit of butter better. Betty bought a bit of better butter "
அவன் கூறியதற்கு தமிழ் அர்த்தம் ' பெட்டி பீக்கர் என்பவன் ஒரு துண்டு வெண்ணை வாங்கினான். அது கசந்தது. அதை நல்ல வெண்ணையாய் மாற்ற அவன் கொஞ்சம் நல்ல வெண்ணை வாங்கினான்.' என்பதாகும்.
அந்த விளையாட்டு இன்றும் என் மனதில் நிலைத்திருக்கிறது.
--- சி. சபரீஷ், உறையூர். தினமலர். ஜூன் 18 , 2010.

Tuesday, November 16, 2010

சாணம் .

சாணம் -- வரப்பிரசாதம். சென்ற நூற்றாண்டுகளில் இல்லங்களைத் தூய்மை செய்யப் பயன்படுத்தப்பட்ட இணையில்லாத கிருமி நாசினி. சாணத்தால் மெழுகப்பட்ட இடத்தில் வைரஸ் தொந்தரவு வரவே வராது. எனவேதான் வீடுகளின் தெருவாசல் மற்றும் பின்வாசலில் சாணி தெளித்து வந்தார்கள்.
' சாணி ' தெளிக்க, சாணம் சேகரிப்பது எப்படி ? என்ற சந்தேகத்துக்கு சாஸ்திரங்களில் விடை இருக்கிறது. பசு சாணம் போடும்போது அது பூமியில் விழுவதற்கு முன்பாக அரசிலை அல்லது ஏதாவது ஒரு இலையில் பிடிக்க வேண்டும். அதனைக் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
பூமியில் விழுந்த சாணத்தைச் சேகரிக்க நேரும் பட்சத்தில் சாணத்தின் மேற்புறம் கீழ்புறம் மற்றும் புறப்பகுதிகளில் உள்ள சாணத்தை நீக்கி மத்தியில் உள்ள சாணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி.
--- தினமலர், ஏப்ரல் 11 , 2010.

Monday, November 15, 2010

மலைக்கோட்டை.

மங்களாவரம் மலையில் ஆடுமேய்த்த ஒரு சிறுவன் ஒரு இடத்தில் அதிசயமான தெய்வீக விக்ரகத்தைக் கண்டு காகாதிய மன்னரிடம் சொல்ல, அதை புனித இடமாகக் கருதிய மன்னர், இங்கு கோட்டை கட்டினார். இதனால் இந்த இடத்திற்கு ' மேய்ப்பனின் மலை ' என்ற அர்த்தம் கொண்ட ' கொள்ள காண்டா ' என்ற தெலுங்கு பெயர் வந்தது. பின்னர், கோல்கண்டா என்று மருவியுள்ளது.
கோல்கண்டா, ஆரம்பத்தில் இந்து மன்னர்களின் ஆட்சியில் தக்காண நாட்டின் தலைமையிடமாக இருந்துவந்தது. காகாதிய மன்னர்கள் ஆட்சியில் களிமண் கோட்டையாக இருந்த இந்த மலைக்கோட்டை, பாமினி சுல்தான்கள் ஆட்சியில் கல் மதில்களுடன் சில மாற்றங்களைப் பெற்றது. பிறகு, குதூப் சாஹி வம்ச ஆட்சியில் 7 கி. மீ., தூர மதில்சுவர் மற்றும் கிரானைட் வேலைப்பாடுகளுடன் பிரமாண்ட வடிவம் பெற்றது. அதன்பின் கோல்கண்டாவைக் கைப்பற்றிய முகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப், கோட்டையின் பல பகுதிகளை இடித்து புதுப்பித்தார். இப்படி, இந்தியப் பாரம்பரிய கட்டடக்கலையும் பாரசீகக் கலைநுட்பங்களும் கலந்து மிளிர்கிறது இந்தக் கோட்டை !
காகாதிய வம்ச மன்னர் கட்டிய காளிகோயில், கோட்டையின் ஆரம்பகால வரலாற்றுக்கு சாட்சி கூறுகிறது. அனுமதி பெறாமல் பத்ராசலம் கோயில் கட்டிய பக்த ராமதாஸரை சுல்தான் தானா ஷா சித்ரவதை செய்த சிறை, இன்னொரு மவுன சாட்சி.
இந்த கோட்டையின் தனிச்சிறப்பு, ' எதிரொலி ' அறைகள். விதவிதமான கூரை அமைப்புகளால் ஒலியைத் திசைதிருப்பி இந்த அதிசய அறைகளை அமைத்துள்ளனர். ' கைதட்டல் அறை ' என்ற அறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கை தட்டினால், 24 முறை எதிரொலி கேட்கிறது !
தண்ணீரை கோட்டை பகுதிகளுக்குள் இடமாற்றூவதற்கான நுட்பமான அமைப்புகள், இன்னொரு பிரமிப்பு. பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரம் இருந்த இடம், மார்க்கபோலோ புகழ்ந்து எழுதிய இடம் என்று நீண்டுகொண்டே போகிறது கோல்கொண்டா மலைக்கோட்டையின் சரித்திரம் !
--- தினமலர் , ஏப்ரல் 11 , 2010.

Sunday, November 14, 2010

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் .

* தஞ்சன் என்னும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தபோது, தன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டுமென அசுரன் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது .
* தஞ்சாவூர் என்ற சொல்லுக்கு குளிர்ந்த நிலப்பரப்பினைக் கொண்ட ஊர் என்று பொருள் .
* தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சாவூருக்கு பெருமை சேர்ப்பது ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் என்ற பெருவுடையார் கோயில் .
* ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டு 17-ம் நூற்றாண்டுக்குப் பின் பிரகதீஸ்வரம் என பெயர் மாற்றமடைந்தது இந்தக் கோயில் .
* மூலவரான பிரகதீஸ்வரர் லிங்க வடிவினர் . உயரம் 13 அடி. வட்ட ஆவுடை 54 அடி சுற்றளவு. மத்தியப்பிரதேச நர்மதை ஆற்றங்கரையில் உள்ள மலையிலிருந்து எடுத்து வந்த கல்லால் அந்த பிரமாண்ட லிங்கம் செய்யப்பட்டது.
* இங்குள்ள லிங்கம் போன்றே முன்புறம் உள்ள நந்தியும் பிரமாண்டம்தான். உயரம் 12 அடி, நீளம் 9 அடி, அகலம் 6 அடி. ஒரே கல்லால் ஆனது.
* சிவலிங்கம் மூன்று அமைப்புகளைக் கொண்டது. அடியில் நான்கு பட்டை தூண் வடிவை பிரம்மனாகவும், இடையே எட்டுப் பட்டை வடிவை விஷ்னுவாகவும், வட்டத் தூணை ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி, பரமசிவம் என்றும் அழைப்பர்.
* கருவூரார் என்ற சித்தரின் அறிவுரைப்படி 10ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. கோபுரம் தரையிலிருந்து 216 அடி உயரம். நான்கு பட்டை வடிவில் கூம்பிச்செல்லும் விமானம், 26க்கு 26 அடி சதுர தளத்தில் நிற்கிறது. இதன் மேல் உள்ள அரைப்பந்து வடிவச் சிகரத்தின் உச்சியில் 12 அடி உயரமுடைய தங்கமுலாம் பூசப் பெற்ற செம்புக் கவசம் உள்ளது.
* கோபுர விமானம் வாய் அகலமான கூம்பை தலைகீழாகக் கவிழ்த்தது போன்ற அமைப்புடையது. இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பதும் தவறான செய்தியாகும்.
* இக்கோயிலிலிருந்து ராஜராஜன், அவனது பட்டத்தரசி லோகமாதேவி ஆகியோரது செப்புச் சிலைகள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கௌதம் சாராபாய் கலைக்கூடத்தில் உள்ளன.
* பெரிய கோயிலின் முதல் கோபுர வாயிலுக்கு கேரளாந்தன் வாயில், 2ம் வாயிலுக்கு ராஜராஜன் வாயில், தெற்கு கோபுர வாயிலுக்கு விக்ரம் சோழன் வாயில் என்றும் பெயர்.
* கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான இரண்டு துவாரபாலகர்கள் சிற்பங்களாக பிரமாண்டம் காட்டுகிறார்கள்.
* இக்கோயில் யுனஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
--- தினகரன் , 12. 06. 2010.

Saturday, November 13, 2010

வலை பாயுதே !

kanapraba @ twitter .com :
* இரண்டு செய்திகள் . செய்தி ஒன்று : ' நான் விஜயா மருத்துவமனையில் இருந்தபோது, எஸ். பி.பி, கங்கை அமரன் தவிர யாரும் வரவில்லை ' -- மலேசியா வாசுதேவன் . செய்தி இரண்டு : கடும் சுகவீனத்திற்கு மத்தியிலும் ' கலைஞர் 87 ' நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தார் பாரதிராஜா !
RamaSubramaanian @ twitter .com:
* அடங்க மறு... அத்துமீறு... பின்பு, தி.மு.க -- வுடன் கூட்டணி சேரு -- திருமா !
sanaKannan @ teitter .com :
* இனிமேல் கலைஞர் எந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தாலும், அதனை மூன்று மாதங்களுக்குப் பிறகே சென்று பார்க்க வேண்டும் !
---- ஆனந்த விகடன் , 29 .9 . 10 .
Kaattuvaasi @ twitter . com :
* சண்டைபோட்டுக்கொண்டே வருபவர்களை, சமாதானமாக அனுப்புவதும் ..... சமாதானமாக வரும் நண்பர்களை, சண்டை போடச் செய்வதும்... டாஸ்மார்க்கின் திருவிளையாட்டு !
Ilango Krishnan @ facebook . com :
* சாந்தி நிகேதனில் ஒரு சிறுமி, காந்தியிடம் ஆட்டோகிராஃப் கேட்க, ' நீ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உயிரைக் கொடுக்கவும் தயங்காதே . அது தவறான வாக்குறுதி
என்றாலும் ! ' என்று எழுதிக் கையெழுத்து இட்டாராம் . தாகூர் அந்தத் தாளின் பின்புறம், ' நீ கொடுத்த வாக்குறுதி தவறு எனில் திரும்பப் பெறத் தயங்காதே ' என்று எழுதிக்
கையெழுத்து இட்டாராம் . நான் என் நண்பனிடம் சொன்னேன், ' நண்பா ! காந்தி ஒரு நல்ல கவிஞர் ... தாகூர் ஒரு நல்ல அரசியல்வாதி ! '
Chennaitalks @ twitter. com :
* சமீபத்திய அதிர்ச்சி : வேலூர் பொற்கோவில் குளத்தில் நூற்றுக்கணக்கான கிரெடிட், டெபிட் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ் அட்டைகளைப் பார்த்தது !
swamiomkar @ twitter. com :
* கோழி கஷ்டப்பட்டு முட்டை இடுகிறது . அரசியல்வாதிகள் நாங்கள் முட்டை போட்டோம் என அறிக்கை விடுகிறார்கள் # யாரை நம்ப !
--- ஆனந்த விகடன் , 6 .10 . 10 .

தற்கொலை !

உளவியல் நிபுணர்கள் வெளியிட்டுள்ள பல செய்திகள் கவனத்துக்குரியவை , மனிதனுக்கு வாழ்வதற்கான ஆசை இருப்பதைப் போலவே சாவதற்கான ஆசையும் உள்ளேயே இருக்கிறதாம் . ' வாழ்நாளில் தற்கொலை செய்துகொண்டு விடுவோமே என்ற நினைப்பு வராதவர்களே உலகில் இல்லை ' என்கிறார்கள். ஒரு வட்டம் என்பது வரையப்படும்போது எங்கே தொடங்கியதோ அங்கே வந்து முடிவடைவதைப்போல, வாழும் ஆசையில் தொடங்கி அது நின்றதும் சாகும் விருப்பம் உருவாகி வாழ்க்கை வட்டம் நிறைவு செய்யப்படுகிறது என்கிறார்கள்.
ஒரு பள்ளியில், ஒரு குழுவில், ஒரு கூட்டத்தில், ஒருவரைப் பிடித்து ஆட்டுகிற தற்கொலை உணர்வு அந்தப் பள்ளி, குழு, கூட்டம், குடும்பம் முழுவதையும் பேயாக ஆட்டுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். சுருங்கச் சொன்னால் மனதிலிருந்து மனதுக்குப் பாயும் தொற்று நோய் இந்தத் தற்கொலை உணர்வு. இந்த நோய்க்கான எதிர்ப்புசக்தி, வாழும் ஆசை, வாழ்தலின் மீது மரியாதை உணர்வு, தன் மீது தானே வைத்திருக்கும் மதிப்பு, இது வளர வேண்டும் .
--- சுகி. சிவம், தினகரன் . 12. 06. 2010.

Friday, November 12, 2010

'முத்து' கோட்டை !

' இந்தியக் கோட்டைகளில் தனிப்பிரகாசத்துடன் ஜொலிக்கும் மகத்தான முத்து ' என்று முகலாயப் பேரரசை ஸ்தாபித்த பாபரை வியக்கவைத்த அழகு பிரமிப்பு எது தெரியுமா ? மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டை ! இது, நகரில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் மலைமீது 3 சதுர கி. மீ., பரப்பில் 10 மீட்டர் உயர சுவர்களுடன் கம்பீரமாகக் காட்சிதரும் அழகே அழகு !
இந்தியக் கோட்டைகளில் அதிக பாதுகாப்பு கொண்ட பிரம்மாண்டமான இதன் அருகில்தான் 1857ன் முதல் சுதந்திரப் புரட்சியின்போது ஜான்சிராணி லட்சுமிபாய்க்கும் பிரிடிஷ் படைகளுக்கும் முக்கியப் போர் நடந்தது .
கி. பி. 8வது நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சிசெய்துவந்த சூரஜ்சிங்கை ஒரு பயங்கர நோய் தாக்கியது . கோபாசல் மலையில் தங்கியிருந்த குவாலிகா என்ற முனிவர் தனது தெய்வீக சக்தியாலும் ஒரு குளத்தின் புனித நீராலும் அவரைக் காப்பாற்றினார் . ' உன் பெயரை சூரஜ் பால் என்று மாற்று, உன் தலைமுறை பால் என்ற பெயரைப் பயன்படுத்தும் வரை இங்கு உங்கள் ஆட்சி நீடிக்கும் ' என்று அருளாசி வழங்கினார் குவாலிகா முனிவர் .
அவருக்கு நன்றிசெலுத்தும் வகையில் அவரது பெயரிலேயே குவாலியர் நகரையும், ஒரு கோட்டை மற்றும் சில கோயில்களையும் உருவாக்கினார் சூரஜ் பால். இவரது தலைமுறையின் 84வது மன்னர், பால் என்ற பெயருக்குப் பதில் வேறுபெயர் சூட்டியதால் தோமார் வம்ச அரசரிடம் ஆட்சியைப் பறிகொடுத்தாராம் . பின்னர் டில்லி லோடிகள், முகலாயர்கள், மராத்தியர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைக்கு மாறிய இந்தக் கோட்டை, இறுதியாக சிந்தியா வம்சத்தினரிடம் வந்தது.
தோமார் வம்ச ராஜா மான்சிங், 15வது நூற்றாண்டில் குவாலியர் கோட்டையைப் புனரமைத்தார் . மான்சிங் அரண்மனை, மான்சிங் தனது ராணி ம்ருக்னைனிக்காகக் கட்டிய குஜிரி மஹால், கரண் அரண்மனை ஜஹாங்கீர் மஹால் உள்ளிட்ட 6 அரண்மனைகள், சிற்பநுணுக்கங்கள் நிறைந்த 2 விஷ்ணுகோயில்கள், மாமியார் கோயில், மருமகள் கோயில் என்று வித்தியாசமான பெயர்கள் கொண்ட 2 கோயில்கள், ஒரு ஜைனக் கோயில், ராணிகள் கூட்டமாக சதி தீயில் பாய்ந்து உயிர் விட்ட ஜவ்ஹர் குன்ட்; சூரஜ் பாலின் நோயைக் குணப்படுத்திய சூரஜ் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் என இந்தக் கோட்டை முழுவதுமே சரித்திர சாட்சிக்கூடமாக ஒளிர்கிறது !
--- தினமலர் , ஜூன் 13 . 2010 .

Thursday, November 11, 2010

" கற்பனையை மிஞ்சிய அனுபவம் ?"

கற்பனையை மிஞ்சிய அனுபவம் ஒன்று உண்டு !
முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திரப் பிரசாத், பீகார் மாகாணத்தில் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கச் சென்றபோது, ஒரு குடிசையில் ஏழைப் பெண் ஒருவர் வசிக்கிறார் . அவரைப் பார்த்து ஓட்டு கேட்கிறார் ராஜேந்திரப் பிரசாத் . அவருடைய மகள் உள்ளே இருப்பது அறிந்து, அவரைப் பார்த்து ஓட்டு கேட்கவும் விரும்புகிறார். காத்திருக்கச் சொல்கிற அந்தத் தாய் உள்ளே சென்ற ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, வெளியே வருகிறார் மகள் , இருவரையும் ஒருசேர சந்தித்துப் பேச வேண்டும் என்று நினைக்கிறார் ராஜேந்திரப் பிரசாத் . ஆனால், அது முடியவில்லை. சிந்தித்துப் பார்த்த அவருக்கு ஓர் உண்மை புரிகிறது . தாய்க்கும் மகளுக்கும் இருப்பது ஒரே புடவை
--- ஸ்ரீநிகே, சென்னை - 75. நானே கேள்வி... நானே பதில் ! ஆனந்தவிகடன் , 16. 06. 2010 .

Wednesday, November 10, 2010

ராகம் !

எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும் :
ஆகிர் பரவி................... அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும்
குணப்படுத்துகிறது .
பைரவி ............................ முட்டி மற்றும் முழங்கால் வலி .
சந்திரகௌன்ஸ் ........... பசியின்மை .
தர்பாரி கானடா .......... தலைவலி .
தீபக் ................................... அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .
குஜரிகோடி ..................... இருமல், சளி .
குணகளி .......................... மலச்சிக்கல், தலைவலி, மூலம் .
ஜோன்புரி ........................ வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .
ஜெய் ஜெய் வந்தி ... பேதி, தலைவலி, மூட்டுவலி .
( த்வஜாவந்தி )
மால்கௌன்ஸ் ............. குடல் வாயு .
பூர்விகல்யாணி ............ இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .
பூர்ய தனஸ்ரீ ................. இரத்தசோகை .
சோஹானி .................... தலைவலி.
வசந்த பஹார் .............குடற்கற்கள் .
யெமன் கல்யாணி ....... மூட்டுவலி.
---டாக்டர் பால சாண்டில்யன் , இலக்கியப்பீடம் , ஜூன் 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Tuesday, November 9, 2010

விவேகானந்தர் .

* விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத்தான்
அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார் . அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது , கேத்திரி மன்னர் தான் ' விவேகானந்தர் ' என்ற பெயரைச் சூட்டினார் !
*தாஜ்மாஹால் அவரது மனம் கவர்ந்த இடம் . அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் வேண்டும் என்று சொன்னார் .
*'' எழுமின்... விழுமின்...குறிக்கோளை அடையக் குன்றாமல் உழைமின் ' என்ற வார்த்தையை முதன் முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம் .
* ' பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப் பேராபத்து நிகழும் ' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன் சொன்னது அவர்தான் !
* விவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு . ' சென்னை இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான் அடிக்க வேண்டும் ' என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும் !
--- ப. திருமாவேலன் , ஆ. விகடன் . 31. 03. 2010.

Monday, November 8, 2010

கங்கைகொண்ட சோழபுரம் .

தஞ்சை பெரிய கோவில் போன்ற தோற்றத்திலேயே அமைந்திருப்பது கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவில் . தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் ( கி.பி . 1014 -- 1044 ) இந்த கோவில் கட்டப்பட்டது .
வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக , கங்கையிலிருந்து நீர் எடுத்து வந்து ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டதுதான் இந்த கோவில் . அதனாலேயே இந்த ஊர் ' கங்கைகொண்ட சோழபுரம் ' ஆயிற்று .
12 நிலைகளைக் கொண்ட இங்குள்ள கோவிலின் ராஜகோபுரம் 172 அடி உயரம் கொண்டது . இது தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தைவிட 12 அடி உயரம் மட்டுமே குறைவானது .இங்குள்ள சிவலிங்கம் 13 அடி உயரம் கொண்டது .
கோவிலின் நுழைவாயிலில் , கோவிலை கட்டிய ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது . தஞ்சை பெரிய கோவில் போலவே , இக்கோவிலுக்கு முன்புறமும் மிகப்பெரிய நந்தி ஒன்று உள்ளது . 12 அடி உயரம் கொண்ட இந்த நந்தி , பெரிய கோவிலைப் போலவே ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும் .
மூலவரான சிவபெருமான் தஞ்சை பெரிய கோவிலில் அழைக்கப்படுவது போலவே ' பிரகதீஸ்வரர் ' என்று அழைக்கப்படுகிறார் . எங்கும் இல்லாத சிறப்பாக இந்த கோவிலின் பிரகாரம் எப்போதும் குளிர்ச்சியான சூழ்நிலையில் காணப்படுகிறது . இந்த பிரகாரத்தின் ஓரிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சந்திரக் காந்தக்கல்தான் இதற்கு காரணம் என்கின்றார்கள் .
--- தினத்தந்தி , 16. 3. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு

Sunday, November 7, 2010

லூஸ் -- லஸ் !

மயிலாப்பூரில் உள்ள லஸ் என்ற இடத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் தெரியுமா ? சொன்னால் என்னை லூஸ் என்பீர்கள் .
வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா செல்லும் கடல் வழியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து , கி. பி. 1500 -ல் எட்டு போர்ச்சுகீசிய பாதிரியார்கள் இந்தியாவை நோக்கிக் கப்பலில் கிளம்பி , ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கோழிக்கோடு வந்து சேர்ந்தார்கள் . கரை இறங்கியதும் அவர்களில் மூன்று பேர் கொல்லப்படவே , பதறிய மீதி ஐந்து பேரும் கடல் வழியாகப் புறப்படுகிறார்கள் . பயணத்தின்போது புயலில் மாட்டி வழி தெரியாமல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டபோது , மேரி மாதாவைப் பிரார்த்தனை செய்கிறார்கள் .
அப்போது ஓர் இடத்தில் வெளிச்சம் தெரியவே , அதை நோக்கிக் கப்பலைச் செலுத்துகிறார்கள் . அந்த இடம் ஒரு கடற்கரை . .அந்தக் கரையில் இருந்து பார்த்தபோதும் வெளிச்சம் சிறிது தூரத்தில் தெரியவே , அதைத் தொடர்ந்து வருகிறார்கள் . ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் வெளிச்சம் மறைகிறது . அந்த இடத்தில் அந்த பாதிரிகள் மேரி மாதாவுக்கு ஒரு கோயிலைக் கட்டுகிறார்கள் . அவர்கள் இறங்கிய இடம் , மெரினா கடற்கரை . மாதாவுக்குக் கோயில் கட்டிய இடம் இன்றைய லஸ் .
1516 -ல் கட்டி முடித்த அந்த ஆலயத்தை ' நோஸா செஞோரா தெ லூஸ் ' என்று போர்ச்சுகீசிய மொழியில் அழைத்தார்கள் . லூஸ் என்றால் வெளிச்சம் . ' எங்களுக்கு வெளிச்சத்தை அளித்த மாதா ' என்று பொருள் . இன்றும் இந்த ஆலயத்தை மக்கள் காட்டுக் கோயில் என்றும் , பிரகாச மாதா ஆலயம் என்றும் அழைக்கிறார்கள் .
மயிலாப்பூர்வாசிகளுக்கு இந்த ஆலயத்தின் மகிமை தெரியுமா என்று தெரியவில்லை .
--- மனம் கொத்திப் பறவை ! என்ற தொடரில் , சாரு நிவேதிதா . ஆனந்தவிகடன் , 28. 07.2010.

Saturday, November 6, 2010

யார் நல்லவர் ?

* எவள் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி .
* எவனிடத்தில் சுகம் உண்டாகிறதோ அவனே மகன் .
* எவனிடத்தில் நம்பிக்கை இருக்குமோ அவனே நண்பன் .
* எவ்விடத்தில் வாழ்வு இருக்குமோ அதுவே தேசம் .
* எவன் குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ அவனே அரசன் .
* எந்தநேரம் இறைவனது திருநாமம் நினைக்கப்பட்டதோ அதுவே நம்முடைய நேரம்
* எது தர்மத்தில் செலவழித்ததோ அதுவே நம்முடையது .
--- கிருபானந்தவாரியார் . தினத்தந்தி , 16. 3. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு .

Friday, November 5, 2010

உலகத் தமிழ் மாநாடுகள் .

முதல் மாநாடு .
ஆண்டு ...............1966
தேதி ....................ஏப்ரல் 16 முதல் 23 வரை
நகரம் .................. கோலாலம்பூர்
நாடு .....................மலேசியா
தலைமை ...........வி.தி. சம்பந்தன் ( மலேசிய அமைச்சர் )
இரண்டாவது மாநாடு.
ஆண்டு ................1968
தேதி .................... ஜனவரி 3 முதல் 10 வரை
நகரம் ..................சென்னை
நாடு ....................இந்தியா
தலைமை ..........அண்ணாதுரை ( தமிழக முதல்வர் )
மூன்றாவது மாநாடு .
ஆண்டு ..............1970
தேதி ..................ஜூலை 15 முதல் 18 வரை
நகரம் ................பாரீஸ்
நாடு ..................பிரான்ஸ்
தலைமை ........பேரா .ஜான் பிலியோசா
நான்காவது மாநாடு .
ஆண்டு ..............1974
தேதி ...................ஜனவரி 3 முதல் 9 வரை
நகரம் .................யாழ்ப்பாணம்
நாடு ...................இலங்கை
தலைமை .........பேரா . எஸ். வித்தியானந்தன்
ஐந்தாவது மாநாடு .
ஆண்டு .............1981
தேதி ..................ஜனவரி 4 முதல் 10 வரை
நகரம் ................மதுரை
நாடு ..................இந்தியா
தலைமை .......எம். ஜி. ஆர் . ( தமிழக முதல்வர் )
ஆறாவது மாநாடு .
ஆண்டு ............1987
தேதி ................நவம்பர் 15 முதல் 19 வரை
நகரம் ..............கோலாலம்பூர்
நாடு ................மலேசியா
தலைமை ......டத்தோ ' ச. சாமிவேலு ( மலேசிய அமைச்சர் )
ஏழாவது மாநாடு.
ஆண்டு ..........1989
தேதி ..............டிசம்பர் 1 முதல் 8 வரை
நகரம் ............போர்ட்லூயி
நாடு ..............மொரீஷியஸ்
தலைமை ....ஆறுமுகம்பரசுராமன் ( மொரிஷியஸ் கல்வி அமைச்சர் )
எட்டாவது மாநாடு .
ஆண்டு .........1995
தேதி .............ஜனவரி 1 முதல் 5 வரை
நகரம் ...........தஞ்சாவூர்
நாடு ..............இந்தியா
தலைமை ....ஜெ. ஜெயலலிதா ( தமிழக முதல்வர் )
ஒன்பதாவது மாநாடு .
ஆண்டு ........1010
தேதி ............ஜூன் 23 முதல் 27 வரை
நகரம் ......... கோயம்புத்தூர்
நாடு ............இந்தியா
தலைமை ..மு. கருணாநிதி ( தமிழக முதல்வர் )
--- தினமலர் , 14. 4. 2010.

Thursday, November 4, 2010

பஞ்சாங்கம் .

பழைய காலத்தில் வாழ்ந்த ஜோதிட வல்லுனர்களின் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பஞ்சாங்கத்தை வாக்கிய பஞ்சாங்கம் என்பார்கள் .
சில ஜோதிடர்கள் வானவெளியை உற்று நோக்கி ஆய்ந்தறிந்து வாக்கிய பஞ்சாக்கத்தில் சில வேறுபாடுகள் இருப்பதை கண்டுகொண்டார்கள் . அவர்கள் தம் பார்வை கொண்டு கணித்த பஞ்சாங்கம் த்ருக்கணிதம் எனப்படும் பஞ்சாங்கமாகும் . த்ருக் என்றால் பார்வை . கணிதம் என்றால் கணிக்கப்பட்டது . இளையாத்தங்குடி பெரியவர் காலத்தில் பஞ்சாங்கம் தொடர்பாக பெரும் சர்ச்சை உருவாயிற்று .
--- தினமலர் . ஏப்ரல் 8 . 2010 .

Wednesday, November 3, 2010

கூடாதவை .

கூடாதவை என்று சொல்லப்படும் சில...
1 . தண்ணீரில் முகம் பார்க்கக் கூடாது .
2 . நெருப்பை வாயால் ஊதக்கூடாது .
3 . வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது .
4 . ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது .
5 . ஈரக்காலுடன் படுக்கக் கூடாது .
6 . தலையணையின் மீது உட்காரக் கூடாது .
7 . உணவு உண்டபின் குளிக்கக் கூடாது .
8 . பூமி அதிர நடக்கக் கூடாது .
-- கே. கஸ்தூரி கதிர்வேல் , காட்பாடி . தினமலர் , ஜூலை 24 . 2010.

Tuesday, November 2, 2010

கணக்குப் புலி !

நண்பர்களிடம் , " நான் ஒரு மேஜிக் கணக்கு சொல்வேன் . கடைசியில் வரும் விடையில் என்ன எண் இருக்கிறதோ , அந்த எண்ணுக்குரிய ஆங்கில எழுத்தில் தொடங்கும் விலங்கை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் .... அது என்ன விலங்கு என்று நான் சட்டென சொல்லிவிடுவேன் !" என்று ' பில்டெப் பேச்சு ' பேசுங்கள் .
பிறகு கீழ்க்கண்டபடி சொல்லுங்கள் ...
1 . எந்த எண்ணை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் .
2 . அந்த எண்ணை 2 -ஆல் பெருக்குங்கள் .
3 . வரும் விடையோடு 20 ஐ கூட்டுங்கள் .
4 . வரும் விடையை 2 -ஆல் வகுத்துக் கொள்ளுங்கள் .
5 . வரும் விடையில் இருந்து , நீங்கள் முதலில் நினைத்த எண்ணை கழித்துக் கொள்ளூங்கள் .
6 . வரும் விடையை 2 -ஆல் பெருக்குங்கள் .
7 . வரும் விடைக்கு உரிய ஆங்கில எழுத்தைக் கண்டுபிடியுங்கள் . அந்த எழுத்தில் துவங்கும் பயங்கரமான காட்டு விலங்கு ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் !
-- இப்படி சொல்லிவிட்டு , " என்ன நினைத்துக் கொண்டீர்களா ?" என்று கேளூங்கள் ! அவர்கள் தலையாட்டுவார்கள் !
உடனே , " நீங்கள் நினைத்தது டைகர்...புலி !" என்று கம்பீரமாகச் சொல்லுங்கள் .
" கரெக்ட் ! எப்படி கண்டுபிடிச்சே ? நீ கணக்குப் புலி ! " என்று நண்பர்கள் அசந்து பாராட்டுவார்கள் !
மேஜிக் சீக்ரெட் : எந்த எண்ணை வைத்து இந்தக் கணக்கை செய்தாலும் விடை 20 -தான் வரும் ! ஆங்கிலத்தில் 20 -வது எழுத்து ' T ' ( S எழுத்துக்குப் பிறகு வருவது ) . பயங்கரமான காட்டு விலங்கை நினைக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதால் எல்லோருமே டைகர் ( புலி ) என்றுதான் நினைப்பார்கள் !
--- தினமலர் , ஜூலை 23 , 2010.

Monday, November 1, 2010

பழைய கணக்கீடு முறை !

நீட்டலளவை : அங்குலம் , சாண் , முழம் , அடி .
12 பெருவிரல் ஒரு சாண் , 2 சாண் ஒரு முழம் , 3 முழம் ஒரு அடி .
கோல் , காதம் , பர்லாங் , மைல் .
முகத்தலளவை : திரவப் பொருள்களுக்கு -- கால் சேர் , அரை சேர் , சேர் .
நிறுத்தலளவை : தானியங்களை அளக்க -- சுண்டு , கால் படி , அரை படி , மரக்கால் , கலம் , மூட்டை .
தங்கம் போன்ற மதிப்பான பொருள்களுக்கு -- குன்றிமணி , மஞ்சாடி , பணவெடை , கழஞ்சு ,
வராகன் .
மற்ற பொருள்களுக்கு -- வீசை , தூலம் , மணங்கு , பாரம் . ,
--- தினமலர் , ஜூலை 23 , 2010.

Saturday, October 30, 2010

உடல் பருமனை குறைக்க ...

உலகம் முழுவதும் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது . இந்நிலையில் , குடமிளகாயில் உள்ள ஒரு பொருள் உடல் பருமனை குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
ஆராய்ச்சியாளர் ஜாங் ஒன் யுன் தலைமையிலான குழுவினர் , உடல் பருமனை குறைப்பதில் குடமிளகாயின் பங்கு குறித்து ஆய்வு செய்தனர் . ஒரு பிரிவு எலிகளுக்கு அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுடன் குடமிளகாய் கலந்த உணவைக் கொடுத்து வந்தனர் . மற்றொரு பிரிவுக்கு அதே கொழுப்புச் சத்து உணவை மட்டும் கொடுத்தனர் .
குறிப்பிட்ட நாட்கள் கழித்து எலிகளின் உடல் பருமனை சோதனையிட்டனர் . குடமிளகாய் கலந்த உணவு சாப்பிட்ட எலிகளின் எடை அதை சாப்பிடாத எலிகளைவிட 8 சதவிகிதம் வரை குறைந்திருந்தது . மேலும் , கொழுப்புச் சத்தின் அளவு கட்டுப்பட்டிருந்தது .
" குடமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள் , கொழுப்பை குறைக்கிறது . உடல் பருமனிலிருந்து விடுபட உதவுகிறது . பருமனை குறைக்க மருந்து தயாரிக்க இந்த ஆராய்ச்சி உதவும் " என ஜாங் தெரிவித்தர்ர் .
---- தினகரன் , ஜூலை 23 . 2010.

Friday, October 29, 2010

டாவின்சி .

இன்று உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்படுபவர் டாவின்சி . அவர் தனது வாழ்வின் வெற்றிப்பாதைக்கு SMART என்றொரு திட்டம் வகுத்திருந்தார் . அந்தத் திட்டம் இதுதான் :
S -- SPECIFIC........................ எது வேண்டும் என்று குறிப்பாக அறிந்து வைத்திருத்தல் .
M -- MEASURABLE................ அளவிடத் தக்கதாக இலக்குகளைக் கொள்ளுதல் .
A -- ACCOUNTABILITY............ இலக்குகளை எட்டுவதற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றல் .
R -- REASLISTIC / RELEVANT..இலக்குகளை யதார்த்தமானதாகவும் , பொருத்தமானதாகவும் அமைத்தல் .
T -- TIMELINE ......................... இலக்குகளை எட்டக் கால எல்லையை நிர்ணயித்துக் கொள்ளுதல் .
இவைதான் டாவின்சியின் வெற்றி ரகசியங்கள் .
--- நம்பிக்கை மின்னல்கள் , நூலில் மரபின்மைந்தன் ம . முத்தையா

Thursday, October 28, 2010

பலூன் !

லஸ்கோ என்ற பிரேசில் நாட்டு மதகுருதான் பலூனைக் கண்டுபிடித்தவர் .1709 - ம் ஆண்டுதான் முதன்முதலாக பலூன்கள் பறக்கவிடப்பட்டன . அதைக் கடவுளின் வருகைபோல வியப்போடு பார்த்ததாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன . பலூன் என்பது தமிழ் வார்த்தை இல்லை . அது பலூனீ என்ற இத்தாலியச் சொல்லில் இருந்து உருவானது . பெரும்பான்மை நாடுகளில் பலூன் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறது .
--- எஸ். ராமகிருஷ்ணன். ஆனந்தவிகடன் . 09. 06. 2010.

Wednesday, October 27, 2010

விமானங்கள் !

பெருமாள் கோயிலின் புகழ்பெற்ற விமானங்கள் !
திருவரங்கம் ............. ..........-- பிரணவாஹ விமானம் .
திருவல்லிக்கோணி.............-- ஆனந்த விமானம் .
திருப்பதி ..............................-- ஆனந்தநிலைய விமானம் .
காஞ்சீபுரம் ................ ..........-- புண்யகோடி விமானம் .
ஒப்பிலியப்பன் கொயில்... -- சுத்தானந்த விமானம் .
திருக்கண்ணபுரம் .............. -- உத்பலாவதாக விமானம் .

' ஆரூட ' ஆக்டோபஸ் பால் திடீர் மரணம் .

தென்னாப்பிரிக்காவில் சில மாதங்களுக்கு முன் நடந்த உலகக் கோப்பை கால் பந்து போட்டிகளில், விளையாட்டு வீரர்களைவிட அதிகமாக பிரபலமடைந்தது பால் என்ற ஆக்டோபஸ் .
போட்டிகளின் முடிவை துல்லியமாக அது கணித்ததுதான் இந்த புகழுக்குக் காரணம் . ஜெர்மனியில் உள்ள சீ லைப் செண்டர் என்ற அருங்காட்சியகத்தில் வளர்க்கப்பட்டது இந்த 2 வயது ஆக்டோபஸ் பால் .
இப்படி உலகம் முழுக்க பிரபலமான பால், தனது கண்ணாடி தொட்டிக்குள் நேற்று முன்தினம் ( திங்கள் கிழமை ) இரவு உயிரிழந்தது .
இது குறித்து ஓபர்ஹாசன் விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ' இது எங்களுக்கு பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது . அதன் பெருமையை நினைவு கூறும் வகையில் நிரந்தரமான ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் . இதற்காக அதன் உடல் குளிர்பதனப்படுத்தப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது .
பாலை போலவே ஜோதிடம் கூறும் திறன் பெற்ற இன்னொரு குட்டி ஆக்டோபஸை அங்கு, வளர்க்க தொடங்கி விட்டனர் அருங்காட்சி நிர்வாகத்தினர் .
--- தினகரன் & தினமலர் . அக்டோபர் 27 , 2010 .

எவரெஸ்ட்

எவரெஸ்ட் : சில சுவாரஸ்யங்கள் .
* இருக்கும் இடம் : நேபாளம் -- திபெத் எல்லைப்பகுதி .
* நேபாளப் பெயர் : சாகர் மாதா ( வான்தேவதை ).
* திபெத்தியப் பெயர் : சோமாலங்கா ( பிரபஞ்ச தேவதை ).
* பழைய ஆங்கிலப் பெயர்கள் : பீக் பி ( 1854 வரை ) ; பீக் 15 ( 1854 முதல் 1865 வரை )
* ' எவரெஸ்ட்' பெயர் பின்னணி : பிரிட்டிஷ் இந்திய அரசில் தலைமை சர்வேயராக இருந்தவர் சர் ஜார்ஜ் எவரெஸ்ட் . இவர்தான் இந்த சிகரத்தின் அதிகாரபூர்வ உயரத்தை முதலில் பதிவு செய்தவர் . இவரைக் கவுரவிக்கும் வகையில்
1865ல் இந்த சிகரத்தை அவரது பெயரையே சூட்டினர் .
* இதில் முதன்முதலில் ஏறியவர்கள் : எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ( 1957 மே 29 ).
* இதில் முதன்முதலில் தனியாக ஏறியவர் : ரீன்ஹோல்டு ( 1980 ஆகஸ்ட் 20 ).
* இதில் முதன்முதலில் ஏறிய பெண் : ஜப்பானைச் சேர்ந்த ஜங்கோதபேய் ( 1975 மே 16 ).
--- தினமலர் , ஜூன் 4 , 2010 .

Monday, October 25, 2010

மூலிகைகள் !

பஞ்சபூதங்களுக்கான மூலிகைகள் !
நிலம் ........ -- அருகம்புல் .
நீர் .............._ மாஇலை .
நெருப்பு .... -- வாழை .
காற்று .......-- வேப்பிலை .
ஆகாயம் ..-- வெற்றிலை .

Sunday, October 24, 2010

' வெள்ளை மாளிகை ' நிறம் மாறுகிறது !

அமெரிக்க ' வெள்ளை மாளிகை ' நிறம் மாறுகிறது . அக்டோபர் மாதம் ,ஆர்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம் . அதற்கான குறியீடு.... பிங்க் நிறம் . வெள்ளை மாளிகையை பிங்க் நிறத்தில் மாற்றிவிட்டால், உலகமே உற்று கவனிக்கும் என்று ஒபாமாவின் மனைவி மிஷேலிடம் ஐடியா சொல்லி, அனுமதி வாங்கிவிட்டார்கள் . அதனால், விளக்குகளின் வெளிச்சத்தில் இந்த மாத இறுதிவரை பிங்க் நிறத்தில் ஜொலிக்க இருக்கிறது வெள்ளை மாளிகை .
பி ( ங் )க் ஐடியா !
--- இன்பாக்ஸ் , ஆனந்த விகடன் . 27 . 10 . 10 .

ஸ்ரீ காளஹஸ்தி !

கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டே மனம் உடைந்து , நொறுங்கிவிட்டது ஸ்ரீகாளஹஸ்தி !
சுனாமியாகச் சீறுகிறது கடல் . லைலாவாக அலைகிறது காற்று . பூகம்பமாக வெடிக்கிறது பூமி . இப்படிப்பட்ட இயற்கையின் கோபம் இப்போது கோபுரங்களிலும் தெறிக்கிறது .
சீகாளத்தி என்பதுதான் அந்தத் தலத்தின் பெயர் . சீ என்பது சிலந்தியையும், காளம் என்றால் பாம்பையும், அத்தி என்பது யானையையும் குறிக்கும் . இம்மூன்றும் வழிபட்டுப் பேறுபெற்ற தலமாக ஆனதால், இப்பெயர் பெற்றதாக ஐதீகம் . தென்கைலாசம் என்று இதை அழைப்பார்கள் . பெண்ணாறு ஆற்றின் கிளை நதியான ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் இந்த ராஜ கோபுரத்தைக் கட்டியவர் கிருஷ்ணதேவராயர் . பஞ்சபூத சிவ தலங்களில் வாயு தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் . திருப்பதியில் இருந்து 38 கி. மீ. தொலைவில் உள்ள இந்த ராகு, கேது தோஷநிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர் . கம்பீரமான 140 அடி உயரம் ராஜகோபுரத்தில் திடீரன மேலிருந்து கீழ் வரை விரிசல் ஏற்பட்டு, 26 . 05. 2010 அன்று இரவு 8. 00 மணிக்கு தரைமட்டம் ஆனது அந்த திருக்கோயில் . அந்த ராஜகோபுரம் இடிந்து விழும்போது, அருகில் இருந்த வீடுகளும் கடைகளும் நொறுங்கின . ஆனால், அடிவாரத்தில் இருந்த கிருஷ்ணதேவராயரின் சிலை மட்டும் அப்படியே இருந்தது . சிதறிக்கிடக்கும் கோபுரச் சிதறலை எடுத்துச் செல்ல பக்தர்கள் கூட்டம் முண்டியடிக்கிறது . உள்ளே புதையல்கள் இருக்கலாம் என்ற வதந்திக்கும் பஞ்சம் இல்லை .
அதைப் பார்வையிட வந்த ஆய்வாளர் வெங்கட கிருஷ்ணப் பிரசாத்திடம் கேட்ட போது, " ஞான பிரசுரனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில், 1988 -ம் ஆண்டு இந்தக் கோபுரத்தில் இருந்த சிற்பத்தில் சிறு உடைப்பு ஏற்பட்டு, 15 லட்சம் செலவு செய்து மராமத்துப் பார்த்தார்கள் . ஆனால், அது கடந்த 25 .05. 2010. அன்று இரண்டாகப் பிளவுபட்டது என்றார் .
ஜோதிடரும் ஆய்வாளருமான டாக்டர் வித்யாதரனைக் கேட்டபோது, " இக்கோயில், ஒருபக்கம் மலையும் , இன்னொரு பக்கம் ஆறும் இருக்கும் பிரசித்திபெற்ற அமைப்பு பெற்றது . இதுபோன்ற ஸ்தலங்களில் திருக்குளம் இருக்க வேண்டும் . வரும் பக்தர்கள் பாவங்களைக் கழுவுவார்கள் . அந்தத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, புது நீர் பாய்ச்சப்படும் . அதாவது தோஷங்கள் தேங்காமல் வெளியேற்றப்படும் . அப்படிப்பட்ட திருக்குளம் இங்கு இல்லை . அதனால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது . கோபுரக் கலசம் விழுந்தாலே , ஆள்வோருக்கு ஆகாது என்பார்கள் . இப்போது கோபுரமே விழுந்து இருக்கிறது . மேலும் இதனுடைய பிரதிபலிப்பு 80 கி. மீ. தூரம் வரை இருக்கும் என்பது ஐதீகம் " என்றும் பயமுறுத்துகிறார் .
கோபுர தரிசனத்தைப் பாப விமோசனமாகச் சொல்வார்கள் . அதையே பாவம் செய்ய விட்டுவிடக் கூடாது !
---- தினகரன் , 25 , 26. 05.2010 .
---- ஆனந்தவிகடன் .. விகடன் ,09. 06. 2010.
கண்ணப்பரை ஆட்கொண்டு அருள் புரிந்த இடம்; அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடப் பெற்ற ஸ்தலம்; நக்கீரர் சாப விமோசனம் பெற்று ' கயிலை பாதி, காளத்தி பாதி ' என்று பாடிய இடம்; ஆதிசங்கரர் விஜயம் செய்து, அம்மன் ( ஞானபிரஸுனாம்பிகை ) சந்நதியில் ஸ்ரீ சக்ரம் பதித்த இடம்; காஞ்சிப் பெரியவர்களின் திருப்பாதம் பட்ட இடம்; பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுத் தலம்.... இப்படிப் பல சிறப்புகளைப் பெற்றிருப்பது ஸ்ரீ காளஹஸ்தி க்ஷேத்திரம் .
---- ஆனந்தவிகடன் .. விகடன் ,16. 06. 2010.

எவரெஸ்ட் .

எவரெஸ்ட் : சில சுவாரஸ்யங்கள் .
* இருக்கும் இடம் : நேபாளம் -- திபெத் எல்லைப்பகுதி .
* நேபாளப் பெயர் : சாகர் மாதா ( வான்தேவதை ).
* திபெத்தியப் பெயர் : சோமாலங்கா ( பிரபஞ்ச தேவதை ).
* பழைய ஆங்கிலப் பெயர்கள் : பீக் பி ( 1854 வரை ) ; பீக் 15 ( 1854 முதல் 1865 வரை )
* ' எவரெஸ்ட்' பெயர் பின்னணி : பிரிட்டிஷ் இந்திய அரசில் தலைமை சர்வேயராக இருந்தவர் சர் ஜார்ஜ் எவரெஸ்ட் . இவர்தான் இந்த சிகரத்தின் அதிகாரபூர்வ உயரத்தை முதலில் பதிவு செய்தவர் . இவரைக் கவுரவிக்கும் வகையில்
1865ல் இந்த சிகரத்தை அவரது பெயரையே சூட்டினர் .
* இதில் முதன்முதலில் ஏறியவர்கள் : எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ( 1957 மே 29 ).
* இதில் முதன்முதலில் தனியாக ஏறியவர் : ரீன்ஹோல்டு ( 1980 ஆகஸ்ட் 20 ).
* இதில் முதன்முதலில் ஏறிய பெண் : ஜப்பானைச் சேர்ந்த ஜங்கோதபேய் ( 1975 மே 16 ).
--- தினமலர் , ஜூன் 4 , 2010 .

Saturday, October 23, 2010

வர்க்கம்.... ஈஸி டெக்னிக் !

இரண்டு இலக்க எண்களின் வர்க்கத்தை மிக வேகமாகக் கண்டுபிடிக்க இந்த ஈஸி டெக்னிக் உங்களுக்கு உதவும் ...
உதாரணமாக, 36ன் வர்க்கம் கண்டுபிடிக்கலாமா ?
36 ன் ' ஒன்றுகள் ' இடத்தில் உள்ளது ' 6 ' ; ' பத்துகள் ' இடத்தில் உள்ளது ' 3 ' .
முதல் கட்டம் : 6 ஐ 6 ஆல் பெருக்குங்கள் . விடை 36 .
2வது கட்டம் : 3ஐயும் 6 ஐயும் பெருக்கி 20 ஆல் பெருக்குங்கள் . விடை 360 .
3வது கட்டம் : 3ஐ 3 ஆல் பெருக்கி 100 ஆல் பெருக்குங்கள் . விடை 900 .
4வது கட்டம் : மூன்று விடைகளையும் கூட்டுங்கள் . விடை 36 + 360 + 900 = 1,296 . இது தான் 36 ன் வர்க்கம் !
--- தினமலர் . ஜூன் 4 , 2010 .

Friday, October 22, 2010

விமானங்களை வீழ்த்த...

விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் .
விமானங்களை கடத்தாமலேயே வீட்டில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் உதவியுடன் விமானத்தை தரையில் மோதவைத்து சின்னாப்பின்னமாக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர் தீவிரவாதிகள் . இந்த அதிர்ச்சித் தகவல் உலக நாடுகள் அனைத்தையும் கலக்கம் அடைய வைத்திருக்கிறது . இதைக் கண்டுபித்தவர்கள், பிரிட்டன் நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் விஞ்ஞானிகள்தான் சொல்லியுள்ளனர் .
அதாவது விமானங்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்குகின்றன . இந்த கம்ப்யூட்டர்கள்தான் தீவிரவாதிகளுக்கு குறி . அதாவது விமானங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில், அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மாஸ்டர் செர்வர்கள், தரைக்கட்டுப்பாட்டு நிலயங்களில்தான் இருக்கும் . இந்த செர்வர்களில், தீவிரவாதிகள் தங்கள் சொல்படி கேட்கக்கூடிய வைரஸ்களை புகுத்துவார்களாம் . பிறகு, அந்த வைரஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும்படி புரோகிராமிங் வடிவமைப்பார்களாம் . அதன்பிறகு, அந்தரத்தில் சென்றுகொண்டிருக்கும் விமானத்தை, தரையில் இருந்தபடியே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள் தீவிரவாதிகள் . அதன்பிறகு, விமானத்தை தரையிலோ, மலையிலோ, கடலிலோ விழவைக்கவோ, மோதச்செய்யவோ உத்தரவு பிறப்பிப்பார்களாம் . அடுத்த நிமிடம் விமானம் சின்னாபின்னமாகிவிடும் . அப்புறம் என்ன அதில் இருப்பவர்கள் அத்தனைபேரும் காலி .
இந்த சைபர் கிரைம் குற்ற நிகழ்வுகள் இன்னும் சில மாதங்களில்கூட நடப்பதற்கு சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள் . விமானங்களை மட்டுமல்ல, அணு உலைகள், மின்சார உற்பத்தி கேந்திரங்கள் என எதைவேண்டுமானாலும் தீவிரவாதிகளால் தகர்க்க முடியுமாம் .
பொதுவாக கம்ப்யூட்டர் சார்ந்த போலி வைரஸ்கள் உற்பத்தி கேந்திரமாக சீனா விளங்குவதால், அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .
--- தினமலர் . அக்டோபர் 21 , 2010 .

' வர்ணாச்சிரம தர்மம் '

' வர்ணாசிரம தர்மம் என்பது தொழில் அடிப்படையிலானது ; பிறப்பு அடிப்படையிலானது அல்ல ' என்பதற்கு நமது ஆன்மிகப் பாரம்பரியத்திலேயே ஏராளமான சாட்சியங்கள் உண்டு .
இந்து மதத்தின் அடிப்படையான வேதங்களைத் தொகுத்தவர் வேதவியாசர் . அவர், பிறப்பால் பிராமணர் அல்ல . பராசர முனிவருக்கும் சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் அவர் .
ராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான ராவணன் , பிரம்மாவின் பேரன் . பிறப்பால் பிராமணரான அவர் , குணத்தால் அரக்கனாகவும், தொழிலால் சத்ரியராகவும் இருந்தவர் .
இந்து மதத்தின் புனிதனூலான ஸ்ரீமத் பகவத்கீதையை அருளிய ஸ்ரீகிருஷ்ணர் , யாதவ குலத்தில் பிறந்தவர் .
--- பூஜ்யா , தினமலர் . 05. 06 . 2010.

Thursday, October 21, 2010

படிக்காத மேதைகள் !

மொகலாய மன்னர்களிலேயே எழுதப்படிக்கத் தெரியாதவர் அக்பர் . ஆனால் அவர் 24 நாலாயிரம் நூல்களைக் கொண்ட நூலகத்தை அமைத்து பிறர் படிப்பதை ஊக்குவித்தார் .
பெரும் தத்துவ மேதையான சாக்ரடீசுக்கும் எழுதப் படிக்கத் தெரியாது . இவர் சொல்வதை நண்பர்கள் எழுதுவார்கள் . விஞ்ஞானிகள் தாமஸ் ஆல்வா எடிசன் , மைக்கேல் பாரடே ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களே .
--- டி. உமாமகேஸ்வரி , திருவெண்காடு . தினமலர் ,05.06. 2010.
கவிதை .
கவிதை -- என்பது வார்த்தை தொகுப்பு
காதல் -- என்பது வயசுக் கொழுப்பு .
--- எஸ். சிநேகா, மண்ணச்சநல்லூர் . தினமலர் ,05.06. 2010.

Wednesday, October 20, 2010

சிலந்தி வலை !

இயற்கையின் மகா ஆச்சர்யங்களில் சிலந்தியும் ஒன்று . 65 அடி அகலத்துக்கு , ஆயிரத்துக்கும் மேற்பட்ட ' ஜங்ஷன் 'களோடுகூடிய ஒரு சிலந்தி வலையைக் காட்டில் ஆய்வாளர்கள் பார்த்துப் பிரமித்து இருக்கிறார்கள் . ஒரே ஒரு சிலந்தி கட்டிய வலை !
சிலந்தியின் வயிற்றில் இருந்து பீச்சியடிக்கப்படும் திரவம்தான் , வலை பின்னப் பயன்படும் நூல் . உடலில் இருந்து திரவமாக வெளியேறிய மறு விநாடி, திடமாக மாறிவிடுகிற இழை அது . ( உதாரணமாக , மனிதன் நம்பர் 1 போகிறான் . வெளியேறும்போதே சிறுநீர் திடப் பொருளாக மாறிவிட்டால் எப்படி இருக்கும் ?!. ஆனால், 50 ஆயிரம் வகையான சிலந்திகளில் பெரும்பான்மையானவை வலை பின்னுவது இல்லை என்பது வேறு விஷயம் . சரி , சிலந்தி -- தன் வலையில் சிக்காததற்கு -- ஆச்சர்யமாக இருக்கும் . அது தனக்காக ஸ்பெஷலாக ' நூல் பாதை ' போட்டுக்கொள்கிறது . அதன் வழியாகத்தான் அது போகும் . அந்த நூலில் அதன் கால்கள் ஒட்டிக்கொள்ளாது . ஒட்டிக்கொண்டால் சிலந்தி இனம் என்பதே இருந்திருக்காது !
--- ஹாய் மதன் , ஆனந்த விகடன் . 07. 04. 2010.

Tuesday, October 19, 2010

அளவு மாற்றும் வழி !

அளவுகளை மாற்ற இந்த பட்டியல் உங்களுக்கு உதவும் :
இன்ச் x 2. 54 = சென்டிமீட்டர் .
அடி x 0. 30 = மீட்டர் .
யார்டு x 0. 91 = மீட்டர் .
மைல் x 1. 60 = கிலோமீட்டர் .
அவுன்ஸ் x 28. 34 = கிராம் .
பவுண்டு x 0. 45 = கிலோகிராம் .
ஏக்கர் x 0. 40 = எக்டேர் .
--- தினமலர். ஏப்ரல் 30 . 2010.

Monday, October 18, 2010

Murder -- Assassination.

கொலையை ஆங்கிலத்தில் Murder , Assassination என இரண்டாக வகைப்படுத்தி இருக்கிறார்கள் . இரண்டுக்கும் உள்ள வேறுபாடு :
முடிவாக ( ! ) ஒரே அர்த்தம்தான் . ' மர்டர் ' என்கிற ஆங்கில வார்த்தை பண்டைய சமஸ்கிருத ' மர் ' என்கிற வார்த்தையில் இருந்து வந்தது . ( இந்தியில்கூட ' மர்கயா ' என்றால் இறந்துபோய் விட்டதாக அர்த்தம் ! ). Assassination என்கிற வார்த்தையை இப்போது வி. ஐ. பி -- க்களுக்குத் தான் பயன்படுத்துகிறோம் . சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், புனிதப் போரில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களைக் கொல்ல அரேபியர்கள் ' கெரில்ல ' ப் படை அமைத்தனர் . அந்த வீரர்கள் கொலை செய்யக் கிளம்புவதற்கு முன்பு Hashish என்கிற ஒரு வகை கஞ்சாவை மென்று போதை ஏற்றிக்கொள்வார்கள் . ( அப்போதுதான் வெறி அதிகமாகும் ! ). அந்த வீரர்கள் Hashshashins என்று அழைக்கப்பட்டார்கள் . அது இங்கிலீஷில் பிறகு Assassin என்று ஆகிவிட்டது !
--- ஹாய் மதன் . ஆனந்த விகடன் , 28. 04. 2010.

Sunday, October 17, 2010

' ஸ்பேஸ் டூர் '

' ஸ்பேஸ் டூர் ' என்பது 1990 - ம் ஆண்டுகளின் இறுதியில்தான் உருவானது . டென்னிஸ் டிடோ என்கிற அமெரிக்கர்தான் 2001 -ல் முதன்முதலா ஒரு ஸ்பேஸ் டூரிஸ்டாக விண்வெளியில் 9 நாட்கள் தங்கியிருந்தார் .
இந்த டூரில் 2 வகை இருக்கிறது . பூமியிலிருந்து கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் போய், ஒரு இரண்டரை மணிநேரம் இருந்துவிட்டு, உடனே திரும்பி வருவது . இதில் ஜாலியான விஷயம், புவியீர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தில் அந்தரத்தில் மிதக்கின்ற அற்புத உணர்வுதான் . அங்கிருந்து பூமி முழுவதையும் பறவைப் பார்வையில் பார்க்கலாம் .
இன்னொருவகை டூர்... ஏற்கனவே வான்வெளியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் சில நாட்கள் இருந்துவிட்டுத் திரும்புவது .' ஸ்பேஸ் அட்வென்சர் லிமிடெட் ' என்கிற அமெரிக்க நிறுவனம், ரஷ்ய விண்வாகனங்களில் 2001 - ம் ஆண்டிலிருந்து இப்படி டூர் அனுப்பி வருகிறது . இதுவரை 8 பேர் இப்படி ஜாலியாகப் போய் வந்திருக்கிறார்கள் . அங்கே அதிகபட்சம் 15 நாட்கள் தங்கியிருக்க முடியும் . அதற்காக நாம் கட்டவேண்டிய தொகை 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் . இந்திய மதிப்பில் சுமார் 91 கோடி ரூபாய் ! நம் தலை கிறுகிறுக்க ஆரம்பித்து விட்டது .
--- மயில்சாமி அண்ணாதுரை , ' சந்திராயன் விண்வெளித் திட்ட இயக்குனர் .
--- நாச்சியாள் . அவள் விகடன் , 26. 03. 2010.

Saturday, October 16, 2010

செயற்கை மார்பகம் .

பெண்கள் செயற்கை முறையில் ' அவற்றை ' பெரிதாக மாற்றிக்கொள்வது விஞ்ஞான வளர்ச்சியா ? இதனால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாதா ?
மனித இனத்துக்கு மட்டுமே நேர்த்தியான மார்பகங்கள் உண்டு . மற்ற அனைத்து பாலூட்டிகளுக்கும் முலைக்காம்புகள் மட்டுமே உண்டு . கூடவே, சிறிய ' பை'கள் இருக்கலாம் . பெரிய மார்பகத்துக்கும் பால் உற்பத்திக்கும் சம்பந்தம் கிடையாது . ஒப்பிடும்போது மார்பகம் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு இன்னும் நிறைய பால் சுரக்கக்கூடும் . மார்பக அளவு என்பது வம்சத்தைப் பொருத்தது ( குறிப்பாக அப்பா வழி ! ) ஆகவே , அவற்றைத் தாழ்வுமனப்பான்மை இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதே நல்லது . அதைப் பெரிதாக்கும் சர்ஜரி பேஜாரானது . முலைக் காம்பில் துவங்கி நேர்க்கோடாகக் கீழ் நோக்கி வெட்டித் திறந்து , ' சிலிகான் ' என்கிற ' இம்ப்ளான்ட்' டை நுழைத்துப் பொருத்திப் பெரிதாகுகிறார்கள் . ( சிலிகான் உலோகம் அல்ல . அது குவார்ட்ஸ்போல இயற்கையில் கிடைக்கிற , சற்று மிருதுவான , மினரல் ). சில சமயங்களில் காம்புகளை வெட்டித் தனியே எடுத்து ( கோணலாகப் போகக் கூடாது என்பதற்காக ) பிறகு மீண்டும் பொருத்தி.... ஏராளமான தையல்கள் போட வேண்டியிருக்கும் . பிற்காலத்தில் ' இம்ப்ளான்ட் ' நகர்ந்து ... எசகுபிசகாகிப் போகவும் வாய்ப்பு உண்டு . பால் சுரப்பதுகூட சற்றுத் தடை படலாம் . தேவையா இதெல்லாம் ? !
---ஹாய் மதன் . ஆனந்த. விகடன் , 05. 05 .2010.

Friday, October 15, 2010

ஞாபக சக்தி

ஞாபக சக்தி குறைந்து விடும் .
அதிகம் செல்போன் பேசினால் ஞாபக சக்தி குறைந்து விடும் . ஆய்வில் அதிர்ச்சி தகவல் .
செல்போனில் தினமும் பல மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தால் ஞாபக சக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது .
தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் பாதி பேருக்கு தங்கள் வாழ்க்கை துணையின் நம்பர் கூட மறந்து விடுகிறது . 10 ல் 7 பேருக்கு நெருங்கிய நண்பரின் போன் நம்பரை சட்டென நினைவுக்கு கொண்டுவர முடிவதில்லை .
51 சதவீதம் பேருக்கு பெற்றோரின் போன் நம்பர் ஞாபகத்தில் இருப்பதில்லை . தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவோரில் 10ல் 9 பேருக்கு திடீரென கேட்டால் முக்கிய நம்பர்களை உடனடியாக சொல்ல முடியவில்லை . 5 முதல் 10 விநாடிகள் யோசித்தே சொல்ல முடிகிறது . இது நினைவாற்றல் குறைவதை காட்டுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது . அவசர நேரத்தில் முக்கிய பெயர்கள் , நம்பர்கள் நினைவுக்கு வராது . இதை ' கோல்டு பிஷ் மெமரி ' என்கிறோம் .
இதற்கு முன் நடந்த ஆய்வு ஒன்றில் , ' சராசரியாக ஒவ்வொருவரும் 5 முக்கிய போன் நம்பர்கள் , பாஸ்வேர்டுகள் , 2 வாகன நம்பர் பிளேட்கள் , 3 செக்யூரிடி அடையாள எண்கள் , 3 வங்கி கணக்கு எண்களை தினசரி வாழ்க்கையில் நினைவில் கொள்கின்றனர் . அதற்கு மேல் மறதி ஏற்படுகிறது ' என்று கூறப்பட்டது .
--- தினகரன் , 15 ஜூலை . 2010 .

Thursday, October 14, 2010

மனநோய் மருத்துவமனை !

தேர்வு வைக்க புத்திசாலித்தனம் தேவை .
" ஒரு மனநோய் மருத்துவமனையைப் பார்வையிட இரண்டு பத்திரிகையாளர்கள் வந்து இருந்தார்கள் . ' மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் ? ' என்று தலைமை மருத்துவரிடம் கேட்டார்கள் . அதற்கு அவர் , ' மருத்துவமனைக் குழாயின் அடியில் ஒரு அண்டாவை வைப்போம் . பின்பு குழாயைத் திறந்துவிடுவோம் . நோயாளிகளிடம் ஒரு வாளியைக் கொடுத்து அண்டாவில் உள்ள நீரைக் காலி செய்யச் சொல்வோம் ' என்றார் . குழம்பிய பத்திரிகயாளர்கள் , ' இதிலிருந்து அவருக்கு மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் ? ' என்று கேட்டார்கள் . ' மனநோய் சரியாகி இருந்தால் முதலில் அவர்கள் குழாயை மூடிவிடுவார்கள் ' என்றார் ! "
--- அ. பேச்சியப்பன், ராஜபாளையம் . ஆனந்த. விகடன் , 05. 05. 2010.

Wednesday, October 13, 2010

வி. எஸ். காண்டெகர் .

விபரீதமான கேள்வி -- புத்திசாலித்தனமான பதில் !
" புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் வி. எஸ். காண்டெகர் . அவருடைய மகன் ஒருநாள் பள்ளியிலிருந்து சீக்கிரமாகவே வீட்டுக்குத் திரும்பிவிட்டான் . ' என்ன சீக்கிரம் ?' என்று கேட்டார் காண்டேகர் . ' யாரோ ஒரு தலைவர் இறந்துவிட்டாராம் . அதனால் பள்ளிக்கு விடுமுறை ' என்றான் . அதோடு விடவில்லை , ' தலைவர்கள் இறந்தால் கட்டாயம் விடுமுறை விட வேண்டுமா ? ' என்று கேட்டான் . ' புகழ் பெற்றவர்கள் இறந்தால் விடுமுறை விடுவது மரபு ' என்றார் காண்டேகர் . உடனே, அந்த விபரித்மான கேள்வியைக் கேட்டான் சிறுவன் . ' அப்படி என்றால் , நீங்கள் இறந்தாலும் விடுமுறை விடுவார்களா ? ' ஒருகணம் திகைத்த காண்டேகர், ' யாருக்கு விடுமுறையோ இல்லையோ கண்டிப்பாக உனக்கு விடுமுறை ' என்றார் !"
--- கோ. ஞானகுரு , விருதுநகர் . ஆனந்த விகடன் , 05. 05. 2010.

Tuesday, October 12, 2010

10 ஏ. சி = ஒரு மரம் !

நாம் அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வைத்து அதனை விருந்தினரைப் போல் கவனிக்க உறுதியெடுப்போம் ...!
காரணம் , 10 ஏசி மெஷின்கள் 24 மனி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது . 18 பேர்களுக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்க தேவையான பிராணவாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன . எனவே மரம் நடுவோம் , நல்ல காற்றை சுவாசிப்போம் !
--- ஆர். சாவித்ரி , முருங்கப்பேட்டை. தினமலர் ,1. 05. 2010.

Monday, October 11, 2010

ராகு காலங்களை மனனம் செய்ய...

தினசரி ராகு காலங்களை மனனம் செய்ய ஒரு எளிய வழி .
ராகுகாலத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக்கூடாது என்பார்கள் . அத்தகைய ராகுகாலம் தினசரி எந்த நேரத்தில் வருகிறது என்பது பலருக்கும் தெரியாது . அப்படிப்பட்ட நேரத்தை மனதில் பதித்துக்கொள்ள ஒரு எளிய வழி இது :
' திருவாரூர் சந்தையிலே வெற்றிலை புஷ்பம் விற்ற செட்டியாரும் ஞானியரே ! '
திருவாரூர் -- திங்கள் -- காலை 7.30 முதல் 9.00 மணி வரை .
சந்தையிலே -- சனி -- காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை .
வெற்றிலை -- வெள்ளி -- காலை 10.30 மணி முதல் 12 .மணி வரை .
புஷ்பம் -- புதன் -- மதியம் 12 மணி முதல் 1. 30 மணி வரை .
விற்ற -- வியாழன் -- மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை .
செட்டியாரும் -- செவ்வாய் -- மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை .
ஞானியரே -- ஞாயிறு -- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை .
--- காமேஸ்வரன் , சென்னை. தினமலர் ,மே 6 , 2010 .

Sunday, October 10, 2010

ப்ரிட்ஜ்.

பாக்டீரியா, பூஞ்சைக் காளான், நுண்ணுயிர்கள் ஊடுருவும் போதுதான் உணவுப்பொருள்கள் கெட்டுப்போகின்றன . இந்த ஊடுருவலும் உணவு பாதிப்பும் , வெதுவெதுப்பான இடங்களில்தான் அதிகமாகவும் வேகமாகவும் நடக்கும் . குளிர்ந்த சூழ்நிலை, இந்த ஊடுருவலையும் பாதிப்பையும் தடுத்து விடும் . ப்ரிட்ஜுக்குள் குளிர்ந்த சூழல் இருக்கிறது அல்லவா ? இதுதான் அதில் வைக்கப்படும் உணவுப்பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது .
--- தினமலர், மே , 7 , 2010.

Saturday, October 9, 2010

பசு பராமரிப்பு .

பழங்காலத்தில் பசு மாடுகள் கட்டப்படும் தொழுவத்தைக் கோயிலாக கருதியிருக்கிறார்கள் .ஆக்கோட்டம் என்று அவற்றை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . காலப்போக்கில் பசுத்தொழுவங்களை பசுமடம் என்று அழைக்கலாயினர் .
பசு மாட்டுத் தொழுவத்தை எப்படி அமைக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகள் பல உண்டு .
நல்ல காற்றோட்டம், சரிவான அமைப்பு, மிதமான சீதோஷ்ணம் உடைய நிலையில் மண்தரை அமைக்கப்பட வேண்டும், அந்த மண் தரை ஆற்று மண் , புற்று மண் , ஓடை மண் , அரச மரத்தடி மண் , வில்வ மரத்தடி மண் என்னும் ஐவகை மங்கள் கலந்ததாய்த் தூய்மையானதாய் அமைக்கப்படவேண்டும் .
--- புலவர் வே. மகாதேவன் , தினமலர் , மே 16 . 2010 .

Friday, October 8, 2010

தாயின் கண்ணீர் .

காந்திஜி -- கஸ்தூரிபாய் தம்பதியின் மகன் ஹீராலால் பெற்றோருக்கு இருந்த நற்குணங்களுக்குப் பகையான குணக்கேடுகள் ஹீராலாலிடம் நிறைந்திருந்தன .
ஒருமுறை , அவருக்கு கஸ்தூரிபா எழுதிய கடிதம் :
' என் அன்பு மகன் ஹீராலாலுக்கு ,
சென்னை நகரில் நள்ளிரவில் நடுத்தெருவில் குடிவெறியோடு நீ பல தவறுகள் செய்தாய் என்றும் , மறுநாள் ஒரு பெஞ் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி உனக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தார் என்றும் கேள்விப்பட்டேன் . இவ்வளவு எளிய தண்டனையோடு உன்னை விடுதலை செய்துவிட்டார்களே ! இது ஒரு பாரபட்சம் என்றே எனக்குத் தோன்றுகிறது . உன் தந்தையின் பெருமையை மனதில் கொண்டு அந்த மாஜிஸ்த்ரேட் உனக்கு சிறு தண்டனை அளித்திருக்க வேண்டும் ... நீ செய்தது பெருந்தவறு .
கண்ணியம் உள்ளவனாக இரு என்று பல முறை உன்னிடம் கண்ணீருடன் கூறியிருக்கிறேன் . நீயோ மேலும் மேலும் வீழ்ச்சி அடைகிறாய் . இறுதிக் கட்டத்தை நெருங்குகிற பெற்றோருக்கு நீ அளிக்கும் துயரத்தை எண்ணிப்பார்...
--- முனைவர் அமுதா எழுதிய ' கஸ்தூரிபா காந்தியின் வாழ்வும் பணியும் ' நூலில் ஒரு பகுதி .

Thursday, October 7, 2010

கோமாதா !

முழுமுதல் தெய்வங்கள் என பிரம்மா , விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் , சதாசிவன் ஆகியவர்களைச் சொல்வார்கள் . அதனை அடுத்து அமைபவர்கள் தேவர்கள் முப்பத்து மூன்று கோடி என்றும் சொல்வார்கள் . இந்த எல்லா தெய்வங்களும் பசுவில் இடம்பிடித்திருக்கின்றன என்று புராணங்கள் சொல்கின்றன .
பசுவின் உடலில் வலது கண்ணில் சூரியன், இடது கண்ணில் சந்திரன், இரண்டு கண்களுக்கும் இடையில் ( நடுவில் ) சிவபெருமான், மூக்கின் வலது பக்கம் முருகன், இடது பக்கம் விநாயகர், மண்டையில் தீர்த்தராஜன், வலது கொம்பில் எமன், இடது கொம்பில் இந்திரன், நெஞ்சில் மகாவிஷ்ணு, இடது முன் கழுத்தில் சரஸ்வதி, கீழ் பக்கம் ராகு, மேல் பக்கம் கேது, முன் கால் நடு முண்டுக்கு மேல் செவ்வாய், அதன் கீழ் சனி, அதன் மேல் சுக்கிரன், புதன், கொண்டையில் பிரம்மா, கொண்டையின் கீழ்ப்பக்கம் குரு, முன்பக்க வலது காலில் பைரவர், இடது காலில் அனுமன், நடு முதுகில் அக்னி, பின்பக்கம் முதுகில் வருணன், குபேரன், வாலின் கீழ் லட்சுமி, அதன்கீழ் கங்கை, வாலில் நாகராஜன் வாசம் செய்கிறார்கள் என்கிறது பக்தவிலாசம் என்னும் நூல் .
--- தினமலர் , ஏப்ரல் 1 , 2010.

Wednesday, October 6, 2010

மொபைல்

மொபைல் காணாமல் போகும் போது....
" ஒவ்வொரு மொபைலுக்கும் I M E I நம்பர் உண்டு . அதனைக் குறித்து வைத்துக் கொண்டால் , மொபைல் காணாமல் போகும் போது அந்த நம்பரைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் . மொபைலில் #06# என்று டைப் செய்தால் நம்பர் தெரிந்துவிடும் ."
--- சுபா . தஞ்சை . மங்கையர் மலர் , ஜூன் 2010 .

Tuesday, October 5, 2010

பூமி :

* பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கை கோள் -- ஸ்புட்னிக் .
* பூமியைச் சுற்றி வந்த விண்வெளி வீரர் -- ஜான் என் . ஹெலன் .
* பூமியைச் சுற்றி வந்த பெண் விண்வெளி வீராங்கனை -- வாலண்டினா .
* பூமிக்கும் , சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் -- 9 கோடியே 50 லட்சம் மைல்கள் .
* பூமி சூரியனுக்கு தூரத்தில் இருக்கும் நாள் -- ஜூலை 3 .
* பூமி சூரியனுக்கு அருகிலிருக்கும் நாள் -- ஜனவரி 3 .
* பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றவர் -- கோபர்நிக்கஸ் .
--- தினத்தந்தி , 24. 04. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Monday, October 4, 2010

மனிதன் மட்டும் !

விதைகளிலிருந்து
எழுந்திருக்கும் விருட்சம்
அடுத்த விருட்சங்களை நம்பி,
கிளைகளை விரிக்கவில்லை !
கிளைகளிலிருந்து
எழுந்திருக்கும் பறவை
அடுத்த பறவைகளை நம்பி
சிறகுகளை விரிக்கவில்லை !
சிறகுகளிலிருந்து
எழுந்திருக்கும் நம்பிக்கை
அடுத்த நம்பிக்கைகளை நம்பி
கரங்களை விரிக்கவில்லை !
தாயின் கருவறையிலிருந்து
எழுந்திருக்கும் மனிதன் மட்டும்
அடுத்தவர்களை நம்பி நம்பியே
வாழ்ந்து தோற்கிறானே.....?!
--- பொட்ட்ல்குழி ரா. ரெத்தினமணி, பாளை மத்தியச்சிறைச்சாலை. தினத்தந்தி , 09. 05. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Sunday, October 3, 2010

எல்லாமே நம்பர் 3 .

அயோத்தி தீர்ப்பில் எல்லாமே நம்பர் 3 .
அதன் விவரம் :
* அயோத்தி வழக்கை விசாரித்தது .3 நீதிபதிகள் .
* தீர்ப்பு அறிவித்த நீதிமன்ற அறை எண் 21 . அதாவது ( 2 + 1 ) = 3 .
* தீர்ப்பு வெளியான நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு .
* தீர்ப்பு வெளியான தேதி அக்டோபர் 30 .
* தீர்ப்பு எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதம் அவகாசம் .
* சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க தீர்ப்பு .
* எண் கணித ஜோதிடப்படி வியாழக்கிழமைக்கு ( தீர்ப்பு வெளியான நாள் ) வழங்கப்பட்டுள்ள எண் 3 .
* 60 ஆண்டுகளாக வழக்கு நடந்தாலும் , தீர்ப்பு வெளியான ஆண்டு 2010 . அதாவது ( 2 + 0 + 1 + 0 ) = 3 .
இன்னும் யோஜித்து நிறைய சொல்வார்கள் .
--- தினகரன் . 2 அக்டோபர் 2010 .

அட்சய திருதியை !

அட்சய திருதியை நாளில் நடந்தவை .
* பரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் அட்சய திருதியை நாளில்தான் .
* இந்தியாவின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்தது ஒரு அட்சய திருதியை அன்றுதான் .
* திரவுபதையின் மானம் காக்க கிருஷ்ண பரமாத்மா அவளுக்கு அட்சய வஸ்திரம் அளித்தது அட்சய திருதியை நாளில்தான் என்கிறார் மகாபாரதம் தந்த வியாசர் .
* மதுரை மீனாட்சியை, சுந்தரேஸ்வரர் மணந்த நாள், அட்சய திருதியை தான் .அதனால்தான் இந்த நாள் திருமணத்திற்கு உகந்தது என்று கூறுவோரும் உண்டு .
* பிரம்மதேவன் பூமியை படைத்ததும் இந்த நாளில்தான் .
* மகாபாரத காலத்தில் சூரியன் ஒரு அட்சய பாத்திரத்தை திரவுபதிக்குக் கொடுத்தான் . அதுவும் இதே நாளில்தான் !
* காசி அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்ன பிட்சை அளித்ததும், ஐஸ்வரிய லட்சுமி உதயமானதும் இதே நாளில்தான் .
--- தினத்தந்தி , ஆன்மிகம் . 11. 05. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Saturday, October 2, 2010

தமிழை அப்படி வளர்த்தார் !

உ. வே. சாமிநாதய்யர் போன்ற மாமேதைகளுக்கு ஆசிரியராக இருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கவிதை பாடும் வேகத்தில் தனியானதோர் ஆற்றலைப் பெற்றிருந்தார் . ' நாகைபுராணம் ' என்பதை ஒரு நாளைக்கு 200 செய்யுட்கள் வீதம் இயற்றினார் . அந்தக் காலத்தில் அவர் பெற்றிருந்த செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம் .லண்டனிலிருந்து அவருக்கு கடிதம் எழுதிய ஒருவர் ' மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இந்தியா ' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார் . அந்தக் கடிதம் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டது .
இப்படிப்பட்ட பேரறிஞர், தமிழை முற்றிலும் கற்பதற்காக ஒரு பிச்சைக்காரப் பரதேசியுடன் நாள் முழுக்க, வாரக் கணக்கில் சுற்றினார் என்பதை அறியும்போது, நமக்கு உடம்பு என்னவோ செய்யும் ! எல்லாவற்றையும் திறம்படக் கற்ற அவர், அணியிலக்கணத்தைச் சரியாக கற்க விரும்பினார் . முறையாக அவருக்குப் பாடம் சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை . திருச்சியில் ஒரு பரதேசிக்கு அணியிலக்கணம் நன்றாகத் தெரியும் என்று கேள்விப்பட்ட அவர், நேராக அந்தப் பரதேசியிடம் சென்றுவிட்டார் .
பரதேசி பல நாட்கள் அவர் பக்கமே திரும்பவில்லை . வீடு வீடாகப் பிச்சை கேட்க அந்தப் பரதேசி போகும்போது , பிள்ளை அவர்களும் , கூடவே வீடு வீடாகப் போயிருக்கிறார் ! கடைசியாகப் பரதேசியின் பலவீனம் ஒன்று , பிள்ளை அவர்களுக்குப் புரிந்து விட்டது . ' கஞ்சா ' குடிப்பது அந்தப் பரதேசியின் வழக்கம் ! பரதேசியின் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப ' கஞ்சா ' வைத் தன் கையால் எடுத்துத் தர ஆரம்பித்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ! பல நாட்கள் இப்படிக் கஞ்சா கொடுத்த பிறகு, ஒருநாள் பரதேசி மனம் இரங்கி பிள்ளை அவர்களிடம் பேசியிருக்கிறார் . அதைச் ' சிக் ' கெனப் பிடித்து, பாடத்தைக் ' கஞ்சா ' பரதேசியிடம் தெளிவாகக் கற்றார் மீனாட்சிசுந்தரம்பிள்ளை .
--- பொக்கிஷம் , ஆனந்த விகடன் . 14. 04. 2010 .