Monday, May 28, 2012

நேரமும் அழகியும் ...


பிரெஞ்சு நாட்டுத் தத்துவஞானி பான்டெனல் என்பவரிடம் ஒரு அழகான பெண் வந்து, ' எனக்கும் கடிகாரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? ' என்று கேட்டாள் .
அதற்கு அந்த ஞானி, ' கடிகாரம் நேரத்தை நினைவுப்படுத்துகிறது . ஆனால் நீயோ நேரத்தையே மறக்கும்படி செய்துவிடுகிறாய் ' என்றார் .
-- கஸ்தூரி, வேலூர் .
வாட விடவா ?
நேராக படித்தாலும், திருப்பி படித்தாலும் பொருள் மாறாத வார்த்தைகளை ஆங்கிலத்தில் ' பாலிண்ட்ரோம் ' என்பார்கள் . அப்படி தமிழில் இருக்கும் வார்த்தைகள் ...
மாமா, பாப்பா, காக்கா, குடகு, தாத்தா, டாட்டா, வாட விடாவா, விகடகவி, மாலா போலாமா? மாவடு போட்டுவமா ?, தேரு வருதே, யானை பூனையா ?.
--- எஸ். பானுஷங்கர், திருச்சி .
--- தினமலர், இணைப்பு . மார்ச் 3 , 2012 .

No comments: