Friday, September 3, 2010

யாரும் இன்று இல்லை !

கையில் இருந்த சில்லறைக் காசுகளையும் குளத்தில் வீசிவிட்டு தபசில் ஆழ்ந்த ரமணர், ' காசும், பணமும், நகையும் ஆட்கொல்லி ' என்றார் .
தனக்குத் தினமும் பக்தர்கள் தரும் பழங்களை மட்டுமல்ல ; வெள்ளி, தங்கத்தையும் அன்றையதினமே அடுத்து வருகிற பக்தர்களுக்குக் கொடுத்தவர் மகா பெரியவர் . ' இதெல்லாம் வாசலுடன் போயிடணும் ' என்பது அவரது அருள்வாக்கு .
பக்கத்தில் ஒரு குச்சி... கையில் விசிறி... இரண்டு சிரட்டைகள்... மட்டும் சொத்தாக வைத்திருந்த யோகி ராம்சுரத்குமாரிடம் யாராவது ஏதாவது வேண்டினால், ' ஐ யம் எ பெக்கர் . உனக்கும் சேர்த்து நான் ஆண்டவனிடம் பிச்சை கேட்கிறேன் ' என்று மட்டும் சொல்வார் .
இந்து மதத்தின் தத்துவத்தை உலகம் அறியச்செய்துவிட்டதாக கும்பகோண்த்தில் விவேகானந்தருக்கு பாராட்டு விழா நடந்தது . ' உங்களுடைய விசுவாசம் எப்போதும் கொள்கைகளில்தான் இருக்கவேண்டும் . தனி நபர்களிடம் இருக்கக்கூடாது ' என்று சொல்லி விட்டுப் போனார் .
இவர்களில் யாரும் இன்று இல்லை . இன்று இருப்பவர்களில் எவரும் இவர்கள் இல்லை !
--- ப. திருமாவேலன் , ஆ .விகடன் , 17. 03. 2010.

No comments: