Thursday, December 31, 2015

திருமழிசையாழ்வார்

   பெருமாளின் சக்கரம்.
     பார்க்கவ மகரிஷிக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் பிறந்த திருமழிசை என்ற திருநாமம் கொண்ட ஆண் மகவு,  பின்னாளில் பெருமாள் மேல் கொண்ட ஆறாத பக்தியால் பல பாசுரங்களை இயற்றித் திளைத்தது.  சக்கரத்தாழ்வாரே இத்திருக்குழந்தையாகப் பிறந்து திருமழிசை ஆழ்வார் என பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
     பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் பதிமூன்று திவ்விய தேசத் திருக்கோயில்களில் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-- ராஜேஸ்வரி ஐயர். ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன், பிப்ரவரி27, 2014.   

Wednesday, December 30, 2015

மரத்தடியில் கிடைத்த புதையல்

அமெரிக்க தம்பதிக்கு அதிர்ஷ்டம்.
*வாஷிங்டன் *
      வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு தம்பதி, தங்கள் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.  தங்களுக்குச் சொந்தமான நிலத்தில், ஒரு மரத்தின் கீழே, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, மிகப் பழமையான சிதிலமடைந்த உலோகக் குவளைகளில் தங்கக் காசுகள் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர்.
      அதைத் தோண்டி எடுத்த போது 1,400 தங்கக்காசுகள் இருப்பது தெரியவந்துள்ளது.  இவற்றின் மதிப்பு ரூ.62 கோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
     இது தொடர்பாக நாணயவியல் வல்லுனர் டான் காகின் கூறியதாவது : " அண்மையில் கிடைத்த தங்கப் புதையலில் இதுவே மிகப் பெரிய அளவாகும்.  இந்த தங்க நாணயங்களின் உண்மையான முக மதிப்பு 28 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகும் ( சுமார்
ரூ.17 லட்சம் ). ஆனால், அந்த தங்கக் காசுகளில் சில அரிதான காசுகளும் உள்ளன.  அவை ஒவ்வொன்றும் சுமார் ரூ.6.2 லட்சம் மதிப்புள்ளவை.  அவற்றை நாணய சேகரிப்பாளர்கள் விலைக்கு வாங்கத் தயாராகவுள்ளனர்.  கிடைத்துள்ள நாணயங்களில் பெரும்பாலானவை, தற்போது அருங்காட்சியகத்திலும், பெரும் நாணய சேகரிப்பாளர்களிடமும் உள்ளவற்றை விட மிக நல்ல வடிவமைப்புடன் கூடியவை. தங்கப் புதையல் கிடைத்த அந்த தம்பதி தங்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை.  பெரும்பாலான தங்கக் காசுகளை அவர்கள் விற்க முடிவு செய்துள்ளனர்" என்றார்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன், பிப்ரவரி27, 2014. 

சுரங்க ரயில் நிலையம்

 ( சிறப்பு )
ஆசியாவின்  மிகப்பெரிய  சுரங்க ரயில் நிலையம்  இன்று  திறப்பு
   ஆசியாவின்  மிகப்பெரிய  சுரங்க ரயில் நிலையம்  சீனாவின்  செஞ்சென்  நகரில்  கட்டப்பட்டுள்ளது.  இந்த  ரயில்  நிலையம்  இன்று  திறக்கப்படுகிறது.
   இதன்  மொத்த  பரப்பளவு  1,47,000  சதுர  அடியாகும். இது  21  கால்பந்து  மைதானங்களுக்கு  சமானதாகும்.  பூமிக்கடியில்  3  அடுக்குகள்  அமைக்கப்பட்டுள்ளன.     இங்கு  ஒரே  நேரத்தில்  3  ஆயிரம்  பயணிகள்  வரை  ரயிலுக்காக  காத்திருக்க  முடியும்.  இந்த  ரயில்  நிலையம்  வழியாக  முதல்  கட்டமாக  11  அதிவேக  ரயில்கள்  இயக்கப்பட  உள்ளன.  இந்நகரில்  இருந்து  15  நிமிடங்களில்  ஹங்காங்  செல்லமுடியும்.
-- ஐஏஎன்எஸ்.  தேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர் 30, 2015.   

Tuesday, December 29, 2015

டிப்ஸ்... டிப்ஸ்...

*  காய்களை விரைவாகவும் பதமாகவும் வேகவைக்க வேண்டுமா... தோல் சீவிய காய்களை வேகவிடும்போது, முதலில்
    தண்ணீரைக் கொதிக்கவிட்டு, பின்னர் காய்களைப் போட வேண்டும்.  தோலுடன்கூடிய காய்களை வேகவிடும்போது,
    காய்களை பச்சை தண்னீரில் போட்டு, பிறகு வேக வைக்க வேண்டும்.  'மைக்ரோவேவ் அவன்' என்றாலும், இதே போலவே
   வேகவைக்கலாம்.
* மோர்க்குழம்பு மிச்சம் இருக்கிறதா?... அதில் பாதியளவு அரிசி மாவைக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.  வாணலியில்
   நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு மூன்று மோர் மிளகாய்கள் ஆகியவற்றைத் தாளித்து,
  கரைத்து வைத்துள்ள மோர்க்குழம்பை ஊற்றி 2 நிமிடங்கள் கிளறினால்... மோர்க்களி தயார்.  அரிசி மாவை வறுத்துச் சேர்த்தால்
  உதிர் உதிரான மோர் உப்புமா கிடைக்கும்.
--- அவள் விகடன். 11-3-2014.  இதழ்...400.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.    

Monday, December 28, 2015

பொது அறிவு

*  முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில், அவருடைய நாட்டில் வாழ்ந்த 400 சிறந்த நடனக் கலைஞர்களின் பெயர்கள் தஞ்சை
   பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
*  அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரிக்கும் நன்முயற்சியாக, 400 விஷ சிலந்திகளுடன் மூன்று வாரங்கள் வசித்து உலக சாதனை
    படைத்தார் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த 67 வயதான நிக் லீ சொய்ப் என்ற பெண்மணி.
*  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறு எனும் தொகைநூல் 400 பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த சங்கத்
    தமிழ் பாடல்கள் கொண்ட நூலாகும்.
*  சென்னையின் புகழ்பெற்ற அண்ணா சாலை ( மவுன்ட் ரோடு ), உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆகின்றன.
*  பூமியின் அளவும், எடையும் கொண்ட ( கற்பாறைகள் மற்றும் இரும்பால் ஆன ) கோள் ஒன்று, சுமார் 400 ஒளி ஆண்டுகள்
   தொலைவில் இருப்பதாக கண்டரியப்பட்டு, கெப்லர் 78 பி ( KEPLER 78B ) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
*  கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் கூறும், 'ஏசு காவியம்' என்ற நூல்,
   400 பக்கங்களைக் கொண்டதாகும்.
*  400 கி.மீ.நீளம் கொண்ட தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென் பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் சிக்க
    பல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் பிறந்து, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
-- அவள் விகடன். 11-3-2014.  இதழ்...400.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

கண்டது

( சிவகாசி  கோனம்பட்டியில்  இராமகிருஷ்ண  சாரதா  ஆசிரமத்தில் )
 தெரிந்த  மனிதர்களுக்கு
 உதவி  செய்யும்போது
 நல்ல  மனிதன்.
 தெரியாதவர்களுக்கு
 உதவி  செய்யும்போது
 நீ  கடவுள்.
-- ஏ.எஸ்.ஆர்., வெள்ளூர்.
( திருநெல்வேலி  ஜங்ஷனின்  அருகில்  உள்ள  ஒரு  கலர்  லேப்பில் )
 QUALITY  BEGINS  WITH
 QUALITY  PEOPLE
-- ஜி.வினோத்,  கிருஷ்ணாபுரம்,  திருநெல்வேலி.
-- தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

Sunday, December 27, 2015

கம்மல் கம்ப்யூட்டர்

முக அசைவுகளால் இயங்கும் கம்மல் கம்ப்யூட்டர்
ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை.
    டோக்கியோ:
    கம்மலை போல் காதில் மாட்டிக்கொண்டு முக அசைவுகளால் இயங்கக்கூடிய 17 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய கம்ப்யூட்டரை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
    கம்ப்யூட்டர் யுகம் தொடங்கிய காலத்தில், வீடு அளவு பெரிதாக இருந்த கம்ப்யூட்டரில் வெறும் கணக்குகள் மட்டுமே போட முடியும் என்ற நிலை இருந்தது.  அதன்பின், கம்ப்யூட்டரின் அளவு குறைந்து, அதன் திறன் பலமடங்கு அதிகரிக்க தொடங்கியது.
    இந்த  கம்ப்யூட்டர், கைகளை பயன்படுத்தாமல் கண் சிமிட்டல், நாக்கை வளைப்பது, உதட்டை கோணுவது, புருவத்தை உயர்த்துவது, மூக்கை அசைப்பது போன்ற முக அசைவுகள் மூலமாகவே இயக்கலாம்.
    புளூடூத் வசதிக்கொண்ட இந்த கருவியில் சாப்ட்வேர் பதிவிறக்கம், தகவல்களை சேகரிப்பு போன்ற வசதிகள் உள்ளன.  மேலும், நாம் இருக்கும் இடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ், கைரோ சென்சார் தொழில்நுட்பங்களும் மைக், ஸ்பீக்கர் போன்ற வசதிகளும் உள்ளன.
    மலையேற்ற வீரர்கள் போன்ற, கைகளை பயன்படுத்தாமல் கம்ப்யூட்டர் உபயோகிக்க வேண்டிய தேவை உள்ளவர்களுக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த கம்ப்யூட்டர் மிகவும் உபயோகமாக இருக்கும்.
    இந்த கருவியின் ஆற்றல் குறித்து பேசிய ஆராய்ச்சியாளர் கசுஹிரோ டனிகுச்சி, " இந்த கருவியை மாட்டிக்கொண்டு நாம் ஒரு நட்சத்திரத்தை பார்த்தால், நாம் எந்த நட்சத்திரத்தை பார்க்கிறோம், அதை எந்த கோணத்தில் பார்க்கிறோம், நாம் பார்க்கும் நட்சத்திரத்தை நம்மை போல் உலகில் வேறு யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்ற தகவல்களை கம்ப்யூட்டர் தெரிவிக்கும்.
    மேலும், நம் உடலிலேயே இந்த கருவி பொருத்தப்படுவதால், நமது உடல்நிலை குறித்த தகவல்களை தருவதோடு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் நம்மை எச்சரிக்கவும் செய்யும்" என்றார்.
-- தினமலர்.  02-03-2014.  

Saturday, December 26, 2015

சும்மா தெரிஞ்சுக்கலாம்!

*  யானையின் உடலில் 107 மர்ம ஸ்தானங்கள் இருக்கின்றன.  அவற்றில் அடித்தால் யானைக்கு மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற
   அதிர்ச்சிகள் ஏற்படும்.
*  முதலையின் ஆங்கில வார்த்தை 'குரோக்கடைல்'.  இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது.  அந்த மொழியில் இந்த
   வார்த்தைக்கு அர்த்தமே 'பல்லி' என்பதுதான்.
*  மகாபாரத யுத்தம் நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் துவாரகையை கடல் கொண்டது.
*  ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வால்
   நட்சத்திரம் ஒன்றை எட்டிப்பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்றுகொண்டிருக்கிறது.
   அந்த விண்கலத்தின் பெயர் ரொசட்டா.

Friday, December 25, 2015

பார்னம் விளைவு

  உளவியலில் பார்னம் விளைவு என்ற அம்சம் ஒன்று உண்டு.  பார்னம் சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம்.  அதன் விதவிதமான ஆட்டங்கள் பலதரப்பட்ட மக்களுக்குப் பிடித்திருப்பதுதான்.  எல்லோருக்கும் எல்லாமும் பிடித்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.  ஆனாலும், ஒன்றிரண்டு ஆட்டங்கள் பிடித்திருப்பதால் சர்க்கஸ் முழுவதும் பிடித்திருக்கிறது.  இதே போன்று பல கணிப்புகள் சொல்லப்பட்டலும், பலித்திருக்கும் கணிப்பை மட்டும் நினைவில்கொள்கிறது.
    நம்பிக்கை சார்ந்த எதையும் மக்களுக்குத் தர்க்கரீதியாகப் புரியவைப்பது கடினம்.  சோதிடம் நம்பிக்கையைச் சார்ந்தது.
அறிவியலின் கடும் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.  அதனால் மாறுதல்களையும் அடைந்திருக்கிறது.  உதாரணமாக, புளூட்டோ என்ற 'முன்னாள்' கோள், இன்று கோளாக அடையாளம் காணப்படுவது இல்லை.  சோதிடம் இதே போன்று சோதனைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள முடியுமா?
--- பி.ஏ.கிருஷ்ணன்.  கருத்துப் பேழை.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள்,  மார்ச் 3  ,2014.  

Thursday, December 24, 2015

ஐந்து கேள்விகள்

 சோதிடத்தை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள்.  அது மனம் சார்ந்தது.  ஆனால், சோதிடம் அறிவியலின் ஓர் அங்கமா?  பல சோதிடர்கள் ஆம் என்கிறார்கள்.  அதற்கு அவர்களில் பலர் ஐந்து காரணங்களைத் தருகிறார்கள் என்று புகழ்பெற்ற விஞ்ஞானி நர்லிகர் சொல்கிறார்.
1.  வானவியலைப் போலவே சோதிடமும் கோள்களை ஆதாரமாகக் கொண்டது.  வானவியல், அறிவியலின் அங்கமாக இருக்கும்போதுசோதிடம் ஏன் இருக்கக் கூடாது.
2.  சில சோதிடர்களின் கணிப்பு துல்லியமாக இருக்கிறது என்பது உலகறிந்த ஒன்று.  எனவே, அவர்களது சோதிடத்தையாவது அறிவியல் என்று ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
3.  வானிலை மற்றும் மருத்துவத் துறையை எடுத்துக்கொள்ளுவோம், வானிலை அறிவிப்புகள் பொய்த்துப்போகின்றன.  மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் போகிறது.  இவற்றை அறிவியலின் அங்கமாக எடுத்துக்கொள்ளும்போது, சோதிடத்தை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
4.  சோதிடத்தைச் சரியாகப் படிக்காதவர்கள் சொல்வதூதான் பொய்த்துப்போகிறது.  நன்றாகப் படித்தவர்கள் சொல்வது பொய்க்காது.  அவர்கள் சொல்வதையாவது அறிவியல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  போலிகளை வைத்துக்கொண்டு, இந்தத் துறையையே குறைசொல்ல முடியாது.
5.  அறிவியலுக்குக் கொடிபிடிப்பவர்கள் சோதிடத்தைப் படிக்காமலும் சோதனைக்குள்ளாக்காமலும் அகந்தையோடு அதைப் புறந்தள்ளுகிறார்கள்.
--- பி.ஏ.கிருஷ்ணன்.  கருத்துப் பேழை.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள்,  மார்ச் 3  ,2014

Wednesday, December 23, 2015

சோதிடமும் அறிவியலும்

   எம்.ஜே.அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது.  குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில், ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு.  1950-களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம்.  நடக்கப்போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார்.  அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள்.  சோதிடர் சொன்ன நாள் 27 மே 1964.
     இந்தச் சம்பவத்துக்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த மத்தாய் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.  நேரு, அவரிடம் "நான் 74 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன்" என்று சொல்லியிருக்கிறார்.  சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் என்ற மத்தாய்க்கு நேரு அளித்த பதில்;  "இல்லை.  குடும்பத்தில் இருந்த ஆண்களின் வயதுகளின் சராசரியைக் கணக்கிட்டேன்.  சரியாக 74 வருடங்கள், 6 மாதங்கள், 13 நாட்கள் வருகின்றன."
     நேருவின் பிறந்த நாள் 14 நவம்பர் 1889.
-- பி.ஏ.கிருஷ்ணன்.  கருத்துப் பேழை.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள்,  மார்ச் 3  ,2014.  

Tuesday, December 22, 2015

கிரகங்கள்.

புதன்  --   அதிவேகம்
     சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் கோள்.  விநாடிக்கு 48 கி.மீ. வேகத்தில்.  88 நாட்களில் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிடுகிறது.
வெள்ளி  --  அதிவெப்பம்.
     சூரியக் குடும்பத்தின் வெப்பமான கோள்.  இதன் வளிமண்டலத்தில் 96 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடு நிரம்பியிருப்பதே காரணம்.  சராசரி வெப்பநிலை 4600 டிகிரி செல்சியஸ்.
செவ்வாய்  --  சிவந்த மண்.
     செவ்வாய் கோள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், அதில் இரும்பு ஆக்சைடு நிரம்பியிருப்பதுதான்.
வியாழன்  --  புயலடிக்கும்.
     வாயு மிகுந்த இந்தக் கோளின் எடையற்ற வளிமண்டலமும், வலுவான ஈர்ப்புவிசையும் பெரும் புயல் மேகங்கள் உருவாகக் காரணமாக இருக்கின்றன.  பூமியில் உருவாகும் புயல்களைப் போல 3 மடங்கு வலுவானவை அவை.
சனியின் டைட்டன்  --  மீதேன் மழை.
     சனி கோளின் மிகப் பெரிய நிலவான டைட்டனில் பெய்யும் மீதேன் மழையைக் கொண்டு ராக்கெட்டே ஓட்டலாம்.
நெப்டியூன்  --  அடர்த்தி.
     வாயுக்களால் நிரம்பிய, வெளிப்புறம் பனிப்படலத்தைக் கொண்ட நான்கு கோள்களில் நெப்டியூனும் ஒன்று.  அந்த வகையில் மிகவும் அடர்த்தியானது.
யுரேனஸ்  --  தொலைவு.
      சூரியனில் இருந்து பெறும் வெபத்தில் வெறும் 5 சதவீதத்தையே இது திரும்ப எதிரொளிக்கிறது.  சூரியனில் இருந்து தள்ளி இருப்பதே காரணம்.
நிலவு  --  குளிர்ச்சி
     வளிமண்டலமே கிடையாது என்பதால், இதைப் போல ஜில்லென்று துணைக்கோள் வேறு எதுவுமே இல்லை.  நிலவின் மறுபக்கத்தில் உள்ள சூரியனைப் பார்க்காத பெருங்குழிகள் குளிர் சுரங்கங்களாக இருக்கின்றன.
-- ஆதி.  நம்ப முடிகிறதா?  மாயாபஜார்.
--  'தி இந்து' நாளிதழ். புதன்,  மார்ச் 5  ,2014

Monday, December 21, 2015

இன்றைய பௌத்தம்.

அரச மரத்தைப் போற்றுவது ஏன்?
     தமிழகத்தில் பௌத்த, சமண எச்சங்கள் நம்மிடையே பல வகைகளில் இன்னமும் எஞ்சியிருக்கின்றன.  அதற்கான ஒரு நல்ல அடையாளம், அரச மரத்தைப் போற்றுவது.
     போதி என்று பாலி, வடமொழியில் அழைக்கப்படும் அரச மரம், பௌத்தர்களின் புனித மரம்.  அரச மரத்தடியில் நீண்ட காலம் செய்த தியானத்தின் முடிவில் புத்தருக்கு ஞானம் கிடைத்ததே இதற்குக் காரணம்.  இதனால் புத்தரைப் போலவே, அரச மரத்தைப் போற்றுவது பௌத்தர்களின் வழக்கம்.
     பழந்தமிழ் நூல்கள் பலவும் புத்தரைப் போதி மரத்துடன் இணைத்தே கூறுகின்றன.  பௌத்த மதத்தைப் பின்பற்றுவோரைத் தேவாரம் 'போதியர்'.  அதாவது அரச மரத்தைத் தொழுவோர் என்று குறிப்பிடுகிறது.  சங்ககாலத்தில் இருந்தே பௌத்த புலவர்களுக்கு 'இளம்போதியர்' என்று பெயர் இருந்ததாகப் பௌத்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், மார்ச் 6,2014.    

Sunday, December 20, 2015

வருத்தம் தந்த வாசகம் !


     சமீபத்தில் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தபோது, அதில் கண்ட வாசகம் :
    'வார்த்தை தடுமாற காரணம் கண்கள்,
     வாழ்க்கை தடுமாற காரணம் பெண்கள்'
    'மண்ணை நம்பினால் ஒரு கோடி,
    பெண்ணை நம்பினால் தெருக்கோடி'
-- இரா.பொன்னரசி, வேலூர்.
--   தினமலர். பெண்கள்மலர். 8-3-2014.                                    

Saturday, December 19, 2015

திருமண ஆண்டு நிறைவுப் பெயர்கள்!

முதலாம் திருமண ஆண்டு நிறைவின் பெயர்  --  பருத்தி.
2 ஆம் ஆண்டு  --  காகிதம்.
3 ஆம் ஆண்டு  --  தோல்.
4 ஆம் ஆண்டு  --  பழமும், மலரும்.                                          
5  ஆம் ஆண்டு --  மரம்.
6 ஆம் ஆண்டு  --  சர்க்கரை.
7  ஆம் ஆண்டு --  கம்பளி.
8  ஆம் ஆண்டு --  உப்பு.
9  ஆம் ஆண்டு -- செம்பு.
10  ஆம் ஆண்டு --  தகரம்.
12  ஆம் ஆண்டு  --  பட்டு நைஸ்லின்.
15  ஆம் ஆண்டு ..கிறிஸ்டல்.
20  ஆம் ஆண்டு -- சைனா.
25  ஆம் ஆண்டு  --  வெள்ளி.
30  ஆம் ஆண்டு --  முத்து.
40  ஆம் ஆண்டு -- ரூபி.
50  ஆம் ஆண்டு -- பொன்.
60  ஆம் ஆண்டு திருமண ஆண்டு நிறைவின் பெயர் -- வைரம்.
-- மா.கல்பனா பழனி, கூத்தப்பாடி.
--  தினமலர். பெண்கள்மலர். 8-3-2014.  

Friday, December 18, 2015

எத்தனை சிரிப்பு...


தனக்குள் சிரிப்பவன் ஞானி.
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச் சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி.
--  சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.
-- தினமலர். பெண்கள்மலர். 8-3-2014.                                    

Thursday, December 17, 2015

3 ! ( மூன்று )

வெற்றிக்கு 3! :  அதிகமாக அறிந்துகொள்ள முயலுங்கள்.  அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குறைவாக
                           பிறரரிடமிருந்து பெற முலுங்கள்.
கடினமான 3! : ரகசியத்தை காப்பது.  இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.  ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.
நன்றிக்கு 3 ! :   இதயத்தால் உணர்தல்.  சொற்களால் தெரிவித்தல்.  பதிலுக்கு உதவி செய்தல்.
பெண்மைக்கு 3 !: அடக்கம்.  உண்மை.  கற்பு.
மகிழ்ச்சிக்கு 3! :  சென்றதை மறப்பது.  நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. வருங்காலத்தை பற்றி சிந்திப்பது.
இழப்புக்கு 3! : சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.  அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.  திருமணம் பொருந்தா
                         விட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.
உயர்வுக்கு 3! : ஒழுக்கத்தோடு இருந்தால் கவல்யில்லை.  அறிவாளியாக இருந்தால் குழப்பங்கள் இல்லை. துணிவாக இருந்தால்
                          அச்சமில்லை.
-- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.
-- தினமலர். பெண்கள்மலர். 8-3-2014. 

Wednesday, December 16, 2015

சர்க்கரை மூலம் சார்ஜ்

சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி உருவாக்கம்.  10 நாள்களுக்கு மின்னாற்றல் தரும்.
*  வாஷிங்டன்  *
      சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் ஆகிக்கொள்ளும் பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாள்களுக்கு மின்னாற்றல் தரும் என்பது இதன் சிறப்பம்சம்.
     தற்போது ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்களுக்கு லித்தியம் - அயன் வகை பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன.  இவ்வகை பேட்டரிகள் செயலிழந்த பிறகு உரிய முறையில் அப்புறப்படுத்தபடாவிட்டால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை.  மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருநாள் அல்லது அதிகபட்சமாக 2 நாள்களுக்குத் தாங்கும்.
     ஆனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து உழைக்கக் கூடிய அதுவும் சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் செய்துகொள்ளத்தக்க பேட்டரியை விர்ஜீனியா பாலிடெக்னிக் மற்றும் அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
      முழுக்க முழுக்க உயிர்பொருள்களால் இந்த பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது.  தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் இதர பேட்டரி வகைகளை விட எடை குறைவானதும், திறன் மிக்கதுமாகும்.
      இந்த பேட்டரியில் சர்க்கரையைச் சேர்க்கும் போது, அந்தச் சர்க்கரை மெல்ல கார்பன் டை ஆக்ஸைடு ஆகவும், நீராகவும் பிரிகிறது.  இந்த வளர்சிதை மாற்றத்தின் போது வெளிப்படும் எலக்ட் ரான்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து சேமித்துக் கொள்கிறது.
    "லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தும்போது ஸ்மார்ட் போனில் ஒரு நாளுக்கு மட்டுமே அதன் எரிசக்தி நீடிக்கும்.  ஆனால், சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் இந்த புதிய பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாள்களுக்கு நீடிக்கும்"
      இந்த பேட்டரியில் உள்ள 2 நொதிப்பான்கள் ( என்சைம்கள்) சர்க்கரையிலுள்ள ஜோடி எலக்ட்ரான்களைப் பிரிக்க உதவுகின்றன.  மற்ற 10 நொதிப்பான்கள் இதே செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய உதவுகின்றன.  மீண்டும் இச்செயல் நடைபெறும்போது, அடுத்த இரு நொதிப்பான்கள் செயல்பட்டு எலக்ட்ரான்களைப் பிரிக்கின்றன.  இதுபோன்று ஆறு சுழற்சிகளில் நொதிப்பான்கள் சர்க்கரை மூலக்கூறிலுள்ள அனைத்து சக்தியையும் எரிபொருளாக மாற்றிவிட்டுகின்றன.
-- பி.டி.ஐ. - சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். திங்கள், மார்ச் 3,2014. 

Tuesday, December 15, 2015

'போயிங்' மொபைல்போன்

பாதுகாப்பான மொபைல்போன் 'போயிங்' நிறுவனம் கண்டுபிடிப்பு.
*  சிகாகோ *
     உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக்கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.
     கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும்.  அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
     இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.  ஜிஎஸ்எம், டபிள்யூ சிடிஎம்ஏ மற்றும் எல்டி இ தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு மைக்ரோ சிம்கார்டுகளை இந்த போனில் பயன்படுத்த முடியும்.  இந்த போனில் மேற்கொள்ளும் உரையாடல்களை மற்றவர்கள் இடைமறித்துக் கேட்பது சிரமம்.
     தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளத் தக்க வகையில் எச்டிஎம்ஐ கேபிளை இணைப்பதற்கான வசதியும் இந்த மொபைல் போனில் தரப்பட்டு உள்ளது.  யூஎஸ்பி, வைபை, புளுடூத் போன்ற வசதிகளும் உள்ளன.
     அங்கீகரிக்கப்பட்ட குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த உயர்ரக போனை விற்பனை செய்ய போயிங் திட்டமிட்டுள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த போன் விற்பனை செய்யப்பட்டாலும், அவர்கள் இந்த போனின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிடமாட்டோம் என ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.
     பொதுமக்களுக்கு இந்தப் போனின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழிநுட்பம் குறித்த தகவல்கள் வெளியிடப்படமாட்டாது எனவும் போயிங் அறிவித்துள்ளது.
     இந்த போன் திறக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.  மீறித் திறக்க முயன்றால் அதிலுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்து விடும்.  பிளாக் போன் எனப் பெயரிடப்பட்ட இந்த போனுக்கு மாற்று உதிரிபாகங்களை மாற்ற முயன்றாலும் போன் அழிந்து விடும்.
-- சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். திங்கள், மார்ச் 3,2014.  

Monday, December 14, 2015

அரசன் -- தெய்வம்


"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.  நீதி...?"
"எங்கோ, எப்போதோ படித்த கவிதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது...
 'ஒரு
  மருத்துவரின் தவறு
  ஆறடி மண்ணில்
  புதைந்துவிடுகிறது.
  ஒரு
  நீதிபதியின் தவறோ
  ஆறடி உயரத்தில்
  தொடங்கிவிடுகிறது !'
  புரிஞ்சுதா?"
-- முத்தூஸ், தொண்டி.
"லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில், 450 கோடி செல்வுசெய்து ராக்கெட் விடுவது தேவையா?"
"லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில், தீபாவளியன்று நாம் விடும் பொம்மை ராக்கெட்டுகளின் மதிப்பு
அந்த 450 கோடியையும் மிஞ்சும் சாரே.  அது தேவையா என்று முதலில் சொல்லுங்கள் !"
-- ஜெ.சரவணன், சென்னை.
-- நானே கேள்வி...நானே பதில் ! பகுதியில்...
-- ஆனந்த விகடன்.11-12-2013.                                 

Sunday, December 13, 2015

செல்போன்

  செல்போன் செயல்பட மூலகாரணமாக இருக்கும் பேட்டரியின் சார்ஜ் தாக்குபிடிக்க சில ஆலோசனைகள் :
*   புது பேட்டரியை ஆப் செய்த நிலையில் 8 மணிநேர சார்ஜ் போடவேண்டியது அவசியம்.  பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால்
    போன்றது இது.
*  பேட்டரியின் சார்ஜ் அளவு பாதிக்கும் கீழ் குறைந்த பிறகு சார்ஜ் செய்வது அதன் ஆயுளைஅதிகரிக்கும்.  அதற்காக லோ
    பேட்டரி காட்டும் அளவுக்கு காயப்போடவும் கூடாது.  நீண்ட நேரம் சார்ஜ் செய்வது தவறு.  3 முதல் 4 மணி நேரமே போதும்.
*   புளூடூத் சேவையை உபயோகப்படுத்தி முடிந்ததும் அணைத்துவிட வேண்டும்.  இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள
    செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை உபயோகப்படுத்தும்.  புளூடூத் வழியாக வைரஸ்களும்
    பரவ வாய்ப்பிருப்பதால், தேவையில்லாதபோது அணைத்து வைப்பது பேட்டரிக்கு மட்டுமல்லாமல், செல்போனுக்கும் நல்லது.
*   காரணமில்லாமல் வைப்ரேஷன் மோட் எனும் அதிர்வில் வைத்திருப்பது, சார்ஜ் அதிகமாக குடிக்கும்.  அதே போல் கீ பேட்
    டோன், ஸ்டாட் அப் டோன் போன்றவையும் அவசியமானவை அல்ல.  தேவைப்படின் ஒலி அளவை குறைத்து பயன்படுதலாம்.
*   செல்போனை அழகாக காட்டுகிறது என்பதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால் பேப்பர் போன்ற சேவைகளை
    பயன்படுத்துவது பேட்டரியின் சார்ஜை குறைக்கும்.  அதேபோல டவர் இல்லாத இடங்களில் அணைத்து வைப்பது நல்லது.
*   அடிக்கடி உபயோகப்படுத்தும் ஆபரேஷன்களை மட்டும் ஆக்டிவில் வைத்துக்கொள்ளலாம்.  எப்போதாவது உபயோகிக்கும்
    ஆபரேஷங்கள். தேவையில்லாத ஆபரேஷன்களையும் ஆப் செய்து வைப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும்.
*   ஓடியாடி விளையாடுவது எப்படி உடலில் உள்ள கலோரிகளை எரிக்குமோ, அதே போல செல்போனில் கேம்ஸ்
     விளையாடுவதும் அதன் சக்தியை அதிக அளவில் செலவழிக்கும்.  எனவே பேட்டரி நலன் கருதுபவர்கள்  அளவாகவே
     விளையாடுங்கள்.
--   சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 2-3-2014. 

Saturday, December 12, 2015

இணைய வெளியிடையே...

*   எல்லாவற்றையும் மக்கச்செய்து அழித்துவிடும் மண், விதையை மட்டும் உயிர்பிக்கச் செய்வதுதான் இயற்கையின் மிகப்
    பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று...!
    -- thimiru @ twitter.com
*   கூட்டமாக இருக்கும் பசுக்களை "HERD OF COWS" என்றுதான் ஆங்கில இலக்கணப்படி அழைக்க வேண்டும்.
    மீன்களின் கூட்டத்தை "SCHOOL"  என்றும்,  சிங்கங்களின் கூட்டத்தை "PRIDE"  என்றும்,  செம்மறி ஆடுகளின் கூட்டத்தை
   "FLOCK"  என்றும்,  காகங்களின் கூட்டத்தை "MURDER"  என்றும் அழைக்க வேண்டூம்.
    ஆனா இதெல்லாத்தையும் விட சுவாரஸ்யமானது என்னன்னா ஆந்தைகளின் கூட்டத்தை "PARLIAMENT"  என்றும்,  பபூன்
   குரங்குகளின் கூட்டத்தை "CONGRESS" என்றும் சொல்ல வேண்டுமாம்.
--- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 2-3-2014.  

Friday, December 11, 2015

எந்த வாசனை நல்ல வாசனை?

*   லாவண்டர் நறுமணம் மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸான மனநிறைவைத்தரும்.
*   ரோஜா மணம் காதலைத் தூண்டும்.  படுக்கையறையில் இதைப் பயன்படுத்தலாம்.
*   எலுமிச்சை புத்துணர்ச்சியும், ஆற்றலையும் தரும்.  அது பூச்சிக்கொல்லியும்கூட .
*   திரவ நறுமணப் பொருள்கள் குளிர்ச்சியான உணர்வைத் தருவதுடன், அமைதியான சூழலை ஏற்படுத்தவும் உதவும்.
*   மல்லிகையின் நறுமணம் இனிமையான புத்துணர்ச்சியைத் தரும்.
-- சொந்த வீடு.
--   'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 1,2014. 

Thursday, December 10, 2015

விநாயகர் மண்சிலை

  நாம் பூஜிக்கும் இறைவனின் திருவுருவத்தை இரண்டு விதமாக வைத்து கொள்ளலாம்.  ஒன்று கருங்கல், உலோகம் போன்றவற்றினால் செய்து நிரந்தரமாக வைத்துக் கொள்வது.  மற்றொன்று மஞ்சள்பொடி, சந்தனம், மண், கோமயம் போன்றவற்றினால் திருவுருவம் செய்து பூஜை முடிந்தவுடன் கரைத்துவிடுவது.  இதற்கு க்ஷணிக உருவம் என்று பெயர்.  இப்படிச் செய்வதற்குக் காரணம், எல்லோராலும் நிரந்தரமாக சிலை வைத்து தினமும் வழிபட இயலாது.  வீட்டில் சிலை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றால் மாமிசம் உண்பது, மாதவிடாய் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பது போன்றவை கூடாது.  இப்படிப்பட்டவர்கள் கோயிலுக்கு மட்டும் சென்று வழிபடுவது வழக்கில் இருந்தது.
     விநாயகர் சதுர்த்தியன்று க்ஷணிக உருவத்தில், அதாவது மண் சிலை விநாயகரை வைத்து வழிபட்டு ஆற்றில் கரைக்கும் வழக்கம் தோன்றியது.  காலப்போக்கில் நிரந்தரமாக சிலை வைத்திருப்பவர்கள் கூட அன்றைய தினம் மட்டும் மண் சிலை வழிபடுவதும் வழக்கில் வந்தது.  எப்படி இருந்தாலும் மண் சிலை விநாயகரை கரைப்பது என்ற சம்பிரதாயத்தை மாற்ற இயலாது.  மெகா சைஸ் மண் சிலைகள் கரைப்பதுதான் பல கோயில்களுக்கு இடமளிக்கிறது.
-- மயிலாடுதுறை. ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார். ( அறிவோம்! தெளிவோம்!)
-- தினமலர்.பக்திமலர். பிப்ரவரி 27, 2014.  

Wednesday, December 9, 2015

சாக்லெட் சாப்பிடுங்க...

சாக்லெட் சாப்பிடுங்க...இதயத்துக்கு நல்லது
     டார்க் சாக்லெட்டுகள் சாப்பிடுவது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது.  டார்க் சாக்லெட்டுகளை சாப்பிடுவது, தமனிகளின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது.  மேலும், ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது.
    தமனிகளின் விரைப்புத்தன்மையும், வெள்ளை அணுக்களின் ஒட்டும்தன்மையும் தமனி வீக்கத்துக்குக் காரணமாக அமைகின்றன.  இச்செயல்கள் தடுக்கப்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
    நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றும் நுண்ணூட்டக் கழக ஆய்வுக்குழுவின் டைடெரிக் எஸ்ஸெர் கூறியதாவது : " டார்க் சாக்லெட்டுகளில் உள்ள பிளாவனல்கள் உணவு அருந்தும் தூண்டலை நிறுத்துகின்றன.  இந்த சாக்லெட்டுகள் ஆரோக்கியமானவைதான்" என்றார்.
    நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண்டனர்.
--  பி.டி.ஐ.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 1,2014.   

Tuesday, December 8, 2015

பிட்காயின்

பிட்காயின்களுக்கு வியட்நாம் தடை.
      வியட்நாமிலுள்ள வங்கிகள் பிட் காயிங்களைக் கையாளக்கூடாது என அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.  டிஜிட்டல் நாணயமான பிட் காயின்கள் யாரால் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்பதைப் பிறர் அறியாமல் பயன்படுத்த முடியும்.  சங்கேத குறியீடுகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் பிட் காயின்கள்பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
    "பிட்காயின்களின் உரிமையாளர்,வர்த்தகம், பரிவர்த்தனை, அதன் சொத்து மதிப்பு ஆகியவை அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அபாயத்தை அளிப்பவை.  இதனைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.  பிட் காயின்கள் மூலம் முதலீடு செய்வது, பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை" என வியட்நாம் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
     வியட்நாமில் பிட் காயின்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதில்லை.  இருப்பினும் பிட் காயின்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
     கடந்த செவ்வாய்க்கிழமை பிட் காயின்களின் மிகப் பெரிய பரிவர்த்தனை சந்தையான ஜப்பானின் எம்டி காக்ஸ் ( எம்டி ஜி ஓஎக்ஸ் ) திடீரென முடங்கியது.  இது பிட் காயின்களைப் பயன்படுத்துவோரிடையேபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 1,2014.  

Monday, December 7, 2015

715 புதிய கோள்கள்

715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு.  நாசா அறிவிப்பு.
     இதுவரை மனிதர்களால் அடையாளம் காணப்பட்ட கோள்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.  நம் சூரிய குடும்பத்துக்கு வெளியே தற்போது மட்டும் 715 புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன என நாசா அறிவித்திருக்கிறது. கெப்ளர் தொலைநோக்கி புதிய உத்தி மூலம் புதிய கோள்களுக்கான தேடலில் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
     மனிதர்களூக்குத் தெரிந்த கோள்களின் எண்ணிக்கை இன்று இரு மடங்காகியிருக்கிறது.  305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.
     புதிய கோள்கள் கண்டறியப்பட்டாலும், இக்கோள்களின் கூட்டுப் பொருள்கள் ( அல்லது எவற்றையெல்லாம் உள்ளடக்கியவை ) என்பது குறித்த அதிக விவரங்கள் தெரியவில்லை.  கடினமான தரை, நீர், அவை சுற்றிவரும் நட்சத்திரங்களிலிருந்து அவற்றின் தொலைவு, உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஆகியவை குறித்து அறியப்படவில்லை.  அந்தக் கோள்கள் அதிக வெப்பமுடையவையா, கடும் குளிர் நிலவும் பிரதேசமா என்பன போன்ற விவரங்களும் அறியப்படவில்லை.  ஆனால், தங்கள் நட்சத்திரங்களை அவை பலமுறை கடப்பதை வானிலையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். வெள்ளி, பிப்ரவரி 28 , 2014.  

Sunday, December 6, 2015

மின்சார தகனமேடை.


     உடலை எரியூட்டுதல் என்பது மிக அதிகமான வெப்பத்தின் மூலம் அந்த உடலை முழுவதுமாக மறைய வைப்பதாகும்.  ஆனால், எலும்புகள் மட்டும் மிஞ்சும்.  இவை பின்னர் சாம்பலாகிவிடும்.
     மின்சார தகனமேடைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால் வெப்பத்தால் வெடித்துவிடும் பொருள்களை உடலிலிருந்து நீக்கி விடுவார்கள்.  உதாரணமாக இதய துடிப்பு சரியில்லை என்று அவர் உடலில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியிருந்தால் அதை நீக்கிவிடுவார்கள்.
     பிறகு சுலபத்தில் எரியக்கூடிய மரக் கட்டை, அட்டை, கீற்று போன்றவற்றை உடலில் வைத்து தகன அறைக்குள் தள்ளிவிடுவார்கள்.  உடல் உள்ளே சென்றவுடன் கதவுகள் தானாக மூடிக்கொள்ளத் துவங்கும்.  உள்ளே இருக்கும் வெப்பம் 1100 டிகிரி பாரஹீட் ( அல்லது 593 டிகிரி செல்சியஸ் ).  உடலில் 75 சதவீதம் தண்ணீர்தான்.  எனவே இத்தனை வெப்பத்தில் அது சீக்கிரம் நீரை இழந்து உலர்ந்துவிடுகிறது.  மெல்லிய திசுக்கள் எரிந்துவிட , தோல் மெழுகு போல் ஆக... போதும் இதற்கு மேல் விளக்கம் வேண்டாம்.  ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்தில் பொதுவாக மின்சார தகன் மேடை உடலை எரித்து விடுகிறது.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை ?!
-- தினமலர். சிறுவர்மலர். பிப்ரவரி 28, 2014.                                     

Saturday, December 5, 2015

விடை தேடும் பயணம்.

*   ஏ.கே.47 துப்பாக்கியில் உள்ள 47 என்பது எதைக் குறிக்கிறது?
     -- 'ஆட்டோமேடிக்' என்பதிலிருந்து A , இத்துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலாஷ்நிகோவ் பெயரிலிருந்து K, இது முதலில்
     தயாரிக்கப்பட்ட வருடமான 1947 லிருந்து 47 ஆகியவற்றை இணைத்துத்தான் இது AK 47 என்று அழைக்கப்படுகிறது.
*   நோபல் பரிசுகளுக்கான நோபல் குறித்த தகவல் உண்டா?
     -- பொருளாதாரப் பிரிவில் தற்போது நோபல் விருது வழங்கப்படுவது, நோபலின் உயிலில் காணப்படும் வாசகத்தைப்
     பின்பற்றிய ஒன்றல்ல.  அந்த விருதை ராயல் ஸ்வீடிஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற அமைப்பே வழங்குகிறது.  நோபல்
     பெயரில் உள்ள தனிமத்தின் பெயர் நோபலியம்.( Nobelium ).  இதன் அணு எண் 102.
*   பஞ்சாபில் உள்ள லூதியானா எந்தத் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது?
     --- பஞ்சாபிலுள்ள  மிகப் பெரிய நகரம் லூதியானா.  லோடி பரம்பரையினர் இங்கு கோலோச்சியடைத் தொடர்ந்து இப்பெயர்
    சூட்டப்பட்டது.  இங்கு சைக்கிள்கள் மிக அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
*   பிரபல அரசியல்வாதியின் பேரன் தொடங்கியதுதான் 'பாம்பே டையிங்' நிறுவனம். அந்த அரசியல்வாதி யார்?
     -- இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒரு முக்கியக் காரணமாக விளங்கிய ஜின்னாவின் பேரனான நுஸ்லி வாடியாதான்.
*   வெள்ளி உலோகத்தின் பெயர் சூட்டப்பட்ட நாடு எது?
    -- நைஜீரியா என்ற பெயர் அந்த நாட்டில் ஓடும் நைஜர் நதியிலிருந்து வந்தது.  கோஸ்டரிகா என்றால் செல்வம் கொழிக்கும்
    கடற்கரை என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தம்.  அந்த கடற்கரையில் நிறைய தங்கம் இருக்குமென்று, அங்கு முதலில் சென்ற
    ஸ்பானியர்கள் நினைத்தனர்.  அர்ஜெண்டினம் என்பது வேதியியலில் வெள்ளியின் பெயர்.  அது அதிகமாகக் கிடைப்பதால்
    அந்த நாட்டின் பெயர் அர்ஜெண்டினா ஆனது.
*   ஒலிம்பிக் கொடியில் எவ்வளவு வண்ணங்கள் உள்ளன?
     -- மஞ்சள், நீலம், கறுப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து வண்ண வட்டங்கள் ஒலிம்பிக் கொடியில் உள்ளன.  என்றாலும்
     பின்னணியாக இருக்கும் வெள்ளையையும் சேர்த்தால், ஆறு என்பதுதான் சரியான விடை.
---ஜி.எஸ்.எஸ்.  வினாடி வினா. வெற்றிக்கொடி.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி 24 , 2014. 

Friday, December 4, 2015

பிரசாதம்

 ஹோமங்கள், யாகங்கள் ஆகியவை தேவர்களையும் தெய்வங்களையும் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படுபவை.  இவற்றால் மகிழ்ச்சியடையும் தேவர்கள், மனிதர்களுக்கு அருள்புரிவார்கள்.  'இது எனதல்ல' என்னும் மனநிலையோடு தெய்வங்களுக்கு அர்ப்பணம் செய்வதே யாகங்களின் அடிப்படை.  இந்த அர்ப்பணத்துக்கான பலன் அர்ப்பணம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்கும்.  அந்த யாகங்களில் சிலவற்றையும் அவற்றின் பலங்களையும் இங்கே காணலாம்.
பஞ்ச யக்ன ஹோமத்தின் பலன்கள்:
*   கணபதி ஹோமம்  --  தடைகள் விலகி சகல செல்வங்களும் கிடைக்கும்.
*   மகாசண்டி ஹோமம்  --  பயம், தரித்திரம், எதிரிகள் தொல்லை நீங்கும்.
*   நவக்கிரக ஹோமம்  --  கிரக தோஷங்களை நீக்கும்.
*   மகாசுதர்சன ஹோமம்  --  ஏவல், பில்லி, சூனியம், எதிரிகளை அழிக்கும்.  வெற்றி கிட்டும்.
*   ருத்ர ஹோமம்  --  ஆயுள் விருத்தியடையும்.
-- தொகுப்பு : யோகி.  ஆனந்த ஜோதி.
---'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 13 , 2014.  

Thursday, December 3, 2015

எண்களின் மாயாஜாலம்

  37 என்னும் எண்ணை மூன்று மற்றும் அதன் மடங்கால் பெருக்குங்கள்.  விடைகளின் வரிசை உங்களை ஆச்சரியப்படுத்தும்.
37  x  3  =  111
37  x  6  =  222
37  x  9  =  333
37  x  12 = 444
37  x  15 =  555
வெவ்வேறு எண்களைப் பயன்படுத்தி நீங்களும் இதுபோல முயற்சி செய்து பாருங்களேன்.
-- எஸ்.திருமலை, கோயம்புத்தூர்.
--'தி இந்து' நாளிதழ். புதன், பிப்ரவரி 26,2014.  

Wednesday, December 2, 2015

யானை

*  யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன.  ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.
*  ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு.  ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே
   தந்தங்கள் உண்டு.  உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.
* பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன.  யானைகளின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
*  யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.
*  யானைகளுக்குப் பெரிய, மெல்லிய காதுகள், யானையின் காதுகளில் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் அவற்றின் உடல்
   வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன.  உஷ்ணமான தட்பவெப்பநிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம் அதன்
   உடலைக் குளிர்விக்கிறது.
* பொதுவாக யானைகளை எந்தப் பிராணியும் உணவாகக் கொள்வதில்லை.  இருப்பினும் ஆப்பிரிக்க சிங்கங்கள், குட்டி
   யானைகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள யானைகளை வேட்டையாடித் தின்னும்.  யானைகளுக்குப் பெரிய
   அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மனிதர்களே.
*  யானைகளின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்பநிலையை உணர முடியும்.  உணவைத் தூக்கவும்,
   தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் தும்பிக்கை பயன்படுகிறது.
*  யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக்கூடியது.  தும்பிக்கையின் கனம் 140 கிலோகிராம்.  ஒரு லட்சம் தசை
   நாண்களால் உருவாக்கப்பட்டது அது.  ஆனால், தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.
*  பெண் யானைகள் சேர்ந்து வாழக்கூடியவை.  ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து செல்கின்றன.
   அந்த வயதிலிருந்து ஒரு ஆண் யானை தனியாகவே வாழத் தொடங்குகிறது.
*  யானைகள் தாவர உண்ணிகள்.  இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்ப்பகுதிகளை உணவாக கொள்கின்றன.
-- ஷங்கர்.  உயிரினங்கள் யானை.  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், பிப்ரவரி 26,2014.  

Tuesday, December 1, 2015

பெருமாளின் வாள்

 தொண்டைமண்டலத்தில் உள்ள சென்னப் பட்டினமான இன்றைய சென்னை நகரில் பிரபலமான திருமயிலையில் கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர் பேயாழ்வார்.  ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிறந்த இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாள் அம்சமாகப் பிறந்தவர்.
   பேயாழ்வார், நாலாயிரத் திவ்வியயப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் நூறு வெண்பாக்களை கொண்டுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.
   பேயாழ்வார், பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருக்கு சமகாலத்தவர்.  இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிகுந்த வகையில் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே இறையுணர்வுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
    அப்போது இறைவனுடன் ஏற்பட்ட ஆனந்தம் உள்ளடங்காமல் செய்யுள் வடிவமாக வெளிவரலாயிற்று.  அச்செய்யுள் தொகுதி முறையே பொய்கையாழ்வாருடைய முதல் திருவந்தாதி, பூதத்தாழ்வாருடையது இரண்டாம் திருவந்தாதி, பேயாழ்வாருடையது மூன்றாம் திருவந்தாதி எனப் பெயர் பெற்றன.
    இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டும் ஒன்றே என்ற ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் என்றும் கருதப்படுகிறது.
    இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர்.  இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் மற்றவர்களிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டின.  தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர்போல, கண்கள் சுழலும்படி விழுந்தார், எழுந்தார், தொழுதார், குதித்து ஆடினார், பாடினார், பெருமானை விண்ணுலகத்தில் விட்டுவிட்டு, தான் மட்டும் பூலோகத்தில் இருந்ததால் ஏற்பட்ட பிரிவாற்றாமை தாளாமல் அலறினார்.  இதனால் இவரைப் பேயாழ்வார் என்று குறிப்பிட்டு பக்தர்கள் கொண்டாடினர்.
     பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திருக்கோயில்கள் வேளுக்கை, திருக்கடிகை, திருவல்லிக்கேணி, திருவிண்ணகரம், திருக்கோஷ்டியூர், திருப்பாடகம், திருவெக்கா,திருமாவிலஞ்சோலை, கும்பகோணம் மற்றும் திருவேங்கடகம்.
     திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி மலர்கிறதாம்.  அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதை அவரது கற்பனை சக்திக்கு உதாரணமாகக் கூறலாம்.
-- ராஜேஸ்வரி ஐயர்.  ஆழ்வார்கள். ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 13,2014.

Monday, November 30, 2015

இணைய வெளியிடையே...

*  உலகில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு கியூபா!  கியூபாவில் 1000 பேருக்கு 6.7 மருத்துவர்கள் உள்ளனர்.
    ( இந்தியாவில் 0.6 தான் ).
*  சில எறும்புகள் துண்டு இலைகளை தமது இருப்பிடத்தில் புதைத்து மக்கச் செய்து புஞ்சைகளை வளர்த்து விவசாயம் செய்து
    சாப்பிடும் !
*  நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று திரும்பியபோது அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை சோதனையிட்டார்களாம்!
   -- tamilfacts@twitter.com
*  தாத்தா உறவினர்களுக்கு ஆதரவாக இருந்தார் !  அப்பா ஆறுதலாக இருந்தார் !  நான் அனுதாபம் தெரிவிப்பதோடு நிறுத்திக்
   கொள்கிறேன் !
   -- naiyandi @twitter.com
*  பிள்ளை பெற்றபோது அவள் அழுதாள்.  பில்லைப் பெற்ற போது நான் அழுதேன்.  # மருத்துவமனை.!
   --oruvan@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர்.  ஞாயிறு,  6-4-2014.  

Sunday, November 29, 2015

ஐம்பூதங்கள்

  இந்த உலகின் ஐந்து அடிப்படை அம்சங்கள் நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு ( வானம் ) ஆகியவை.
--  சூழல் மரபு. உயிர்மூச்சு .  டி.கார்த்திக் ஆதி
     ஐம்பூதங்களின் அடிப்படையில்தான் இந்தப் பூவுலகும், அதில் உள்ள உயிரினங்களும் தோன்றின என்பது தமிழர் கோட்பாடு. இது அறிவியல்பூர்வமானது.  தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம், இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது.  இந்தியத் தத்துவ மரபில் இரண்டு போக்குகளைக் காணலாம்.  ஒன்று அறிவைப் பரவலாக்குவது.  மற்றொன்று அறிவைத் தடை செய்வது.  தமிழ் மரபு அறிவைப் பரவலாக்கும் பணியைச் செய்தது.  ஐம்பூதங்களின் தன்மையை, இயல்பை ஆராய்ந்த நூல் தொல்காப்பியம்.  அதனால்தான் தொல்காப்பியருக்கு ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர் என்று பெயர்.  மேலும் விசும்பை ( வானம் ) தமிழ் மரபு மட்டுமே ஐம்பூதமாக ஏற்றுக்கொண்டிருந்தது.
-- பேராசிரியர் நெடுஞ்செழியன்.
     ஐம்பூதம் என்பது முழுக்கத் 'தமிழ்க் கொள்கைதான்.  பூ என்றால் பூத்தல்.  விரிதல் என்று பொருள். சங்க இலக்கியத்தில் பூ என்ற சொல் 33 இடங்களில் வருகிறது.
-- சூழலியல் எழுத்தாளர் பாமயன். ( நிலம் ).
    மண்ணுக்கு மேல்தான் உயிர்கள் வாழ்வதாக நினைக்கிறோம்.  இது தவறு.  மண்ணுக்கு மேல் இருப்பதைப் போல அடியில் 100 மடங்கு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.
-- அரச்சலூர் செல்வம், இயற்கை விவசாயி. ( நிலம் ).
     தூய்மையான தண்ணீர் கிடைக்காமல் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது.  தண்ணீரை வியாபாரிகள் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.  நம்முடைய நிலத்தில் இருந்து எடுத்த தண்ணீரை, நமக்கே விற்றுக் கோடி கோடியாகத் தனியார் பெரு நிறுவனங்கள் லாபம் பார்த்து வருகின்றன.
--- சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.  ( நீர் ).
     காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பாக்கம் என்ற பெயரில் நிறை ஊர்கள் உண்டு.  பாக்கம் என்றால் நீர் மிகுந்த பகுதி என்று பொருள்.  ஆனால் இப்போதோ சென்னையில் எங்கும் தண்ணீர் கிடையாது.
--- பேராசிரியர் சாமுவேல் ஆசிர்ராஜ்.  ( நீர் ).
     நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல் - எரிசக்தி ஆதாரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் தீர்ந்து போகக் கூடியவை.  பெட்ரோல் 29-30 ஆண்டுகளிலும், நிலக்கரி 100 ஆண்டுகளிலும் தீர்ந்து போய் விடக்கூடும்.  காற்றாலை மின்னுற்பத்திதான் மின்சாரம் குறைந்த சமூகப் பாதிப்பைக் கொண்டிருக்கிறது.
--- பொறியாளர் சி.இ. கருணாகரன்.  ( நெருப்பு ).
     வெப்பம் மனிதர்களுக்கு மிகவும் அவசியம்.  எப்போது உடலில் வெப்பம் குறைகிறதோ, உடல் சில்லிடுகிறதோ அப்போது மனிதன் இறந்து விடுகிறான்.  பூமியில் முதன்முதலில் மழை பெய்தபோது மரமே கிடையாது.  மனிதர்கள் மரங்களை நடுவதால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இயற்கை இல்லை.  அதை மனிதர்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
---திரைப்பட இயக்குநர் ம. செந்தமிழன்.  ( நெருப்பு ).
    நம் அண்டை மாநிலமான கேரளாவில் மணல் எடுக்க முடியாது.  ஆனால்,தமிழகத்தில் மணல் வியாபாரிகள்தான் அரசியல் கட்சித் தலைவர்களாக உள்ளனர்.
--- கி.வெங்கற்றாமன், தமிழர் உழவர் முன்னமி ஆலோசகர்.  ( காற்று ).
    பூமியின் சராசரி வெப்ப நிலை 15 டிகிரி சென்டிகிரேடு.  இதில் 2 டிகிரி செ.கி. அதிகரித்தாலும் உலகில் பல்வேறு பிரச்னைகள் வந்து விடும்.  அதைத்தான் புவி வெப்பமடைதல் என்கிறார்கள்.  புவி வெப்பமடைந்தால் என்னவாகும்?  துருவப்பிரதேசங்களில் பனிப்பாறைகள் கரைந்து, கடல் நீர் மட்டம் அதிகரிக்கும்.  கடலோரப்பகுதிகள் நீரில் மூழ்கும்.
--- சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன்,  ( விசும்பு - வானம் ).
--- சூழல் மரபு. உயிர்மூச்சு .
--  'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 11, 2014.  

Saturday, November 28, 2015

மிருகம் விரட்டுங்கள்!

  மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி கோபம்.  அதை தவிர்த்தாலே நினைத்ததை சாதிக்கலாம்.  சிடுமூஞ்சியானாலும் கோபத்தை
தவிர்க்க வழியுண்டு.  இதோ...
1.  தொடர்ந்து இயற்கை உணவுகளை சாப்பிட்டுப் பழகலாம்.
2.  தியானம், சாந்தி ஆசனம் செய்யலாம்.
3.  ஒன்று முதல் 10 வரை எண்ணலாம்.
4.  தண்ணீர் குடிக்கலாம்.
5.  கோபத்துக்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியலிட்டு எழுதலாம்.
6.  பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடிக்கலாம்.
7.  கோபம் வரும்போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடியில் பார்க்கலாம்.
8.  கோபத்துக்குக் காரணமான சொல், செயல், எண்ணத்தை மாற்றலாம்.
9.  கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
10. நீர்வீழ்ச்சியில், ஷவரில், தொட்டியில் குளிக்கலாம்.
11. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
     இவற்றை கடைபிடித்தால் எவ்வளவு பெரிய கோபக்காரரும் சாந்த சொரூபியாகி விடுவார்.  அப்புறம் என்ன?  கோப உணர்ச்சிகளால் ரத்த அழுத்தம், கண் சிவப்பு, அமில சுரப்பு, வயிற்றுப்புண் போன்ற நோய்களும், மிருக குணமும் நம்மை விட்டு ஓடிப்போய் விடும்.
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 23-2-2014. 

Friday, November 27, 2015

வண்ண டைல்ஸ்கள்

 முன்பு குளியல் அறைக்குக்கூட வழுக்கக்கூடிய டைல்ஸ்களையே பயன்படுத்தப்பட்டன.  இப்போதோ அக்குபஞ்சர் மற்றும் கிரிப்பர் வகை டைல்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான டைல்ஸ்களில் ஷாம்பு கொட்டியிருந்தால்கூடக் கால் வைத்தாலும் வழுக்காது.
     வீட்டின் முகப்புப்பகுதியில் ஒரே வண்ணத்தில் டைல்ஸ் பதிக்கும் வழக்கமே முன்பு இருந்தது.  தற்போது ஸ்டைலான, கலர்ஃபுல்லான டிசைகளில் டைல்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.  போர்டிகோ பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் போதும், நடக்கும் போதும் பிடிமானம் இருக்கும் வகையில் சொரசொரப்பான டெரகோட்டா வகை டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன.
     வீட்டின் உள் பகுதிக்கு மங்கலான நிறம் கொண்ட டைல்ஸ் பயன்படுத்தப்பட்ட காலம் மாறிப் பளிச்சிடும் வண்ணங்களில் டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன.  சுமார் 1000 சதுர அடி பரப்பில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு 500 முதல் 600 டைல்ஸ்கள் தேவைப்படும்.  சமையல் கூடத்திற்குச் சிம்னி உயரம் வரை வால் டைல்ஸ் பதிக்க வேண்டும்.
     வரவேற்பறை, சமையலறை, பூஜையறை, படுக்கையறை, படிக்கும் அறை என அனைத்துக்கும் தனித்தனி டைல்ஸ்கள் இன்று விற்பனைக்கு உள்ளன.  ஆனால், டைல்ஸ்களில் சீதோஷ்ண நிலையின் தாக்கம் கணிசமாகத் தெரியும்.  கோடைகாலத்தில் உள் கூடங்களில் டைல்ஸ் சற்று சூடாகத் தெரிவதும், குளிர்காலத்தில் குளிர்ச்சியாகத் தெரிவதும் டைல்ஸ்களில் உள்ள ஒரு குறைபாடு.
     மொட்டை மாடியில் பதிக்கவும் இன்று நிறைய டைல்ஸ்கள் சந்தைக்கு வந்துவிட்டன்.  இவற்றில் உஷ்ணத்தைக் கிரகித்துக்கொள்ளும் டைல்ஸ்களும் அடங்கும்.
-- மகேஷ்.  சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, பிப்ரவரி 22, 2014.  

Thursday, November 26, 2015

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தடை.  ஐக்கிய அரபு நாடுகள் 'பத்வா'.
     நெதர்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம், செவ்வாயில் குடியிருப்பை உருவாக்கி அங்கு மனிதர்களை நிரந்தரமாக குடியேற்றச் செய்யும் ஒருவழி பயணமான 'மார்ஸ் ஒன்' திட்டத்தை அறிவித்துள்ளது.  இதற்காக உலகம் முழுவதும் உள்ள மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, முதற்கட்ட தேர்வும் முடிந்துள்ளது.  இந்த திட்டத்தின் மூலம், வரும் 2024 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 பேர், ஒரு வழி பயணமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
     இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு செல்வது இஸ்லாமுக்கு எதிரானது என ஐக்கிய அரபு நாடுகளின் இஸ்லாமிய விவகார மற்றும் அறக்கட்டளையின் பொது அதிகார குழு 'பத்வா' விடுத்துள்ளது.
     இதுகுறித்து குழுவின் தலைவர் பரூக் அமதா கூறுகையில், 'செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழி பயணமாக செல்வது பாதுகாப்பு இல்லாதது.  தற்கொலைக்கு சமமானது.  ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது இஸ்லாமுக்கு எதிரானது.  எனவே, மார்ஸ் ஒன் திட்டத்துக்கு பத்வா விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
     சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து 500 க்கும் அதிகமானோர், மார்ஸ் ஒன் திட்டத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--  தினமலர். 23-2-2014. 

Wednesday, November 25, 2015

இணைய வெளியிடையே...

*    தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்?  அப்போ இது உங்களுக்குத்தான்...
     யாராவது அறிவுகெட்டவனே என்று திட்டினால், உடனே கோபம் கொள்ளக்கூடாது.  அறிவுக்கெட்டவனை பிரித்து பாருங்கள்.  அறிவு +Get + வனே.  Get என்றால் ஆங்கிலத்தில் பெற்ற என்று அர்த்தம்.  ஆக, அதை அறிவு பெற்றவனே என பொருள் கொள்ள வேண்டும்.
     நம்மை அதிகம் திட்டப்படும் இன்னொரு வார்த்தை விளங்காதவனே.  அந்த வார்த்தையையும் பிரியுங்கள்.  விளங்கு + ஆதவனே.  அதாவது விளங்குவதில் சூரியனே என்று அர்த்தம்.  ஆதவன் என்றால் சூரியன்.
     மேலும் திட்ட பயன்படுத்தும் இன்னொரு வார்த்தை தண்டச்சோறு.  அதையும் பிரிப்போம்.  தண்டம் + சோறு.  தண்டம் என்றால் ஆங்கிலத்தில் Fine என்று அர்த்தம்.  Fine என்பதற்கு நல்லது என்ற அர்த்தமும் உண்டு.  ஆக தண்டச்சோறு என்றால் நல்லசோறு என்று அர்த்தப்படும்.
    -- sowmya @ twitter.com
*   வயதான காலத்தில் சிலருக்கு விலங்குகள் வாரிசாகவும், வாரிசுகள் விலங்காகவும் மாறிவிடுவது விந்தை!
    - arun @ twitter.com.
*  யானை என்ற வார்த்தையில் 'னை' யே யானையின் உருவத்தை ஒத்திருப்பது அழகு!
   -- girl @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 23-2-2014. 

Tuesday, November 24, 2015

மரம் இல்லாத கதவுகள்

  வீட்டுக்கு அழகான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எது?  கதவுதான்.  வீட்டு வாசல்கள் அழகாக இருப்பதில் கதவுகளுக்கும் முக்கிய இடம் உண்டு.  அழகிய அம்சம் சார்ந்த வாசல் கதவுகள் தற்போது கண்ணாடி இழைகள் மற்றும் ரீஇன் டோர்ஸ்டு பிளாஸ்டிக்கிலும் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன.
     மரத்துக்கு மாற்றாக ஸ்டீல்களும்கூட இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறன.  தற்போது ஸ்டீல் விலையும் அதிகமாகவே விற்பனையாகிறது.  எனவே, விலை அதிகமாக உள்ள இந்தக் கதவுகளைவிட கண்ணாடி இழைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட  பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் கண்னாடி இழை கதவுகளைப் பயன்படுத்தலாம்.  இவற்றின் விலை குறைவு.  மேலும் கண்ணைக்கவரும் வகையில் பல டிசைங்களிலும் கிடைக்கின்றன.
     அசல் மரக்கதவுகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கதவுகளில் பல்வேறு வண்ணங்களில் நாம் விரும்பும் வகையில் செய்ய முடியும்.  மரம் மற்றும் ஸ்டீல் கதவுகளில் பராமரிப்பு அதிகம் தேவைப்படும்.  மழைக்காலங்களில் சில மரக் கதவுகளில் தண்ணீர் பட்டால் அந்த இடம் கறுப்பாக மாறிவிடும்.  ஆனால், கண்னாடி இழை கதவுகளில் அந்தப் பிரச்சினை இல்லை.  100 சதவிகிதம் வாட்டர் ஃபுரூப்புடன் எல்லா சீதோஷ்ண நிலைகளையும் தாங்கக்கூடியவை.
     குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் இந்தக் கதவுகளைப் பொருத்த முடியும்.  குறிப்பாகக் குழந்தைகளுக்காக அமைக்கப்படும் அறைகள் மற்றும் குழந்தைகளின் குளியல் அறைகளுக்குக் குழந்தைகள் விரும்பும் வகையிலான டிசைங்களிலும், வண்ணங்களிலும் வடிவமைக்கலாம் என்கின்றனர் கட்டுநர்கள்.
-- மிதிலேஷ்.  சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி,பிப்ரவரி 15,2014. 

Monday, November 23, 2015

தேங்காய், வாழைப்பழம்.

   தேங்காய் என்பது தோல், நார், ஓடு எனும் மூன்றையும் விடுத்து உள்ளே இனிக்கும் பொருளாக உள்ளது.  அது போன்று நம்மிடம் உள்ள ஆணவம் ( தான் எனும் அகந்தை ), கன்மம் ( முன்பிறவி பாவங்கள் ), மாயை ( இப்பிறவியில் செய்யும் தவறுகள் ) இவை மூன்றையும் நீக்கினால், நம் உள்ளே உயிரில் இறைவன் இனியவராகத் துணை புரிவார்.  இதைப் புரிந்து கொண்டு வாழ்வதற்காகவே, தேங்காய் உடைத்து வழிபட வகை செய்துள்ளார்கள்.
     ஒரு வாழை மரம் வளர்ந்தால், அதைச்சுற்றி பல கன்றுகள் தோன்றி பலன் அளிக்கும்.  வாழைப்பழம் விதையானது வாழையடி வாழையாக தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.  அதன் பழம் இறைவனுக்கு நிவேதனமாக ஆவது போன்று நம் குலமும் வாழையடி வாழையாக வம்சவிருத்தியடையவும், எல்லாம் ஆண்டு அனுபவித்து முதிர்ந்த வயதில் ( பழுத்த பழம் என்பார்கள் ) இம்சை இல்லாமல் இறைவனடி சேரவும் வாழைப்பழ நிவேதனம் அறிவுறுத்துகிறது.  மேலும், வெற்றிலைப் பாக்கும் வைக்க வேண்டும்.  இது லட்சுமி கடாட்சத்தைத் தரும்.
-- அறிவோம்! தெளிவோம் ! -  மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
--   தினமலர்.பக்திமலர். பிப், 20, 2014.

Sunday, November 22, 2015

மெட் ரோ ரயில்.

 சென்னையில் இடம் பெறப் போகும் நம் மெட்ரோ ரயிலை எடுத்துக்கொள்வோம்.  சிலர் நினைப்பது போல இவை இயங்கும்போது தேவைப்படும் மின்சாரம் மிக அதிகம் அல்ல.  திட்டம் முழுவதுமாக நடைமூறைப்படுத்தப்படும்போது, அத்தனை ரயில்களும் இயங்கும் போது 80 மெகாவாட் மின்சாரம்தான் தேவைப்படும்.
இரும்பு உருக.
     மற்ற உலோகங்களைவிட, இரும்பு உருகுவதற்கு அதிக நேரம் தேவைப்படுவது ஏன்?
     ஒரு பொருள் எவ்வளவு நேரத்தில் உருகும் என்பது அதன் அடர்த்தி, அதன் தன் வெப்பம் ( specific heat ) மற்றும் எந்த அளவுக்கு எரிசத்து அளிக்கப்படுகிறது ஆகிய மூன்று விஷயங்களைப் பொருத்திருக்கிறது.  இருப்பின் உருகு நிலை 1538 டிகிரி சென்டிகிரேட்.
     ஒப்பீட்டுக்காக இதோ வேறு சில உலோகங்களின் உருகு நிலை (  சென்டிகிரேடில் )
     அலுமினியம்  -  659.
     வெண்கலம்  -  913.
     தங்கம்  -  1063.
     டங்ஸ்டனின் உருகு நிலை 1482 .  அதனால்தான், அதை மின்சாரப் பல்புகளில் பயன்படுத்துகிறார்கள்.
தொட்டபெட்டா
      தொட்டபெட்டா என்பது கன்னடச் சொல். கன்னடத்தில் 'சிக்க' என்றால் சிறிய என்றும், 'தொட்ட' என்றால் 'பெரிய' என்றும் பொருள்.  மலையை அவர்கள் 'பெட்டா' என்பார்கள்.  ஆக தொட்டபெட்டா என்றால் பெரியமலை என்று பொருள்.
-- குட்டீஸ் சதேக மேடை ?!  --  ஜி.எஸ்.எஸ்.
-- தினமலர்.சிறுவர்மலர். பிப், 21, 2014.

Saturday, November 21, 2015

கரப்பான் பூச்சி

முகம் பளபளக்க கரப்பான் பூச்சியை தடவுங்கப்பா!
     என்ன, டைட்டிலை படிச்ச உடனே தலைசுத்துதா...?
     இது உண்மைதான்!
     சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது.  கரப்பான் பூச்சி என்றாலே முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில் சீனாவில் சிலர் கரப்பான் பூச்சி பண்ணை வைத்து கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர்.  சீனாவில் கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டு புழுக்களை வறுத்து சாப்பிடுவது அறுசுவை உணவாக கருதப்படுகிறது.
     சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன.
     அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது.  இதற்கு முதலீடு மிக குறைவு.  61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம்.
     பண்னை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும்.  அதுவும் அமெரிக்க கரப்பான் பூச்சிகளை தான் வளர்க்கின்றனர்.  இவை நீளமாக, பெரியதாக, கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும்.  இதற்கு இறக்கைகள் உண்டு.  இவற்றை அழிப்பதும் எளிது என்கிறார் பூமிஸ்.  அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு வடகம் போல காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.  கரப்பான் பூச்சி பண்ணையில், பெரிய அளவில் லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது.  ஒருமுறை கோடிக்கணக்கில் கரப்பான் பூச்சிகள், ஒரு பண்ணையில் இருந்து எஸ்கேப் ஆகிய பின்புதான் மக்களுக்கே தெரிய வந்தது.  இந்த பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதியிளிலிருந்து தொலைவில் வைக்கின்றனர்.  இப்போது சீன 'டிவி'க்களில் கரப்பான் பண்ணைகள் வளர்ப்பு முறை பற்றிய விளம்பரங்கள் பிரபலாமாக உள்ளன.
     சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக்கழகங்கள் கரப்ப்பான் பூச்சியை வைத்து பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன.  அணு கதிர்வீச்சை கூட தாங்கும் சக்தி உடையது கரப்பான் பூச்சி.  இவை மூலம், எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
    'லீ ஷிவான்' என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து தன் வழுக்கை தலையில் தினமும் தேய்த்து கொண்டதால் முடி வளர்ந்ததாக கூறுகிறார்.
-- அதிமேதாவி அங்குராசு.
-- தினமலர். சிறுவர்மலர் ,சென்னை பதிப்பு.. பிப்ரவரி 14,2014. 

Friday, November 20, 2015

குளக்கரையில் மண்டபங்கள்

   கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றிலும் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.  சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்களும், ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு சிறு கோயிலும் கட்டப்பட்டு, சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது.
     காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் பெரிய மண்டபத்துடன் கூடிய சிவன் கோயில், பிரம்ம தீர்த்தேஸ்வரர் கோயிலாகும்.  இந்த மண்டபம் மற்ற மண்டபங்களைக் காட்டிலும் பெரிய மண்டபமாகும்.  இதை துலாபாரதான மண்டபம் என்பார்கள்.

செவ்வாய்க்கு மனித எந்திரம்

  ( சிறப்பு )
   அமெரிக்க  விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனமான  நாசா, செவ்வாய்க்கிரகத்தில்  உயிரினங்கள்  வாழ்வதற்கான  சாத்தியக்கூறுகள்  இருக்கிறதா  என்ற  ஆராய்ச்சியில்  ஈடுபட்டு  வருகிறது.  இதற்காக  நாசா  அனுப்பிய  கியூரியாசிட்டி  ரோவர், செவ்வாயின்  மேற்பரப்பில்  ஆராய்ந்து  வருகிறது.  இதற்கிடையில், பேரிடர்  மீட்பு  பணிகளில்  மனிதர்களை  ஈடுபடுத்த  முடியாத  அசாதாரணமான  சூழ்நிலைகள்  ஏற்படும்போது, அதை  சமாளிப்பதற்காக  மனிதனைப்போன்ற  ரோபோவை  நாசா  உருவாக்கியது.
   6  அடி  உயரம்  131  கிலோ  எடையுள்ள  ஆர்-5  ரோபாட்டுகளை  நாசா  தாயாரித்தது.  அதற்கு 'வால்கிரி'  என்று  பெயரிட்டுள்ளது.  கிட்டத்தட்ட  மனிதனைப்  போலவே  சூழ்நிலைகளை  புரிந்து  செயல்படும் வகையில்  அதிநவீன  தொழில்நுட்பத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ள  வால்கிரி  ரோபாட்டை  பேரிடர்  நிவாரணப்பணிகளில்  மட்டுமல்லாது  வேறுபல  பணிகளிலும்  ஈடுபடுத்துவது  குறித்து  ஆய்வு  செய்துவந்த  நாசா, செவ்வாய்  கிரகத்தில்  ரோவரால்  நெருங்கமுடியாத  உள்பகுதிகளை  ஆராய  வால்கிரியை  பயன்படுத்த  திட்டமிட்டுள்ளது.
   இது  தொடர்பாக  நாசா  வெளியிடுள்ள  அறிவிப்பில், 'செவ்வாய்  கிரகத்தை  ஆராய்வதற்காக  வால்கிரி  ரோபாட்டை  அனுப்ப  திட்டமிட்டுள்ளோம்.  முன்னதாக, கிரகங்களைப்  பற்றி  வால்கிரி  அறிந்து  கொள்வதற்காக, 2  வால்கிரி  ரோபாட்டுகளை  கல்லூரிக்கு  அனுப்ப  முடிவு  செய்துள்ளோம்.  ஒரு  ரோபாட்  மாசசூசெட்ஸ்  தொழில்நுட்ப  மையத்துக்கும், மற்றொரு  ரோபாட்  பாஸ்டனில்  உள்ள  வடகிழக்கு  பல்கலைக்கழகத்துக்கும்  அனுப்பப்படும்.  இந்த  2  பல்கலைகளும்  அதிநவீன  ராணுவ  திட்டங்கள்  ஆராய்ச்சி  முதனமையால்  தேர்வு  செய்யப்பட்டுள்ளன.  ரோபாட்டுகளுக்கு  பாடம்  கற்றுக்  கொடுப்பதற்காக  இந்த  2  நிறுவனங்களுக்கும்  ஆண்டுக்கு  2  லடசத்து  50  ஆயிரம்  டாலர் (ரூ. 1.65 கோடி ) வீதம்  2  ஆண்டுகளுக்கு  வழங்கப்படும்  என்று  குறிப்பிட்டுள்ளது.
-- தினமலர்  திருச்சி  20-11-2015. 

Thursday, November 19, 2015

திட்டமிட்டு மறைத்த உண்மை?

  வரலாற்றில் மறைக்கப்பட்ட இசுலாமியர்களின் தியாகங்கள்.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கப்பல் வாங்க அந்த காலத்திலேயே 2 இலட்சம் கொடுத்த தொழிலதிபர் திரு. பக்கீர் முகம்மது இராவுத்தர் என்ற தமிழரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  அதை போல வ.உ.சி .யின் கப்பல் நிறுவனம் நட்டத்தில் இயங்கிய போது, வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட் , உமர் கத்தாப், இப்ரஹீம் செய்யது இராவுத்தர், அகமது சாகிப், முகமது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல இலட்சங்களை வாரி வழங்கினர்.  வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912 இல் வறுமையில் வாடியபோது, அவருக்கு உதவிகளைச் செய்து மகழ்ந்தவர் அகமது மீரான் என்பவராவார்.  வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடியவர் இசுலாமிய வழக்கறிஞர்... அன்று இந்திய சுதந்திரதிற்காக தங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக போராடிய பொருளாலும், உடலாலும் தியாகம் செய்த இசுலாமிய சமூகத்தின் வரலாறு அனைத்தும் பார்ப்பனீயத்தாலும் திராவிடத்தாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்தது என்பதே உண்மை.
---  மூத்த குடி. அரசியல் மாத இதழ்.  திசம்பர் 2013.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

Wednesday, November 18, 2015

புகை பிடிக்கும் பழக்கம்

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?
     சத்தியமா இல்லவே... இல்லைன்னு சொல்றீங்களா... ஒரு நிமிடம் இதப்படிங்க... Colgate, Vicco, Dabur, Himalaya  இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands -ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.
     ஒரு சிகரெட்லயே 2...மி.கி. தான் நிக்கோடின் இருக்காம்.  ஆனா Colgate Herbal -ல அதிகபட்சமா 18 mg / gm நிக்கோடின் இருக்காம்.  அப்ப நாம ஒரு தடவை இந்த பற்பசையில பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... இந்த ஆராய்ச்சி முடிவு 2011 - லயே வந்திருச்சி.  ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்டது நம்ம பத்திரிகை, தொலைக்காட்சிகளோடத  எப்படிதான் பாராட்றது...?
     என்னங்க இது அநியாயமா இருக்கு...? நம்ம அரசாங்கம் என்ன பண்ணுது...?- னு தானே கேட்க வர்றீங்க...? ம்ம்... என்னங்க பண்றது....? காசுக்காக மக்களுக்கு அரசாங்கம் சாராயம் விக்கிற நாடுங்க இது... இங்க போயி நியாயமாவது தர்மமாவது.
-- இரா.பார்த்திபன்.   மூத்த குடி.   அரசியல் மாத இதழ்.  திசம்பர் 2013.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.  

Tuesday, November 17, 2015

ஒரே மாதத்தில்...

ஒரே மாதத்தில் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை.
     சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்,
     கொத்தமல்லி  --  அரை கிலோ
     வெந்தயம்  --  கால் கிலோ
     இரண்டையும் தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்தெடுத்து, தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்.
     இரண்டு தேக்கரண்டி பொடியை இரண்டு குவளை ( இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்துஒரு குவளை அளவிற்கு சுண்டக் காய்ச்சவும்.  பின்பு வடிகட்டி, மூன்று வேளைகளுக்கு உணவுக்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக அருந்தவும்.  அடுத்து, குறைந்தது முக்கால் மணி நேரத்திற்கு குடிநீர் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது.
    ஒரு மாத காலத்திற்கு இந்தப் பொடியை மேற்கூறியபடி அருந்தி வரவும்.
    சர்க்கரை உங்கள் இரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூடத்தில் சோதனை செய்து உறுதி செய்து பாருங்கள்.  சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடி விட்டிருக்கும்.
-- சி.தேன்மொழி.
-- மூத்த குடி. அரசியல் மாத இதழ்.  திசம்பர் 2013.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.    

Monday, November 16, 2015

மூளைக்காரன்பேட்டை.

1.  ஏழு எழுத்துகள் கொண்ட எனக்கு அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.
2.  எனது முதல் 3 எழுத்துகள் அரசியல்வாதிகளின் இலக்கு.
3.  மூன்றாவது, நான்காவது எழுத்துகளை நீக்கிவிட்டால் அது ஒலிம்பிக்ஸ் வீரர்களின் இலக்கு.
4.  கடைசி 4 எழுத்துகள் விலக்குதலைக் குறிக்கின்றன.
5.  இரண்டாவது, மூன்றாவது எழுத்துகள் 'சங்கடப்படு'.
6.  முதல் எழுத்தும்,கடைசி மூன்று எழுத்துகளும் தாளின் ஒரு பகுதி.
     நான் யார்?
புதிருக்கான விடைகள்:
1.பதவிநீக்கம்  2. பதவி  3.பதக்கம்  4.நீக்கம்  5.தவி  6.பக்கம்.
-- ஜி.எஸ்.எஸ்.  ரிலாக்ஸ்
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி 17,  2014.   

Sunday, November 15, 2015

இணைய வெளியிடையே...

*  நாம் உண்ணும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும், நாமே தீர்மானிப்பதுதான் உண்மையான சுதந்திரம்!
   sutha@twitter.com
*  ஹியூமர் சென்ஸ் உள்ள ஆணையும், ரூமர் சென்ஸ் உள்ள பெண்ணையும், பெண்களுக்கு எளிதில் பிடித்து விடுகிறது!
   naayon @ twitter.com
* எடை கூடுவதற்காக பெண்கள் சந்தோஷப்படுவதென்றால், அது மளிகை கடையில் பொருட்கள் வாங்கும்போது மட்டும் தான்!
   pisasu @ twitter.com
*  இங்குமட்டும்தான்,மீன் பிடிக்கப்போனால் மீனுக்குப் பதிலாக மீனவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்!
    vivaaji @ twitter.com
*  குடித்துவிட்டு மட்டுமே வாகனத்தை ஓட்டுவேனென அடம்பிடிக்கிற்து, பெட்ரோல் டேங்க்!
   writer @ twitter.com
*  பூமியை பாதுகாப்பது குத்த கருதரங்கம் நடத்தப்படுகிறது குளிரூட்டப்பட்ட அறைகைகளில்!
   sappani @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 16-2-2014. 

Saturday, November 14, 2015

அப்படியா...?

*  வயிற்றிலுள்ள அமிலத்திலிருந்து வாயு பிரிந்து ஏப்பம் வருமளவுக்கு ஈர்ப்புவிசை இல்லாததால் விண்வெளி வீரர்களால் ஏப்பம்
   விட முடியாது.
*  ATM மிஷினை உருவாக்கிய ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன் மனைவியால் 6 இலக்க ரகசிய எண்ணை நினைவில் வைக்க
   முடியாததால், அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.
*  வழுதுணங்காய் என்பது கத்தரிக்காயின் பழந்தமிழ்ப் பெயர்.
*  இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாகக் கேலிச்சித்திரம் ( கார்ட்டூன் ) வெளியிட்டவர் நம்ம மகாகவி பாரதியார் தான்!
   சுதேசமித்திரனில்!!
*  இன்றும் தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் போது, திருவெம்பாவை பாடப்படுகிறது!
*  விமானத்திலிருந்து பார்க்கும் பயணிக்கு வானவில் வட்ட வடிவமாகத் தெரியும்!
*  ஆசியாவிலுள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஆட்சி
   மொழிகளில் ஒன்றாக இருக்கிறது !
*  உலக மக்கள் தொகையை 100 பேர் இருக்கும் கிராமமாகக் கொண்டால், அதில் 57 ஆசியர்கள்,21ஐரோப்பியர்கள், 14
   அமெரிக்கர்கள், 8 ஆப்பிரிக்கர்களும் இருப்பார்கள்.
--     தமிழ் பேக்ட்ஸ்.  சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 16-2-2014.  

Friday, November 13, 2015

ஆன்மிகப் புதிர்

ராமாயணம் படித்திருக்கிறீர்களா?  அப்படியென்றால் கீழே உள்ள சொற்களைச் சரியாகப் பொருத்துங்கள்.
ஐவரில் ஒருவர்...........................பஞ்சவடி
லட்சுமணனின்.............. ........... மோதிரம்
அடையாளம் .................            சிவதனுசு
சகுந்தலை ................................  ஊர்மிளை
சுயம்வரம் ...................... ...........துஷ்யந்தன்
சுக்ரீவன் ........................ ...........குகன்
வனவாசம் ..................... ............கிஷ்கிந்தா
வீணைக்கொடி ............. ............இந்திரஜித்
ஜனகர் ........................... .............ராவணன்
இந்திரனை வென்றவன்............ ராஜரிஷி
விடை :
*  குகனோடு நாங்கள் ஐவரானோம் என்று ராமன் விபீஷண்னிடம் சொல்கிறான்.
*  லட்சுமணனின் மனைவி ஊர்மிளை
*  தனது அடையாளமாக மோதிரத்தை அனுமனிடம் கொடுத்து அனுப்புகிறாள் சீதை.
*  சகுந்தலையின் கணவன் துஷ்யந்தன்.
*  சுயம்வரத்தில் ராமர் சிவதனுசை முறித்தார்.
*  சுக்ரீவன் இருந்த இடம் கிஷ்கிந்தா.
*  ராமர் வனவாசம் இருந்த இடங்களில் ஒன்று பஞ்சவடி.
*  ராவணனின் கொடி வீனைக்கொடி.
*  ஜனகர் ராஜரிஷி என அழைக்கப்படுபவர்.
*  இந்திரனை வென்றவன் இந்திரஜித்.
--   ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 6, 2014. 

Thursday, November 12, 2015

பூதத்தாழ்வார்

  பூதத்தாழ்வார் வைனவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் காலத்தால் முதலாமவர்.  முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக போற்றப்பட்டவர்.  மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைனவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிபந்தங்களில் உள்ள நூறு வெண்பாக்களால் ஆன இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.
     இவரது அவதாரத் தலமான மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது.  இக்கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது.  இக் கோயிலின் வெளிச்சுவரிலே, இத்தலம் பூதத்தாழ்வாரின் அவதாரத் தலம் என அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.
     திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவப் பெரியோர் கூறுகின்றனர்.
     வடமொழியில் பூ என்ற அடிச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல்.  இதற்குச் சத்து - அறிவு என்று பொருள்.  பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார்.
-- ரஜேஸ்வரி ஐயர்.  ஆழ்வார்கள். ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 6, 2014.

Wednesday, November 11, 2015

குழந்தையைக் கொஞ்சலாம்!

பிறக்கும் முன்னே குழந்தையைக் கொஞ்சலாம்!
     கருவில் இருக்கும் குழந்தையை கொஞ்சி மகிழும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது நவீன விஞ்ஞானம்.
     வயிற்றில் இருக்கும் சிசுவின் மாதிரியைக் கொண்டு, குழந்தை பொம்மையை தயாரித்துத் தருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த 3டி பேபிஸ் நிறுவனம்.
     3டி, 4டி அல்ட்ரா சவுண்ட் தொழில் நுட்பம் மூலம் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் உருவத்தை பதிவுசெய்து, அதையே மாதிரியாக வைத்து இந்த குழந்தை பொம்மையை உருவாக்கித் தருகிறது இந்த நிறுவனம்.  இதன் மூலம் தன் குழந்தை வயிற்றில் எப்படி இருக்கும் என்பதும், அதன் முக மற்றும் உடல் அமைப்பு குறித்தும் பெற்றோர்கள் முன்னரே அறிந்து கொள்ளலாம்.  இது மட்டுமல்லாது, பொம்மையின் உடல் நிறம், அளவு ஆகியவற்றை பெற்றோர்களே நிர்ணயம் செய்யலாம்.  20 செ.மீ, 10 செ.மீ என விருப்பமான அளவுகளில் குழந்தை பொம்மையை பெற்றுக் கொள்ளலாம்.
     இந்த 3டி குழந்தையின் மூலம் முன்கூட்டியே குழந்தை வளர்ப்பு அனுபவத்தைப் பெறமுடியும்.  குழந்தையை எப்படி லாவகமாக தூக்குவது, கொஞ்சுவது, பராமரிப்பது என்று பயிற்சி எடுத்து தயாராகலாம்.  எல்லாவற்றுக்கும் மேலாக, 'நீ இப்படித்தான் இருந்தாய்' என பின்னாளில் அக்குழந்தைக்கே நினைவுப் பரிசாகவும் வழங்கவும் முடியும் என்பதால், அமெரிக்கத் தாய்மார்களிடையே பெறும் வரவேற்புப் பெற்றுள்ளன 3டி குழந்தை பொம்மைகள்.
     விரைவில் இந்த சேவையை மற்ற நாடுகளிலும் விரிவுபடுத்த அந்நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிய தடைவிதிக்கப்பட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-- பவானி.
-- தினமலர். பெண்கள்மலர். 1-2-2014.  

Tuesday, November 10, 2015

தெரியுமா உங்களுக்கு !

  திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை 'டயல் யுவர் இ.ஓ' எனும் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்று
   வருகிறது.  இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தொலபேசி மூலம் கூறும் குறைகள் கேட்கப்பட்டு, அவற்றில் சில
   நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்கிற பக்தர்
   தொடர்பு கொண்டு,' சுவாமி தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தமது கைக்குழந்தைகள்
   பாலுக்காக அழும்போது செய்வதறியாது தவிக்கின்றனர். இதற்கு தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என
   கோரிக்கை விடுத்தார்.  'இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது.  இனி வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை
   களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் பால் விநினியோகம் செய்யப்படும் என்று அதிகாரி கோபால் தெரிவித்தார்.
-- தினமலர்  நாளிதழ், 

Monday, November 9, 2015

சமணர் படுகைகள்

சிதையும் சமணர் படுகைகள் பாதுகாக்கப்படுமா?
கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்று பொக்கிஷம்.
     முற்காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் மலைக்குகைகளை தங்கள் வாழிடமாகக்கொண்டிருந்தனர்.  தவத்துக்கு ஏற்ற தனிமையும், நிர்வாணக் கோலத்தில் இருப்பதற்கும் அதுபோன்ற இடங்கள் அவர்களுக்கு உகந்தவையாக இருந்தன.  மலைகள் சூழ்ந்த இயற்கை பகுதிகளில், சராசரி மக்களிடம் இருந்து விலகி துறவறம் மேற்கொள்ள மலை குகைகளையே சமண முனிவர்கள் தேர்வு செய்து வந்துள்ளனர்.
     முதலில் கரடு முரடான பகுதிகளில் தங்கியவர்கள் பின்னர் தங்களூக்காக பாறைகளில் படுகைகளையும், இருக்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர்.
      சமணர்கள் அதிகம் இருந்த பகுதிகளை பஞ்சபாண்டவர் மலை, ஐவர் மலை என அழைக்கப்பட்டன.  மதுரையில் கி.மு. 3ம் நூற்றாண்டில் சமணம் வளர்ச்சி பெற்றிருந்தது.  அதன் பிறகு அங்கு அது வீழ்ச்சியை சந்தித்தபோதும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமணம் எழுச்சி பெற்றிருந்தது.  இதற்கு ஆதாரங்களாக சமணர் படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.செஞ்சிக்கோட்டையிலும் சமணப் படுகைகள் காணப்படுகின்றன.
      பாதுகாக்கப்பட வேண்டிய இப்படுகைகளில் அதன் வரலாற்று உண்மை புரியாமல் பலர் தங்கள் பெயர்களை கிறுக்கி வைத்து, பெயிண்டால் அலங்கோலப்படுத்தியுள்ளனர்.  அதன் தொன்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
      மேலும் இதுபோன்ற சமணப் படுகைகள் உள்ள மைலைகள் கல் குவாரிகளாக மாற்றப்பட்டு ஜல்லி கற்களாக உடைக்கப்பட்டு வருகின்றன.  மிச்சம் உள்ளதையாவது தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--    'தி இந்து' நாளிதழ். சனி,பிப்ரவரி 8,2014.

Sunday, November 8, 2015

தங்கத் தாழி மீட்பு

புத்தரின் முடி, பல், எலும்புகள் அடங்கிய தங்கத் தாழி மீட்பு.  திருடுபோனதாக தேடப்பட்டு வந்தது.
     நாம் பென்.
     மலைக்கோயில் ஒன்றில் வைக்கப்பட்டு திருடுபோனதாக தேடப்பட்டு வந்த புத்தருடையது என கருதப்படும் முடி,பற்கள், எலும்புகள் அடங்கிய தங்கத்தாழி மீட்கப்பட்டது.
     கம்போடியாவில் உள்ள மலைக்கோயில் ஒன்றிலிருந்து இந்த தங்கத்தாழி, சிறுசிலைகள் உள்ளிட்டவை காணாமல்போனது  கடந்த டிசம்பரில் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.  இதனால் நாட்டில் கொந்தளிப்பு எழுந்து தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
     உடாங் நகரில் உள்ள கோயிலிலிருந்து 130 கி.மீ, தொலைவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் வியாழக்கிழமை  நடத்திய அதிரடி சோதனையில் இந்த உடமைகள் கிடைத்தன.  தாழியில் வைக்கப்பட்டிருந்த எல்லா பொருள்களும் பத்திரமாக இருப்பதாக தேசிய காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
     டிசம்பரில் மலைக்கோயிலின் 5 காவலர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.  புத்தரின் 2500ம் ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாட 1950ம் ஆண்டு இலங்கையிலிருந்து புத்தரின் புனித முடி, பற்கள், எலும்புகள் கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டன.
     2002ல் அப்போதைய மன்னர் நரோடம் சிகானூக் இந்த உடமைகளை நாம்பென் நகரிலிருந்து உடாங் நகரில் வைக்க உத்தரவிட்டார்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். சனி,பிப்ரவரி 8,2014. 

Saturday, November 7, 2015

புலியைக் கொன்றது சரியா?

  உதகையில் அதிரடிப்படை புலியை சுட்டுக் கொன்றது சரியா...தவறா? என்பது குறித்து, வனஉயிரியின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சவுந்தரராஜான் கூறியதாவது :
     4 வயதில் ராஜ்ஜியத்தை பிடிக்கும் புலிகள் 6 ஆண்டுகளில் தளர்வடையும். ராஜ்ஜியத்தை இழந்த புலி, பிற புலிகளின் ராஜ்ஜியத்தில் சுதந்திரமாக உலாவ முடியாது.  உயிர் அச்சம் ஒரு புறம், பசி மறுபுறம் வாட்டும்.  இந்த நிலையை அடைந்த புலிதான், காட்டை ஒட்டியிருக்கும் கிராமப்பகுதியில் ஊடுருவியுள்ளது.  முதலில் மாட்டை பதம் பார்த்த புலி, அதனினும் எளிதாக தாக்கி சாப்பிடக் கூடிய மனிதர்களை கொன்று தின்றுள்ளது.
     ஆராய்ச்சியளர்களின் கூற்றுப்படி, ஒரு புலி மனிதரை கொல்கிறது என்றால், அதன் மூதாதையர்கள் மனிதரைக் கொன்று தின்னும் பழக்கம் உள்ளதாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.  மனிதரைக் கொன்று சாப்பிடும் புலியை உயிருடன் பிடித்தாலும், அதனை மிருகக் காட்சி சாலையில் பாதுகாக்க முடியாது.  இரையைக் கொண்டுவரும் ஊழியர் மீதுதான், அந்த புலிக்குக் கண் இருக்கும்.  அஜாக்கிரதையால் கூண்டு திறந்தால், பல உயிர்கள் பலியாக வாய்ப்பாக அமையும்.  எனவே, மனிதரைக் கொன்ற புலிகள் ஆபத்தானவை.
     வனத்துறை அதிகாரிகள் உயிருடன் இப்புலியை பிடிக்க முதலில் கூண்டுகள் வைத்துப் பார்த்தனர்.  கூண்டுக்குள் மயக்க ஊசியுடன் அமர்ந்து புலியை எதிர்பார்த்திருந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.  ஆடு, நாய்களை வைத்து புலியைப் பிடிக்கும் முயற்சியும் தோல்வி கண்டது.  மூன்று மனிதர்களையும், இரண்டு மாடுகளையும் புலி கொன்ற நிலையில், உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.  தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை, இரவில் எங்கிருந்து புலி தாக்குமோ என்ற உயிர் அச்சம்.  இதுபோன்ற சூழ்நிலையிலும் பத்து நாட்களூக்கு மேலாக புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் எடுத்த முயற்சி தோல்வி கண்டது.  இக்கட்டான சூழ்நிலையில்தான் அதிரடிப்படை வீரர்கள் நவீன ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.  இந்த புலிக்கு வயதாகிவிட்டதால், உயிருடன் பிடித்து வனத்துக்குள் விட்டாலும் மீண்டும் வேட்டையாட  வழியின்றி நகர பகுதிக்குள்தான் வரும்.  அதனால் மனித உயிர்களைக் காக்கும்பொருட்டு புலியைக் கொன்றது சரிதான்.
-- வீ.சீனிவாசன்.
--  'தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஜனவரி 24, 2014.      

Friday, November 6, 2015

கழிவை நீக்கும் காளான்

   காளான்களை கொண்டு சாக்கடையை சுத்தம் செய்யலாம்.  இதை பாட்டனி புத்தகத்தில் படித்ததோடு சரி.  யாரும் முயற்சி செய்வதில்லை.  அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளார்கள்.  கழிவு நீர் நிறைந்த பகுதியில் சில காளான்களை நட்டு வைத்தார்கள்.  அடுத்த ஒரு வாரம் கழித்து அந்த நீரை சோதித்ததில் அந்த நீரின் நச்சுத்தன்மை கிட்டத்தட்ட  பாதிக்கும் கீழாக குறைந்திருந்தது.  சாக்கடை நீரின் தன்மை இப்படி மாறுவதற்கு காரணம், மைசிலியம் என்னும் காளான்களின் அடிப்பகுதி சாக்கடையில் உள்ள இ - கொலி பாக்டீரியா, பூச்சிகள் போன்றவற்றை அழித்துவிடுவதுதானாம்.
-- மணிகண்டன். நாளைய உலகம். ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி10,2014.

Thursday, November 5, 2015

வருஷாபிஷேகம்.

வருஷாபிஷேகம் என்றால் என்ன?  கோயிலில் நடத்துவது ஏன்?
      நாம் பிறந்த நாள் கொண்டாடுவது போல, கோயிலில் கும்பாபிஷேகம் செய்த நாள், அக்கோயிலின் வருஷாபிஷேக நாளாகக் கொண்டாட வேண்டும்.  இதனை சம்வத்ஸராபிஷேகம்  என்றும் சொல்வர்.
---அறிவோம்! தெளிவோம்!  - தொடரில், மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 30,2014.  

Wednesday, November 4, 2015

ராமன் பூஜித்த நவக்கிரகங்கள்.

  ஸ்ரீராமபிரான் சேது பந்தனம் ( பாலம்) கட்டுவதற்கு முன்பு விநாயகரையும், நவக்கிரகங்களையும் பூஜித்தார் என்பது புராணம்.  நவக்கிரகப் பிரதிஷ்டை நடந்த இடம் ' நவபாஷாணம்' எனப்படும்.  அது இப்போதுள்ள தேவிப்பட்டணம்.  விக்னேஷ்வரரை பூஜை பண்ணிய இடம் உப்பூர்.  எனவே, இந்தப் பிள்ளையாரை வழிபட்டே ராமேஸ்வர யாத்திரையை தொடங்க வேண்டும்.
மூன்று வகை ஆசைகள்
     மூன்று வகையான  ஆசைகள் மனிதனை மோட்சமடையாமல் தடுக்கின்றன என்பர்.  மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பன அவை.  தனேஷனை, தாரேஷனை, புத்ரேஷனை என்பது வடநூல் வழக்கு.  மண்ணாசை முதலில் வந்துவிடும்.  இளமையில் பெண்ணாசை வரும்.  பிறகு வருவது பொன்னாசை.  இம்மூன்று ஆசைகளே பிறவிக்குக் காரணமாகும்.  இவற்றை விடவேண்டும் என்பதனை நாயன்மார் வரலாறு காட்டும்.  சேரமான் பெருமாள் தனேஷனையை விட்டவர்.  திருநீலகண்டர் தாரேஷனையை விட்டவர். புத்ரேஷனையை விட்டவர் சிறுத்தொண்டர்.
-- தினமலர். பக்திமலர். ஜனவரி 30,2014. 

Tuesday, November 3, 2015

கருந்துளை கண்டுபிடிப்பு


ஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு
     புவியிலிருந்து 390 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆற்றல் மிக்க புதிய கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
     ஆர்எக்ஸ்ஜே 1532 பால்வெளி மண்டலத்தில் இந்த கருந்துளை உள்ளது.  மிகப் பெரிய அளவுடையதாக இது உள்ளது.  நாசாவின் சந்திரா எக்ஸ் கதிர் கண்காணிப்பு தொலை நோக்கி மற்றும் இதர தொலைநோக்கியைப் பயன்படுத்தி இக்கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.
     அளப்பரிய வடிவமைப்புகளை இக்கருந்துளை உருவாக்கியுள்ளதுடன் வெப்பவாயுச் சூழலில் ஏராளமான நட்சத்திரங்கள் உருவாவதிலிருந்தும் பாதுகாத்து வருகிறது.  இந்த கருந்துளை நமது சூரியனை விட ஆயிரம் லட்சம் கோடி ( ஆயிரம் டிரில்லியன் ) மடங்கு பிரகாசமானது. இக்கருந்துளையின் மையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான தடயம் எதுவும் கண்டறியப்படவில்லை.
கருந்துளை என்றால் என்ன?
     கருந்துளை ( பிளாக் ஹோல்) என்பது அண்டவெளியில் ஒரு பகுதியாகும்.  இவை இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம்.  கருந்துளைகளின் எல்லைக்குள் செல்லும் ஒளி உள்ளிட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவுக்கு அதீத ஈர்ப்பு சக்தியைக் கொண்டவை.  இவற்றின் எல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒலி,ஒளி, மின்காந்த அலைகள் கூட வெளியேறாது.  ஆகவே, இக்கருந்துளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.
     இக்கருந்துளைகள் நட்சத்திர தோற்றப் பரிமாணத்தின் இறுதிக் கட்டமாகக் கருதப்படுகின்றன.  இவை அதீத நிறையைக் (மாஸ்) கொண்டுள்ளதால், முடிவேயில்லாத அடர்த்தியைக் கொண்டுள்ளன.  கன அளவோ, மேற்பரப்போ இவற்றுக்குக் கிடையாது.
     அண்டப்பெருவெடிப்புக் காரணமாகவே, பூமி உள்ளிட்ட கிரகங்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஜனவரி25,2014.                                        

Monday, November 2, 2015

பொதுஅறிவு

*  உடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுப்பு நரம்புத் தொகுப்பு.
*  தும்மல் என்பது சுவாசப் பகுதியை சுத்தம் செய்வதற்காக இயற்கையாகவே நிகழும் நிகழ்வாகும்.  தும்மும்போது சில
   சமயங்களில் மார்பு விலா எலும்பு உடைய வாய்ப்பு உள்ளது.  அதே தும்மலை நாம் அடக்கினால் சில சமயங்களில் கழுத்து,
   தலைஆகிய பகுதிகளில் ரத்த நாளங்கள் வெடித்து இறப்பு ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.
*  சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள்களில் புதன் கோள்தான் சூரியனை மிக வேகமாகச் சுற்றி வருகிறது.  விநாடிக்கு 48 கி.மீ.
   வேகத்தில், 88 நாட்களில் சூரியன ஒரு சுற்று சுற்றிவருகிறது.  சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள அளவில் சிறிய கோளும்
   இதுதான்.
'நெட்'டுக்குத்து
*  செய்தி : பா.ம.க ஆட்சிக்கு வந்தால் காடுவெட்டி குருவுக்குதான் காவல்துறை.  --  ராமதாஸ்
   குத்து :  ஆட்சிக்கு வரலைன்னா காடுவெட்டி குரு காவல்துறைக்குதான்.  --  வஸந்தகுமாரன்.
--  'தி இந்து'  நாளிதழ்.

தானியங்கி கிளீனர்

  வீட்டை  பெருக்க, சுத்தம்  செய்யும் வேலைகளை  எளிதாக  செய்ய  வேக்குவம்  கிளினர்  இயந்திரங்களைப்  பயன்படுத்துகிறோம்.  ஆனால்  இந்த  இயந்திரத்தை  இயக்கவும்  ஒரு  ஆள்  தேவையாகத்தான்  இருக்கிறது.
   தற்போது  இதையும்  எளிமையாக்கியுள்ளது  ஐபோபாட்  என்கிற  கருவி.  மொபைல்  ஆப்ஸ்  மூலம்  இயக்கப்படும்  இந்த  கருவி  தானாகவே  அறையை  சுத்தம்  செய்கிறது.
   360  டிகிரி  சுழலும்  இந்த  கருவியிலுள்ள  சென்சார்கள்  வீட்டின்  வளைவுகளுக்கு  ஏற்ப  சுற்றி  வருகிறது.  எத்தனை  மணிக்கு  சுத்தம்  செய்ய  வேண்டும்  என  ஆப்ஸில்  பதிவு  செய்துவிட்டால்  தானாகவே  சுத்தம்  செய்துவிட்டு  அதற்குரிய  இடத்தில்  செட்டில்  ஆகிவிடும்.
கைகளே  கீபோர்டு
   கீபோர்டு  மற்றும்  மவுசுக்கு  பதிலாக  கையில்  சில  ஒயர்களை  மாட்டிக்கொண்டு  கம்ப்யூட்டரை  இயக்கலாம்.  இப்படியான  ஒரு  கருவியை  ஜெஸ்ட்  என்கிற  நிறுவனம்  வடிவமைத்துள்ளது.
   ஒயர்களைப்  போல  உள்ள  இந்தக்  கருவியை  கையில்  அணிந்து  கொண்டு  கம்ப்யூட்டரின்  மானிட்டரை  பார்த்து  கை  அசைத்தால்  மவுசாக  இயக்கலாம்.  திரையில்  தெரியும்  கீ  போர்டு  எழுத்துகளை  கையை  அசைப்பதன்  மூலமே  டைப்  செய்யலாம்.  மோஷன்  பிராசசர்  மூலம்  இந்தக்  கருவி  செயல்படுகிறது.
   போட்டோஷாப்  மற்றும்  3டி  வேலைகள்  உட்பட  பல  வசதிகளை  இந்த  கருவி  மூலம்  மேற்கொள்ள  முடியும்.
---'தி இந்து' நாளிதழ். வணிக வீதி  இணைப்பு. திங்கள்,   நவம்பர், 2, 2015.   

Sunday, November 1, 2015

மீட்டர் பேசுது

*  சூரியனிலிருந்து சுமார் 9.1 கோடி மைல் தொலைவில் பூமி உள்ளது  சூரியனிலிருந்து வெளிப்படும் வெளிச்சம்
    பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன.
*  வானிலையில் மாற்றம் ஏற்பட சூரியனே காரணம்.  சூரிய ஒளியால் கடல் பரப்பை விட நிலப்பரப்பு விரைவாக சூடாகிறது.
    இதனால் அதன் மேற்பரப்பில் வெப்ப நிலை, காற்றின் அழுத்தம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.
*  இங்கிலாந்தின் தென்கிழக்கே 1987 -ம் ஆண்டு அக்டோபர் 15 மற்ரும் 16 ஆகிய தேதிகளில் வீசிய கடுமையான புயலால் ஒரு
   கோடியே 50 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
-- 'தி இந்து'  நாளிதழ்.

Saturday, October 31, 2015

சிதம்பரம் நடராஜர் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுடையது இல்லை;  அரசு மீட்க வேண்டும்.
     2,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரத்தில் கோயில் இருந்ததற்கான எவ்வித வரலாற்று ஆதாரமும் கிடையாது.  இப்போதுள்ள மேற்குக் கோபுரம் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனாலும், வடக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயராலும், கிழக்குக் கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிகனாலும், தெற்குக் கோபுரம் முதலாம் கோப்பெருஞ்சிகனாலும், எழுப்பப்பெற்றவை.
     முதலாம் ஆதித்ய சோழன்தான் சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தந்து, அதை சோழப் பேரரசின் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்றினான்.  படையெடுப்பின்போது கவர்ந்துவந்த ஏராளமான பொன்னைக் கொண்டு அவனும் அவனது மகன் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் வேய்ந்தனர்.
     சிதம்பரத்தை வைதீகமரபோடு பிணைத்து சமஸ்கிருதத்தில் ஸ்தலபுராணம் எழுதப்பட்டது. 'சிதம்பர மஹாத்மியம்' என்ற நூலில் சிதம்பரம் எட்டுமைல் சமசதுரம் உள்ளதெனவும், அழகிய நான்கு கோபுரங்களைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுவதால், கோபுரங்கள் கட்டப்பட்ட பின்னரே இந்த வடமொழி நூல் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என யூகிக்கலாம்.
-- ரவிக்குமார் . விவாதக் களம்.
-- ' தி இந்து; நாளிதழ்.வியாழன், ஜனவரி 9, 2014.  

Friday, October 30, 2015

துளசி

  துளசியை எப்படிப் பறிக்க வேண்டும்?
      ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்க வேண்டும்.  பறிக்கும் போது :
' துளஸ்யம்மருத ஐந்மாஸி ஸாதாத்வம்
 கேஸவப்ரியே கேஸவார்த்தம்லு நாளி த்வாம்
 வரதா பவ ஸோபதே '
என்ற சுலோகத்தை சொல்லிக் கொண்டு பறிக்க வேண்டும்.  நான்கு இலைகளூம் நடுவில் தளிரும் ( ஐந்து தளங்கள் ) இருப்பது போலத் துளசியை கிள்ளி சேகரிக்க வேண்டும்.
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.   

Thursday, October 29, 2015

தெரிஞ்சுக்கோங்க...!

*  கோலம் :  அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.  அந்த இல்லத்தில் லட்சுமி தாண்டவம் ஆடுவாள் என்கிறது சாஸ்திரம்.
                     கணவன் வீட்டைவிட்டு செல்லும் முன் போடப்பட வேண்டும்.  வேலைக்காரர்களை வைத்து கோலம்
                     போடக்கூடாது.  கோலத்துக்கு காவியும் தீட்டினால், அங்கு பகவானும் லட்சுமியும் எழுந்தருள்கிறார்கள் என்பது தர்ம
                      சாஸ்திரம்.  சுப காரியங்களை முன்னிட்டு கோலமிடும்போது ஒற்றைக்கோடு போடக்கூடாது.  அசுப காரியங்களுக்கு
                      இரட்டைக் கோடு ஆகாது.  இதை இழை கோலம் போடும்போது கவனத்தில் கொள்ளவேண்டும்.
கூடாது...கூடாது...
                      புண்ணிய தீர்த்தங்களில் குளிக்கும் போது, எடுத்தவுடன் காலை வைக்கக்கூடாது.  தீர்த்தத்தை வலது கையால்
                      எடுத்து தலையில் தெளித்துக் கொண்ட பின்பே , வலது காலை வைக்க வேண்டும்.  ஆடையின்றி குளிக்கக்கூடாது.
                      நீரில் எச்சில் உமிழக்கூடாது.  வாய் கொப்பளிக்கக்கூடாது.  தான் குளிக்கும் தீர்த்தத்தை இன்னொரு தீர்த்ததுடன்
                      ஒப்பிட்டுப் பேசி உயர்வு தாழ்வு கற்பிக்கக்கூடாது.
--  தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.

Wednesday, October 28, 2015

பஞ்சாட்சர மந்திரம்.

  பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூக்குமம் என்று இரண்டு வகைப்படும்.  நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம்.  சிவாயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம்.  ஆரம்ப நிலை ( சமய தீட்சை ) தீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும்,  மேல்நிலை ( விசேஷ தீட்சை முதலியன ) தீட்சை பெற்றவர்கள் சூக்கும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டும்.  உபதேசம் பெறுவது முக்கியம்.
      பஞ்சாட்சர மந்திரத்தை காலை குளித்த பிறகு 108 தடவை, மதியம் சாப்பிடும் முன் 108 தடவை, மாலை விளக்கேற்றும் வேளையில் 108 தடவை ஜபம் செய்யவேண்டும்.  இதுவல்லாமல் இயன்ற பொழுதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.
பிரதோஷ நாள்.
      பிரதோஷ நாளில் சிவனுக்கு மல்லிகை, நந்தியாவர்த்தம் போன்ற மலர்களினால் மாலை அணிவித்து, வில்வ இதழ்களினால் அர்ச்சனை செய்தும் பிரதோஷத்தில் வழிபட வேண்டும்.
-- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்ச்சாரியார்.   அறிவோம்! தெளிவோம்!  தொடரில்...
-- தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.

Tuesday, October 27, 2015

குளிக்கும்போது...


     நாம் குளிக்கும் போது அந்த தண்ணீரில் கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளும் இருப்பதாக நம்பிக்கையுடன் நினைக்க வேண்டும்.  அப்போது அந்த நீர் புனித நீராகிறது.  நீராடும் முன் ஒரு சொம்பு தண்ணீரை கையில் எடுத்துக் கொண்டு, பின் வரும் சுலோகத்தைச் சொல்லி நதி தேவதைகளை வணங்கி, இந்த நீரில் எழுந்தருள்க என்று பிரார்த்தனை செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
     குளிக்கும் போது சொல்ல வேண்டிய சுலோகம் இது :
' கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா
 சிந்து காவேரி ஜலேஸ்மின் சாந்நிதம் குரு '
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.                                                     

Monday, October 26, 2015

பரமாச்சாரியார்.


     பரமாச்சாரியார், பெரியவாள், பெரியவர், மகாப்பெரியவர் என பக்தர்களால் அழைக்கப்பட்டவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
     அத்வைத தத்துவஞானி ஆதி சங்கரர் கி.மு. 482 முதல் 477 வரை காஞ்சிமடத்தின் முதல் தலைவராக இருந்து குருபரம்பரையை துவக்கி வைத்தார் என்கிறது காஞ்சிமடத்தின் இணைய தளம்.  பரமாச்சாரியார் அதன் 68வது மடாதிபதி.
     விழுப்புரத்தில் வாழ்ந்த கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கு சுவாமிநாதன் 1894ல் பிறந்தார்.  அவர்தான் 1907 பிப்ரவரி 3ல், 13-வது வயதில் மடத்தின் தலைவராகி பரமாச்சாரியார் ஆனார்.  1911 முதல் 1915 வரை மடம் அரசாங்கத்துக்கு போனது.  1915ல் அவருக்கு 21 வயதானதும் மடத்தின் நிர்வாகம் அவரிடம் திரும்பியது.
     87 வருடங்கள் மடத்தின் தலைவராக இருந்தார்.  வடக்கே வாரணாசிக்கும் தெற்கே ராமேஸ்வரத்துக்கும் பாதயாத்திரை சென்று வந்தார்.  சமஸ்கிருதம், வேதங்கள், சாஸ்திரங்களை, ஆழமாக கற்றார்.  அவற்றை பரப்பவும் பலப்படுத்தவும் பல மாநாடுகளை நடத்தினார்.  பல அறக்கட்டளைகளை ஆரம்பித்து மடத்தை பலப்படுத்தினார்.  அவரின் காலம் பொற்காலம் எனப்படுகிறது.
     மடாதிபதிகள் பட்டு ஆடைகளை அணிவதே வழக்கம்.  அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு இயக்கம் நடந்தபோது பட்டாடைகளை நீரில் எறிந்துவிட சொன்னார்.  கதர் ஆடைகளுக்கு மாறினார்.  தனது சீடர்களையும் அவ்வாறு செய்ய அறிவுறுத்தினார்.  கேரளத்தில் பரமாச்சாரியார் - காந்தியடிகள் சந்திப்பு நடந்தது.
     நேபாள மன்னர் இந்திய பிரதமர்கள் முதல் மிக முக்கியமானவர்கள் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.  ஆனாலும், ஏழை பணக்காரர் அனைவரையும் சமமாக நடத்தினார்.  1994ல் ஜனவரி 8ம் நாளில் முக்தி அடைந்தார்.
-- தேசம்.
--  ' தி இந்து' நாளிதழ், புதன், ஜனவரி 8, 2014.                                       

Sunday, October 25, 2015

கள்ள ரூபாய் நோட்டு

  இந்தியாவில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு பாகிஸ்தானே காரணாம்.
     துபாய், ஹாலந்தில் அச்சிட்டு வங்கதேசம் வழியாக அனுப்பப்படுகிறது.  இதற்கான தொழில்நுட்பங்களை மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வரவழைத்து அச்சடிக்கின்றனர்.  வங்கதேசம் வழியாக கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும்போது, நேபாளம் வழியாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.
     கள்ளநோட்டு விநியோகம் செய்பவர்கள் மிகப் பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதையே   2006-ம் ஆண்டில்தான் முதலில் தமிழக காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.  வேலூர் சி.எம்.சி.யில் இருதய அறுவை சிகிச்சைக்காக சேர்ந்த ஒருவர் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தன.
0.0006 சதவிகிதம் கள்ளநோட்டுகள்
     இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, "4 ஆண்டுகளுக்கு முன்புவரை கள்ள நோட்டுகளுக்கும், நல்ல நோட்டுகளுக்கும் சுமார் 13 வித்தியாசங்கள் இருந்தன.  ஆனால், தற்போதுள்ள கள்ள நோட்டுகளில் 2 வித்தியாசம் மட்டுமே உள்ளன.  கள்ள நோட்டுகளை அச்சடிப்பவர்களும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்"  .
     கள்ள நோட்டுகளே இல்லாத நாடு ஆஸ்திரேலியா.  இந்த நாட்டு ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வழக்கமான காகிதத்தில் இல்லாமல், பாலிமரில் அச்சடிக்கப்படுகின்றன.
     இந்த நோட்டுகள் கசங்காது, கிழியாது.  இதை அச்சடிப்பதும் கடினம்.  இதற்கான தொழில் நுட்பம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்துவருகிறது.  அதற்கு ஆஸ்திரேலிய அரசின் உதவியையும் கேட்டிருக்கிறது.
-- ஆர்.சிவா.  மாநிலம்.
-- ' தி இந்து' நாளிதழ், புதன், ஜனவரி 8, 2014.  

Saturday, October 24, 2015

மறுநிர்ணயம் காலத்தின் கட்டாயம்!

   "சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட இந்திய நேரத்தைவிட , ஒரு மணி நேரம் அதிகம் இருக்குமாறு அசாமில் உள்ளூர் கடிகாரங்களில் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, தனி நேர மண்டலம் உருவாக்கப்படும் " என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் தருண் கோகோய்.
      அசாமில் கோடைக் காலங்களில் அதிகாலை 4 மணிக்கே சூரிய உதயம் ஏற்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் நன்கு இருட்டிவிடுகிறது.  அசாமிலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள குஜராத்தில், அசாமில் சூரிய உதயம் ஏற்பட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் சூரியன் உதயமாகிறது.
     இந்தியாவின் கால அளவு உத்தரப்பிரதேசத்தின் மீர்சாபூர் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி தீர்க்க ரேகையை அடிப்படையாகக்கொண்டே கணிக்கப்படுகிறது.  இந்தக் கோட்டுக்குக் கிழக்கே உள்ள மாநிலங்களுக்கு, மேற்கே உள்ள  மாநிலங்களைவிட மிகக் குறைவான பகல் பொழுதே கிடைக்கிறது.
     பகல் பொழுதை வீணாக்காமல் இருக்க பிரிட்டிஷார் 150 ஆண்டுகளுக்கு முன் 'சாய் பகான்' எனும் காலமுறையைக் கடைப்பிடித்தனர்.  அதை அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமல்படுத்தினர்.  அதனால் தொழிலாளர்கள் சூரிய உதயத்துக்கு ஏற்ப அதிகாலையிலேயே எழுந்து, வீட்டில் வேலையை முடித்துவிட்டு, தோட்ட வேலைக்கு வந்துவிடுவர்.  இதனால், அவர்களுடைய உழைப்பு நேரமும் உற்பத்தித் திறனும் இன்றளவும் வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
     இந்தியா மிகவும் பரந்துவிரிந்த தேசமாக இருப்பதால், இங்கு சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் ஒரே நேரத்தில் எல்லா
மாநிலங்களிலும் நடப்பதில்லை.  பொதுவான நேர நிர்ணயத்தால் சிற்சில சங்கடங்கள் ஏற்படத்தான் செய்கின்றன.
-- 'தி இந்து' நாளிதழ். தலையங்கம். ஜனவரி 8,2014.  

Friday, October 23, 2015

'சுஜோக்' தெரபி.

  கொரிய மொழியில், 'சு' என்பது  கைகளையும் 'ஜோக்' என்பது பாதங்களையும் குறிக்கும்.  இரண்டும் இணைந்த வார்த்தை
'சுஜோக்'.  நமது உடலின் 'ரிமோட்' கன்ட்ரோலாக கைகளையும் பாதங்களையும் கருதலாம்.  உடலின் செயல்பாடுகள் இந்த இரண்டு உறுப்புகளிலும் பிரதிபலிக்கிறது.  எனவே, உடலின் எந்த பாகத்தில் வலி அல்லது நோய் ஏற்பட்டாலும் அதை புரிந்து கொண்டு அது தொடர்புடைய புள்ளி, நமது கைகள் அல்லது பாதங்களில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து 'அழுத்தம்' ( பிரஷர் ) தந்து அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு 'சுஜோக்' என்று பெயர்.  'அழுத்தம்' கொடுப்பது, வண்ணம் தீட்டிக் கொள்வது ( கலர் தெரபி ), பச்சை பயறு, மிளகு, வெந்தயம் போன்ற விதைகள் வைத்து அழுத்துவது ( சீட் தெரபி ), பிரத்யேக காந்தம் வைத்து டேப் மூலம் சுற்றுவது ( மேக்னட் தெரபி ) போன்றவை 'சு- ஜோக்' முறை வைத்தியத்தில் இடம்பெறுகிறது.
     தென்கொரியாவில் தோன்றிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறையுள் மருந்துகளே கிடையாது.  பேராசிரியர் 'பார்க் ஜெ வூ '
என்பவரால் உலகுக்கு உணர்த்தப்பட்ட 'சு- ஜோக்' வைத்திய முறையில், எல்லாவிதமான வலிகளையும் விரட்ட முடியும்.  உடலில் 14 விதமான சக்தி ஓட்டங்கள் உள்ளன.  கொரியா, சீனா, ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட இந்த மருந்தில்லா மருத்துவ முறை 1987ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் பிரபலமாகிவருகிறது.  'சு-ஜோக்' மருத்துவர்கள் உலக அளவில் அமைப்பு வைத்துள்ளனர்.  இதன் மூலம் 'சு-ஜோக்' மருத்துவத்தின் நன்மைகளை மக்களுக்கு விளக்கி வருகின்றனர்.
--  தினமலர். 5-1-2014.  

Thursday, October 22, 2015

அப்படியா?!

*  அமெரிக்காவை மைனஸ் 51 டிகிரிக்கு உறைய வைத்த பனிப்புயல்.  20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்.
   இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு.  மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம், போதுமான உணவை
   கையிருப்பில் வைத்துக் கொள்ளவும், ஐந்து நிமிடங்கள் வரை ஆடை மூடாத பகுதிகள் இந்த குளிரால் பெருமளவு பாதிக்கப்
   படும், கார் உள்ளிட்ட வாகனங்களை ஸ்டார்ட் செய்யமுடியாது, நீர் செல்லும் சாலைகளில் நீர் உடனடியாக உறைந்துவிடும்,
   குடிநீர் குழாய்கள் உறைந்து வெடித்து விடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
* மேகங்களில் காற்றும் தண்ணீரும்தான் கலந்திருக்கின்றன.  இந்த இரண்டுமே எந்த ஒளியையும் கிரகிக்கும் தன்மை
  கொண்டவை அல்ல.  மாறாக, ஒளியை அப்படியே ஊடுருவச் செய்யும் கண்ணாடி போன்றவை.  இருந்தும் மேகங்கள் பால்
  போன்ற வெண்மை நிறத்தில் இருப்பது ஓர் ஆச்சர்யமான அறிவியல் உண்மை.
--   ' தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஜனவரி 7, 2014. 

Wednesday, October 21, 2015

குச்சி ஐஸ் !

 1905 ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பிராங்க் எபெர்சன் வீட்டில் சோடா தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  இதற்காக பல முயற்சிகளை கையாண்ட அவர், வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்தில் அவற்றை ஊற்றி ஒரு குச்சியை வைத்து கலக்கிக் கொண்டிருந்தார்.  பின்னர் இரவில் சீதோஷ்ண நிலை மாறி பனிகொட்டியது.  அடுத்த நாள் காலையில் அவர் அதை பார்க்க நேர்ந்தபோது, அது அப்படியே குச்சியுடன் இணைந்து ஐஸ் ஆனது.  11 வயது நிரம்பிய எபெர்சன் அதை பெரிய கண்டுபிடிப்பாக கருதவில்லை.  ஆனால், அவருக்கு 18 வயதானபோது, அவருக்கு அது நினைவுக்கு வந்தது.  இதனால் அதே பணியில் 7 வகையான பழரச சுவையுடன் குச்சியில் செருகி குச்சி ஐஸ் விற்பனையைத் தொடங்கியதோடு, அவற்றுக்கு காப்புரிமையையும் பெற்றார்.
-- தினமலர். சண்டே ஸ்பெஷல். 5-1-2014.