Friday, January 23, 2009

'வணக்கம் '

'வணக்கம் ' பலவிதம்
சிவன், பிர்மா, விஷ்ணு.ஆகிய தெய்வங்களை வணங்கும்போது, சிரசிற்கு மேல் 12 அங்குலம் கைகளை உயர்த்தியும்,
மற்ற தெய்வங்களுக்கு சிரசின்மேல் கைகளைத் தூக்கிக் கூப்பியும், குருவிற்கு ,நெற்றிக்கு நேராகவும், தந்தைக்கும், அரசனுக்கும் வாய்க்கு நேராகவும்,அறனெறியாளர்களுக்கு மார்புக்கு நேராகவும், அன்னைக்கு, வயிற்றுக்கு நேராகவும் கைகளைக் கூப்பி வணங்க வேண்டும் என்பது சாஸ்திரம்.
பூணூல்.
பிராமணர்களின் தனி உரிமை அல்ல. உரியவயதில் குருவிடம் உபதேசம் பெற்று 'இரண்டாவது பிறப்பு' எய்தும் அத்தனை பேருக்கும் அது பொதுவானது.
பழமொழி !
நம்மிடையே ஒரு பழமொழி உண்டு."வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை"
உண்மையில் வாக்கு ஒத்தவனுக்கு (சொல் சரியாக அமைபவனுக்கு ) என்றும், ஆட்சி நடத்தும் அரசாங்கத்தின் போக்கோடு ஒத்துப் போகிறவனுக்கும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
-- டாக்டர் ஓளவை. நடராசன்.

No comments: