Tuesday, January 31, 2017

உடல் உறுப்புகள்.

(  இதயம்,  தும்மல்,  நாக்கு,  கண்,  முடி,  எலும்பு,  தோல் ).
     மனித  உடலில்  உள்ள  உறுப்புகளிலேயே  கடிமையாக  உழைக்கும்  தசை  இதயம்தான்.  ஒரு  லாரி  30 கி.மீ.  ஓடத்  தேவையான  சக்தியை  ஒரு  நாளில்  அது  உருவாக்குகிறது.  நமது  வாழ்நாளில்  அது  உருவாக்கும்  சக்தியைக்  கொண்டு  நிலாவுக்குச்  சென்றுவிட்டுத்  திரும்பிவிடலாமாம்,
     ஒருவரது  சராசரி  வாழ்நாளில்  இதயம்  பம்ப்  செய்யும்  ரத்தத்தின்  அளவு  15 லட்சம்  பேரல் ( 1 பேரல்  என்பது 120 லிட்டர் ).
அத்துடன்  மனித  இதயத்தை  வெளியே  எடுத்து  வைத்தால்,  அது  ரத்தத்தைப்  பீய்ச்சி  அடிக்கும்  உயரம்  9 மீட்டர்.
     நமது  ஒற்றை  தும்மலின்  வேகம்  எவ்வளவு  தெரியுமா?  மணிக்கு  64  கி.மீ.  அதாவது,  ஒரு  புலி  ஓடும்  வேகம்.
     நமது  நாக்கில்  10,000  சுவை  உணரும்  மொட்டுகள்  உள்ளன.  நாக்கில்  சின்னச்  சின்ன  மேடாக  இருப்பவைதான்  இந்த
மொட்டுகள்.  சுவையை  அறிய  முகர்ந்துபார்க்கும்  திறனும்  அவசியம்.  மூக்கு  அடைத்திருக்கும்போது  சாப்பிடும்  உணவின்  சுவை  எப்படி  இருந்தது  என்று  யோசித்துப்  பாருங்கள்.
     தொடுதல்,  கேட்டலுக்கு  ஏற்ப  எதிர்வினை  ஆற்றும்  வகையில்  பார்வையற்றவர்களின்  கண்  மேலுறை  மாறிவிடுகிறது.  இதனால்தான்,  பார்வையற்றவர்கள்  குச்சிகளைக்  கொண்டும்,  தொட்டுப்  பார்த்தும்  பயணிக்க  முடிகிறது.
     நம்  தலையில்  உள்ள  ஒவ்வொரு  முடியும்  ஒவ்வொரு  மாதத்துக்கும்  6  மி.மீ., அதாவது  அரை  சென்டிமீட்டரைவிட  கொஞ்சம்  அதிகமாக  வளரும்.  இப்படியே  6  ஆண்டுகள்  வளர்ந்தபின்  அதற்கு  வயதாகிவிடும்.  அதனால்  அந்த  முடி  விழுந்துவிட்டு,  அதே  இடத்தில்  புதிய  முடி  முளைக்க  ஆரம்பிக்கும்.
     நாம்  பிறக்கும்போது  300 எலும்புகளுடன்  பிறக்கிறோம்.  ஆனால்,  மனிதனாக  வளர்ந்த  பிறகு  206  எலும்புகளே  இருக்கின்றன.  இதற்குக்  காரணம்  என்னவென்றால்,  சில  எலும்புகள்  ஒன்று  சேர்ந்துவிடுவதுதான்.
     நாம்  நினைப்பதற்கு  மாறாக,  தோல்தான்  நம்  உடலில்  உள்ள  மிகப்  பெரிய  உறுப்பு.  தொடர்ச்சியாக  வளர்ந்துகொண்டிருக்கும்  உறுப்பும்கூட .  நமது  தோல்  ஒரு  நிமிடத்துக்கு  50,000  செல்களை  இழக்கிறது.  நமது  வாழ்நாளில்  வளரும்  மொத்தத்  தோலின்  எடை  18  கிலோ.
--  தொகுப்பு :  ஆதி.  ( நம்பமுடிகிறதா? ).  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர்  3, 2014.   

Monday, January 30, 2017

மனித மூளை!

  உலகிலேயே,  ஏன்  பிரபஞ்சத்தில்  உள்ள  உயிரினங்களிலேயே  மனித  மூளைதான்  மிகவும்  புத்திக்கூர்மை  கொண்டது.  மனிதர்களின்  வாழ்க்கையில்  2  வயதில்தான்  மூளை  செல்கள்  அதிகபட்சமாக  இருக்கின்றன.  அதேநேரம்,  மனித  மூளை  முதிர்ச்சி  அடைய  20  ஆண்டுகள்  தேவைப்படுகின்றன.
     கருவறையில்  வளரும்  குழந்தையின்  மூளையில்  ஒவ்வொரு  விநாடியும்  8,000  புதிய  மூளைச்  செல்கள்  வளர்கின்றன.  பிறந்த  சில  மணி  நேரத்திலேயே  தாயின்  முகத்தைக்  கண்டுணர்ந்துகொள்ளும்  திறன்,  பிறக்கும்  குழந்தைகளுக்கு  உண்டு.
     நமது  மூளை  எல்லா  நேரமும்  வேலை  செய்துகொண்டே  இருக்கிறது.  ஒரு  மனித  மூளைக்குள்  ஒரு  நாளில்  சராசரியாக  70,000  எண்ணங்கள்  ஓடுகின்றன.  உண்மையில்  தூங்கும்போதுதான் மூளை  அதிகமாக  வேலை  செய்கிறதாம்.  கனவும்  அதன்  ஒரு  பகுதிதான்.  
     மனித  மூளையில்  60  சதவீதம்  கொழுப்பு  இருக்கிறது  என்றாலும்,  அது  கடுமையாக  வேலை  செய்கிறது.  மூளை  25  வாட்ஸ் மின்சாரத்தை  உற்பத்தி  செய்கிறது.  இதன்  மூலம்  ஒரு  பல்பையே  எரிக்க  முடியும்.
     மனித  மூளை  என்ற  உறுப்புக்கு  நேரடியாக  வலியை  அறியும்  உணர்வு  இல்லை.  அதனால், ஒரு  மனிதர்  விழித்திருக்கும்போதே  அவரது  மூளையில்  அறுவை  சிகிச்சை  செய்ய  முடியும்.
     மூளையால்  50,000  மாறுபட்ட  மணங்களை  நினைவு  வைத்துக்கொள்ள  முடியும்.
-- தொகுப்பு :  ஆதி.  ( நம்பமுடிகிறதா? ).  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர்  3, 2014.  

Sunday, January 29, 2017

நான்கு வழி தத்துவம்

  பெரிய  நான்கு  கோபுரவாசல்  ஆலயங்கள்  நான்கு  வழிகளை  காட்டுகின்றன.  அவை :  பக்திவழி,  ஞானவழி,  ராஜவழி,  கர்ம வழிகளை  குறிக்கும்.  எந்த  வழிகளானாலும்  நீ  இறைவனைக்  காணலாம்  என்பதே  அதன்  அர்த்த,ம்.
     கொடிமரம்  என்பது  இறைவனை  குறிக்கும்.  கொடிக்கயிறு  சக்தியைக்  குறிக்கும்.  உயரே  செல்லும்  கொடிச்சீலை  உயிர்களைக் ( மனிதர்கள்  உள்ளிட்ட  உயிரினங்கள் )  குறிக்கும்.  நந்தி  தர்மத்தை  குறிக்கும்.  கர்ப்பக்கிரகத்தில்  இருக்கும்  இறைவன்  எப்போதும்  தர்மத்தையே  பார்க்கிறான்  என்பதே  அர்த்தம்.
பஞ்சபத்ரம்
     வழிபாடுகளில்  அதிகம்  உபயோகப்படும்  துளசி,  வில்வம்,  அருகு,  வேம்பு,  வன்னி  ஆகிய  தாவரங்களைச்  சொல்லலாம்.  இந்த  ஐந்தும்  பஞ்சபத்ரம்  எனப்படும்.  பத்ரம்  என்றால்  இலை  என்று  பொருள்.  சிறந்த  மருத்துவ  சக்திகளை  கொண்ட  இந்த  மூலிகைகள்  தெய்வீகமானவை  என்று  சொல்லி  பூஜைக்குப்  பயன்படுத்த  அறிவுறுத்தப்பட்டன.
     இந்த  ஐந்து  இலைகளையும்  இறைவனுக்கு  அர்ப்பணித்து  தீர்த்தம்  விடப்  பயன்படுத்தும்  பாத்திரம்  பஞ்ச பத்ர  பாத்திரம்  என்று  அழைக்கப்படுகிறது.
-- தினமலர்  பக்திமலர்.  4-12-2014.   

Saturday, January 28, 2017

புதுசா கத்துக்க விருப்பமா?

  குட்டீஸ்  சேனலான போகோவில் 'மேட்' ( MAD)  நிகழ்ச்சிகளைப்  பார்த்திருக்கிருக்கிறீர்களா?   அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராப்  குழந்தைகளுக்காக ஒரு  சேனலைத் தொடங்கியிருக்கிறார்.  'மேட்ஸ்டஃப்வித்ராப்'  ( MadstuffwithRob ) என்பதுதான் சேனலின் பெயர்.  இதிலும் மேட் நிகழ்ச்சிகள் உண்டு.  ஆனால்,  இதற்காக நீங்கள்  டி.வி. முன்னால்  காத்திருக்க  வேண்டியதில்லை.  இதை யுடியூபில்  எப்போது  வேண்டுமானாலும்  பார்க்கலாம்.
     புதிய  மேட்  நிகழ்ச்சியில் குட்டீஸ்களுக்கான  படைப்பாற்றலை  அதிகரிக்க  பல  புதிய  பகுதிகளைச்  சேர்த்திருக்கிறார்கள்.
'கூல் டூல்ஸ்' ( Cool  Tools )  என்ற  பகுதியில்  எப்படி  ஓவியம்  வரைவது  என்பதற்கான  குறிப்புகள்,  நுணுக்கங்கள்,  நுட்பங்களைத்  தெரிந்து  கொள்ளலாம்.  'ராப்சைக்ளிங்'  ( Rob  Cycling )  என்ற  பகுதியில்  பொருட்களை  மறுசுழற்சி  செய்யவும்,  கழிவுப்  பொருட்களைக்  கலைப்  பொருட்களாக  மாற்றுவது  எப்படி  என்பதையும்  கற்றுத்தர  போகிறார்கள்.
     'பிராங்க்  டிராங்க்'  ( Prank  Trank )  பகுதி  குறும்புத்தனங்களை  ஜாலியாகக்  கிண்டலடிப்பது பற்றியும்,  'டிராசம்  ஆவ்சம்'
( DrawsomAwesome )  பகுதி  கடினமானவற்றை  எப்படி  எளிதாக  வரையலாம்  என்பது  பற்றியும்  கற்றுத்  தரப்போகிறது.  இந்தப்  பகுதிகள்  ஒவ்வொன்றும்  3 - 4 நிமிடங்கள்  வரை  ஒளிபரப்பாக  உள்ளன.
      நிறைய  மேஜிக்  பகுதிகளும்  'மேட்  ஸ்டஃப்வித்ராப்'பில்  உங்களுக்காகக்  காத்திருக்கின்றன.  http:// www. youtube.com /
MadStuffWithRob/  என்று  இணைய தளத்தை  அம்மா,  அப்பா  உதவியுடன்  பாருங்களேன்.
-- என்.கௌரி.  (  மாயாபஜார் ).
--'தி இந்து' நாளிதழ். புதன்,  நவம்பர்  19,  2014.   

Friday, January 27, 2017

ஜோக்ஸ் !

*   "முன்பெல்லாம் எங்கள் தலைவரை, மருத்துவமனை, நகைக்கடைகளை திறக்க அழைத்தவர்கள் .. இப்போது அவர் ஆட்சியில்
      இல்லாத ஒரே காரணத்துக்காக, கட்டணக் கழிப்பிடத்தைத் திறக்க அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்."
*   "அன்னிக்கு  மெட்ராஸூக்கு நான் ஒண்ணுமிலாம வந்தவன்...."
    "இன்னிக்கி மெட்ராஸையே ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்க தலைவரே!"
*  "2016-ல் நாம ஆட்சி பீடத்துல ஏறலேன்னா என்னய்யா ஆகும்?"
   "போலீஸ் வேன்லயும் ... குற்றவாளி  கூண்டுலேயும் ஏற வேண்டியிருக்கும் தலைவரே!"
*  "என்னப்பா சர்வர், சிக்கன் பிரியாணியில கொம்பு மாதிரி ஏதோ கிடக்குதே"
   "சார், நாய்க்கு ஏதுசார் கொம்பு?"
--   ஆனந்த விகடன். 25-9-2013.   

Thursday, January 26, 2017

இந்தியர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்?

"நம் நாடு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது,  இந்தியர்களாகிய நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?"
     "இது நடந்தது தென் கொரியாவில்.  1997-98 களில் உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயம் தென் கொரிய அரசு ஊழியர்கள்,  சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் பணியாற்றினார்கள்.  தங்களுடைய சேமிப்பை, அரசுக்குக் கொடுத்து உதவினார்கள்.  இறக்குமதிப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தார்கள்.  'இறக்குமதிப் பொருட்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு நிலைமை வரவில்லை' என அரசு அறிவித்தும்கூட  அதைச்  செய்தார்கள்.  அப்போது 'டைட்டானிக்' திரைப்படம் அங்கு திரையிடப்பட்டது.  அது வெளிநாட்டுப் படம் என்பதால் அதைப் பார்க்க பணம் செலவழிக்க வேண்டாம் என்றும், அதனால் நமது பணம் வேறு நாட்டுக்கு உதவுகிறது என்றும் ஓர் இயக்கமாகவே செயல்பட்டார்கள்.  அரசுக்குத் தோள் கொடுத்து உதவுவதாக அவர்கள் கருதவில்லை.  தங்களையே அரசாங்கமாகக் கருதி செயல்பட்டார்கள்.  தேசப்பற்றின் மூலம் நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்ட விதம் பிரமிக்கவைகிறது!"
-- சிவ.ராஜ்குமார், சிதம்பரம். ( நானே கேள்வி... நானே பதில்...)  பகுதியில்.
--   ஆனந்த விகடன். 25-9-2013.      

Wednesday, January 25, 2017

அரசியல்வாதி.

"அன்றைய,  இன்றைய அரசியல்வாதிகளுக்கு என்ன வித்தியாசம்?"
     "முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த்போது, 'நான் ஆண்களிடம் தனியாகப் பேச வேண்டும்.  ஆகவே, பெண்கள் எல்லோரும் சென்று விடுங்கள்'  என்றாராம்.  பெண்கள் சென்றவுடன்  எம்.ஜி.ஆர். ஆண்களிடம்
'விஷயம் ஒன்றுமில்லை.  இங்கு கூட்டம் அதிகம்.  எல்லோரும் ஒரே நேரத்தில் கலைந்து சென்றால் நெரிசல் அதிகம் இருக்கும்.  அதனால்தான் முதலில் பெண்களை போகச் சொன்னேன்.  இனி நீங்களும் செல்லலாம்'  என்றாராம்.
-- விக்னேஷ்,  மதுரை.  ( நானே கேள்வி... நானே பதில்... ) பகுதியில்.
--   ஆனந்த விகடன். 25-9-2013.  

Tuesday, January 24, 2017

code

பாஸ்வேர்டிற்கு  பதில்  கோட் .
     தகவல்களை  பரிமாறிக்கொள்ள  டிவிட்டர்,  பேஸ்புக்  போன்ற சமூக  வலைதளங்களை  தான்  பெரும்பாலும்  பயன்படுத்தி  வருகின்றோம்.  இதுபோன்ற  சமூகவலை  தளங்கள்  பயன்படுத்தும்போது  ஏற்கனவே  நாம்  ஏதேனும்  இமெயில்  முகவரி  வைத்திருந்தால்  அதை  பயன்படுத்தி  பாஸ்வேர்ட்  கொடுத்துதான்  உள்ளே  நுழைய  வேண்டும்.  இனி, இமெயில்  ஐடி,  பாஸ்வேர்ட்  எல்லாம்  கொடுக்க  வேண்டிய  அவசியமில்லை.
     டிவிட்டர்  ஏற்பாடு  செய்திருந்த  தயாரிப்பாளர்கள்  மாநாட்டில்  code  வழியாக  லாக் இன்  செய்யும்  சேவையை  அறிமுகம்  செய்தது.  பாஸ்வேர்டிற்கு  பதில்  அந்த  தளங்கள்  தரும்  பாதுகாப்பான  codeடை  தந்தாலே  போதும்.  அமெரிக்கா,  ஐரோப்பா  நாடுகளில்  300  மில்லியன்  மக்கள்  ஸ்மார்ட்போன்  பயன்படுத்துகின்றனர்.  இன்னும்  சில  நாடுகளில்  940  மில்லியன்  ஸ்மார்ட்போன்களை  விற்பனையாகியுள்ளது.  இன்னும்  சில  நாடுகளில் ஸ்மார்ட்போன்  வைத்திருப்பவர்கள்  இமெயில்  முகவரி  இல்லாததால்,  அவர்கள்  அப்ளிகேஷன்களை  பயன்படுத்தாமல்  இருந்து  வருகின்றனர்.  அதனால்,  டிஜிட்ஸ்  என்ற  புதிய  திட்டத்தை  தயாரித்துள்ளோம்  என்றார் மாநாட்டின்  திட்ட  மேலாளர்  தெரிவித்தார்.
-- தினமலர்  திருச்சி  2-12-2014.
-- இதழ் உதவி :  P. சம்பத் ஐயர்,  திருநள்ளாறு. 

Monday, January 23, 2017

பொறுமை வேண்டும்

  ஒரு முறை உன்னதமான குஜராத்திக்காரர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தார்.  அவருக்கு அருகில் பயணம் செய்த இன்னொரு மனிதர் அந்த ரயில் பெட்டிக்குள் துப்பிக்கொண்டே இருந்திருக்கிறார்.  அப்போது அந்த உன்னத மனிதர், இவர் துப்பிய இடத்தைத் தாள்கொண்டு சுத்தம் செய்திருக்கிறார்.  அந்த மனிதரோ மீண்டும் மீண்டும் துப்பிக்கொண்டே இருந்துள்ளார்.  அந்த உன்னத மனிதரும் சுத்தம் செய்துகொண்டே இருந்திருக்கிறார்.  ஒரு ரயில் நிலையத்தில் இருவரும் இறங்கியபோது, வெளியே நின்ற ஒரு பெருங்கூட்டம், அந்த உன்னத மனிதருக்கு மாலை மரியாதைகள் செய்து, "மகாத்மா காந்திக்கு ஜே" என்று கோஷம் போட்டது.  ரயிலில் துப்பிக்கொண்டே வந்த அந்த மனிதருக்கு, ரயிலில் சுத்தம் செய்தவர் மகாத்மா காந்தி என்று  தெரிய வந்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.  அப்போது மகாத்மா காந்தி அந்த மனிதரைப் பார்த்து, "உங்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்"  என்று சொல்லியுள்ளார்.  அதற்கு அந்த மனிதர், "என்னிடமிருந்து நீங்கள் என்ன பாடம் படிக்க முடியும்?"  என்று கேட்டதற்கு,  காந்திஜி, "ஒருவர் எவ்வளவு கெடுதல் செய்தாலும் ஒருபோதும் பொறுமையை மட்டும் இழக்கக் கூடாது என்பதே அந்தப் பாடம்" என்று சொன்னார் காந்திஜி.
-- இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.  ( கருத்துப் பேழை ).
-- "தி இந்து' நாளிதழ். சென்னை . புதன், ஜூன் 11, 2014.     

Sunday, January 22, 2017

சங்கநாதம்!

   மகாவிஷ்ணு என்றாலே சங்கு, சக்கரம்தான் நம் ஞாபகத்துக்கு வரும்.  மகாபாரதத்தில் கிருஷ்ணனும், பஞ்ச பாண்டவர்களும் தங்களுடைய  சங்கை முழங்கி  சங்கநாதம் செய்தார்கள்.  ஒவ்வொருவருடைய சங்கிற்கும் தனிப்பெயர் உண்டு.
ஸ்ரீகிருஷ்ணன் -- பாஞ்சஜன்யம்.
யுதிஷ்டிரன் ( தர்மர் ) -- அனந்தவிஜயம்.
பீமன் -- பௌண்ற்றம்.
அர்ஜுனன் -- தேவநந்தம்.
நகுலன் -- சுகோஷம்.
சகாதேவன் -- மணிபுஷ்பகம்.
     இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,  முதன்முதலில் பீஷ்மர்தான் சங்கை ஊதினார்.  பிறகுதான் மற்றவர்கள் கோஷித்தனர்.  ஆக, கௌரவர்களே யுத்தத்தைத் துவக்கியவர் ஆகின்றனர்.
குத்துவிளக்கு!
     குத்துவிளக்கின் ஐந்து முகங்கள், 1. அன்பு,  2. மன உறுதி,  3. நிதானம்,  4. சமயோசிதபுத்தி,  5. சகிப்புத்தன்மை ஆகிய ஐந்து குணங்களை பிரதிபலிக்கின்றது.  அதனால்தான் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் குத்துவிளக்கு ஏற்றுகிறாள் மணமகள்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  நவம்பர் 16-30,  2013. 

Saturday, January 21, 2017

அஷ்டமங்கலப் பொருட்கள்!

  1. சாமரம்,  2. நிறைகுடம்,  3. கண்ணாடி,  4. அங்குசம்,  5. முரசு,  6. விளக்கு,  7. கொடி,  8. இணை மீன்கள்.  இந்த எட்டுப்
     பொருள்களும்  மங்கலப்  பொருட்கள்  என்கின்றன  புராணங்கள்.
இருந்தும்  பயனற்றவை!
     புண்ணியத்  தலங்களுக்குச்  சென்று  வராத  கால்கள்,  ஆண்டவனைக்  குனிந்து  வணங்காத  தலை,  கெஞ்சிக்கேட்பவனுக்கு  உதவாத  கைகள்,  நல்லவர்களின்  அறிவுரைகளைக்  கேட்டு  உள்வாங்காத  காதுகள்,  எடுத்த  காரியத்திற்கு  உழைக்காத  உடல்  ஆகிய  யாவையும்  இருந்தும்  பயனற்றவை.
அஷ்ட தனம்.
     ஆணோ, பெண்ணோ  ஒருவரிடம்  இருக்க  வேண்டிய  எட்டு  செல்வங்கள்  அஷ்ட  தனம்  எனப்படும்,  அவை :
     1. ரூபம்  அல்லது  அழகு,  2. சம்பத்து  ( சொத்து முதலானவை ),  3. வித்தை  ( பெற்றுள்ள  திறமைகள் ),  4. விவேகம்
( அறிவுத்திறனும் பண்பும் ),  5. குணம் ( நற்குணம் ),  6. தனம் ( பொன், பொருள் ),  7. குலம்,  8. வயது ( ஆயுள் ).
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  நவம்பர் 16-30,  2013. 

Friday, January 20, 2017

நாளைய உலகம்

அமேசான் ஸ்டிக்
     இனி வரும் காலங்களில் படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்க கேபிள் டி.வி., டிஷ் ஆன்டனா என்று  அலைய  வேண்டியதில்லை.  கையளவு  சாதனத்தில்  கடலளவு  வீடியோக்களை  பார்க்கலாம்.  இதற்காக, அமேசான் நிறுவனம்  அமேசான்  ஸ்டிக்  என்னும்  கருவியை  அறிமுகப்படுத்தியுள்ளது.  கிட்டதட்ட  ஒரு  பென்ட்ரைவ்  அளவு  உள்ள  அந்த  சாதனத்தை டி.வி.யின் யுஎஸ்பி போர்ட்டில்  இணைத்துவிடலாம்.  பிறகு  அதன்மூலம்  ஆயிரக்கணக்கான  படங்களையும்  டி.வி.சேனல்களையும் பார்த்து  மகிழலாம்.  இந்த  அமேசான் ஸ்டிக்  விரைவில்  அமெரிக்க  சந்தையை  தொடயுள்ளது.
வைப்ரேஷனாகும் வார்த்தை
     காது  கேளாதவர்களுக்கு  உதவுவதற்காக  வந்திருக்கிறது  வெஸ்ட்  ( versatile  extra - sensory transducer ) எனப்படும்  புதிய  சாதனம்.  இதன்மூலம்  ஒருவர்  பேசுவதை  அதிர்வாக ( வைப்ரேஷன் ) மாற்ற  முடியும்.  வாய்பேச  முடியாதவர்கள்,  காதுகேளாதவர்கள்  தங்களின்  மேலாடையில்  ஒரு  பேட்ஜை  போல  இதைக்  குத்திக்கொள்ளலாம்.  அதில்  உள்ள  ஸ்பீச்  ரெகக்னைசிங்  கருவி  வெளியிலிருந்து  வரும்  சப்தங்களை  உள்வாங்கிக்கொள்ளும்.  பிறகு  அந்த  சப்தத்துக்கு  ஏற்ப  அதிர்வலைகளை  ஏற்படுத்தும்.  தற்போது  ஆங்கிலத்தில் எட்டிப்பார்த்திருக்கும்  இந்த கருவி,  விரைவில் பல  மொழிகளிலும்  வரவுள்ளதாம்.
-- மா.மணிகண்டன்.  ( ரிலாக்ஸ் ).
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்,  டிசம்பர் 2, 2014. 

Thursday, January 19, 2017

கனிமங்கள் -- 3.

வேகமாய்  சாகிறது  பூமி !
      'தமிழகத்தில்  காவிரி,  பாலாறு,  வைகை  உட்பட  17 நீர்ப்பிடிப்புப்  பகுதிகள்  இருக்கின்றன.  இவை  இல்லையெனில்,  தமிழகம்  பாலைவனமாகிவிடும்.  ஆனால்,  காவிடி தொடங்கி  பாலாறு  வரை  தோல்  தொழிற்சாலைகள், சாயப்  பட்டறைத்  தொழிற்சாலைகள்  ஆற்றை  விஷமாக்கி  வருகின்றன.  பாலாற்றங்கரையில் மட்டும்  சுமார்  800  தொழிற்சாலைகள்  இருக்கின்றன.  இவை  வெளியிடும்  குரோமியம்  கழிவு  நீர்  கலந்த  குடி நீரைத்தான் சென்னையின்  பாதி  மக்கள்  குடிக்கிறார்கள்.  பாலாறு  பகுதியில்  இருக்கும்  46 ஊற்களில்  27,800  கிணறுகளின்  தண்ணீரை  உபயோகிக்கவே  முடியவில்லை.  கிணற்றை  எட்டிப்பார்த்தாலே  ரசாயன  நெடி தாக்குகிறது.  உலகிலேயே  மிகவும்  மாசுபட்ட  நதி  என்று  குளோபல்  மேப்பில்  குறிப்பிடப்பட்டு  இருப்பது  பாலாறு  மட்டுமே.  இதை நம்ப  மறுப்பவர்கள்  பாலாற்றின்  வறண்ட  பகுதியைப்  போய்ப்  பாருங்கள்.  நமக்குச்  சோறிட்ட  அந்தத்  தாயின்  உடல்  முழுவதும்  நீலம்  நீலமாக  ரசாயனத்தால்  பூத்துக்கிடக்கிறது.
     தோல்  தொழிற்சாலைகளால்  ஆண்டுக்கு  10  ஆயிரம்  கோடி  அந்நியச்  செலாவணி  வருகிறது  என்கிறது  அரசு.  உண்மைதான்.  அமெரிக்க,  ஐரோப்பிய  நாடுகளுக்கு  அவ்வளவு  தோல்  பொருட்கள்  ஏற்றூமதி  ஆகின்றன.  ஏண்/  அமெரிக்கா, ஐரோப்பாவில்  கால்நடைகள்  இல்லையா>  அந்த  நாடுகளுக்குத்  தோல்  பொருட்களைத்  தயாரிக்கத்  தெரியாதா?  தெரியும்.  ஆனால்,  செய்யமாட்டார்கள்.  அவர்களைப்  பொறுத்த  வரை  இது  டர்ட்டி  இண்ட்ஸ்ட்டி'  என்கிறார்  கோபத்துடன் பேராசிரியர் ஜனகராஜன்.
--  டி.எல். சஞ்சீவிகுமார்.
--  ஆனந்த விகடன். 13-2-2013.  

Wednesday, January 18, 2017

கனிமங்கள் -- 4.

வேகமாய்  சாகிறது  பூமி
     "15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறைய கட்டுப்பாடுகள்  இருந்தன.  மினரல்  வாட்டர்  நிறுவனங்கள்,  ஹோட்டல்கள்,  தங்கும் விடுதிகள்  ஆகியவை  நாள்  ஒன்றுக்குக்  குறிப்பிட்ட  அளவு  மட்டுமே நிலத்தடி  நீரை  உறிஞ்சி  எடுக்க  முடியும்.  தவிர, தனியாக  இன்னொரு  போர்வெல்  போட்டு மழை நீர்  மற்றும்  பயன்படுத்தப்பட்ட  தீங்கு  இல்லாத  நீரைச்  சேகரித்து  மீண்டும்  பூமிக்குள்  செலுத்த  வேண்டும்.  வீடுகளுக்கும்  நிறுவனங்களுக்கும் போர்வெல்  போடவேண்டும்  என்றால், அரசிடம்  அனுமதி பெற வேண்டும்.  ஆனால்,  அந்த்ச் சட்டம்  காலப்போக்கில்  நீர்த்துவிட்டது.  மினரல்  வாட்டர் நிறுவனங்கள்  தாங்கள்  குறிப்பிட்ட  அளவு  தண்ணீரை பூமிக்குள்  மீண்டும்  செலுத்துவதாகச்  சொல்கின்றன.  உண்மையில்  சுத்திகரிக்கப்பட்ட  பின்பு  கிடைக்கும்  கழிவு  நீரைத்தான்  அவை  பூமிக்குள்  செலுத்துகின்றன.  அதில்தான்  டி.டி.எஸ்.  அளவு  இன்னும்  மிக  அதிகமாக  இருக்கும்.
      நாம்  குடிக்கும்  ஒரு  லிட்டர் குடிநீரில்  நைட்ரேட்  20  மில்லி கிராம்,  துத்தநாகம், ஃப்ளோரைடு  தலா  ஒரு மில்லி கிராம்,  சோடியம்  20  மில்லி கிராம்  அளவுக்கு  மிகாமல்  இருக்க  வேண்டும்.  ஆனால்,  இன்று  தமிழகத்தில்  பரவலாக  நாம்  குடிக்கும்  ஒரு  லிட்டர்  தண்ணீரில்  மேற்கண்ட  அளவை  விட  மூன்று  மடங்கு கூடுதலாக  ரசாயன  கனிமங்கள்  இருக்கின்றன.  இதனால்  சுவாச நோய்,  ரத்த சோகை,  பற்களில்  கறை  எலும்பு நோய்கள்,  சிறுநீரகக் கற்கள்  போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.  உடனடியாக  தமிழகம்  சுதாரிக்க  வேண்டிய  சூழல் இது !"  என்கிறார்  பேராசிரியர் சரவண பாபு.
--  ஆனந்த விகடன். 13-2-2013.  

Tuesday, January 17, 2017

கனிமங்கள் -- 2.

வேகமாய்  சாகிறது  பூமி !
     'கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார்கள்.  உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்கவேண்டும்,  ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன.  இந்த இடிபாட்டுப் பகுதியில் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை.  கடலில் உள்ள நீரோடங்களை நன்கு அறிந்தவை ஆமைகள்.  செயற்கைக் கோள் உதவியுடன் ஆமைகளை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது.  ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட்டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன.  இது இன்று நேற்று நடப்பதல்ல.  63 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமைகள்.  காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன.  ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலையும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்கலே.  இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன.  ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம்.  கடலின் நீரோட்டங்களில் பல்வேறு வண்ணங்களில் அடித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.
-- கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கூறக் கேட்டது.
--  டி.எல். சஞ்சீவிகுமார்.
--  ஆனந்த விகடன். 13-2-2013. 

Monday, January 16, 2017

கனிமங்கள் -- 1.

வேகமாய்  சாகிறது  பூமி !
     தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். ( Total dissolved solids )  என்பார்கள்.  ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ்.-ஸின் அளவி 300 புள்ளீகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர்.  ஆனால், இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் நீரில் டி.டி.எஸ் ஸின் அளவு 3,000 -தைத் தாண்டிவிட்டது.
     ஆற்று நீர்,  கடல் நீர்,  குடி நீர் இந்த மூன்றுவிதத் தண்ணீன் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் சூரையாடுகின்றான்.
     கடல் நீர் :  'கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை.  அங்கு உயிரிங்கள் மிகக் குறைவு.  அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்த கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாகைருக்கிறது.  இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது.  டன் கணக்கில் நிலக்கரியும்,ஆலைக் கழிவு நீரும், பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன.  அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலில் அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும்.  மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளியேறவேண்டியதுதான்.  இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது.  முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான்.  உற்பத்தியின் அளவு மட்டுமல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது',
-- பேராசிரியர்  லால்மோகன் கூறக் கேட்டது.
-- டி.எல். சஞ்சீவிகுமார்.
--  ஆனந்த விகடன். 13-2-2013.  

Sunday, January 15, 2017

நத்தை

  'மழை வருமா... இல்லையா?'  என்று இனிமேல் ரமணன் சொல்லும் அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டாம்.  நத்தையைக் கவனித்தால் போதுமாம்.  ஆம், மழையைக் கணிப்பதில் நத்தை கில்லாடியாம்.  அருகில் இருக்கும் தாவரம் அல்லது கம்பத்தை நோக்கி நத்தை நகர்கிறது என்றால், மழை வரப்போகிறது என்று அர்த்தமாம்.  --  அத்தைகிட்ட சொல்லி ரெண்டு நத்தை வளர்கலாமே!
பெரிய பாறை
     பிப்ரவரி 16-ம் தேதி வான்வெளியில் ஒரு பெரிய பாறை பூமிக்கு அருகில் கடந்து செல்ல இருக்கிறதாம்.  கிட்டதட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் எடை உடைய அந்த பாறைக்கு டி.ஏ.14 எனப் பெயர்.  பூமிக்கு அருகில் கடந்து சென்றாலும், உரசும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்.  செயற்கைக்கோள்களுக்குப் பாதிப்பு இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். -- செல்போன் சினல் பாதிக்காமப் பார்த்துக்கங்கப்பா!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 13-2-2013.    

Saturday, January 14, 2017

ஆலயக் கிரியை வகைகள்

  சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப்பட்டுள்ளன.
1.   நித்தியக் கிரியைகள்.
2.   நைமித்திகக் கிரியைகள்.
3.   காமியக் கிரியைகள்.
     தினந்தோறும் ( குறைந்தது ஒரு காலம்,  அதிகபக்ஷம் 12 காலம் )  நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள்.
     ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் ( நிமித்தம் என்றால் காரணம் ).
     விசேஷக் கிரியைகள்.  அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷூ, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில்,  அல்லது காலங்களில், அல்லது முகூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள் கிரியைகள் காமியக் கிரியைகள்.
--  தினமலர் பக்திமலர்.  30-10-2014. 

Friday, January 13, 2017

WhatsApp !

வாட்ஸ் அப் என்கிறார்களே அதன் பொருள், பயன்பாடு என்ன?
     உடனடியாக பலவற்றைப் பகிர்ந்து கொள்ள வசதியான ஏற்பாடு இது.  ஐஃபோன், பிளாச் பெர்ரி, ஆன்ட்ராய், நோக்கியா, ஸ்மார்ட் போன், விண்டோஸ் போன் போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வாட்ஸ்சப் உதவுகிறது.   தகவல் என்றால் எழுத்துகள் மட்டுமல்ல, புகைப் படங்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் ஆகியவையும்தான்.  இலவசமாகக் கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.
     யாருக்கெல்லாம் தடையற்ற தகவல் பரிமாற்றம் மற்றபடி இல்லையோ, அவர்களுக்கெல்லாம் வாட்ஸ்சப் மிகவும் கை கொடுக்கிறது.  குழுவாக ஒருவருக்கொருவர் கலந்த் பேசவும் ( Group chat )  இது உதவியாக உள்ளது.
-- ஜி.எஸ்.எஸ்.  ( ?! குட்டீஸ் சந்தேக மேடை. )
-- தினமலர் சிறுவர்மலர்.  நவம்பர் 28, 2014.  

Thursday, January 12, 2017


கூகுள் ஸ்மார்ட் ஸ்பூன்!

 கூகுள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் ஸ்பூனை அறிமுகப்படுத்தியுள்ளது.  வயதானவர்களும்,  நரம்பு தளர்ச்சி கொண்டவர்களும் ஸ்பூனை பிடித்து உணவை வாய்க்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.  அவர்களுக்காக பிரத்யேகமாக இந்த ஸ்பூன் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ இ -- சைக்கிள்
     ஹீரோ குழுமம் ஏவியோர் ஏஎம்எக்ஸ் மற்றும் ஏவியோர் ஏஎப்எக்ஸ் என 2 மாடல்களில் பேட்டரியால் இயங்கும் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஆசிட் பேட்டரி உள்ளதால் இதை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் போதும்.
லண்டன் சாலைகளில் பூ பஸ்
     லண்டன் சாலைகளில் கடந்த வாரம் முதல் இயக்கப்படுகிறது பூ பஸ்.  இது பூக்களுக்காக என்று நினைக்க வேண்டாம்.  இது மனிதக் கழிவிலிருந்து எடுக்கப்படும் பயோ மீத்தேன் வாயுவில் செயல்படுகிறது.  டீசலில் இயங்கும் பஸ்ஸைக் காட்டிலும் 95 சதவீதம் குறைவான கரியமில வாயுவை வெளியிடுகிறது.
-- வனிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  இனைப்பு.  திங்கள், டிசம்பர் 1, 2014.    

Wednesday, January 11, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

*   பாற்கடலில் அவதரித்ததால் திருமகளை ... அலைமகள் என்பர்.
*   சரஸ்வதி ... நாக்கில் வீற்றிருப்பதாகச் சொல்வர்.  அதனால் நாமகள் என்றும் பெயருண்டு.
*   இமவான் என்பவர் ... பார்வதியின் தந்தை.
*   யோக நிலையில் காட்சி தரும் அம்பிகை ... திருவாரூர் கமலாம்பிகை.
*   அம்பிகை குயிலாக விளங்கும் தலம் ... மதுரை ( கடம்பவனக்குயில் ).
*   32 அறங்களைச் செய்த அம்பிகை ... காஞ்சி காமாட்சி.
*   முதுமை, இளமைக் கோல அம்பிகையரை ... விருத்தாசலத்தில் ( விருத்தாம்பாள், பாலாம்பாள் ) தரிசிக்கலாம்.
*   சிவனோடு போட்டி நடனம் ஆடியவள் ... தில்லை காளி.
*   உலக நன்மைக்காக பட்டினி விரதம் இருக்கும் அம்பிகை ... சமயபுரம் மாரியம்மன் .
*   சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் அருளூம் தலம் ... மும்பை மகாலட்சுமி கோயில்.
--  அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர்.  இதழுடன் இணைப்பு. சென்னை பதிப்பு.   செப்டம்பர், 23, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்,  விருகம்பாக்கம். சென்னை .92.

Tuesday, January 10, 2017

வெளிநாட்டுக் கோயில்கள்

மலிபு இந்துக் கோயில்.
     கலிபோர்னியாவின் மலிபு நகருக்கு அருகில் உள்ளது கலபாசாஸ் பகுதி.  இப்பகுதில்தான் அமைந்துள்ளது மலிபு இந்துக் கோயில்.
     1981-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்கோயிலின் முக்கிய கடவுளாக வெங்கடேஷ்வரர் அருள் பாலிக்கிறார்.  இயற்கை எழில் சூழ்ந்த இக்கோயில், தெற்கு கலிபோர்னியாவில் வசிக்கும் இந்து ஆலய சமூகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது.  இக்கோயில் தென்னிந்தியாவின் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
     இக்கோயில் ஒருபகுதி வெங்கடேஷ்வரருக்கும், மறு பகுதி சிவனுக்கும் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.  மற்ற கடவுள்களுக்கும் கோயிலின் இரு பகுதிகளிலும் காட்சி அளிக்கின்றன.
ஆலய முகவரி :
     Malipu Hindu Temple,
     1600 Las Virgenes Canyon Road,
     Calabasas.
இணையதளம் :
     http:// mali
     buhindu
     temple.org/
-- தினமலர் பக்திமலர்.  30-10-2014.    

Monday, January 9, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

*   பாற்கடலில் அவதரித்ததால் திருமகளை ... அலைமகள் என்பர்.
*   சரஸ்வதி ... நாக்கில் வீற்றிருப்பதாகச் சொல்வர்.  அதனால் நாமகள் என்றும் பெயருண்டு.
*   இமவான் என்பவர் ... பார்வதியின் தந்தை.
*   யோக நிலையில் காட்சி தரும் அம்பிகை ... திருவாரூர் கமலாம்பிகை.
*   அம்பிகை குயிலாக விளங்கும் தலம் ... மதுரை ( கடம்பவனக்குயில் ).
*   32 அறங்களைச் செய்த அம்பிகை ... காஞ்சி காமாட்சி.
*   முதுமை, இளமைக் கோல அம்பிகையரை ... விருத்தாசலத்தில் ( விருத்தாம்பாள், பாலாம்பாள் ) தரிசிக்கலாம்.
*   சிவனோடு போட்டி நடனம் ஆடியவள் ... தில்லை காளி.
*   உலக நன்மைக்காக பட்டினி விரதம் இருக்கும் அம்பிகை ... சமயபுரம் மாரியம்மன் .
*   சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் அருளூம் தலம் ... மும்பை மகாலட்சுமி கோயில்.
--  அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர்.  இதழுடன் இணைப்பு. சென்னை பதிப்பு.   செப்டம்பர், 23, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்,  விருகம்பாக்கம். சென்னை .92.  

Sunday, January 8, 2017

'டெரெஸ்ஸோ' தரைகள் !

   தரை அமைப்பது, மூன்று வகையாக பிரித்து பார்க்கப்படுகிறது.  இதன்படி , கலவையால் உருவாக்கப்படுவது,  இயற்கை அல்லது செயற்கை கற்களை கொண்டு, அடுத்து இயற்கையான அல்லது செயற்கையான மரம், சணல், தேங்காய் நார் போன்ற பொருள்களை கொண்டு அமைப்பது.  இதில், உங்கள் வீட்டின் நிலை, உங்கள் நிதி நிலை, விருப்பம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தரை அமைக்கும் முறையை நீங்கள் தீர்மானிக்கலாம்.
     கலவையை கொண்டு தரை அமைப்பதில், அண்மைக்காலமாக,'டெரெஸ்ஸோ' தரைகள்  பிரபலமாகி வருகின்றன.  வழக்கமான சிமென்ட்  மற்றும் சிவப்பு நிறத் தரைகளுக்கு மாற்றாக, பதிகற்கள் உதவியின்றி, வெள்ளை நிறத்தில் தரைகள் அமைப்பதே 'டெரெஸ்ஸோ' தரைகள் எனப்படும்.
     சிமென்ட் , மணல் ஆகியவற்றை, 1:1 என்ற விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்பட்ட கலவையை, ஒரு அங்குலம் உயரத்துக்கு பரப்பி, சமதளத்தை ஏற்படுத்த வேண்டும்.  இதன்மேல், ஒயிட் சிமென்ட் , 3 பங்கு, மார்பிள் பவுடர், 1 பங்கு எடுத்துக்கொண்டு, அதில், மார்பிள் சிப்ஸ், பிக்மெண்ட் ஆக்ஸைடு சேர்த்த கலவையை, தயார் செய்ய வேண்டும்.
     இக்கலவையை, உங்களுக்கு வேண்டுய வடிவமைப்பில், தரையில் பரப்பினால், பதிகற்கள் உதவியின்றி பளபளப்பான பளீச் தரைகளை பெறமுடியும்.  பணி முடிந்ததில் இருந்து, 7 நாட்களுக்கு, இதன் மேல் தன்ணீர் தெளிக்க வேண்டும்.
-- கனவுஇல்லம்.
-- தினமலர். சென்னை பதிப்பு.  சனி, 31-5-2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்,  விருகம்பாக்கம். சென்னை .92. 

Saturday, January 7, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

*  'சரஸ்' என்பதன் பொருள் ...நீர், ஒளி.
*   கலமகளுக்குரிய நட்சத்திரம் ... மூலம்.
*   பிராஹ்மி என்பதன் பொருள் ... பிரம்மனின் மனைவி
*   சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் ... சரசுவதி அந்தாதி
*   வட நாட்டில் சரஸ்வதியின் வாகனம் ... அன்னப்பறவை
*   குமரகுருபரர் பாடிய சரஸ்வதி துதி ... சகலகலாவல்லி மாலை
*   கூத்தனூர் சரஸ்வதி கொயிலைக் கட்டியவர் ... ஒட்டக்கூத்தர்
*   மத்திய அரசின் ஞானபீட விருதின் சின்னம் ... வாக்தேவி ( சரஸ்வதி )
*   நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதியை ... நாமகள் என்பர்
*   நாமகள் இலம்பகம் இடன் பெற்றுள்ள காப்பியம் ... சீவக சிந்தாமணி
-- அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர்.  இதழுடன் இணைப்பு. சென்னை பதிப்பு.   செப்டம்பர், 30, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்,  விருகம்பாக்கம். சென்னை .92.   

Friday, January 6, 2017

நட்சத்திர காயத்ரி மந்திரம்!

 ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அந்தந்த ராசிக்கு உரிய கிரகத்துக்கான காயத்ரி மந்திரத்தைச் சொல்வது சிறப்பான பலன் தரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
     உங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது?  இதோ தெரிஞ்சுக்குங்க...  
மேஷம்.   விருச்சிகம்.   --   செவ்வாய்  காயத்ரி :
ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம : ப்ரசோதயாத்

ரிஷபம்.   துலாம்.   --   சுக்ரன்  கயத்ரி :
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ  சுக்ர : ப்ரசோதயாத்

மிதுனம்.   கன்னி.   --   புதன்  காயத்ரி :
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத  :  ப்ரசோதயாத்

கடகம்.   --   சந்திரன்  காயத்ரி :
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோம  :  ப்ரசோதயாத்

சிம்மம்.   சூரியன்  காயத்ரி :
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய :  ப்ரசோத்யாத்

தனுசு.   மீனம்-- குரு காயத்ரி :
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹி
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு :  ப்ரசோதயாத்

மகரம்.   கும்பம் -- சனி காயத்ரி :
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த :  ப்ரசோதயாத்
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  மே 1 - 15,  2014.   

Thursday, January 5, 2017

விமான ரகசியங்கள்!

பெரிய நிறுவனம் என்றால் ஒஸ்தியா?
     மிகப் பெரிய நிறுவனத்தின் விமானத்தில் செல்லும்போது பைலட்டும் நல்ல அனுபவம் பெற்றவாராக  இருப்பார் என்று நினைத்துவிட வேண்டாம்.  அவர்கள் உள் ஒப்பந்தத்தில் உள்ளூரைச் சேர்ந்த கற்றுக்குட்டி பைலட்டைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துவதும் நடக்ககூடியதே!  அதிக நேரம் ஓட்டினால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதால், அந்தப் பைலட்டுகள் மெதுவாகவே ஓட்டுவதும் உண்டு.
ஹெட் போன் கதையும் அதுதான் !
     விமானத்தில் ஏறியதும் தரப்படும் ஹெட்போன்கள் புதிதல்ல.  ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதை ஒவ்வொரு பயணத்தின்போதும் துடைத்து புதிய கவரில் போட்டு புதிதுபோலத் தருவார்கள்.
சுத்தம் சுகாதாரம் எப்படி?
     தலையணை,  போர்வைகளை எல்லா நேரமும் துவைத்து, காயவைத்து எடுத்துத்தருவார்கள் என்று நினைக்க வேண்டாம்.  ஒரு பயணம் முடிந்ததும் அப்படியே பதவிசாக மடித்து எடுத்துவைப்பார்கள்.  கேட்கும்போது புன்சிரிப்போடு தருவார்கள்.  நாமும் சுகந்தமான வாசனையில் மனதைப் பறிகொடுத்து வாங்கிக்கொள்வோம்.  வாசனை பணிப்பெண்ணிடமிருந்து வந்தது என்று நமக்குத் தெரியாது!  மிகப் பெரிய நகரில் காலையில் புறப்படும் முதல் விமானத்தில் மட்டுமே உண்மையில் துவைத்து சுத்தப்படுத்திய போர்வைகள், தலையணைகள் ஏற்றப்படும்.  அதேபோல, உங்கள் சீட்டின் முன்னால் இருக்கும் ட்ரே பரிசுத்தமானது என்று நினைத்து, அதில் வேர்க்கடலை, பொரித்த வற்றல்- வடாமெல்லாம் வைத்துச் சாப்பிடாதீர்கள்.  உங்களுக்கு முன்னால் பயணம் செய்த தம்பதியின் குழந்தை அதில் 'சூச்சா' போய் காய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
--  ஜூரி.  (கருத்துப் பேழை ).
-- 'தி இந்து' நாளிதழ்,  திங்கள், ஜூன் 9, 2014.  

Wednesday, January 4, 2017

செயற்கை மணல்.


     ஆற்று மணலுக்கு மாற்று பொருளாக, 'எம் சாண்ட்' எனப்படும் செயற்கை மணலை பயன்படுத்துவது, வழக்கத்துக்கு வந்துள்ளது.  தமிழகத்தில் சேலம், கரூர், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில், இதற்கான ஆலைகள், அதிக எண்ணிக்கையில் வரத்துவங்கியுள்ளன.  இருப்பினும், செயற்கை மணலை பயன்படுத்துவது தொடர்பாக, மக்களிடம் இன்னும் போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
     துவக்கத்தில், கல்லுடைக்கும் ஆலைகளில் இருந்து, கழிவாக வெளியேற்றப்படும் துகள்களே, மேலும் பொடியாக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் சுத்தம் செய்யப்பட்டு, செயற்கை மணலாக பயன்படுத்தப்பட்டு வந்தது
     ஆனால், இப்போது இந்த நிலை மாறிவிட்டது.  செயற்கை மணல் தயாரிப்பதற்கென, தனியாக ஆலைகள் வந்துள்ள நிலையில், கல்லுடைக்கும் ஆலை கழிவுகளை பயன்படுத்துவது கைவிடப்பட்டு, குவாரிகளில் இருந்து, பொடி ஜல்லிகள் என்ற நிலையில், சிறு ஜல்லிகள் வாங்கப்பட்டு, செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது.
     பொடி ஜல்லிகள் வாங்கப்பட்டு நொறுக்குதல், சலித்தல், வகை பிரித்தல், வடிவமைத்தல், அலசி கழுவுதல் ஆகிய நிலைகளில், இதன் உருவாக்கம் அமைந்துள்ளது.  உயர் தொழில் நுட்ப அடிப்படையில், பல்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, இவை தயாரிக்கப்பட்டு, தேவையான நிறுவனங்களுக்கு  அனுப்பப்படுகின்றன.
     வழக்கமான மணலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையை காட்டிலும்,இதற்கான கலவையில் சிமென்ட் தேவை, 20 சதவீதம் வரை குறைகிறது.  இதன்மூலம் கட்டுமான செலவில், சிமென்ட் வாங்குவதற்கு ஆகும் செலவும் மிச்சமாகும்.  அடிக்கடி செங்கல் விலை உயர்ந்து வரும் இன்றைய சூழலில், கட்டுமான பணிகளை மேற்கொள்வோருக்கு, இது சாதகமான விஷயமாக உள்ளது.
     பல்வேறு நிலைகளில் துல்லியமாக சுத்தப்படுத்தி தயாய்க்கப்படுவதால், வழக்கமான ஆற்று மணலில் இருப்பது போன்று இதில் மாசு, தூசு, களிமண் கட்டிகள், இலைகள் போன்றவை இருக்காது.  எந்த பணிக்கு, எந்த நிலையில் வேண்டுமோ அந்த அளவுக்கு செயற்கை மணல் கிடைக்கிறது எங்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
-- கனவு இல்லம்.
-- தினமலர் சென்னை சனி, 31-5-2014.                              

Tuesday, January 3, 2017

நீர்க் கசிவைத் தடுக்க...

   கட்டுமானப் பணிகளின்போதே நீர்க் கசிவையும் வெடிப்புகளையும் தடுக்க இப்போது புதிய வழிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.  அதாவது கான்கிரீட்டுடன் இந்தக் கலவையைச் சேர்க்கும்போது அந்தக் கலவைக்குள் நீர் புகாமல் தடுக்க முடியும்.  இந்தக் கலவையின் பெயர் பெனிட்ரான் அட்மிக்ஸ் ( Penetron Adimix ).
     பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைக் கான்கிரீட்டுடன் கலப்பதில் எந்த விகிதத்தைக் கடைப்பிடிப்பது என்று கேள்வி எழும்.  100 சதவீத கான்கிரீட்டின் சிமெண்ட் தன்மைக்கு 0.8 சதவீதம் கலந்தால் போதுமானது.  தண்ணீர்க் கசிவுத் தடுப்புக்காகப் பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை.  ஏற்கனவே இடப்பட்ட கான்கிரீட்டுகளின் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம்.  ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம்.  மேலும் இது மிகச் சிக்கனமான முறை.  இந்த்ஹக் கலவை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள் போன்ற இடங்களில் கட்டுமானங்கள் எல்லாம் நீருக்குள் மூழ்கிக் கிடக்கும்.  அதனால் கட்டுமானக் கம்பிகளுக்குள் நீர் புகுந்து கம்பிகளை அரித்துவிடும்.  அதனால் கட்டுமானம் மிக எளிதில் சேதமடைந்துவிடும்.  பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் இதைத் தடுக்க முடியும்.
-- லட்சுமி.   ( சொந்த வீடு ).
--  'தி இந்து' நாளிதழ் இணைப்பு.  சனி, நவம்பர் 29, 2014.   

Monday, January 2, 2017

பணம் கொழிக்கும் கட்டிடக் கலை

 கோபநோகன் நகரில் இருக்கும் டானிஷ் தொழிற்சாலைக் கூட்டமைப்பு கட்டிடமான 'தியா லைட்ஸ்' 4000 சதுர மீட்டர் பரப்புடையது.  அத்தகைய பிரம்மாண்டக் கட்டிடம் முழுவதும் பல கோடி வண்ணங்களில் தீ ஜுவாலை வளைந்து நெளிந்து திரிந்தால் எப்படி இருக்கும்?  கட்டிடக்கலை நிபுணர் மார்டின் கைவண்ணத்தில் 80,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது.  'தியா லைட்ஸ்'.  பரிசு பெறும் வகையில் இதில் மற்றொரு சிறப்பம்சமும் இணக்கப்பட்டுள்ளது.  ஒரு சிறப்பு 'ஆப்' மூலம் இந்தக் கட்டிடத்தின் முன்னால் நின்றபடி ஒருவர் தன் ஸ்மார்ட் ஃபோனில் எதைக் கிறுக்கினாலும் அது அப்படியே அந்தக் கட்டிடத்தில் தோன்றும்.
--  ம.சுசித்ரா.   ( சொந்த வீடு ).
--  'தி இந்து' நாளிதழ் இணைப்பு.  சனி, நவம்பர் 29, 2014.