Wednesday, February 4, 2009

வானொலி !

உலகப் புகழ்பெற்ற வானொலி சேவை அமைப்பான பிபிசி, 1922--ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி தனது ஒலிபரப்பை தொடங்கியது. வானொலி ஒலிபரப்பு முயற்சிகள் முதலில் அமெரிக்காவில் தொடங்கியது.இங்கிலாந்தில் அரசு கெடுபிடி கடுமையாக இருந்ததால் வானொலி சேவை தொடங்க முடியாத நிலை இருந்தது.எனினும அமெரிக்காவில் வானொலிக்கு கிடைத்த வரவேற்பு இங்கிலாந்து மக்கள் ஆசையை தூண்டியது.இதன் பிறகு' பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்' (பிபிசி) சேவை படுவேகமாக வளர்ந்து ,உலகம் முழுவதும் பரவியது.
பிபிசி தமிழ்.
பிபிசி நிறுவன நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மட்டுமின்றி உலகின் 43 மொழிகளில் ஒலிபரப்பாகிறது.தமிழ் ஒலிபரப்பு இதில் முக்கியமானது.தெற்காசிய மொழிகளில் முதன்முறையாக தமிழ் ஒலிபரப்பு 1941-ம் ஆண்டு மே , 31-ம் தேதி தொடங்கியது.தினந்தோரும் இரவு 9.15 மணியில் இருந்து 9.45 மணி வரை (அரை மணி நேரம் ) தமிழ் செய்தியும், செய்தி அலசலுமிடம் பெறுகின்றன. 49 எம், 41 எம், 31 எம் என்ற மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் பிபிசி தமிழ் ஒலிபரப்பை வானொலியில் கேட்கலாம்.

No comments: