Saturday, December 17, 2016

தாஜ்மகால்

  உலக அதிசயமாகவும், காதலர்களின் நினைவுச் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மகாலின் அழகை, மேலும் பொலிவூட்ட , தொல்லியல் துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
     உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது, உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், மொகலாய மன்னர் ஷாஜகான், தன் மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதலின் அடையாளமாக, இதை கட்டினான்.  கி.பி., 1632 - 1654 ஆகிய காலத்தில் கட்டப்பட்ட இந்த அழகோவியம், வெண் பளிங்கு கற்களால் உருவானது.  இன்றும் காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.
     சமீபகாலமாக, ஆக்ராவில், சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது.  இதனால், தாஜ்மகாலின் மீதும், தூசுப் படலம் படிந்து, வெளித் தோற்றம் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது.  இந்த தூசுப் படலத்தை அகற்றி, தாஜ்மகாலின் அழகை மெருகூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
      இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது :
     தற்போது, பெண்கள், தங்கள் முகத்தை அழகூட்டுவதற்காக, 'முல்தானி மட்டி' என்ற 'பேசியல்' முறையை பின்பற்றுகின்றனர்.
இதேபோன்று, தாஜ்மகாலின் அழகையும் திரும்ப பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  மண்ணில் சில ரசாயனங்களை கலந்து, சேற்று களிம்பு தயாரித்து, அவற்றை தாஜ்மகாலில், தூசுப் படலம் சூழ்ந்துள்ள இடங்களில், 2 மி.மீ., அளவுக்கு பூசுவோம்.
     அந்த களிம்பு காய்ந்ததும், அதன் மீது, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தண்ணீர் கரைசலை பீய்ச்சி அடிப்போம்.  பின், அந்த களிம்பை மென்மையான துணியால் துடைப்போம்.  இதன்மூலம், தாஜ்மகாலின் அழகு, மீண்டும் பொலிவடைந்து விடும்.
     கடந்த, 1994, 2001, 2008 ஆகிய ஆண்டுகளிலும், தாஜ்மகாலை, இதேபோன்ற முரையில் தூய்மை படுத்தி உள்ளோம்.  இவ்வாறு, அவர்கள் கூறினர்.
--   தினமலர்  சென்னை  திங்கள் 9-6-2014.   

No comments: