Friday, January 30, 2009

வேண்டும்

நமக்கு என்ன வேண்டும் ?
படுத்தவுடன் உறக்கமது வருதல் வேண்டும்
பசித்தவுடன் உண்ணுகிற நிலைமை வேண்டும்
எடுத்தவுடன் படிக்கின்ற நூல்கள் வேண்டும்
இசைத் தமிழே என் செவியை அடைதல் வேண்டும்
உடுத்தவுடன் துணிமணிகள் இருத்தல் வேண்டும்
உணவாக மரக்கறியே இருக்க வேண்டும்
கொடுத்தவுடன் வாங்காத மாந்தர் வேண்டும்
குன்றாத நட்புறவு இருத்தல் வேண்டும்.
--நன்றி: தமிழப்பன்.'முகம்' இதழில் எழுதியது.

No comments: