Wednesday, January 11, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

*   பாற்கடலில் அவதரித்ததால் திருமகளை ... அலைமகள் என்பர்.
*   சரஸ்வதி ... நாக்கில் வீற்றிருப்பதாகச் சொல்வர்.  அதனால் நாமகள் என்றும் பெயருண்டு.
*   இமவான் என்பவர் ... பார்வதியின் தந்தை.
*   யோக நிலையில் காட்சி தரும் அம்பிகை ... திருவாரூர் கமலாம்பிகை.
*   அம்பிகை குயிலாக விளங்கும் தலம் ... மதுரை ( கடம்பவனக்குயில் ).
*   32 அறங்களைச் செய்த அம்பிகை ... காஞ்சி காமாட்சி.
*   முதுமை, இளமைக் கோல அம்பிகையரை ... விருத்தாசலத்தில் ( விருத்தாம்பாள், பாலாம்பாள் ) தரிசிக்கலாம்.
*   சிவனோடு போட்டி நடனம் ஆடியவள் ... தில்லை காளி.
*   உலக நன்மைக்காக பட்டினி விரதம் இருக்கும் அம்பிகை ... சமயபுரம் மாரியம்மன் .
*   சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் அருளூம் தலம் ... மும்பை மகாலட்சுமி கோயில்.
--  அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர்.  இதழுடன் இணைப்பு. சென்னை பதிப்பு.   செப்டம்பர், 23, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்,  விருகம்பாக்கம். சென்னை .92.

No comments: