Sunday, March 29, 2015

சி.எப்.எல்.பல்புகள்.

 சி.எப்.எல். ( காம்பாக்ட்  புளோர  சண்ட்  லைட் )  மிகக்  முறைவான  மின்சாரத்தை  எடுத்துக்கொள்வதால்,  மின்சார  செலவைக்  குறைக்கின்றன.  அத்துடன்  அதிக  அளவு  வெப்பத்தையும்  வெளியிடுவதில்லை.  ஒரு  சி.எப்.எல்.  பல்பு,  வழக்கமான  குண்டு  பல்பைக்காட்டிலும்  ஐந்து  மடங்கு  வெளிச்சத்தைத்  தருகிறது.
     சி.எப்.எல்.  எரியும்  நேரம்  சாதாரண  பல்பைவிட  எட்டு  மடங்கு  அதிகம்.
     நீங்கள்  60  வாட்ஸ்  சாதாரண  பல்புக்கு  பதிலாக  15  வாட்ஸ்  சி.எப்.எல்.  பல்புகளை  உபயோகித்தால்,  குறைந்த  பட்சம்  ஒரு  மணி  நேரத்திற்கு  45  வாட்ஸ்  மின்சாரத்தை  மிச்சப்படுத்த  முடியும்.  ஒரு  மாதத்திற்கு  11  யூனிட்  மின்சக்தியைச்  சேமிக்க  முடியும்.  செலவையும்  குறைக்க  முடியும்.  சி.எப்.எல்.  பல்புகள்   5  முதல்  8  மாதங்கள்  வரை  உழைக்கும்.
     ஆனால்,  சி.எப்.எல்.  பல்புகளை  தயாரிப்பதிலும்,  பயன்படுத்திய  பிறகு  அழிப்பதிலும்  அதிகமான  பாதரச  நச்சு  காற்றில்  கலந்து  விடுகின்றன.  பாதரச  நச்சு  வளி  மண்டலத்தில்  கலந்துவிடும்  ஆபத்து  இருப்பதாகவும்  சில  ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.
-- தினமலர்  சிறுவர் மலர்.  நவம்பர். 2,  2012.

No comments: