Tuesday, March 31, 2015

நடந்தால் சார்ஜாகும் செல்!

 செல்போனில்  பேசிக்கொண்டிருக்கும்போது  பேட்டரி  சார்ஜ்  தீர்வது  பயங்கர  டென்ஷன்.  இதற்கு  முற்றுப்புள்ளி  வைத்திருக்கிறது, நோக்கியா  நிறுவனத்தின்  புதிய  கண்டுபிடிப்பு. இந்த  நவீன  செல்போனைக்  கையில்  வைத்தபடி  அல்லது  பாக்கெட்டில்  போட்டு  சும்மா  நடந்தாலோ,  அல்லது  அதை  சிறிது நேரம்  அசைத்தாலோ  அது  தானாக  சார்ஜ்  ஆகிவிடும்.
     இது,  மாயமந்திரம்  அல்ல.  ' பீஸோ  எலக்ட்ரிக்  எஃப்ஃக்ட் '  என்ற  மின்னுற்பத்தி  தொழில்நுட்பம்தான்.
     அசையும்போது  மின்சாரத்தை  உருவாக்கும்  சக்தி  கொண்ட  படிகங்களை,  ' பீஸோஎலக்ட்ரிக்  கிறிஸ்டல் '  என்பார்கள்.  நோக்கியாவின்  புதிய  செல்போனில்  இந்த  ரக  கிறிஸ்டல்கள்  பொருத்தப்பட்டுள்ளதால்தான்  ஆட்டமேட்டிக்  சார்ஜிங்!
---தினமலர்  வாரமலர்.  மார்ச்  28,  2010. 

Monday, March 30, 2015

டயாபடீசை பிஸ்தா கட்டுப்படுத்தும்

.ஆய்வில்  தகவல்  --  டயாபடீசை  பிஸ்தா  கட்டுப்படுத்தும்
    " சர்க்கரை  நோய்  வராமல்  தடுப்பதற்கும்,  கட்டுப்படுத்துவதற்கும்  ரத்ததில்  சர்க்கரையின்  அளவை  சீராக  வைத்துக்கொள்ள  வேண்டியது  மிகவும்  அவசியமாகிறது.  இந்த  பணியை  பிஸ்தா  பருப்பு  சிறப்பாக  செய்கிறது" என  ஆய்வாளர்  சிரில்  கெண்டல்  தெரிவித்தார்.
     " இந்தியாவில்  குறிப்பாக  இளம்  வயதினர்  அதிக  அளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  பிஸ்தா  பருப்பை  சாப்பிட்டால்  ரத்ததில்  கொழுப்பு  அளவு  குறையும்  என்பது  அறிவியல்  பூர்வமாக  நிரூபிக்கப்பட்டுள்ளது.  எனவே  இதை  உணவில்  சேர்த்துக்  கொள்வதன்மூலம்  இதய  நோயிலிருந்து  பாதுகாத்துக்  கொள்ளலாம்".
-- தினகரன்  சென்னை  பதிப்பு.  6 - 1 - 2010. 

Sunday, March 29, 2015

சி.எப்.எல்.பல்புகள்.

 சி.எப்.எல். ( காம்பாக்ட்  புளோர  சண்ட்  லைட் )  மிகக்  முறைவான  மின்சாரத்தை  எடுத்துக்கொள்வதால்,  மின்சார  செலவைக்  குறைக்கின்றன.  அத்துடன்  அதிக  அளவு  வெப்பத்தையும்  வெளியிடுவதில்லை.  ஒரு  சி.எப்.எல்.  பல்பு,  வழக்கமான  குண்டு  பல்பைக்காட்டிலும்  ஐந்து  மடங்கு  வெளிச்சத்தைத்  தருகிறது.
     சி.எப்.எல்.  எரியும்  நேரம்  சாதாரண  பல்பைவிட  எட்டு  மடங்கு  அதிகம்.
     நீங்கள்  60  வாட்ஸ்  சாதாரண  பல்புக்கு  பதிலாக  15  வாட்ஸ்  சி.எப்.எல்.  பல்புகளை  உபயோகித்தால்,  குறைந்த  பட்சம்  ஒரு  மணி  நேரத்திற்கு  45  வாட்ஸ்  மின்சாரத்தை  மிச்சப்படுத்த  முடியும்.  ஒரு  மாதத்திற்கு  11  யூனிட்  மின்சக்தியைச்  சேமிக்க  முடியும்.  செலவையும்  குறைக்க  முடியும்.  சி.எப்.எல்.  பல்புகள்   5  முதல்  8  மாதங்கள்  வரை  உழைக்கும்.
     ஆனால்,  சி.எப்.எல்.  பல்புகளை  தயாரிப்பதிலும்,  பயன்படுத்திய  பிறகு  அழிப்பதிலும்  அதிகமான  பாதரச  நச்சு  காற்றில்  கலந்து  விடுகின்றன.  பாதரச  நச்சு  வளி  மண்டலத்தில்  கலந்துவிடும்  ஆபத்து  இருப்பதாகவும்  சில  ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.
-- தினமலர்  சிறுவர் மலர்.  நவம்பர். 2,  2012.

Saturday, March 28, 2015

சந்தியாவந்தனம் - தர்மம்..

சந்தியாவந்தனம்.செய்ய  வேண்டிய  நேரங்கள்:
' காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு!'  --என்பது  வாக்கியம்.
அதாவது,  சூரியன்  கண்ணுக்குத்  தெரியாதபோது,  சூரிய  உதயத்துக்கு  முன்  அர்க்யம்  கொடு;  இது  காணாமல்  கொடு  என்பதை  குறிக்கும்.  கோணாமல்  என்பது,  சூரியன் தலைக்கு  நேராக  உள்ள  உச்சி  காலத்தில்,  அர்க்யம் கொடு  என்பது.
அடுத்து,  கண்டு  கொடு  என்பது,  சூரியன்  மறைவதற்கு  முன்,  மாலை  வேளையில்  அர்க்யம்  கொடுக்க  வேண்டும்.  இதை  சிரத்தையுடன்  செய்து  வந்தால்,  ஆரோக்கியம்,  புண்ணியம்  எல்லாம்  கிடைக்கும்.
' காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு....'  என்பதற்கு,  வேறு  ஒரு  விளக்கமும்  உள்ளது.  தர்மம்  செய்யும்  போது,  அதை  விளம்பரப்படுத்தாமல்,  யாருக்கும்  தெரியாமல்  கொடு;  இது  காணாமல்  கொடு  என்பது.
கோணாமல்  கொடு  என்பது,  தர்மம்  செய்யும்  போது,  மனம்  கோணாமல்,  முழு  மனதோடு  கொடு  என்பது.  கண்டு  கொடு  என்பது,  யாருக்கு  என்ன  தேவை  என்று  பார்த்து,  ஸ்த்  பாத்திரத்துக்கு  கொடு  என்பது.  படிப்பில்  ஆர்வம்  இல்லாதவனுக்கு  புத்தகமும்,  கல்யாண  ஆசை  இல்லாதவனுக்கு  பெண்ணும்,  பசி  இல்லாதவனுக்கு  அறுசுவை  உணவும்  கொடுப்பது  பயனற்றது.
இப்படியாக  காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு  என்பதர்கு,  சந்தியாவந்தனம்  செய்வதிலும்,  தர்மம்  செய்வதிலும்  சில  நியதிகல்  உண்டு.  இவைகளைத்  தெரிந்து  செய்வது  நல்லது !
-- வைரம்  ராஜகோபால் . ( ஞானானந்தம்  பகுதியில் )
-- தினமலர் வாரமலர் .  சென்னைப்  பதிப்பு.  மே  8, 2011.  

Friday, March 27, 2015

அழகான வீடு.

  ஒரு  வீடு  அழகாக,  பளிச்சென்று  இருந்தாலே  அமைதியும்,  மகிழ்ச்சியும்  அந்த  குடும்பத்தைத்  தேடி  வரும்.  உங்கள்  வீடு  அழகாகவும்,  மகிழ்ச்சியாகவும்  இருக்க  சில  டிப்ஸ்கள்:
*  பூசணிக்காய்  சாற்றில்  தங்கநகைகளை  ஊறவைத்துக்  கழுவினால்  அவை  நன்றாக  பளிச்சிடும்.
*  பாத்ரூம்  டைல்ஸ்களில்  படிந்திருக்கும்  துருப்பிடித்த  கறைகளை  நீக்க  கெரசினை  உபயோகிக்கலாம்.
*  எலுமிச்சை,  ஆரஞ்சு  தோல்களை  அலமாரியில்  வைத்தால்  சிறு  பூச்சிகள்  அண்டாது.
*  குளிர்சாதனப்பெட்டியை  துடைக்கும்போது  பச்சைக்கற்பூரம்  கலந்த  நீரில்  துடைத்தால்  பூச்சிகள்,  சிறுவண்டுகள்  நுழையாது.
*  பட்டுச்  சேலைகளைத்  துவைக்கும்போது  அலசும்  நீருடன்  சிறிது  எலுமிச்சைச்  சாறு  கலந்து  கொண்டால்  சாயம்  போகாது,  மங்காது.
*  உலோக  ஃபர்னிச்சர்களில்  இருக்கும்  துருபிடித்த  கறையைப்  போக்க  டர்பண்டைன்  பயன்படுத்தித்  துடைக்க  வேண்டும்.
*  குளியலறைக்  கதவுகளில்  திட்டுத்  திட்டாக  படிந்திருக்கும்  சோப்பு  கறைகளை  நீக்க  வெள்ளை  வினிகரை  ஸ்பாஞ்சில்  தொட்டுத்  துடைக்க
   வேண்டும்..
*  நிறம்  மங்கிப்போன  லெதர்  பர்ஸ்,  பெல்ட்  மற்றும்  ஹேண்ட்  பேக்குகளை  கிளிசரினில்  ஸ்பாஞ்  தோய்த்துத்  துடைத்தால்  நன்கு  பளபளப்பாக  மாறும்.
-- சத்யா  சுரேஷ்,  குமுதம் .  24 - 10 - 2012. 

Thursday, March 26, 2015

வாஸ்து புருஷன்.

வாஸ்து  புருஷன்  விழிப்பு  காலங்களில்  பூமி  பூஜை  செய்யலாமா?  அல்லது நாள்  நட்சத்திரம்  பார்க்க  வேண்டுமா?
வாஸ்து  புருஷன்  நித்திரை  விடும்  காலங்களில்  பூமி  பூஜை  செய்வதற்கு  நாள்  நட்சத்திரம்  பார்க்க  வேண்டியதில்லை.இந்த  விஷயம்  பூமி  பூஜைக்கான  சிறப்பு  விதி.  90  நிமிடங்கள்  கண்  விழித்திருப்பார்.  இந்த  நேரத்தில்  18  நிமிடம்  பல்  குலக்குதல், 18  நிமிடம் குளித்தல்,  18  நிமிடம் சிவபூஜை,  18  நிமிடம் சாப்பிடுதல்,  18  நிமிடம்  தாம்பூலம்  போடுதல்  ஆகிய  5  வேலைகளைச்  செய்து  கொள்கிறார்.  இவற்றில்  மற்றைய  நேரங்களை  விடுத்து  கடைசியாகத்  தாம்பூலம்  போடும்  18  நிமிட  நேரத்தில்  மனை  முகூர்த்தம் பூமி  பூஜை  செய்தால்,  கட்டட  வேலைகள்  நல்லபடியாக  முடியும்.
--  மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
-- தினமலர் ,  பக்திமலர் .  1 - 11 - 2012. 

Wednesday, March 25, 2015

நவக்கிரகங்களின் தேவியர்.

சூரியன்..............-- உஷா,  பிரத்யுஷா.
சந்திரன்.............-- கிருத்திகா,  ரோகிணி.
செவ்வாய்..........--  சக்திதேவி.
புதன்................--  ஞானதேவி.
குரு .................--  தாராதேவி,  சங்கினி  தேவி.
சுக்கிரன்...........--  கஷூரி  சிருங்கினி,  சுபகீர்த்தி.
சனி.................--  ஜோஷ்டா  தேவி.
ராகு................--  ஸிம்ஹி  தேவி.
கேது...............--  சித்திரலேகா.
(  இந்த  விவரம்  மாயூரம்  சேது  ராமநாத  குருக்கள்  எழுதிய  ' நவக்கிரகம் .  என்ற  நூலில்  இருந்து  எடுத்தது )
-- மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
-- தினமலர் ,  பக்திமலர் .  1 - 11 - 2012. 

Tuesday, March 24, 2015

பிராமணன் உணவு.

  பூண்டு,  முள்ளங்கி,  முருங்கை,  மண்காளான்,  மரக்காளான், வெங்காயம்,  தீய  இடத்தில்  விளைந்த  காய்கறிகள்  மரத்தில்  தோன்றும்  செம்மெழுகு,  நீரால்  புளிப்பேறின  கனி,  கிழங்கு,  மலர், இவற்றின்  ஊறுகாய்கள்  ஆகியவற்றைப்  பிராமணர்  உண்ணுதல்  கூடாது.
     புளித்த  பால்,  சீம்பால்,  தயிர்,  புளித்த  தயிர்,  அதன்  வெண்ணெய்,  ஒற்றைக்  கொம்பு  மிருகங்களின்  பால்,  பொலியும்  பருவப்  பசுவின்  பால்,  ஒட்டகப்பால்,  ஆண்கன்று  ஈன்ற  பத்து  நாட்களாகாத  பசு,  ஆடு,  எருமைப்பால்  இவற்றை  அருந்தக்கூடாது.
     ஈன்ற  பெண்  கன்றை  இழந்த  பசு,  சினைப்பசு,  செம்மறியாடு,  காட்டெருமை  இவற்றின்  பால்  அருந்தலாம்.
     மாமிசம்  உண்பது  தம்மைத்  தாம்  உண்பது  போல,  மீன்  மாமிசமோ  அனைத்து  மாமிசங்களையும்  உண்பது  போல;  எனவே  மீன்  மாமிசம்  உண்ணக்  கூடாது.
     வேள்வியில்  மிஞ்சிய  புலாலை  உண்னலாம்.  ஓரிரவு  கழிந்த  பின்னரும்  கூட  அதை  உண்ணலாம்.  எண்ணெய்ப்  பதார்த்தங்களையும்  அவ்வாறே  உண்ணலாம்.
     உண்ணற்க  என்பனவற்றை  உண்ணும்  பிராமணன்  இழிந்தவன்.  அறியாது  உண்டால்  சீர்ந்தபனம்,  சந்திராயனம்  செய்திடுக.  தடுக்கபட்ட  மற்றேதேனும்  உண்டால்,  ஒரு  நாள்  உண்ணாமல்  இருந்தால்  அப்பாவம்  அகலும்.  அறியாதுண்ட  பாவம்  நீங்குவதற்கு  ஆண்டு  முழுவதும்  ' பிரஜாபத்ய  கிருக்சரம் '  சடங்கு  அனுசரிக்க.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு. 

Monday, March 23, 2015

தகுவன -- தகாதன.

  பள்ளியறையிலன்றி,  மாதரைப்  பிறவிடத்து  நிர்வாணமாய்ப்  பார்க்கலாகாது.  கண்ணுக்கு  மையிடும்போது,  எண்ணெய்  நீராடும்போது,  கவனக்  குறைவாய்  அமர்ந்துள்ளபோது,  இருமல் - கோட்டுவாய்  உள்ள  போது,  மேலாடை  நெகிழ்ந்தபோது,  மனைவியாயினும்  பார்த்தல்  கூடாது.
      மாதவிலக்கான  மூன்று  நாட்களுக்குள்  மனைவியைக்  கூடுதல்  கெடுதல்.  ஒரே  படுக்கையும்,  அவளோடு  பேசுவதும்  கூடாது.  அனுமதிக்கப்பட்ட  நாட்களில்  இல்லின்பம்  நுகர்வோன்  மேன்மைகள்  பெறுவான்.  அல்லாத  அவனுக்கு  வலிமை,  வாழ்நாள்,  பார்வை,  ஞானம்  குறையும்.
     தலைக்குக்  குளித்த  பின்னர்,  அந்நாளே  எண்ணெய்  முழுக்குக்  கூடாது.
     அமாவாசை,  சதுர்த்தசி,  அஷ்டமி,  பௌர்ணமி,  ஏகாதசி  நாட்களிலும்  மாதவிலக்கின்  பின்  தலை  முழுகி  வந்த  நாளிலும்  உறவு  கொள்ளக்  கூடாது.
     பிறன்  மனையாளைக்  கூடின்  ஆயுள்  குறையும்.
     தினவற்ற  பொழுது,  பிறப்புறுப்பை,  உடல்  உறுப்புகளை,  முடியைத்  தொடக்கூடாது.
     சூத்திரன்  முன்னிலையில்  பிராமணனுக்கு  தரும,  நோன்பு  உரைக்கக்  கூடாது.  ஓமம்  செய்த  மீதமும்,  உணவு  மீதமும்  சூத்திரனுக்குத்  தருவது  கூடாது.  இம்மைப்  பயன்  நூல்களான  பொருளியல்  போன்றவற்றையும்  சூத்திரனுக்குக்  கற்பித்தல்  கூடாது.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு. 

Sunday, March 22, 2015

கண் அசைவில் செல்போன்

வந்தாச்சு  புது  சாப்ட்வேர்  --  கண்  அசைவில்  செல்போன்
      கண்  அசைவினால்  டேப்லட்  பிசி  மற்றும்  செல்போன்களை  கட்டுப்படுத்தும்  சாப்ட்வேரை  டென்மார்க்  நிறுவனம்  உருவாக்கியுள்ளது.
      இந்த  சாப்ட்வேர்  இன்பிராரெட்டை  பயன்படுத்தி  இயங்குகிறது.  இந்த  கதிர்  கண்ணின்  மணியில்  பட்டு  எதிரொலிக்கும்போது,  அதை  சாதனத்தின்  காமிரா  மூலம்  படம்  பிடித்துக்  கொள்ளுமாம்.  இதன்  மூலம்  வாடிக்கையாளரின்  பார்வை  மூலமாகவே  திரையில்  தோன்றும்  பக்கத்தை  ஸ்குரோல்  செய்யவோ  அல்லது  கிளிக்  செய்யவோ  இயலும்  என  தெரிகிறது.  உதாரணமாக  செல்போன்  அல்லது  டேப்லட்  பிசி  சாதனத்தில்  வாடிக்கையாளர்கள்  இ - புக்  படிக்கும்போது,  அந்த  பக்கத்தின்  கடைசி  பகுதியை  பார்க்க  விரும்புகிறார்கள் என்றால்,  அதை  கண்கள்  மூலமாகவே  தெரிந்துகொண்டு  அதற்கு  ஏற்ப,  அந்த  பக்கத்தின்  கீழ்  பகுதிக்கு  ஸ்குரோல்  ஆகவும்,  தேவையென்றால்  பக்கத்தை  திருப்பவும்  இது  பயன்படும்  வகையில்  இந்த  சாப்ட்வேர்  உருவாக்கப்பட்டுள்ளது.
--- தினமலர்.  28 - 10 - 2012 . 

Saturday, March 21, 2015

சூரியன்.

  சூரியன்  உதயமாகும்  சமயத்தில்  அவரை  இந்திரன்  பூஜை  செய்கிறான்.  மத்தியானத்தில்  யமனும்,  அஸ்தமனத்தில்  வருணனும்,  அர்த்த  ராத்திரியில்  சந்திரனும்  பூஜை  செய்கிறார்கள்.
     விஷ்ணு,  சிவன்,  ருத்ரன்,  பிரம்மா,  அக்னி,  வாயு,  நிருதி,  ஈசானன்  என்று  எல்லா  தேவர்களும்  இரவில்  சூரியனின்  கல்யாண  குணங்களை  ஆராதிக்கிறார்கள்.
     தேவர்கள்,  அசுரர்கள்,  மனிதர்கள்  ஆகியோர்  சூரியனின்  சிருஷ்டியே!  அக்னி  பூர்வமாக  வேள்வியில்  அளிக்கும்  ஆஹுதிகள்  சூரிய  பகவானையே  அடைகின்றன.  சூரிய  பகவானின்  அருளால்தான்  வளர்ச்சியும்  செழுமையும்  உண்டாகின்றன.
      மார்கழி  மாதம்  சுக்ல  பட்ச  சப்தமியன்று  சூரிய  பகவானுக்கு  சிரத்தையாக  அபிஷேக  ஆராதனைகள்  செய்ய  வேண்டும்.  இதைச்  செய்பவர்  அக்னி  லோகத்திற்கு  விமானத்தில்  ஏறிச்  செல்வார்கள்.
     ரத  சப்தமி  விரதம்  இருந்து  பலன்  பெற்றவர்களுள்  தரும  புத்திரர்  முதன்மையானவர்  எனலாம்.  அதன்  பலனாகத்தான்  அவர்  வனவாசம்  இருக்கும்  காலத்தில்  சூரிய  பகவான்  அட்சய  பாத்திரத்தைக்  கொடுத்தார்.  அதைக்  கொண்டு  எல்லோருக்கும்  குறையாமல்  உணவு  அளித்ததோடு  தன்  தம்பிகளுடனும்,  பாஞ்சாலியுடனும்  சுகமாக  இருந்தார்.
--  லட்சுமி ராஜரத்னம்.  ( பவிஷ்ய புராணம்.)
--  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31, 2012. 

