Saturday, June 26, 2010

திருப்பதி .

* திருமலையில் வருடம் முழுவதும் வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்கும் , மார்கழியில் மட்டும் திருப்பாவைதான் ஒலிபரப்பாகிறது .
* திருமலை மடப்பள்ளியில் வெங்கடாசலபதியின் தாயான வகுளமாலிகையின் திருவுருவத்தைக் காணலாம் . தன் மகனுக்காகத் தயாராகும் பிரசாதங்களை தாயாரே நேரடியாக மேற்பார்வையிடுகிறாராம் .
* விதம்விதமான நிவேதனங்கள் தயாரானாலும் வேங்கடவனுக்கு நிவேதனம் செய்வது மண்கலயத்தில் வைத்த தயிர் சாதம் மட்டுமே .
* வேங்கடவனுக்கு தினமும் ஒரு புதுப் பட்டுப்புடவை அலங்காரமாக அணிவிக்கப்படுகிறது .
* வெள்ளிக்கிழமைகளில் சிவனுக்குரிய வில்வ தளங்களால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது .
* திருமலையில் கொலுவு ஸ்ரீநிவாசர் முன்னால் தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.
* திருமலையில் கோவிந்தனுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் கறிவேப்பிலை சேர்ப்பதில்லை.
* ஏழுமலையான் கருவறையின் விமானத்தின் நான்கு புறங்களிலும் சிங்க உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன .
* திருமலையில் தினசரி கடைசி பூஜை , அரவணை சேவை. ஆதிசேஷனாகிய பாம்பின் மேல் பெருமாளை படுக்க வைக்கும் சேவை . தூங்கும் பெருமாளை எழுப்புவது காலையில் சுப்ரபாத சேவை .
* கீழ்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், திருச்சானூர் அலர்மேல்மங்கைத் தாயார், திருமலை சுவாமி புஷ்கரணி
வராஹ மூர்த்தி, ஏழுமலையான் -- இதுதான் தரிசன வரிசை !
--- தினகரன் ,ஆன்மிக மலர் . 02.01.2010.

No comments: