Friday, June 20, 2008

சைகோட் - Zygote

மிக சில உயிர்களுக்கு ஒரே செல்தான் உண்டு. அதுவே இரண்டாகப் பிரிந்து கரு உற்பத்தியாகிறது. அண்ட கோசத்திலிருந்து முட்டை வெளியாகி ஆண் அணுவுடன் கலந்து கர்ப்பப் பையில் வந்து சேர்ந்து கரு ஏற்படுகிறது. பெண்ணின் உடம்புக்குள் இருக்கும் ஒவ்வொரு செல் முட்டைக்கும் கோடிக்கணக்கில் செல்களை உற்பத்தி செய்யும் சக்தி உண்டு. ஆண் அணுவுடன் கலந்த உடன் இந்த சக்தி அதற்குக் கிடைக்கிறது. அத்தனை செல்களும் சேர்ந்து சிசு என்ற புதிய படைப்பு ஒன்றைப் படைக்கிறது. முட்டையும் ஆண் அணுவும் சேர்ந்து உண்டாகும் செல்லுக்கு 'சைகோட்' (zygote) என்று பெயர். ஒவ்வொரு சைகோட்டும் இரண்டாகி அந்த ஒவ்வொன்றும் இரண்டாகி - இப்படியே பிளந்து பெருகிக் கொண்டு போகின்றன. செல்கள் எண்ணிக்கையில் பெருகப் பெருக, ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை ஏற்படுகிறது. அந்த செல்களைக் கொண்டுதான் மனித உடம்பின் பல பகுதிகள் அமைகின்றன. ஒவ்வொரு
'செல்'லும் கொஞ்சம் கொஞ்சமாக மனித உடலாக உருப்பெறுகின்றன.


பாடி மெஷின் - 20-04-1987

1 comment:

வடுவூர் குமார் said...

இப்படி பெறுகுவது ஏன் ஒரு குறிப்பிட்ட அளவில் நிற்கிறது? காரணம் என்ன?