Friday, February 13, 2009

எஸ் . எம் . எஸ் .செய்திகள் !

' போட்டில் வந்தவர்களை நமது வீரர்கள் போராடி வென்றனர் . வோட்டில் வந்தவர்களை என்ன செய்வது .? ' -- இன்று இந்திய மக்கள் மனதில் இது முக்கியமான கேள்வி . இந்தக் கேள்வி பரந்து பெருகி வளர்வது நாட்டுக்கு நல்லது
!
செய்திகள் !
--- புத்த பகவானுக்குக் காவலாக இருந்ததாகக் கூறப்படும் லாஸா அப்ஸோ ( Lhasa apso ) திபெத்திய இன நாய் . முக்கியமான விருந்தாளிகளுக்கு தலாய் லாமா பரிசாகத் தரும் நாய் அது .
--- விமானம் 100 மீட்டருக்கும் தாழ்வாகப் பறந்தால் , ரேடார் சாதனத்தை ஏமாற்றலாம் .
--- உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ முழுமையாகப் படைத்ததே 14 சிற்பங்கள்தான் . மைக்கேல் ஏஞ்சலோவை ஜீனியஸ் என்று உலகம் கொண்டாடுகிறது . தங்களது திறமையில் 25 சதவீதத்தை வெளிப்படுத்துபவர்களை ஜீனியஸ் என்கிறார்கள் . வெறுமனே 10 சதவீதத்தை மட்டும் பயன்படுத்துபவர்கள் சராசரி .
--- உலகின் மிகப் பெரிய கப்பலான ' குயின் மேரி 'யின் கேப்டனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது . " நடுக் கடலில் முழு வேகத்தில் செல்லும் கப்பலை முழுவதுமாக நிறுத்த எவ்வளவு நேரம் ஆகும் ? " " அனைத்து இன்ஜின்களின் இயக்கத்தையும் நிறுத்தினால் சுமாராக ஒரு மைல் தூரத்துக்குள் கப்பலை நிறுத்திவிடலாம் ! " என்று சொன்ன கேப்டன் , " கேப்டன்களின் பார்வை எப்போதுமே ஒரு மைல் தாண்டித்தான் பதிந்திருக்கும் ' என்று முடிதார் .

No comments: