Monday, September 21, 2015

' நெட்' டுக்குத்து.

*  செய்தி : ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பாடுபடுகிறது.  --  சோனியா.
    குத்து :  மேடம். தப்பா தமிழ் பேசுறீங்க.  அது ஒழிக்க இல்ல, ஒளிக்க.
*  செய்தி :  காவிரித் தண்ணீர் வழங்க பிரதமர் கட்டளையிட்டார்.  --  விஜயதாரணி.
   குத்து :  இவங்களுக்கு லிப் ரீடிங்லாம் கூட தெரியும் போல டோய்.  --  அறுவை சர்ஜன்.

பாருங்கையா இந்த கூத்தை!
*  விலை குறைந்த பொம்மைகள் என்றாலே அது சீன தயாரிப்புகள் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது.  ஆனால், அடுத்த முறை நீங்கள் சீன
   தயாரிப்பில் உருவான பொம்மையை வாங்கினாலும் அது நிச்சயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நம்புங்கள்.
*  சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பொம்மைகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்றால் நம்புவது
   சிரமம் தான்.  ஆனால், அதுதான் உண்மை.  பால்ஸ் பிளஷ் இந்தியா எனும் பொம்மை தயாரிப்பு நிறுவனம் சீனாவின் துணை நிறுவனமாகும்.
*  பிடதி ஆசிரம குளத்தில் அதிகாலையில் நீராடிய நடிகை ரஞ்சிதா, ருத்ராட்ச மாலைகள் அணிந்து, காவி உடை உடுத்தி நித்யாந்தாவிடம் தீட்சை பெற்றார்
*  இன்றைக்கு இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு மனநலச் சிதைவு இருப்பதாக உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை
   தெரிவிக்கிறது..

No comments: