Thursday, June 14, 2012

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் !


** ராமனின் மனைவி சீதை, மற்ற சகோதரர்களின் மனைவியர் யார்? -- லட்சுமணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி,
சத்ருக்கனன் - சுருதகீர்த்தி.
** சூரியனின் நட்பு கிரகங்கள் எவை ? -- செவ்வாய், குரு, சந்திரன்.
** குற்றாலநாதரின் அம்பாள் பெயர் -- குழல்வாய்மொழி நாயகி.
** நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலம் எது? -- திங்களூர் ( தஞ்சாவூர் மாவட்டம் ).
** காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? -- ஜுரகேஸ்வரர்.
** தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி -- அட்டை.
** ' பக்தவத்சலன்' என்று அழைப்பது யாரை? -- நரசிம்மர்.
** ' பக்தவத்சலன்' என்பதன் பொருள் என்ன? -- பக்தர்களிடம் கருணை உள்ளவன் ( வத்சலம் - கருணை ).
** இறைவன் நமது உள்ளத்தில் கட்டை விரலளவு உள்ளான் என்று கூறும் நூல் எது? -- ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்/
** ' நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக கருதி பாடிய சிவபக்தர் யார்? -- மாணிக்கவாசகர்.
--- -தினமலர் இணைப்பு. 7 . 5 . 2011. ( சென்னை பதிப்பு )

No comments: