Wednesday, December 31, 2014

ஆண் மூளை - பெண் மூளை!

 ஆண்களின்  மூளையைவிட,  பெண்களின்  மூளை  அளவில்  சிறிது  குறைவாக  இருப்பதினால்,  ஆண்களைவிட  பெண்களுக்கு  அறிவும்  சிறிது  குறைவு  தானே?
     மூளையின்  அளவுக்கும்  அறிவுக்கும்  சம்பந்தமே  கிடையாது.  ' கனெக் ஷன் 'களின்  வீரியம்தான்  முக்கியம்.  புகழ்பெற்ற  இலக்கிய  மேதையான  அனபோல்  ப்ரான்ஸ்  என்பவரின்  மூளை  சராசரி  மனிதனின்  மூளையைவிட  ரொம்பச்  சின்னது.(அவர்  இறந்த  பிறகு  மூளையை  எடை  போட்டார்கள் ).
சராசரி  மனிதனின்  மூளை  1,400  கிராம்.  சராசரி  பெண்ணின்  மூளை  1,350  கிராம்.  அனபோலின்  மூளை  1,017  கிராம்.  வாட்டசாட்டமாக  வளர்ந்த ஒருமுட்டாளின்  மூளையையும்  சோதித்தார்கள்.  எடை  2,050  கிராம்  இருந்தது.  ஆகவே,  பெரிய  களிமண்  உருண்டை  வேறு.  குட்டி  வைரக்கல்  வேறு!--ஹாய் மதன்.  கேள்வி -- பதில்.
-- ஆனந்த விகடன்,  18 - 4 - 2012. 

Tuesday, December 30, 2014

அக்மார்க் முத்திரை.

  பிரிட்டிஷ்  ஆட்சியின்போது,  விவசாயப்  பொருட்களுக்கு  தரநிர்ணயம்  செய்வது  தொடர்பாக  1937-ம்  ஆண்டு  ஒரு  சட்டம்  கொண்டுவரப்பட்டது.  அதன்  அடிப்படையில்,  உணவுப்பொருட்களுக்கு  இந்திய  அரசு  வழங்கிவரும்  தரச்சான்றின்  பெயர்தான்  ' அக்மார்க் '.  இது,  ' அக்ரிகல்ச்சுரல்  மார்க்கெட்டிங்'  ( விவசாயப்  பொருட்களின்  விற்பனை )  என்பதன்  சுருக்கம்.
     தானியங்கள்,  பருப்புகள்,  சமையல்  எண்ணெய்கள்,  மசாலா  பொருட்கள்,  சமையல்  பொடிகள்,  கூட்டுப்  பெருங்காயம்,  நெய்,  தேன்  உள்ளிட்ட  200க்கும்  மேற்பட்ட  உணவுப்பொருட்களுக்கு  அக்மார்க்  முத்திரை  வழங்கப்படுகிறது.
     ஏதாவது  பொருளைக்  கலப்படம்  செய்திருக்கிறார்களா,  ஆரோக்கியத்தைப்  பாதிக்கும்  ரசாயனங்கள்  கலக்கப்பட்டிருக்கிறதா,  சுகாதாரமான  முறையில்  தயாரிக்கப்பட்டதா  என  பல  தீவிர  ஆய்வுகளுக்குப்  பிறகே  அக்மார்க்  முத்திரை  வழங்கப்படும்.  எனவே,  அக்மார்க்  முத்திரை  பெற்றுள்ள  பொருட்களை  நம்பி  வாங்கி  பயன்படுத்தலாம்.
--   -தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.

Monday, December 29, 2014

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்

 இந்தியா முழுக்கப் பணியாற்றும் 6,217 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளில் 1,057 பேர் தங்கள் சொத்துக் கணக்கை வெளியிட யோசிக்கிறார்களாம்.  அரசு இயந்திரத்தின் அச்சாணிகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.  2010-ல் 198 அதிகாரிகளும் 2011-ல் 107 அதிகாரிகளும் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.  அந்த எண்ணிக்கைதான் 2012-ல் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.  இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 20 பேர்.  --  மடியில் கனம்?
சீனாவில் வீடு விற்பனை.
     வீடு விற்பனையின்போது விதிக்கப்படும் வரியைத் தவிர்க்க கணவன் - மனைவி தங்களுக்குள் விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்து கொள்கிறார்களாம் சீனாவில்.  அங்கு வீடு விற்பதற்கான வரிகளை வசூலிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன.  தனி நபராக இருந்தால் வரி விலக்கு உண்டு.  இதனால், குழந்தைகள் பெற்ற வயதான தம்பதிகள்கூட வரிவிலக்குச் சலுகையை அனுபவிக்க, விவாகரத்து செய்து வீட்டை விற்று பின் மீண்டும் இணைந்துகொள்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரே நாளில் 53 ஜோடிகளுக்கு விவாகரத்து வழங்கி சாதனை படைத்துள்ளது ஒரு திருமண அலுவலகம்.  -- விவாகரத்து பண்றதுக்கு வரி போடுங்க ஆபீஸ்ர்ஸ்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன்.  27 -03- 2013. 

Sunday, December 28, 2014

' புளூட்டோ கோள் '

  புளூட்டோ  1930-ல்  கண்டுபிக்கப்பட்டது.  அன்றுமுதல்  2006  ஆகஸ்டு  24  வரை,  அதற்கு  ' கோள் '  என்ற  அந்தஸ்து  இருந்தது.
     சர்வதேச  விண்வெளியியல்  கூட்டமைப்பு  2006  ஆகஸ்ட்  24 ல்  ' கோள் '  என்பதற்கான  புதிய  தகுதி  வரையறையை  அமல்படுத்தியது.  ' சூரியனைச்  சுற்றும்  ஒரு  பொருளின்  மிக  அருகில்  ஏறக்குறைய  அதே  நிறை  அல்லது  அதைவிட  அதிக  நிறை  கொண்ட  பொருள்  சுற்றிவந்தால்  அதை  கோள்  என்று  கூறமுடியாது '  என்பதே  அந்த  புதிய  தகுதி.
     புளூட்டோ  சுற்றும்  பகுதியான  ' கூபர்  பெல்ட் '  பகுதியில்  அதைவிட  27  மடங்கு  அதிக  நிறையுள்ள  ' ஈரிஸ் '  மற்றும்  புளூட்டோவின்நிறைகொண்ட  பல  பொருட்களும்  சுற்றிவருகின்றன.  இதனால்தான்  ' கோள் '  என்ற  அந்தஸ்தை  புளூட்டோ இழந்தது.  புளுட்டோ,  ஈரிஸ்  போன்றவற்றின்  புதுப்  பெயர்: 'குள்ள  கிரகம் ' ( ட்வார்ஃப்  ப்ளானட் ).!
--  -தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011. 

Saturday, December 27, 2014

எறும்புகள்.

 எறும்புகளால்  தங்களது  உடல்  எடையை  விட  50  மடங்கு  அதிக  எடை  கொண்ட  பொருட்களை  தூக்கிச்  செல்லவும்,  25  மடங்கு  அதிக  எடை  கொண்ட  பொருட்களை  இழுத்துச்  செல்லவும்  சக்தி  உடையது.
     இந்த  சக்திக்கு  காரணம்,  அவற்றின்  சிறிய  வடிவம்தான். ' ஒரு  பிராணியின்  அளவு  அதிகரிக்கும்போது,  அதன்  உயரத்தை  விட  அதன்  கன  அளவும்,  எடையும்  வேகமாக  அதிகரிக்கும்.  ஆனால்,  அதன்  தசைகளின்  வலிமை  அதன்  கன அளவு  மற்றும்  எடையைப்  போல்  வேகமாக  அதிகரிக்கும்;  உயரம்  குறைவாக  இருக்கும்  பிராணிகளின்  தசைகளின்  வலிமை,  அதிக  உயர  பிராணிகளின்  தசைகளின்  வலிமையை  விட  அதிகமாக  இருக்கும் '  என்பது  உடலியல்  விதி.
     எறும்புகள்  உயரம்  மிகக்  குறைவு   என்பதால்,  அவற்றின்  தசைகளின்  வலிமை  மிக  அதிகமாக  உள்ளது.  இதனால்தான்,  அவற்றால்  தங்களது  எடையை  விட  பல  மடங்கு  எடை  கொண்ட  பொருட்களை  எளிதாக  எடுத்துச்  செல்ல  முடிகிறது.
---தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.

Friday, December 26, 2014

கைரேகை.

  தாயின்  கருப்பையில்  மூன்று  மாத  சிசுவாக  இருக்கும்போதே  கைரேகைகள்  உருவாகத்  தொடங்கிவிடும்.  ஆயுள்  முழுக்க  கைரேகை  மாறாது.
     விரல்  தோல்கள்  ஏதாவது  காரணத்தால்  உரிந்து  பிரிந்தாலும்,  புதிதாகத்  தோன்றும்  தோலிலும்  பழைய  கைரேகைதான்  இருக்கும்.
     ஒவ்வொருவரின்  கைரேகையும்  தனிப்பட்ட  வகையில்  அமைந்திருக்கும்.  அதாவது,  எந்த  இரு  மனிதர்களின்  கைரேகைகளும்  ஒன்று  போல்  இருக்காது.  இரட்டைக்  குழந்தைகளுக்குக்கூட  ஒரே  கைரேகை  இருக்காது.  இந்த  ' தனித்துவ '  அம்சம்தான்,  கைரேகை  அடிப்படையில்  குற்றவாளிகளை  அடையாளம்  காண  உதவுகிறது.
---  -தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.  

Thursday, December 25, 2014

கணக்கு மேஜிக்!

 1.  உங்கள்  நண்பரிடம்  ஒரு  பேப்பரில்  ஏதாவது  4  இலக்க  எண்ணை  எழுதச்சொல்லுங்கள்... உடனே  ஒரு  பேப்பர்  துண்டை  எடுத்து  அவர்  எழுதிய
     எண்ணின்  முதலில்  2 -ஐ  இணைத்துவிட்டு,  கடைசி  இலக்கத்தில்  2 -ஐ  குறைத்து  எழுதிக்  கொடுங்கள்.  ' நீ  செய்யப்போகும்  கூட்டலின்  விடை,
     இந்த  5  இலக்க  எண்தான் !'  என்று  ' பில்டப் '  கொடுங்கள்.
 2.  முதலில்  அவர்  எழுதிய  4  இலக்க  எண்ணின்  கீழ்  இன்னொரு  4  இலக்க  எண்ணை  எழுதச்  சொல்லுங்கள்.
 3.  அந்த  எண்ணின்கீழ்  அவர்  எழுதிய  2 -வது  எண்ணை  9999 -ல்  இருந்து  கழித்து  எழுதுங்கள்.
 4.  அவரிடம்  மீண்டும்  ஒரு  4 இலக்க  எண்ணை  எழுதச்  சொல்லுங்கள்.
 5.  அந்த  எண்ணின்  கீழ்,  அவர்  எழுதிய  3 -வது  எண்ணை  9999-ல்  இருந்து  கழித்து  எழுதுங்கள்.
 6.  பிறகு,  " இந்த  5  எண்களையும்  கூட்டிப்பார்  பேப்பர்  துண்டில்  நான்  எழுதித்தந்த  5  இலக்க  விடை  வரும்!"  என்று  சொல்லுங்கள்.  அதே  விடை  வருவதைப்  பார்த்துப்  பார்த்து  நண்பர்  அசந்துவிடுவார் !
  ஒரு  உதாரணம்:  1.  நண்பர்  எழுதிய  எண்  8327... உடனே  நீங்கள்  அவரிடம்  எழுதிக்கொடுக்க  வேண்டிய  எண்  28325;
                            2.  நண்பர்  எழுதும்  2 -வது  4 இலக்க  எண்  9526;
                            3.  இந்த  9526-ஐ  9999-ல்  இருந்து  கழித்து  நீங்கள்  எழுதும்  எண்  0473; நண்பர்  எழுதும்  3-வது  4 இலக்க  எண்  7539;
                            4.  இந்த  7539 -ஐ  9999 -ல்  இருந்து  கழித்து  நீங்கள்  எழுதும்  எண்  2460;
                            5.  இந்த  5  எண்களையும்  கூட்டினால்  வரும்  விடை,  28325 ( 8327 + 9526 + 0473 + 7539 + 2460  = 28325 ).
-- தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.

Wednesday, December 24, 2014

அசோகச் சக்ரவர்த்தி

   அசோகச்  சக்ரவர்த்திக்கு  ஒருமுறை  கடுமையான  வயிற்று  வலி  வந்து,  அரண்மனை  வைத்தியர்  மருந்து  கொடுத்தும்  குணமாகவில்லயாம்.  அவருடைய  மனைவியர்களுள்  அதிபுத்திசாலியான  ஒருத்தி  சக்ரவர்த்தியின்  வயிற்றை  அழுத்திப்  பார்த்து,  வயிற்றில்  கட்டி  இருப்பதால்  வலி  ஏற்படுகிறது.  கட்டியைக்  கரைத்தால்  வலி  நீங்கும்  என்று  சொன்னாள்.  அதற்கு  காலை - மாலை  வெங்காயச்  சாற்றுடன்  தேன்  கலந்து  பருகச்  சொன்னாள்.  அதேமாதிரி  வைத்தியர்  செய்து  தர,  விரைவில்  கட்டி  கரைந்து,  வலி  நீங்கி,  பூரண  குணம்  அடைந்ததாக  அசோகரின்  வாழ்க்கைக்  குறிப்பு  சான்று  கூறுகின்றது.
--  மூலிகைமணி  டாக்டர்  கே.வெங்கடேசன்.
--  குமுதம்.  



Tuesday, December 23, 2014

என்ன வேண்டும்?

படுத்தவுடன்  உறக்கமது  வருதல்  வேண்டும்
பசித்தவுடன் உண்ணுகிற  நிலைமை  வேண்டும்
எடுத்தவுடன்  படிக்கின்ற  நூல்கள்  வேண்டும்
இசைத்தமிழே  என்  செவியை  அடைதல்  வேண்டும்
உடுத்தவுடன்  துணிமணிகள்  இருத்தல்  வேண்டும்
உணவாக  மரக்கறியே  இருக்க  வேண்டும்
கொடுத்தவுடன்  வாங்காத  மாந்தர்  வேண்டும்
குன்றாத  நட்புறவு  இருத்தல்  வேண்டும்.
-- ' முகம் '  இதழில்  - தமிழப்பன்.
கெட்ட  ஜோக் !
பஸ்ஸில்  கேட்ட  ஜோக்  ஒன்று  சொல்லமுடியுமா?
     கேட்ட  ஜோக்  என்றாலும்  கெட்ட  ஜோக்  இது.  பஸ்ஸில்  ஒரு  வம்பு  பிடித்த  கிழவர்  இடத்தை  அடைத்துக்  கொண்டு  நிற்கிறார்.  தெனாவெட்டாய்  நான்,  "  யோவ்  பெரிசு,  நகருய்யா"  என்றேன்.  பெரியவர்  என்னைத்  திரும்பிப்  பார்த்தார்.  " எனக்குப்  பெரிசுன்னு  உனக்கு  எப்படிய்யா  தெரியும்?  எங்க  பார்த்தே? "  என்றார்.  தற்கொலைக்காக  நான்  ஜன்னல்  வழியாகக்  கீழே  குதித்தேன்.
-- அரசு பதில்கள் .  குமுதம் . 10.1.2007.  

Monday, December 22, 2014

அகத்தியர்.

  பதினெண்சித்தர்களில்  ஒருவரான  அகத்தியர்  காய்கறி,  கீரை,  கனிகள்  ஆகியவற்றின்  பண்பு,  பயன்பாடுகளைப்பற்றி  நிறைய  அறிந்தவர்.  அவரிடம்  ஒரு  சீடர்,  " குருநாதரே!  மானிடரின்  இல்லற  இன்பம்  செழிப்பாக  இருக்க  எளிய  கீரை  ஏதும்  சொல்லுங்களேன்?"  என்று  கேட்டார்.
     குறுந்தாடியைத்  தடவியவாறு  அகத்தியர்  ஓர்  உவமை  மூலம்  ஐந்து  விதமான  கீரைகளைப்பற்றிக்  கூறுகின்றார்.  இவைதான்  அந்தக்கால  ' வயாக்ரா'கீரைகள் !
     " நறுந்தாளி  நன்  முருங்கைத்
       தழை
       தூதுவளை  நற்பசலை
       வாளில்  அறுகீரை
       நெய்வார்த்து  உண்ணில்
       யாளியென  விஞ்சுவார்
       போகத்தில்"
என்று  சீடருக்குப்  புன்னகைத்தவாறு  பதில்  கூறினாராம்  அகத்தியர்.
      யானையைவிடப்  பெரிதான  ' யாளி '  தற்போது  இல்லை.  கோயில்  சிலைகளில்  மட்டுமே  ' யாளி '  எனும்  மிருகத்தைக்  காணலாம்.  காதல்  களியாட்டத்தில்  நாம்  அந்த  யாளீயையே  மிஞ்ச  முடியுமாம் !  எப்படி?  நறுந்தாளி,  நன்முருங்கை,  தூதுவளை,  நற்பசலை,  அரைக்கீரை - இந்த  ஐந்து  கீரைகளையும்  தினம்  ஒன்றாக  பருப்பு,  மிளகு,  சீரகம்,  பூண்டு,  சிறுவெங்காயம்  சேர்த்துப்  பொரியல்  செய்து  பகல்  உணவில்  மட்டும்  இரண்டு  பிடி  சாதத்தில்  ஒரு  கப்  அளவு  கீரையும் - ஒரு  ஸ்பூன்  நெய்யும்  சேர்த்துச்  சுவையுடன்  சாப்பிட்டால்  போதும் !  இதுதாங்க  காதல்  கெமிஸ்ட்டிக்கான  பால  பாடம்.
-- மூலிகைமணி  டாக்டர்  கே.வெங்கடேசன்.
-- குமுதம்.  20 . 12. 2006 

Sunday, December 21, 2014

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர்.

நான்  6  பேரை  வணங்குகிறேன்  என்று  கிருஷ்ணபரமாத்மா  சொல்லியிருக்கிறார்.  அந்த  6  பேர்  யார்  தெரியுமா?
ப்ராதஸ்நாதி........................அதிகாலையில்  குளிப்பவன்
அஸ்வத்தசேவி.....................அரச  மரத்தை  வணங்குபவன்
த்ருணாக்னி  ஜோத்ரி............மூன்று  தீயை  இடையறாது  வளர்ப்பவன்
நித்யான்னதாதா...................நாள்  தோறும்  ஏழைகளுக்கு  உணவளிப்பவன்
சதாபிஷேகி.........................நூற்றாண்டு  விழா  செய்து  கொண்டவன்
ப்ரம்மஞானி........................இறைவனை  உணர்ந்தவன்.
--  தினமலர் .பக்திமலர். ஆகஸ்டு 13., 2009. 

Saturday, December 20, 2014

கவிதை'

காலண்டர்.
ஒரு  வருட
ஒப்பந்தத்தில்
என்  வீட்டிற்கு
புதிதாக
குடிவந்தது
காலண்டர் ..!

விடுதலை.
ஜோசியம்
பார்த்தவனுக்கு
நன்றி  சொல்லிவிட்டு
கூண்டுக்குள்  போனது
கிளி...
ஒரு  நிமிட
விடுதலைக்காக.
-- தினமலர் .பெண்கள்மலர்.  ஜனவரி 5, 2013.  

Friday, December 19, 2014

தெரியுமா? தெரியுமே !

*  பவன  குமாரர்,  மாருதி,  பஜ்ரங்க  பலி,  ஹனுமான்,  பாடலி  புத்திரர்,  கேசரி  நந்தன்,  சங்கட்  மோசன்,  சுந்தரன்,  மகா  ருத்திரன்,  கபீஷ்வரா,
   குமார  பிரம்மச்சாரி,  மகா  தேஜஸ்வி  எனப்  பல  பெயர்கள்  கொண்டு  அழைக்கப்படுகிறார்  மகா  ராம  பக்த  சிரோமணியான  ஆஞ்சனேயர்.
*  ஆதிசங்கர  மகான்  ஏற்படுத்திய  ஷண்மதங்களூள்  முருகனுக்கானது,  கௌமாரம்.
*  இயற்கை  எழில்  சூழ்ந்த  குமரி  மாவட்டத்தில், எண்ணற்ற  மருத்துவ  குணம்  கொண்ட  மூலிகைகளை  ஒரே  இடத்தில்  பார்க்கலாம்.  அந்த  இடம்
   மருந்துவாழ்  மலை.
*  ஸ்ரீராமரோட  நண்பரான  விபீஷணரோட  சகோதரந்தான்  குபேரன்.
*  சனி  கிரகத்தால்  பாதிக்கப்படாதவர்  ஆஞ்சநேயர்.
* ' உத்தர்முஹே  ஆதிவராஹாய '  அப்படின்னு  சொல்லுது  ஒரு  வடமொழி  ஸ்லோகம்.  அதாவது,  ஆஞ்சநேயருக்கு  உரிய  அஞ்சு  முகங்கள்ல,  வடக்கு
   திசைக்கு  உரியது  வராக  முகம்.  பொதுவா  வராகரை  வணங்கினா,  எந்தவிதத்  தடையும்  விலகும்.  எதிரி  பயம்  போகும்.  பூமி  தொடர்பான
   பிரச்சனைகள்  விலகும்,  கடன்கள்  தீரும்,  நோய்கள்  குணமாகும்.  இப்படி  ஐதீகம்  இருக்கு.
*  இந்திய  இல்லங்கள்  பலவற்றில்  வீட்டின்  முன்  முற்றத்திலோ,  பின்புறத்திலோ,  நடு  முற்றத்திலோ  ஒரு  துளசி  மாடம் -- துளசிச்  செடி
   வைக்கப்பட்டுள்ள  ஒரு  பீடம்  உண்டு.
*  சமஸ்கிருத  மொழியில்  " துலனா  நாஸ்தி  அதைவ  துளசி "  என்ற  ஒரு  கூற்று  உள்ளது.  துளசி  ஒப்புயர்வற்ற  குணங்கள்  கொண்டது  என்பது  பொருள்.
   இந்தியர்களுக்கு  துளசி  மிகப்  புனிதமான  செடிகளுள்  ஒன்று.  உண்மையில்,  துளசி  ஒன்றுதான்,  ஒரு  முறை  பூஜைக்குப்  பயன்படுத்தப்பட்ட  பிறகும்
   நீரில்  கழுவப்பட்டால்  மீண்டும்  பூஜைக்குப்  பயன்படுத்தத்  தக்கதாகக்  கருதப்படுகிறது.  துளசி  தன்னைத்தானே  தூய்மைப்படுத்திக்  கொள்ளும்  சக்தி
   கொண்டதாக  ஏற்கப்பட்டுள்ளது.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல் .  டிசம்பர்  16 - 31 ,  2912. 

Thursday, December 18, 2014

கணக்குப் புதிர்.

  15 - வது  வாய்பாடு  புதிர்  இது.
     உதாரணத்துக்கு  ஒரு  இரண்டு  இலக்க  எண்ணை  தேர்வு  செய்துகொள்ளுங்கள்.
     உதாரனம்:  23
     இதை  15 ஆல்  பெருக்க  வேண்டும்.    23 X  15.
     தேர்வு  செய்த  எண்ணுடன்  ( 23 )  ' 0 '  சேர்த்துக்கொள்ளுங்கள்.  230.
     230  எண்ணை  ' 2 '  ஆல்  வகுக்க  வேண்டும்.  230 /  2  = 115.
     இப்போது  230 ஐயும்  115  யும்  கூட்ட  வேண்டும்.  230 + 115 = 345.
     இதுதான்  விடை :  23 X 15 = 345.  இதே  போல  மூன்று,  நான்கு,  ஐந்து  இலக்க  எண்ணையும்  பெருக்கலாம்.
--   தினமலர்  சிறுவர்மலர்.  ஜனவரி  4,  2013. 

Wednesday, December 17, 2014

பூசணிக்காய்.

  பெண்களுக்கு  எந்த  பாதிப்பும்  வராமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்  என்பதற்காகத்தான்  சில  விஷயங்களை  அவர்கள்  செய்யக்கூடாது  என்கிறார்கள்.  பூசணிக்காய்,  தேங்காய்,  பறங்கிக்காய்  போன்றவை  வாஸ்து  புருஷன், பைரவர்,  காளி  போன்ற  தெய்வங்களுக்கு  பலியிடுவதற்காக  உபயோகப்படுத்தப்படுகின்றன.  சைவ  முறைப்படி  உயிர்  பலிக்கு  ஈடானதால்  இவை  செய்யப்படுகின்றன.  இதுபோன்ற  செயல்களை  பெண்கள்  செய்தால்  மனதில்  ஒருவித  பயமும்,  கருச்சிதைவுகளும்  ஏற்படும்  என்பதாலும்  ஆண்களே  செய்ய  வேண்டும்  என்று  ஆன்றோர்கள்  கூறியுள்ளனர்.
--  தினமலர்  பக்திமலர்.  ஜனவரி  3,  2013.

Tuesday, December 16, 2014

ஆந்தையின் ஒலி.

   ஆந்தையின்  ஒலி  கொண்டு  சுப,  அசுபங்களை  அறிதல்  ஆந்தைக்  காதல்  எனப்படும்.  இப்படிச்  சகுனம்  அறியும்  முறை  இயற்கையோடு  இனைந்து  வாழ்ந்த  காலத்தில்  வழக்கில்  இருந்த  முறைகளில்  ஒன்றாகும்.
     ஓருரை  உரைக்கு  மாகில்  உற்ற  தோர்  சாவு  ஸ்ப்ல்லும்
     ஈருரை  உரைக்கு  மாகில்  எண்ணிய  கருமம்  நன்றாம்
     மூவுரை  உரைக்கு  மாகில்  மோகமாய்  மங்கை  சேர்வாள்
     நாலுரை  உரைக்கு  மாகில்  நாழியில்  கலகம்  சொல்லும்
     ஐயுரை  உரைக்கு  மாகில்  அங்கு  ஒரு  பயணம்  சொல்லும்
     ஆருரை  உரைக்கு  மாகில்  அடுத்தவர்  வரவு  கூறும்
     ஏழுரை  உரைக்கு  மாகில்  இறந்த  பண்டங்கள்  போதும்
     எட்டுரை உரைக்கு  மாகில்  திட்டெனச்  சாவு  சொல்லும்
     ஒன்பதும்  பத்துமாகில்  உத்தமாம்  மிகவும்  நன்றே.
-- தினமலர்  பக்திமலர்.  ஜனவரி  3,  2013. 

Monday, December 15, 2014

திருக்கோயில்.

  திருக்கோயில்  தோற்ற  அமைப்பை  மூவகையாகக்  கூறுவர்.
      1. தான்தோன்றி ( சுயம்பு ).  2. தேவர்,  முனிவர்  நிறுவியது.  3. மனிதர்  நிறுவியது.
தான்தோன்றி:  கற்றச்சர்களின்  உளியால்  செதுக்கப்படாமல்  தானாகத்  தோன்றிய  மூல  மூர்த்தம்  உள்ள  கோயில்  தான்தோன்றி  எனப்படும்.  அம்
      மூர்த்தத்தை  உணர்ந்து  வழிபட்டு  வருவர்.  பின்பு  அவ்விடத்தில்  திருக்கோயில்கள்  உருவாகும்.
தேவர்,  முனிவர்  நிறுவியது.:  தனது  எண்ணத்தை  நிறைவேற்ற  அல்லது  உலக  நன்மையைக்  குறித்துத்  தேவர்களும்  முனிவர்களும்  இறைவனுக்கு
       உருவம்  சமைத்துத்  திருக்கோயில்  நிறுவுவது  தேவ  பிரதிஷ்டை  அல்லது  முனிவர்  பிரதிஷ்டை  எனப்படும்.
 மனிதர்  நிறுவியது.:  அரசர்கள்  அல்லது  மனிதர்கள்  நிறுவும்  திருக்கோயில்  மனித  பிரதிஷ்டை  எனப்படும்.
        இவைகளில்  தான்தோன்றித்  திருக்கோயில்கள்  தவிர  ஏனையவற்றில்  முப்பது  ஆண்டுகளுக்கு  ஒரு  முறை  திருக்குடமுழுக்குச்  செய்யாவிடில்  சக்தி  குறையும்  எனக்  கூறுவர்.
--' தமிழ்நாட்டுத்  திருக்கோயில்  மரபுகள் '  என்ற  நூலில்  பொன்முகிலன்.
-- நூல் உதவி:  செல்லூர் கண்ணன். 

Sunday, December 14, 2014

ஜோக்ஸ் !

*  கொஸ்டீன்  கஷ்டம்!
   " காதலுக்கும்,  7.29 - க்கும்  என்ன  ஒற்றுமை...? "
   " இது  ரெண்டுக்கும்  பிறகுதான்  ஏழரை  ஸ்டார்ட்  ஆகும் !"
*  சங்கப்பலகை !
     என்னதான்  எம்.பி.பி.எஸ்  படிச்ச  டாக்டரா  இருந்தாலும்,  கம்ப்யூட்டர்ல  இருக்கிற  வைரஸ்க்கு  டேப்லெட்  கொடுக்க  முடியாது .
    -- இப்படிக்கு  கம்ப்யூட்டர்  மவுஸுக்கு  எலி  மருந்து  வைப்போர்  சங்கம்.
*  நீயல்லாம்  நல்லா  வருவடா...!
   ஆசிரியர்:  பெர்னாட்ஷாவை  பற்றி  உனக்குத்  தெரியுமா...?
   மாணவன்: அவர்  த்ரீஷாவோட  தாத்தாதானே  சார்?!
   ஆசிரியர்:  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
--  அவள் விகடன்.  15 - 01 - 2013.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ). 

Saturday, December 13, 2014

டிப்ஸ்...டிப்ஸ்...

*  வீட்டுக்கு  வரும்  விருந்தினர்  சாப்பிட்ட  பின்  ஹோட்டல்களில்  கொடுப்பதைப்  போல்  வருத்த  சோம்பை  நீங்கள்  தயாரித்துக்  கொடுக்கலாம்.  ஒரு
   கரண்டி  சோம்பு  வெறும்  வாணலியில்  ஒரு  நிமிடம்  வறுத்தால்  மொறுமொறு  என்றாகிவிடும்.  அதை  ஒரு  தட்டில்  கொட்டிவிட்டு,  அதே  வாணலியில்
   நாலு  ஸ்பூன்  சர்க்கரையை,  இரண்டு  ஸ்பூன்  தண்ணீர்  சேர்த்து  ஒரு  நிமிடம்  கிளரினால்...நன்கு  கரைந்துவிடும்.  இதை  சோம்பில்  கொட்டிக்  கிளறி
   ஆறவிட்டு,  ஒரு  டப்பாவில்  போட்டு  மூடி  வைத்துக்  கொள்ளுங்கள்.  தேவையானபோது  எடுத்துப்  பயன்படுத்துங்கள்.
* .பாயசத்தில்  முந்திரியை  வறுத்துப்  போடும்போது,  சிலசமயம்  கருகிவிடும்.  நேரமானால்  நமத்துவிடும்.  அதற்குப்  பதிலாக,  ஒரு  கரண்டி  பாயசத்தை
   எடுத்து,  அதில்  முந்திரியை  உடைத்துப்  போட்டு,  மிக்ஸியில்  அரைத்து,  பாயசத்தில்  சேர்த்துவிட்டால்... சுவை  கூடும் !
*  வெண்ணெய்  வாங்கி  வந்ததும்  அப்படியே  ஃப்ரிட்ஜுக்குள்  வைத்து  விடாமல்,  சிறு  துண்டுகளாக்கி  வைக்கவும்.  பிரெட்டுக்குத்  தடவ,  பட்டர்  தோசை
   சுட,  பட்சண  வகைகள்  தயாரிக்க  என  பல்வேறு  சமயங்களில்  தேவையான  துண்டுகளை  மட்டும்  எடுத்துக்  கொண்டால்,  மீதி  வெண்ணெய்
   அப்படியே  ஃப்ரிட்ஜில்  பல  நாட்கள்  வரை  கெட்டுப்  போகாமல்  இருக்கும்.
*  சப்பாத்திகளை  சுட்டதும்,  குறைந்தது  ஒன்றிரண்டு  மணி  நேரம்  சூடாகவும்,  மிருதுவாகவும்  வைத்திருக்க  எளிய  வழி... நாலு  சப்பாத்திகள்
   தயாரானதும்,  அலுமினியம்  ஃபாயில்  பேப்பரில் ( aluminium  foil )  சுற்றி  வைத்துவிடுங்கள்.  இப்படி  எல்லா  சப்பாத்திகளையும்  சுற்றி
   வைத்துவிட்டால்...தேவையானபோது  பிரித்தெடுத்து,  சுவை  குறையாமல்  பரிமாறலாம்.
*  ரசம்  தயாரிக்கும்போது  தக்காளியை  முதலிலேயே  சேர்ப்பதைவிட,  தக்காளியைத்  துண்டுகலாக்கி  நெய்யில்  வதக்கி  வைத்துக்  கொண்டு,  ரசம்
   தயாரித்து  முடித்ததும்,  சேர்த்துவிட்டால்... ரசம்  தெளிவாகவும்  சுவையாகவும்  இருக்கும்.
-- அவள் விகடன்.  15 - 01 - 2013.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Friday, December 12, 2014

365 இரவுகள் !

   " சினிமாவில்  நடிக்க  அழைத்தால்  தமிழ்ப்  பெண்கள்  முகம்  சுளித்து  மறுப்பதேன் ?"
     " ' அவள்  ஒரு  தொடர்கதை'  100 வது  நாள்  விழாவில்  கவியரசு  கண்னதாசன்  பேசியது... ' நானும்  கலைஞரும்  சினிமாவில்  சேர்ந்த  ஆரம்ப  காலத்தில்  ஓர்  அழகி  சினிமா  வாய்ப்பு  கேட்டு  வந்தாள்.  ஏதோ  காரணத்தால்  வாய்ப்பு  தரப்படவில்லை.  ஒரு  வருடம்  கழித்து  மீண்டும்  வந்தாள்.  எனக்கோ  ஆச்சர்யம். ' எவ்வளவு  அழகாயிருந்தவள்  ஒரே  வருடத்தில்  இப்படிச்  சீர்குலைந்து  போய்விட்டாளே '  என்று  வருத்தப்பட்டேன்.  அருகில்  இருந்த  கலைஞர்  மெள்ள  என்னிடம்  சொன்னார், ' ஒரு  வருடத்துக்கு  365  இரவுகள்  ஆயிற்றே!"
-- அ.யாழினி  பர்வதம்,  சென்னை .78.  ( நானே  கேள்வி... நானே  பதில் !...).
--ஆனந்தவிகடன்.  28 .11 . 2012.

Thursday, December 11, 2014

இன்பாக்ஸ்.

  இரண்டாம்  உலகப்  போரின்  அதிர்வுகள்  இன்றும்  ஜப்பானில்  எதிரொலிக்கின்றன.  கடந்த  வருட  சுனாமிச்  சீரழிவுகளை  அகற்றும்போது,  செண்டாய்  நகரின்  விமான  நிலையத்தில்  ஒரு  குண்டைக்  கண்டெடுத்து  இருக்கிறார்கள்.  சுமார்  250  கிலோ  எடை  இந்தக்  குண்டைச்  செயலிழக்கச்  செய்த  பின்தான்  பெருமூச்சுவிட்டது  மீட்புக்  குழு.  ( சுனாமியால்  ஒரு  நல்லது ! )
-- ஆனந்தவிகடன்.  28 .11 . 2012. 

Wednesday, December 10, 2014

பால் தாக்கரே....

  " மராட்டியம்  மராட்டியருக்கே... வேற்று  மொழியினருக்கு  இங்கே  இடம்  இல்லை " என்றார்  ஒருசமயம்.  இன்னொருசமயம்,  " தமிழர்களை  மிகவும்  நேசிக்கிறேன்.  ஈழத்  தமிழர்கள்,  இந்தியாவின்  குழந்தைகள்..." என்றார்.  பாபர்  மசூதி  இடிப்பை  முன்னின்று  நடத்திய  அரசியல்  கட்சிகள்  அடையாளம்  மறைத்துப்  பின்வாங்க,  " ஒருவேளை  சிவசேனா  இடித்து  இருந்தால்,  நான்  பெருமை  அடைகிறேன்..." என்றவர். " இஸ்லாமிய  பயங்கரவாதத்தை  ஒழிக்க  இந்துக்கள்  தற்கொலைப்  படையினராக  மாறவேண்டும் "  என்று  கர்ஜித்தவர்.  தனது  பேத்தி  நெகா,  ஒரு  முஸ்லீமை  மணந்தபோது  முன்னின்று  வாழ்த்தினார்.  "கடவுள்  இல்லாமல்  உலகம்  இயங்காது "  என்று  சொன்ன  தீவிர  சைவ  சித்தந்த  ஆத்திகர்.  தனது  மனைவி  மீனா  இறந்தபோது,  மேஜை  மீது  இருந்த  கடவுள்  படங்களைச்  சிதறடித்து, " கடவுளே  இல்லை "  என்று  கோபம்  காட்டியவர்.  இபபடித்  தனது  வாழ்க்கையின்  ஒவ்வொரு  பக்கத்தையும்  முரண்கள்,  சர்ச்சைகள்,  அதிரடிகளால்  நிரப்பிய  பால்  தாக்கரே,  கடந்த  17-ம்  தேதி  தனது  இறுதி  மூச்சை  நிறுத்திக்  கொண்டதை  நம்ப  முடியாமல்  தவிக்கிறார்கள்  மராட்டிய  மண்ணின்  மைந்தர்கள் !
     போக்குவரத்து  வசதிகள்  நிரம்பியிராத  அந்தக்  காலகட்டத்தில்  அண்ணாவின்  மறைவுக்கு  ஒன்றரைக்  கோடி  பேர்  திரண்டது  கின்னஸ்  ரெக்கார்டு.  ஆனால்,  எந்த  ஆட்சிப்  பொறுப்பிலும்  நேரடியாக  உட்காராத  தாக்கரேவுக்கு  அஞ்சலி  செலுத்த  20  லட்சம்  பேர்  கூடியதும்  ஒரு  ரெக்கார்டுதான்.
-- ஆனந்தவிகடன்.  28 .11 . 2012. 

Tuesday, December 9, 2014

மாயன் காலண்டர்.

  எழுத்து,  கலை,  கணிதம்,  வானவியல்  ஆகியவற்றில்  சிறந்து  விளங்கிய  மாயன்கள்  கி.மு.  2000  முதல்  கி.மு.  900  வரை  வாழ்ந்தனர்.  சூரிய  காலண்டரை  கண்டுபிடித்த  இவர்கள்,  சாக்லட்  தயாரிப்பதிலும்  வல்லவர்களாக  இருந்தனர்.  உலகில்  முதன்  முதலில்  கோகோ  பவுடரை  கண்டுபிடித்து  சுவைத்தவர்கள்  இவர்கள்தான்.  கோகோ  பவுடர்  புத்துணர்ச்சி  தரும்  பானம்  மற்றும்  எல்லா  நோய்களையும்  குணப்படுத்தும்  என்பதால்  சாக்லட்  பிரியர்களாக  இருந்தனர்.
    கி.மு.  1050 ம்  ஆண்டு  சிசேன்  இட்ஷா  என்ற  இடத்தில்  பிரமிடுபோல்  இவர்கள்  ஒரு  கோயிலை  கட்டினர். குல்குல்கான்  என்பது  அந்த  கோயிலின்  பெயர்.  இந்த  கோயிலைத்தான்  அவர்கள்  காலண்டராக  பயன்படுத்தினார்கள்.  பிரமிடு  போல்  அமைந்த  இந்த  கோயிலின்  4  பக்கங்களிலும்  ஒரு  ஆண்டை  நான்காக  வகுத்து  தலா  91  படிகளால்  அமைக்கப்பட்ட  மாடிப்படி  இருந்தது.  பிரமிடின்  மேல்தளம்  கணக்கில்  எடுத்துக்கொள்ளப்பட்டு,  165  நாட்கள்  வரும்  வகையில்  இதை  வடிவமைத்தனர்.
    மாயன்கள்  காலண்டர்  12.12.2012  அன்று  முடிவதாக  அமைக்கப்பட்டிருந்தது.  ஒரு  சுழற்சி  5  ஆயிரத்து  125  ஆண்டுகள்  என்று  கணக்கிட்டு  வானவிவியல்  எண்  கணித  முறைப்படி  இது  அமைக்கப்பட்டதால்  21ம்  தேதி  உலகம்  அழியும்  என்று  எல்லாரும்  நினத்தனர்.  ஆனால்  அது  புஸ்வானமாகிப்போனது.
-- தினமலர் .30.12. 2012. 

Monday, December 8, 2014

ஜொலிக்கிறது 3 ம் பிரகாரம்.

 சிவாலயங்களில்  பிரசித்தி  பெற்றது  ராமேஸ்வரம்  என்றால்,  ராமேஸ்வரம்  கோயிலில்  பிரசித்திப்  பெற்றது  அங்குள்ள  3 ம்  பிரகாரம்  என்றழைக்கப்படும்  நீண்ட  மண்டபம்  ஆகும்.  இந்த  3 ம்  பிரகாரம்,  1740 ம்  ஆண்டு  கட்டப்பட்டது.  2 ஆயிரத்து  400  அடி  நீளம்  கொண்ட  இந்த  3 ம்  பிரகாரத்தில்  ஆயிரத்து  212  தூண்கள்  உள்ளன.
     இத்தூண்களின்  மீதும்,  பிரகாரத்தின் மேல்பகுதியிலும்  கண்னைக்  கவரும்  வகையில்,  வர்ண  ஜாலம்  செய்யும்  ஓவியங்கள்  வரையப்பட்டிருக்கும்.  ராமேஸ்வரம்  கோயிலுக்கு  வரும்  சுற்றுலாப்  பயணிகள்,  இந்த  3ம்  பிரகாரத்தை  பிரமாண்டத்தைக்  கண்டு  லயித்து  நிற்பதுண்டு.
--  தினமலர் .30.12. 2012.  

Sunday, December 7, 2014

வாழ்நாட்கள்.

*  மே  பூச்சியின்  வாழ்நாள்  ஒரு  நாள்.
*  ஆண்  கொசுவின்   வாழ்நாள் 7  நாட்கள்.
*  பெண்   கொசுவின்   வாழ்நாள்
*  வீட்டு  ஈயின்  வாழ்நாள் 4  மாதங்கள்.
*  எலியின்  வாழ்நாள் 3  வருடங்கள்.
*  அணிலின்   வாழ்நாள் 9  வருடங்கள்.
*  பூனையின்  வாழ்நாள் 12  வருடங்கள்.
*  குதிரையின்  வாழ்நாள் 30  வருடங்கள்.
*  யானையின்  வாழ்நாள் 80  வருடங்கள்.
*  ஆமையின்  வாழ்நாள் 300  வருடங்கள்.
--  தினத்தந்தி சிறுவர்  தங்கமலர் .  21 - 12 - 2012. 

Saturday, December 6, 2014


பொதுஅறிவுச் சோலை.

*'' ஆனந்தவனம் '  அமைப்பை  உருவாக்கியவர்  யார்?  -  பாபா  ஆம்தே.
*  அடால்ப்  ஹிட்லர்  எந்த  நாட்டில்  பிறந்தார்?  -  ஆஸ்திரியா.
*  கோவா  மாநிலத்தில்  ஏப்ரல்  மாதங்களில்  வண்ணப்பொடிகளை  தூவி  கொண்டாடப்படும்  விழா  எது?  -  ஷிக்மோ.
*  எந்த  விட்டமின்  சத்தில்  அஸ்கார்பிக்  அமிலம்  உள்ளது?  -  விடமின் சி.
*  ஈரான்  நாட்டில்  பேசப்படும்  முக்கிய  மொழி  எது?  -  பெர்சியன்.
*' தங்க  கடற்கரை'  என்று  அழைக்கப்பட்ட  ஆப்பிரிக்க  நாடு  எது?  -  கானா.
*  கஞ்சா  செடியிலிருந்து  பெறப்படும்,  மருத்துவ  ஆராய்ச்சிக்கு  பயன்படும்  பொருளின்  பெயர்  என்ன?  -  ஒபியம்.
*  ஜிம்  கார்பெட்  தேசிய  மிருகக்காட்சி  சாலை  எந்த  மாநிலத்தில்  உள்ளது?  - உத்தர பிரதேசம்.
--   தினத்தந்தி சிறுவர்  தங்கமலர் .  21 - 12 - 2012.

Friday, December 5, 2014

தகவல் களஞ்சியம்.

*  இந்திய  பெருங்கடலில்  உள்ள  மிகப்பெரிய  தீவு  மடகாஸ்கர்.
*  இந்தியாவில்  ரயில்வே  மியூசியம்  புது  டில்லியில்  உள்ளது.
*  மின்னணுக்  கணிப்  பொறியைக்  கண்டுபிடித்தவர்  டாக்டர்  ஆலன்  எம்டூரிங்.
*  முதுகு  தண்டுவடத்தின்  சராசரி  நீளம்  430  மில்லிமீட்டர்.
*  கலிங்கா  விருதை  வழங்குவது  யுனெஸ்கோ.
*  நீர்மூழ்கிக்  கப்பலை  வடிவமைத்தவர்  டேவிட்  புஷ்னல்.
*  ஒட்டகம்  தேவையான  நீரை  உடலில்  சேமித்து  வைத்துக்  கொள்கிறது  என்று  கூறுவது  தவறு.  அதன்  சருமத்தில்  வியர்வை  கோளங்கள்
   இல்லாததால்  நீர்  ஆவியாகச்  செல்ல  வழியில்லை.  அதனால்  அதற்கு  தாகம்  எடுப்பதில்லை.  நீர்  அருந்தாமலேயே  நீண்டகாலம்  சமாளிக்கிறது.
-- தினத்தந்தி சிறுவர்  தங்கமலர் .  21 - 12 - 2012.  

Wednesday, December 3, 2014

டிப்ஸ்...டிப்ஸ்...

*  பாகற்காயை  அப்படியே  வைத்தால்  ஒன்றிரண்டு  நாட்களில்  பழுத்து  விடும்.  இதைத்  தவிர்க்க,  காய்களை  மேற்புறமும்  அடிப்புறமும்  வெட்டிவிட்டு,
   இரண்டாக  பிளந்து  வைத்து விடவும்.  பல  நாட்கள்  வரை  பழுக்காமல்  இருக்கும்.
*  காய்கறிகளை  பாலிதீன்  கவரில்  போட்டு  ஃபிரிட்ஜில்  வைக்கப்  போகிறீர்களா?  ஒரு  நிமிடம்.. கவர்களில்  கோணி  ஊசி  அல்லது  கூரான  ஆணி
   கொண்டு  குத்தி  துளைகள்  போட்ட  பின்,  காய்களை  அதில்  வைத்தால்,  காய்கள்  பல  நாட்கள்  அழுகாமல்  இருக்கும்.
*  மிக்ஸி ( அ ) கிரைண்டரில்  தோசை  மாவு,  சட்னி,  துவையல்  போன்றவற்றை  அரைத்து  வழித்து எடுத்ததும்,  மீண்டும்  ஜாரில்  சிறிது  நீர்விட்டு
   ஜாரை  ஓட்டவும்.  அதனுள்ளே  கெட்டியாக  ஒட்டிக்  கொண்டிருக்கும்  மாவு  தண்ணீரோடு  கரைந்து  வந்து  விடுவதால்,  ஜாரை  சுத்தம்  செய்வது
   மிகவும்  சுலபம்.
*  தேங்காய்  பர்ஃபி  செய்யும்போது  துருவிய  தேங்காயை  அப்படியே  சர்க்கரை  பாகில்  சேர்க்காமல்,  முதலில்  தேங்காய்  துருவலுடன்  அரை  டம்ளர்
   பால்,  5  முந்திரிப்  பருப்பு  சேர்த்து  மிக்ஸியில்  அரைத்து  பிறகு  சர்க்கரை  பாகில்  சேர்த்தால  தேங்காய்  திப்பிதிப்பியாக  இல்லாமல்,  பர்ஃபி
   மிருதுவாக  இருக்கும்.
*  நெய்  காய்ச்சிய  பாத்திரத்தில்  ஒரு  டம்ளர்  நீர்  வீட்டு  கொதிக்க  வைத்து  அடுப்பில்  வைத்திருக்கும்  சாம்பார்  அல்லது  ரசத்தில்  அதை  வடிகட்டி
   கொட்டி  விடுங்கள்.  நெய்  மணம்  கமழும்  சாம்பார்  ரெடி.
* தேன்குழல்,  முறுக்கு  மிருதுவாக  வர  வேண்டுமா?  மாவில்  வெண்ணெய்,  டால்டா,  நெய்  போன்றவற்றை  நேரடியாக  சேர்க்காமல்,  முதலில்  அரை
   டம்ளர்  வெந்நீரில்  இவற்றை  தேவையான  அளவு  போட்டு  உருக்குங்கள்.  அந்தத்  தண்ணீர்  சூடாக  இருக்கும்போதே  மாவில்  கலந்து  பிசைந்தால்,
   வெண்ணெய்  மாவு  முழுவதும்  சீராக  பரவி,  கைகளில்  ஒட்டாமல்  இருக்கும்.  பலகாரங்களும்  மிருதுவாக  இருக்கும்.
-- மகாலட்சுமி,  காரைக்கால் - 2.
-- அவள் விகடன்.  24 - 10 - 2008.  

Tuesday, December 2, 2014

' இஞ்சி இடுப்பழகு '

  இஞ்சி  என்பது  நம்  உடல்  நலன்காக்கும்  நல்ல  உணவுப்  பொருள் ( மருந்துப்  பொருள் ).  இஞ்சிச்சாறு  காலையில்  பருகினால்  வயிற்றில்  உள்ள  தேவையில்லா  சதையை ( தொப்பையை )  குறைத்து  இடுப்பை  வலிவாகவும்,  வனப்பாகவும்  ஆக்கும்.
     இஞ்சிச்சாறு  வழக்கமாகப்  பருகிகின்றவர்களுக்கு  இடுப்பு  அளவோடு,  அழகாக  இருக்கும்.  அதனாலே  இஞ்சி  இடுப்பழகு  என்றனர்.
    " காலை  இஞ்சி
      கடும்பகல்  சுக்கு
      மாலைக்  கடுக்காய்
      மண்டலம்  தின்றால்
      கோலை  எறிந்து
      குலாவி  நடப்பர் "
-- என்பது  சித்தர்  பாடல்.
     காலையில்  இஞ்சிச்சாறும்,  பகலில்  சுக்குச்சாறும்,  மாலையில்  கடுக்காய்  சாறும்  பருகினால்,  உடல்  வலுப்பெறும்  என்பது  மேற்கண்ட  பாடலின்  பொருள்.  அந்த  அளவுக்கு  இஞ்சி  உடலுக்கு  உகந்தது.  இளமையும்,  இடுப்பழகும்  தரக்கூடியது.  ( இஞ்சி  சாப்பிடும்போது  அதன்மீதுள்ள  தோலை  நன்றாகச்  சீவி  அகற்றி  விடவேண்டும்.  காரணம்,  இஞ்சித்தோல்  நச்சுத்  தன்மை  உடையது.  கேடு  தரக்கூடியது ).
-- மஞ்சை  வசந்தன்,  பாக்யா.  அக்டோபர்  2 - 8;  2009.  

Monday, December 1, 2014

சொல் விளையாட்டு.

  தப்பும்  தவறுமாகப்  பேசி  எக்கச்சக்கமாக  மாட்டிக்கொள்ளும்  போது,  " இல்லையே... நான்  அந்த  அர்த்தத்தில்  சொல்லவில்லையே"  என்று  சமாளிப்பது  நம்  எல்லோருக்கும்  கை  வந்த  கலை.
     அதுவே  புலவர்கள்  என்றால்  சொல்லவே  வேண்டாம்.  அவர்களின்  மொழிப்  புலமையில்  எதை  வேண்டுமானாலும்,  எப்படி  வேண்டுமானாலும்  மாற்றிச்  சொல்லிவிடுவார்கள்.  இதோ  ஒரு  சின்ன  சம்பவம்:
   " வாரும்  ' மட ' த்தடிகளே "  (  மடத்து  அடிகளே  என்பது  பொருள்).  என்கிறார்  வந்தவர்.
     பதிலுக்கு  அவர்,
   " வந்தேன்  ' கல் '  விக்ரகமே "  (  கல்விக்  கிரகமே  என்பது  பொருள்  ). என்கிறார்.  இதைக்  கேட்டதும்  அவரும்  சிரித்துக்கொண்டே,
   " அறிவில்லாதவனே "  ( அறிவில்  ஆதவனே  என்பது  பொருள் ).
என்று  சிலேடையாய்  சொல்கிறார்.
--  தினமலர்  சிறுவர்மலர் . டிசம்பர் , 28, 2012. 

Sunday, November 30, 2014

கணக்குப் புதிர்.

  ஒரு  குடும்பத்தில்  மொத்தம்  நான்கு  சகோதரிகள்.
     மூத்த  சகோதரிக்கும்  அடுத்த  சகோதரிக்கும்  இடையே  உள்ள  வயது  வித்தியாசம்  ஆறு.
     மற்றவர்களுக்கு  இடையே  உள்ள  வித்தியாசம்  இரண்டு.
     இவர்களின்  சராசரி  வயது  25.
     அப்படி  என்றால்  மூன்றாவது  சகோதரியின்  வயது  என்ன?  இந்தப்  புதிர்  கேள்விக்கு  விடை  சொல்லுங்கள்  பார்க்கலாம்.
விடை:  முதல்  சகோதரியின்  வயது -  31;  இரண்டாவது  சகோதரியின்  வயது - 25; மூன்றாவது  சகோதரியின்  வயது - 23;  நான்காவது  சகோதரியின்  வயது - 21;  மொத்தம்  = 100;  சராசரி = 100 / 4 = 25.
-- தினமலர்  சிறுவர்மலர் . டிசம்பர் , 28, 2012. 

Saturday, November 29, 2014

விண்வெளியில்...

விண்வெளியில் வாடகைக்கு வீடு !
     நமது நாட்டு ISRO போல, அமெரிக்க நாட்டில்  NASA (  National Aeronautic Space Administration )  என்ற அமைப்பு  உள்ளது.  இதனால் விண்வெளியில் செலுத்தப்படும் வெண்கலங்களில் அனுப்பப்படுவோர் தங்கி இருக்க வேண்டி, ஒரு வெண்கல வீடு ( அறை ) அமைக்க நினைத்து 1990ஆம் ஆண்டிலேயே அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
    தற்போது புதிதாகச் செய்யப்பட்ட  BEAM  ( The Bigrlow Expandable Activity Module )  என்ற புதிய சாதனமானது, வெக்ட்ரான் எனப்படும், குண்டு நுழைக்காத பொருளைக்கொண்டும், மற்றும் செயற்கை நூலிழையினால் செய்யப்பட்ட ஒரு விதமான துணி போன்ற பல அடுக்குகள் கொண்ட பொருளாலும் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்தத் துணியின் தன்மை என்னவென்றால் இக்கலம் வெண்வெளியில் செல்லும்போது சூரிய வெப்பம், சூரியப்புயல் மற்றும் அதன் மேல் விழும் பலமான வான்வெளிக்கற்கள் கதிர்வீச்சு இவற்றினால் பாதிக்கப்படாது.
    இப்புதுமாதிரியான வெண்வெளி ' வீடு ' ( அறை ) காற்றினால் உப்புகிறது. இதன் அமைப்பே ஒரு பலூன் போன்றது.  இதனுள் காற்றைச் செலுத்தி உப்பச் செய்தால் இதன் அளவு (  Size ) 13 அடி நீளம், அகலம் 10 அடி விட்டம் கொண்டதாக இருக்கும்.  இதன் எடை 1361 கிலோகிராம்.  இதை ஒரு' T' ஷர்ட்டை' மடித்து வைப்பதுபோல மடித்து ஒரு சூட் கேஸினுள் வைத்துவிட முடியும்.  இதன் உட்பரப்பு 560 கன அடி.
    இதை வருகிற 2015 ஆம் ஆண்டில் வெண்வெளியில் செலுத்துவதாக இருக்கிறார்கள்.  மனிதர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் இம்மாதிரி, காற்றை உட்செலுத்தி வைக்கிற அமைப்பானது, இதுதான் முதன்முறை.
-- ' சுமன் '  மஞ்சரி . மார்ச் 2013.                
--    இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

Friday, November 28, 2014

ஃபெஸ்புக்

 சமீபத்தில் ஃபெஸ்புக்கில் ஒரு சுவாரஸ்யமான பதிவைப் படித்தேன்.  ஒரு இளைஞனின் அறையில் திருமணத்திற்கு முன்பும், பின்பும் இருக்கும் பொருட்கள் எவை எவை என்பது குறித்த பதிவு அது.
திருமணத்திற்கு முன்பு இருப்பவை:
1.  பெர்ஃப்யூம்ஸ்
2.  காதல் கடிதங்கள்
3.  பரிசுப் பொருட்கள்
4.  வாழ்த்து அட்டைகள்
5.  ஐ போன்
அதே இளைஞனின் அறையில் திருமணத்திற்குப் பிறகு இருப்பவை:
1.  வலி நிவாரணிகள்
2.  கடன் பத்திரங்கள்
3.  கட்டப்படாத பில்கள்
4.  நோக்கியா 3310
இந்த ஒப்பீட்டில் இருக்கும் வாழ்வின் தலைகீழ் மாற்றத்தை நினைத்து வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.
--மனுஷ்ய புத்திரன்.  குங்குமம் . 3 . 6 . 2013.                                
-- இதழ் உதவி:  P. சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Thursday, November 27, 2014

மூர்க்கத்துவம்

  ' மரணத்திலும் கொடுமையானது எது? ' என்று ஸ்ரீசங்கரரிடம் கேட்டான் சீடன்.  அதற்கு அவர், ' மூர்க்கத்துவம் ' என்றார்.
       மரணம் என்றால் என்ன என்பதை முதலில் ஆய்ந்து அறியவேண்டும்.  உடலை விட்டு உயிர் நீங்குதல், அதன்பின் அனைத்து நாடிகளும் ஒடுங்குதல் மரணம் என்று சொல்லப்படும்.  அந்தநிலையில் உடலைப் பிணம் என்று சொல்கிறோம்.  மூர்க்கட்த்துவம் உடைய மனிதன் பிணத்திலும் இழிநிலையில் வாழ்பவன், கிட்டத்தட்ட நடைப்பிணம் என்றே சொல்லலாம்.
       மனிதனிடம் அறியாமை இருப்பது இயல்பு.  அறியாமையில் இருந்து நீங்க முயற்சிக்க வேண்டும்.  அறியாமை காரணமாக எடுத்த முடிவைப் பிடிவாதமாகப் பின்பற்றுபவன்தான் மூர்க்கன்.  இலக்கண நூல்களில் இதை ஒரு கொள்கையாகச் சொல்வார்கள்.  ' தான் ஆட்டி தனாது நிறுத்தல் ' என்று அதற்கு பெயர்.  தான் எடுத்த முடிவு தவறானது என்பதை மனசாட்சி சுட்டிக்காட்டிய பின்னாலும்கூட  அந்த முடிவில் இருந்து பின்வாங்காமை மூர்க்கதுவமாகும்.
-- ஞான வாயில் .தினமலர் . பக்திமலர். பிப்ரவரி 21, 2013. 

Wednesday, November 26, 2014

மலமாதம்.

 இரண்டு அமாவாசை வரும் மாதங்களில் மங்கள காரியங்கள் செய்யக் கூடாதா?  ஏன்?
      இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்.  திருமணம் மற்றும் புதிய திருக்கோயில் கும்பாபிஷேகம் போன்றவை செய்யக்கூடாது.  பழைய திருக்கோயில் கும்பாபிஷேகம், மணிவிழா, வளைகாப்பு, காது குத்தல் போன்றவை செய்யலாம்.  தவிர்க்க முடியாத பட்சத்தில் மலமாத தோஷ சாந்தி செய்து விட்டு சிலர் திருமணமும் நடத்துகிறார்கள்.
--  மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் . பக்திமலர். பிப்ரவரி 21, 2013. 

Tuesday, November 25, 2014

SMART

 குறிக்கோள் நிர்ணயிப்பதன் தன்மையை  SMART  என்று சுருக்கமாகச் சொல்வார்கள்.  கடினமாக உழைப்பதைவிட புத்திசாலித்தனமாக உழைப்பது சிறந்தது என்பதைத்தான் இந்த SMART என்கிற வார்த்தை குறிக்கிறது.  இதன் விரிவாக்கத்தைப் பார்ப்போம்.
S       Specfic               குறிப்பானதா
M       Meaningful          அர்த்தமுள்ளதாக
A       Action oriented    நடைமுறைப்படுத்தத்தக்கதாக
R       Rewarding          பயனளிக்கக்கூடியதாக
T       Time-bound        நேரக் கட்டுப்பாட்டோடு இருப்பதாக
-- கோ.ரமேஷ், சுட்டி விகடன் . 15 . 01 . 2013                                        
இதழ் உதவி: இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

Monday, November 24, 2014

வணக்கங்கள் பலவிதம்

 உயர்ந்தவர்களை வணங்குவதில் பலவிதமான முறைகள் உண்டு.  ஒரு கையால் வணங்குதல் ஏகாங்க நமஸ்காரம் எனப்படும். இது இக்காலத்திய சல்யூட் போன்றது. வலது கையை மட்டும் எடுத்துத் தலை மீது வைத்து வணங்குவது ' துவிதாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இரண்டு கைகளையும் தலை மீது வைத்து வணங்குவது ' திரிவிதாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டி, தலை ஆகியவற்றால் வனங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும்.  இது பெண்களுக்குரிய வணக்க முறையாகும்.  இரண்டு கால்கள், இரண்டு கைகள், இரண்டு காதுகள், தலை, மார்பு ஆகியவற்றை பூமியில் பதித்து எட்டு அங்கங்களால் வணங்குவது ' அஷ்டாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  நெடுஞ்சாண் கிடையாக எல்லா உறுப்புகளும் தரையில் படும்படி  வணங்குவது ' சாஷ்டாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இதுவும் ஆண்களுக்குரிய வணக்க முறையாகும்.
---   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013.  

Sunday, November 23, 2014

துளசி பறிப்பது எப்படி?

 காலையில் நீராடியபின் ,மடி ஆசாரத்துடன் தெய்வ சிந்தனையுடன் துளசியைப் பறிக்க வேண்டும்.  அதைப் பறிக்கும்போது,
     துளஸ்யம்ருத ஜந்மாஸி ஸதாத்வம்
                    கேஸவப்ரியே
     கேஸவார்த்தம் லுநாமித்சிம் வரதாபவ
                      ஸோபதே
என்ற சுலோகத்தைச் சொல்லிக் கொண்டு பறிக்க வேண்டும்.  நான்கு இலைகளும் நடுவில் துளிரும் கொண்ட ஐந்து தளங்கள் இருப்பது போலத் துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும்.  பல நாட்கள் வைத்திருந்து சாத்தலாம்.
--   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013.  

Saturday, November 22, 2014

ருத்ரஜபம் கூடாது

 வேதத்தின் நடுநாயகமாக அமையும் பகுதி ஸ்ரீருத்ரம்.  மிகமிகச் சக்தி வாய்ந்த மந்திரம்.  இந்தக் காலத்தில் அந்த மந்திரம் கேசட் சிடியாக வெளிவந்து வீடூகளில் ஒலிக்கத் தொடங்கி விட்டது  .கண்ட கண்ட நேரங்களில் எல்லாம் ஒலிக்கிறார்கள்.  ருத்ரஜபம் மற்றும் பாராயணத்தைத் தனியாகச் செய்வதனால் நண்பகல் 12 மணிக்கு முன்புதான் செய்ய வேண்டும்.  அதன்பின் கூடாது.  மாலையிலோ இரவிலோ சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது மட்டும்தான்
ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்ய வேண்டும்.  கேசட் போட்டுக் கேட்பவர்கள் இந்த விதியைத் தவறாமல் மனதில் கொள்ளவேண்டும்.
--   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013. 

Friday, November 21, 2014

வியாழ வட்டம்

   ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்ப ராசிகளில் குரு இடம் பெற்றிருப்பது குருவளையல் எனப்படும்.  இதை வியாழ வட்டம் என்பர்.
     குரு, ரிஷப ராசியில் இருந்தால் அவர் தலையசைத்தால் ஊர் அசையும்.  வெகுஜன செல்வாக்குப் பெற்றிருப்பார்.  சிம்ம ராசியில் இருந்தால் நடமாடும் சிங்கங்களாக வைராக்கிய நடையிடுவர்.  தனுசு ராசியில் இருந்தால் ராஜயோகம்.  கும்பராசியில் இருக்கப் பிறந்தவர்கள் ஞானிகளாகத் திகழ்வர்.
வியாழ நோக்கம்
      கல்யாண வயதை எட்டிய நிலையில்  'வியாழ நோக்கம் ' இருந்தால் மளமளவென கல்யாணம் நடக்கும்.
      இது என்ன வியாழ நோக்கம் ?
      ஒரு ஜாதகரின் ஜனனராசிக்கு அதாவது சந்திரன் நிற்கும் ராசிக்கு 2,5,7,9,11 ம் ராசிகளில் குரு சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு குருபலன் - அதாவது, வியாழ நோக்கம் உள்ளது என்று அர்த்தம்.  அந்த நிலையில் திருமணப்பேச்சு எடுத்தால் போதும். இது கல்யண காலம் விரைவில் திருமணத்தை நடத்தி வைத்து விடும்.
பத்து தோஷமும் விலகும் !
      ஜனன லக்னத்துக்கு 1-4-7-10ல் குரு, சுக்கிரன்,புதன் கூடியோ, பரவலாகவோ இருந்தால் அந்த ஜாதகருக்கு உரிய பத்து தோஷங்களும் பகலவனைக் கண்ட பனிபோல விலகும்.  பட்சி, எட்சி, தேரை, புருஷ, குழி, முட்டு, பெண், பறவை, பாலாரிஷ்டம். கருவழிந்த தோஷம் என்பவை பத்து தோஷங்களாகும்.
--- தினமலர் பக்திமலர். மே 23, 2013. 

Thursday, November 20, 2014

குரு -- அறிவியல் தகவல்கள்

  குருக்கிரகம் ஜுபிடர் என்று சொல்லப்படும்.  சூரியனிடமிருந்து 48 கோடியே 30 லட்சம் கல் தொலைவில் சூரியனை குறித்த வேகத்தில் வட்டமாகச் சுற்றுகிறது.
     இதன் விட்டம் 88700 மைல்.  ஒரு மணிக்கு 29282.5 மைல் வேகத்தில் சூரியனை சூழ உள்ள 303,60 கோடி மைல் சுற்றளவு உள்ள வட்டப்பாதையை 4320 நாட்களில் ஒருமுறை கடக்கும். செவ்வாய் சனிக் கிரகங்களுக்கிடையே சஞ்சரிக்கும்.
மஞ்சள், கடலை கூடாது !
     நவக்கிரக நாயகர்களுள் ஒருவர் குரு.  இவர் தேவர்களின் குரு.  பிரகஸ்பதி என்று பெயர்.  பிரம்மனின் பேரன்.  ஆங்கீரசரின் மகன். இவன் வாசஸ்பதி எனவும், வியாழன் எனவும் சொல்லப்படுபவன்.  வடக்குத்திசை நோக்கி இருப்பான். இவனுக்கு உரியதே மஞ்சள் ஆடையும், மஞ்சள் அபிஷேகமும். கொண்டைக்கடலையும் இவனுக்கு உரியதே ஆகும்.  சிவாலய மாடங்களில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தி சிவாம்சம்.  மகாயோகி.  தெற்குப் பார்த்திருப்பார்.  இவருக்கு மஞ்சள் ஆடை அணிவிக்கக்கூடாது. கொண்டைக்கடலை மாலை சாத்தக்கூடாது.
---தினமலர் பக்திமலர். மே 23, 2013.  

Wednesday, November 19, 2014

உதவி

" நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டு, அதை அவர்கள் மறுக்கும்போது என்ன நினைப்பீர்கள்?"
" அவர்களுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொள்வேன்.  இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா... ' எனக்கு எதையும் மறுத்தவர்களுக்கு நான் நன்றியுள்ளவானாக இருக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.  ஏனென்றால், அவர்களால்தான் நானே என் காரியங்களைச் சாதிக்க முடிந்தது! ' என்பார் அவர் !"
-- கே.சரஸ்வதி, திண்டல்.

" பணத்தால் ஆத்திகனையும் நாத்திகனையும் சேர்த்து வைக்க முடியுமா?"
" பணத்தால் முடியாதது எதுவும் இல்லை.  இந்தக் கவிதையைப் படியுங்கள்...
   ' வாஸ்து பார்த்துக் கட்டிய வீட்டில்
    நல்ல வாடகை தந்த
   நாத்திகனுக்கு இடம்!' ".
-- ராம்.ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
--- நானே கேள்வி...நனே பதில் !
-- ஆனந்த விகடன்.  22 .5  .2013.  

Tuesday, November 18, 2014

சூப்பர் சார்ஜர்.

20 நொடியில் சார்ஜ் செய்யும்  சூப்பர் சார்ஜர்.அமெரிக்க வாழ் இந்தியர் சாதனை.
     அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாராதோகாவை சேர்ந்தவர் இஷா காரே ( 18 ). இந்திய வம்சாவளியினரும், நானோ கெமிஸ்ட்ரி மாணவியுமான அவர், செல்போனுக்கு 20 -30 நோடிகளில் சார்ஜ் ஏற்றக்கூடிய புதிய சூப்பர் சார்ஜரை கண்டுபிடித்திருக்கிறார்.
     இந்த சார்ஜர் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் ஏற்றப்படும் சார்ஜ் நீண்ட நேரத்திற்கு இருக்கும்.  இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் மட்டுமல்லாது கார் போன்ற வாகனங்களின் பேட்டரிகளும் இதன்மூலம் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் எதிர்காலத்தில் அந்த சாதனத்தை நவீனப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தினமலர் . 22 . 5 . 2013.  

Monday, November 17, 2014

சித்திர குப்தனின் பிறந்தநாள்

 சித்திரா பவுர்ணமி -- சித்திரகுப்தனின் பிறந்த நாள்.  உயிர்களின் புண்ணிய பாவக் கணக்குகளை எழுதுவதற்காகச் சிவனால் படைக்கப்பட்டவன் சித்திரகுப்தன்.
     கணக்கு எழுதும் தெய்வங்கள்
     சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் உயிகளின் புண்ணிய பாவக் கணக்கு எழுதுகிறார்கள் .  ஏழுவகையான பிறவிகள், 84 லட்சம் யோனி பேதங்கள், உணவு, உறக்கம் இல்லாவிட்டால் உடல் இளைக்கும். உயிரும் இளைப்பதுண்டு எப்படி தெரியுமா?
     ' புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
       பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
       கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
       வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
       செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
       எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்...' என்கிறார் மாணிக்கவாசகர்.
-- தினமலர் . பக்திமலர் . ஏப்ரல் 18, 2013.  

Sunday, November 16, 2014

நட்பு


தெரியுமா? தெரியுமே!

*  ஆப்பிரிக்க பறவை இனங்களில் ஒன்றின் பெயர் விதவை.
*  ' புபு ' என்றால் திபெத்திய மொழியில் வியாழக்கிழமை என்று அர்த்தம்.
*  சூரியனின் கொள் அளவு எத்தனை பூமிகளுக்கு சமம்?  அதாவது, சூரியனுக்குள் எத்தனை பூமிகளை வைக்கலாம் தெரியுமா? 10 லட்சம் பூமிகள்!
*  எவரெஸ்டின் இப்போதைய உயரம் 29,028 அடி.
*  விளக்கு வெளிச்சத்தில் அடை காக்கும் கோழிகள் முட்டைகளை சீக்கிரம் பொரிக்கின்றனவாம்.  இதுபோல இனிய இசைகளைக் கேட்கும் கோழிகள்
   அதிக முட்டைகளை இடுகின்றனவாம்.
*  மனித முடியை தீயினால் மட்டுமே அழிக்க குடியும்.  வேறு வழிகளில் அழிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
*  மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 70 முறை துடிக்கிறது.  ஆனால், மிகப் பெரிய உருவங்கொண்ட யானையின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு
   27 முறை தான்.
-- சுட்டி விகடன். 15 . 06 . 2011.      .
-- இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

Saturday, November 15, 2014

அந்த 6 பேர் !

நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார்.
அந்த 6 பேர்கள்:
ப்ராதஸ்நாநி  --  அதிகாலையில் குளிப்பவன்.
அஸ்வத்தசேவி  --  அரச மரத்தை வணங்குபவன்.
த்ருணாக்னி ஹோத்ரி  --  முன்று தீயை இடையறாது வளர்ப்பவன்.
நித்யான்னதாதா  --  நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன்.
சதாபிஷேகி  --  நூற்றாண்டு விழா செய்து கொண்டவன்.
பிரம்மஞானி  --  இறைவனை உணர்ந்தவன்.
--  தினமலர் பக்திமலர் . மே 16, 2013. 

Friday, November 14, 2014

இவர்கள் இதனைப் பெற்றார்கள்.

    ரிஷப விரதம் இருந்து தேவர்கள் இவை இவை பெற்றார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அந்தப் பட்டியல் பின்வருமாறு.
இந்திரன் :        ஐராவதம்
அக்னி :           ஆட்டுக்கடா
எமன் :             எருமைக்கடா
நிருதி :             மனிதன்
வருணன் :        முதலை
வாயு :              மான்
குபேரன் :         புஷ்பக விமானம்
ஈசானன் :         காளை
சூரியன் :          ஒரு சக்கரம் மற்றும் ஏழு குதிரையுடன் கூடிய தேர்
சந்திரன் :          ரத்ன விமானம்
வசிஷ்டர் :        முக்காலமும் உணரும் சக்தி
விஸ்வசேனன் : திரிகால ஞானம்
ஸந்துஷ்டன் :   அஷ்டமாசித்தி
விஷ்ருதன் :     சகல உலகத்திலும் சஞ்சரிக்கும் சக்தி.
-- தினமலர் பக்திமலர் . மே 16, 2013

Thursday, November 13, 2014

தெரியுமா? தெரியுமே!

*  கேதார விரதம் என்பது புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தொடங்கி,  21 நாட்கள் தீபாவளி வரை மேற்கொள்ள வேண்டியதாகும்.
*  ஆற்று மணலில் வெட்டப்படும் ஊற்றுக்கு என ஒரு விசேஷமான குணம் உண்டு.  தோண்டப்படும் பக்கத்தில் நீர் வேகமாகப் போகும்.  ஆனால்,
   அதேநேரத்தில் இன்னொரு பக்கம் தூறும்.
*  எண்ணெயைச் சொரிந்து தேய்க்க வேண்டும்.  கல்வியை வருந்திக் கற்க வேண்டும்.
*  எறும்பு முதலாக யானை ஈராக 84 லட்சம் உயிரினங்கள் உண்டு என்பர் பெரியோர்.
*  எறும்புக்கு பல விசேஷ சக்திகள் உண்டு. அவற்றுள் ஒன்று பெரும்மழை வெள்ளம் வரும் என்பதனை அறியும் தன்மை.
*  எறும்பு வழிபட்ட தலம் திருவெறும்பூர்.  திருச்சிக்கு அருகில் உள்ளது.  மலைமேல் கோயில்.  125 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.  இந்திரனும் தேவர்களும்
   எறும்பு வடிவில் வழிபட்டதால் பிப்பிலேஸ்வரர், எறும்பீஸ்வரர் என்றெல்லாம் சொல்லப்படுகிறார்.
*  தமிழகத்தில் அறுபத்து மூவருக்கென அமந்த ஆலயம் திருப்பனந்தாள் மட்டுமே ( கும்பகோனத்திற்கு அருகில் உள்ளது இந்த திருத்தலம் ).

Wednesday, November 12, 2014

108 கோமுகங்கள்.

  கருவறையில் உள்ள இறைவனை அபிஷேகித்த நீர் வெளியில் வந்து விழும் பகுதியில் பசுவின் முகம் போன்ற அமைப்பு இருக்கும். இதைக் கோமுகம் என்றும் கோமுகை என்றும் சொல்வார்கள். இமயமலைச் சாரலில் முக்திநாத் என்றோரு வைணவத் தலம் உள்ளது.  அங்குள்ள கோவிலைச் சுற்றிலும் பசுவின் முகம் போலச் செய்யப்பட்ட 108 கோமுகைகள் இருக்கின்றன.  இவற்றில் இருந்து எப்போதும் நீர் விழுந்து கொண்டு இருக்கும்.
பரமன் அருளால் தோன்றிய பசுக்கள்:.
     ஒரு சமயம் சிவபெருமான் அருளால் நான்கு பசுக்கள் தோன்றின.  சிவன் அவற்றை நான்கு திசைத் தெய்வங்களுக்கு அளித்தார்.  இந்திரனுக்கு சுஷிதை, எமனுக்குக் கயிலை, வருணனுக்கு ரோகிணி, குபேரனுகுக் காமதேனு என்ற பசுக்கள் தரப்பட்டன. இந்தச் செய்தி மகாபாரதத்தில் அனுசாசன பருவத்தில் உள்ளது.
--- தினமலர் பக்திமலர். மார்ச் 14, 2013. 

Tuesday, November 11, 2014

பூட்டைத் திறக்கும் புளூடூத் !

  தமிழ்நாட்டுக்கு திண்டுக்கல் பூட்டுகள் எப்படியோ,  அப்படி பூட்டு  தயாரிப்பில் உலகளவில் பிரசித்தி பெற்றது கலிபோர்னியாவைச் சேர்ந்த கிவிக் செட் நிறுவனம்.  இவர்களது தயாரிப்பான சிக்னேச்சர் சீரிஸ் வகை பூட்டுகள் மிகவும் பிரபலமானவை.  உலகின் பல நாடுகளிலும் தங்கள் மின்னணு பூட்டு தயாரிப்பு தொழிற்சாலையை நடத்திவரும் இந்த நிறுவனம், இப்போது புளூடூத் மூலம் பூட்ட திறக்கக்கூடிய மின்னணு பூட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
     ரானுவத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனத்தாரால் பெருமையுடன் குறிப்பிடப்படும் இந்தப் பூட்டுகளை வீடு அல்லது அலுவலகத்தின் கதவுடன் இணைத்து விட்டால் போதும்.
     அப்புறம் தூரத்தில் இருந்தாலும் புளூடூத் மூலம் உங்கள் ஐபோனில் குறிப்பிட்ட பொத்தானைத் தொட்டால் கதவு திறந்து விடும். அருகில் இருக்கும்போது விரல் தொடுகை மூலம் திறக்கலாம்.
     இதன்மூலம் பயனாளர் வீட்டில் இல்லாமல் இருக்கும் நேரத்தில் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு போன் மூலமே கதவைத் திறந்துவிட முடியும். இந்த நவீன பூட்டின் விலை 12 ஆயிரம் ரூபாய்.
-- தினமலர் . வாரமலர் . 19 .5 . 2013.

Monday, November 10, 2014

பஞ்ச வில்வம்.

  " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம் செழிக்கும்.  ஒரே ஒரு வில்வத்தை உள்ளன்புடன் சிவபெருமானுக்குச் சமர்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.
       கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம்.  இதனுடன் இன்னும் நான்கு இலைகளையும் சேர்த்து ஐந்து இலைகளைப் பஞ்ச வில்வம் என்பர்.  கூவிளம், நொச்சி, கிளுவை, மாவிலங்கம், விளா என்பவை அவை.
       சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு.  கிழக்கில் உள்ள முகம் தத்புருஷம், தெற்கில் உள்ளது அகோரம், மேற்கில் உள்லது சத்யோஜாதம், வடக்கில் உள்ளது வாமதேவம்.  மேலே ஒரு முகம் உண்டு.  அது ஈசானம் எனப்படும்.  இந்த ஐந்து முகங்களில் இருந்து கூவிளம், நொச்சி, கிளுவை, மாவிலகம், விளா என்பவை தோன்றின.  அது பஞ்ச வில்வங்களாயின என்பது வில்வமகாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தியாகும்.
       சிவபெருமானுக்கு விசேஷ அர்ச்சனை பஞ்சமுக அர்ச்சனையாகும்.  ஒரே சமயத்தில் 5 சிவாச்சாரியர் 5 வகையான பஞ்ச வில்வங்களைக் கொண்டு பூஜிப்பர்.  ஒரு முகத்துக்கு ஒரு இலை. இறுதியில் ஐவகையான பிரசாதங்களை நிவேதித்து ஐவர் ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வர். இது பஞ்சமுக அர்ச்சனை எனப்படும்.
--- புலவர் வே. மகாதேவன்.
-- தினமலர் பக்திமலர். மார்ச் 14, 2013.  

Sunday, November 9, 2014

கைபேசி.

    கம்பித் தொடர்பு இல்லாமல் ஒரு தொலைபேசி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை பொதுமக்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் இருந்தது.  முக்கியமாக மோட்டோரோலா நிறுவனமும், பெல் லாக்ஸ் நிறுவனமும் இது குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கின.  வென்றது மோட்டோரோலா நிறுவனம்.  அந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் கைபேசியைக் கண்டுபிடித்தார்.  அதன் எடை 2.5 பவுண்டு.  ஒன்பது அங்குல நீளமும் 1.75 அங்குல அகலமும், 5 அடி ஆழமும் கொண்டதாக அது இருந்தது.  அதில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள்தான் பேச முடிந்தது.  அதற்குள் மின் சக்தி தீர்ந்துவிடும்.  ரீசார்ஜ் செய்ய 10 மணி நேரத்தைவிட அதிகம் தேவைப்பட்டது.  1947ல் AT&T என்ற நிறுவனம்தான் கைபேசி சேவையை வணிகமயமாக்கியது.  செயின்ட் லூயி என்ற இடத்தில் விற்பனை தொடங்கியது.  விரைவில் சிறுசிறு நகரங்களுக்கும் இது பரவியது.  என்றாலும் 5000 வாடிக்கையாளர்களோடு இது நிறுத்திக் கொண்டது.
--தினமலர். சிறுவர்மலர்.  மே 17, 2013. 

Saturday, November 8, 2014

சதாபிஷேகம்.

   சதாபிஷேகம் நடத்த ஒருவருக்கு எத்தனை ஆண்டு, மாதம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்?
     சதம் என்றால் நூறு.  சதாபிஷேகம் நூறு வயது பூர்த்தியாகி செய்ய வேண்டும் என்பதில்லை.  எண்பது வயது பூர்த்தியாகுதல்,  கொள்ளுப்பேரன் பிறத்தல் அல்லது ஆயிரம் பிறை காணுதல் ஆகிய மூன்றுமே சதாபிஷேகம் செய்துகொள்ளத் தகுதியைத் தருகின்றன.  வளர்பிறையில் மூன்றாம் பிறையைக் காணுவதை சந்திர தரிசனம் என்பர்.  ஒரு ஆண்டுக்கு 13 முறை சந்திர தரிசனம் செய்யலாம்.  நினைவு தெரிந்த நாளிலிருந்து அதாவது நான்கு வயது முதல்  சந்திர தரிசனம் செய்வதாகக் கணக்கிட வேண்டும்.  76 ஆண்டுகல் 10 மாதங்கள் நிறைவடைந்தால் ஆயிரம் முறை சந்திர தரிசனம் செய்த கணக்கு வரும்.  இதனுடன் விடுபட்ட நான்கு வயதையும் சேர்த்துக் கொண்டால் 80 வயது மற்றும் 10 மாதங்கள் நிறைவடைந்த பிறகு ஆயிரம் பிறை கண்ட பேறு கிடைக்கிறதாக ( சந்திரனைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ) எண்ணி சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.  ஜன்ம நட்சத்திரத்தில்தான் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நல்ல சுபமுகூர்த்த நாளிலும் செய்யலாம்.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் . பக்திமலர். மார்ச்  14 , 2013. 

Friday, November 7, 2014

பஞ்சமி நாட்கள்.

   பஞ்சமி நாட்கள் பற்றிய விவரம்:
சைத்ர ( சித்திரை ) வளர்பிறைப் பஞ்சமி  --  லட்சுமி பஞ்சமி.
சைத்ர ( சித்திரை ) தேய்பிறைப் பஞ்சமி  --  ஸ்ரீபஞ்சமி.
வைசாக ( வைகாசி ) வளர்பிறைப் பஞ்சமி  --  ஸ்ரீசங்கர ஜயந்தி.
ஆஷாட ( ஆடி )  வளர்பிறைப் பஞ்சமி  --  ஸ்கந்த பஞ்சமி.
சிராவண ( ஆவணி )  வளர்பிறைப் பஞ்சமி  --  நாக பஞ்சமி.
சிராவண ( ஆவணி )  தேய்பிறைப் பஞ்சமி  --  கருட பஞ்சமி.
பாத்ரபத ( புரட்டாசி )   வளர்பிறைப் பஞ்சமி  --  ரிஷி பஞ்சமி.
மார்க்சித்ர ( மார்கழி )  வளர்பிறைப் பஞ்சமி  --  நாக பஞ்சமி.
மாக ( மாசி )   வளர்பிறைப் பஞ்சமி  -- வசந்த பஞ்சமி.
பால்குண ( பங்குனி )  வளர்பிறைப் பஞ்சமி  -- ரங்க பஞ்சமி.
-- தினமலர் . பக்திமலர். மார்ச்  14 , 2013.

Thursday, November 6, 2014

குட்டிக்கோள்

குட்டிக்கோள்களைக் கட்டி இழுத்து வர முடியும் !
      ஆஸ்ட்டெராய்டுகள் ( Asteroid ) என்பவை நமது சூரிய வெளியில் ( Solar System ) பெரிய மலைகளைப்போல் மிதந்து சூழ்ந்துவரும் குட்டிக்கோள்கள்
( Planet - like bodies ) பெரும் பாறைகள் !!
      இந்தப் பாறைகளில் 5,00,000 கிலோ எடையுள்ள ஒரு குட்டி ஆஸ்ட்டெராய்டை ஒரு பெரிய பையைப்போட்டுப் பிடித்து இழுத்துச் சென்று,  விண்வெளியில் ஈர்ப்புவிசைச் சமநிலை கொண்ட ஓர் இடத்தில் நிறுத்தி உபயோகப்படுத்திக் கொள்வதற்கு நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
      அதை ஒரு விண்வெளி நிலையமாக ( Space Station ) உபயோகித்துக்கொள்ள விரும்புகின்றார்கள்  நாசா விஞ்ஞானிகள். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பப் போகின்றார்கள் இல்லையா?  அப்போது பூமியிலிருந்து செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச் செல்கின்ற விண்கலம் ( ஸ்பகே க்ரஃப்ட் ) இடையில் அந்த ஆஸ்ட்டெராய்டு விண்வெளி நிலையத்தில் மறுபடியும் எரிபொருள் நிரப்பிக்கொள்ளும்!
     ஒரு 50 அடி டயாமீட்டர் உள்ள பையொன்றை அவர்கள் தயாரித்துக் கொள்ளப்போகிறார்கள்.  ஆஸ்ட்டெராய் பிடிக்கும் கலம் ஒன்றையும் உருவாக்கிக்கொள்ளப் போகின்றார்கள்.  அக்கலம் பழைய ' அட்லாஸ் v ' ராக்கெட்டினால் உந்தப்படும்.  பூமிக்கும், சந்திரனுக்கும் இடையில் ஆஸ்ட்டெராய்டு
செலுத்தப்படும்.   ஆஸ்ட்டெராய்டு நெருங்கிய தொலைவுக்கு வந்ததும் அந்த 50 அடி டயாமீட்டர் பை விண்கலத்திலிருந்துவெளியே வீசப்பட்டு ஆஸ்ட்டெராய்டைச் சுற்றி மூடிக்கொள்ளும்.  இப்படி எலியை அமுக்கிப் பிடித்ததுபோல் அந்த ஆஸ்ட்டெராய்டை மூடிக் கட்டிய பிறகு, விண்கலம் அதை இழுத்துக் கொண்டு வந்துவேண்டிய இடத்தில் விடும்!
    Courtesy:  " The Times of India "  ( " Nasa Plan : Asteroid, make it refueelling station ")
   -- தமிழில்: பல்லவசூரியன்.
   --  மஞ்சரி. பிப்ரவரி 2013.
  ---   இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.

Wednesday, November 5, 2014

' ஏசி ' தலையணை.

  ஏசி தலையணை என்றவுடன் குளுகுளு காற்றை செலுத்துமோ என்று எண்ணிவிட வேண்டாம்.  இது, அசுத்தக் காற்றை வெளியேற்றி தூய்மையான காற்றை உள் செலுத்தும் செயல்பாட்டைக்கொண்டது.
     நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டி ஜப்பானில் நடைபெற்றது.  இதில் ஆயிரத்து 700 பேர் கலந்துகொண்டனர்.  அவற்றிலிருந்து ஆயிரம் சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குரியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.  அதில் தூங்கும்போது ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தலையணையும் அடங்கும்.  இதை சீனாவின் ஜிலின் அனிமேஷன் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த மாணவர் குயிங்ஜி தயாரித்துள்ளார்.
     அலியோ என்ற செல்களால் உருவாக்கப்பட்டுள்ள இது,  பார்வைக்குச் சாதாரண தலையணை போல்ட்தான் இருக்கும்.  ஆனால், இதன் மேல் தலைவைத்து தூங்கும்போது நாம் வெளிவிடும் கார்பன் மோனாக்சைடை உறிஞ்சிக்கொண்டு,  ஆக்சிஜனை வெளியேற்றும்.  சுத்தமான காற்று கிடைப்பதால் தொந்தரவின்றி  தூங்கலாம் என்பதோடு, தூங்கி எழுந்தபின் வழக்கத்தை விட அதிகமான சுறுசுறுப்பும், உற்சாகமும் கிடைக்கும் என்கிறார் குயிங்ஜி.
-- கர்ணா.
--  தினமலர் . வாரமலர். 12 . 05. 2013. 

Tuesday, November 4, 2014

இதுவும் புண்ணியம்தான் !

  கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இறை அடியார்களை,  நம் வீட்டு விருந்தினர் போலப் பாவித்து சில பணிவிடைகளைச் செய்வதிலும் புண்ணியம் உண்டு.
     அப்படி செய்ய வேண்டிய பணிவிடைகள் எவை என தெரிந்து கொள்ளுங்கள்:
ஆசனம்  --  அமர்வதற்குத் தவிசு அளித்தல்.
பாத்யம்  --  கால் அலம்ப நீர் தரிதல்.
அர்க்யம்  --  கை கழுவ நீர் தருதல்.
ஆசமணீயம்  --  பருகுவதற்கு நீர் வழங்குதல்.
அபிஷேகம்  --  திருமுழுக்கு நீர் ஆட்டுதல்.
வஸ்திரம்  --  அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல்.
கந்தம்  --  நறுமணப் பொருட்கள் தருதல்.
புஷ்பம்  --  மலர் மாலைகள் சூட்டுதல்.
தூபம்  --  அகில், சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல்.
தீபம்  --  ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல்.
      இப்படி பல வகையான பணிவிடைகள் செய்வதும்,  கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நாம் வாழும்போதே தேடிக் கொள்ளும் புண்ணியச் செயல்களாகும்.
-- தேவராஜன்.
-- தினமலர் . வாரமலர். 12 . 05. 2013.

Monday, November 3, 2014

புலியோ புலி

  சிவபெருமானுக்கும் புலிக்கும் தொடர்பு அதிகம். புலி தொடர்பான சில கேள்விகள் இதோ:...
     இது சிவ சஞ்சரியில் உள்ள விடுகதை.
1.  ஒரு புலியைச் சூடினான்.அது என்ன புலி?
2.  ஒரு புலியை உடுத்தினான் அது எந்த புலி?
3.  ஒரு புலியை அணிந்தான் அது எந்தப் புலி?
4.  ஒரு புலி மகிழ ஆடினான் அது எந்தப் புலி?
5.  ஒரு புலிபோன்ற பாதத்தான் அது எந்தப் புலி?
6.  ஒரு புலியைத் தாங்கினான் அது எந்தப் புலி?
விடை:
1. சூடிய புலி அம்புலி ( சந்திரன் ).   2.தருகாவன முனிவர் ஏவிய புலியின் தோலை ஆடையாக அணிந்தான்.  3. சிவன் அணிந்தது புலிநகக் கொன்றை மலர்.
4. சிவன் ஆடக் கண்டு மகிழும் முனிவர் புலிக்கால் முனிவர் ( வியாக்ரபாதர் ).  5. தாமரை போன்ற பாதத்தை உடையவன் புண்டரீகம். மரை -- புலி எனப்
பொருள்படும்.  6. சண்ட- தாண்டவத்தில் புலியை மானைப்போல ஏந்தியாடுவான்.
-- தினமலர் பக்திமலர் . மார்ச் 28,  2013. 

Sunday, November 2, 2014

ஐபோனுடன் இணைக்கக்கூடிய வாட்ச்.

 கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள கேசியோ, புளுடூத் மூலமாக ஐபோனுடன் இணையும் வகையில் புதிய வாட்ச்சை அறிமுகப்படுத்தி உள்ளது.
     இந்த புதிய வாட்ச் பல பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டது. இந்த வாட்ச், இங்கமிங் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் வந்தால் அலர்ட் கொடுக்குமாம்.
     மேலும் போன் பைண்டர் என்ற பெயரில் ஒரு வசதி உள்ளது.  அதன்படி, வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்தினால், போனில் அலாரம் அடிக்குமாம். மேலும் ஐபோனுடன் உள்ள இணைப்பு துண்டிக்கும்போது, வாட்ச் வைப்ரேட் ஆகுமாம். இதன் மூலம் போன் திருடுப்போவது மற்றும் தவறி கீழே விழுவதை தவிர்க்க முடியும்.
     இதைத்தவிர, பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் ரெகுலர் அப்டேட்டுகளுக்கு அலர்ட் தருமாம். இதில் உள்ள பட்டனின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஜிபி -5600 ஜிபி -   6900  ஏபி என வகையான மாடல் வாட்சுகளை கேசியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.9,995 ஆகும்.
     இந்த வாட்சின் புளுடூத் ரேஞ் அலவு 2 மீட்டர் வரை இருக்கும் என்றும் 100 நகரங்கள் மற்றும் 35 டைம் சோன் உள்ளடக்கிய உலக நாடுகளில் உள்ள நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி, பகல் நேரத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்தும் வசதி என பல சிறப்பம்சங்களை கொண்டது என்று கேசியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
--- தினமலர் . 11 . 5. 2013. 

Saturday, November 1, 2014

ஓம் ஒலிக்கும் ஊர்க் கடிகாரம்.

 லண்டன் மாநகருக்கு விஜயம் செய்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்ப்பது ' பிக்பென் ' ( Bigben ) எனப்படும் மிகப்பெரிய கடிகாரம்.  ஆனால், பெங்கர் நகருக்கு விஜயம் செய்பவர்களில் பெரும்பான்மையோர், பார்க்காமலேயே இருக்கும் ஒரு ' பிக் பென் ' இருக்கிறது. லண்டன் கடிகாரத்திற்கு இணையான இந்தக் கடிகாரம், நமது உள்நாட்டுத் தொழில் நுணுக்க விற்பன்னர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் நாமனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
     பெங்களுரூ ராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ள ஓம்கார் ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள இந்தப் பெரிய கடிகாரத்தை வடிவமைத்தது,எச்.எம்.டி. என, சுருக்கமாக அழைக்கபடும் ' இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் ' எனும் அரசு சார்ந்த தொழிற்சாலை.  ஒவ்வொரு மணி நேரத்தின் போதும் ' ஓம் ' எனும் நாதஒலி எழுப்பி, பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் பரவசமூட்டும் கடிகாரம் இது.
     'ஓம்கார் மலை' என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மீது 2002ஆம் ஆண்டு  ஜனவரி 30 இந்த கடிகாரம் நிறுவப்பட்டது. இந்த குன்றின் உச்சிக்குப் போய்விட்டால், தெற்கு பெங்களூர் நகர் முழுவதையும் பார்த்துவிட முடியும்.
     கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கடிகாரத்தின் குறுக்களவு ( விட்டம் ) 24 அடி. தரையிலிருந்து 40 அடி உயரத்தில் 9 ச.அடி குறுக்களவு கொண்ட இரண்டு பெரிய தூண்களின் மீது பொருத்தப்பட்டுள்ளது, இந்த ராட்சஸ கடிகாரம்.  இந்த ' பிக்பென்' கடிகாரத்த்தின் எடை 500 கிலோ,  நிமிட முள், மணி முள் ஒவ்வொன்றின் எடையும் 40 கிலோ. இந்த 'பிக்பென்' எனப்படும் ராட்சஸ கடிகாரம் அமைக்க, சுமார் பத்து லட்ச ரூபாய் செலவாயிற்று.
-- ஜனகன்,
-- மஞ்சரி. பிப்ரவரி 2013.
---  இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

Friday, October 31, 2014

செல்போன் சாகசம்.

   ' ஸ்மார்ட்' ஃபோனின் புதிய பயன்பாடு வியப்பில் ஆழ்த்துகின்றன.
      ஸர் கிரஹாம்பெல் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த தொலைபேசி தற்போது எவ்வளவோ முன்னேற்றம் கண்டு இப்போது நாம் எங்கிருந்தாலும் தொடர்புகொள்ளும் வகையிலும் இன்னமும் பார்க்கப்போனால் டி.வி, ஸ்கிரீன் போலவும் செயல்படுகிறது.
      இப்போது ஒரு ஜப்பானிய நிறுவனம் ஸ்மார்ட் ஃபோனுக்கு இன்னுமொரு பயன்பாட்டையும் கொண்டுவந்துள்ளது!
      மேலை நாட்டு முறையில் அமைக்கப்பட்டுள்ள ' டாய்லெட் ஸீட் ' களைக் கூட இந்த ஸ்மார்ட் ' ஃபோன் ,மூலமாகத் திறக்கவும், மூடவும், பிளஷ் செய்யவும் இயலும்.
      இதற்கான பிரத்யேகமாகஸ் செய்யப்பட்ட ' டாய்லெட் ' ப்ளூடூத் ( Blue Tooth ) உடன் கூடியது. இதனால் இதுவாகவே டாய்லெட்டின் மூடியைத் திறக்கவும், பிளஷ் செய்யவும், பிறகு மூடவும் இந்த 'ஸ்மார்ட்' போனுக்கு செய்தி அனுப்பி விடுகிறது.  கிருமி நாசினிகளைத் தெளிக்கவும் சொல்கிறது.
      இதனால் ' டாய்லெட்' க்குச் செல்லுமுன்பே இதன் மூடியைத் திறக்கச் செய்யுமாறு இந்த ஸ்மார்ட் ஃபோனை வைத்திருப்பவரால் முடியும். டாய்லெட்டிலிருந்து, ஒருவேளை அதன் மூடியை மூடாமல் மறந்து போய் வந்துவிட்டாலும், இந்த போன் மூலமாக அதை மூடவும் செய்யலாம்.
--- சுமன்.
-- மஞ்சரி. பிப்ரவரி 2013.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

Thursday, October 30, 2014

7 சிரஞ்சீவிகள்!

   என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைபடுகின்றனர்.  ஆனால், பிணி, மூப்பு, சாக்காடு கேட்காமலேயே வந்துவிடுகிறது.  இந்த மூன்றும் தங்களுக்கு அண்டாமல் இருந்தவர்கள் என்றும் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் ஏழு பேர்.  அவர்களுடைய பெயர்கள்:
      அஸ்வத்தாமா, பலி, வியாசர், அனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர்.  மேலும், சிவனால் சிரஞ்சீவி ஆக்கப்பட்டவர் மார்க்கண்டேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
-- - தினமலர் பக்தி மலர்.மே 9, 2013. 

Wednesday, October 29, 2014

ஐந்தும், ஆலமர் செல்வனும்...

   சமய உலகில் சில எண்களுக்கு முக்கியத்துவம் உண்டு.  5, 8, 16, 32, 64 போன்றவை அவை.  சிவபெருமானின் முகங்கள் ஐந்து.  மந்திர எழுத்துக்கள் ஐந்து,  பூதங்கள் ஐந்து என ஐந்தின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
     மரங்களிலும் பஞ்ச தருக்கள் என ஐவகை மரங்களுக்குரிய பெருமைகள் புராணங்களில் பேசப்பட்டுள்ளன.  சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து தோன்றிய மரங்கள் பஞ்ச வில்வங்கள் .  அவை கூவிளம், நொச்சி, மாவிலங்கை விளா, வள்ளி முதலியன.
     ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பவர் சிவன். சிவபெருமான் ஐந்து ஆலமரங்களுக்கிடையில் வீற்றிருக்கும் இடம் பஞ்சவடி..  கோதாவரி  தீரத்தில் இருந்த பஞ்சவடியில் ராமர் வனவாச காலத்தில் வசித்தார் என்பது இதிகாச தகவல்.
    பல்லவம் என்றால் தளிர் என்று பொருள்.  அத்தி, அரளி, மா, வெண்ணாவல் இலைகளைப்  பஞ்ச பல்லவம் என்பர் வைதிகர். பஸ்மாசுரனுக்கு அஞ்சி நடித்த சிவபெருமான் ஒளிந்த காடு அஒவேலங்காடு எனப் புராணத்தகவல் உண்டு.  நாகலிங்கப்பூவில் ஒரு லிங்கத்தின் தோற்றம் இருக்கும். ஐவேலங்காட்டில் ஐந்து லிங்கங்கள் காட்சி தரும் ஒருவகைக்கொடி உண்டு. அபூர்வமாகக் காணப்படும் இக்கொடி, உப்பு வேலூரில் உள்ளது.
-- புலவர் வே. மகாதேவன்.
-- தினமலர் பக்தி மலர். ஏப்ரல் 4, 2013.

Tuesday, October 28, 2014

பற்கள்.

" 18 வயசுக்கு மேலும் நமக்குப் பற்கள் முளைக்கும் என்று கேள்விப்பட்டேன் அது நிஜமா?"
" குழந்தை பிறந்ததில் இருந்து இரண்டரை அல்லது முன்று வயது வரை 20 பற்கள் முளைக்கும்.  பால் பற்கள் எனப்படும் இவை,  குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொன்றாக விழத்தொடங்கிப் புதிய பற்கள் முளைக்கும்.  இவையே நிலையாக இருக்கும்.  இந்தக் காலகட்டத்தில் நமது வாயும் வாய்த்தாடையும்    விரிவடைவதால்,  அந்த இடங்களில் மேலும் புதிய பற்கள் முளைக்கின்றன.  18 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் கடைவாயில் கடைசியாக நான்கு பற்கள் தோன்றுகின்றன.  இந்தக் கடைவாய்ப் பற்களுக்கு ' ஞானப் பற்கள் ' என்றும் ' அறிவுப் பற்கள் ' என்றும் பெயர் இருக்கிறது.  இது ஓர் அழகுக்காக வைத்த பெயர்களே.  மற்றபடி அறிவுக்கும் இந்தப் பற்களுக்கும் சம்பந்தம் இல்லை.
-- ஹாசிப்கான்.
-- மை டியர் ஜீபா!  கேள்வி பதில் .  சுட்டி விகடன். 15 . 06. 2012
-- இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால். 

Monday, October 27, 2014

ஒருவனை அறிந்து கொள்ள...

" ஒருவனை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?"
" கலீல் கிப்ரான் கூறுகிறார்...
' ஒருவனின் உண்மை இயல்பு
  எதைச் சொல்கிறான் என்பதில் இல்லை;
  எதை மறைக்கிறான் என்பதில் உள்ளது.
  அவனை அறிந்துகொள்ள
  அவன் சொல்வதைக் கேளாதே;
  எதைச் சொல்லாமல் மறைக்கிறான்
  என்பதை உணர்க !' "
-- டி.என்.போஜன், ஊட்டி.
-- நானே கேள்வி... நானே பதில்!..  ஆனந்த விகடன். 01.05.2013  

Sunday, October 26, 2014

ஐந்தரைக் கிலோவில் தங்கக்கட்டி.

 ஆஸ்திரேலியா கண்டம் இங்கிலாந்தின் கைதிகளுடைய இருப்பிடமாக இருந்தது.  1848ஆம் ஆண்டு அங்கே தங்கம் கிடைப்பதாகத் தெரிய வந்ததும்,  பல ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறி, தங்கம் தோண்டி எடுப்பதில் முனைப்புக் காட்ட ஆரம்பித்தனர்.  ஏற்கனவே அங்கே இருந்த பிரிட்டிஷ் கைதிகளும் இவ்வாறு தங்கம் எடுத்து, பெரும் செல்வந்தர்களாகத் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து வசதியான வாழ்க்கையை மேற்கொண்டனர்.
     ஆஸ்திரேலையாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லாராட் (  Ballarat )  என்ற ஊரில் பெருமளவு தங்கம் தற்போது கிடைத்தது.
     பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே 2.8 கிலோ எடையுள்ள தங்கக் கட்டி ஒன்று கிடைத்ததாம்.  இப்போது 18.1.2013 அன்று ஒர் அதிஷ்டசாலிக்கு ஐந்தரை கிலோ எடை கொண்ட ஒரே தங்கக் கட்டி கிடைத்திருக்கிறது.  இதன் அளவு 220 மி.மீட்டர், 140 மி.மீட்டர், அகலம் 4.5 மி.மீட்டர்.  இதைப் படத்தில் பார்த்தால் மான் போன்ற மிருகத்தின் தலைபோலத் தோன்றுகிறது.  இந்த அதிஷ்டசாலியின் பெயரை வெளியிடவில்லை.
     இவர் தங்கம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அறிவிக்கும் ஒரு கருவியை எடுத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.  அப்போது இலைச்சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் இக்கருவியில் இருந்து சப்தம் கேட்கத் துவங்கியது.  அவர் அந்த இலைச்சருகுகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்.  அப்போது பளபளவென்று மின்னியவாறு ஏதோ உலோகம் தெரியவும் அந்தப் பொருளை எடுத்துக் கழுவிப் பார்த்தபோது இத்தனை பெரிய தங்கக்கட்டியாக இருக்கவே அப்படியே பிரமித்துப் போய்விட்டார்.  அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.
     இந்த அளவு எடையுள்ள தங்கத்தின் மார்கெட் விலை 2,82,000 ஆஸ்திரேலியன் டாலர்தான்.  ஆனாலும் இந்த அளவிற்கு ஒரே கட்டித் தங்கமாக இயற்கையாகக் கிடைத்துள்ளதால் இதன் மதிப்பு 3,00,000 டாலருக்கு மேல் இருக்கும் என்கிறார்கள் ,  அமெரிக்க டாலர் மதிப்பு 3,15,000 இருக்குமாம்.
     ' கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் ' என்பார்கள்.  இந்த ஆஸ்திரேலிய அதிர்ஷ்டசாலி விஷயத்தில்  'கொடுக்கிற தெயவம் பூமியைப் பிளந்து கொடுக்கும்' .என்பது போல் உள்ளது.
-- Source & Courtesy : " The Hindu ". தமிழில்: டி.எம்.சுந்தரராமன்.
-- மஞ்சரி. மார்ச் 2013.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்   

Saturday, October 25, 2014


ஸ்னோ கிரீம்,

ஸ்னோ  கிரீம்  செய்வது  எப்படி?
     10  கிராம்  ஸ்பெர்மாசிட்டி,  1  கிராம்  சுத்தமான  மெழுகு,  500  கிராம்  ஆயில்  ஆப்  சுவீட்  ஆமண்ட்,  50  கிராம்  பன்னீர்  போன்றவை  போதும்.
     ஒரு  பாத்திரத்தில்  ஸ்பெர்மாசிட்டி,  மெழுகு  போன்றவற்றை  போட்டு  உருக்க  வேண்டும். நன்றாக  உருகிய  பிறகு,  ஆயில்  ஆப்  ஸ்வீட்  ஆமண்ட்,  பன்னீரை  சேர்த்து  நன்றாக  கலக்க  வேண்டும்.  கிளறிக்கொண்டே  இருந்தால்  கெட்டிப்படும்.  அப்போது  கலவையை  கீழே  இறக்கி  நன்றாக  கிளறிக்கொண்டே  இருந்தால்  ஆறிவிடும்.  இப்போது  ஸ்னோ  க்ரீம்  ரெடி.
---தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012. 

' அசர்' போடும் கல்விக் குண்டு !

  Annual Status of Educatin Report  என்பதன் சுருக்கமே அசர் ( ASER ).
    கடந்த ஜனவரி மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு வெளியிட்ட அசர் அறிக்கை,  ' தமிழகத்தில் 35 சதவிகிதம் 5 - ம் வகுப்பு மாணவர்களாலும் 13 சதவிகிதம் 8 - ம் வகுப்பு மாணவர்களாலும் 1 - ம் வகுப்பு, 2 - ம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல்களைக்கூடப் படிக்க முடியவில்ல' என்கிறது.  8 - ம் வகுப்பைச் சேர்ந்த 17 சதவிகித மாணவர்களால் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளை ( smaall letters )  படிக்க முடியவில்லை.  62 சதவிகித மாணவர்களால் மூவிலக்க எண்களை ஓரிலக்க எண்ணால் வகுத்துக் கூற முடியவில்லை என்றெல்லாம் கல்விக் குண்டுகளைத் தூக்கிபோடுகிறது அசர்.  தமிழகம் மட்டுமல்ல, முழு இந்தியாவின் கதியும் இதுதான்.
--டி.அருள் எழிலன், ஆனந்த விகடன். 1. 5 .2013.    

Friday, October 24, 2014

அறிவோம்! தெளிவோம்!

 கோயிலில் பின்னமான உருவம் கொண்ட தெய்வ சிலையை வணங்கலாமா?
    தெய்வ சிலையின் உருவத்தை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.  1. அங்கம்,  2. உபாங்கம்,  3. பிரத்யங்கம்.
    கை, கால், விரல்கள், ஆயுதங்கள், கிரீடம் போன்றவை பிரத்யங்கங்களாகும்.  இவற்றில், பின்னம் இருந்தால் தோஷமில்லை.  தொடர்ந்து வழிபாடுகள் செய்து கும்பாபிஷேகத்தின் போது சரி செய்து கொள்ளலாம்.  கை, கால், தலை முதலியன உபாங்களாகும்.  இவற்றில் பின்னம் ஏற்பட்டால் உடன் சரிசெய்து , பிராயசித்த கும்பாபிஷேகம் செய்து வழிபாட்டைத் துவங்கலாம்.
    முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, தொடை முதலியன முக்கிய அங்கங்களாகும்.  இவற்றில் சரிசெய்ய முடியாத பின்னம் ஏற்பட்டால், வேறு விக்கிரகம் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.  இந்த விதிகள் பொதுவானவை.  எவ்வளவு பின்னம் ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு வழியில் சரிசெய்து பூஜை வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் பக்திமலர். ஜூலை 18, 2013.  

Thursday, October 23, 2014

வடக்கு வாழ்கிறது!

  இந்த உலகம் வடகோளம், தென்கோளம் எனப் புவியியல்ரீதியாக மட்டும் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.  வடகோள நாடுகள், தென்கோள நாடுகளைப் புவியியல்ரீதியாகச் சுரண்டி வாழ்கிறது.  அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், தென்கோள நாடுகளின் நீர்வளத்தைக் கணக்கில்லாத வகையில் உறிஞ்சி எடுக்கின்றன.  வடகோளத்தில் பிறந்த ஒரு குழந்தை தென்கோளத்தில் பிறந்த குழந்தையைவிட, 40 முதல் 70 மடங்கு அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துகிறது.  உலகம் முழுவதுமே வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!
-- மாட் விக்டோரியா பார்லோ ( தமிழில்: சா.சுரேஷ் )  எழுதிய ' நீராதிபத்தியம் நூலிலிலிருந்து .
-- ஆனந்த விகடன், 17. 7.2013 . 

Wednesday, October 22, 2014

" பொதுநலம் "

" பொதுநலம் என்றால் என்ன?"
     " ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரிகியூரி அம்மையாரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர்  ' உங்களுக்கு வேண்டியதைக் கேட்கச் சொன்னால் என்ன கேட்பீர்கள்? ' என்று கேட்டார்.  அதற்கு மேரிகியூரி ' எனது ஆராய்ச்சியைத் தொடர ஒரு கிராம் ரேடியம் தேவைப்படுகிறது; ஆனால், அது ஒரு லட்சம் டாலர் விலை என்பதால் என்னால் வாங்க முடியவில்லை ' என்றார் ஏக்கத்துடன்.  அந்த பத்திரிகை ஆசிரியை அமெரிக்கா சென்று ஒரு குழு அமைத்து, பொதுமக்களிடம் நிதி திரட்டினார்.  அந்தப் பணத்தில் ஒரு  கிராம் ரேடியம் வாங்கி அமெரிக்க ஜனாதிபதி கையால் மேரிகியூரிக்கு அளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.  அந்த நிகழ்ச்சியில் ரேடியத்தை வழங்கும் பத்திரத்தைப் படித்துப் பார்த்த மேரிகியூரி தனது பெயருக்கு எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்.  அதைத் தனது ஆராய்ச்சி நிறுவனப் பெயருக்கு மாற்றி எழுதச் சொன்னார் மேரிகியூரி.  அந்த ரேடியம் தனக்குப் பின் தம் சந்ததியினரின் உடமை ஆகிவிடக் கூடாது என்பதில் மேரி கவனமாக இருந்தார்.  அந்தக் கவனம் தான் பொதுநலம் !"
-- ஹெச்.பாஷா, சென்னை - 106.
-- நானே கேள்வி... நானே பதில் !  ஆனந்த விகடன் . 10 . 7 . 2013.  

Tuesday, October 21, 2014

தந்தி சேவை!

 160 ஆண்டுகால தந்தி சேவை முடிவுக்கு வந்தது.
     இறுதி நாளில் பலர் ஆர்வமுடன் தந்தி அனுப்பினர்.
     சென்னை, ஜூலை 15-  இந்தியாவில் 160 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த தந்தி சேவை நேற்றுடன் ( 14.7.2013 ) முடிவுக்கு வந்தது.  இறுதி நாளில் பலர் ஆர்வமுடன் தந்தி அனுப்ப வந்தனர்.
     இந்தியாவில் தந்தி சேவை 1850 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாக் தொடங்கப்பட்டது.  கோல்கத்தாவில் இருந்து டைமண்ட்  துறைமுகத்துக்கும்  கிழக்கு இந்திய கம்பெனிகளுக்கும் இடையே முதல் தந்தி சேவை அளிக்கப்பட்டது.  1853ம் ஆண்டு நாடு முழுவதும் 64 ஆயிரம் கி.மீ, தூரத்துக்கு தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது.  தொடர்ந்து வெளி நாடுகளுக்கும் தந்தி சேவை அளிக்கும் வகையில் விவாக்கம் செய்யப்பட்டது.  தபாலைவிட வேகமாக வரும் என்பதால் தகவல் பரிமாற்றத்தில் தந்தி மிக முக்கிய இடத்தைப்பிடித்தது.  ஆரம்ப காலங்களில் விஞ்ஞானி ' மோர்ஸ் ' அறிமுகப்படுத்திய கருவி மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன.
     நம் நாட்டில் தொடக்க காலத்தில் தபால்துறை தந்தி சேவையை நடத்திவந்தது.  1986ம் ஆண்டு முதல் தந்தி சேவையை பிஎஸ்என்எல் நிர்வகித்து வருகிறது.
     ஆயினும் மக்களிடம் வரவேற்பு இல்லாதது, நஷ்டத்தை சந்திப்பதாகக் கூறி தந்தி சேவையை நாடு முழுவதும் ஜூலை 14 ம் தேதியுடன் நிறுத்த பிஎஸ்என்எல் அறிவித்தது.  அதன்படி தந்தி சேவை முடிவுக்கு வந்ததால், இதுவரை தந்தி சேவையை பயன்படுத்தாதவர்களும் தந்தி அலுவலகங்களுக்கு சென்று தங்கள் உறவினர்கலுக்கும், நண்பர்களுக்கும் தந்தி அனுப்பி மகிழ்ந்தனர்.
-- தினமலர். 15 . 7 . 2013.  

Monday, October 20, 2014

வலிமையான ஆயுதம்!

 " உலகில் வலிமையான ஆயுதம் எது?"
" ' ஜனசக்தி ' இதழ் தாங்கி வரும் வரிகள் இவை:
  ' தொட்டுப் பார்த்தால் காகிதம்.
    தொடர்ந்தௌ படித்தால் ஆயுதம்' !"
-- சுரா.மாணிக்கம், கந்தர்வக்கோட்டை.

     " உயிர் கொடுப்பது மருத்துவர் சேவை... அறிவு கொடுப்பது ஆசிரியர் சேவை... இதில் எது உசத்தி?"
 " மருத்துவத் தொழில், ஒருவன் பிணமாகாமல் பார்த்துக்கொள்கிறது,
   ஆசிரியர் தொழில், ஒருவன் நடைபிணமாகாமல் பார்த்துக் கொள்கிறது!"
-- முத்தூஸ், தொண்டி.
-- நானே கேள்வி...நானே பதில்!  ஆனந்த விகடன், 17. 7.2013 .

Sunday, October 19, 2014

ஆறு அபிஷேகங்கள் !

அபிஷேகப் பிரியருக்கு ஆறே அபிஷேகம்!
     கோயில்களில் தினந்தோறும் நடைபெறுவன நித்திய பூஜைகள்,  சிறப்பு விழாக்கள் நைமித்திய பூஜைகள் எனப்படும்.
     பழமையான வழிபாட்டுச் சிறப்புப் பெற்ற கோயில்களில் தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடக்கும்.  இவை, முதல்காலம் ( காலை 6 மணி ), காலசந்தி ( காலை 9 மணி ), உச்சிக்காலம் ( 12 மணி ), சாயரட்சை ( மாலை  6 மணி ) , உபசந்தி ( இரவு 8 மனி ) , அர்த்தஜாமம் ( இரவு 9 மனி ) என்பன.
     சிவபெருமானை அபிஷேகப்பிரியர் என்பர்.  எனினும் நடராஜர் திருமேனிக்கு ஓர் ஆண்டில் ஆறே ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடக்கும்.  மற்ற நாட்களில் அபிஷேகம் செய்வதில்லை.  ஆறு அபிஷேக காலங்களூம் தினசரி நடக்கும் ஆறு காலங்களுடன் தொடர்புடையவையே ஆகும்.
முதல் காலம்:
     தேவர்களுக்கு விடியற்காலம் மார்கழி மாதம்.  தட்சிணாயண நிறைவு மாதமான மார்கழி மாதம், திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நடைபெறும்.  பின்னிரவு 3 மனிக்கு அபிஷேகம் கொள்வார்.  பிராத ( முதல் ) காலம் எனப்படும்.  நிதிய பூஜைக்குச் சமமானது இது. ஆறு ஆதார பூஜைகளில் இது மூலாதார பூஜை எனப்படும்.
இரண்டாம் காலம்:
      மாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி ( 14வது ) திதி அன்று இரவு 7 மணி அளவில் நடைபெறும்.  ஆதாரங்களில் சுவாதிஷ்டான பூஜை.
உச்சிக்காலம்:
      சித்திரை மாதம் திருவோண நட்சத்திர நாளில் நிகழும். இதனை மனிபூரக பூஜை எனலாம்.
சாயுங்கால பூஜை:
      ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாள் இரவில் நடைபெறும்.  ஆனித் திருமஞ்சனம் சாயுங்கால பூஜை.  இது சந்தியாகாலம்.  இது அநாகத பூஜையாகும்.
உபசந்தி காலம்:
      ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்திசி நாள் இரவு 7 மணியளவில் நடைபெறும்.  உபசந்திகால விசுத்தி பூஜையாகும்.
அர்த்தசாமம்:
      புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி இரவு 7 மணி அளவில் நடைபெறும்.  ஆக்ஞா பூஜையான அர்த்த சாம பூஜை எனலாம்.
-- தினமலர். பக்திமலர். ஜூலை 11, 2013. 

Saturday, October 18, 2014

விசித்திர கிரகம்!

கண்ணாடி மழை பொழியும் விசித்திர கிரகத்தின் நிறம் நீலம்!
     வாஷிங்டன்:  2005ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட  ' கண்னாடி ' மழை பொழியும் விசித்திர கிரகத்தின் நிறம் நீலம் என, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
     பூமியில் இருந்து 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விசித்திர கிரகம் 2005 அக்டோபர் 6ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.  அதற்கு, ' எச்டி 189733பி என்று பெயரிடப்பட்டது.  ஒரு நொடிக்கு 152.5 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும் இந்த கிரகம், ஒரு நட்சத்திரத்தை 2.2 பூமி நாட்களில் சுற்றி சுழன்று வருகிறது.  வாயு கிரகமான இதன் வளிமண்டல வெப்பநிலை, ஆயிரம் டிகிரி செல்சியஸை விட அதிகம்.
     இந்த கிரகம் நீல நிறத்தில் இருப்பது, இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நாசா மற்றும் ஈஎல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்சத்திர மண்டலங்களைச் சேர்ந்த 723 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதில் ஒன்றான எச்டி 189733பி கிரகத்தின் நிறம் நீலம் என இப்போது கண்டறியப்பட்டுள்ளது.  விண்வெளியிலிருந்து நமது பூமியைப் பார்த்தால், நீல நிறக் கோளமாகக் காட்சியளிக்கும்.  இதற்கு, பூமியில் உள்ள கடல்களால் ஏற்படும் ஒளி பிரதிபலிப்புகள் காரணம்.
     எச்டி 189733பி கிரகமும் நீல நிறத்தில் ஒளிர்கிறது.  அது வாயு கிரகம் என்பதால், அதில் கடல்கள் கிடையாது.  அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து மணிக்கு 7 ஆயிரம் கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.  அதன் ஊடாக கண்ணாடி ( சிலிக்கேட் )  மழையும் பொழிந்து கொண்டிருக்கிறது.  கண்ணாடி துகள்களால் ஏற்படும் பிரதிபலிப்புகள்தான், இந்த கிரகத்துக்கு நீல நிறத்தை அளித்துள்ளன.  ஒரு வெளி கிரகத்தின் உண்மையான நிறம் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
-- தினமலர். 13.7.2013.  

Friday, October 17, 2014

உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம்!

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் என்ன வேறுபாடு?
     உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்க முடியும்.  ஆனால், உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் மட்டும்தான் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியும்.  தவிர இரு மாநிலங்களுக்கு நடுவிலோ, இந்திய அரசுக்கும் ஒரு மாநிலத்துக்கும் இடையிலோ பிரச்சனைகள் உண்டானால், அதைத் தீர்க்கும் அதிகாரம்  உச்சநீதிமன்றத்திற்குத்தான் உண்டு.  அடிப்படை உரிமைகளைக் காப்பதில்   உச்சநீதிமன்றம் தானாகவே ஆணையிடலாம்.
     சிவில் வழக்காக இருந்தாலும், கிரிமினல் வழக்காக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கேள்விகள் எழ்ந்தால்,
 உச்சநீதிமன்றம் தலையிடலாம்!
---தினமலர் சிறுவர்மலர். ஜூலை 12, 2013. 

Thursday, October 16, 2014

பெரிய கிரகம்...

பெரிய கிரகம்...குறைந்த அடர்த்தி !
     சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் என்ற பெருமையைப் பெற்றது வியாழன்.  ரோமானிய ஆட்சி கடவுளான  ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
     சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள கிரகம், விண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடுத்தபடியாக பிரகாசமாகத் தெரியும் கிரகம்.  வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகம்.  இதன் துணைக் கிரகங்களில் இதுவரை 28 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
     இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது.  இந்த வாயுக்களின் பிரதிபலிப்பால்தான் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது.  ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால், பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.
     கடந்த 1995 ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய கலீலியோ விண்கலத்தில் இருந்த சென்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.
---தினமலர் சிறுவர்மலர். ஜூலை 12, 2013.

Wednesday, October 15, 2014

லிப்ஸ்டிக் வேண்டாம்!

 சாதாரணமாக லிப்ஸ்டிக்கில் 9 வகையான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றது.  மனித உடல் சராசரியாக ஏற்றுக்கொள்ளும் அளவை விட 20 சதவிகிதம் அதிகமான அலுமினியம், காட்மியம், ஈயம், மாங்கனீஸ், குடல் புற்றுநோய்க்கு காரணமான குரோமியம் உட்பட பல உலோகங்கள் சேர்க்கப்படுகிறது. மேலும், நீண்ட நாட்கள் நீடிக்கும் வகையில் இதில் சிந்தெட்டிக் ரசாயனம் கலக்கப்படுவதால், இது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.
     முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை அறவே தவிர்த்தல் நல்லது.  ஏனெனில் இதில் உள்ள ஈயம் மற்றும் பல்வகை ரசாயனங்கள் கர்ப்பப்பையை பாதிப்பதுடன் குழந்தையின் உறுப்புகளையும் சேர்த்து பாதிக்கும்.
      மேலும், உடலுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் டிரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது.  இது மூளையில் இருந்து தகவல்களை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை கட்டுப்ப்படுத்தி, உடலின் உள்ளே சென்ற 20 நிமிடத்திலேயே இதய செயல்பாடுகளை படிப்படியாக குறைத்துவிடுகிறது.  இதனால் மாரடைப்பு, படபடப்பு ஏற்பட்டு உடல் உள் உறுப்புகளை செயலிழக்க வைக்கிறது.  லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கிறது ஒரு ஆய்வு.
-- ரா.உ. இந்துமதி,  தினமலர். பெண்கள்மலர். 6 . 7 . 2013. 

Tuesday, October 14, 2014

ஆப்பிள் கம்ப்யூட்டர்

முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ரூ,2.32 கோடிக்கு ஏலம் !
     லண்டன்: ஸ்டீவ் ஜாப்ஸும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1976ம் ஆண்டில் தொடங்கிய ' ஆப்பிள் ' நிறுவனம்தான்,  கம்ப்யூட்டர்  புரட்சியைத் தொடங்கி வைத்தது.  இந்த நிறுவனம், முதலில் ' ஆப்பிள் - 1 ' ரக கம்ப்யூட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்தது.  முதலாவது ஆப்பிள் - 1  கம்ப்யூட்டரை, ஸ்டீவ் ஜாப்ஸின் நண்பரும் கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானியுமான ஸ்டீவ் வோர்னியாக் உருவாக்கினார்.  இந்த கம்ப்யூட்டரின் மதர்போர்டு பொருத்தப்பட்டுள்ள மரப்பலகையில், வோர்ஜ்னியாக் கையெழுத்திட்டுள்ளர்.
     ' ஆப்பிள் 01-.0025 ' என்ற எண் கொண்ட இந்த கம்ப்யூட்டரை, இணைய தளம் மூலம் லண்டனின் கிறிஸ்டி ஏல மையம் ஏலமிட்டது.
      ஒருவர், 3.87 லட்சம் டாலருக்கு ( ரூ. 2.32 கோடி ) ஏலம் எடுத்துள்ளார்.  இந்த தகவலை வெளியிட்டுள்ள கிறிஸ்டி மையம், ஏலமெடுத்தவர் பற்றிய தகவல்களை  அறிவிக்கவில்லை.
-- தினமலர் , 12.7.2013.      

Monday, October 13, 2014

கம்ப்யூட்டர் மவுஸ்

கம்ப்யூட்டர் மவுஸ் உருவாக்கிய எங்கல்பார்ட் மரணம்.
     முதல் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியவர். இன்டர்நெட் தொகுப்புக்கு யோசனை தெரிவித்தவர், ஆராய்ச்சியாளர் டக்ளஸ் எங்கல்பார்ட். 2. 7 .2013 செவ்வாய்க்கிழமை இரவு மரணமடைந்தார்.
     அவருக்கு வயது 88.  அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் ரேடியோ ரிப்பேர் செய்பவரின் மகனாக 1925 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிறந்தவர்.
மவுஸ் தயாரிப்பு.
     1961 ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொடர்பான ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிவந்ததும், கம்ப்யூட்டர் துறைக்கு உதவியாக சில சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் எங்கல்பார்ட் ஈடுபட்டார்.
     அப்போது ' கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் எக்ஸ் - ஒய் பொசிஷன் இண்டிகேட்டர் ' கருவியை அவர் டிஸைன் செய்தார்.  அதை தயாரிக்கும் பணியை பில் இங்கிலிஸ் என்ற சக இஞ்சினியரிடம் அவர் ஒப்படைத்தார். கம்ப்யூட்டர் வைக்கும் மேஜைக்கு அடியில் பொருத்தி, முழங்கால் கொண்டு இயக்கும் கருவியாக அது முதலில் தயாரிக்கப்பட்டது.  ஆனால், கடைசியில் டேபிள்டாப் மவுஸ் ஆக அது உருமாறியது.
     1968ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில், இன் ஜினியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில், மவுஸ் கருவியை எங்கல்பார்ட் அறிமுகப்படுத்தி, ஒரு மணி நேரம் செயல்படுத்திக்காட்டினார். அப்போது, 30 மைல் தூரத்தில் இருந்த சக ஆராய்ச்சியாளரின் உருவம் மற்றும் குரலை மாநாட்டு திரையில் காட்டி எங்கல்பார்ட் உரையாடினார்.  இதுவே முதல் வீடியோ கான்பரன்ஸ் ஆகும்.
-- தினமலர் , 5.7.2013.  

Sunday, October 12, 2014

புனுகுப்பூனை.

  அகில், சந்தனம், சாம்பிராணி முதலிய மணப்பொருள்கள் மரங்களில் கிடைப்பன.  கஸ்தூரி, கோரோசனம், புனுகு முதலான மணப்பொருள்கள் விலங்குகளிடம் கிட்டுவன.
     கஸ்தூரி இமயமலைப்பகுதிகளில் உள்ள ஒருவகை மான் வயிற்றில் பெறப்படுவது.  கோரோசனம் பசுவின் வயிற்றில் கிடைப்பது. புனுகு ஒருவகைப்பூனையிடம் சுரப்பது.  புனுகு மிகவும் விசேஷமான மணப்பொருளாகும்.
     புனுகு என்ற பிராணி பூனையைப் போல இருக்கும்.  வாசனைப் பொருளை உருவாக்குவது.  இதன் பிறப்புறுப்பு அருகில் வாலின் கீழ்ப்பக்கம் ஒரு தைலப்பை இருக்கும்.  இந்தப் பையில் தைலம் சுரக்கும்.  அத் தைலத்தை மரத்தில் பீய்ச்சித் தேய்த்துவிடும்.  காட்டுவாசிகள் இதனைச் சேகரிப்பர்.
     நகரில் இதனை வளர்ப்பவர்கள் நடுவில் சுழலும் மூங்கில் அமைந்த கூண்டில் அடைத்து வைப்பர். தைலம் மிகுந்த நிலையில் தைலத்தை மூங்கிலில் பீய்ச்சித் தேய்க்கும்.  அதனை வழித்துப் பத்திரப்படுத்தி உபயோகிப்பர்.  இதுவே புனுகு.  புழுகில் இருந்து இப்படி எடுக்கப்படுவது புனுகு.
-- மானஸதேவதா.  தினமலர். பக்திமலர். ஜூன் 27,2013.

Saturday, October 11, 2014

மெய் எழுத்துக்கள்!

  " பெயருக்கு ஏற்றபடி ஏன் யாரும் நடந்துகோள்வது இல்லை?"
     " மெய் எழுத்துக்களில் வல்லின எழுத்துக்களும் ( க். ச், ட், த், ப், ற்)  ஒரு வகை.  ஆனால், வல்லினம் என்று எழுதினால், அதில், ஓர் எழுத்தேனும் வல்லினமாக இருக்கிறதா பாருங்கள்.  அப்படித்தான் மனிதர்களும் !"
-- சுரா.மாணிக்கம், புதுக்கோட்டை'
-- ஆனந்த விகடன் . 8 . 5 . 2013.                          
பூணூல் போடுவது.
    " பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?"
      கர்ப்பாஷ்ட மேஷு பிராம்மணா  --  என்று சாத்திரம் கூறுகிறது.  கர்ப்ப வாசத்தை ஒரு வயதாகக் கணக்கிட்டு ஏழு வயதில் எட்டாவது வயதாகக் கணக்கிடுவது கர்ப்பாஷ்டமம் என்று பெயர்.  அதாவது, ஏழாம் வயதில் பூணூல் போடுவது சாலச்சிறந்தது.
-- எஸ்.கே.சாந்தி, வல்லம்.
-- தினமலர். பக்திமலர். ஜூன் 20, 2013.