Friday, September 18, 2015

வைக்கோல் பிரிக்கும் இயந்திரம்.

 சேலம் தலைவாசலில் ரவுண்ட் பேலர் எஸ் ஆர்பி - 60 என்ற இயந்திரத்தை, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ள சக்திமான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இது அறுவடைக்கு பின்பு கரும்பின் தோலையும், நெல்லிருந்து வைக்கோலையும் பிரித்தெடுக்கும் பணியை திறம்பட செய்யக்கூடியதாகும்.  தற்போது தமிழகமெங்கும் இந்த இயந்திரம் விற்பனைக்கு கிடைக்கிறது.
     மேலும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 30 அடி உயரம் வரை தேங்காய் பறிக்கும் வசதி இதில் உள்ளது.  360 டிகிரி வரை சுழலும் தன்மை கொண்டது.  தனிநபர் ஒருவரால் இதை இயக்க முடியும்.  இதன்மூலம், தேங்காய் பறிப்பது மட்டுமன்றி, மாங்காய், பனை எண்ணெய், தோட்ட பயிர்களை பராமரித்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள முடியும்.
-- தினமலர் நாளிதழ். 27- 12-2013. 

No comments: