Friday, March 5, 2010

நியூயார்க் .

அமெரிக்கா என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு ஐரோப்பியர்கள் குடியேறியபோது , 1614 ம் ஆண்டு மன்ஹாட்டன் தீவின் தெற்கு முனையில் ' நியூஆம்ஸ்டர்டாம் ' என்ற டச்சு காலனி அமைக்கப்பட்டது . அங்கிருந்த ட்ச்சு காலனியை ஆங்கிலேயர்கள் 1664 ம் ஆண்டு கைப்பற்றி , யார்க் - அல்பேனி பிரபு நினைவாக ' நியூ யார்க் ' எனப்பெயரிட்டனர் . 1698 ம் ஆண்டில் நியூ யார்க் நகரில் 4 ஆயிரத்து 937 பேர் வசித்தனர் . பின்னர் , அமெரிக்காவின் வர்த்தக தலைநகரமாக நியூ யார்க் மாறியது . மக்கள்தொகையும் கிடுகிடுவென அதிகரித்தது .
இப்போது உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ ரயில் சேவையாக , நியூ யார்க் நகர நிர்வாகம் பெருநகர போக்குவரத்து ஆணையம் இயக்குகிறது . ' தூங்கா நகரம் ' என பெயர் பெற்ற நியூ யார்க்கில் 24 மணி நேரமும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது .
1904ம் ஆண்டு சேவை தொடங்கப்பட்டபோது , எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் 5 சென்ட் கட்டணமே வசூலிக்கப்பட்டது . பின்னர் 1948 ம் ஆண்டு இது 10 சென்ட் ஆக உயர்த்தப்பட்டது . முதலில் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டு , இப்போது ' மெட்ரோ கார்டு ' அமலில் இருக்கிறது . இப்போது அடிப்படை கட்டணம் 2. 25 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் 27 - 10 - 2009 .

No comments: