Sunday, June 29, 2008

பழமொழி

"வேலுக்கு பல் இருகும்
வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே
ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்".

எனது சிறிய தகப்பனார் s.சபாரெத்தின முதலியார் கூறக்கேட்டது.

3 comments:

கோவி.கண்ணன் said...

இந்த பழமொழியின் பொருள் யாது ?

க. சந்தானம் said...

அன்பு கோவி கண்ணன் அவர்களுக்கு, வணக்கம்.
பழமொழிக்கு என்ன அர்த்தம்? என்று கேட்டுள்ளீர்கள். வேலங்குச்சி, வேப்பங் குச்சி, பூலாங் குச்சி, ஆலங் குச்சி, மற்றும் நாயுருவி குச்சி எடுத்து பல் துலக்கினால் ஏற்படும் பலன்கள் பற்றிய பழமொழிதான் அது.

கோவி.கண்ணன் said...

//க. சந்தானம் said...
அன்பு கோவி கண்ணன் அவர்களுக்கு, வணக்கம்.
பழமொழிக்கு என்ன அர்த்தம்? என்று கேட்டுள்ளீர்கள். வேலங்குச்சி, வேப்பங் குச்சி, பூலாங் குச்சி, ஆலங் குச்சி, மற்றும் நாயுருவி குச்சி எடுத்து பல் துலக்கினால் ஏற்படும் பலன்கள் பற்றிய பழமொழிதான் அது.
//

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா,

பூலான் குச்சி கேள்விபட்டது இல்லை, புங்கை மரக்குச்சி என்று நினைத்திருந்தேன். நாயுருவு பார்த்து இருக்கிறேன். செடியின் பகுதியை மேலிருந்து கிழே தடவிச் சென்றால் ஒன்றும் ஆகாது. ஆனால் கீழிருந்து மேலே தடவினால் அதில் இருக்கும் கதிர் போன்ற எள் அளவுக்கு இருக்கும் கோதுமை போன்ற விதை முட்கள் குத்திவிடும், ஆடைகளில் அப்பிக் கொள்ளும். மிகச் சிறிய முட்கள் தான் காயங்கள் ஏற்படுத்தாது சிறிது அரிக்கும்.