Friday, February 11, 2011

' ஆ'யுதம் ! '

* அணு ஆயுதங்கள் .... ஒரு விசை அழுத்தத்தில் உலகையே காலி செய்யக் கூடிய சாத்தான்கள் . விளைவுகளை அறிந்து , அதை அனுபவித்தப் பிறகும் மனிதன் தனக்குதானே சேகரித்து வைத்துக்கொள்ளும் கொள்ளி . அணு ஆயுத திறனில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவின் அணு ஆயுதங்களைச் சரியாகப் பொருத்தினால் , ஒட்டுமொத்த உலகையும் ஒரு முறை அழித்துவிடலாம் .
* அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்களால் மட்டும் இந்த உலகத்தை 27 முறை முழுவதுமாக எரிக்க முடியும் .
* உலகெங்கும் உள்ள அணு ஆயுதங்களைப் பகிர்ந்துவைத்து ... ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தால் , உலகை 100 முறை முழுவதுமாக எரிக்கமுடியும் .
* அணுகுண்டின் அழிப்புக்கு என்றென்றைக்குமான உதாரணம் ஜப்பானின் ஹிரோஷிமா , நாகசாகி . 1945-ல் வீசப்பட்ட லிட்டில்பாய் , ஃபேட் மேன் என்ற இரண்டு அணுகுண்டுகளிலேயே ஹிரோஷிமாவில் 90 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மக்களையும் கொன்று குவித்தது . இதில் அணுக்கதிரின் ஒளியாலும் சத்தத்தாலும் மட்டும் அதே இடத்தில் 60 சதவிகித மக்கள் இறந்துவிட்டார்கள் . பிறகு , அதன் பாதிப்பால் இறந்தவர்கள் போக , காதில் இருந்து திடீரென ரத்தம் வருவது , தலைமுடி தானாக உதிர்வது , தோல் உரிவது , மிக மோசமான குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது என ஜப்பான் சுடுகாடு ஆனது . 50 வருடங்களைக் கடந்த பின்னும் , இன்னும் அங்கு கதிர் வீச்சின் தாக்கம் இருக்கிறது . இரண்டு ஊர்களிலும் இப்போதும் சிறு புல்கூட முளைப்பது இல்லை . மனிதர்களாலேயே நேரடியாக பாதிப்புக்ளுக்கு உள்ளான நாடு ஜப்பான் .
இரா . மன்னர்மன்னன் , க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .

No comments: