Thursday, June 24, 2010

தியாகராஜர் .

தியாகராஜரின் பூர்வீகம் ஆந்திரம். 1600 ம் ஆண்டு அவருடைய மூதாதையர் தமிழ்நாட்டில் திருவாரூரில் வந்து குடியேறினர் .1767 மே மாதம் 4ம் தேதி தியாகராஜர் பிறந்தார் . தந்தை ராமபிரும்மம், தாய் சீதம்மா. பெற்றோருக்கு இயல்பிலேயே இசை வளமும் குரல் வளமும் இருந்தது . அதுவே தியாகராஜரின் பிறவிச் சொத்தாக வந்தது .
' இன்னும் ஐந்தே நாட்களில் என்னை வந்தடைவாய் ' என்று கனவில் ராமன் கூறியதும் மகிழ்ச்சியால் துள்ளினார் தியாகராஜர் . சீடர்களிடம் அப்போது முதலே ராமநாம பஜனையைத் துவங்கச் சொன்னார் . அடுத்த ஐந்தாம் நாள் , 1847 ஜனவரி 6ம் தேதி புஷ்ய பகுள பஞ்சமி தினத்தில் ஓர் ஒளிப்பிழம்பாக அவருடைய ஆன்மா ராமனை அடைந்தது .
தியாகராஜர் பாடிய 24 ஆயிரம் கீர்த்தனைகளில் சுமார் 700 மட்டுமே கிடைக்கப் பெற்றுள்லன .
--- தினகரன் , ஆன்மிக மலர் . 02.01.2010 .

No comments: