Friday, June 18, 2010

போதி மரம் .

நடுநிசியில் அரண்மனையை விட்டு வெளியேறிய இளவரசர் சித்தார்தர் ஏழாண்டுக் காலம் அலைந்த பிறகு , பாடலிபுத்திரத்துக்கு ( பாட்னா ) தெற்கே உள்ள காட்டில், ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார். அது அரச மரம் . ஆங்கிலத்தில் Pipul tree என்பார்கள் . ' புத்தி ' தந்த மரம் ( The tree of Knowledge ) என்பதால் ' போதி மரம் ' என்று பிற்பாடு அழைக்கப்பட்டது .
அரச மரத்தின் கீழ் அமர்ந்ததால் சித்தார்த்தார் புத்த மகானாக ஞானம் பெற்றார் என்பதைவிட , அவருக்கு அகக் கண்கள் திறந்தபோது அரச மரத்தின் நிழலில் அவர் அமர்ந்திருந்தார் என்பதே சரி ! பிற்பாடு அந்த மரத்தில் இருந்து ஒரு பகுதி , இலங்கை அனுராதபுரத்தில் நடப்பட்டது . புத்த கயாவில் இருந்த மரம் பட்டுப்போனதால் , அனுராதபுரத்தில் துளிர்விட்டு வளர்ந்த போதி மரத்தில் இருந்து ஒரு பகுதி எடுத்துவரப்பட்டு மீண்டும் பாட்னாவில் நடப்பட்டது !
--- ஹாய் மதன் . ஆ. விகடன் . 30. 12. 2009 .

No comments: