Monday, May 31, 2010

ஆடை -- கூறை .

ஆடையை , கூறை என்ற தமிழ்ச் சொல்லால் குறிப்பர் . தறியில் நெய்யப்பட்டு கூறுபடுத்தப்படுவதால் கூறை என்று ஆடை குறிக்கப்படும் . ஆடை வகைகளை பதினேழாகப் பிரிப்பர் .
கந்தை , விரிபம் , கண்டை , பிழையல் , வேதகம் , புங்கம் , பங்கம் , கத்தியம் , துரியம் , சிற்றில் , நாகம் , பாரி , பாளிதம் , காம்பு , நேத்திரம் , மயிரகம் , வயிரியம் என்பவை அவை .
--- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 24 . 2009 .

Sunday, May 30, 2010

'சூப்பர் பூமி '

விண்ணில் தண்ணீர் , வெப்பத்துடன் இன்னொரு ' சூப்பர் பூமி '
பூமியைப் போலவே நீர் நிறைந்த , அதைவிட 2 . 7 மடங்கு பெரிய ' சூப்பர் பூமி ' கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2 . 7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர் .
புதிய கிரகத்தில் தண்ணீர் , வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் . புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214 பி என்று பெயரிட்டனர் . எனினும் பூமியை விட 2 .7 மடங்கு பெரிதாக அது இருப்பதால் , ' சூப்பர் பூமி ' என்று அழைக்கின்றனர் .
இதுபற்றி பேராசிரியர் சார்போனியூ கூறுகையில் , " நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள்ளது . நமது பூமிக்கு அருகில் புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது . செயற்கை கோளுடன் இணைந்த அதிநவீன தொலைநோக்கியில் கிரகங்களை தேடுவோம் . இந்த கிரகத்தை சாதாரண 16 அங்குல தொலைநோக்கியை வைத்தே காண முடிகிறது " என்றார் .
இதுபோன்ற புதிய கிரகங்கள் இருப்பதை கடந்த சில ஆண்டுகளில்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கத் தொடங்கினர் . இதற்கு முன் தெரிய வந்த கிரகங்கள் ஜுபிடர் போன்ற அமைப்பில் இருந்தன . ' சூப்பர் எர்த் ' கிரகம் தான் பூமியைப் போல உள்ளது என்றும் சார்போனியூ தெரிவித்தார் .
எனினும் , புதிய கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கத் தேவையான நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும் , ஆக்ஸிஜன் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை .
--- தினகரன் . 18 . டிசம்பர் 2009 .

Saturday, May 29, 2010

' முட்டாள் ' உளவாளி !

சதாம் ஹுசேனின் அழிவுக்குக் காரணம் யார் தெரியுமா ? ஏப்ரல் ஃபூல் என்கிற உளவாளி ! சதாமை நெருங்க அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஏப்ரல் ஃபூல் என்கிற புனைபெயரில் ஓர் உளவாளியைத் தாயார் செய்து அனுப்பியது .
அமெரிக்காவைப்பற்றிய சரியான துப்புகள் கொடுத்ததால் இராக் ராணுவம் ஏப்ரல் ஃபூலை விலைக்கு வாங்கியது . ஒவ்வொரு தகவலுக்கும் லட்சக்கணக்கில் பணம் பெற்றார் ஃபூல் . ' வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தத் திட்டம் போட்டிருக்கிறது ' என்று ஃபூல் கொடுத்த தகவலை நம்பி , அங்கே படைகளைக் குவித்தார் சதாம் . திட்டம் போட்டபடி கிழக்கு மற்றும் தென்கிழக்குத் திசையில் இருந்து அமெரிக்க காலாட்படை ஆக்ரோஷமாகத் தாக்கியது . இராக் ஆடிப்போனது . மூன்றே வாரங்களில் பாக்தாத் வீழ்ந்தது .
இராக் ரசாயனப் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லித்தான் போரை ஆரம்பித்தது அமெரிக்கா . அங்கே ஆயுதங்களும் இல்லை ... ஆய்வுக்கூடங்களும் இல்லை . போரின் இறுதியில் அமெரிக்காவே ஏப்ரல் ஃபூல் ஆனது தனிக்கதை !
---- பா. முருகானந்தம் . உளவாளி விகடன் . 23 . 12 . 2009 .

Friday, May 28, 2010

'சூப்பர் பூமி '

விண்ணில் தண்ணீர் , வெப்பத்துடன் இன்னொரு ' சூப்பர் பூமி '
பூமியைப் போலவே நீர் நிறைந்த , அதைவிட 2 . 7 மடங்கு பெரிய ' சூப்பர் பூமி ' கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2 . 7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர் .
புதிய கிரகத்தில் தண்ணீர் , வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் . புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214 பி என்று பெயரிட்டனர் . எனினும் பூமியை விட 2 .7 மடங்கு பெரிதாக அது இருப்பதால் , ' சூப்பர் பூமி ' என்று அழைக்கின்றனர் .
இதுபற்றி பேராசிரியர் சார்போனியூ கூறுகையில் , " நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள்ளது . நமது பூமிக்கு அருகில் புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது . செயற்கை கோளுடன் இணைந்த அதிநவீன தொலைநோக்கியில் கிரகங்களை தேடுவோம் . இந்த கிரகத்தை சாதாரண 16 அங்குல தொலைநோக்கியை வைத்தே காண முடிகிறது " என்றார் .
இதுபோன்ற புதிய கிரகங்கள் இருப்பதை கடந்த சில ஆண்டுகளில்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கத் தொடங்கினர் . இதற்கு முன் தெரிய வந்த கிரகங்கள் ஜுபிடர் போன்ற அமைப்பில் இருந்தன . ' சூப்பர் எர்த் ' கிரகம் தான் பூமியைப் போல உள்ளது என்றும் சார்போனியூ தெரிவித்தார் .
எனினும் , புதிய கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கத் தேவையான நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும் , ஆக்ஸிஜன் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை .
--- தினகரன் . 18 . டிசம்பர் 2009 .

Thursday, May 27, 2010

' க்ரிப்டோகிராஃபி !'

உளவறிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் .... அதை யாருக்கும் தெரியாமல் கொண்டுபோய்ச் சேர்ப்பது ! தகவல் தருபவர் , தகவல் தெரிந்துகொள்பவர் இருவரும் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் முறைக்குப் பெயர்...க்ரிப்டோகிராஃபி ! '
கி.மு. 1900ல் எகிப்தில் உள்ள பிரமிடுகள் ஒன்றில் செதுக்கப்பட்ட ஒரு வாக்கியம்தான் க்ரிப்டோகிராஃபியில் ஆரம்பம் . ஆரம்ப காலத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் செய்தியை நேரடியாகவே எழுதி அனுப்பினார்கள் . பின்னர் , விடுகதைகள் , கவிதைகள் மூலம் தகவல்களை பரிமாறப்பட்டன . அடுத்ததாக , எழுத்துக்களை மாற்றியமைத்துத் தகவல்களை அனுப்ப ஆரம்பித்தார்கள் . உதாரணமாக , ' Alex ' என்ற பெயரை ' Bmfy ' என்று அனுப்புவார்கள் . முதலில் குழப்பமாக இருக்கும் . எல்லா எழுத்துக்களுக்கும் முந்தைய எழுத்துக்களை எழுதினால் விடை கிடைத்துவிடும் .
--- மதுமிதா . உளவாளி விகடன் . 23 . 12 . 2009 .

Wednesday, May 26, 2010

காசி , திருவையாறு !

காசியில் கங்கை , யமுனை , சரஸ்வதி என்று சொல்லும் ஆறுகளுடன் கிரணா , தூத்பாபா என்னும் நதிகள் சேர ஐந்து நதிகள் கலக்கும் இடம் பஞ்சநதம் எனப்படும் . காசி மகாத்மியம் இந்த ஐந்து நதிகள் கூடும் இடத்தின் பெருமையை விளக்குகிறது .
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதத்திலும் மாதப் பிறப்பு அன்று தீர்த்தவாரி நடக்கும் தலம் திருவையாறு . இதுவும் ஒரு பஞ்சநதீஸ்வரம்தான் . கங்கை நீர் , பிரமதேவனின் கமண்டல நீர் , உமையம்மையின் கொங்கை நீர் , கொண்டல் நீர் , குள நந்தி வாயிலிருந்து வரும் நுரை நீர் ஆகிய ஐந்து வகையான நீர் கூடி காவிரியில் சங்கமமாகும் இடமே திருவையாறு எனப்படும் . திருவையாற்றில் நீராட எல்ல வினைகளும் அகலும்

Tuesday, May 25, 2010

மாணிக்கவாசகர் .

மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவண்ணாமலையில் இருந்த பொழுது மார்கழி மாதம் வந்தது . பெண்கள் குளங்களில் நீராடினார்கள் . பாவை நோன்பு மேற்கொண்டார்கள் . அப்போது அவர் பாடியது திருவெம்பாவை . பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்புதல் , நோன்புக்கு செல்லுதல் , சிவனை வாழ்த்தி பாடுதல் , ஆடுதல் என அவர்கள் செயல்களை விளக்கும் திருவெம்பாவை குளமே சிவபார்வதி வடிவம் என்கிறார் .
-- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 17 . 2009 .

Monday, May 24, 2010

கடவுளின் உணவு .

சாக்லெட்டின் சிறப்புப் பெயர் ' தியோ பிரோமா காகோ ' என்பதாகும் . 1728ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டுத் தாவரவியல் விஞ்ஞானி லின்னேயஸ் என்பவர் சூட்டிய இந்தப் பெயரின் பொருள் ' கடவுளின் உணவு ' என்பதாகும் . நம்மூரில் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதத்திற்கு இணையானப் பெயர் இது !
--- தினமலர் . டிசம்பர் 18 , 2009 .

Saturday, May 22, 2010

ஜெயகாந்தன் .

ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்யோகங்கள் .... மளிகைக் கடை பையன் , டாக்டரிடம் பை தூக்கும் வேலை , மாவு மிஷின் கூலி , தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது , டிரெடில் மேன் , அச்சுக் கோப்பாளர் , பவுண்டரியில் இஞ்சின் கரி அள்ளிப்போட்டது , இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது , ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர் , பத்திரிகை புரூஃப் ரீடர் , உதவி ஆசிரியர் , பின் முழுநேர எழுத்தாளர் !
ராஜராஜன் விருது , பாரதிய பாஷா பரிஷத் விருது , சாகித்ய அகாடமி , ஞானபீடம் , நேரு விருது ( சோவியத் நாடு கொடுத்தது ) , பத்மபூஷன் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே. கே -- தான் .
' என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது . நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன் ' எனச் சொல்வார் . எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை . கேட்டால் , ' நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க ' என்பார் . இன்னும் கேட்டால் , ' உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா . அதுக்காக , இன்னும் பெத்துக் கொடுன்னு கேட்டுட்டே இருப்பியா ?' என்பார் கோபமாக !
ஒரு கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது " இன்றைக்கு நீங்கள் விஸ்வரூபம் காட்டவில்லையே , ஏன் ?' என்றார் ஒரு வாசகர் . உடனே " விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல , காண்பது " என்றார் ஜெயகாந்தன் .
--- நா . கதிர்வேலன் . ஆ. விகடன் , 23 . 12 . 2009 .

Friday, May 21, 2010

பூமி !

எந்தப் பூமி புசிப்பதற்கு உணவு தந்துகொண்டு இருக்கிறதோ , அதே பூமி ஒரு நாள் உங்களையே சாய்த்து , உணவாகப் புசிக்கப்போகிறது . இந்தச் சூழல் தவிர்க்க முடியாதது . வாழ்க்கையை விழிப்பு உணர்வு என்ற ஜன்னல் மூலம் பார்த்து , இதை உணரும் திறன் மனித இனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆ. விகடன் .23 . 12 . 2009 .

Thursday, May 20, 2010

விசேஷம் !

நீராடல் விசேஷம் !
ஐப்பசிக்கு ஆறு
கார்த்திகைக்கு சுனை
மார்கழிக்கு குளம்
மாசிக்கு கடல் .
--- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 17 . 2009 .

Wednesday, May 19, 2010

குடந்தையின் பெருமை !

தீர்த்த யாத்திரை தலங்களில் கும்பகோணத்திற்கு தனிப் பெருமை உண்டு . கோயில் இல்லாத ஊரில் வசிப்பவர்கள் அருகில் இருக்கும் கோயில் குளத்தில் நீராடினால் அவர்தம் பாவங்கள் போகும் . புண்ணிய க்ஷேத்திரத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் வாரணாசிக்கு சென்று நீராடினால் போகும் . வாரணாசியில் செய்த பாவங்கள் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட போகும் . கும்பகோண்த்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் எங்கே சென்று நீராடினால் போகும் ? இதற்கு ஒரு சுலோகம் விடை சொல்கிறது .
கும்பகோணத்தில் செய்த பாவங்கள் அங்கு உள்ள மக தீர்த்தத்தில் நீராடினால் விலகுமாம் .
" அன்னிய க்ஷேத்ரே க்ருதம் பாவம் புண்ணிய க்ஷேத்ரே விநச்யதிகி: புண்ணிய க்ஷேத்ரே க்ருதம் பாவம் வாரணஸ்யாம் விநச்யதிகி : வாரணஸ்யாம் க்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதிகு : கும்பகோணே க்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதிகி :' என்பது பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள சுலோகம் ஆகும் .
--- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 17 . 2009 .

Tuesday, May 18, 2010

நான்கு வயிறுகள் !

பசு மாடுகள் , ஒட்டகங்கள் , எருமை மாடுகள் ஆகியவற்றுக்கு நான்கு வயிறுகள் . பசுமாடு , தீனியைத் தின்ற பிறகு , ரூமென் என்ற வயிற்றுப் பகுதிக்கு அனுப்புகிறது . பின்பு , ரெடிகுலம் என்ற வயிற்றுப்பகுதிக்கு அது செல்கிறது . மீண்டும் பசு மாடு தனது வாய்க்கே தீனியை கொண்டு வந்து , அதை அசை போடுகிறது . கடைசியில் ஓமாசும் என்ற பகுதிக்கும் , அபமோசம் என்ற வயிற்றுப் பகுதிக்குச் சென்று இறுதியில் செரிமானமாகிறது !
--- தினமலர் . டிசம்பர் 11 , 2009 .

Monday, May 17, 2010

சூயிங்கம் .

சூயிங்கம் மெல்லுவது நல்லதா ?
சிக்கின் என்ற பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது சூயிங்கம் . இந்த சிக்கின் , சபொடில்ல என்ற மரத்தின் பிசின் . இது தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா , மெக்சிகோவில் விளையும் மரமாகும் . இந்த மரங்களை குறுக்கு வாட்டில் வெட்டி , அடிப்பாகத்திலிருந்து 30 அடிக்கு மேலே இருக்கும் மரத்தின் கீழ் பக்கெட்டை வைத்து , மரத்திலிருந்து வடியும் பிசினை சேகரித்துக்கொண்டு , அதை கொதிக்க வைத்து , மர அச்சுகளில் ஊற்றுகிறார்கள் . இதை மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பி கொதிக்க வைத்து சுத்தப்படுத்தி , பின்னர் , வாசனைப் பொருளையும் , சர்க்கரையையும் சேர்த்து , சூயிங்கமாக தயாரிக்கிறார்கள் .
சூயிங்கம் செரிமானம் ஆகக்கூடிய உணவுப்பொருளல்ல . அதை விழுங்கிவிட்டால் உணவுக்குழாயில் சிக்கி , பிரச்னையை ஏற்படுத்திவிடும் . எனவே , குழந்தைகள் சூயிங்கத்தை சுவைப்பதை தவிர்ப்பதே நல்லது .
--- தினமலர் . டிசம்பர் 11 , 2009 .

Sunday, May 16, 2010

தட்சிணாமூர்த்தி -- பூணூல் .

தட்சினாமூர்த்தி திருவுருவில் அவர் பூணூல் தரித்திருப்பார் . யக்ஞோபவீதம் என்று வடமொழியில் பூணூலை சொல்வார்கள் . அவர் யோகி . ஆகையினால் அவர் உடம்பில் அணிந்துள்ள பூணூலில் யோகப்பட்டம் என்ற முடிச்சு காணப்படும் . அந்த சிறு முடிச்சுகூட தத்ரூபமாக கலை எழிலுடன் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி உருவம் .
--- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 10 . 2009 .

Saturday, May 15, 2010

ரோபோ மனைவி !

50 ஆண்டில் ரோபோ மனைவி !
' மனைவி தொந்தரவு தாங்க முடியலைப்பா ....' என்ற டயலாக் எல்லாம் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து கேட்க முடியுமா எனத் தெரியவில்லை . ஏனெனில் அப்போது ரோபோ மனைவிகளையே ஆண்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அதிரடி குண்டு போட்டிருக்கிறார் டேவிட் லெவி என்ற விஞ்ஞானி .
' நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பெண் போன்ற ரோபோ உருவாக்குவது சாத்தியம் இதுபோன்ற பெண் ரோபோவை ஆண்கள் மணந்து கொண்டு நீண்ட காலம் குடும்பம் நடத்தலாம் . இன்னும் 50 ஆண்டுகளில் இது நடக்கத்தான் போகிறது .
கணவர்களின் பாலியல் பிரச்னைகளை தீர்க்கவும் இந்த ரோபோக்கள் உதவும் . இவற்றால் ஆண்களின் பல பிரச்னைகள் தீரப் போகின்றன ' என்றார் விஞ்ஞானி டேவிட் லெவி .
ரோபோக்களுக்கு செயற்கை அறிவூட்டும் தொழில்நுட்பத்தில் நிபுணராக விளங்கும் லெவிக்கு 2009 ம் ஆண்டுக்கான லோப்னர் விருது வழங்கப்பட்டுள்ளது .
ஆனால் , லெவியின் கருத்தை மற்றொரு விஞ்ஞானியான பிரடெரிக் கப்லான் ஏற்றுக்கொள்ளவில்லை .' ஆண்களின் பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதத்தில் பெண் ரோபோ இருந்தாலும் , அதை முழுமையான மனைவியாக கருத முடியாது . மனித பெண்ணுக்கு எந்த விதத்திலும் ரோபோ ஈடாகாது . மனிதன் போன்று எந்த ஒரு இயந்திரத்தையும் படைக்க முடியாது ' என்று கப்லான் கூறியிருக்கிறார் .
சோனி நிறுவனத்தின் புகழ் பெற்ற அய்போ என்ற ரோபோ நாய்க்கு ' மூளை ' உருவாக்கியதில் பிரடெரிக் கப்லானுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது .
---தினமலர் , 11 . 12 . 2009 .

Friday, May 14, 2010

ஆண்மை குறைவுக்கு மருந்து !

சென்னை ஸ்ரீ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை .
சென்னை ஸ்ரீ மருத்துவமனையில் 25 டாக்டர்கள் இணைந்து பல வெளிநாட்டு மூலிகைகளை கொண்டும் , அரசர்காலத்து ஓலை சுவடி மற்றும் செப்பு பட்டைய குறிப்புகளைக் கொண்டும் ஆராய்ச்சி செய்ததின் பலனாக ஆண்மை குறைவுக்கான இந்த அபூர்வ மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
ஆண்மை குறைவு உள்ளவர்களுக்கு இந்த மருந்து வரபிரசாதமாக அமைந்துள்ளது . பல மருத்துவர்களிடம் பல மாதங்கள் மருந்து சாப்பிட்டு கிடைக்காத பலனை இந்த மருந்து ஒரு மாதத்தில் பலன் கிடைக்கச்செய்கின்றது . இந்த மருந்து சிறு வயதில் செய்த தவறுகளினால் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகி உடல் பலத்தையும் , ஆண்மை பலத்தையும் கொடுக்கிறது .
தம்பதியினர் தாம்பத்திய உறவில் இருவரும் முழுதிருப்தி அடையும் வண்ணம் , ஆண்களை முழுஈடுபாட்டுடன் செயல்படவைக்கிறது .
இந்த் மருந்து சாப்பிட்டு செக்ஸ் குறைபாடுகள் நீங்கியவர்களுக்கு 10 வருடம் வரை மீண்டும் ஆண்மை குறைவு வருவதில்லை . நோய்களின் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு ஒரு மாத சிகிச்சைக்கு ரூ. 500 , ரூ . 1000 , ரூ . 1500 , ரூ . 2000 . ரூ . 3000 . ரூ . 5000 , மற்றும் ரூ . 7500 வரை செலவாகும் . இந்த மருத்துவ மனையில் B. A . M . S , . B. S . M . S , . B . N . Y . S ,. M . S . பட்டம் பெற்றவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் .
---- தினகரன் . 12 டிசம்பர் 2009 .

Thursday, May 13, 2010

செய்திகள் .

* விமான பைலட்டுகளுக்கு கற்றுத்தரும் முதல் பயிற்சிக்கு Simulation என்று பெயர் . உண்மையான விமானம் ஓட்டுவது போன்ற ஒத்திகைதான் இந்தப் பயிற்சி .
* அப்பாவும் , அம்மாவும் குழந்தைகளிடம் ... எது நல்லது , எது கெட்டது என்கிற பொது செய்திகளை அன்புடன் பேச வேண்டும் . அதற்கு Value Education என்று பெயர் . இதைப் பள்ளிக்கூடம் மட்டுமே கற்றுத்தரும் என்று பெற்றோர் ஒதுங்க வேண்டாம் .
* உலகில் கவிதை வடிவில் உள்ள வேதங்கள் ரிக் , யஜுர் மற்றும் சாம வேதங்களே !
* சாக்கடை மூடி வட்டமாக இருப்பதன் காரணம் என்ன ? வட்ட வடிவம் ஒன்றில்தான் சாக்கடை துவாரத்தில் மூடி விழாமல் இருக்கும் !
* 100 கோடி மக்கள் பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகம் முழுக்க இடம் பெயரக்கூடும் என்கிறது சர்வே ஒன்று .

Wednesday, May 12, 2010

உஷார் !

பேசாமலேயே பில் வரும் , உஷார் ! பீதியைக் கிளப்பும் பென் டிரைவ் !
அழகான பெண் குரல்...திடீரென உங்கள் போனில் வந்து உருகும் குரலில் , " உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது ... நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் # 90 அல்லது # 09 என்ற எண்களை மட்டும் பிரஸ் பண்ணினால் போதும் " என்று கனிவாகப் பேசினால் எந்த எண்ணையும் பிரஸ் பண்ணாமல் உடனே அந்த லைனைக் கட் பண்ணிவிடுங்கள் . மீறி நீங்கள் அழுத்தினால் அடுத்த வினாடி உங்களிடம் உள்ள சிம் தகவலை வைத்து , உங்கள் எண்ணில் உலகம் முழுவதும் அவர்கள் பேசுவார்கள் . பில் மட்டும் உங்களுக்கு வரும் . ஒரு பாகிஸ்தானிய நிறுவனம்தான் இந்திய எண்களைப் பயன்படுத்தி இப்படியொரு மோசடியைச் செய்து வருகிறதாம் . இதை மோட்டாரோலா , நோக்கியா போன்ற செல் நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன . இப்படி பாதிக்கப்பட்டுள்ள 30 லட்சம் மக்களின் புலம்பல்கள் CNN வெப்சைட்டில் விலாவாரியாக இடம்பெற்றுள்ளன .
--- எஸ் . அன்வர் . குமுதம் . 16 . 12 . 2009 . .

Tuesday, May 11, 2010

செலவழிக்கும் நொடிகள் !

கை தவறி கீழே ஐந்து டாலர் விழுந்தால்கூட , கண்டுகொள்ள மாட்டார் பில்கேட்ஸ் . அதை குனிந்து எடுக்க அவர் செலவழிக்கும் அந்த சில நொடிகளில் இன்னும் பல பல ஐந்து டாலர்களை சம்பாதிக்கமுடியும் அவரால் ! அந்த அளவுக்கு அவருடைய நேரமெல்லாம் பொன் !
--- லாவண்யா , அவள விகடன் . 18 . 12 . 2009 .

Monday, May 10, 2010

மாறாத காது !

செக்யூரிட்டி சம்பந்தமாக அடையாள அட்டை , கைரேகை , கண்ணில் உள்ள ரத்தக் குழாய்கள் போன்ற பல விஷயங்களை ஆதாரமாக உலகெங்கும் பயன்படுத்தி வருகிறார்கள் . இப்போது காதுதான் பெஸ்ட் என்பது விஞ்ஞானிகளின் கருத்து . மனித காதின் வடிவம் மாறுவதில்லை . அதற்கென்று பிரத்யேகமான டிஸைன் உண்டு . உடலின் எல்லா பாகங்களும் வளர்ச்சியடைந்து மாறும்போது , காது மட்டும் ' ஷேப் ' ,மாறாமல் ' மகா ஸ்லோமோஷனி 'ல் வளர்கிறது . ஆகவே , விரைவில் கதவுதிறக்க வேண்டுமென்றால் ' சென்ஸார் ' முன் காது கொடுத்து ' கேட்க ' வேண்டியிருக்கும் ! ஆனால் , தாதாக்கள் சம்பந்தப்பட்டவர் காதை அறுத்துக்கொண்டு வந்து பயன்படுத்தினால் என்ன செய்வார்கள் என்று புரியவில்லை
---- அமிதா . டிசம்பர் 1 -- 15 , 2009 . சூரிய கதிர்

Sunday, May 9, 2010

தெரிஞ்சுக்கோங்கோ .

கல்யாணம் முடிஞ்சி 25 வருஷம் முடிஞ்சிடுச்சின்னா... வெள்ளி விழா ஆண்டுன்னு சொல்வோம் . இதே மாதிரி அஞ்சு வருஷம் , பத்து வருஷம் இதற்கெல்லாம் என்ன பெயர் என்று என்னிக்காவது யோசித்திருப்போமா...
முதல் ஆண்டு திருமண நிறைவின் பெயர் -- பருத்தி .
2 ஆம் ஆண்டு நிறைவு -- காகிதம் .
3 ஆம் ஆண்டு நிறைவு -- தோல் .
4 ஆம் ஆண்டு நிறைவு -- பழமும் மலரும் .
5 ஆம் ஆண்டு நிறைவு -- மரம் .
6 ஆம் ஆண்டு நிறைவு -- சர்க்கரை .
7 ஆம் ஆண்டு நிறைவு -- கம்பளி.
8 ஆம் ஆண்டு நிறைவு -- உப்பு .
9 ஆம் ஆண்டு நிறைவு -- செம்பு .
10 ஆம் ஆண்டு நிறைவு -- தகரம் .
12 ஆம் ஆண்டு நிறைவு -- பட்டு நைஸ்லின் .
15 ஆம் ஆண்டு நிறைவு -- கிறிஸ்டல் .
20 ஆம் ஆண்டு நிறைவு -- சைனா .
25 ஆம் ஆண்டு நிறைவு -- வெள்ளி .
30 ஆம் ஆண்டு நிறைவு -- முத்து .
40 ஆம் ஆண்டு நிறைவு -- ரூபி .
50 ஆம் ஆண்டு நிறைவு -- பொன் .
60 ஆம் ஆண்டு நிறைவு -- வைரம் .
--- தினமலர் . டிசம்பர் 6 2009 .

Saturday, May 8, 2010

விதண்டாவாதம் !

ஜல்பம் , விதண்டை என வாதங்கள் இரண்டு வகை .
வாதிப் பிரதிவாதிகள் தம் பக்கத்துக் குணங்களையும் , எதிரி பக்கத்துக் குணங்களையும் எடுத்துரைப்பது ஜல்பம் .
தம் பக்கத்தைப் பற்றி கூறாமல் , எதிர் பக்கத்தைக் கண்டிப்பது விதண்டையாகும் . அதாங்க விதண்டாவாதம் .
--- தினமலர் . டிசம்பர் 6 2009 .

Friday, May 7, 2010

என் ஏரியாவுக்கு வராதே !

காட்டில் உள்ள மிருகங்களில் மிக முக்கியமானது யானை என்கிறார்கள் காட்டுயிர் ஆய்வாளர்கள் . அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு . யானைக்கூட்டம் என்பது ஒரு இடத்தில் நிற்காது . காடு முழுக்க திரிந்து கொண்டே இருக்கும் . அப்படிக் காடு முழுக்கத் திரிவதால் அதன் பிரம்மாண்டமான பாதங்கள் பட்டு புதிய புதிய காட்டுவழிப் பாதைகள் உருவாகும் . யானை இப்படிச் செல்லும் பாதையை ' வலசை ' என்று சொல்வார்கள் .
இந்த வலசைப்பாதை வழியாகத்தான் மற்ற விலங்குகளும் செல்லும் . அதனால் , காட்டுக்குள் நல்ல இடப்பெயர்ச்சி ஏற்பட்டு பல்லுயிரினம் வளர்கிறது . ( பயோடைவர்சிட்டி ) அதே போல் போகிற போக்கில் தான் சாப்பிடும் மர இலைகள் , கிளைகள் , பூக்கள் , செடி கொடிகளையும் யானை வீசிக் கொண்டே போவதால் அங்கெல்லாம் புதிய தாவரங்கள் முளைத்து காடு இன்னும் செழுமை பெறுகிறது . இதுதான் யானை காட்டின் வளத்துக்குச் செய்யும் மிகப்பெரும் சேவை . அதனால்தான் அவை காட்டைச் சுற்றிச் சுற்றி வருகின்றன . அப்படிப்பட்ட காட்டை நாம் என்ன செய்கிறோம் ? வீடுகள் , விவசாயம் என்கிற பெயரில் ஆக்கிரமிப்புச் செய்து தோட்டங்கள் போடுகிறோம் . பண்ணைகளைக் கட்டுகிறோம் . என்னுடைய ஏரியாவுக்கு வந்து என்னை ஏன் தொல்லை செய்கிறாய் என்று கேட்டுத்தான் யானைகள் அட்டகாசம் செய்கின்றன . அதற்குச் சொந்தமான நிலத்தை நாம் விட்டுக் கொடுத்தாலே அவை நம்மை டிஸ்டர்ப் செய்யாமல் அமைதியாக வாழும் .
யானைகள் காட்டை விட்டு நாட்டுக்குள் வந்து ' அட்டூழியம் ' ( ! ) செய்வதாக அடிக்கடி செய்திகளைப் பார்க்கிறோம் . அவை நாட்டுக்குள் புகவில்லை . நாம்தான் அதன் காடுகளை ஆக்ரமித்து விடுகிறோம் . அந்தக் கோபத்தில்தான் அவை அப்படிச் செய்கின்றன .
--- அகிலன் சித்தார்த் . சூரிய கதிர் . டிசம்பர் 1 - 15 , 2009 .

Thursday, May 6, 2010

பாலியல் வளர்ச்சி !

சிக்மண்ட் ஃப்ராய்டு , குழந்தைகளின் பாலியல் வளர்ச்சியை ஆறு கட்டங்களாகப் பிரித்துள்ளார் .
1 . ஓரல் ஸ்டேஜ் ( தாய்ப் பால் சூப்புவதால் இன்ப உணர்ச்சி அடைவது ) .
2 . அனல் ஸ்டேஜ் ( உடல் கழிவுகளை அகற்றுவதன் மூலம் இன்பம் உணர்வது .
3 . பேலிக் ஸ்டேஜ் ( எதிர் பாலினத்தின் பிறப்புறுப்பின் மீது ஆர்வம் கொள்ளுவது ).
4 . இடிபல் ஸ்டேஜ் ( ஆன் குழந்தைக்கு தாயிடமும் , பெண் குழந்தைக்குத் தந்தையிடமும் ஈர்ப்பு ஏற்படுதல் ) .
5 . லேடன்ட் ஸ்டேஜ் ( தன்னுடைய பிறப்புறுப்பின் மீது ஈர்ப்பு ஏற்படுதல் ) .
6 . ஜெனிட்டல் ஸ்டேஜ் ( ஆணுக்குப் பெண்ணிடமும் , பெண்ணுக்கு ஆணிடமும் ஈர்ப்பு ஏற்படுதல் ) .
--- டாக்டர் டி . நாராயண ரெட்டி , செக்ஸாலஜிஸ்ட் . ஆனந்தவிகடன் . 9 . 12 . 2009 .

Wednesday, May 5, 2010

ஜோக்ஸ் !

* " அந்த பாகவதர் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்த மாதிரி ராகங்கள் பாடுவாராம் "
" பாக ' வெதர்' ன்னு சொல்லு !"
* " ஞாபக மறதியால என் பையன் பெயிலாயிட்டான் ."
" படிச்சதெல்லாம் மறந்துட்டானோ ..."
" படிக்கவே மறந்துட்டான் .."
* " எல்லா கேள்வியும் நல்லா படிச்சதா சொன்னே ... அப்புறம் எப்படி ஃபெயில் ஆனே ?"
" கேள்வியை மட்டும்தான் படிச்சேன் மம்மி .. அதான் !"
* " அவரோட எழுத்துக்களை தினமும் ஆயிரம் பேராவது படிக்கிறாங்களாமே ! அவர் எதுல எழுதறார் ?"
" அந்த ஹோட்டல் வாசல்ல இருக்குற மெனு போர்டுல...!"
* " நம்ம தலைவர் எதுக்கு ஆறாம் வகுப்புப் புத்தகத்தை விழுந்து விழுந்து படிக்கிறார் ?"
" ' உனக்கு ஆறாவது அறிவு இருக்கா 'ன்னு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுட்டாராம் !"

Tuesday, May 4, 2010

பல , பல .

' பல மனைவிகள் ' என்பது polygamy . ' பல கணவர்கள் ' என்பது -- polyandry . இந்தியாவின் வடமேற்கில் , இமயமலைச் சாரலில் நிலவிய ' ஸ்திரீ ராஜ்யத்தில் ' இந்த வழக்கம் பரவலாக இருந்ததாக , புகழ்பெற்ற சீனப் பயணி யுவான்சுவாங் எழுதியிருக்கிறார் !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் , 9 . 12 . 2009 .

Monday, May 3, 2010

லால் பாக் .

மைசூர் மாவீரன் திப்பு சுல்தானின் தந்தையான ஹைதர் அலியால் 245 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் லால் பாக் அமைக்கப்பட்டது . இங்கு 2000 க்கும் அதிகமான வகைகளில் தாவரங்கள் இருக்கின்றன . தாவரவியலில் ஆர்வம் கொண்டவர்கள் இதனை சொர்க்கபுரியாகக் கருதி இங்கு அடிக்கடி வருகிறார்கள் . இங்கிருக்கும் லால் பாக் ராக் பிரபலமானது . பூமியில் தானாக உருவான இந்தப் பாறை மிகப் பழமையானதும்கூட ; இது 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்று பலர் சொல்கிறார்கள் .
--- ஸ்டீபன் டேவிட் . இந்தியாடுடே . நவம்பர் 25 , 2009 .

Sunday, May 2, 2010

கொட்டாவி !

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக்காற்றை வாய்வழியாகவும் , உள்ளிழுத்தும் , அதே சமயம் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவதுமான செயலைக் குறிப்பதாகும் . இத்துடன் கை , கால்களை நீட்டி , மடக்கி சோம்பல் முறித்தல் என்று சொல்வதுண்டு . அலுப்பு , உளைச்சல் , மிகுதியான பணி களைப்பு ,ஆர்வமின்மை , சொம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவிக்கு தொடர்பு உண்டு .
---- தினமலர் , நவம்பர் 27 . 2009 .

Saturday, May 1, 2010

விக்கல் , தும்மல் , குறட்டை . நகம் .

நெஞ்சுக்கூட்டுக்கும் வயிற்றுக்கும் நடுவே குடை போன்ற தசை உறுப்பு ஒன்று உள்ளது . இதை ஆங்கிலத்தில் டயாப்ரம் என்பர் . இதற்கும் நுரையீரல் இரைப்பை முதலிய உறுப்புகளுக்கும் ஒரே நரம்பு தான் உணர்வூட்டுகிறது . இந்த உறுப்புகளில் எங்காவது உறுத்தல் ஏற்பட்டால் டயாப்ரம் இறுகி விடும் . அப்போது விக்கல் ஏற்படும் .
மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் காற்றை வெளியேற்றும் தன்னிச்சை செயலே தும்மல் . அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது . மூக்கிலுள்ள சளிச் சவ்வின் நரம்பு மூளைகளில் உறுத்தல் மிகப் பிரகாசமான ஒளியால் தாக்கப்படும் போதும் இது ஏற்படும் .
சாதாரணமாக அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியாகச் சிறிது அடைப்பு காரணமாக சிலர் வாய்வழியாக மூச்சுவிட நேரிடுகிறது . சிலர் காரணமில்லாமலேயே கூட வாய்வழியாக மூச்சு விடும் பழக்கத்தைப் பெற்றிருப்பபார்கள் . இப்படிப்பட்டவர்கள் மூக்கு வழியாக மூச்சு இழுத்து விடுவதற்கு பதிலாக வாய்வழியாக மூச்சு இழுத்து விடுவதால் தொண்டை வழியே வெளியேறும் காற்று குறட்டை சப்தமாக வெளியேறுகிறது .
நமது உடலில் சேரும் புரதச் சத்து அதாவது புரோட்டின் ஆனது கெராட்டின் ஆக உருவெடுப்பதால் அவை நகங்களாக வளருகிறது .
--- தினமலர் நவம்பர் 27 , 2009 .