Monday, April 23, 2012

இன்சுலின் !


ஊசி மூலம் இன்சுலின் இனி வேண்டவே வேண்டாம் ... !
உடலிலே ஊசியால் குத்தி இன்சுலின் ஏற்றிக் கொள்ளும் சித்ரவதையிலிருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது . ஸ்மார்ட் இன்சுலின் பம்ப் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது . அதன்மூலம் உடலில் இன்சுலினை தேவையான அளவுக்கு ஏற்றிக்கொள்ளலாம் . " பேஜர் " போல் வடிவமைக்கப்பட்டுள்ளது . சட்டைப் பைக்குள்ளோ அல்லது பெல்ட்டிலோ இதை இணைத்துக் கொள்ளலாம் . மெல்லிய பிளாஸ்டிக் குழாய் மூலம் இன்சுலின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது . செயற்கை கணையம் போல் செயல்படாமல் இந்தக் கருவியானது இயற்கையான கணையம் போல் செயல்பட்டு, தேவையான அளவு இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் . ஊசி மூலம் உடலுக்குள் இன்சுலினை செலுத்துவதைவிடவும் இந்தப் புதிய முறை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது .இந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்குப் பயிற்சி தேவை . டாக்டர்களே பயன்படுத்தும் முறையைக் கற்றுத் தருவார்கள் . ஆரோக்கியமான கணையம் இன்சுலினை எப்படி இடைவிடாமல் உடலின் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்யுமோ, அதைப் போலவே இந்த " ஸ்மார்ட் பம்ப்" பும் தேவையான இன்சுலினை தொடர்ந்து சப்ளை செய்யும் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

No comments: