Tuesday, June 15, 2010

' ஒய்2கே'

2000 என்ற எண்ணை கணினியின் மென்பொருளுக்கு எப்படிப் புரியவைப்பது என்று உலகில் வளர்ந்த நாடுகளுக்கு எழுந்த கவலைதான் 'ஒய்2கே ' என்ற விடிவாக வடிவெடுத்து, இந்திய இளைஞர்களின் தகவல் தொழில் நுட்பத் திறனுக்கு வெற்றிலை பாக்குவைத்து வரவேற்பு கொடுத்தது . அதுதான் , இந்திய தேசத்தின் மற்ற பல திறமைகளுக்கும் அருமைகளுக்கும் கடவுச் சீட்டாகவும் அமைந்தது .
பி. ஸி. ஜி .
சுமார் 60 வருஷங்களுக்கு முன் , க்ஷயரோகக் கிருமிகளை கால்மேத் , கெரின் என்ற இரு பிரெஞ்சு நிபுணர்கள் கண்டுபிடித்தார்கள் . ' பாஸில் ' என்றால் கிருமி என்று அர்த்தம் . இந்த நிபுணர்களின் பெயரையே அந்தக் கிருமிக்கு வைத்து , ' பி.ஸி. ஜி. என்று குறிப்பிட்டு வருகின்றனர் . இந்தக் கிருமியினின்று பாதுகாத்துக் கொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு அம்மை மருந்திற்குதான் ' பி. ஸி. ஜி . வாக்ஸைன் ' என்று பெயர் .
--- ஆனந்தவிகடன் . 30. 12. 2009 .

No comments: