Friday, June 25, 2010

அடிமைத்தளை, சுதந்திரம் .

" வண்டியிழுக்கும் குதிரையைப் பார்த்திருப்பீர்கள் . அதற்குக் கண் மறைப்பு ஒன்றை மாட்டியிருப்பார்கள் . அதன் பணி முடிந்த பிறகு , அதன் கண் மறைப்பை நீக்கியபிறகும் அது, தன் பார்வையை பக்கவாட்டிலும் படர விடாது . ஒரே நேர்ப்பார்வையாகதான் பார்க்கவேண்டும் என்பது அதற்கு அதன் கண் மறைப்பு விதித்திருந்த கட்டுப்பாடு.
அதேசமயம் போர்க் குதிரையை எடுத்துக்கொள்ளுங்கள் . அதன் கண்கள் மறைக்கப்பட்டிருக்காது . அதனால் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அதன் பார்வை நாலா பக்கமும் செல்லும் . தன் எஜமானரின் கட்டளைப்படி தான் ஓடும் வேகத்தை அதிகரிப்பதோ , குறைப்பதோ, அல்லது இடது , வலது பக்கம் திரும்புவதோ செய்வதோடு , அவருக்கு உதவும் வகையில் தானே பள்ளம் தாண்டுவது , தடை வந்தால் நிற்பது என்பதையும் செய்யும் . அதன் பணி முடிந்ததும் லாயத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அது தனக்களிக்கப்பட்ட சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை. அதாவது போர்க்களத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை இங்கே அது வெளிக்காட்டுவதில்லை ; பார்வை நாற்புறமும் சுழன்றாலும் அடக்கமாக நின்றிருக்கும் .
புரிகிறதா? வண்டிக்குதிரை போல முற்றிலும் அடிமையாக இருக்கக்கூடாது . அதே சமயம் , சுதந்திர போர்க் குதிரைபோல அடக்கமாக இருக்கவும் கற்கவேண்டும் ."
--- குஃபி ஞானி யின் விளக்கம் . தினகரன் . 02.01.2010 .

No comments: