Wednesday, January 25, 2017

அரசியல்வாதி.

"அன்றைய,  இன்றைய அரசியல்வாதிகளுக்கு என்ன வித்தியாசம்?"
     "முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த்போது, 'நான் ஆண்களிடம் தனியாகப் பேச வேண்டும்.  ஆகவே, பெண்கள் எல்லோரும் சென்று விடுங்கள்'  என்றாராம்.  பெண்கள் சென்றவுடன்  எம்.ஜி.ஆர். ஆண்களிடம்
'விஷயம் ஒன்றுமில்லை.  இங்கு கூட்டம் அதிகம்.  எல்லோரும் ஒரே நேரத்தில் கலைந்து சென்றால் நெரிசல் அதிகம் இருக்கும்.  அதனால்தான் முதலில் பெண்களை போகச் சொன்னேன்.  இனி நீங்களும் செல்லலாம்'  என்றாராம்.
-- விக்னேஷ்,  மதுரை.  ( நானே கேள்வி... நானே பதில்... ) பகுதியில்.
--   ஆனந்த விகடன். 25-9-2013.  

No comments: