Wednesday, January 12, 2011

காந்தி -- பாரதி !

காந்தியைத் திட்டினாரா பாரதி ?
ஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தாராம் காந்தி . மீட்டிங்கில் பேசிய அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது . அதைக் கேள்விப்பட்ட பாரதி , காந்திஜிக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார் . உங்களூடைய மேடைப்பேச்சு உங்கள் தாய்மொழியான குஜராத்தியில் அமைந்திருக்கலாம் . இல்லையென்றால் இந்தியாவின் ஏதாவது ஒரு மோழியில் அமைந்திருக்கலாம் . ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு நாம் யாரை இந்த நாட்டைவிட்டுத் துரத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அவர்களுடைய ( ஆங்கில ) மொழியிலேயே பேசினீர்களே ! என்று கடிதத்தில் வருத்தப்பட்டிருக்கிறார் . இதைப் படித்த காந்தி சொன்னார் . " என் தவறை நான் ஒத்துக்கொள்கிறேன் . ஆனால் உங்களுடைய கடிதமும் ஆங்கிலத்தில்தானே இருக்கிறது .".
பாரதியும் விட்டுவிடவில்லை , ' தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி . அந்த மொழியை என் தேசத்தந்தயைத் திட்டுவதற்கு ஒரு போதும் பயன்படுத்தமாட்டேன் " என்றாராம் !
---. குமுதம் சிநேகிதி , ஜூலை 16 - 31 , 2010. இதழ் உதவி : N .கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

No comments: