Wednesday, March 24, 2010

அகத்தியர் உவமை !

அகத்தியர் ஓர் உவமை மூலம் ஐந்து விதமான கீரைகளைப்பற்றிக் கூறுகிறார் . இவைதான் அந்தக்கால ' வயாக்ரா ' கிரைகள் !
" நறுந்தாளி நன் முருங்கைத்
தழை
தூதுவளை நற்பசலை
வாளில் அறுகீரை
நெய்வார்த்து உண்ணில்
யாளியென விஞ்சுவார்
போகத்தில் "
யானையைவிடப் பெரிதான ' யாளி ' தற்போது இல்லை . கோயில் சிலைகளில் மட்டுமே ' யாளி ' எனும் மிருகத்தைக் காணலாம் . காதல் களியாட்டத்தில் நாம் அந்த யாளியையே மிஞ்ச முடியுமாம் ! எப்படி ? நறுந்தாளி , நன்முருங்கை , தூதுவளை , நற்பசலை , அரைக்கீரை -- இந்த ஐந்து கீரைகளையும் தினம் ஒன்றாக பருப்பு , மிளகு , சீரகம் , பூண்டு , சிறு வெங்காயம் சேர்த்துப் பொரியல் செய்து பகல் உணவில் மட்டும் இரண்டு பிடி சாதத்தில் ஒரு கப் அளவு கீரையும் -- ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துச் சுவையுடன் சாப்பிட்டால் போதும் ! இது தாங்க காதல் கெமிஸ்ட்ரிக்கான பாடம் .
--- குமுதம் . 20 - 12 - 2006 .

No comments: