Friday, April 15, 2011

தன்னை அறிதல் ! டார்லிங் டார்லிங்

நாட்கள் நகர நகர உங்கள் தலைமுடி, பற்கள், கண்பார்வை எல்லாம் உங்களை விட்டுப் போகலாம் . ஆனால், உங்கள் திறமை, புத்திசாலித்தனம், சாமர்த்தியம்... இவையெல்லாம் உங்களை விட்டுப் போகாது .
ஏனென்றால்.... உங்ககிட்ட இருக்கறதுதான் மக்கா உங்களைவிட்டுப் போகும் !
எப்பூடி ? !
--- இர. ப்ரீத்தி .
டார்லிங் டார்லிங் டர்ர்ர்ர் !
அந்த வங்கியில் புகுந்த திருடன், அங்குள்ளவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பனத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டுக் கிளம்பும்போது, வங்கிக்கு வந்திருந்த ஒருவரிடம் கேட்டான்...
" நான் திருடியதைப் பார்த்தியா ? "
" பார்த்தேன்...." என்று நடுங்கிக்கொண்டே அவர் சொல்லி முடிப்பதற்குள் அவரை சுட்டுக் கொன்றான் . இப்போது திருடன் மற்றொரு நபரிடமும் கேட்டான் .
" நான் திருடியதைப் பார்த்தியா ? "
" நான் பார்க்கல, ஆனா , என் மனைவி பார்த்தா ! "
இவியங்கெல்லாம் பில்கேட்ஸுக்கே கம்ப்யூட்டர் வித்தவைங்க !
--- எம்.ஜி. பாஸ்கரராஜன் , அவள் விகடன் , 29 / 1 / 2010 .

No comments: