Wednesday, May 16, 2012

கட்டுப்பாடு .

செல்போன் பேச்சுக்கு கட்டுப்பாடு .
செல்போன் பேச்சுக்கு கட்டுப்பாடு வந்தாச்சு ' லிட்டில் ஜாமர் ' கருவி .
இந்த கருவியை வீட்டில் பொருத்தினால் 50 முதல் 100 அடி தொலைவுக்கு செல்போனை யாரும் பயன்படுத்த முடியாது .பெற்றோர்கள் இந்த ' ஜாமரை ' தங்கள் பிள்ளைகளுக்கு தெரியாமல் மறைவிடத்தில் பொருத்திவிட்டால், அவர்கள் என்னதான் செல்போனுடன் மல்லுகட்டினாலும் நெட்வொர்க் ( டவர் ) கிடைக்காது .
பெற்றோர்களும் கவலையில்லாமல் நிம்மதியாக தூங்கலாம் . இதன் விலையும் மலிவுதான் . ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ. 4 ஆயிரம் வரையிலான விலைகளில் இந்த ஜாமர் கருவி கிடைக்கிறது . சீனாவின் தயாரிபான இந்த ' லிட்டில் செல்போன் ஜாமர் கருவி ' விற்பனை தற்போது சென்னையிலும் சக்கை போடு போடுகிறது . ஆனால், செல்போன் ஜாமரை மிகவும் ரகசியமாகவும், சாமர்த்தியமாகவும் பயன்படுத்துவது பெற்றோர் கையில்தான் உள்ளது .
--- தினமலர் . 12 . 2 . 2012 .

No comments: