Saturday, July 30, 2016

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு.

  பூமியை விட 17 மடங்கு எடையும், இரு மடங்கு அளவும் கொண்ட கடின பாறைகளால் ஆன புதிய வகை கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
     மிகப்பெரும் பூமி ( மெகா எர்த் ) என்று கூறப்படும் இந்த கிரகம் 'கெப்ளர் - 10சி என்று பெயரிடப்பட்டுள்ளது.  சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை 45 நாள்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது இந்த கிரகம்.  ட்ராகோ நட்சத்திர மண்டலத்தில், பூமியில் இருந்து 560ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.  முழுவதும் பாறைகள் மற்றும் திடப் பொருள்களால் ஆன இந்த கிரகம், இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை விட பெரியது.  அதனால் இது மிகப்பெரும் பூமி என்று கூறப்படுகிறது.  இந்த கிரகத்தை சுற்றிலும் அடர்த்தியான வாயு மண்டலம் இருப்பது தெரியவந்துள்ளது.  இந்த கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்புளது.
     வியப்பூட்டும் இந்த கண்டுபிடிப்பால் உலகத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞானிகளின் கருத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூன் 5, 2014.  

No comments: