Thursday, April 12, 2012

கரும்புக் கவிதைகள் !


பழங்குடி அறிவைத்
தேடிப் போ
அவர்
வளங்களைத்
திருடுதால்
சாடிப் போ !

ஆதித் தமிழை
மறுக்காதே
நீ
ஆணி
வேரை
அறுக்காதே !

பொங்கல் விடுமுறை
நீட்டச்
சொல்
பிள்ளையைப்
பிறந்த
மண்ணுக்குக்
கூட்டிச்
செல் !

குழந்தையைக்
கொஞ்ச
நேரம்
எடு
நீ
குழந்தைமை
கொண்டு
வாழ்வு
நடு !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

No comments: