Thursday, December 29, 2016

திருநீறு.

   நெற்றியில் நாம் அணியும் திருநீறு அவை தயாரிக்கப்படும் முறையில் நான்கு வகைப்படும்.
     1. கல்பம் : வியாதியில்லாத கன்றுடன் கூடிய பசுவின் சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் வாங்கி,
         உருண்டையாக்கி எரிக்கும்போது மந்திரங்கள் ஜபித்து சிவாக்கினியில் தயாரிப்பது.
     2. அணுகல்பம் : காடுகளில் கிடைக்கும் சாணங்களை கொண்டு சிவாக்கினியில் தயாரிப்பது.
     3. உபகல்பம் : மாட்டுத்தொழுவங்களில் இருந்தும், மாடுகள் இருக்கும் இடங்களில் இருந்தும் சாணத்தை எடுத்து சாதாரண
         தீயில் எரித்து பின் மீண்டும் சிவாக்கினியில் தயாரிப்பது.
     4. அகல்பம் : மந்திரங்கள் இல்லாமல் எல்லோராலும் சேகரித்த சாணத்தைக் கொண்டு சுள்ளீகளால் எரிக்கப்பட்டு தயாரிப்பது.
--  தினமலர். பக்திமலர். 27-11-2014.           

No comments: