Wednesday, June 23, 2010

கும்பமேளா .

கும்பமேளா -- பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாகக் கொண்டாடப்படும் வட இந்தியத் திருவிழா . தென்னிந்தியாவிலும் இதே போன்று பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு வைபவம் நிகழ்கிறது -- மகாமகம் . தமிழ்நாட்டில் கும்பகோண்த்தில் மகாமகக் குளத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் புனித நீராடும் தனிச்சிறப்புமிக்க விழா.
இரண்டும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற ஒற்றுமை தவிர , முக்கியமான வித்தியாசம் ஒன்றும் உண்டு . ஆமாம் , மகாமகம் ஒவ்வொரு 12 ம் ஆண்டிலும் ஒரே தலத்தில் கொண்டாடப்படுகிறது . ஆனால், கும்பமேளா வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது . அதாவது நான்கு இடங்களில். ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை அடுத்தடுத்து .
1 ) உத்தரப்பிரதேசம், அலகாபாத்திலுள்ள கங்கை - யமுனை - சரஸ்வதி நதிகள் கூடும் பிரயாகை.
2 ) உத்தர்கண்ட், கங்கைக்கரையில் உள்ள ஹரித்வார் .
3 ) ஷீப்ரா நதிக்கரையில் உள்ள மத்தியப்பிரதேசம் உஜ்ஜயினி .
4 ) கோதாவரி நதி தீரதில் உள்ள மகாராஷ்டிர நாசிக் .
இப்படி நான்கு தலங்களில் முறைவைத்துக் கொண்டாடப்படுகிறது .
--- தினகரன் , ஆன்மிக மலர் , 16.01. 2010 .

No comments: