Wednesday, March 16, 2011

டிப்ஸ்....டிப்ஸ் ...

* வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமா ? சமோசா தயாரித்தவுடன், ( எண்ணெயில் பொரிப்பதற்கு முன் ) ஒரு தட்டில் வரிசையாகப் பரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள் . சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே எடுத்து, பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்துவிடுங்கள் . பிறகு, எண்ணெயில் பொரியுங்கள் . ' சமோசா செம தூள் 'என்று உற்சாகக் குரல் கொடுப்பீர்கள் .
* கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவை மூன்று நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்க, வாழை இலையில் சுற்றி தண்ணீர் பாத்திரத்தின் மேல் வைத்துவிடுங்கள் . அன்று வாங்கியது போல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் .
* சாதம் உதிர் உதிராக வரவேண்டுமா ? சூடான சாதத்தின் மீது காய்ச்சிய பாலை கொஞ்சம்போல தெளித்துவிட்டு, ஒரு முள் கரண்டியால் பரப்பி மூடி விடுங்கள் . பரிமாறும் போது சாதம் உதிராக இருக்கும் .
* கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, கரகரப்பான அரிசிப் பொரியை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கினால், ஐந்தே நிமிடங்களில் அரிசிப் பொரி உப்புமா தயார் !
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, உப்பு சேர்க்க மறந்து போனாலும் கவலையில்லை . சப்பாத்தி தேக்கும்போது தொட்டுக் கொள்ளும் கோதுமை மாவில் அரை டீஸ்பூன் உப்புத் தூளை சேர்த்துக் கலந்துவிடுங்கள் . உப்பு கலந்த மாவில் புரட்டி சப்பாத்தி இடும்போது சப்பாத்திகளில் உப்பு சமமாகப் பரவி விடும்.
--- அவள் விகடன் , 27. 8 ..2010. இதழ் உதவி : N. கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

2 comments:

Pranavam Ravikumar said...

Great Info...!

க. சந்தானம் said...

pranavam Ravikumaar a .K.a . Kochuravi . Great infor ..நன்றி !