Monday, March 13, 2017

அடக்கம்!

   ஒரு  துறவியை  சந்தித்த  ஒருவன், "சுவாமி!  மனிதனுக்கு  அடக்கம்  அவசியம்  என்று  எல்லோரும்  சொல்கிறார்களே,  எதனால்?"  என்று  கேட்டான்.
    "குழம்பில்  புளி,  காரம்  போன்ற  அனைத்துப்  பொருட்கள்  இருந்தாலும்  உப்பு  இல்லையென்றால்  உண்பதற்கு  உதவாது.  அதுபோல்  ஒரு  மனிதனிடம்  செல்வம்,  பட்டம்,  பதவி  முதலியன  இருந்தாலும்  அடக்கம்  இல்லையென்றால்  சிறப்படைய  மாட்டான்!"  என்றார்  துறவி.
-- டி.பூபதிராவ்,  காஞ்சிபுரம்.
தல  விருட்சங்கள் !
     ஒரு  ஆலயம்  எழுப்புவதற்கு  முன்  அதன்  மூலவழிபாடு,  அவ்விடத்திலி  உள்ள  மரத்தின்  கீழிருந்துதான்  தொடங்கப்படுகின்றன.  அம்மரமே  அந்தத்  தலத்தின்  தல  விருட்சமாக  சிறப்பு  பெறுகிறது.
-- சு.மதுமிதா,  பெருந்துறை.
--  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர்  16-- 31,  2013.    

No comments: