Thursday, September 2, 2010

" அதை எப்படிக் கவனித்தீர்கள் ?"

1931 -ம் ஆண்டு லண்டனில் இந்தியர்களின் சுதந்திரம்பற்றி விவாதிக்க, வட்ட மேஜை மாநாடு நடந்தது . இந்தியர்களின் சார்பில் மகாத்மா காந்தி உட்பட பல தேசத் தலைவர்கள் ஒன்றாக கலந்துகொண்டார்கள் . மாநாட்டைப் பதிவு செய்ய பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தார்கள் . மாநாட்டின் ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்பட்டது .
மாநாடு முடியும்பொது இந்திய இளம் பத்திரிகையாளர் ஒருவர் காந்தியைச் சந்தித்தார் . தான் சேகரித்த ஒரு தகவலைச் சொல்லி " அது சரிதானா ? " என்று கேட்டார் . ஆச்சர்யத்தோடு, " அதை எப்படிக் கவனித்தீர்கள் ? " என்று சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டார் காந்தி . மறுநாள் ' வட்டமேஜை மாநாடு நடந்துகொண்டு இருக்கும்போது மகாத்மாவுக்கு ஒரு பல் விழுந்துவிட்டது ' என்று ஸ்கூப் நியூஸ் எழுதினார் அந்தப் பத்திரிகையாளர் . அப்போது லண்டனில் நிருபராக இருந்த அந்த இளஞர் தான் பின்னாளில் ' தினத்தந்தி 'யைத் துவக்கிய ஆதித்தனார் .
--- இரா . மன்னர் மன்னன் , ஸ்கூப் விகடன் .17. 03. 2010 .

No comments: