Friday, March 31, 2017

ரிஸ்ட் பாண்ட்

  பாரீசைச்  சேர்ந்த  சிக்ரியேட்  நிறுவனம்  ரிஸ்ட்  பாண்ட்  ஒன்றை  அறிமுகப்படுத்த  உள்ளது.  இந்த  ரிஸ்ட்  பாண்டை  அணிந்து  கொண்டால்,  போனை  கையில்  எடுக்க  தேவையில்லை.  உங்கள்  கையையே  செல்போனாக  ஆபரேட்  செய்யலாம்.
     ஸ்மார்ட்  போன்  புளூடூத்  இணைப்பில்  இந்த  ரிஸ்ட்  பாண்ட்  இயங்கும்.
     குளிக்கும்போது  போன்  வருகிறது  என்றால்  போனை  கையில்  எடுத்து  பார்க்க  தேவையில்லை.  இந்த  ரிஸ்ட்  பாண்டை  கொஞ்சம்  ஷேக்  செய்தால்  யாரிடமிருந்து  போன்  வருகிறது  என்பதை  தெரிந்து  கொள்ளலாம்.
     உள்ளங்கையை  திரையாகக்  கொண்டு  இமெயில்  படிக்கலாம்.  ரிப்ளை  செய்யலாம்.  போரடித்தால்  கையை  டச்  ஸ்கீரினாக  கொண்டு  கேம்  விளையாடலாம்.  இந்த  ரிஸ்ட்  பாண்டை  சிக்ரியேட்  நிறுவனம்  கிரவுட்  பண்டிங்  முறையில்  தயாரிக்க  நிதி  திரட்டி  வருகிறது.
-- தொழில்  நுட்பம்    ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.  

Thursday, March 30, 2017

ரிஸ்ட் பாண்ட்

  பாரீசைச்  சேர்ந்த  சிக்ரியேட்  நிறுவனம்  ரிஸ்ட்  பாண்ட்  ஒன்றை  அறிமுகப்படுத்த  உள்ளது.  இந்த  ரிஸ்ட்  பாண்டை  அணிந்து  கொண்டால்,  போனை  கையில்  எடுக்க  தேவையில்லை.  உங்கள்  கையையே  செல்போனாக  ஆபரேட்  செய்யலாம்.
     ஸ்மார்ட்  போன்  புளூடூத்  இணைப்பில்  இந்த  ரிஸ்ட்  பாண்ட்  இயங்கும்.
     குளிக்கும்போது  போன்  வருகிறது  என்றால்  போனை  கையில்  எடுத்து  பார்க்க  தேவையில்லை.  இந்த  ரிஸ்ட்  பாண்டை  கொஞ்சம்  ஷேக்  செய்தால்  யாரிடமிருந்து  போன்  வருகிறது  என்பதை  தெரிந்து  கொள்ளலாம்.
     உள்ளங்கையை  திரையாகக்  கொண்டு  இமெயில்  படிக்கலாம்.  ரிப்ளை  செய்யலாம்.  போரடித்தால்  கையை  டச்  ஸ்கீரினாக  கொண்டு  கேம்  விளையாடலாம்.  இந்த  ரிஸ்ட்  பாண்டை  சிக்ரியேட்  நிறுவனம்  கிரவுட்  பண்டிங்  முறையில்  தயாரிக்க  நிதி  திரட்டி  வருகிறது.
-- தொழில்  நுட்பம்    ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.  

Wednesday, March 29, 2017

வொர்க் ஹப்'கள்

 எந்நேரமும்  அலுவலகத்தில்  இருந்து  வேலை  பார்ப்பது  போர்  அடித்துவிட்டது  என்பவர்களுக்கு  புது  அனுபவத்தைக்  கொடுக்க  வந்துவிட்டது வொர்க்  ஹப்கள்.  லேப்டாப்,  டேட்டா  கார்டு  சகிதம்  இந்த  ஹப்களுக்கு  வந்துவிட்டால்  போதும்,  மழையை  ரசித்துக்  கொண்டு,  சூடாக  காபி  குடித்துக்  கொண்டு  வேலைபார்க்கலாம்.  அல்லது  பசுமையான  மலையை  பார்த்துக்  கொண்டோ,  பீன்  பேக்கில்  சாய்ந்துகொண்டோ  கூலாக  வேலை  பார்க்கலாம்.  இப்படியாக  வொர்க்  ஹப்கள்  டெல்லி,  பெங்களூரு,  மும்பை  போன்ற  நகரங்களில்  வளர்ந்து  கொண்டிருக்கிறது.  விரைவில்  மற்ற  நகரங்களுக்கும்  பரவலாம்.  தீயாக  வேலைபார்த்தாலும்  ஹாயாக  பார்க்கலாம்.
--    ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.   

Tuesday, March 28, 2017

கையடக்க ஹெல்மெட்!

 வாகனத்தில்  பூட்டிவிட்டுச்  சென்றாலும்,  வாகனத்தோடு  ஹெல்மெட்டும்  வெயிலில்  காய்ந்தால்,  அதை  உடனே  போட்டுக்  கொண்டு  கிளம்ப  முடியாது.  அதனுள்  எறும்பு  உள்ளிட்டவை  சென்று,  நாம்  தலையில்  மாட்டிக்கொண்டு  செல்லும்போது  தொந்தரவு  தரும்.  இதைப்  போக்கும்  வகையில்  மடக்கி  எடுத்துச்  செல்லக்  கூடிய  ஹெல்மெட்டை  லண்டனைச்  சேர்ந்த  ஜெஃப்  உல்ப்  வடிவமைத்துள்ளார்.  மடக்கி  எடுத்துச்  செல்லும்  வகையிலான  இந்த  ஹெல்மெட்  2.5  அங்குலம்  தடிமந்தான்  இருக்கும்.  புத்தகம்  போல  இதை  கையோடு  எடுத்துச்  செல்ல  முடியும்.  காப்புரிமை  மற்றும்  தரப்  பரிசோதனைக்குப்  பிறகு  இது  சந்தைக்கு  வரும்.  நம்  நாட்டிற்கும்  இது  விரைவிலேயே  வரலாம்.
--   ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.  

Monday, March 27, 2017

ஆர்கானிக் பேட்டரி

 தாய்வான்  தேசிய  பல்கலைக்  கழகத்தைச்  சேர்ந்த  பேராசிரியர்  கங்பின்  லயோ,  ஆர்கானிக்  பேட்டரியை  உருவாக்கியுள்ளார்.  இந்த  பேட்டரியில்  தண்ணீர்  உள்பட  எத்தகைய  திரவத்தை  ஊற்றினாலும்  அது  மின்னுற்பத்தி  செய்யும்.  10  விநாடிகளில்  இது  சார்ஜ்  ஆகும்.  இதில்  சேமிக்கப்பட்ட  மின்சாரம்  2  நாளைக்கு  நிலைத்து  நிற்கும்.  இதில்  ஊற்றப்படும்  திரவத்தின்  தன்மைக்கேற்ப  மின்சாரம்  நிற்கும்.
     இதில்  குளிர்பானத்தையும்  ஊற்றலாம்.  வழக்கமாக  புழக்கத்தில்  உள்ள  பேட்டரிகளைக்  காட்டிலும்  பாதியளவு  மின்சாரத்தை  உற்பத்தி  செய்தாலும்,  இந்த  ஆர்கானிக்  பேட்டரி,  பிற  பேட்டரிகள்  சேமிக்கும்  மின்சார  அளவைக்  காட்டிலும்  கூடுதலாக  சேமிக்கும்  ஆற்றல்  பெற்றது.  இதில்  மின்னுற்பத்தி  செய்வது  மிகவும்  சிக்கனமானது.
நச்சை  உறிஞ்சும்  நானோபட்!
     நச்சுத்  தன்மையை  உறிஞ்சும்  ஸ்பாஞ்சுகள்  இப்போது  உருவாக்கப்பட்டு  வருகின்றன.  கண்னாடியின்  மூலக்கூறில்  உருவாக்கப்பட்ட  நானோபட்  ஸ்பாஞ்சுகள்  தண்ணீரை  உறிஞ்சாது.  ஆனால்  நச்சுப்  பொருள்களை  உறிஞ்சிவிடும்.
     இதனால்  கடலில்  பெட்ரோலிய  கலப்பு  உள்ளிட்ட  பிரச்சினை  ஏற்படும்போது  இதைப்  பயன்படுத்த  முடியும்.
     இது  உண்மையான  அளவைக்  காட்டிலும்  8  மடங்கு  நச்சுத்  தன்மையை  உறிஞ்சும்.  தண்ணீரில்  இதை  நனைத்தாலும்  அதில்  உள்ள  நச்சுத்  தன்மையை  இது  உறிஞ்சிவிடும்.
--  ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.  

Sunday, March 26, 2017

வாட்ஸ்அப் வெப்

 இளைய  தலைமுறை  பேவரைட்டான  ஆப்ஸ்  வாட்ஸ் அப்,  இப்போது  ஸ்மார்ட்போனில்  மட்டும்தான்  இயங்கும்.  இந்த  ஆப்ஸை  கம்ப்யூட்டரிலும்  பயன்படுத்த  வேண்டும்  என்பது  பயன்படுத்துபவர்களின்  எதிர்பார்ப்பு.  இதை  பூர்த்திசெய்யும்  விதமாக  வாட்ஸ் அப் வெப்  வெர்ஷன்  வெளியாக  உள்ளது.
மோட்டோ கீ-- லிங்க்
     மோட்டோரோலா  நிறுவனம்  ஸ்மார்ட் கீ  லிங்க்  ஒன்றை  கொண்டுவந்துள்ளது.  கீசெயின்  காணவில்லை  என்று  தேடுவதைவிட  நமது  போனிலிருந்து  கீ  செயினுக்கு  கால்  செய்தால்  கீ  செயினிலிருந்து  ரிங்  வரும்.  அதுபோல  போனை  வைத்து  விட்டாலும்  இந்த  கீசெயின்  மூலம்  தேடலாம்.
மியூஸிக்  ஆப்ஸ்
     வயர்லெஸ்  மியூஸிக்  கீபொர்டை  உருவாக்கியுள்ளது  அமெரிக்காவை  சேர்ந்த  எலக்ட் ரானிக்  நிறுவனம்.  ஐபேடில்  பயன்படுத்துவதற்கு  ஏற்ப  இதற்கான  அப்ளிகேஷனையும்  வெளியிட்டுள்ளனர்.  இனி  இசை  பிரியர்கள்  பீரிய  சைஸ்  மியூஸிக்  கீபோர்டை  தூக்கிக்கொண்டு  அலைய  வேண்டியதில்லை.
--   ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.   

Saturday, March 25, 2017

கிரெடிட் கார்டு

10  டிப்ஸ்
1.   பில்லிங்  காலத்துக்குள்  வாங்கிய  கடனை  முழுமையாகச்  செலுத்திவிட  வேண்டும்.
2.   ஆன்லைனில்  பொருள்கள்  வாங்கினால்  விர்ச்சுவல்  கீபோர்டு  மூலம்  பாஸ்வேர்டு  கொடுப்பது  பாதுகாப்பு.
3.   கிரெடிட்  கார்டிலிருந்து  பணம் எடுப்பதை  தவிர்க்கவும்.
4.   கேஷ்  ஆஃபர்களை  பயன்படுத்திக்  கொள்ளுங்கள்.
5.   ஒன்றுக்கும்  மேற்பட்ட  கார்டு  இருந்தால், ஒன்றிலிருந்து  இன்னொன்றுக்கு  என  பரிமாற்றத்தை  தவிர்க்கவும்.
6.   கிரெடிட்  கார்டு  கடனை  அடைக்க  வெளியில்  கடன்  வாங்க  வேண்டும்  என்றால்  நிதி  நிர்வாகத்தில்  நீங்கள்  வீக்.
7.   பில்லிங்  தேதியை  தவறவிட்டால்  கிரெடிட்  கார்டு பயன்படுத்துவது  சறுக்கலில்  முடியலாம்.
8.   குறிப்பிட்ட  தேதிக்கு  அடுத்த  நாள்  பனத்தைக்  கட்டினாலும்  அபராதக்  கட்டணம்,  தாமதக்  கட்டணம்,  அதற்கு  வட்டி
      என  கூடுதலாக  கட்ட  வேண்டும்.
9.   கிரெடிட்  கார்டு  கடனை  கட்டவில்லை  எனில்  தனி  நபர்  கடன்,  வீட்டுக்கடன்,  தொழில்கடன்  வாங்குவது  சிக்கலாகும்.
10. கிரெடிட்  கார்டு  தொலைந்துவிட்டால்  கிரெடிட்  கார்டு  வழங்கிய  நிறுவனத்துக்கு  போன்  செய்து  அதன்  செயல்பாடுகளை
       முடக்கிவிடவும்.
---நீரை.மகேந்திரன்.  ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.   

Friday, March 24, 2017

அதிசய உணவகம்

அலைகளின்  மேல்  அதிசய  உணவகம் !
     சான்சியர்  என்னும்  குட்டித்தீவு  கிழக்கு  ஆப்பிரிக்காவில்  இருக்கிறது.  இது  சுற்றுலாவாசிகளின்  தனித்துவமான  இடம்.  வானின்  நீலம்  கொண்டு  மயங்கிக்  கிடக்கும்  கடற்கரை.  காணும்  எவரையும்  கவர்ந்து  இழுத்துவிடும்.  கடல்  அலைகள்  ஆர்ப்பரிக்கும்  அந்த  நிலத்தில்,  அலைகளுக்கு  நடுவில்  ஒரு  குட்டி  மலை  இருக்கிறது.  அதைப்  பாறை  என்றுதானே  சொல்ல  வேண்டும்.  ஆம்!  அந்தப்  பாறையின்  மீது  அமைந்திருகிறது  இந்த  உணவு  விடுதி.  அதன்  பெயரே  'தி  ராக்  ரெஸ்டாரெண்ட்'
( பாறை  உணவு  விடுதி ).  மய்க்கன்வாய் பிங்வே  கடற்கரையில்  இந்த  உணவுவிடுதி  அமைந்துள்ளது.  இதில்  பலதரப்பட்ட  கடல்  சார்ந்த  உணவு  வகைகள்  பரிமாறப்படுகின்றன.
     இந்த  உணவு  விடுதியில்  அமர்ந்திருக்கும்போது  உலகத்தின்  பரபரப்பைவிட்டு  வெகுதூரம்  விலகி  வந்துவிட்ட   உணர்வு  ஏற்படுவதாக  இங்கு  சென்றுவந்த  பயணிகள்  தெரிவிக்கின்றனர்.  கடலுக்கு  நடுவே  எழுந்துள்ள  மாய  மாளிகை  போல  இந்த  உணவு  விடுதி  சுற்றுலாவாசிகளைக்  கவர்ந்துவருகிறது.
-- ஜெய்.  (  சொந்த வீடு ).
-- 'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  சனி,  ஆகஸ்ட்  23, 2014. 

Thursday, March 23, 2017

ரோவர் விண்கலம்

செவ்வாய்  கிரகத்தில்  சிக்கியது  'நாசா'வின்  ரோவர்  விண்கலம்.
     செவ்வாய்  கிரகத்தை  ஆய்வு  செய்ய,  அமெரிக்கா  அனுப்பிய,  'கியூரியாசிட்டி  ரோவர்'  விண்கலம்,  மணலில்  சிக்கியுள்ளது.
     பூமியில்  இருந்து,  57  கோடி  கி.மீ., தொலைவில்  உள்ள  செவ்வாய்  கிரகத்தை  ஆய்வு  செய்ய, 13  ஆயிரம்  கோடி  ரூபாய்  செலவில்,  1  டன்  எடையுள்ள, 'மார்ஸ்  ரோவர்  கியூரியாசிட்டி'  என்ற  விண்கலத்தை,  2012  ஜனவரியில்,  நாசா  விண்வெளி  ஆய்வு  நிறுவனம்  அனுப்பியது.
     எட்டு  மாத  பயணத்திற்குப்  பிறகு,  அதே  ஆண்டு,  ஆகஸ்ட்  6ல்,  வெற்றிகரமாக  செவ்வாய்  கிரகத்தில்  தரையிறங்கி,  அந்த  கிரகத்தின்  பல  பகுதிகளை  ஆய்வு  செய்து,  அது  தொடர்பான  படங்களை  நாசாவிற்கு  அனுப்பி  வந்தது.
     இரண்டு  ஆண்டு  கால  ஆய்வுக்காக  சென்றுள்ள  ரோவரின்  பணி,  இந்த  ஆண்டு  இறுதியுடன்  முடிவடைகிறது.  இந்நிலையில்,  கடந்த  மாதம்,  மவுன்ட்  ஷார்ப்பின்  என்ற  பகுதியை  நோக்கி,  ரோவர்  விண்கலம்  சென்றுகொண்டிருந்த  போது,  அதன்  ஆறு  சக்கரங்களில்,  ஒரு  சக்கரத்தில்  ஓட்டை  ஏற்பட்டது.
     எனினும்,  மீதமுள்ள  ஐந்து  சக்கரங்களின்  உதவியுடன்  ரோவர்  விண்கலம்,  தன்  ஆய்வை  தொடர்ந்தது.
     இந்நிலையில்,  மீண்டும்  ஒரு  சோதனையாக,  மவுன்ட்  ஷார்ப்பில்  உள்ள,  மறைவான  பள்ளத்தாக்கு  பகுதியில்  சென்று  கொண்டிருந்த  ரோவர்  விண்கலம்,  அங்கிருந்த  வழுக்கும்  மணல்  பகுதியில்,  வெளியே  வரமுடியாமல்  சிக்கியுள்ளது.
     பூமியிலிருந்தவாறு,  அதை  மீட்கும்  முயற்சிகளை  நாசா  விஞ்ஞானிகள்  மேற்கொண்டுள்ளனர்.
-- தினமலர்  சென்னை  வெள்ளி  22-8-2014   

Wednesday, March 22, 2017

ஜோக்ஸ்!

*   "கணிப்பொறிக்கும்,  எலிப்பொறிக்கும்  என்ன  வித்தியாசம்?"
     "கணிப்பொறியில்  மவுஸ்  வெளியே  இருக்கும்;  எலிபொறியில  உள்ள  இருக்கும்."
*   "மூணாவது  லைன்  லெட்டர்ஸ்  தெளிவா  தெரியுதா?"
    "தெரியுது  டாக்டர்"
    "படிங்க..."
    "ஃபீஸ்  200  ரூபாய் !"
*   "எதிரியிடம்  வெட்டுப்பட்டு... குட்டுப்பட்டு  வாழ்வதைவிட ..."
    " 'அவருக்குக்  கட்டுப்பட்டு  வாழ்வதே  மேல்  என்கிறீரா  மன்னா>"
*   "உங்கள்  கணவர்  உங்களோடு  வாழ்வதைத்தான்  விரும்புகிறார்.  நீங்கள்  ஏன்  அவரை  விவாகரத்து  செய்ய
      நினைக்கிறீர்கள்?"
     "எங்க  ரெண்டு  பேரோட  கருத்தும்  ஒத்துப்போகலைங்கிறது  இதிலேயே  தெரியுதே  யுவர்  ஆனர் !"
*   "மன்னர்  என்ன  செய்துகொண்டு  இருக்கிறார்?"
    "மிரரை  டெரராகப்  பார்த்து  மீசையின்  எரரை  சரிசெய்துகொண்டு  இருக்கிறார் !"
-- ஆனந்த விகடன்.  24-12- 2014.                                                                   

Tuesday, March 21, 2017

காலையில் கல்... மாலையில் புல்!

 தமிழகத்தில்  இருந்த  சித்த  மகாபுருஷர்களுள்  ஒருவரான  தேரையார்,  "காலையில்  கல்லும்,  மாலையில்  புல்லும்  ஆளை  வெல்லும்"  என்று  சொல்லியிருக்கிறார்.  அதிகாலையில்  துயிலெழ  வேண்டும்.  துயிலெழுந்தவுடன்  பல்  துலக்கிவிட்டுக்  கொஞ்ச  தூரமாவது  கட்டாந்தரையில்  நடக்க  வேண்டும்.  கல்  தரையில்  நடக்க  வேண்டும்.  மாலை  நேரத்தில்  சூரியன்  அஸ்தமனமானபின்  புல்  தரையில்  நடக்க  வேண்டும்.  நடக்கும்  போது  வெறுங்காலுடன்  நடக்க  வேண்டும்.  இந்த  நடைப்பழக்கம்  பாதத்தில்  உள்ள  நரம்பு  முடிச்சுகளுக்குப்  புத்துணர்ச்சியைத்  தரும்.  அதன்மூலம்  நோயற்ற  வாழ்வு  கிடைக்கும்.  இதைத்தான்  தேரையாரின்  வாக்கு  குறிப்பிடுகிறது.
--  தினமலர்  பக்திமலர்.  ஆகஸ்ட்  14,  2014.   

Monday, March 20, 2017

ஏழரைச் சனியில் மூன்று வகை!

  ஏழரைச்  சனியில்  முதல்  சுற்றை  மங்கு  சனி  என்பார்கள்.  இரண்டாம்  சுற்று  பொங்கு  சனி  எனப்படும்.  மூன்றாம்  சுற்று  மரணச்  சனி  எனப்படும்.  முதல்  சுற்று  ஜாதகருக்கு  சுபபலனும்,  அவர்  அம்மா,  அப்பாவுக்கு  தீமையும்  தரும்.  இரண்டாம்  சுற்று  ஜாதகருக்கு  சுபமும்  பெற்றோருக்கு  கஷ்டமும்  கொடுக்கும்.  மூன்றாம்  சுற்று  ஜாதகருக்கு  பிணி,  மூப்பு,  துன்பங்கள்  தரும்.
ரட்சிக்கத்தான்  தெற்கு  பார்க்கிறார்!
     சிவன்  கோயில்களுக்குச்  சென்று  தரிசிக்கும்போது  தென்முகக்  கடவுள்  என்று  சொல்லப்படும்  தட்சிணாமூர்த்தியை  வணங்கவேண்டும்.  அவரது  சந்நிதியின்  முன்புறம்  வடக்கு  பார்த்து  அமர்ந்து  நமசிவாய  என்ற  ஐந்தெழுத்தைத்  தியானிக்க  வேண்டும்.  ஆன்மாக்கள்  வடக்கு  நோக்கிச்  செல்வதை  சரண  யாத்திரை  என்றும்,  தெற்கு   நோக்கிப்  போவதை  மரண  யாத்திரை  என்றும்  சாஸ்திர  நூல்கள்  சொல்கின்றன.  ஆன்மாக்கள்  தன்னை  நோக்கி  சரண்  அடைய  வருவதால்  அவர்களை  ரட்சிப்பதற்காக  தட்சிணமூர்த்தி  தெற்கு  பார்த்திருக்கிறார்.
-- தினமலர்  பக்திமலர்.  ஆகஸ்ட்  14,  2014.    

Sunday, March 19, 2017

தகவல் பலகை

*     மூங்கில்  24  மணிநேரத்தில்  3  அடி  உயரம்  வளரும்.  இவ்வளவு  வேகமான  வளர்ச்சியை  கொண்ட  மரம்  வேறு  எதுவும்  இல்லை.
*     சிவப்பு  நிறத்தின்  அலை  நீளம்  அதிகம்.  இதனால்  இந்த  நிறத்தின்  கதிர்கள்  சிதறாமல்  தொலைதூரம்  செல்லும்.  எனவேதான்
       வாகனங்களின்  பின்புறமும்,  உயர்ந்த  கட்டிடங்களிலும்  சிவப்பு  விளக்குகளை  பொருத்துகின்றனர்.
*உலகில்  முதன்முதலாக  அஞ்சல்தலை  வெளியிட்ட  நாடு  இங்கிலாந்து.  1840ம்  ஆண்டில்  வெளியான  இந்த  அஞ்சல்தலையில்
   அந்த  நாட்டின்  பெயர்  பொறிக்கப்படவில்லை.
*   இந்தியாவின்  முதல்  தொலைக்காட்சி  நிலையம்  1959ம்  ஆண்டு  செப்டம்பர்     15ம்  தேதி  டில்லியில்  தொடங்கப்பட்டது.
    சென்னை  தொலைக்காட்சி  நிலையம்  1975ல்  தொடங்கப்பட்டது.
*   டாக்டர்  பட்டம்  பெறுபவர்கள்  மருத்துவ  தந்தை  'ஹிப்போகிராட்டீஸ்'  பெயரிலும்,  நர்ஸ்  தொழிலுக்கு  வருபவர்கள்  'பிளாரன்ஸ்
    நைட்டிங்கேல்'  பெயரிலும்  சத்தியப்  பிரமாணம்  எடுக்கின்றனர். 

Saturday, March 18, 2017

பூஜை முறை !

  சிவபெருமானை  நாமெல்லாம்  வில்வம்  கொண்டுதான்  பூஜிப்போம்.  ஆனால்,  கண்ணப்பர் -- மாமிசம்,  சாக்கிய  நாயனார் --  கற்கள்,  பாணபத்திரர் -- இசை,  நாவரசர்  மற்றும்  சம்பந்தர்  --  கொஞ்சு தமிழ்,   சுந்தரர் -- மிஞ்சு தமிழ்,  மாணிக்கவாசகர்  --  கண்ணீர்  கொண்டு  பூஜித்திருக்கிறார்கள்.
-- ஆர். ஆர். பூபதி,  கன்னிவாடி.
பற்று,  ஆசை,  பேராசை !
     ஒரு  துறவியிடம்  இருந்த  பல  சீடர்களுள்  ஒருவன், "குருவே! பற்று,  ஆசை,  பேராசை  இவைகளின்  பொருள்  என்ன?"  என்று  கேட்டான்.
    "சீடனே!  தன்  பொருள்  மேல்  உண்டாகும்  விருப்பத்திற்கு  'பற்று'  என்றும்;  பிறர்  பொருள்  மீது  உண்டாகும்  விருப்பத்திற்கு  'ஆசை'  என்றும்;  கிடைக்காத  பொருள்  மீது  உண்டாகும்  விருப்பத்திற்கு  'பேராசை'  என்றும்  பொருளாகும்'  என்றார்  துறவி.
-- டி.பூபதிராவ்,  காஞ்சிபுரம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர்  16-- 31,  2013.  

Friday, March 17, 2017

ஆன்ம லாபம்.

  ஆன்ம  லாபம் பெறவேண்டுமாயின்,  திருமூலர்  கூறுகின்றார் :
'உடம்பார்  அழியின்  உயிரார்  அழிவர்
 திடம்  பட  மெய்ஞ்ஞானம்  சோரவும்  மாட்டார்
 உடம்பை  வளர்க்கும்  உபாயம்  அறிந்தே
 உடம்பை  வளர்த்தேன்  உயிர்  வளர்த்தேனே'
     'உடம்பு  ஆலயம்  போன்றது'  என்று  வேதங்கள்  சொல்லியிருக்க்கின்றன.
இதனைத்  திருமூலர்,
'உள்ளம்  பெரும்கோயில்  ஊன்  உடம்பு  ஆலயம்
 வள்ளல்  பிரானார்க்கு  வாய்  கோபுர  வாசல்
 தெள்ளத்  தெளிந்தோர்க்குச்  சீவன்  சிவலிங்கம்
 கள்ளப்  புலன்  ஐந்தும்  காளா  மணிவிளக்கே'
     என்ற  பாடலில்  புலப்படுத்துவார்.
     உடம்பு  மிக  மிக  முக்கியம்.  அழியக்  கூடியதானாலும்,  இருக்கும்  வரை  ஆரோக்கியமாக  இருக்க  வேண்டும்.  உடலைக்  காத்து  ஆன்ம  லாபம்  தேடும்  முயற்சிகளில்  ஈடுபடுவோமாக!
-- ஞானவாயில்.  உடம்பின்  பெருமை!
--  தினமலர் பக்திமலர்.  25-12-2014.     

Thursday, March 16, 2017

நெய் விளக்கு ஏற்றினால்...

 மதுரை  நகரில்  உள்ள  திருவாப்புடையார்  திருக்கோயில்  இறைவனுக்கு  ஒரு  நெய்  விளக்கு  ஏற்றி  வைத்தால்  1000  பசு  தானம்  செய்த  பலனும்,  இளநீர்  அபிஷேகம்  செய்தால்  100  அஸ்வமேத  யாகம்  செய்த  பலனும்  உண்டாகும்  எனத்  கலபுராணத்தில்  கூறப்பட்டுள்ளது.
-- கே.வி. சீனிவாசன்,  திருச்சி.
பெருமாளின்  எட்டு  சயனக்  கோலங்கள்!
1.   யோக  சயனம்  --  தில்லை,  திருச்சித்திரக்  கூடம்.
2.   தர்ப்ப   சயனம்  --  திருப்புல்லாணி.
3.   புஜங்க   சயனம்  --  திருவரங்கம்  திருஎவ்வுன்  (  திருவள்ளூர் ).
4.   தல சயனம்  --  திருக்கடல்மல்லை  ( மகாபலிபுரம் ).
5.   வடபத்ர  சயனம்  --  திருவில்லிபுத்தூர்.
6.   உத்தான  சயனம்  --  கும்பகோணம்.
7.   வீர  சயனம்  --  திரு இந்தளூர்  ( மயிலாடுதுறை ).
8.   மாணிக்க  சயனம்  --  திருநீர்மலை.
-- வீர.செல்வம்,  பந்தநல்லூர்.
---  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர்  16-- 31,  2013.  

Wednesday, March 15, 2017

சில தகவல்கள்

*   உற்சவர்  அல்லாமல்  மூலவர்  வீதியில்  வலம்  வருவது  சிதம்பரம்  --  நடராஜர்  கோயில்.
*   கும்பகோணம்  அருகே  தாராசுரம்  என்ற  ஊரில்  உள்ள  ஐராவதீஸ்வரர்  கோயிலில்  உள்ள  சிற்பத்தில்  வாலியும்,
     சுக்ரீவனும் சண்டை  இடும்  காட்சி  உள்ளது.  இங்கிருந்து  ராமர்  சிற்பம்  இருக்கும்  தூண்  தெரியாது.  ஆனால், ராமன்  அம்பு
    தொடுக்கும்  சிற்பத்தில்  இருந்து  பார்த்தால்,  வாலி  சுக்ரீவன்  போர்  புரியும்  சிற்பம்  தெரியும்.
*   கரூர்  மாவட்ட  குளித்தலை  கடம்பவனநாதர்  கோயிலில்  இரட்டை  நடராஜர்  தரிசனம்  செய்யலாம்.
*   கருடாழ்வார்  நான்கு  கரங்களுள்  இரு  கரங்களில்  சங்கு  சக்கரம்  ஏந்தியபடி  காட்சி  தரும்  தலம்  கும்பகோணம்  அருகே
    வெள்ளியங்குடி.  108  திவ்யதேசத்தில்  இங்கு  மட்டும்  இதுபோல்  காட்சி  தருகிறார்.
*   ஸ்ரீபெரும்புதூரில்  உள்ள  ராமானுஜர்  உருவம்,  விக்ரஹமோ,  வேறு  உலோகப்  பொருளால்  ஆன  வடிவமைப்போ  இல்லை.
    குங்குமப்பூ,  பச்சை கற்பூரம்  கொண்ட  மூலிகைப்  பொருளால்  ஆனது.
*   விருதுநகர்,  சொக்கநாதன்புத்தூரில்  உள்ள  தவநந்திகேஸ்வரர்  ஆலயத்தில்  உள்ள நந்திக்கு  கொம்போ,  காதுகளோ
     இல்லை.
*   வேலூர்  அருகே  உள்ள  விருஞ்சிபுரம்  என்ற  தலத்தில்  உள்ள  கோயில்  தூணின்  தென்புறம்  அர்த்த  சந்திரவடிவில்  1 முதல்
     6  வரையும்,  6  முதல்  12  வரையும்  எண்கள்  செதுக்கியுள்ளன.  மேற்புறம்  உள்ள  பள்ளத்தில்  வழியே  ஒரு  குச்சியை
     நீட்டினால்,  குச்சியின்  நிழல்  எந்த  எண்ணில்  விழுகிறதோ  அதுதான்  அப்போதைய  நேரம்.
-- தினமலர் பக்திமலர்.  25-12-2014.

Tuesday, March 14, 2017

மெய்ஞானம்

   பகவான்  ரமணரிடம்  சென்ற  சில  அறிஞர்கள், "உங்களால்  கடவுளைக்  காட்டமுடியுமா?"  என்று  கேட்டனர்.
    "நீ  யார்?"  என்ற  கேள்வியை  ரமணர்  கேட்டார்.  அதாவது  நான்  யார்?  நான்  என்பது  என்ன?  நான்  என்றால்  என்ன?  என்று  பல  பொருள்களில்  விரியும்  கேள்விகளைக்  கேட்டார்.  இதற்கும்  கடவுளை  அறிவதற்கும்  என்ன  தொடர்பு  என்று  ஒவ்வொருவரும்  தலையைப்  பிய்த்துக்கொள்ளாத  குறையாக  யோசித்துப்  பார்த்தனர்.  ஒருவருக்கும்  அதற்கான  விடை  புலப்படவில்லை.
     ரமண  மகரிஷியிடம்  தங்களது  குழப்பத்தை  வெளிப்படுத்தினார்கள்.
     ரமணர்  புன்னகைத்தவாறே  கேட்டார், "உன்னையே  யார்  என்று  தெரியாத  உன்னால்,  கடவுள்  பற்றி  எப்படித்  தெரிந்துகொள்ள  முடியும்?"
     இப்படி  நிறைய  கேள்விகள்  கேட்டார்  ரமணர்.  கேள்விகள்  அற்ற  புள்ளியில்  கடவுள்  தெரிகிறார்.  அனைத்துக்  கேள்விகளுக்கும்  விடை  கண்ட  புள்ளியில்  கடவுள்  தெரிகிறார்  என்பது  இதன்  பொருள்  அல்ல.
     அனைத்துக்  கேள்விகளுக்கும்  அற்ற  புள்ளி  என்பது,  அனைத்துக்  கேள்விகளும்  நமது  அறியாமையின்  விளைவுதான்  என்று  உணரும்  புள்ளி  மிக  முக்கியமான  புள்ளி  அது.  அந்தப்  புள்ளியே  இறைநிலை  என்னும்  பிரகாசமாக  விரிகிறது.
-- விகடபாரதி.  ( ரமணர்  வாழ்வில் )  ஆனந்த  ஜோதி  இணைப்பு.
--  'தி இந்து'  நாளிதழ். வியாழன்,  டிசம்பர்  25, 2014.  

Monday, March 13, 2017

அடக்கம்!

   ஒரு  துறவியை  சந்தித்த  ஒருவன், "சுவாமி!  மனிதனுக்கு  அடக்கம்  அவசியம்  என்று  எல்லோரும்  சொல்கிறார்களே,  எதனால்?"  என்று  கேட்டான்.
    "குழம்பில்  புளி,  காரம்  போன்ற  அனைத்துப்  பொருட்கள்  இருந்தாலும்  உப்பு  இல்லையென்றால்  உண்பதற்கு  உதவாது.  அதுபோல்  ஒரு  மனிதனிடம்  செல்வம்,  பட்டம்,  பதவி  முதலியன  இருந்தாலும்  அடக்கம்  இல்லையென்றால்  சிறப்படைய  மாட்டான்!"  என்றார்  துறவி.
-- டி.பூபதிராவ்,  காஞ்சிபுரம்.
தல  விருட்சங்கள் !
     ஒரு  ஆலயம்  எழுப்புவதற்கு  முன்  அதன்  மூலவழிபாடு,  அவ்விடத்திலி  உள்ள  மரத்தின்  கீழிருந்துதான்  தொடங்கப்படுகின்றன.  அம்மரமே  அந்தத்  தலத்தின்  தல  விருட்சமாக  சிறப்பு  பெறுகிறது.
-- சு.மதுமிதா,  பெருந்துறை.
--  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர்  16-- 31,  2013.    

Sunday, March 12, 2017

ஐன்ஸ்டீன்

   E=MC2  என்ற  கூற்று  1905ல்  இயற்பியல்  வரலாற்றில்  புரட்சியை  ஏற்படுத்தியது.  அந்த  கூற்றின்  அடிப்படையான  சிறப்புச்  சார்புக்  கோட்பாட்டைக்  கண்டறிந்தபோது ஐன்ஸ்டீனுக்கு  26  வயது.  மூன்று  வயதுவரை  ஐன்ஸ்டீன்  பேச்சாற்றல்  இல்லாத  குழந்தையாக  இருந்தார்.  அவர்  பள்ளியில்  எடுத்த  அதிகப்படியான  மதிப்பெண்  நூற்றுக்கு  ஐம்பதுதான்.  சிறு  வயது  முதல்  இசை  கேட்டு  ரசிப்பதும்,  வயலின்  இசைப்பதும்  ஐன்ஸ்டீனுக்கு  பிடித்தமான  விஷயங்கள்.
     ஐன்ஸ்டீனின்  வீட்டுக்கு  வந்து  டியூஷன்  மாஸ்டர்  கணிதம்  மற்றும்  தத்துவத்தைக்  கற்பித்தார்.  அவர்  ஒரு  நாள்  ஐன்ஸ்டீனிட்ம்  குழந்தைகளுக்கான  அறிவியல்  புத்தகம்  ஒன்றைத்  தந்தார்.  அதில் "மின்சாரக்  கம்பத்துக்குள்  மின்சாரம்  பாயும்  வழி  எங்கும்  நாமும்  ஓடினால்  எப்படி  இருக்கும்?"  என  எழுதியிருந்தது.  அதைப்  படித்தவுடன்  ஐன்ஸ்டீனின்  அறிவியல்  கற்பனைகள்  விரியத்  தொடங்கின.  "ஒலி  என்பது  அலையாக  இருந்தால்  அது  உறைந்த  நிலையில்தான்  காட்சி  அளிக்கும்.  ஆனால்  ஒளி  பாய்கிறதே.  இது  அணு  பற்றிய  கருத்தியலுக்குப்  புறம்பானதே."  என  மனதில்  சினிமாவாக  ஒளியின்  ஓட்டத்தைக்  காண  தொடங்கினார்.  அன்று  தோன்றியக்  காட்சியை  10  வருடங்களாக  அசைபோட்டதின்  விளைவாகவே  சிறப்புச்  சார்புக்  கோட்பாடு.
-- ம.சுசித்ரா.  ( பன்முக  அறிவுத்திறன் ).  வெற்றிக்கொடி.
-- 'தி இந்து'  நாளிதழ்.  இணைப்பு. செவ்வாய், டிசம்பர் 23, 2014.