Tuesday, December 27, 2016

பதார்த்த குண சிந்தாமணி

பதார்த்த குண சிந்தாமணி எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள் :
*   நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.
*   வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.
*   மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு.
*   45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் ( nasal drops )  மருந்து விடுவது.
*   நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.
*   வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.
செய்யக் கூடாத விஷயங்கள் :
*   முதல் நாள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
*   கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
*   பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.
*   நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.
*   பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.
*   உணவு உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது.
*   தும்மல்,  சிறுநீர்,  மலம்,  கொட்டாவி,  பசி,  தாகம்,  வாந்தி,  இருமல்,  ஆயாசம்,  தூக்கம்,  கண்ணீர்,  உடலுறவில் சுக்கிலம்,
    கீழ்க்காற்று,  மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.
கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை :
*   உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.
*   நீரைச் சுருக்கி,  மோரைப் பெருக்கி,  நெய்யை உருக்கி உண்பது.
*   வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல் இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.
*   எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.
-- மருத்துவர்  கு.சிவராமன் .  (  நலம் 360 0  )
  ஆனந்த விகடன்.  8-11- 2014.       

No comments: