Monday, January 17, 2011

சர்க்கரை நோயாளி !

சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு.
3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும். இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு .
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டுக்கொள்ள தேவையிருக்காது . ஒரு முறை போட்டுக் கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் தினசரி கஷ்டத்தில் இருந்து இதன்மூலம் விடுதலை கிடைக்கும் . ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் , குளூக்கோஸ் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர் . இன்சுலின் அளவை பராமரிக்க தினமும் ஊசி போட்டுக் கொள்வது வழக்கம் .
இதற்கு விடிவு வராதா என ஏங்குவோர் அதிகம் . அவர்களுக்கு விடுதலை அளிக்க புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. இது பற்றி தேசிய நோய்தடுப்பு நிறுவன ஆராய்ச்சி குழு தலைவர் அவ்தேஷ் சுரோலியா கூறியதாவது :
எஸ ஐ ஏ -- 2 ( சுப்ராமோல்க்யூலர் இன்சுலின் அசெம்ப்ளி -- 2 ) என்ற ரசாயனத்தை ஹார்மோன் வடிவில் எலிகளுக்கு ஊசியாக போட்டு பரிசோதனை நடத்தினோம் . அதற்கு நல்ல பலன் கிடைத்தது . எஸ் ஐஏ - 2 ஊசி போட்ட எலிகளின் உடலில் இன்சுலின் அளவு பல மாதங்களுக்கு மாறாமல் நீடித்தது . இது மனிதர்களுக்கும் பொருந்தும் . இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதற்கு முன் , எஸ் ஐ ஏ - 2 ஹார்மோன் ஊசியை சர்க்கரை நோயாளி போட்டுக் கொள்ள வேண்டும் .
மருந்துக்கு முன்னதாக உடலில் செல்லும் இந்த ஹார்மோன் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு அதிகரிக்காமல் ஒரு மாதம்வரை இருக்கும் . அதிகபட்சமாக 120 நாட்கள் ( 4 மாதங்கள் ) வரை சர்க்கரை நோயாளிகள் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதில் இருந்து இது விடுதலை அளிக்கும் .
இப்போது தினசரி அல்லது 2 நாளுக்கு ஒருமுறை இன்சுலின் ஊசி போட்டாலும் , சாப்பிட்ட பிறகு இன்சுலின் அளவு குறைந்து மயக்கம் உட்பட பல பாதிப்புகளை நோயாளிகள் சந்திக்கின்றனர் . இந்த வேதனையை எஸ் ஐஏ - 2 மாற்றும் என்றார் .
--- தினகரன் , 14 ஜூலை . 2010.

No comments: