Friday, June 11, 2010

விருந்து - மருந்து .

எந்த ஒரு காரியத்தையும் சரியான நேரத்தில் செய்தால் செய்கிற காரியம் சிறப்பாக நடக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை . அவர்கள் கருத்துப்படி ஒரு இடத்திற்கு விருந்துக்குச் செல்ல ஏற்ற நாட்கள் : திங்கள் , புதன் , வெள்ளி ! அந்த நாட்களில் உறவுகளைப் பார்க்கச் சென்றால் உற்சாகமாகவும் , உறவு பலமாகவும் இருக்கும் என்பது அவர்கள் எண்ணம் . அதேபோல் எந்த ஒரு நீண்டகால நோய்க்கும் மருந்துகள் சாப்பிடத் துவங்கும் பொழுது , செவ்வாய் , வியாழன், சனிக்கிழமைகளில் சாப்பிட ஆரம்பிப்பது நல்லது . நோய் சீக்கிரம் குணமாகும் என்பதும் அவர்கள் நம்பிக்கை . அதனால்தான் பெரும்பாலான சித்த மருத்துவர்கள் இந்த மூன்றில் ஒரு நாளில் மருந்தை முதன்முதலில் சாப்பிடச் சொல்வதுண்டு !
--- தகவல் தமயந்தி . குமுதம் 30. 12. 2009.

No comments: