Thursday, January 29, 2009

செய்தித் துளிகள் !

கப்பலில் உள்ள திசைக் காட்டும் கருவியில் ,32 திசைகள் உள்ளன.
ரூபாய் நோட்டுக்களுக்கு மாதிரி அமைத்துக் கொடுப்பவர்கள் பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் & லார்டு கம்பெனியார்.
பறவைகளை 27 வம்சங்களாகப் பிரிக்கிறார்கள்.
பெரியவர்கள் செய்யும் சிறுபிள்ளைத் தனமான செயல்களைக் குறிப்பது 'Childish' .குழந்தைகளின் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட பெரியவர்களைக் குறிப்பது 'Childlike'
ஒரு வான சாஸ்திர அலகு என்பது சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்.
உலகிலுள்ள வளை குடாக்களில் பெரியது 'மெக்ஸிகோ' வளைகுடா. சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை உடையது அது.
ரோமாபுரியில் கி.மு.63 -ம் ஆண்டிலேயே சுருக்கெழுத்து முறை இருந்திருக்கிறது.
தேனீக்கு ஐந்து கண்கள். மூன்று சாதாரணமானவை. மற்ற இரண்டு மிகவும் நுட்பமானவை. ஆயிரக்கணக்கான 'லென்சு'களைக் கொண்டவை.பல சர்சுகளில் தேனீயின் பணியைப் பாராட்டும் வகையில் தேன் மெழுகினால் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகளை உபயோகிக்கிறார்கள்.

No comments: