Friday, April 13, 2012

கரும்புக் கவிதைகள் !


ஆண்பால் பெண்பால்
பார்க்காதே
நீ
ஆளுமைப் பண்பைத் தூர்க்காதே !

எதிர்க்கத் துணிந்தால்
தமிழ்
மீளும்
எதற்கும் துணிந்தால்
தமிழ்
ஆளும் !

தமிழைத் தேடி
நட்பாக்கு
அவர்
தாழ்வினைப்
போக்கித்
தெம்பாக்கு !

மதங்களைத் தாண்டி
தமிழரில்
இணைவோம்
மகிழ்வுடன் நெருங்கிக்
குறளினில்
நனைவோம் !

இசையும் ஆடலும்
இனத்தின்
மாட்சி
அவற்றை
இழந்ததால்தானே
இத்தனை
வீழ்ச்சி !

எல்லா மொழியும்
வாழட்டும்
எம்
தமிழே
எம்மை
ஆளட்டும் !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

No comments: