Sunday, June 25, 2017

5ன் மடங்குகள் ஈசி பெருக்கல்

உதாரணம் :
(1)  125ஐ  93 ஆல்  பெருக்கலாம்.  ( 125  பெருக்கல்  93 =  11625 )
       *  93  உடன்  மூன்று  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  93000.
       *  கிடைத்த  விடையை  8  ஆல்  வகுக்கவும்  93000 / 8  =  11625.
(2)  125ஐ  137 ஆல்  பெருக்கலாம். ( 125  பெருக்கல்  137  =  17125 ).
       *  137  உடன்  மூன்று  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  137000.
       *   கிடைத்த  விடையை  8  ஆல்  வகுக்கவும்  137000 /  8  =  17125.
           அடுத்ததாக  25ஐ  வைத்து  பெருக்குவோம்.
உதாரணம் :
(1)  25 ஐ  67  ஆல்  பெருக்கலாம்.  ( 25  பெருக்கல் 67  =  1675 ).
       *  67  உடன்  இரண்டு  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  6700.
       *  கிடைத்த  விடையை  4  ஆல்  வகுக்கவும்  6700 /  4  =  1675.
(2 )  25 ஐ  376  ஆல்  பெருக்கலாம்.  ( 25  பெருக்கல்  376  =  9400 ).
       * 376  உடன்  இரண்டு  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  37600.
       *  கிடைத்த  விடையை  4  ஆல்  வகுக்கவும்  37600 /  4 =  9400. 

Saturday, June 24, 2017

டிடிஎச் சேவை பிடிக்கலையா?

வந்தாச்சு  புது  வசதி.
     மிகவும்  போட்டி  நிறைந்த  வர்த்தக  சந்தையாக  டிடிஎச்  சேவையும்  உருவாகிவருகிறது.  டிஷ்  டிவி,  ஏர்டெல்,  ரிலையன்ஸ்,  டாடா  ஸ்கை  என  பல  நிறுவனங்கள்  டிடிஎச்  சேவையை  வழங்கிவருகின்றன.
     ஒரு  டிடிஎச்சை  வாங்கும்  வாடிக்கையாளர்கள்  மற்றொரு  டிடிஎச்  சேவை  பெற  இப்போது  வசதி  இல்லை.  முற்றிலுமாக  புதிய  சாதனங்களை  வாங்கி  பொருத்தினால்  மட்டுமே  அதன்  சேவையை  பெற  முடியும்.  ஆனால்,  விரைவில்  இதர்கு  தீர்வு  ஏற்பட  உள்ளது.
     டிடிஎச்  சேவை  வழங்கும்  நிறுவனத்தை  மாற்றிக்  கொள்ளும்  வகையில்  புதிய  கருவியை  அறிமுகப்படுத்த  ஹாங்காங்கை  சேர்ந்த  ஸ்மிட்  கார்ப்பரேஷன்  நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.  கார்டு  போன்ற  இந்த  சாதனத்தை  செட்  டாப்  பாக்ஸில்  பொருத்தி,  வேறு  டிடிஎச்  சேவைக்கு  மாற்ற  முடியும்  என  தெரிகிறது.  இது  தொடர்பாக  கட்டுப்பாட்டு  அமைப்பான  டிராயுடன்  பேசி  வருவதாகவும்  தகவல்  வெளியகி  உள்ளது.  கண்டிஷனல்  அக்சஸ்  மாடுயூல்  ( கேம் )  என்ற  கார்டு  போன்ற  சாதனத்தை  பாக்ஸில்  பொருத்திக்  கொள்ளலாம்.  இதனை  பயன்படுத்தி,  வேறு  சேவைக்கு  மாற  முடியும்.  மெலும்  செட்டாப்  பாக்ஸ்  இன்றி  டிவி  பார்க்க  வசதியாகவும்  ஒரு  சிப்பை  அறிமுகப்படுத்த  திட்டமிட்டுள்ளோம்.  ஆனால்  அதற்கு  அந்த  குறிப்பிட்ட  டிவியில்  டிஜிட்டல்  டியூனர்  ஏற்கனவே  பொருத்தப்பட்டிருக்க  வேண்டும்.
     ஏற்கனவே  இந்த  கார்டு  பொருத்தும்  வசதியை  டிஷ்  டிவி  அறிமுகப்படுத்தியது.  எனினும்  இதற்கு  நம்நாட்டில்  போதிய  வரவேற்பு  கிடைக்கவில்லை.  ஆனால்  தற்போது  ஒரு  பொது  நிறுவனம்  இத்தகைய  கார்டை  அறிமுகப்படுத்த  உள்ளதால்,  டிராய்  அதை  அனுமதிக்கும்  பட்சத்தில்,  சந்தையில்  நல்ல  வரவேற்பு  கிடைக்கும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  இது  தொடர்பாக  ஸ்மிட்  நிறுவனம்  சில  டிடிஎச்  நிறுவனங்களுடன்  பேசி  வருவதாகவும்  கூறப்படுகிறது.
--   தினமலர்  திருச்சி 7 -2 -2013. 

Friday, June 23, 2017

புத்தபிட்சு உடல்

200  ஆண்டுகளுக்கு  முந்தைய  'மம்மியி'யில்,   பத்மாசனத்தில்  புத்தபிட்சு  உடல்.
     மங்கோலியாவின்  சங்கிங்  கோகையர்கான்  மாநிலத்தில்  தொல்பொருள்  துறை  ஆய்வாளர்கள்  நடத்திய  ஆய்வின்  போது  200  ஆண்டுகளுக்கு  முந்தைய  முதுமக்கள்  தாழி  ( மம்மி )  கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அதில் பத்மாசனத்தில்  அமர்ந்த  நிலையில்  அடக்கம்  செய்யப்பட்ட  புத்தபிட்சுவின்  உடல்  தோண்டி  எடுக்கப்பட்டுள்ளது.
      திபெத்  புத்த  பிட்சுக்களிடம்  இதுபோல்  தியான  நிலையில்  உயிர்விடும்  பழக்கம்  இருந்து  வந்ததால்,  இந்த பிட்சுவும்  திபெத்திய  லாமாவின்  சீடராக  இருக்கலாம்  என்று  கூறப்படுகிறது.  கால்நடையின்  தோலால்  சுற்றி  பதப்படுத்தப்பட்டிரிந்த  புத்த  பிட்சு  உடலில்  உண்மையான  வயதை  கண்டுபிடிக்கும்  ஆய்வில்  ஆய்வாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.
--    தினமலர்  திருச்சி 29 -1 -2015.      

Thursday, June 22, 2017

சனியை போன்று புதிய கிரகம்

  சூரிய  குடும்பத்தில்  இருந்து  420  ஒளி  ஆண்டு  தொலைவுக்கு  அப்பால்  வளையத்துடன்  கூடிய  புதிய  கிரகத்தை  விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர்.
     ஜே147பி  என்று  பெயரிடப்பட்டுள்ள  அந்த  கிரகம்  சனி  கிரகத்தின்  வளையத்தைவிட  200  மடங்கு  பெரியது  என்று  விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.
     இந்த  கிரகத்தை  பற்றி  லெய்டன்  வானியல்  ஆய்வு  மையத்தின்  விஞ்ஞானி  மேத்திவ்  கென்வோர்த்  கூறுகையில்,  'ஜே147பி  கிரகம்  பூமியை  விட  10  மடங்கு  அதிக  எடை  கொண்டதாக  இருக்கும்  என்று  தெரிவித்தார்.
--   தினமலர்  திருச்சி 29 -1 -2015. 

Wednesday, June 21, 2017

பார்க்கிங் பிரச்னை.

  பார்க்கிங்  பிரச்னைக்கு  தீர்வு  காணும்  வகையில்  ஒருநபர்  செல்லும்  காரை  ஹூண்டாய்  நிறுவனம்  உருவாக்கி  உள்ளது.
பார்ப்பதற்கு  பெரிய  சைஸ்  முட்டையைபோல  காட்சியளிக்கும்  இந்த  காரில்  ஒருவர்  மட்டுமே  பயணிக்க  முடியும்.  இ4யு  என்று  பெயரிடப்பட்டுள்ள  இந்த  கார்,  எலக்ட்ரிக்  பேட்டரியில்  இயங்கக்கூடியது.  மிகவும்  பார்க்கிங்  நெருக்கடி  மிகுந்த  நகர்புறங்களில்  பயனுள்ளதாக  இருக்கும்  வகையில்  இந்த  முட்டை  கார்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
     இந்த  கார்   24  வோல்ட்  500  வாட்  பாட்டரியில்  இயங்குகிறது.  மணிக்கு  அதிகபட்சமாக  28  கி.மீ  வேகத்தில்  செல்ல  முடியும்.  பின்புற  கரங்களை  மடக்கி  வைக்க  முடியும்  என்பதால்  இந்த  முட்டை  வடிவ  காரை  நிறுத்த  இட  தேவை  மிகவும்  குறைவு.  இந்த  வாகனத்தின்  மேற்புறம்  ஒரு  பெரிய  சைஸ்  ஹெல்மட்டை  போலவே  உள்ளது.
     தெங்கொரியாவில்  உள்ள  கோயாங்  நகரில்  நடந்த  சியோல்  வாகன  கண்காட்சியில்  இந்த  முட்டை  வடிவ  காரை  ஹூண்டாய்  நிறுவனம்  அறிமுகப்படுத்தியது.
--   தினமலர்  திருச்சி 8 -4 -2013.  

Tuesday, June 20, 2017

விண்கல்

விண்கல்  பிடித்து  இழுத்து  வந்து  சந்திரன்  அருகே  நிறுத்த  திட்டம்.
'நாசா'  தீவிரம்
     விண்வெளியில்  பல  சிறிய  மற்றும்  பிரம்மாண்டமான  விண்கற்கள்  சுற்றி  வருகின்றன.  சில  நேரங்களில்  பூமிக்கு  நெருக்கமாக  விண்கல்  வரும்போது,  பூமியில்  அந்த  விண்கல்  மோதுமோ  என்ற  அச்சம்  ஏற்படுக்கிறது.  இதுபோன்ற  பூமியை  நெருங்கி  வரும்  விண்கற்களை  அமெரிக்க  விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனம்  'நாசா'  கண்காணித்து  வருகிறது.
     ஒரு  விண்கல்லில்  விண்வெளி  வீரர்களை  இறக்கி  ஆராய்ச்சி  செய்ய  நாசா  திட்டமிட்டது.  இதற்கு  பல  ஆண்டுகள்  ஆகலாம்.  எனவே,  ரோபா  விண்கலம்  அனுப்பி,  விண்வெளியில்  இருந்து  ஒரு  சிறிய  விண்கல்லை  பிடித்து  இழுத்து  வந்து,  சந்திரன்  அருகே  நிலைநிறுத்த  திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது.
      முதலில்  500  டன்  எடையும்,  25  அடி  குறுக்களவும்  கொண்ட  ஒரு  சிறிய  விண்கல்  தேடிக்  கண்டுபிடிக்கப்படும்.  பின்னர்,  2019ம்  ஆண்டுக்குள்  ரோபா  விண்கலம்  அனுப்பி,  அந்த  விண்கல்  இழுத்து  வரப்பட்டு,  சந்திரன்  அருகே  நிலைநிறுத்தப்படும்.
      இதைத்தொடர்ந்து,  இப்போது  உருவாக்கப்பட்டு  வரும்  ஒரியான்  விண்கலத்தில்  4  விண்வெளி  வீரர்கள் 2021ம்  ஆண்டு  சென்று  விண்கல்லை  சுற்றி  விண்வெளியில்  நடந்து  ஆராய்ச்சி  செய்வார்கள்.  எதிர்காலத்தில்  விண்கல்  மற்றும்  செவ்வாய்  கிரகத்துக்கு  மனிதர்களை  அனுப்பும்  திட்டங்களுக்கு  இந்த  ஆராய்ச்சி  உதவியாக  இருக்கும்.
     விண்வெளியில்  உலாவும்  ஆயிரக்கணக்கான  விண்கற்களில்,  பூமியை  நெருங்கி  வரும்  சரியான  விண்கல்லை  சரியான  நேரத்தில்  கண்டுபிடிப்பது  கடினம்  ஆகும்.  சரியான  விண்கல்  கண்டுபிடிக்கப்பட்டால்,  இழுவைக்  கயிறு  இணைக்கப்பட்ட  வலைப்பை  போன்ற  ரோபோ  விண்கலம்  அனுப்பிவைக்கப்படும்.  வலைப்பையில்  விண்கல்லை  மாட்டி,  ரோபோ  விண்கலம்  இழுத்து  வரும்.  அதை  எங்கு  வேண்டுமானாலும்  நிலை  நிறுத்தலாம்.
     சிறிய  விண்கல்  என்பதால்,  பூமிக்கு  ஆபத்து  ஏற்படாது.  நிறுத்தப்பட்ட  இடத்தில்  இருந்து  விண்கல்  நழுவி  பூமியை  நோக்கி  வந்தால்,  காற்று  மண்டலத்தில்  நுழைந்ததும்  அது  எரிந்து  சாம்பலாகி  விடும்.
--  தினமலர்  திருச்சி 8 -4 -2013.  

Monday, June 19, 2017

எஸ்எம்எஸ் மூலம் செல்போன் சார்ஜ்.

  மின்  இணைப்பு  இல்லாத  கிராமங்களில்  செல்போன்  சார்ஜ்  தீர்ந்துவிட்டால், எஸ்எம்எஸ்  மூலம்  இயங்கும்  சூரிய  ஒளியில்  தயாரிக்கப்பட்ட  மின்சாரத்தை  கொண்டு  செல்போனை  சார்ஜ்  செய்யும்  மையங்களை  இங்கிலாந்தைச்  சேர்ந்த  'புபல்லோ  கிரிட்'  நிறுவனம்  வடிவமைத்துள்ளது.
     மின்  இணைப்பு  இல்லாத  கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள  செல்போன்  சார்ஜ்  மையத்தில்  உள்ள  பேட்டரி,  சூரிய  ஒளியில்  இருந்து  மின்சாரம்  தயாரிக்கும்  பேனலுடன்  இணைக்கப்பட்டிருக்கும்.  சூரிய  ஒளியின்  அளவு  மற்றும்  வெப்பத்தின்  அளவை  பொருத்து  உற்பத்தியாகும்  மின்சாரம்,  பேனலுடன்  இணைக்கப்பட்ட  பேட்டரியில்  சேமிக்கப்படும்.  இப்படி  ஒரு  முறை,  பேட்டரியின்  முழு  அளவுக்கு  மின்சாரம்  உற்பத்தி  செய்யப்பட்டு  சேமிக்கப்பட்டால்  அதிலிருந்து  3  நாட்களுக்கு  செல்போன்களை  சார்ஜ்  செய்து  கொள்ள  முடியும்.
     அந்த  பேட்டரியுடன்  செல்போனை  சார்ஜ்  செய்யும்  'சாக்கெட்'  இணைக்கப்பட்டிருக்கும்.  சார்ஜ்  செய்ய  வேண்டிய  செல்போனில்  இருந்து  அந்த  நிறுவனம்  அறிவித்துள்ள  முறையில்  ஒரு  எஸ்எம்எஸ்  அனுப்பினால்,  சாக்கெட்டின்  மேல்புறத்தில்  இருக்கும்  எல்.ஈ.டி. லைட்  எரியும்.  இதையடுத்து  அந்த  சாக்கெட்டில்  நமது  செல்போனை  பொருத்தி  சார்ஜ்  செய்துகொள்ளலாம்.
     சார்ஜ்  செய்வதற்காக  நமது  செல்போனில்  இருந்து  எஸ்எம்எஸ்  அனுப்பியதும்,  ஒரு  குறிப்பிட்ட  தொகை  நமது  போனில்  உள்ள  டாக்  வெல்யூவில்  இருந்து  கட்டணமாக  கழிக்கப்படும்.  ஒரு  போனில்  இருந்து  ஒரு  முறை  எஸ்எம்எஸ்  அனுப்பினால்,  அந்த  போனை  ஒன்றரை  மணி  நேரம்  வரை  சார்ஜ்  செய்து  கொள்ளலாம்.
     செல்போன்  சார்ஜ்  செய்யும்  மையத்தில்  உள்ள  டவரில்   10  சார்ஜ்  பாயின்ட்கள்  பொருத்தப்பட்டிருக்கும்.  அதில்  இரு  நாளைக்கு  30ல்  இருந்து  50  செல்போன்கள்  வரை  சார்ஜ்  செய்யலாம்.
-- தினமலர்  திருச்சி  12-3-2013.        

Sunday, June 18, 2017

தமிழ் ஆண்டுகள் அறுபது

 தமிழ்  ஆண்டுகள்  அறுபது பெயர்களால்  அமைகின்றன.  'பிரபவ'  என்பது  முதல்  ஆண்டின்  பெயர்.  அக்ஷய  என்பது  அறுபதாவது  ஆண்டு  பெயர்.  மேலும்,  வளருவது  என்பது  இதன்  பொருள்.  இவற்றுள்  முதல்  இருபது  'உத்தமம்'  எனவும்,  இடையில்  இருபது  'மத்தியம்'  என்றும்,  இறுதி  இருபது  'அதமம்'  என்றும்  பிரிக்கப்படும்.  ஒவ்வொரு  ஆண்டுக்கும்  உரிய  பலங்களைச்  சொல்லும்  வெண்பாக்களும்  உண்டு.
-- புலவர் . வே. மகாதேவன்.
-- தினமலர்,  தமிழ்ப்  புத்தாண்டு  சிறப்பு மலர்.  14-4-2013.  

Saturday, June 17, 2017

வெளிநாட்டுக் கோயில்கள்

மலேஷியா  பத்துமலை  முருகன்  கோயில்!
     உலகிலேயே  மிக  உயரமான  முருகன்  சிலை ( 140  அடி )  மலேஷியாவின்  தலைநகர்  கோலாலம்பூரிலிருந்து  13 கி.மீ தூரத்தில்  பத்துமலை  என்ற  இடத்தில்  உள்ளது.
     திருவாரூரைச்   சேர்ந்த  சிற்பி  தியாகராசன்  மற்றும்  14  உதவியாளர்களுடன்  3  ஆண்டு  கடின  உழைப்பில்  உருவானது  இந்த  முருகன்  சிலை.  மலேஷியாவின்  கின்னஸ்  புத்தகத்தில்  இச்சிலைப்  பற்றிய  விவரங்கள்  இடம்பெற்றுள்ளன.
     29-1-2006ம்  ஆண்டு  சிலை  திறப்பு  நடைபெற்றது.  தரையில்  இருந்து  400  அடி  உயரத்தில்  குகையில்  அமைந்திருக்கும்  முருகனை  தரிசிக்க  272  படிக்கட்டுகள்  ஏறிச்  செல்ல  வேண்டும்.  குகையில்  வேலாயுதம்  கோயிலும்  அலுவலகமும்  உள்ளது.
கோயில்  வரலாறு :
     தமிழகத்தில்  திருமலைராயன்  பட்டினம்  ஊரைச்  சேர்ந்த  தம்புசாமி  பிள்ளை,  கந்தப்பத்தேவர்  துணையுடன்  குகைக்  கோயிலில்  முதலில்  வேல்  மட்டும்  நட்டு  வணங்க  தொடங்கினார்கள்.
     மலைமேல்  தமிழ்க்கடவுள்  முருகனின்  வேல்  இருப்பதை  அறிந்த  பக்தர்கள்  கஷ்டப்பட்டு  மலையேறி  'வேல்'  வழிபாடு  செய்து  மகிழ்ந்தனர்.  அப்போது  அவ்வேலை  அகற்ற  கோலாலம்பூர்  ஆட்சியர்  ஜோஸ்துரை  முனைந்தார்.  அதை  பக்தர்கள்  எதிர்த்தனர்.  எனவே  வழக்குப்  பதிவு  செய்யப்பட ,  இறுதியில்,  முருகபக்தர்களுக்கு  ஆதரவாக  தீர்ப்பு  வந்தது.
     அதன்பின்  1891ம்  ஆண்டு  திராவிடக்  கட்டடக்  கலையின்  அமைப்பில்  கோயில்  கட்டப்பட்டது.  1892ம்  ஆண்டில்  இருந்து  தை  பூச  விழா  இங்கு  கொண்டாடப்பட்டு  வருகிறது.
     1920ம்  ஆண்டு  மலைமேல்  செல்லவும்,  கீழே  இறங்கவும்  படிக்கட்டுகள்  அமைக்கப்பட்டன.  1939ல்  அதனருகிலேயே  இன்னொரு  படிக்கட்டு  வரிசையும்,  1975ல்  மூன்றாவது  படிக்கட்டுகளும்  கட்டப்பட்டன.  பின்னர்  கோயிலுக்கு  வெள்ளி  ரதம்  உருவானது.
     பத்துமலை  அடிவாரத்தில்  50  அடி  அனுமன்  சிலை,  விநாயகர்  கோயில்,  வள்ளி,  தெய்வானையுடன்  கூடிய  சுப்ரமண்யர்  கோயில்  உண்டு.  அங்குள்ள  கலைக்கூடத்தில்  1330  திருக்குறள்  மற்றும்  அவ்வையார்,  திருவள்ளுவர்,  வள்ளலார்,  காந்தி,  நாயன்மார்கள்,  ராமாயண  சிற்பங்கள்  இருக்கின்றன.
     பத்துமலை  முருகனுக்கு  இந்துக்கள்  மட்டுமல்ல,  சீனர்களும்  மற்ற  மதத்தவரும்  ஈடுபாடுகொண்டு  விரதம்  இருந்து  நேர்த்திக்கடன்  செலுத்துகின்றனர்.
-- ந.சண்முகம்,  திருவண்ணாமலை.
-- தினமலர்  பக்திமலர்.  11-12-2014.      

Friday, June 16, 2017

பொருட்களின் விலையை போனில் பார்க்க

 சில  பொருட்களில்  அதன்  விவரங்களை  பார்கோடுகளில்  எழுதியிருப்பார்கள்.  அதை  நாம்  சாதாரணமாக  புரிந்து  கொள்ள  முடியாது.  இதற்கு  தீர்வாக  இருக்கிறது  இந்த  குட்டி  கருவி.  கடைகளில்  பொருட்களை  வாங்குகிறோம்  அல்லது  அந்த  பொருட்களைக்  குறித்த  விவரம்  அறிந்து  கொண்டு  வாங்க  வேண்டும்  என்றால்,  இந்த  கருவியைக்  கொண்டு  பார்  கோடை  ஸ்கேன்  செய்தால்  போதும்.  நமது  ஸ்மார்ட்  போனுடன்  இணைக்கப்பட்டிருப்பதால்  அனைத்து  விவரங்களும்  ஸ்மார்ட்  போனுக்கு  வந்துவிடும்.  பிறகு  தேவையெனில்  வாங்கிக்கொள்ளலாம்.
எக்கோ  ஏடிஎம்
     வங்கி  கணக்கிலிருந்து  பணம்  எடுக்க  ஏடிஎம்  பயன்படுத்துவோம்.  ஆனால்  ஏதாவது  பொருட்களை  விற்று  பணம்  வாங்க  வேண்டும்  என்றால்  வங்கி  அல்லது  அடகு  கடைகள்தான்  நமது  தேர்வாக  இருக்கும்.  ஆனால்  இதற்கும்  ஒரு  இயந்திரம்  வந்துவிட்டது.  கையில்  செல்போன்தான்  இருக்கிறது.  அதை  வைத்து  பணம்  வாங்க  வேண்டும்  என்றால்  இந்த  இயந்திரத்தில்  வைத்துவிட்டால்  போதும்.  இந்த  பொருளுக்கு  இவ்வளவு  கிடைக்கும்  வாங்கிக்  கொள்கிறீர்களா  என  கேட்கிறது.  ஓகே  என்றால்  போனை  எடுத்துக்  கொண்டு  பணம்  கொடுத்துவிடுகிறது.  இனி  பொருட்களை  விற்க  அடகு  கடைக்கு  அலைய  வேண்டிய  தேவையில்லை.
--  - வணிக வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள்,  ஜனவரி  26, 2015.     

Thursday, June 15, 2017

தொழில் நுட்பம்

தொடாமல்  தொழில்  நுட்பம்
     தொடுதிரை  ஆதிக்கத்தின்  அடுத்த  தலைமுறை  தொழில்  நுட்பமாக  உருவாகியுள்ளது  இந்த  கார்  தொழில்  நுட்பம்.  வாகன  ஓட்டுபவருக்கு  எதிரே  உள்ள  மானிட்டரை  தொடாமலேயே  அதில்  உள்ள  வசதிகளை  இயக்கலாம்.  உடல்  அசைவுகள்  மூலம்  நமது  கட்டளைகளை  இது  எடுத்துக்  கொள்ளும்.
ஒயர்  இல்லாமல்  சார்ஜர்
     ஒயர்கள்  இல்லாமல்  செல்போன்  சார்ஜ்  செய்வதற்கான  தொழில்  நுட்பத்திற்கு  முக்கியத்துவம்  கொடுத்து  வருகிறது  டெக்  உலகம்.  செல்போன்  பின்புறம்  உட்பக்கமாக  சிறு  கருவி  பொருத்தப்படுகிறது.  நாம்  போனை  கீழே  வைப்பதுபோல  சார்ஜர்  படுக்கையில்  போனை  வைத்து  விட்டால்  சார்ஜ்  ஏறிவிடும்.
கார்  கீ  வாட்ச்
     கை  கடிகாரத்தை  போல  கையில்  அணிந்து  கொள்ளும்  கண்ட்ரோல்  சாதனத்தின்  மூலம்  காரின்  கதவை  திறப்பது,  மூடுவதும்  இஞ்சின்  ஸ்டார்ட்  செய்வது,  ஏசி கண்ட்ரோல்  உட்பட  பல  வேலைகளை  செய்ய  முடியும்.  கார்  எந்த  பாதையில்  செல்ல  வேண்டும்  என்பதையும்  இதன்  மூலம்  கண்காணிக்கலாம்.
-- வணிக வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள்,  ஜனவரி  26, 2015. 

Wednesday, June 14, 2017

'நாதஸ்வர இசைக் கருவி'

   நாதஸ்வரத்தின்  நீளம்  பலவாறாக  இருக்கும்.  மிகப்  பழங்காலத்தில்  18.25  அங்குல  நீளமாக  இருக்கும் ( சுருதி 4.5 கட்டை ).
பல  மாறுதல்களுக்குப்  பின்  1941-ம்  ஆண்டு  திருவாவடுதுறை  டி.என்.ராஜரெத்தினம்  பிள்ளை  பல  முயற்சிகள்  செய்து  34.5  அங்குல  நீளமும்  2  கட்டை  சுருதியும்  கொண்ட   நாதஸ்வரத்தைக்  கொண்டுவந்தார்.  இதைப்  பாரி   நாதஸ்வரம்  என்பர்.  நீளம்  குறைந்த   நாதஸ்வரம்  திமிரி  எனப்படும்.  நீளம்  குறைந்தால்  ஒலி  உரத்து  எழும்.  சுருதி  அதிகம்.
    'இராஜவாத்தியம்'  என்று  சிறப்பிக்கப்பட்டுள்ள  இதை   நாதஸ்வரம்,  நாகசுரம்,  நாதசுரம்,  நாகஸ்வரம்,  நாயனம்  என்று  பலவாறு  அழிக்கப்படுவது  உண்டு.  இக்கருவி  பொதுவாக  ஆச்சா  மரத்தினால்  நரசிங்கன்பேட்டை ,  தேரழுந்தூர்,  வாஞ்சூர்,  திவானைக்காவல்  போன்ற  ஊர்களில்  அதற்கெனவுள்ள  ஆச்சாரிகளால்  மிகவும்  சிறப்பாகச்  செய்யப்படுகிறது.  அபூர்வமாக  வெள்ளி,  தங்கத்தினாலும்  இக்கருவி  செய்யப்பட்டது.  ஆண்டாங்கோவில்  வீராசாமி  பிள்ளை  பொன்னால்  ஆன   நாதஸ்வரம்  வைத்திருந்தார்.  ஆழ்வார்திருநகரி,  திருவாரூர்,  கும்பகோணம்,  கும்பேஸ்வரர்  கோயில்களில்  கருங்கல்லில்  செய்யப்பட்ட   நாதஸ்வரங்கள்  வாசிக்கப்படுகின்றன.
      நாதஸ்வரத்தில்  காற்றை  உட்செலுத்தி  ஊதுவதற்கு  உதவுவது  'சீவாளி' ( ஜீவஒலி).  காவிருக்  கரையில்  விளையும்  கொருக்கள்  புல்லை  வெட்டியெடுத்து  நிழலில்,  பனியில்,  இளஞ்சூரிய  வெயிலில்  என  15. 15 நாட்கள்  காயவைத்து,  வெட்டி  சிறு  துண்டுகளாக்கி  நெல்  மற்றும்  மாமிசத்தோடு  சேர்த்து  வேகவைத்து  ஆறு  மாதம்  பதப்படுத்தி  உருவாக்குவார்களாம்.
திருவாவடுதுறை,  திருவீழிமிழலை,  திருவிடைமருதூர்  போன்ற  ஊர்களில்  சீவாளி  செய்யப்படுகின்றன.
--  கல்கி.  10- ஆகஸ்ட்  2014.
-- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன். 

Tuesday, June 13, 2017

காட்டிடை ஆடும் கடவுள்!

   திவாலங்காடு  -  ஆலங்காடு,  திருவெண்பாக்கம்  -  இலந்தைக்காடு,  திருவெவ்வூர்  -  ஈக்காடு,  திருப்பாசூர்  -  மூங்கிற்காடு,
திருவிற்கோலம்  -  தர்ப்பைக்காடு.
-- ஆர்.கே.லிங்கேசன்,  மேலகிருஷணன்புதூர்.
கீதையின்  சாரம்!
     சுவாமி  சிவானந்தரிடம்  ஒருவர்,  "கீதையின்  சாரம்  என்ன?"  என்று  கேட்டார்.
     அதற்கு  சிவானந்தர், "அன்பி  செய்,  சேவை  செய்,  பிறருக்கு  வழங்கு  என்ற  மூன்று  சொற்கள்தான்  கீதையின்  சாரம்! "  என்றார்.
-- எஸ்.ராஜகுமார், போரூர்.
இரட்டைப்  பார்வை  நந்தி!
     நாகை  நீலாயதாட்சி  ஆலயத்தில்  நந்தி தன்  இடது  கண்ணால்  சிவனையும்,  வலது  கண்ணால்  அம்பிகையையும்  தரிசித்தபடி  காட்சியளிக்கிறார்.  இதனால்  இவர்  'இரட்டைப்  பார்வை  நந்தி' என்றே  அழைக்கப்படுகிறார்.
-- நெ.இராமன், சென்னை.
கிரீடத்திற்கு  பதில்!
     பண்டரிபுரத்தில்  அபிஷேக  நேரத்தில்  பண்டரிநாதன்  தலையில்  பாணலிங்கம்  உள்ளதை  தரிசிக்கலாம்.  நரஹரி  என்ற  பக்தருக்காக  பாண்டுரங்கன்  கிரீடத்துக்கு  பதில்  பாணலிங்கத்தோடு  காட்சி  தந்ததாக  வரலாறு  கூறுகிறது.
-- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  29-1-2015.     

Monday, June 12, 2017

இது 'கரடி விடுறது' இல்லே !

*   சைபீரியர்கள்  கரடிகளைத்  தங்கள்  முன்னோர்களாக  வணங்குகின்றனர்.
*   பின்லாந்தின்  தேசிய  விலங்கு  கரடி.
*   கருப்புக்   கரடிகள்  அற்புதமாக  மரம்  ஏறும்,  அழகாக  நீச்சலடிக்கும்.
*    கரடிகளுக்கு  மோப்பச்  சக்தி  அதிகம்.  ஒரு  இடத்தில்  மனிதன்  கடந்து  சென்ற  14  மணி  நேரத்துக்குப்  பிறகும்
     கண்டுபிடிக்கும்.  சுமார்  64  கிலோ  மீட்டர்  தூரத்தில்  இருக்கும்  உணவையும்   கரடிகள்  கண்டுபிடித்து  விடும்.
*   குகைகளில்  இருக்கும்போது   கரடிகள்  நீர்  குடிக்காது.  உணவு  உட்கொள்ளாது,  மலம்  மற்றும்  சிறுநீர்  கழிக்காது.
*    கரடிகளின்  பாதம்  மிக  வலுவானது;  எதையும்  எளிதாக  உடைத்து  விடும்.
*    கரடிகள்  வட அமெரிக்கா,  தென் அமெரிக்கா,  ஐரோப்பா  மற்றும்  ஆசியாவில்  காணப்படும்.
*   பத்துக்கும்  மேற்பட்ட  கரடி  இனங்கள்  உண்டு.
-- கல்கி.  10- ஆகஸ்ட்  2014.
-- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன். 

Sunday, June 11, 2017

பூஜை, ஜபம், தியானம்!

     பகவான்  ரமணரை  சந்தித்த  பக்தர்  ஒருவர், "பகவானே!  பூஜை,  ஜபம்,  தியானம்  இவற்றின்  தன்மைகளைப்  பற்றிக்  கூறுங்கள்!"  என்று  கேட்டார்.
    "உடல்,  வாக்கு,  மனம்  என்ற  மூன்றும்  பங்கு  பெறுவது  பூகை.  வாக்கும்,  மனமும்  மட்டும்  ஈடுபடுவது  ஜபம்.  கடைசியில்  மனம்  மட்டும்  தனித்து  இயங்கி  நிற்பதே  தியானம்"  என்றார்  ரமணர்.
-- டி.பூபதிராவ்,  காஞ்சிபுரம்.
மும்மூர்த்திகளும்  லிங்க  வடிவில்!
     திருவானைக்காவல்  அகிலாண்டேஸ்வரி  கோயில்  ஆயிரங்கால்  மண்டபத்துக்கு  எதிரே  திரிமூர்த்தி  கோயில்  உள்ளது.  இங்கு  மும்மூர்த்திகளும்  லிங்க  வடிவில்  காட்சி  தருகின்றனர்.
-- மல்லிகா  அன்பழகன்,  சென்னை- 78.
உப  வேதங்கள்
     வேதங்கள்  நான்கு  என்று  கேள்விப்பட்டிருக்கிறோம்.  அவை  தவிர  நான்கு  உபவேதங்கள்  இருக்கின்றன.  அவை :
1.   ஆயுர்வேதம்:  உடலை  நோய்களிலிருந்து  காப்பாற்றி  ஆயுளை  அதிகரிக்கும்  மருத்துவம்.
2.   தனுர்  வேதம் :  தற்காத்துக்  கொள்ளும்  போர்ப்  பயிற்சிகளைக்  கற்றுத்  தருவது.
3.   காந்தர்வ  வேதம் :  மனதிற்கு  இன்பமூட்டும்  இசை,  நடிப்பு,  நடனம்  முதலியவை.
4.   அர்த்த  வேதம் :  பொருள்களைச்  சம்பாதிக்கும்  உபாயங்களைத்  தெரிவிப்பது.
-- ஏ.கே.என்.,  டி.ஆர். பட்டினம்.
--   குமுதம்  பக்தி  ஸ்பெஷல்.  29-1-2015.     

Saturday, June 10, 2017

கொடிமரம்

"கோயிலில்  கொடிமரம்  இருப்பதன்  தத்துவம்  என்ன?"
     "ஆலயம்  புருஷாகரம்  என்று  சாஸ்திரம்  கூறுகிறது.  இந்த  வார்த்தையின்  அர்த்தம்  என்னவென்றால்,  ஒரு  மனித  உடலைப்  போன்றதே  ஆலயம்.  கோயிலில்  கருவறை  என்பது  மனிதனின்  தலை  பகுதியைப்  போன்றது.  அதுபோல,  அர்த்தமண்டபம்  மார்புப்  பகுதி.  மார்பின்  இடப்புறம்  இதயம்  துடிப்பதுபோல்  அங்கு  நடராஜர்  பெருமான்  நடமாடிக்கொண்டிருப்பார்.  அதனைத்  தொடர்ந்து  வயிற்றுப்  பகுதியில்  நாடி  எனப்படும்  தொப்புள்  பகுதியாக  இருப்பது  கொடிமரம்.  ராஜகோபுரம்  இறைவன்  திருவடிகளாகும்.  இது  ஆலய  அமைப்பின்படி  கொடிமரம்  நாடி  பிரதேசமாகும்.  பொதுவாக  திருவிழாக்களில்  கொடியேற்றம்  செய்வதற்கும்  பயன்படுகிறது.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத  சிவாச்சாரியார்.  ( அறிவோம்!  தெளிவோம் ! ).
-- தினமலர்  பக்திமலர்.  8-1-2015    

Friday, June 9, 2017

பாகப் பிரிவினை !

  அந்த  ஊரின்  பெரிய  செல்வந்தர்,  தன்  நான்கு  பிள்ளைகளை  அழைத்து,  'என்  காட்டிலுக்கு  அடியில்  பூமியில்  புதைத்து  வைத்துள்ள  நான்கு  பானைகளில்  உள்ளபடி  சொத்தைப்  பிரித்து  எடுத்துக்  கொள்ளுங்கள்'  எனக்கூறி  உயிர்  துறந்தார்.
     அவரது  இறுதிச்சடங்குகள்  முடிந்து,  சில  நாட்களுக்குப்  பிறகு  மகன்கள்  அந்த  நான்கு  பானைகளை  வெளியே  எடுத்தனர்.  வரிசையாக  ஒவ்வொரு  பானையிலும்  மண்,  கரிக்கட்டை,  வைக்கோல்,  எலும்புத்  துண்டு  என  இருந்தன.
     ஒன்றும்  புரியாமல்  அந்தப்  பானைகளை  எடுத்துச்  சென்று  ஓர்  துறவியிடம்  காட்டி,  விளக்கம்  கேட்டனர்.
     வயதில்  மூத்தவனுக்கு  மண்  பானை,  இரண்டாமவனுக்கு  வைக்கோல்  பானை,  மூன்றாமவனுக்கு  எலும்புத்துண்டு  பானை,  நான்காமவனுக்கு  கரித்துண்டு  பானைகளைக்  கொடுத்தார்.  ஒன்றும்  புரியாது  நால்வரும்  விழிக்க,  துறவி  விளக்கினார்.
     மண் - செல்வந்தரின்  நிலங்கள்,  வைக்கோல் - தானியங்கள்,  எலுபுத்துண்டு - கால்நடைகள்,  கரித்துண்டு - தங்கம்,  வெள்ளி  பாத்திரங்களை  அடையலாம்  எனக்  கூறினார்.  நான்கு  சகோதரர்களும்  அவ்வாறே  தம்  தந்தையின்  சொத்துகளைப்  பிரித்து  எடுத்துக்கொண்டனர்.
-- வீ.லோகநாதன் ,  அம்பத்தூர்  (பக்திக்  கதைகள்)
-- குமுதம்  பக்தி  ஸ்பெஷல்.  29-1-2015.    

Thursday, June 8, 2017

ஹோண்டாவின் ரைடர்

   ஒருவர்  மட்டுமே  உடகார்ந்து  பயணிக்கக்கூடிய  ரைடரை  விரைவில்  கொண்டுவர  உள்ளது  ஹோண்டா.  அலுவலகத்தில்  அடிக்கடி  நடந்து  நடந்து  அலுத்து  போனவர்கள்,  ஓரிடத்திலிருந்து  இன்னொரு  இடத்திற்கு  அடிக்கடி  செல்ல  வேண்டியிருப்பவர்களுக்கு  இந்த  வாகனம்  உதவும்.
மினி  செட்டாப்  பாக்ஸ்
     ஜியோமி  நிறுவனம்  மினி  செட்டாப்  பாக்ஸ்  ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது.  சார்ஜரைவிடவும்   மிகச்  சிறிய  அளவில்  இருக்கும்  செட்டாப்  பாக்ஸ்  மூலம்  டிவி  நிகழ்க்சிகளை  கண்டுகளிக்கலாம்.  திரைப்படங்கள்,  ஸ்போர்ட்ஸ்  சேனலைப்  பார்க்க  முடியும்.
வயர்லெஸ்  ஸ்பீக்கர்
     ஸ்பீக்கர்  தயாரிப்பில்  முன்னணி  நிறுவனமான  கிரியேட்டிவ்  கையடக்கமான  ஸ்பீக்கரை  அறிமுகம்  செய்துள்ளது.  வயர்லெஸ்  முறையில்  இந்த  ஸ்பீக்கர்  இயங்கும்.  முற்றிலும்  ஸ்டெயின்லெஸ்  ஸ்டீலால்  இந்த  ஸ்பீக்கர்  தயாரிக்கப்பட்டுள்ளது.
--  வணிக  வீதி  இணைப்பு.
--   'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  19,  2015.  

Wednesday, June 7, 2017

தானியங்கி கார்கள்

    உலகின்  முன்னணி  கார்  தயாரிப்பு  நிறுவனங்கள்  தானியங்கி  கார்  தயாரிப்பு  முயற்சியில்  இறங்கியுள்ளன.  கூகுள்  நிறுவனம்  தனியாக  செல்ப்  டிரைவிங்  கார்களுக்கான  முயற்சியிலும்  இறங்கியுள்ளது.  கார்  தயாரிப்பு  நிறுவனங்களோ  டிரைவர்  இல்லாமல்  முழுக்க  முழுக்க  சென்சார்கள்  மூலம்  இயங்கக்கூடிய  வாகனங்களை  தயாரிப்பதற்கான  முயற்சியில்  ஈடுப்படுள்ளன.  பிஎம்டபிள்யூ  நிறுவனம்  இதற்கான  முயற்சியில்  ஈடுப்பட்டுள்ளது.
     ஜெர்மனி  மற்றும்  ஐரோப்பிய  சாலைகளில்  இந்த  வகை  கார்களை     பரிசோதித்துள்ளது.  அதிலிருந்து  மேம்படுத்திய  மாடலை  2016ல்  சீன  சாலைகளில்  பரிசோதிக்க  உள்ளதாக  தெரிவித்துள்ளது.
கண்ணாடியில்  திரைப்படம்
     கூகுள்  கண்ணாடி  மூலம்  உலகை  கண்ணருகில்  கொண்டுவந்துவிடலாம்  என்பது  ஒருபக்கம்.  இன்னொருபக்கம்  ஒரு  ஹெட்போனை  மாட்டிக்கொண்டு  இசையை  ரசிப்பது  மட்டுமல்ல,  இனி  படங்களையும்  பார்த்துவிடலாம்.  கண்ணையும்  மறைப்பதுபோல  உள்ள  இந்த  ஹெட்செட்டில்  திரைப்படத்தைப்  பார்ப்பதற்கான  திரை  ஒன்று  உள்ளது.  கண்ணுக்கருகில்  வைத்து  பார்ப்பதால்  ரெட்டினாவை  பாதிக்காத  வண்ணம்  இந்த  திரை  தயாரிக்கப்பட்டிருக்கிறது.  கம்ப்யூட்டர்,  தொலைக்காட்சி  பெட்டி  போன்றவற்றை  நேரடியாக  பார்ப்பதைவிட  இணைப்பு  கொடுத்து  பார்க்கலாம்.  அடுத்த்வர்களுக்கு  தொந்தரவு  கொடுக்காமல்  கண்டு  ரசிக்க  இந்த  கருவி  பயன்படும்.
--  வணிக  வீதி  இணைப்பு.
--   'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  19,  2015.    

Tuesday, June 6, 2017

எதிர்கால சமையலறை

  நவீன  வீடுகளில்  சமையலறை  என்று  தனியாக  அறை  ஒதுக்காமல்  டைனிங்  டேபிளுக்கு  பக்கமாக  கொஞ்சம்  இடத்தை  மட்டும்  ஒதுக்கி  இருப்பார்கள்.
     இதற்கு  ஏற்ப  நவீன  சமையல்  சாதனங்கள்  இருக்கும்.  ஆனால்  வேர்ல்ஃபூர்  நிறுவனம்  எதிர்கால  சமையலறையை  வடிவமைத்துள்ளது.
     சமைப்பதற்கென்று  தனியாக  இடத்தை  ஒதுக்கத்  தேவையில்லை.  நாம்  எந்த  இடத்தில்  இருந்தாலும்  அந்த  இடத்திலேயே  சமைத்துக்  கொள்ளலாம்.
     சமையல்  மேடையோ,  தனியாக  இடமோ  தேவையில்லை.  சாப்பிடும்  மேசையிலேயே  சமைத்துக்  கொள்ளலாம்.  சுற்றுலா  செல்லும்போது  வீட்டுச்  சாப்பாடு  வேண்டும்  என்று  அடுப்பை  தூக்கிச்  சுமக்க  தேவையில்லை.  பாத்திரத்தை  வைப்பதற்கு  ஏற்ற  சமதளம்  போதும்.  முழுக்கவும்  ஸ்மார்ட்  போன்  மூலம்  இதை  இயக்க  வேண்டும்.
     மேசையில்  தெரியும்  திரையின்  மூலமும்  இதை  இயக்கலாம்.  லேசர்  கதிர்களால்  இந்த  சமையல்  மேடை  செயல்படும்.  அடுத்த  பத்து  வருடங்களில்  இந்த  முறையில்  சமையல்  வேலைகள்  நடப்பதற்கான  சாத்தியங்களும்  உள்ளன.
--  ( தொழில் நுட்பம் ).  வணிக  வீதி  இணைப்பு.
--   'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  19,  2015.   

Monday, June 5, 2017

பெயர் வந்தது எப்படி?

  இந்து  சமய  வானவியல்  சாஸ்திரப்படி  "சௌரமானம்"  என்றும்  "சாந்த்ரமானம்"  என்றும்  வருஷத்தைக்  கணக்குப்  பண்ணுவதில்  இரண்டு  முறை  உள்ளது.  சூரியகதியை  கொண்டு  மாதவருடங்களை  கணக்கிடும்  முறை  சௌரமானம்  எனப்படும்.  சூரியன்  ஒரு  ராசியில்  நுழைந்து,  அங்கு  சஞ்சரித்து,  அங்கிருந்து  அடுத்த  ராசிக்கு  நுழையும்  முன்  வரை  உள்ள  காலம்  ஒரு  மாதம் (  சூரிய  மாதம் )  எனப்படும்.  எனவே  சூரிய  சித்தாந்த  நூலின்படி,  சூரியன்  சஞ்சாரம்  செய்து  கொண்டிருக்கும்  அந்த  ராசியின்  பெயரே  அந்த  மாதத்தின்  பெயராகும்.  சௌரமான  முறைப்படி  மேஷம்,  ரிஷபம்,  மிதுனம்,  கடகம்,  சிம்மம்,  கன்னி,  துலாம்,  விருச்சிகம்,  தனுசு,  மகரம்,  கும்பம்,  மீனம்  என  பன்னிரண்டு  ராசியின் பெயர்களே  மாதங்களின்  பெயர்களாகும்.  சூரியன்  ஒன்பதாவது  ராசியான  தனுர்  ராசியில்  பயணம்  செய்யும்  காலம்  "தனுர்  மாதம்"  எனப்படும்.
     சந்திரகதியை  கொண்டு  மாதவருடங்களை  கணக்கிடும்  முறை  சாந்த்ரமானம்  எனப்படும்.  ஒரு  கிருஷ்ணபக்ஷம் ( பௌர்னமி  தொடங்கி  அமாவாசை  வரை )  மற்றும்  சுக்லபக்ஷம் (  அமாவாசை  தொடங்கி  பௌர்ணமி  வரை )  முழுவதும்  சேர்த்து  இருக்கும்  காலம்  ஒரு  மாதம் ( சந்திர  மாதம் )  என  கணக்கிடப்படுகிறது.  பெரும்பாலும்  ஒரு  கிருஷ்ணபக்ஷ  ப்ரதமையிலிருந்து  அடுத்த  கிருஷ்ணபக்ஷ  ப்ரதமை  வரை  ஒரு  மாதம்  என்ற  கணக்கு  உள்ளது.
     ஒரு  சில  வழக்கத்தில்  ஒரு  பௌர்ணமியிலிருந்து  அடுத்த  பௌர்ணமி  வரை  ஒரு  மாதம்  என  கணக்கு  உள்ளது.  சாந்த்ரமான  முறைப்படி  எந்த  நக்ஷத்திரம்  பௌர்ணமியன்று  சந்திரனுக்கு  அருகே  உள்ளதோ  அந்த  நக்ஷத்திரத்தின்  பெயரையே  அந்த  மாதத்தின்  பெயராக  வைப்பார்கள்.சாந்த்ரமான  முறைப்படி  வருடப்பிறப்பிலிருந்து  ஒன்பதாவது  மாதத்தில்  பௌர்ணமியன்று,  சந்திரனுக்கு  அருகே  உள்ள  நக்ஷத்திரம் "ம்ருகசீர்ஷம்"  ஆகும்.  ஆகவே  இந்த  மாதத்தின்  பெயர்  "மார்க்கசீர்ஷம்."  மார்க்கசீர்ஷம்  மருவி  மார்கழி  ஆகிவிட்டது.  எனவே  சௌர்மானப்படி  அழைக்கப்படும்  தனுர்  மாதம்,  சாந்த்ரமானப்படி  மார்கழி ( மார்கசீர்ஷம் )  மாதம்  ஆகும்.
-- கார்த்திக்  ஜெயராமன்.  (  ஆனந்த ஜோதி ).  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி  8,  2015. 

Sunday, June 4, 2017

மனிதத் தோல் போர்த்திய மிருகம்

"ஏஷாம்  ந  வித்யா  ந  தபோ  ந  தானம்,
 ஞானம்  ந  ஷீலம்  ந  குணோ  ந  தர்ம;
 தே  மர்த்யலோகே  புவி  பாரபூதா
 மனுஷ்யரூபேண  ம்ருகாஸ்சரந்தி"
என்று  ஒரு  ஸ்லோகம்.
இதன்  விளக்கம் :
     பசுத்தோல்  போர்த்திய  புலியைப்  பற்ரி  நாம்  படித்திருக்கிறோம்.  மனிதத்  தோல்  போர்த்திய  மிருகங்கள்  எவை  என்றும்,  நம்  பெரியோர்களால்  குறிப்பிடப்படிருக்கிறார்கள்.
     படிக்காதவர்கள்,  தியானம்  செய்யாதவர்கள்,  தானம்  கொடுக்காத  கஞ்ச  மகா  பிரபுக்கள்,  நற்குணம்  இல்லாதவர்கள்,  நல்ல  பண்பாடு  இல்லாதவர்கள்,  தார்மீக  வழியில்  நடக்காதவர்கள்  ஆகியோரே  மனிதத்  தோல்  போர்த்திய  மிருகங்கள்  ஆவார்கள்.
-- சித்ரா  நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! ).
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஜூன், 3,  2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

Saturday, June 3, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1.   லலிதாம்பிகையைச்  சுற்றி  வீற்றிருப்பவர்கள்... எட்டு  வாக்தேவதைகள்.
2.   பகவத்கீதையின்  வேறு  பெயர்கள்... ஹரி  கீதை,  வியாசகீதை.
3.   புனித  தீர்த்தங்களில்  நீராடுவதை,  கிரியா  ஸ்நானம்  என்பர்.
4.   வைராக்யம்  என்பதன்  பொருள்,  ஆசையற்ற  மனநிலை.
5.   வசிஷ்டர்  ராமனுக்கு  உபதேசித்த  அறிவுரை  அடங்கிய  நூல்,  யோக  வசிஷ்டம் ( ராமகீதை ).
6.   கொடிய  விலங்குகளை  அடக்க  உதவும்  சித்தி ( சித்து ),  வாசித்வம்.
7.   காசியில்  குமரகுருபரர்  அடக்கிய  விலங்கு ...  சிங்கம்.
8.   சாஸ்திரப்படி  உலகிலுள்ள  உயிர்களின்  எண்ணிக்கை ...  84  லட்சம்.
9.   கையால்  வழங்கும்  தீட்சை ... ஹஸ்த  மஸ்தக  தீட்சை.
10. பிநாகம்  என்ற  வில்  யாருக்குரியது?...சிவன்.
-- அர்ச்சனைப்பூக்கள் .
-- தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஜூன், 3,  2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

Friday, June 2, 2017

பூணூல் அணிவதன் நோக்கம்.

  இது  வேதம்  பயிலவும்  வேதநெறி  நிற்பதற்கும்  வழங்கப்படுகின்ற  ஓர்  அதிகார  அடையாளம்.
     இது  பற்றி  இரு  இடங்களில்  திருமூலர்  திருமந்திரத்தில்  சொல்கிறார்:
     பூணூலும்,  குடுமியும்  வேதாந்தைத்தையும்  ஞானத்தையும்  உணர்த்தும்  அடையாளங்களாக,  அந்தணர்களுக்கு  உரியது  என  'அந்தணர்  ஒழுக்கம்'  எனும்  பகுதியிலும்,  6ம்  தந்திரத்தில்  திருநீறு  அதிகாரத்தில்,
    'நூலும்  சிகையும்  உணரார்  நின்  மூடர்கள்
    நூலது  வேதந்தம்  நுண்சிகை  ஞானமாம்'
எனவும்  இதன்  மகத்துவத்தைக்  குறிப்பிடுகிறார்.
-- ( அறிவோம் !  தெளிவோம் ! ).
-- மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
--  தினமலர் பக்திமலர்.  15-1- 2015. 

Thursday, June 1, 2017

அபிஷேகத் திரவியம்

 எண்ணை,  மாக்காப்பு,  நெல்லிக்காப்பு,  மஞ்சள்காப்பு,  பஞ்சகவ்யம்,  ரசபஞ்சாமிர்தம்,  பல  பஞ்சாமிர்தம்,  பால்,  தயிர்,  நெய்,  தேன்,  சர்க்கரை,  கருப்பஞ்சாறு,  எலுமிச்சைச்  சாறு,  நாரத்தைச்  சாறு,  தமரத்தம்சாறு,  குளஞ்சிச்  சாறு,  மாதுளம்சாறு,  இள நீர்,  சந்தனம்  முதலியன.
மங்கலம்
     சாமரம்,  நிரைகுடம்,  கண்ணாடி,  தோட்டி ( அங்குசம் ),  முரசு,  விளக்கு  கொடி,  இனைக்கயல் ( இன்னொரு  வகை ),  இடபம்,  சீவற்சம்,  சங்கு,  சுவத்திகம்,  சாமரம்,  நிறைகுடம்,  கண்ணாடி  விளக்கு  முதலியன.
--   ( பக்தி  துணுக்குகள் )
-- தினமலர் பக்திமலர்.  15-1- 2015.     

Wednesday, May 31, 2017

சோடசோபசாரம்.

உபசாரம்  பதினாறு.
     ஆலயங்களில்  இறைவனுக்கு சோடசோபசாரம் என்னும்  உபசாரம்,  பதினாறு  விதமாகச்  செய்யப்படுகின்றன.
     தவிசு  அளித்தல்,  கைகழுவ  நீர்  தருதல்,  கால்  கழுவ  நீர்  தருதல்,  மூக்குடி  நீர்  தருதல்,  நீராட்டல்,  ஆடைசாத்தல்,  முப்புரி  நூல்  தருதல்,  தேய்வைபூசல்,  மலர்சாத்தல்,  மஞ்சள்  அரிசி  தூவுதல்,  நறும்புகை  காட்டல்,  விளக்கிடல்,  கற்பூரம்  ஏற்றல்,  அமுதம்  ஏந்தல்,  அடைக்காய்தருதல்,  மந்திரமலரால்  அர்ச்சித்தல்  முதலியன.
திருவலஞ்சுழி  விநாயகர்
     திருவலஞ்சுழியிலுள்ள  விநாயகர்  கடல்  நுரையால்  செய்யப்பட்டவரதலால்  அவருக்கு  பச்சைக்கற்பூரம்  தூவுவதைத்  தவிர  வேறு  அபிஷேகம்  கிடையாது.
திருநாகேஸ்வரம்
     திருநாகேஸ்வரம்  கோயிலில்  சுயம்பு  வடிவிலுள்ள  பார்வதி,  சரஸ்வதி,  லட்சுமி  மூவருக்கும்  டைலக்  காப்பு  மட்டுமே
சாத்தப்படுகிறது.                                                            
-- ( பக்தி  துணுக்குகள் )
-- தினமலர் பக்திமலர்.  15-1- 2015. 

Tuesday, May 30, 2017

புதுமையான போப்!

  "உலம்  முழுவதும்  தீவிரவாதம்  உள்பட  பல்வேறு  பிரச்னைகள்  நிலவுகின்றன.  இந்த  பிரச்னைகளைத்  தீர்க்க,  நம்  ஒவ்வொருவருக்கும்  நேர்மையும்  அரவணைத்துச்  செல்லும்  குணமும்  தேவைப்படுகிறது."  என்று  கிறிஸ்துமஸ்  வாழ்த்தில்  சொன்ன  போப்  பிரான்ஸிஸ்  குடும்ப  ஒற்றுமைக்காகவும்  ஒரு  அமைப்பையே  ஏற்படுத்தியுள்ளார்.  இவர்  இதுவரை  இருந்த  போப்புகளிலேயே  பல  புதுமைகளைச்  செய்தவர்.
      குறிப்பாக,  ஐரோப்பிய  நாடுகளைச்  சேர்ந்தவர்களே  போப்  ஆகத்  தேர்ந்தெடுக்கும்  வழக்கத்திலிருந்து  முதல்  முறையாக  ஒரு  இலத்தீன்  அமெரிக்கரான  பிரான்ஸிஸ்  தேர்ந்தெடுக்கப்பட்டர்.  ஒரு  இயேசு  சபையைச்  சேர்ந்த  துறவி  போப்  ஆகத்  தேர்ந்தெடுக்கப்பட்டதும்,  போப்கள்  வழக்கமாக  வைத்துக்  கொள்ளும்  பெயர்களில்  அல்லாமல்,  தன்  வாழ்நாள்  முழுவதும்  எளிமையை  நேசித்தவரும்  ஏழைமையை  சுவாசித்தவருமான  பிராஸிஸ்  அரசியாரின்  பெயரை  வைத்துக்கொண்டதும்  இவரின்  சிறப்பு.
      இவர்  பேராயராகப்  பதவி  ஏற்ற  பின்னரும்  ஆயர்கள்  வாழும்  ஆடம்பர  பங்களாக்களில்  தங்க  மறுத்து  அடுக்கு  மாடியில்  தங்கி  உதவிக்கு  ஒரு  வயதான  துறவியை  மட்டும்  வைத்துக்கொண்டு  தானே  சமைத்து  உண்டார்.  ஆடம்பர  மகிழுந்துகளில்  பயணிப்பதைத்  தவிர்த்து  மக்கள்  போகும்  பேருந்துகளிலும்,  இருசக்கர  வாகங்களிலும்  பயணம்  செய்து  அனைவரையும்  ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார்.  போப்  ஆன  பின்னரும்  அரண்மனை  போன்ற  வசதிகளைத்  தவிர்த்து  தான்  முன்னால்  தங்கிய  பழைய  விடுதி  அறையிலேயே  தங்கினார்.
     வழக்கமான  போப்கள்  அணியும்  ஆடம்பர  அங்கி,  சிவப்புக்  காலணி,  சிவப்புத்  தொப்பியைத்  தவிர்த்து  எளிய  அங்கியும்  வெள்ளை  நிற  தொப்பியையும்  அணிந்துகொண்டார்.எல்லாவற்றுக்கும்  மேலாக  வத்திக்கான்  வங்கியைத்  தணிக்கைக்கு  உட்படுத்தி  ஆடம்பரச்  செலவுசெய்யும்  ஆயர்களைத்  தட்டிக்கேட்டார்.  இந்தச்  செயல்பாட்டால்  மக்கள்  உள்ளங்கவர்ந்த  போப்  ஆக  பிரான்ஸிஸ்  இருக்கிறார்.
-- மி.அந்தோணிதாஸ்,  முடிச்சூர்.  ( வாசகர்  வாய்ஸ் )  அனுபவம்  புதுமை.
-- கல்கி.  11, ஜனவரி  2015.
--  இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன்.     

Monday, May 29, 2017

சுள்ளிகள் போதும்!

மொபைலை  சார்ஜ்  பண்ண  சுள்ளிகள்  போதும்!
     வெறும்  சுள்ளிகளால்  நெருப்பை  மூட்டி  அதன்  மூலம்  மொபைலை  சார்ஜ்  ஏற்றவும்,  தேநீர்  தயாரிக்கவும்  உதவும்  வகையில்  பயோலைட் ( Bio Lite ) கேம்ப்ஸ்டவ்  ஒன்று  தற்போது  கிடைக்கிறது.  இந்த  ஸ்டவ்வில்  இரண்டு  அறைகள்  உள்ளன.  ஓர்  அறையில்  சுள்ளிகளைப்போட்டு  எரிக்கலாம்.  அந்த  அறையின்  மீது  பாத்திரத்தை  வைத்துச்  சூடேற்றலாம்.  ஒரு  லிட்டர்  தண்ணீரை  நான்கைந்து  நிமிடங்களில்  கொதிக்க  வைக்கலாம்.  ஆகவே,  தேவையான  தேநீரைத்  தயாரித்துக்கொள்ளலாம்.    அடுத்த  அறையில்  வெப்ப  ஆற்றலை  மின்  ஆற்றலாக  மாற்ற  வசதி  செய்யப்பட்டுள்ளது.  இதன்  மூலம்  கிடைக்கும்  மின்சாரத்தை  மொபைலுக்கு  சார்ஜ்  ஏற்றப்  பயன்படுத்த  வாகாக  பிளக்  பாயிண்ட்  தரப்பட்டுள்ளது.  5  வோல்ட்  மின்சாரத்தை  இது  உற்பத்தி  செய்யும்.  மொபைலை  சார்ஜ்  ஏற்றிக்கொள்ள  இது  போதும்.  இதன்  விலை  சுமார்  130  அமெரிக்க  டாலர்.
     இந்த  ஸ்டவ்வை  மிக  எளிதாக  எங்கும்  எடுத்துச்  சென்று  பயன்படுத்த  இயலும்.  பயன்படுத்தி  முடித்த  பின்னர்,  சுள்ளிகளால்  ஏற்பட்ட  சாம்பலை  சிறிய  குழி  தோண்டி  கொட்டி  தண்ணீரை  ஊற்றித்  தணலை  அணைத்துவிட்டால்  போதும்.  மண்ணோடு  மண்ணாக  மட்கிவிடும்.  சுற்றுச்  சூழலுக்கு  எந்தக்  கேடும்  விளைவிக்காது.
--ராகு  .( சந்தைக்குப்  புதுசு.).
-- 'தி இந்து'  நாளிதழ்.    

Sunday, May 28, 2017

தமிழ்மொழி

  தமிழ்மொழி  தோன்றியது  பற்றிப்  பெரியோர்  கூறியுள்ள  செய்தி  ஒன்று  உண்டு.  சிவபெருமானின்  ( டமருகம் )  உடுக்கையிலிருந்து  இருபுறமும்  வெளிவந்த  ஒலியே  சமஸ்கிருதமும்,  தமிழும்  என்பது  அது.  ஒருபுறத்திலிருந்து  வந்த  ஒலி  தமிழ்.  மறு  புறத்தது  சமஸ்கிருதம்.  இதை  ஏற்றுக்  கொள்வதும்  மறுப்பதும்  அவரவர்  உளப்பாங்கைப்  பொறுத்தது.
-- புலவர்  பாரத  சி.வி.சேஷாத்ரி.
விபூதி
     சைவர்கள்  விபுதி  அணிகிறார்கள்.  நெற்றி  நிறையப்  பூசுவதோடு   உடம்பெல்லாமும்  பூசுகிறார்கள்.  இந்த  முறைக்கு  உத்தூளனம்  என்று  பெயர்.  அதையே  தண்ணீரில்  குழைத்து  உச்சி,  நெற்றி,  மார்பு,  உந்தி,  முழங்கால்,  விலாக்கள்,  தோள்,  முழங்கை,  மணிக்கட்டு  ஆகிய  இடங்களில்  மூன்று  விரல்களால்  இடுவதற்குத்  தீட்சை  பெற்றிருக்க  வேண்டும்.  சிவபெருமானுடைய  திருநாங்களாக  ஆசானம்,  தத்புருஷம்,  அகோரம்,  வாமதேவம்,  ஸ்த்டோஜாதம்  என்ற  ஐந்தையும்  நம;  என்ற  கோடி  சேர்த்து  அணிவது  வழக்கம்.
     போருக்குப்  போகிற  வீரன்  புறப்படுவதற்கு  முன்  தன்  தலையில்  ஹெல்மெட் (  தலைக்கவசம் )  அணிகிறான்.  Wiser ( நெற்றியில் )  Breast- plate,  Abdominal  guard,  Thigh  Pad,  Knee  pad,  Elbow  guard  என்பது  போல  அணுந்து  கொண்டு  புறப்படுகிறான்.  எதற்கு?  எதிரியின்  அம்பும்  வாளும்  தாக்காமல்  இருப்பதற்காக.  விபூதிக்கு  இதனால்  கவசம்  என்று  பேர்  வந்தது.
     ஒரு  காலத்தில்  வைணவர்களும்  திருநீற்றைத்தான்  அணிந்திருந்தார்கள்.  பகவத்  இராமானுஜர்தான்  திருமண்  இடும்  முறையை  அறிமுகப்படுத்தினார்.  ஆண்டுக்கு  ஒரு  நாள்  திருக்கண்ணமங்கையில்  ஒரு  முகூர்த்த  காலம்  பெருமாள்  திருமண்  காப்புக்குப்  பதிலாக  விபூதி  அணிகிறார்  என்று  சொன்னால்  உங்களுக்கு  வியப்பாக  இருக்கும்.  இந்தத்  தலம்  திருவாரூர்--  நாகப்பட்டினம்  இடையில்  இருக்கிறது.
-- டாக்டர்  நா. மகாலிங்கம்.
--அமுதசுரபி.  தீபாவளி  சிற்ப்பிதழ். 67ம்  ஆண்டு மலர்.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

Saturday, May 27, 2017

பொங்கலின் நாயகன்

*   சூரியனின்  நிறம்  என்ன?  --  வெள்ளை.  நமக்கு  அது  மஞ்சள்  போலத்  தோன்றுவதன்  காரணம்  பூமியின்  வளிமண்டலம்.
     சூரியக்  கதிரைப்  பலவிதமாக  சிதறடித்து  அனுப்புவதால்தான்.
*   கருவுற்ற  பெண்கள்  சூரிய  கிரகணத்தின்போது  வெளியில்  வரக்கூடாது  என்று கூறப்படுவதற்கு  காலகாலமாக  கூறப்படும்
     காரணம்  எது ?  --  பிறக்கும்  குழந்தைகளின்  உதடுகள்  கோணலாக  மடிந்திருக்கும் ( cleft  lips ).
*   இந்துமதப்  புராணங்களின்படி  சூரியவம்சத்தைச்  சேர்ந்த  மன்னன்  யார்?  --  மனு.  பகீரதன், இஷ்வாகு,  தசரதன்  ஆகிய
     நால்வருமே  சூரியவம்சத்தைச்  சேர்ந்தவர்கள்தான்.
*   எந்த  மாநிலத்தில்  சூரியனுகான  தனிப்பட்ட  ஆலயம்  இல்லை?  --  நான்கு  மாநிலங்களில்  சூரியனுக்கான  தனிப்பட்ட
    கோயில்கள்  உள்ளன.  தமிழ்நாட்டில்  சூரியனார்  ஆலயம்  கும்பகோணம்  அருகில்  உள்ளது.  குஜராத்தில்  மொதோராவிலும்,
    பீஹாரில்  கயாவிலும்,  ஒடிஸாவில்  கொனாரக்கிலும்  உள்ளன.
*   சூரியக்  கதிர்கள்  சராசரியாக  எவ்வளவு  நேரத்தில்  பூமியை  அடைகிறது?  --  8  நிமிடங்கள்.  மேலும்  துல்லியமாகச்
    சொல்வதென்றால்  8.3  நிமிடங்கள்.
*   மகாபாரதத்தில்  சூரியனின்  மகனான  கர்ணனின்  வளர்ப்புத்  தாய்  யார்?  --  தேரோட்டியான அதிரதனின்  மனைவியின்
    பெயர்  ராதா.  இவள்தான்  கர்ணனின்  வளர்ப்புத்  தாய்.  இதன்  காரணமாகத்தான்  கர்ணன்  ராதேயன்  என்றும்
    அழைக்கப்படுகிறான்.      
*   ஜெய,  விஜய,  அஜய,  ஜிதப்ராணா,  ஜிதாக்ரமா,  மனோஜயா,  ஜிதக்ரோதா  இவை  யார்  அல்லது  எவை ?  --  இவை
    குதிரைகள்.  பவிஷ்ய  புராணத்தின்படி  சூரியன்  செல்லும்  வாகனத்தில்  பூட்டப்பட்ட  ஏழு  குதிரைகளின்  பெயர்கள்  இவை.
    சூரியக்  கதிர்களை  இவை  குறியீடாகக்  கொண்டவை  என்பதுண்டு.
-- ஜி.எஸ். எஸ்.  வெற்றிக்கொடி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  செவ்வாய்,  ஜனவரி  13, 2015.     

Friday, May 26, 2017

தத்துவம்... பித்துவம்!

*  கொதிக்கற  தண்ணியில  பிம்பம்  தெரியாது.
    அப்படித்தான்  குழம்பிக்  கிடக்கற  மனசுக்கும்  உண்மை  புரியாது.
    தெளிஞ்சுட்டு  முடிவெடு  மச்சி!
     --- இனியா
புலம்பல்  நம்பர்  ஒன்!
*  நாம  பதினஞ்சு  மார்க்  கேள்விக்கு  பிட்  எழுதிட்டுப்  போயிருப்போம்.  ஆனா,  அதையே  அஞ்சு  மார்க்  கேள்வியா  அவங்க
   மாத்திக்  கேட்டிருப்பாங்க.  அப்ப  வரும்  பாரு  ஒரு  கடுப்பு... அதுக்குப்  பேருதாண்டா  யூனிவர்சல்  வெறுப்பு!
   -- சுஜாதா.
சிந்தனைத்  துளி!
*  கடவுளுக்கும்  டாக்டருக்கும்  கோபம்  வர்றபடி  எப்பவும்  நடந்துக்கக்  கூடாது.
   ஏன்னா...
   கடவுளுக்குக்  கோபம்  வந்தா... டாக்டர்கிட்ட  அனுப்புவார்.
   டாக்டருக்கு  கோபம்  வந்தா  கடவுள்கிட்டேயே  அனுப்பிச்சுடுவார்!
  -- மகேஸ்வரி
மாங்காய்  முடிவு!
* "உலகம்  அடுத்த  வருஷம்  அழியப்  போகுதடா...!"
  "எப்படிடா  சொல்ர...?"
  "மாங்காய்  ஊறுகாய்  பாட்டில்லகூட  போட்டு  இருக்காங்கடா... எக்ஸ்பயரி  டேட்  2012  டிசம்பர்னு!"
   -- ஆஷா  சமீர்
-- அவள் விகடன்.  6-5-2011.

Thursday, May 25, 2017

ரோபோ - ஜிபோ

   சுயமாக  சிந்தித்து  செயல்படும்  ரோபோக்களைக்  கண்டுபிடிப்பதற்கான  முயற்சியில்  வந்துள்ளது,  இந்த  சின்ன  ரோபோ.  360  டிகிரி  சுழலும்  வகையில்  உள்ளது.  இதன்  பெயர்  ஜிபோ.
     ஹாய்  ஜிபோ  என  குரல்  கொடுத்தால்  திரும்பி  பார்க்கும்.  தினசரி  காலையில்  தூக்கத்திலிருந்து  எழுப்பிவிட்டு  நீங்கள்  செய்ய  வேண்டிய  வேலைகளை  ஒப்பிக்கும்.  பிறந்த  நாள்  கொண்டாட்டத்திற்கு  செல்பி  எடுக்க  வேண்டுமா?  கவலையே  வேண்டாம்.  ஜிபோ  டேக்  பிக்சர்  என்று  குரல்கொடுத்தால்  சரியான  அளவில்  எடுத்துவிடும்.
     மொத்த  குடும்பமும்  ஆன்லைன்  மூலம்  பேசவேண்டும்  என்றால்  கம்ப்யூட்டர்  கேமரா  முன்  குவிய  வேண்டியதில்லை.  தனித்தனியாக  உட்கார்ந்து  கொள்ளலாம்.  நாம்  பேசுவதற்கு  ஏற்ப  ஜிபோ  திரும்பிக்  கொள்ளூம்.  சமையலறையில்  வேலையில்  இருக்கிறீர்கள்  அப்போது  மின்னஞ்சல்  வந்தால்  குரல்  கொடுக்கும்.  கையோடு  பதில்  அனுப்பலாம்.  வீட்டுக்குள்  நுழைந்ததும்  ஹாய்  சொல்லி  வரவேற்கும்.  இன்னைக்கு  சாபிட  என்ன  இருக்கிறது  என்றோ  அல்லது  என்ன  ஆர்டர்  கொடுக்க  வேண்டும்  என்றோ  கேட்கிறது.  எல்லாமே  குரல்  கட்டளைதான்.  நாம்  தூங்கிவிட்டால்  அதுவும்  அமைதியாகிவிடுகிறது.
-- தொழில்  நுட்பம்.   வணிக  வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  12, 2015.     

Wednesday, May 24, 2017

பேட்டரி டூத் பிரஷ்

  தொழில்நுட்பம்  வளர  வளர  நமது  வாழ்வில்  அதன்  ஆதிக்கம்  அதிகரித்து  கொண்டுதானிருக்கும்.  இது  தவிர்க்க  முடியாத  ஒன்றாகிவிட்டது.  காலையில்  எழுந்தவுடன்  பல்  துலக்கவும்  இப்போது  நவீன  தொழில்நுட்பத்தில்  செயல்படும்  பல்  துலக்கியை ( டூத்  பிரஷ் ) அறிமுகப்படுத்தியுள்ளது  பிராக்டர்  அண்ட்  கேம்பிள்  நிறுவனத்தின்  அங்கமான  ஓரல்- பி.
     இந்த  பேட்டரியில்  செயல்படும்  பல்  துலக்கி  செல்போனின்  புளூ  டூத்  கட்டுப்பாட்டில்  செயல்படக்கூடியது.  அமெரிக்கா  மற்றும்  ஐரோப்பிய  நாடுகளில்  இதற்குக்  கிடைத்த  வரவேற்பைத்  தொடர்ந்து  இந்தியச்  சந்தையிலும்  இது  அறிமுகமாக  உள்ளது.  உங்கள்  பல்லை  எவ்வளவு  நேரம்  துலக்க  வேண்டும்,  சரியாக  துலக்குகிறீர்களா  என்பதற்கான  அப்ளிகேஷன்  உங்கள்  மொபைலில்  பல்  டாக்டரின்  ஆலோசனையின்படி  டவுன்லோட்  செய்ய  வேண்டும்.
     மொபைலிலிருந்து  வரும்  கட்டளையின்படி  இந்த  பிரஷ்  செயலாற்றும்.  இரவில்  நீங்கள்  பல்  துலக்கிவிட்டேன்  என்று  பல்  டாக்டரிடம்  பொய்  சொல்ல  முடியாது.  மொபைல்  அப்ளீகேஷன்  உங்களைக்  காட்டிக்  கொடுத்துவிடும்.
--  வணிக  வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  12, 2015.  

Tuesday, May 23, 2017

வயர்லெஸ் பென் டிரைவ்

  சாண்டிஸ்க்  நிறுவனம்  புதிய  பென்டிரைவ்  ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது.  மொபைல்,  ஐபேட்  மூலம்  எடுக்கும்  புகைப்படங்கள்  மற்றும்  தகவல்களை  வையை  இணைப்பின்  மூலம்  சேகரித்துக்  கொள்கிறது.  பென்டிரைவ்  மற்றும்  மீடியா  டிவைஸ்  என  இரண்டு  வடிவங்களில்  கிடைக்கிறது.
மினி  கேமரா
     கம்ப்யூட்டர்  மற்றும்  செல்போன்  உதிரி  பாகங்களைத்  தயாரிக்கும்  நிறுவனமான  ஜீனியஸ்  நிறுவனம்  கையடக்க  கேமராவை  அறிமுகப்படுத்தியுள்ளது.  இதில்  எடுக்கப்படும்  படங்கள்  உடனுக்குடன்  வையை  மூலம்  போன்  அல்லது  கணினியில்  சேமிக்கப்படும்.  இந்த  கேமரா  மூலம்  தண்ணீரிலும்  படம்  பிடிக்க  முடியும்.
கதகதப்புக்கு...
     குளிரான  நேரத்தில்  கொஞ்சம்  சூடாக  இருந்தால்  பரவாயில்லை  என்று  நினைக்கும்  நபர்களுக்காகவே  வந்துள்ளது  வார்மி.  இந்த  வார்மியை  கொஞ்சம்  குலுக்கினால்  இதிலிருந்து  சூடு  வரும்.  இதைத்  தேவைப்படும்  இடத்தில்  ஒற்றிக்கொள்ளலாம்.  நெருப்பு,  புகை  என  எந்த  தொந்தரவுகளும்  இல்லை.
-- வணிக  வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  12, 2015.  

Monday, May 22, 2017

Gogo-ro G 1

  கோகோரா ஜி 1 - Gogo-ro  G 1  என்னும்  புது  வகை  எலக்ட்ரிக்  ஸ்கூட்டர்  தைவானில்  அறிமுகமாகியுள்ளது.  வண்டிகளுக்கே  உரிய  வெயிட்  இல்லாமல்  இலகுவாக  தோற்றமளிக்கும்  இந்த  ஸ்கூட்டரை  ஒரு  முறை  சார்ஜ்  செய்தால்  400  கி.மீ  வரை  செல்ல  முடியுமாம்.  அதுபோக  இந்த  வண்டியில்  30  சென்ஸார்கள்  பொருத்தப்பட்டிருப்பதால்  இதை  மொபைல்  ஆப்ஸ்  மூலம்  கண்காணித்துக்கொண்டே  இருக்கலாம்.  ஏதாவது  பிரச்னை  என்றால்  இருந்த  இடத்திலிருந்தே  சர்வீஸ்  சென் டரை  கான்டாக்ட்  செய்து  குறையை  சரி  செய்து  கொள்ளத்தான்  இந்த  வசதி.
     புல்  பேட்டரியும்  சார்ஜ்  ஆக  ஆறு  மணிநேரம்  எடுக்கும்.  சாலைகளில்  ஆங்காங்கே  சார்ஜ்  ஏற்றும்  மையங்களை  நிறுவவும்  முடிவு செய்திருக்கிறார்கள்.  இதற்காக  சிறு  சந்தா  கட்டினாலே  போதுமானது.  இதன்  அதிகபட்ச  வேகம்  மணிக்கு  60கி.மீ  ஆகும்.  இந்த  வண்டி  நம்மிடம்  இருந்தால்  செலவும்  மிச்சம்,  மாசு  பற்றி  யோசிக்கவும்  தேவையில்லை.
     உபரித்  தகவல்,  இதை  வெயிலில்  12  மணி  நேரத்துக்கு  நிறுத்தினால்  சூரிய  ஒளி  கொண்டே  பேட்டரி  புல்லாய்  சார்ஜ்  ஆகிவிடுமாம்.
--   ரவி  நாகராஜன்.  டெக்  மார்க்கெட்   சண்டெஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி  11-1 - 2015.  

Sunday, May 21, 2017

F 015 சூப்பர் கார் !

   இந்த  வாரம்  உலகத்தில்  இருக்கும்  அத்தனை  கார்  பைத்தியங்களின்  பார்வையும்  ஜெர்மனியின்  மீதே  இருந்தது.  காரணம்,  சொகுசு  கார்  நிறுவனமான  மெர்சிடீஸ்  பென்ஸ்  F  015  என்னும்  சூப்பர்  காரை  ஜெர்மனியில்  அறிமுகப்படுத்தியதே  ஆகும்.  இந்த  காரின்  லேட்டஸ்ட்  டெக்னாலஜிகளை  பட்டியலிட்டால்  டெக்  மார்க்கெட்  தொடரே  பத்தாது  போல.  முதலில்  காருக்கு  பெட்ரோல்  தேவையில்லை.
     பேட்டரி  மூலமாகவும்,  ஹைட் ரஜன்  வாயு  மூலமாகவும்  ஓடக்கூடியது.  இப்படி  இரட்டை  எரிபொருள்  பயன்படுத்தப்படுவதால்  பேட்டரியின்  சார்ஜ்  இல்லாதபோது  வாயுவை  பயன்படுத்தியும்,  வாயு  தீர்ந்துவிட்டால்  பேட்டரியை  பயன்படுத்தியும்  மாறி  மாறி  தொடர்ந்து  ஓடுமாம்.  ஆயிரத்து  500  கி.மீ களுக்கு.  மேலும்,  ஆட்டோ  நேவிகேஷன்  முறைப்படி  கொஞ்சமும்  டென்ஷன்  இல்லாமல்  பேசிக்கொண்டே  பயணிக்கும்  வகையிலும்  டிசைன்  செய்யப்பட்டிருக்கிறது.
     காரின்  உட்புறம்  வித்தியாசமாய்,  வழக்கமான  கார்  சீட்  போல்  வெறும்  சாய்மானம்  மட்டும்  இல்லாமல்  காரின்  ஒவ்வொரு  சீட்டும்  180  டிகிரி  திரும்பும்  திறன்  கொண்டது.  இதனால்  நண்பர்களுடன்  ரம்மி  விளையாடிக்  கொண்டோ,  அலுவலக  மீட்டிங்கை  நடத்திக்  கொண்டோ  பயணம்  செய்யலாம்.  இதுபோக  3டி  கேமரா,  லேசர்  விளக்குகள்  என  ஏராளமான  ஹை-டெக்  செட்டப்புகள்  இருக்கும்.
--   ரவி  நாகராஜன்.  டெக்  மார்க்கெட்   சண்டெஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி  11-1 - 2015.         

Saturday, May 20, 2017

வாஷிங் மெஷின்

  எல்ஜி  நிறுவனம்  ஒரு  புது  வகை  மெஷினை  அறிமுகப்படுத்தி  இல்லத்தரசிகளை  எல்லாம்  குஷிப்படுத்தியுள்ளது.   WD100c  and  WD200c  என்னும்  இரு  மாடல்களில்  வரும்  இந்த  வாஷிங்  மெஷினில்  ஒரே  சமயத்தில்  இரண்டு  வகையான  வாஷிங்குகளை  செய்ய  முடியுமாம்.  குறைவான  துணிகள்  இருப்பின்  கீழே  உள்ள  சிறிய  மெஷினிலும்,  மேலே  உள்ள  பெரிய  மெஷின்  மூலமும்  துவைக்க  முடியும்.
     இந்த  சின்ன  பெரிய  லோடை  தவிர,  குறிப்பிட்ட  துணிகளை  தனியாய்  துவைக்க,  அழுத்தம்  இல்லாமல்  துவைக்க,  ஊற  வைத்துத்  துவைக்க  என  ஒவ்வொன்றையும்  தனித்தனியாக  செஊஅலாம்.  இப்படி  பல  வசதிகள்  கொண்ட  இந்த  வாஷிங்  மெஷின்  சந்தையில்  சக்கை  போடு  போடும்  என்பதில்  சந்தேகமே  இல்லை.  அய்யய்யோ  இது  தெரியாம  இப்போதானே  சிங்கிள்  பிரன்ட்  எண்ட்  மெஷின்  வாங்கினேன்  எனப்  பதறுபவர்களுக்கு,  அந்த  சின்ன  மெஷினை  மட்டும்  தனியாக  வாங்கியும்  பொருத்திக்  கொள்ளலாமாம்.
-- ரவி  நாகராஜன்.  டெக்  மார்க்கெட்   சண்டெஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி  11-1 - 2015.  

Friday, May 19, 2017

பஞ்ச "வ" காரங்கள்.

  சமஸ்கிருதத்தில்  நம்  வாழ்க்கையில்  மதிப்பும்  அதன்  மூலம்  வெற்றி  பெற  ஐந்து  "வ" காரங்கள்  குறிப்பிடப்படுகின்றன.  அதாவது  'ஐந்து  வார்த்தைகள்'.  இந்த  வார்த்தைகளை  நாம்  வாழ்க்கையில்  கடைபிடிப்பது  அவசியம்  என்று  நமக்கு  ஒரு  ஸுபாஷிதம்  ( நல்ல  வார்த்தைகள்  கொண்ட  ஸ்லோகம் )  மூலம்  தெரியப்படுத்தப்படுகிறது.
     இந்த  ஸுபாஷிதத்தை  பார்ப்போமா?
வஸ்த்ரேண  வபுஷா  வாசா  வித்யா  விநயேன  ச!
வகாரை:  பஞ்சபிஹீன:  நரோ  நாயாதி  கவ்ரவம்!!
     இதன்  விளக்கம்  என்ன?
     குறிப்பிட்ட  ஐந்து  குணாதிசயங்கள்  உள்ள  மனிதர்கள்,  மரியாதைக்குரியவர்களாகவும்,  போற்றத்தக்கவர்களாகவும்,  வணங்கத்தக்கவர்களாகவும்  கருதப்படுகிறார்கள்.
     அந்தச்  சிறப்பியல்புகள்  என்னென்ன?
     வஸ்த்ரா,  வபுஷா,  வாசா,  வித்யா  மற்றும்  விநயா  ஆகும். ( வஸ்த்ரா  என்றால்  நல்ல   உடை  அணிந்தவர்.  வபுஷா  என்றால்  நல்ல  உடலமைபுக்  கொண்டவர்.  வித்யா  என்றால்  நல்ல  கல்வி,  கேள்விகளில்  சிறந்தவர்.  விநயா  என்றால்  நல்ல  வினயமாகப்  பேசத்தெரிந்தவர்.)
-- சித்ரா நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! ).
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

Thursday, May 18, 2017

அறியாத விஷயங்கள்

   தவளைகள்,  முட்டையிட்டு,  குஞ்சு  பொரிக்கக்கூடியவை.  முட்டையிலிருந்து  வெளிவரும்  தலைப்பிரட்டைகள்  மீன்களைப்போலவே  காட்சியளிக்கும்.  இந்தோனேஷியாவில்  இரு  தவளை  இரண்டு  நீண்ட  பற்களோடு  கண்டறியப்பட்டது.  அந்த  வகை  பெண்  தவளையைத்  தொடர்ந்து  கண்காணித்ததில்  முட்டையிடாமல்,  தலைப்பிரட்டைகளாகவே  குட்டிகளை  ஈன்றெடுத்தது  தெரியவந்தது.  இரட்டை  வாழ்விகள்  எல்லாமே  முட்டையிட்டுக்  குஞ்சு  பொரிக்கக்கூடியவைதான்.  முதல்  முறையாக  குட்டிப்  போடும்  தவளையைக்  கண்டு  வியப்படைந்த  ஆராய்ச்சியாளர்கள்,  மேலும்  ஆராய்ச்சிகளைத்  தொடர்ந்தால்தான்  காரணங்களை  அறிய  முடியும்  என்கிறார்கள்.  --  மனுஷன்  அறியாத  விஷயங்கள்  இன்னும்  எவ்வளவோ
உலகத்துல  இருக்கு!
-- உலக  மசாலா.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி 8,  

Wednesday, May 17, 2017

நீரின் நிழலே ஆகாயம்

   நீருக்கு  நிழல்  இருக்கிறதா?  என்று  கேட்டால், 'இல்லை'  என்றுதான்  சொல்வர்.  ஆனால்,  நீருக்கு  நிழல்  இருக்கிறது.  நிழல்  இல்லை  என்றால்  ஆகாயமே  இல்லை  என்றாகி  விடும்.  நீரின்  நிழக்  அதனுள்ளேயே  அடங்கி  விடுவதால்,  வெளீயில்  தெரிவதில்லை.  சிவனும்  நீரைப்  போல  அருள்  செய்கிறார்.  அவரை  வணங்கும்போது,  ஆன்மாவிற்கு  முக்தி  கிடைக்கிறது.  அது  அவருக்குள்ளேயே  ஒடுங்குகிறது.  இதனை  உனர்த்தும்  விதமாக  சைவ  சித்தாந்தத்தில், 'நீரார்  நிழல்'  என்று  சிவனை  வேண்டி  பாடப்பட்டுள்ளது.
மலர்  வேண்டாம்  மனம்  போதும்!
     சிவப்ருமானுக்கு  பூஜை  செய்ய  புன்னை,  வெள்ளெருக்கு,  செண்பகம்,  நந்தியாவட்டை,  நீலோத்பவம்,  பாதிரி,  அரளி,  செந்தாமரை  ஆகிய  எட்டு  வகையான  மலர்களை  பயன்படுத்தலாம்.  இம்மலர்கள்  'அஷ்ட  புஷ்பங்கள்'  எனப்படுகின்றன.  இவற்றில்  சில  இப்போது  கிடைப்பதில்லை.  இம்மலர்களை  படைத்து  மட்டும்தான்  சிவனை  வழிபட  வேண்டுமென்பதில்லை.  'நமச்சிவாய'  என  அவர்  திருநாமத்தை  உச்சரித்து,  மனம்  என்னும்  பூவால்  வழிபட்டாலே  போதும்.  மலர்களால்  அர்ச்சித்து  வணங்கிய  பலன்  கிடைத்து  விடும்.
--   தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

Tuesday, May 16, 2017

பூமியை போன்று 2 கோள்கள்

மனிதர்கள்  வசிக்க  முடியும்  என  நாசா  அறிவிப்பு.  கண்டுபிடித்தது  கெப்லர்.
     விண்வெளியில்  இரண்டு  புதிய  கிரகங்கள்  அடையாளம்  காணப்பட்டுள்ளதாக  நாசா  கூறியுள்ளது.
    'கெப்லர்  மிஷன்'  எனும்  தொலை நோக்கியை  விண்வெளியில்  நாசா  செலுத்தியது.  கடந்த  2009ம்  ஆண்டு  செலுத்தப்பட்ட  இந்த  தொலை நோக்கி  இதுவரை  4,50,000 -க்கும்  மேர்பட்ட  நட்சத்திரங்களை  கண்காணித்துள்ளது.  அதன்மூலம்  இதுவரை  4,175  பூமியைப்  போன்ற  கிரகங்களை  அது  அடையாளம்  கண்டுள்ளது.  இவற்றில்  1,000-மாவது  கிரகத்தை  சமீபத்தில்  விண்வெளி  ஆய்வாளர்கள்  சோதித்தனர்.
     இந்நிலையில், விண்வெளியில்  கோல்டிலாக்ஸ்  பகுதியில்  புதிதாக  மேலும்  8  கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  இவற்றில்  இந்த 2  கிரகங்கள்  பெருமளவில்  பூமியைப் போலவே  இருப்பதாக  கூறுகின்றனர்.  இந்த  இரண்டு  கிரகங்களில்  ஒன்றுக்கு  கெப்லர்-438பி  என்றும்,  இன்னொன்றுக்கு  கெப்லர்-442பி  என்றும்  பெயர்  சூட்டப்பட்டுள்ளன.
     இந்த  கிரகங்களில்  பாறைகள்  உள்ளன  என்றும்,  அதிகளவில்  வெப்பமாகவும்  இல்லாமல்  அதேசமயம்  குளிராகவும்  இல்லாமல்  தண்ணீர்  இருப்பதற்கான  மிதமான  தட்பவெப்பம்  நிலவுவதாலும்  இங்கு  உயிர்  வாழ்வதற்கான  சாத்தியக்  கூறுகள்  இருப்பதாக  விஞ்ஞானிகள்  தெரிவிக்கின்றனர்.  மேலும்  பூமியைவிட  12  சதவீதம்  பெரியதாக  கெப்லர் -438பி கோளமும்,  கெப்லர்-442பி  கோளம்  பூமியைவிட  33 சதவீதம்  பெரியது.  அதில்  60  சதவீதம்  பாறைகள்  காணப்படுகிறது,  என்றும்  கூறினர்.
     இந்த  கிரகங்களில்  உயிர்  வாழ்வதற்கான  சாத்தியக்  கூறுகள்  தென்பட்டாலும்  அதுகுறித்து  மேலும்  அறிவது  மிகப்பெரிய  சவாலாக  இருக்கும்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  காரணம், இந்த  2  கிரகங்களும்  பூமியில்  இருந்து  பல  நூறு  ஒளி  ஆண்டுகள்  தூரத்தில்  இருக்கின்றன.
     இதில்  கெப்லர் -438பி  பூமியில்  இருந்து  470  ஒளி  ஆண்டுகள்  தொலைவிலும்,  கெப்லர்-442பி  கிரகம்  1,100  ஒளி  ஆண்டுகள்  தொலைவிலும்  உள்ளன.  முன்னது  தன்னுடைய  நட்சத்திரத்தை  35  நாட்களுக்கு  ஒரு  முறை  சுற்றிவர,  பின்னது  112  நாட்களுக்கு  ஒரு  முறை  சுற்றி  வருகிறது.
     இதுகுறித்து   விஞ்ஞானிகள்  கூறும்போது, "இந்தக்  கிரகங்கள்  உயிர்கள்  வாழ்வதற்கு  வசதியானவை  என்று  அறுதியிட்டுக்  கூற  முடியாது.  ஆனால்,  மனிதர்கள்  வசிப்பதற்குத்  தேவையான  சாத்தியக்கூறுகளை  அதிகளவில்  கொண்டவை  என்று  மட்டுமே  இப்போதைக்குச்  சொல்ல  முடியும்"  என்கிறார்கள்.
--- ஏ.எஃப்.பி.   சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி 8,  2015.
--தினமலர்  திருச்சி  9-1-2015. 

Monday, May 15, 2017

தகவல் பலகை

*   கங்காரு  குட்டிகள்  பிறக்கும்போது  2.5  சென்டி மீட்டர்தான்  இருக்கும்.  அந்த  குட்டிகளுக்கு 'ஜோய்ல்ஸ்'  என்று  பெயர்.
*   நமது  நாட்டில்  1937ம்  ஆண்டு 'ஆல்  இந்தியா  ரேடியோ'  என்ற  பெயரில்  வானொலி  ஒலிபரப்பு  தொடங்கப்பட்டது.  1957ம்
    ஆண்டு  அக்டோபர்  1ம்  தேதி  விவிதபாரதி  தொடங்கப்பட்டது.
*   வேறு  நீரில்  குளித்துச்  சுத்தமான  பிறகே,  கோயில்  குளத்தில்  நீராட  வேண்டும்  என்பது  நியதி.
*   ப்ராவக்  வம்சம்  என்பது  யாகம்  செய்யும்  கர்த்தாவும்  அவர்  மனைவியும்  தங்கும்  இடம்.  இது  யக்ஞ  வாடிகைக்குக்  கிழக்கு
    திசையில்  அமைக்கப்பட்டிருக்கும்.
*   வாரணாசி,  காசி,  பெனாரஸ்  என்ற  நகரத்தில்  80-க்கும்  மேலான  காட்  என்று  அழைக்கப்படும்  படித்துறைகள்
    இருக்கின்றன.
*  ஒவ்வொரு  படித்துறையிலும்  குறைந்தது  80  படிகள்.  அஸ்லி  காட்டிலிருந்து  80-க்கும்  மேலான  படித்துறைகள்.  10  மைல்
    நீளத்திற்கு  தஸ்ஸா  ஸ்வேத  மேதா  காட்,  கங்கையினால்  சுத்தப்படுத்தப்படுகிறது.
*  திருக்குறளில்  அத்தனை  தமிழ்  எழுத்துக்களும்  இடம்  பெற்று  விட்டன  என்று  சொல்லமுடியாது.  'ஔ'  என்ற  எழுத்து  ஒரு
   முறை  கூட  இடம்  பெறவில்லை.

Sunday, May 14, 2017

மின்னல் வேக பயணம்

*   அதிவேக  பயணத்தின்  அடுத்த  கட்டமாக  வருகிறது  ஹைப்பர்லூப்  பயணத்  திட்டம்.  கிட்டத்தட்ட  ஒளியின்  வேகத்தில்
    பயணிப்பதற்கு  ஒப்பானது.
*   இதை  அமேரிக்காவைச்  சேர்ந்த  நிறுவனம்  கண்டுபிடித்துள்ளது.  அது  என்ன  ஹைப்பர்லூப்  என்பவர்கள்  எளிதாக  புரிந்து
    கொள்ள  வேண்டும்  என்றால்,  நீண்ட  குழாய்க்குள்  வழுக்கிக்கொண்டே  பயணிப்பது  போல  என்று  சொல்லலாம்.
*   காந்த  சக்தி  மூலம்  இயங்கும்  இந்த  ஹைப்பர்லூப்  இயந்திரத்தில்  அமர்ந்ததும்  மேலே  எழும்பி  அப்படியே  அசுரவேகத்தில்
    பயணிக்கும்.  காந்த  அலைகள்  மூலம்  இயங்குவதால்  பயணக்  களைப்பே  இருக்காது.
*   6  மணிநேரம்  பயணம்  செய்ய  வேண்டிய  தூரத்தை  அரை  மணி  நேரத்தில்  அடைந்துவிடலாம்.  இது  10  ஆண்டுகளில்
    நடைமுறைக்கு  வரும்  என்று  தெரிவித்துள்ளது.
*   அமெரிக்காவின்  லாஸ்வேகாஸ்  அல்லது  லாஸ்  ஏஞ்சலீஸ்  நகரிலிருந்து  சான் பிரான்சிஸ்கோ  வரையிலான  தூரத்துக்கு
    முதல்  கட்ட  பயணத்துக்கான  பணிகள்  தொடங்க  உள்ளாது.
--  வணிக வீதி.  தொழில் நுட்பம்.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015. 

Saturday, May 13, 2017

கவிழும் 'இலை'

  வீட்டிலேயே  தோட்டம்  உள்ளவர்கள்,  பூஜைக்குரிய  பூக்களைப்  பறித்து  சுத்தமான  கூடையில்  போட  வேண்டும்.  புடவைத்  தலைப்பில்  போடக்கூடாது.  பூக்களை  சுவாமியின்  பாதத்தில்  போடும்  போது, காம்பு  கீழேயும்  பூவிதழ்  மேலாகவும்  இருக்குமாறு  போட்டுவதே  முறையானது.  பூ  மட்டுமலாமல்  இலை,  பழம்  இவற்றிற்கும்  இது  பொருந்த்ம்.
    "புஷ்பம்  பத்ரம்  பலம்  சைவ  யதோத்பன்னம்  ததார்ப்பயேத்"
என்கிறது  சாஸ்திரம்.  அதாவது,  பூக்கள்,  இலைகள்,  கனிகள்  அனைத்தையும்  மேல்நோக்கி  படைக்க  வேண்டும்  என்பது  இதன்  பொருள்.  ஒரே  ஒரு  இலைக்கு  மட்டும்  விதிவிலக்கு  உண்டு.  வில்வ  இலையால்  சிவனை  அர்ச்சிக்கும்போது  தலைகீழாக  கவிழ்ந்து  இருக்குமாறு  அர்ச்சிப்பது  சிறப்பு.
பூஜைக்குரிய  திசை
     விநாயகர்,  முருகன்,  சிவன்,  விஷ்ணு,  சூரியன்  ஆகிய  தெய்வங்களை  வணங்கும்போது  சுவாமியை  கிழக்கு  நோக்கி  வைத்து,  நாம்  வடக்கு  நோக்கி  அமர்ந்து  பூஜை  செய்வதே  சிறந்தது.  பெண்  தெய்வங்களான  காளி,  மாரி,  லட்சுமி,  பிற  அம்மன்களை  வழிபடும்போது  நேருக்கு  நேராக  அமர்ந்து  பூஜை  செய்யலாம்.  அதாவது, அம்மன்  கிழக்கு       நோக்கி  இருக்க,  நாம்  மேற்கு  நோக்கியோ  அல்லது  அம்மன்  வடக்கு  நோக்கி  இருக்க,  நாம்  தெற்கு  நோக்கியோ  பூஜை  செய்யலாம்.
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92. 

Friday, May 12, 2017

சாக்கடல்

    உலகிலேயே  அதிகமான  உப்புத்  தன்மை  கொண்ட  நீர்நிலை  சாக்கடல்.  மற்ற  கடல்களை  விட  9.6  மடங்கு  உப்பு  இந்தச்  சாக்கடலில்  இருக்கிறது.  அதனால்  இங்கே  மீன்  போன்ற  எந்த  உயிரினங்களும்  வாழ  முடிவதில்லை.  தண்ணீரின்  அடர்த்தி  அதிகம்  என்பதால்  மனிதர்கள்  மிதந்துகொண்டே  படிக்கலாம்.  மருத்துவக்குணம்  மிக்கதாக  நம்பப்படுவதால்  இங்கே  சுற்றுலாப்  பயணிகளின்  வருகை  அதிகம்.  ஆண்டுதோறும்  இந்தச்  சாக்கடலில்  ஒரு  மீட்டர்  உயர்த்துக்குத்  தண்ணீர்  குறைந்து  வருகிறது.  1950ம்  ஆண்டிலிருந்து  கணக்கெடுக்கப்பட்டு  வருகிறது.  இதுவரை  40  மீட்டர்  அளவுக்குத்  தண்ணீர்  குறைந்துவிட்டது.  ஜோர்டான்  ஆற்றில்  இருந்து  வரும்  தண்ணீரின்  அளவு  குறைவதாலேயே  சாக்கடலின்  தண்ணீர்  அளவு  குறைந்திருப்பதாகச்  சொல்கிறார்கள்.  சாக்கடலை  ஒட்டிய  பூங்காக்கள்,  நீர்  விளையாட்டுகள்  போன்றவை  தண்ணீர்  தொலைவுக்குச்  சென்றுவிட்டதால்  மூடப்பட்டிருக்கின்றன.  +++ அதிசயமாக  இருந்த  சாகடல்,  கவலை  தரும்  விஷயமாக  மாறிருச்சே...
--  உலக  மசாலா.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்  புதன், ஜனவரி 7, 2015.     

Thursday, May 11, 2017

ஷெல் பெட்ரோல் பங்க் கழிப்பறை

   பிலிப்பைன்ஸில்  உள்ள  ஷெல்  பெட்ரோல்  பங்க்  கழிப்பறையைப்  பற்றித்தான்  உலகமே  பேசிக்கொண்டிருக்கிறது.
யு டியூப்பில்  வெளியிடப்பட்ட  கழிவறை  வீடியோவை  40  லட்சம்  பேர்  பார்வையிட்டிருக்கிறார்கள்.  டாக்பிலரன்  நகரில்  இருக்கும்  இந்தக்  கழிவறை  முழுவதும்  மரத்தால்  செய்யப்பட்டிருக்கிறது.  சுவர்களை  எழில்  மிக்க  ஓவியங்கள்  அலங்கரிக்கின்றன.  ஓர்  அலமாரியில்  புத்தகங்கள்  வைக்கப்பட்டிருக்கின்றன.  ஆங்காங்கே  சின்னச்  சின்ன  அலங்காரப்  பொருள்கள்  உள்ளன.  அட்டகாசமான  விளக்குகள்  ஒளியை  உமிழிந்துகொண்டிருக்கின்றன.  ஒரு  மேஜை,  இரண்டு  நாற்காலிகள்  போடப்பட்டிருக்கின்றன.  இனிய  நறுமணம்  வீசிக்கொண்டிருக்கிறது.  சுற்றுலாப்பயணிகளைக்  கவர்வதற்காக  இந்தக்  கழிவறையைக்  கட்டியிருப்பதாகச்  சொல்கிறார்கள்.  இது  பொதுக்கழிவறை.  அந்த  வழியே  செல்லும்  யார்  வேண்டுமானாலும்  பயன்படுத்தலாம்.  இவர்களே  தங்கும்  விடுதிகளையும்  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.பொதுக்  கழிவறையே  இவ்வளவு  நன்றாக  இருந்தால்,  தங்கும்  விடுதி  எப்படி  இருக்கும்  என்று  பயணிகள்  ஆர்வத்தோடு  குவிகிறார்கள்.  பிலிப்பைன்ஸில்  பல  இடங்களிலும்  இதுபோன்ற  கழிவறைகளைக்  கட்டுவதற்கு  நிறைய  பேர்  ஆர்வமாக  இருக்கிறார்கள்.  +++  நல்ல  நியாபார  உத்தி!
-- உலக  மசாலா.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்  புதன், ஜனவரி 7, 2015.  

Wednesday, May 10, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1.   அப்புத்தலம்  எனக்  குறிப்பிடுவது... திருச்சி  அருகிலுள்ள  திருவானைக்காவல் ( அப்பு  என்றால் தண்ணீர் ).
2.   பூலோக  கைலாயம்  என  சிறப்பிக்கப்படும்  தலம்... சிதம்பரம்.
3.   ஜடாயு  சிவனை  பூஜிக்கும்  பேறு  பெற்ற  தலம்... வைத்தீஸ்வரன் கோயில்.
4.   சங்க  காலத்தில் 'மாயோன்'  என  குறிக்கப்பட்டவர்... திருமால்.
5.   திவ்ய  பிரபந்தத்தில்  நீளாதேவியைப்  பாடிய  ஆழ்வார் ... திருமங்கையாழ்வார்.
6.   கடவுளை  அடி  முதல்  முடி  வரை  பாடுவது ... பாதாதி கேச வர்ணனை.
7.   அரியர்த்தர்  என்று  குறிப்பிடப்படுபவர் ... சங்கர நாராயணர்.
8.   ஆதிசங்கரர்  சிவானந்த லஹரியை  இயற்றிய  தலம் ... ஸ்ரீசைலம்.
9.   காசி  என்பதன்  பொருள் ... பிரகாசம்  அல்லது  ஒளி.
10. காளிதாசர்  எழுதிய  முதல்  நூள் ... சியாமளா தண்டகம்.
-- அர்ச்சனைப்பூக்கள்.  பக்திமாலை.
-- தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92. 

Tuesday, May 9, 2017

பஸ்ஸுக்கு தனி வழி!

  அகமதாபாத்  நகரத்தின்  சாலைஒ  போக்குவரத்து  கிட்டத்தட்ட  அமெரிக்கா  மற்றும்  ஐரோப்பிய  நாடுகளுக்கு  இணையாக  உள்ளது  என்று  சொல்லலாம்.
    இங்குள்ள  சாலைகளில்  விரைவுப்  பேருந்துக்கு  என்று  தனியாக  ஒரு  லைன்  உள்ளது.
  இந்த  லைனில்  இந்த  BRTS  பேருந்து  தவிர  வேறு  வாகனங்கள்  செல்வதில்லை.  தற்போது  இந்த  தடத்தில்  முழுவதும்  ஏசி  பஸ்கள்  இயக்கப்படுகின்றன.
   இங்கு  பயணிப்பது  டெல்லி  மெட்ரோவுக்கு  இணையாக  இருப்பதாகச்  சொல்கின்றனர்  மக்கள்.
கடல்  மீது  சூரிய  மின்னுற்பத்தி
   சூரிய  ஆற்றலிலிருந்து  மின்  உற்பத்தியை  பெருக்குவதற்கு  உலகின்  பல  நாடுகளும்  முன்னுரிமை  கொடுத்து  வருகின்றன.  வீட்டு  மொட்டை  மாடி  முதல்  பயன்படுத்தாத  தரிசு  நிலம்வரை  சூரிய  ஒளி  பலகைகள்  வைக்கப்பட்டு  வருகின்றன.
   தற்போது  ஜப்பானில்  கடல்  மீது  சூரிய  மின்  பலகைகள்  அமைக்க  உள்ளனர்.  1,80,000  சதுர  மீட்டர்  பரப்பளவுக்கு  இந்த  சூரிய  மின்  பலகைகள்  அமைய  உள்ளன.
   இதன்  மூலம்  ஆண்டுக்கு  15,635  மெகாவாட்  மின்  உற்பத்தியை  செய்யப்படும்.  சூரியன்  இருக்கும்  திசைநோக்கி  நகரும்  விதமாகவும்  இந்த  பலகைகள்  வடிவமைக்கப்பட்டுள்ளது  இதன்  சிறப்பம்சமாகும்.
--  வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.

Monday, May 8, 2017

கோ டென்னா

 மொபைல்  நெட்வோர்க்  கிடைக்கவில்லை  என்று  இனி  கவலைப்பட  வேண்டாம்.  செல்போன்  அலைவரிசை  கிடைக்காத  இடங்களிலும்  மெசேஜ்  மூலம்  தொடர்பு  கொள்ள  வந்துவிட்டது  கோ டென்னா  என்கிற  சிறிய  கருவி.
     ஸ்மார்ட்போன்  ப்ளூடூத்  இணைப்பின்  வழியாக  இந்த  கருவி  இயங்கும்.  காடுகளில்  அட்வெஞ்சர்  சுற்றுலா  செல்பவர்கள்,  மலை  ஏறுபவர்கள்  மற்றும்  தொலை  தொடர்பு  இல்லாத  இடங்களுக்கு  சுற்றுலா  செல்பவர்களின்  தகவல்  தொடர்புக்கு  இது  உதவுகிறது.  மிக  குறைந்த  ரேடியோ  அலைவரிசையிலும்  இந்த  கருவி  இயங்குகிறது.  ஒரு  போனிலிருந்து  அனுப்பும்  செய்தியை  இந்த  கருவி  வாங்கி  எதிர்முனையில்  இருக்கும்  இன்னொரு  கோ டென்னாவுக்கு  அனுப்பும்.  அதன்  மூலம்  பெறப்படும்  செய்தி  தேவையானவர்களுக்கு  சென்று  சேரும்.  நெட்வொர்க்  இல்லாத  இடங்களிலும்  2  முதல்  6  கிலோ  மீட்டர்கள்  வரை  இந்த  கருவி  செயல்படும்.
-- வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.   மொபைல்  நெட்வோர்க்  கிடைக்கவில்லை  என்று  இனி  கவலைப்பட  வேண்டாம்.  செல்போன்  அலைவரிசை  கிடைக்காத  இடங்களிலும்  மெசேஜ்  மூலம்  தொடர்பு  கொள்ள  வந்துவிட்டது  கோ டென்னா  என்கிற  சிறிய  கருவி.
     ஸ்மார்ட்போன்  ப்ளூடூத்  இணைப்பின்  வழியாக  இந்த  கருவி  இயங்கும்.  காடுகளில்  அட்வெஞ்சர்  சுற்றுலா  செல்பவர்கள்,  மலை  ஏறுபவர்கள்  மற்றும்  தொலை  தொடர்பு  இல்லாத  இடங்களுக்கு  சுற்றுலா  செல்பவர்களின்  தகவல்  தொடர்புக்கு  இது  உதவுகிறது.  மிக  குறைந்த  ரேடியோ  அலைவரிசையிலும்  இந்த  கருவி  இயங்குகிறது.  ஒரு  போனிலிருந்து  அனுப்பும்  செய்தியை  இந்த  கருவி  வாங்கி  எதிர்முனையில்  இருக்கும்  இன்னொரு  கோ டென்னாவுக்கு  அனுப்பும்.  அதன்  மூலம்  பெறப்படும்  செய்தி  தேவையானவர்களுக்கு  சென்று  சேரும்.  நெட்வொர்க்  இல்லாத  இடங்களிலும்  2  முதல்  6  கிலோ  மீட்டர்கள்  வரை  இந்த  கருவி  செயல்படும்.
-- வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.  

Sunday, May 7, 2017

காசிக்கு நேர் தலங்கள்

    1. திருவெண்காடு, 2. திருவையாறு, 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5. திருச்சாய்க்காடு, 6. திருவாஞ்சியம்.
சிவராத்திரி  விசேடத்  தலங்கள்
    1.கச்சி ஏகம்பம், 2. திருக்காளத்தி, 3. கோகர்ணம், 4. திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம் ), 5. திருவைகாவூர்
தாண்டவச்  சிறப்புத்  தலங்கள்
    தில்லை, பேரூர் - ஆனந்த தாண்டவம்,  திருஆரூர் - அசபா தாண்டவம்,  மதுரை - ஞானசுந்தர தாண்டவம்,  புக்கொளியூர் - ஊர்த்துவ தாண்டவம்,  திருமுருகன்பூண்டி - பிரம தண்டவம்
புலியூர்கள்
    1.பெரும்பற்றப்புலியூர் ( சிதம்பரம் ), 2. திருப்பாதிரிப்புலியூர், 3. ஓமாம்புலியூர், 4. எருக்கத்தம்புலியுர், 5. பெரும்புலியூர்.
நால்வர்  தில்லைக்  கொயிலுக்குள்  சென்ற  வழி
     திருஞானசம்பந்தர் - தெற்குக் கோபுரவாயில்.  திருநாவுக்கரசர் - மேற்குக்  கோபுரவாயில். சுந்தரமூர்த்தி  சாமிகள் - வடக்குக் கோபுரவாயில்.  மாணிக்கவாசகர் - கிழக்குக் கோபுரவாயில்.
-- தினமலர் பக்திமலர். ஜனவரி 1, 2015.   

Saturday, May 6, 2017

கோடக் ஸ்மார்ட் போன்

  கோடக்  நிறுவனம்  ஸ்மார்ட்போன்  துறையில்  இறங்கியுள்ளது.  இந்த  போனில்  சிறப்பு  என்னவென்றால்  கோட்டக்  கேமராவில்  படம்  பிடிப்பதுபோல  ஸூம்  வசதி  உள்ளது.  முன்பக்கம்  அதன்  வழக்கமான  கேமரா  தோற்றமும்,  பின்பகுதியில்  ஸ்மார்ட்போன்  திரை  இயங்குவது  போலவும்  இருக்கும்.
கண்ணாடி  படகு
    படகுப்  பிரியர்கள்  விரும்பும்  வண்ணம்   முழுவதும்  கண்னாடியிலான  படகுகள்  வந்துள்ளன.  இந்த  படகில்  பயணிக்கும்போது  கடலில்  நீந்திக்  கொண்டிருப்பது  போலவே  அனுபவத்தை  தரும்.  விலை  ரூ.15  லட்சம்.
குறைந்த  விலை  ஸ்மார்ட்போன்
    குறைந்த  விலையில்  டேப்லெட்களை  தயாரித்து  புரட்சிசெய்த  டேட்டாவைண்ட்  நிறுவனம்  அடுத்ததாக  குறைந்த  விலையில்  ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்த  உள்ளது.
    இந்த  ஸ்மார்ட்போனின்  விலை  ரூ.2000  என  நிர்ணயம்  செய்துள்ளனர்.  இந்த  ஸ்மார்ட்போனுடன்  ஒரு  வருடத்திற்கான  நெட்வொர்க்  இணைப்பையும்  சலுகை  விலையில்  வழங்கத்  திட்டமிட்டுள்ளது  டேட்டாவைண்ட்.
--  வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.  

Friday, May 5, 2017

விலை

விலை  எடை  நிறுவனங்களின்  உத்தி
எப்படி  கண்டுபிடிப்பது?
     வழக்கமாக  100  கிராம்  சோப்  என்று  நினைத்து  வாங்குவோம். 90  கிராம்தான்  இருக்கும்.  50  கிராம்  பேஸ்ட்  என்று  நம்பி  வாங்கினால்  40  கிராம்தான்  பேக்  செய்யப்பட்டிருக்கும். அதற்குத்தான்  விலை  குறிப்பிட்டிருப்பார்கள்.  இதற்கு  முன்பு  100  கிராமும்,  50  கிராமும்  என்ன  விலையில்  விற்பனை  ஆனதோ  அதே  விலையில்  தற்போது  40  கிராமும்,  90  கிராமும்  விற்பனை  செய்யப்படுகிறது.
   சோப்பு,  பேஸ்ட்,  டீ தூள்,  பிஸ்கட்  முதல்  மசாலா  பொருட்கள்  வரை  அனைதிலும்  இந்த  வகையிலான  எடை  குறைப்பு  வித்தை  சத்தமில்லாமல்  நடந்து  வருகிறது.  இதில்  நிறுவன  பேதமே  கிடையாது.  பெரும்பாலும்  அனைத்து  நிறுவனங்களுமே  இந்த  உத்தியைக்  கடைபிடிக்கின்றன.
ஏமாற்றும்  உத்தியா?  
   விலை  ஏற்றினால்  வாடிக்கையாளரை  இழக்கலாம்  என  நினைக்கும்  நிறுவனங்கள்  இந்த  உத்தியை  நேரடியாக  நுகர்வோரிடத்தில்  சொல்லலாமே  என்கிற  கேள்வி  எழுகிறது.  50  காசு  விலை  குறைத்தால்  பல  லட்சம்  செலவு  செய்து  விளம்பரம்  செய்யும்  நிறுவனங்கள்  இந்த  விஷயத்தை  மட்டும்  ஏன்  இருட்டடிப்பு  செய்கின்றன.
இருக்கும் ... ஆனா  இருக்காது...
    விலையும்  ஏற்றக்கூடாது,  லாபமும்  குறையக்கூடாது,  தரத்திலும்  சறுக்கக்கூடாது,  வாடிக்கையாளர்களையும்  இழக்கக்கூடாது  என்கிற  பலமுனை  யோசனைகளிலிருந்து  நிறுவனங்கள்  இந்த  உத்தியை  கடைப்பிடிக்கின்றன.  பிஸ்கட்டின்  வழக்கமான  அளவைவிட  சற்று  சிறிய  சைஸ்  ஆக  இருக்கிறது  என்று  தோன்றுகிறதா... இதுதான்  அந்த  இருக்கும்... ஆனா  இருக்காது...
-- வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.  

Thursday, May 4, 2017

அக்ரோனிம் அறிவோம்

  ஆங்கிலத்தில்  பல  தொடர்  வார்த்தைகளின்  முதல்  எழுத்துகளை  வைத்து  உருவாகும்  வார்த்தை  -  ஒரு  தனி  வார்த்தையாக  உருவானால், அது  அக்ரோனிம் ( ACRONYM )  எனப்படும்  -  உதாரணமாக, AIDS  என்பது  Acquired Immuno Deficiency Syndrome  என்ற  வார்த்தைகளின்  மூலம்  உருவானது.  அதேபோல  NEWS  என்ற  பிரபல  வார்த்தை  North East West south என்று  திசைகளை  வைத்து  உருவானதே.  இதோ  மேலும்  சில  அறியாத  அக்ரோனிம்கள்:
CHESS - Chariot,  Horse,  Elephant, Soldiers
JOKE - Joy Of Kids Entertainment
AIM - Ambition in Mind
DATE - Day and Time evolution
EAT - Energy and Taste
PEN - Power enriched in Nib
SMILE - Sweet memories in lips expression
BYE - Be With you Everytime.
-- தொகுப்பு: எம்.விக்னேஷ்,  விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.
-- வெற்றிக்கொடி. 'தி இந்து'  இணைப்பு. செவ்வாய்,  ஜனவரி 6,  2015.

Wednesday, May 3, 2017


கோடக் ஸ்மார்ட் போன்

  கோடக்  நிறுவனம்  ஸ்மார்ட்போன்  துறையில்  இறங்கியுள்ளது.  இந்த  போனில்  சிறப்பு  என்னவென்றால்  கோட்டக்  கேமராவில்  படம்  பிடிப்பதுபோல  ஸூம்  வசதி  உள்ளது.  முன்பக்கம்  அதன்  வழக்கமான  கேமரா  தோற்றமும்,  பின்பகுதியில்  ஸ்மார்ட்போன்  திரை  இயங்குவது  போலவும்  இருக்கும்.
கண்ணாடி  படகு
    படகுப்  பிரியர்கள்  விரும்பும்  வண்ணம்   முழுவதும்  கண்னாடியிலான  படகுகள்  வந்துள்ளன.  இந்த  படகில்  பயணிக்கும்போது  கடலில்  நீந்திக்  கொண்டிருப்பது  போலவே  அனுபவத்தை  தரும்.  விலை  ரூ.15  லட்சம்.
குறைந்த  விலை  ஸ்மார்ட்போன்
    குறைந்த  விலையில்  டேப்லெட்களை  தயாரித்து  புரட்சிசெய்த  டேட்டாவைண்ட்  நிறுவனம்  அடுத்ததாக  குறைந்த  விலையில்  ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்த  உள்ளது.
    இந்த  ஸ்மார்ட்போனின்  விலை  ரூ.2000  என  நிர்ணயம்  செய்துள்ளனர்.  இந்த  ஸ்மார்ட்போனுடன்  ஒரு  வருடத்திற்கான  நெட்வொர்க்  இணைப்பையும்  சலுகை  விலையில்  வழங்கத்  திட்டமிட்டுள்ளது  டேட்டாவைண்ட்.
--  வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.  

ஸ்டையலஸ்

  ஆப்பிள்  நிறுவனம்  சத்தமில்லாமல்  2010 ஆம்  ஆண்டு  ஸ்டையலஸ் எனப்படும்  ஒரு  எலக்ட்ரானிக்  பேனாவுக்கு  பேடன்ட்  அப்ளை  செய்து  இந்த  வாரம்  அப்ரூவலும்  வாங்கிவிட்டது.  நீங்கள்  டைப்  செய்ய  நினைக்கும்  வரிகளை  இந்த  வயர்லெஸ்  ஸ்டையலஸ்  மூலம்  காற்ரில்  எழுதினாலோ,  வரைந்தாலோ  அது  அப்படியே  ஐபேட் , ஐபோன்  மற்றும்  மேக்  கண்னியில்  அழகாக  எழுத்துக்களாய்  பதிவாகுமாம்.  இக்  கருவியை  வைத்து  மீட்டிங், ஸ்கூல்  போர்டுகளில்  எழுதி  விளக்கும்  அத்தனை  விஷயங்களையும்  அப்படியே  அச்சில்  வார்த்துக்  கொள்ளலாம்.  இதனால்  இனி  ஸ்கூலில்  ஆசிரியர்  சொல்லிக்கொடுக்கும்  விஷயமாகட்டும்,  ஆபீஸ்  மீட்டிங்கில்  விவாதிக்கப்படும்  விஷயங்களாகட்டும்  அவை  எல்லாம்  டிஜிட்டல்  காப்பியாய்  உங்களுக்கு  கிடைக்கும். உண்மையில்  இது  ஒரு  மாயாஜால  கண்டுபிடிப்புதான்.
--  ரவி  நாகராஜன்.  ( டெக் மார்க்கெட் ) சண்டே  ஸ்பெஷல்.
--தினமலர்  திருச்சி  4-1-2015.  

Tuesday, May 2, 2017

வயர்லெஸ் ஸ்பீக்கர் டெக்னாலஜி

வயர்லெஸ்  ஸ்பீக்கர்  டெக்னாலஜிக்கு  உலகம்  முழுவதும்  ஏகபோக  வரவேற்பு.  இப்போது  அடுத்த  ஆச்சர்யமாய்  Ecopebble, என்னும்  பவர்லெஸ்  ஸ்பீக்கர்களும்  சந்தையில்  அறிமுகமாக  தயாராக  உள்ளன. வயர்லெஸ்  சரி.  அது  என்ன  பவர்லெஸ்?  வயர்  இல்லாத  ஸ்பீக்கர்களாக  இருந்தாலும்  அவற்றை  இயக்க  பவர்  வேண்டும்.  ஸோ,  சார்ஜ் போடும்போது  வயர்  பயன்படுத்தித்  தான்  ஆக  வேண்டும்.  சார்ஜ் ஏறியதும்  வயர்லெஸ்ஸாய்  அவற்றை  பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது  இந்த  ஸ்பீக்கர்களோடு  ஒரு  சோலார்  பேனலை  நிறுவி  அதன்  மூலம்  மின்சாரத்தை  உற்பத்தி  செய்து  இயங்குமாறு  வட்டிவமைத்திருக்கிறார்கள்.  கலிபோர்னியாவை சேர்ந்த  கிரேஸ்  டிஜிட்டல்  என்ற  கம்பெனியின்  விஞ்ஞானிகள், இந்த  சோலார்  பேனல்  மூலம்  ஸ்பீக்கர்களுக்கு  மட்டுமல்ல  வீட்டில்  உள்ள  மற்ற  கேட்ஜட்களுக்கும்  ம்மின்சாரம்  கிடைக்குமாம்.  அதுவும்  10,000 -mAh  பேட்டரியால்  தொடர்ந்து  50  மணி  நேரத்துக்கு.  சூப்பர்ல!
-- ரவி  நாகராஜன்.  ( டெக் மார்க்கெட் ) சண்டே  ஸ்பெஷல்.
--தினமலர்  திருச்சி  4-1-2015.  

Monday, May 1, 2017

பூட்டுக்கும் தாழ்ப்பாள்

    பூட்டுகளில்  6  லீவர்,  7  லீவர்  எனக்  குறிப்பிட்டிருப்பார்கள்.  அது  எதைக்  குறிக்கிறது  தெரியுமா?
      6  லீவர்  பூட்டில்  6  தாழ்ப்பாள்களும்,  7  லீவர்  பூட்டில்  7  தாழ்ப்பாள்களும்  இருக்கும்.  பூட்டின்  உளமைப்புக்கு  ஏற்ப  சாவியிலுள்ள  தாழ்ப்பாள்கள்  ஒவ்வொன்றும்  ஒவ்வொரு  தாழ்ப்பாளைத்  திறக்கும்.  ஒரே  நேரத்தில்  எல்லாத்  தாழ்ப்பாள்களும்  திறக்கப்பட்டு  பூட்டு  திறந்து  கொள்ளும்.  இந்த  வகைகளில்  பொய்  சாவி  தயாரிப்பது  கஷ்டம்  என்பதால்  இந்த  ஏற்பாடு.
-- டி.பச்சமுத்து,  கிருஷ்ணகிரி.
ஒரு  வித்தியாசம்
     பட்டிமன்றம்  ஒன்றில்  கேட்டேன்.  "ஆணுக்கும்     பெண்ணுக்கும்  ஒரு  வித்தியாசம்  உண்டு  என்ன  தெரியுமா?"  என்றவர்,  "ஆண்  ஒரு  காதில்  காதில்  வாங்கி  இன்னொரு  காதில்  விட்டுவிடுவான்.  ஆனால்,  ஒரு  பெண்  காது  வழியாக  வாங்கி  வாய்  வழியாக  விட்டுவிடுவாள்"  என்றார்  பேச்சாளர்.  அவையில்  ஒரே  சிரிப்பலை.
-- பாலு,  சென்னை.
புதைக்கப்பட்ட  தங்கம்!
     1987  டிசம்பர்  25ம்  தேதி  மாலை  4.10  மணிக்கு,  மறைந்த  எம்.ஜி.ஆரின்.  உடலை  அடக்கம்  செய்தபோது,  பேராசிரியர் தெ.ஞானசுந்தரம்  சொன்னார் :  "மண்ணைத்  தோண்டி  தங்கத்தை  எடுப்பார்கள்.  இங்கே  மண்னைத்  தோண்டி  தங்கத்தைப்  புதைக்கிறார்கள்".
-- அ.யாழினி  பர்வதம்,  சென்னை- 78.
-- கல்கி  இதழ்.  14  டிசம்பர்  2014.
-- இதழ் உதவு :  செல்லூர் கண்ணன்.