Friday, March 20, 2015

ஸ்படிக லிங்கம்.

 ஸ்படிக  லிங்கம்  என்பது  பொதுவாக  நீண்ட  குச்சி  போன்ற  வடிவமும்,  சுமார்  ஒரு  இன்ச்சிலிருந்து  பத்து  இன்ஸ்  வரை  உயரமும்  ஆறு  முகங்கள்  அல்லது  பட்டைகள்  உடையதாகவும்  இருக்கும்.  இதன்  தனிச்  சிறப்பு  என்னவென்றால்  இது  ஒரு  வினாடிக்கு  32,768  தடவை  நேர்மறையாக  அதிரக்கூடிய  தன்மை  உடையது.  அதனால்தான்  ஒரு  ஸ்படிக  லிங்க  கருங்கற்களால்  செய்யப்பட்ட  ஆயிரம்  லிங்கங்களுக்குச்  சமம்  என்றும்,  12  லட்சம்  ஸ்படிக  லிங்கங்கள்  ஒரு  பாண  லிங்கத்துக்குச்  சமம்  என்றும்  சாஸ்திரங்கள்  கூறுகின்றன.
     பாண  லிங்கம்  என்பது  கண்டகி  நதிக்கரையில்  இயற்கையாகக்  கிடைக்கும்  சாளக்கிராமங்களைப்  போல  நர்மதை  நதியில்  கிடைக்கும்  இயற்கையான  லிங்கங்களாகும்.
     ஸ்படிக  லிங்கத்துக்கு  விபூதியால்  அபிஷேகம்  செய்தால்  கர்ம  வினைகள்  நீங்கும்.  முன்பு  சொன்னது  போல  இதன்  நேர்மறையான  அதிர்வுகள்  நவகிரகங்களின்  கெட்ட  பலனை  பெரிதும்  அழிக்கும்.
-- ஸ்ரீஜா  வெங்கடேஷ்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31, 2012.  

Thursday, March 19, 2015

லிங்க வழிபாடு..

  சைவ  ஆகம  சாஸ்திரங்களில்  லிங்க  வழிபாடு  மிகவும்  முக்கியமானது.  32  வகையான  புனிதமான  பொருட்களால்  லிங்கங்கள்  செய்யப்படுகின்றன.  அவை  செய்யப்படும்  பொருளுக்கேற்ப  அருள்  வழங்கும்  தன்மையவை  என்று  சாஸ்திரங்கள்  சொல்கின்றன.
      ஆனால்,  இந்த 32  வகையிலும்  சேராமல்  சுயம்புவாக  அதாவது  இயற்கையாக  கிடைக்கக்கூடியதுதான்  ஸ்படிக  லிங்கம்.  அதனால்  இது  மிகவும்  உயர்ந்த  ஸ்தானத்தில்  வைத்து  மதிக்கப்படுகிறது.  ஸ்படிகம்  சிவனின்  நெற்றியை  அலங்கரிக்கும்  சந்திரனிலிருந்து  விழுந்ததாக  கூறுவோரும்  உண்டு.
      ஸ்படிகம்  என்பது  ஒரு  வகை  கிரிஸ்டல்.  தூய்மையான  நிலையில்  கண்ணாடி  போலக்  காணப்படும்.  இது  மிகவும்  குளிர்ந்த  தன்மையது.அதனால்  இதன்  மணிகளை  மாலையாகக்  கோர்த்து  பெரியவர்கள்  அணிவதும்  உண்டு.  ஸ்படிகம்  இமய  மலையின்  அடி  ஆழத்திலும்,  விந்திய  மலை  மற்றும்  சங்ககிரி  மலையின்  சில  பகுதிகளிலும்  கிடைக்கும்.  இது  மிகவும்  விலைமதிப்புள்ளது.
--- ஸ்ரீஜா  வெங்கடேஷ்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31, 2012.

Wednesday, March 18, 2015

குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம்.

அதிக  நேரம்  ' டிவி '  பார்க்கும்  குழந்தைகளுக்கு  ரத்த  அழுத்தம்..
     ஆஸ்திரேலியாவின்  சிட்னி  நகர  பல்கலைக்கழக  பேராசிரியர்  பாமினி  கோபிநாத்.  இவர்  தலைமையிலான  ஆராய்ச்சி  குழுவினர்,  34  ஆரம்பப்  பள்ளிகளைச்  சேர்ந்த  1,492  குழந்தைகளிடம்  சோதனை  நடத்தினர்.  ஏழு  வயதுக்குட்பட்ட  குழந்தைகள்  தினமும்  இரண்டு  மணி  நேரம் ' டிவி '  பார்த்தால்  அவர்களுடைய  கண்ணுக்கு  பின்புறம்  உள்ள  ரத்தக்  குழாய்களின்  குறுக்களவு  குறைவதாக  கண்டறிந்தனர்.
     இதே  நிலை  நீடிக்கும்  பட்சத்தில்,  மாரடைப்பு  மற்றும்  ரத்த  அழுத்தம்  போன்ற  ஆபத்துகள்  விரைவில்  ஏற்பட  வழிவகுப்பதை  இவர்கள்  தங்கள்  ஆய்வில்  கண்டறிந்தனர்.  தினமும்  குழந்தைகள்  ' டிவி '  பார்க்கும்  நேரத்தை  குறைத்து  ஒரு  மணி  நேரம்  விளையாட  வேண்டும்.  எனவும்  பாமினி
கோபி நாத்  தெரிவித்தார்.
-- தினமலர்  சென்னை.  22 - 4 - 2011. 

Tuesday, March 17, 2015

தர்மமும் நீதியும்

 குருகுலவாசம்  முடிந்து  சீடர்கள்  கிளம்பும்போது  ' தர்மத்தைக்  காத்து  நீதி  வழி  நடந்திடுங்கள் '  என  குரு  ஆசியளித்தார்.  ' தர்மம்  வேறு;  நீதி  வேறா?'  என  சந்தேகம்  கொண்ட  சீடர்கள்,  குருவிடமே  விளக்கம்  கேட்டனர்.
     புன்னகைத்த  குரு,  ' நீதி  என்பது  இடத்திற்கும்,  சூழ்நிலைக்கும்  ஏற்ப  மாறும்.  உதாரணமாக  முன்  விரோதத்தால்  சண்டையிட்டு  ஒருவனைக்  கொல்வது  கொலை.  ஆனால்,  எதிரி  நாட்டின்  வீரர்களோடு  சண்டையிட்டுக்  கொல்வது  கொலையல்ல;  வீரம்!  இப்படி  நீதி  மாறக்கூடியது.  எனவே  அதைக்  காத்திட  முடியாது.  ஆனால்  தர்மம்  மாறாதது.  அதனைக்  காப்பாற்றுவது  அவசியம் !'  என  தெளிவுபடுத்தினார்.
     உணர்ந்த  சீடர்கள்  குருவை  வணங்கி  விடைபெற்றனர்.
-- ஜி.கே.சுந்தரமூர்த்தி,  கோபிசெட்டிபாளையம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31.  2012. 

Monday, March 16, 2015

பொது அறிவு.

*  அமெரிக்க  அதிபர்  பாரக்  ஒபாமா,  இல்லினய்ஸ்  மாகாணத்தைஸ்  சேர்ந்தவர்.
*  இந்தியாவின்  முதல்  ராணுவ  அமைச்சர்,  என்.கோபாலசாமி  அய்யங்கார்.
*  இருதய  மாற்று  அறுவை  சிகிச்சையை  இந்தியாவில்  முதல்  முதலில்  மேற்கொண்டவர்,  டாக்டர்  வேணுகோபால்.
*  இந்தியாவின்  முதல்  பெண்  கவர்னர்,  சரோஜினி  நாயுடு.
*  எவரெஸ்ட்  சிகரம்  மீது  ஏறிய  முதல்  பெண்,  பச்சேந்திரி  பால்.
*  சண்டிகர்  நகரை  நிர்மாணித்தவர்,  லி  கொர்புசியர்.
*  இந்தியாவில்  முதல்  ஆங்கில  நாளிதழை  துவக்கியவர்,  ஜே.ஏ.ஹிக்கி.
*  நீண்ட  காலம்  முதல்வராக  இருந்தவர்,  ஜோதி  பாசு.
*  இந்தியாவுக்கு  வந்த  முதல்  அமெரிக்க  அதிபர்,  ஐசெஹோவர்.
*  மாநிலங்களில்,  முதல்  பெண்  அமைச்சர்  ராஜ்குமாரி  அம்ரித்  கவுர்.
-- தினமலர் .

Sunday, March 15, 2015

' எருது '

கேள்வி:  கோளறு  பதிகம்  9 -வது  பாட்டில்  ' பசுவேறும்  எங்கள்  பரமன் '  என்று  சிவபெருமானை  அடியார்  குறிப்பிட்டிருக்கின்றார்.  சிவபெருமானின்
              வாகனம்  'எருது'  என்றல்லவா  சொல்லக்  கேட்டிருக்கிறோம்?
பதில்:     பசு  என்ற  சொல்லுக்குக்  கட்டுப்பட்டது  என்பது  பொருள்.  பச்  என்ற  தாதுவிலிருந்து  பசு  என்ற  சொல்  வந்தது.  ஆகவே,  கட்டுப்பட்ட
             எருதுக்கும்  பசு  என்ற  பெயர்  உண்டு.  எருதும்  கட்டுப்பட்டதுதானே?  ஆனால்,  உலகப்  பெருவழக்கில்  பசு  என்பது  பெண்  இனத்தைக்
             குறிக்கின்றது.  ஆராய்ச்சிப்படி  பசு  என்பது  மாட்டின்  பொதுப்பெயராகும்.
             இராகவன்  என்ற  சொல்  இரகுவம்சத்தில்  வந்தவன்  என்ற  பொருளைத்  தரும்.  தசரதனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  இராமனும்
             இரகுவம்சத்தில்  வந்தவன்.  இலட்சுமணனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  பரதனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  சத்ருக்கனும்  இரகுவம்சத்தில்
             வந்தவன்.  ஆகவே,  எல்லாரும்  இராகவர்கள்தான்.  ஆனால்,  உலகப்  பெருவழக்கில்  இராமனை  மட்டும்  இராகவன்  என்று  கருதுகின்றார்கள்.
             பார்த்தன்  என்ற  சொல்லுக்குப்  பொருள்  பிரதையின்  மகன்  என்பதாகும்.  தருமனும்  பிரதையின்  மகன்தான்.  பீமனும்  பிரதையின்  மகன்தான்.
             அர்ஜுனனும்  பிரதையின்  மகன்.  ஆகவே,  தருமனும்  பார்த்தன்.  பீமனும்  பார்த்தன்.  அர்ஜுனனும்  பார்த்தன்.  ஆனால்,  உலகப்
            பெருவழக்கில்  அர்ஜுனனையே  பார்த்தன்  என்று  குறிப்பிடுகின்றார்கள்.
            இந்த  நியதிப்படி  பசு  என்பது  எருதையும்   குறிக்கும்  என்று  உணர்க.
----' குமுதம்  வினா - விடை '  நூலில்  திருமுருக  கிருபானந்தவாரியார்  சுவாமிகள்.
--  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர். 

Saturday, March 14, 2015

வெள்ளை நிற ஆடை.

கேள்வி: " எல்லா  சிவாலயங்களிலும்  இரவு  அர்த்தஜாமத்தில்  மற்ற  நிறப்  புடவையிருந்தும்,  ஏன்  வெள்ளை  நிறப்  புடவையைச்  சாத்துகின்றார்கள்?"
பதில்: " கருமை  நிறம் -- தாமச  குணத்தைக்  காட்டுவது.  செம்மை  நிறம் -- இராஜச  குணத்தைக்  காட்டுவது.  வெண்மை  நிறம் -- சத்துவ  குணத்தைக்  காட்டுவது.  இரவிலே  எல்லா  உயிகளும்  சாந்தமாக  இருக்க  வேண்டும்.  அதனால்தான்  அர்த்த  ஜாமத்தில்  அம்பிகைக்கு  வெள்ளைப்  புடவையைச்  சாத்துகிறார்கள்.  இதே  காரணம்தான்  சரஸ்வதி  தேவி  வெள்ளைக்  கலையுடுத்துவதற்கும்.  ' வெள்ளைக்கில்லை  கள்ளச்  சிந்தை'."

கேள்வி: " சாந்திராயண  விரதம்  யாது?"
பதில்:  " பூர்ணிமை  தொடங்கி  அமாவாசை  வரை  ஒவ்வொரு  பிடி  அன்னங்  குறைத்தும்.  அமாவாசை  தொடங்கி  பூர்ணிமை  வரை  ஒவ்வொரு  பிடி  அன்னம்  அதிகப்படுத்தியும்  புசித்து  அநுஷ்டிக்கப்படும்  பிராயசித்த விரதம்.  சாந்திராயணம்!  திருவிளையாடற்  புராணம் தலவிசேடப்  படலத்தில்  கூறப்பட்டுள்ளது.
--' குமுதம்  வினா - விடை '  நூலில்  திருமுருக  கிருபானந்தவாரியார்  சுவாமிகள்.
--  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர். 

Friday, March 13, 2015

குளோனிங் செயல் முறை.

 குளோனிங்கிற்கு  ஒருவரது  திசு  உயிரணுவே  போதுமானது.  ஆணின்  விந்து  அவசியம்  என்பதில்லை.  ஒரு  பெண்ணின்  உயிரணுவிலிருந்து  கூட  இப்படி  குளோனிங்  குழந்தையை  உருவாக்கலாம்.  அதாவது  எந்த  விதத்திலும்  ஆணின்  தொடர்பு  இல்லாமல்  ஒரு  குழந்தை.
       நம்  உடலில்  உள்ள  சில  குறிப்பிட்ட  திசுக்கள்  அழிந்து  போனால்  அவற்றை  உயிப்பிக்க  முடியாது.  பிறரது  திசுக்களை  அங்கு  பொருத்தினால்  அதை  உடல்  ஏற்றுக்கொள்ள  வாய்ப்பு  மிகக்குறைவு.  மாறாக  நம்  உடலிலிருந்தே  ஒரு  பகுதித்  திசுக்களை  அங்கு  பதிய  வைத்தால்  ஏற்றுக்  கொள்ளும்  வாய்ப்பு  அதிகம்.  மூளை,  சிறுநீரகம்  போன்ற  பகுதிகளில்  உள்ள  திசுக்களில்  பாதிப்பு  என்றால்  பிற  பகுதியில்  திசுக்களை  வெற்றிகரமாக  இங்கு  பொருத்தமுடியாது.  அதற்குத்தான்  குளோனிங்  முறையில்  உருவான  கரு  உதவுகிறது.
      குளோனிங்கிற்கு  ஆகும்  செலவு  மிக  மிக  அதிகம்.  நடுத்தர  மக்களுக்கு  அது  எட்டாக்கனிதான்.  நூறு  சதவீதம்  குறைபாடே  இல்லாத  குழந்தையை  உருவாக்கமுடியாது.  குளோன்  செய்யப்பட்ட  குழந்தையின்  நோய்  எதிர்ப்பு  சக்தி  மிகக்  குறைவாக  இருக்க  வாய்ப்பு  உண்டு.
---அறிவியல்  தகவல்கள் , தினமலர்  இணைப்பு,  17  ஜூன், 2012.   

Thursday, March 12, 2015

சோதனைக் குழாய் குழந்தை.

 ஆணிடமிருந்து  ஒரு  உயிரணுவை  எடுப்பார்கள்.  அதில்  உள்ள  மையப்பொருளான  ' நியூக்ளியஸ்'சை  அதிலிருந்து  பிரித்தெடுப்பார்கள்.  இதில்தான்  அவரது  டி.என்.ஏ  இருக்கிறது.  அதாவது  குரோமோஸோம்கள்  அடங்கிய  மரபணு  ஜோடி.  ஒரு  மனிதரின்  தோற்றத்தைத்  தீர்மானிப்பது  மரபணுதான்.  இப்படி  பிரித்தெடுக்கப்படும்  நியூக்ளியஸை  அந்த  மனிதரின்  மனைவியின்  கருமுட்டையோடு  இணைப்பார்கள்.  இவை  இரண்டும்  சரியான  விதத்தில்  சேர  சிறு  அளவில்  மின்சாரம்  ஒன்று  பாய்ச்சப்படும்.    இதன்மூலம்  கருமுட்டையும்  ஆணின்  உடலிலிருந்து  நீக்கப்பட்ட  நியூக்ளியஸும்  இணைந்து  ஒரே  உயிரணுவாக  மாறுகிறது.  இந்த  உயிரணு  பெண்ணின்  கருப்பைக்குள்  வைக்கப்படுகிறது. அதற்குப்  பிறகு  வழக்கம்  போலவேதான்  கருச்  சுமத்தலும்  பிரசவமும்.  இதுதான்  சோதனைக்  குழாய்  முயற்சி.
---அறிவியல்  தகவல்கள் , தினமலர்  இணைப்பு,  17  ஜூன், 2012. 

Wednesday, March 11, 2015

முயலாமை.முயலாமை.


     ஒரு  பள்ளிக்கூட  விழாவிற்கு  கலைவாணர்  பேசச்  சென்றார்.  அது  ஆரம்பப்  பள்ளி  ஆதலால்  ஒரு  கதையோடு  பேச்சைத்  தொடங்கினார்.
     'ஒரு  ஊர்ல முயலும்  ஆமையும்  இருந்தன.  அவை  இரண்டுக்கும்  ஒரு  நாள்  ஓட்டப்பந்தயம்  நடந்துச்சு '  என்று  அவர்  சொல்லிகொண்டு  வரும்போதே  பள்ளிப்  பிள்ளைகள்  எல்லாம்  ' தெரியும்  தெரியும் '  என்று  சத்தமிட்டார்கள்.  உடனே  கலைவாணர்,  ' என்ன  தெரியும்  சொல்லுங்கள்?'  என்றார்.
     'ரெண்டுக்கும்  போட்டி  நடந்துச்சு.  சரி,  எது  ஜெயித்தது?'  என்று  கேட்டார்.
     ' ஆமை  ஜெயிச்சது.  முயல்  தோற்றது'  என்றனர்  பிள்ளைகள்.  அதற்கு  கலைவாணர்,  அப்படி  சொல்லக்கூடாது.  முயல்  ஆமையால்  தோற்றது.  எங்கே  சொல்லுங்க.  முயல்  ஆமையால்  தோற்றது.  முயற்சி  இல்லாதவர்கள்  வலிமையுடையவர்களாக  இருந்தாலும்  தோற்றுத்தான்  போவார்கள்.  அதுக்குத்தான்  இந்த  கதையில  முயலும்  ஆமையும்  போட்டி  போட்டதாக  காட்டுறாங்க.  இல்லாட்டி  வேற  மிருகத்தை  சொல்லியிருக்கலாம்.'  என்று  கூறினார்.
      இந்தக்  கதையை  எழுதிய  அந்த  எழுத்தாளருக்கு  இப்படி  ஒரு  செய்தி  இந்த  கதையில்  இருக்கிறது  என்று  தெரியுமோ,  தெரியாதோ?  ஆனால்,  கலைவாணர்  தன்  சிந்தனையினால்  இதை  விளக்கினார்.
-- கு.ஞானசம்பந்தன்  எழுதிய  ' இன்றைய  சிந்தனை ' நூலிலிருந்து.
-- தினமலர்  இணைப்பு,  17  ஜூன், 2012.  

கரப்பான் பூச்சி


Tuesday, March 10, 2015

நவக்கிரகங்கள்.

நவக்கிரகங்கள்  என்றால்  9 ம்  ஒன்றை  ஒன்று  பார்க்காத  ஒன்பது  ரகம்.
திருவாரூரில் நவக்கிரகங்களை  வரிசையாக  காணலாம்.
தஞ்சை  பிரகதீஸ்வரர்  ஆலயத்தில்  லிங்க  வடிவில்  காணலாம்.
சூரியனார்  கோயிலில்  தனித்தனி  கோயில்களில்  காணலாம்.
சிதம்பரத்தில்  அவரவர்  மனைவியர்களுடன்  காணலாம்.
சுசீந்திரத்தில்  அவரவர்  வாகனங்களுடன்  காணலாம்.
வேலூரில் நவக்கிரகங்கள்,  விநாயகரை  பார்த்தவாறு  இருக்கும்.
-- மல்லிகா நடராஜன்,  சேலம்.
--  தினமலர் இணைப்பு.  27  அக்டோபர் , 2012. 

Monday, March 9, 2015

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

  ஒரு  அரசர்,  மந்திரியை  அழைத்து,  ' இங்கு  உண்டு,  அங்கு  இல்லை',  'இங்கு  இல்லை,  அங்கு  உண்டு',  'இங்குமில்லை,  அங்குமில்லை',
'இங்குமுண்டு,  அங்குமுண்டு'  இதற்கான  விளக்கம்  என்ன  என்று  கேட்டார்.
     மறுநாள்  மந்திரி  தன்னோடு  ஒரு  கொள்ளைக்காரன்,  ஒரு  ஞானி,  ஒரு  பிச்சைக்காரன்,  ஒரு  வள்ளல்  இவர்களை  அழைத்து  வந்து  நிறுத்தி,  இவர்கள்  தான்  தங்கள்  கேள்விகளுக்குப்  பதில்கள்  என்றார்.
     அரசன்  எப்படி  என்றவுடன்,  ' கொள்ளைக்காரன் -  கொள்ளையடித்து,  இவ்வுலகில்  மகிழ்ச்சியாக  இருக்கிறான்,  மேல்  உலகில்  அவனுக்கு  மகிழ்ச்சியில்லை.  இதுதான்  இங்கு  உண்டு,  அங்கு  இல்லை '  என்றார்.
     'ஞானி - இவர்  சதா  இறைவனையே  நினைப்பவர்.  இவருக்கு  இங்கு  இல்லை,  அங்கு  உண்டு'.
     ' பிச்சைக்காரன் - இவன்  எந்த  நல்ல  செயலும்  செய்யவில்லை.  எனவே  இவனுக்கு  இந்த  உலகமும்  இல்லை,  அந்த  உலகமும்  இல்லை'.
     ' வள்ளல் - தன்னிடம்  உள்ளதை  பிறருக்கு  கொடுத்து  தானும்  மகிழ்கிறார்,  பிறரையும்  மகிழ்விக்கிறார்.  எனவே  இங்கும்  உண்டு,  அங்கும்  உண்டு'  என்றார்.
     மந்திரியை  பாராட்டி,  தானும்  வள்ளல்  போல்  வாழ்வேன்  என்று  உறுதியளித்தார்  மன்னன்.  மன்னனைப்போல்  நாமும்  வள்ளலாக  வாழ  முயற்சிப்போம்.
-- செந்தமிழ்  ராம்,  செம்பொன்னார்கோயில்.
-- தினமலர் இணைப்பு.  27  அக்டோபர் , 2012. 

Sunday, March 8, 2015

பூத வேள்வி.

  கிழக்கில்  இந்திரன்,  தெற்கில்  எமன்,  மேற்கில்  வருணன்,  வடக்கில்  சூரியன்  ஆகியோர்க்கும்,  அவரவர்  பரிவாரங்களுக்கும்  வரிசைப்படி  பலி  வைத்துப்  பூத  வேள்வி  செய்க.
      தேவர்களுக்கு  வீட்டு  வாயிற்படி,  நீர்த்  தேவதைகளுக்கு  நீர்  நிலை,  வன  தேவதைகளூக்கு  உரல்  அல்லது  உலக்கை.  இவ்விடங்களில்  பலிப்  பொருள்  வைத்துப்  படைக்க.
      நடு  வீட்டில்  பிரம்மனுக்கும்,  வடகிழக்கு  மூலையில்  லட்சுமிக்கும்,  தென்மேற்கு  மூலையில்  பத்ரகாளிக்கும்  படையல்  இடலாம்.  படுக்கையின்  தலை  மாட்டில்  லட்சுமிக்கும்  கால்மாட்டில்  பத்ரகாளிக்கும்  படையல்  இடலாம்.
      மேல்  மாடத்தின்  திறந்த  வெளியில்,  அல்லது  வீட்டின்  பின்புறத்தில்  தென்  திசையாக  மண்டியிட்டுப்  பரம்பொருளுக்குப்  பெருஞ்சோற்றினைப்  படையல்  போடுக.
      திசைக்  கடவுளர்,  பகலில்  இரவில்  திரியும்  உயிகளுக்கு  வீட்டு  முற்றத்தில்  படையல்  போடுக.
-- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு. 

Saturday, March 7, 2015


முன்னோர் கடன்.

 அக்னிதத்தர்,  அக்னிஷ்,  அனக்னிதத்தர்,  கவ்யர்,  சௌம்யர்,  பர்ஹ்ஷிதர்,  வர்த்தர்  முதலானோர்  பிராமணரின்  முன்னோர்.  பிராமணர்கலின்  முன்னோர்  --  சோமபர்;  அவர்  பிருகுவின்  மகன்.  சத்திரியரின்  முன்னோர்  --  ஹவிஷ்மத்தர்;  அவர்  ஆங்கிரகரின்  மகன்.  வைசியர்களின்  முன்னோர்  --  ஆஜ்யபர்;  அவர்  புலஸ்தியரின்  மகன்.  சூத்திரர்களின்  முன்னோர்  --  சுகாலிகர்;  அவர்  வசிஷ்டரின்  மகன்.  மரீசி  முதலானமவர்களால்  பிறந்த  இம்முன்னோரும்,  இவர்  பிள்ளைகளும்,  பிள்ளைகளின்  பிள்ளைகளுமே  இவ்வுலகம்  விரிவடைவதற்குக்  காரணம்.
      தேவர்களுக்கு  உணவு  படைத்தல்  முதலானவற்றை  விட  முன்னோர்களுக்குச்  செய்யும்  காரியம்  முதன்மையானது.
      வெள்ளி  அல்லது  வெள்ளி  கலந்த  பாத்திரத்தில்  தண்ணீர்  தந்தால்கூட  முன்னோர்க்கு  அது  மகிழ்ச்சியை  உண்டாக்கும்.
---  காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.

Friday, March 6, 2015

கூடும் நாள், கூடா நாள்.

  மனையாளிடம்  இடையறாத  அன்பு  செலுத்திப்  பருவகாலத்தே  அவளோடு  மகிழ்ச்சி  கொள்க.  மாத  விலக்கில்லா  நாட்களில்  கூடலாம்..
     மாதவிடாய்  நாள்  முதல்  16  நாட்கள்  பெண்ணுக்குப்  பருவகாலம்.  விலக்கு  முதல்  நான்கு  நாட்கள்.  மற்றும்  ஏகாதசி,  திரியோதசி  நாட்களிலும்  கூடற்க.  மீதி  பத்து  நாட்கள்  கூடலாம்.  6, 8 ,10,  12,  14,  16  ஆகிய  இரட்டை  நாட்களில்  கூடினால்  ஆண்மகவு  பிறக்கும் .  5, 7,  9,  11,  13,  15  ஆகிய  ஒற்றை  நாட்களில்  கூடினால்  பெண்மகவு  பிறக்கும்.
     கலவியின்  இன்ப  ஊற்றில்  ஆண்  ஊற்று  அதிகமெனில்  ஆண்மகவும்,  பெண் ஊற்று  அதிகமெனில்  பெண்மகவும்  பிறக்கும்.  இரண்டும்  சமம்  எனில்  பிறப்பது  பேடி  ஆகும்.  ஊற்று  சுரக்கவில்லையெனில்  கரு  உண்டாகாது.
---  காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு. 

Thursday, March 5, 2015

பேல் பூரி.

கண்டது;
(  உடங்குடி  இருசக்கர  வாகனம்  பழுது  பார்க்கும்  கடையில் )
   மாதா பிதா 'ஸ்க்ரூ'தெய்வம்.

(  கிங்ஸ்  பொறியியல்  கல்லூரியின்  நாள்காட்டியில் )
   பார்ப்பதற்கு  வித்தியாமானனாக  இரு
   வித்தியாசம்  பார்ப்பவனாக  இருக்காதே.

( கள்ளக்குறிச்சியில்  ஓர்  ஆட்டோவில் )
   காதலின்  சின்னம்  கேட்டேன்
   கல்லறை  என்றாள்
   கல்லறை  எங்கே  என்றேன்
   என்னைக்  காதலி  என்றாள்.

(  பள்ளிச்  சுவரில்  எழுதப்பட்டிருந்த  வாசகம் )
   வெற்றி  என்றுமே  முடிவடையாது
   தோல்வி  என்றுமே  முடிவாகாது.
--  தினமணிகதிர்.  11 - 3 - 2012.  
---  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

Wednesday, March 4, 2015

தூய்மையான தங்கம்.

  பணக்கடவுளான  திருப்பதி  வெங்கடாசலபதி  உண்டியலில்  தினசரி  சுமார்  இரண்டு  கிலோ  தங்கம்  காணிக்கையாகச்  செலுத்தப்படுகிறது.
     தூய்மையான  தங்கம்  99.99%  தங்கம்  புல்லியன் ( Buillion )  என  அழைக்கப்படுகிறது.
     106.3  டிகிரி  சென்டிகிரேடு  வெப்பநிலையில்  தங்கம்  உருகும்.
     ஒரு  கிராம்  தங்கத்தைக்  கொண்டு  ஒரு  மேஜை  மீது  போடும்  விரிப்பு  அளவுக்குத்  தகடு  செய்து  விட  முடியும்.
     ராஜதிராவகம்  என்ற  ரசாயன  திரவத்தைத்  தவிர  வேறு  எதிலும்  தங்கம்  கரையாது.
     சுத்தமான  தங்கம்  என்பது  24  காரட்  தங்கம்.  இந்தியாவில்  22  காரட்,  ஐரோப்பாவில்  21  காரட்,  ரஷ்யாவில்  14  காரட்,  அமெரிக்காவில்  8 முதல்  14  காரட்  கொண்ட  தங்கம்  பயன்படுத்தப்படுகிறது.
     லண்டன்  உலோகச்  சந்தையில்  தங்கத்தின்  விலை  முடிவு  செய்யப்படுகிறது.  இங்கு  முதன்முதலில்  தங்கம்  வணிக  தீவில்  1919-ம்  ஆண்டு  விலை  நிர்ணயமானது.  இங்கே  நாளுக்கு  இரண்டு  முறை  விலை  நிர்ணயம்  செய்கிறார்கள்.
-- ( சி.சரவணன்  எழுதிய  ' தங்கத்தில்  முதலீடு '  என்ற  புத்தகத்திலிருந்து ).
-- தினமணிகதிர்.  11 - 3 - 2012.          
--- இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

Tuesday, March 3, 2015

சில படிப்புகள்

சங்குகள்  பற்றிய  படிப்பு-----------------காங்க்காலஜி.
பாசிகள்   பற்றிய  படிப்பு----------------பைகாலஜி.
தோல்  பற்றிய  படிப்பு- ------------------டெர்மட்டாலஜி.
குகைகள் பற்றிய  படிப்பு --------------- ஸ்பிலியோலஜி.
பூச்சிகள்  பற்றிய  படிப்பு --------------- எண்டோமாலஜி.
பாறைகள்  பற்றிய  படிப்பு ------------  லிதாலஜி.
மரங்கள் பற்றிய  படிப்பு ----------------  டெண்ட்ராலஜி.
பறவைகள்  பற்றிய  படிப்பு -----------  ஆர்னித்தாலஜி.
தசைகள் பற்றிய  படிப்பு ---------------  மையாலஜி.
செல்திசுக்கள் பற்றிய  படிப்பு --------  ஹிஸ்டாலஜி.
திமிங்கிலங்கள்  மற்றும்
டால்பிங்கள்  பற்றிய  படிப்பு ---------  செடாலஜி.
-- எஸ்.ஜே.அயனாகுமார்,  எட்டிமலை.  தினமணி  சிறுவர்மணி.  7 - 4 - 2012.
--   இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

Monday, March 2, 2015

எட்டு வகை மணம்.

பிராமம்,  தெய்வம்,  ஆருசம்,  பிரஜாபத்யம்,  ஆசுரம்,  காந்தருவம்,  ராட்சசம்,  பைசாசம்  என்று  திருமணம்  எட்டு  வகை.
வேதமறிந்த,  ஒழுக்கமுடைய,  மணமாகாதவனுக்கு  பெண்ணைத்  தானமாகக்  கொடுப்பது  ' பிராமம்.'
வேள்வித்  தீ  வளர்க்கும்  வேதம்  உணர்ந்தானுக்குப்  பெண்ணைக்  கொடுப்பது  தெய்வமணம்.
வளர்த்ததற்குப்  பரிசு ( பரிசம் )  பெற்றுக்  கொண்டுப்  பெண்ணைக்  கொடுப்பது  ஆருசம்.
மணமாகாதவனை  அழைத்து  நல்லறம்  புரிந்து  நெடுநாள்  வாழ்வீராக  என  வாழ்த்தி  பெண்ணைக்  கொடுப்பது  பிரசாபத்யம்.
பெற்றவன்  கேட்கும்  பொருளைக்  கொடுத்துப்  பெண்ணை  கொள்வது  ஆசுரம்
ஆணும்  பெண்ணும்  தாமே  மணந்து  கொள்வது  காந்தருவம்.
பெண்ணைத்  தூக்கிச்  சென்று  மணப்பது  ராட்சசம்.
மது  மயக்கத்தில்  அல்லது  தூக்கத்தில்  அல்லது  பைத்தியமாய்  உள்ள  பெண்னை  மணப்பது  பைசாசம்.
--- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.

Sunday, March 1, 2015

நட்பு

 வயதில்  பத்தாண்டு  மூத்தவரோடும்,  அறிவில்  ஐந்தாண்டு  மூத்தவரோடும்,  வேதமறிந்த  மூன்றாண்டு  மூத்தவரோடும்  சற்றே  முதிர்ந்த  பங்காளியோடும்  நட்பு  கொள்ளலாம்.
    பத்து  வயது  பிராமணன்  எனினும்  பிற  மூன்று  குலத்தார்க்கும்  பெற்ற  தந்தைக்கு  ஒப்பாவான்.  நூறு  வயது  சத்திரியன்  கூட  அவனுக்கு  மகனைப்  போன்றவனே.
    பிராமணன்,  அரசன்,  பெண்,  மணமகன்,  நோயாளி,  சுமைசுமந்தோன்,  தொண்ணூறு  வயது  முதியோன்,  வாகனமேறி வருவோன்  ஆகியோருக்கு  வழிவிட்டு  நிற்க.
   அவர்  யாவரும்  கூட்டமாய்  வந்தால்,  அரசனுக்கும்  பிராமணனுக்கும்  முதலில்  வழிவிடுக.  பிராமணனும்  அரசனும்  எதிரில்  வந்தால்  பிராமணனுக்கே  முதலில்  வழிவிடுக.
--- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்  
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.