Friday, August 28, 2015

நாமும் தெரிஞ்சுக்கலாம் !

*  வெள்ளியை உருக்கி ஊற்றியது போல அழகாக இருக்கும் பாதரசம், பூமியில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் அளவிட முடியாதவை.  வெறும் 0.6 கிராம்
   பாதரசம், சுமார் 20 ஏக்கர் அளவுள்ள ஏரியை மாசுபடுத்தும் தன்மை கொண்டது.  இதனால் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள்
   ஏற்படுகின்றன.
*  மருத்துவ கருவிகளான தெர்மாமீட்ட , ரத்த அழுத்தம் அறியும் கருவிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.  இந்தக் கருவிகள் பழுதடையும்போது கழிவாகத்
   தூக்கி எறியப்படுகின்றன.
*  இன்றைய தேதியில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படுவதன் மூலம்தான்.  உலகின் மிக
   முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்துக்கு நிலக்கரியை எரிப்பது முக்கியக் காரணம்.
--  ந.வினோத் குமார். சூழல் சீர்கேடு. உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013.  

No comments: