Tuesday, May 8, 2012

இன்விடேஷன்


உங்கள் வீட்டுக்கு ஒரு இன்விடெஷன் வந்து, அதன் உரையின் மேல் முகவரிக்குப் பக்கத்தில் உங்கள் புகைப்படமும் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? ஒரு நிமிடம் சந்தோஷமாகிவிடமாட்டீர்களா ? அப்படி ஒரு சந்தோஷத்தை ஏகப்பட்ட பேருக்குத் தந்திருக்கிறார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் .
சில வருடங்களுக்கு முன்பு அவரது மூத்த மகளின் திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் புகைப்படம் எடுத்து எல்லோரையும் போல் ஆல்பத்தைப் பரணில் போட்டுவிடாமல், அடுத்த வாரம் நடக்கப் போகும் இரண்டாவது மகளின் திருமண வரவேற்பு அழைப்பிதழின் கவரில் அவரவர்களின் புகைப்படத்தையும் பிரிண்ட் செய்து அனுப்பியிருக்கிறார் . பிகேபி.யின் ஐடியா புதுமையாக இருந்தது . ஒரு கொசுறுத் தகவல், இதை செயல்முறைப் படுத்தியது டிஸைனரான மணப்பெண் ஸ்வர்ணப்பிரியாதான் !
--- அரசு பதில்கள் , குமுதம் , 8 . 2 . 2012 .

No comments: